ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் ப…
-
- 17 replies
- 1.7k views
-
-
மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை இரண்டாம் இணைப்பு மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 35 காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹர சிறைச்சாலையில் மேலும் கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, க…
-
- 12 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர் என்று சிறிலங்காவின் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சனி 16-06-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்கா ஜனாதிபதி எரிக்சொல்கைம் சந்திப்பு சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மற்றும் விசேட சமாதான தூதுவர் ஹன்சன் பௌரர் ஆகியோரை சந்தித்து சிறீலங்காவின் தற்போதைய நிலமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவின் ஜனாதிபதி 96வது சர்வதேச தொழிலாளர் நிறுவனங்களின் மாநாட்டில் ஜெனிவாவில் பங்கேற்பதற்காக சென்றமை தெரிந்ததே. இவருடன் இடர்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கஇ சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாஇ கெகலிய ரம்க்வெலஇ சிறீலங்கா ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தம…
-
- 9 replies
- 1.7k views
-
-
மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி. மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உத்தி அவ்வளவு தெளிவானதாக இல்லை என கருதுகிறேன். வடபகுதியில் நாம் முன்னகர்வு முயற்சிகளில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் இராணுவம் முன்னேற்றமடைந்து எதுவித நேரடி மோதலுமின்…
-
- 3 replies
- 1.7k views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார். இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இ…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
http://naathamnews.com/?p=4589 ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்… சிறிலங்காவில் மனித உரிமை மீறல…
-
- 8 replies
- 1.7k views
-
-
இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணயத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படடிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத்தாளகளை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது. புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
06.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....c05f3d8ab658c55
-
- 8 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவின் விமானப்படை அதிவேக சுப்பர் சொனி வகை குண்டுவீச்சு விமானங்களான கிபீர் மற்றும் மிக் விமானங்கள் தங்களை ஏவுகணைகளால் தாக்க முடியாது என்ற இறுமாப்பில் வன்னி மீது தினமும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அநுராதபுரதம் விமானப்படைத் தளத் தாக்குதலின் பின்னர் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தாக்குதல் யுத்த சூழல் தோன்றியதன் பின்னர் ஏறத்தாழ தினமும் நிகழும் நிகழ்வாகி விட்டது. இன்றும் முல்லைத்தீவில் சுனாமி அகதிகள் குடியிருப்பை இலக்கு வைத்து 3 கிபீர் விமானங்கள் 8 குண்டுகளை வீசித்தாக்கியுள்ளன. நேற்று 6 விமானங்கள் 18 குண்டுகளை வீசித் தாக்கி இருந்தன. இந்நிகழ்வுகளின் போது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உடமை அழிவுகள் நிகழ்ந்துள்ளன. http://www.tamilnet.com/art.html?catid=13&…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை விடயத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்" தியாகு ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள். 2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழ…
-
- 8 replies
- 1.7k views
-
-
தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும்போது ரணிலுக்கு ரமேஷ் தொலைபேசியூடாக அறிவித்தாரா? வீரகேசரி நாளேடு அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வாகன அனுமதிப்பத்திரங்க ளை ஜாதிக ஹெல உறுமய விற் பனை செய்துள்ளது என்ற பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இரண்டரை கோடி ரூபõ நஷடஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். இதற்கான நடவடிக்ககைள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். வாகன அனுமதி பத்திரங்களை ஜாதிக ஹெல உறுமய விற்பனை செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டா…
-
- 2 replies
- 1.7k views
-
-
பணிவான வேண்டுகோள் அனைத்து யாழ் கள நண்பர்களுக்கும், தயவு செய்து எல்லோரும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் கீற்று இணையத்தில் வந்த காங்கிரஸ் பற்றிய செய்தியை (http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php) மீள் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுங்கள். அத்தோடு கீற்று இணையத்துக்கும் உங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். சில தமிழ் நாடு ஊடகங்களுக்கான மின் அஞ்சல் தொடர்புகள் : Ananda Vikatan, Nakkeeran, Kumudam, Viduthalai av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com மக்கள் தொலைக்காட்சி news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makka…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கையில் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரகவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அவரது இந்த திடீர் உத்தரவு இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு மூன்று தசாப்த காலமாக விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். சமாதான வழியில் தங்கள் கோரிக்கை நிறைவேறாது என்பது தெரிந்ததால், பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தி இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர். இதன் இறுதிக்கட்ட போர் கடந்த மே மாதம் வன்னிப் பெருநிலத்தில் அரங்கேறியது. இதில் 20000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களும், ஏராளமான விடுதலைப் புலிகளும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச ஏஜென்ஸிகள் தெரிவிக்கின்றன. சர்வதேச போர் நியாய…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை கடந்த 04.02.2008 கொண்டாடியது. அன்னியரின் பிடியிலிருந்து இலங்கைத் தீவை இலங்கையில் பூர்வீக வாழ் மக்களிடம் அன்னியரால் கையளிக்கப்பட்ட நாள் 04.02.1948. இந்த நாள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். அது மட்டுமல்லாமல் இந்த நாளிற்கு முன் சிங்கள இனவாதிகளால் இரகசியமான வழிமுறையில் உரிமைகள் பறிப்புக்குள்ளாக்கப்பட்டன. ஆனால்... ஸ்ரீலங்காவின் சுதந்திரம் கிடைக்கப்பட்ட நாள் தொடக்கம் கடந்த ஆறு பத்தாண்டுகளாக சிங்களப்பேரினவாதிகள் பலவழிகளிலும் ஒடுக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றனர். இதன்மூலம் இலங்கைத் தீவிற்குள் பூர்வீகமாக வாழ்ந்த தங்களைத் தாங்களே ஆண்ட ஈழத்தமிழர் அழிவிற்குள்ளாக்கப்பட்டனர். ஈழத்தமிழினம் சுதாகரித்துக…
-
- 0 replies
- 1.7k views
-
-
2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின்னர் சிறீலங்காப் படையினர் 2006ம் ஆண்டில் இருந்து தமிழர் தாயகப் பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்சியாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல இராணுவப் படையணிகளின் உதவியுடன் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் மன்னார் வவுனியா மணலாறு யாழ்ப்பாணம் போர் முன்னரங்க நிலைகளுடனான நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இராணுவம் மன்னார் - வவுனியா சார்ந்த களமுனை தவிர ஏனைய இரண்டு கள முனைகளில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலையில் இருப்பது அவர்களின் விளக்கங்களைக் கொண்டு அறிய முடிகிறது. இதற்கிடையே இன்னும் சில காலங்களின் பின் கிளிநொச்சியில் சிறீலங்காவின் தேசிய விளையாட்டு விழாவை நடத்தக் கூட…
-
- 0 replies
- 1.7k views
-
-
பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிட…
-
- 23 replies
- 1.7k views
-
-
இலங்கையில் விழுந்த எரிகல்லில் உயிர். மெலதிக விபரங்களுக்கு.. http://rt.com/news/british-researchers-meteorite-fossils-167/
-
- 2 replies
- 1.7k views
-
-
http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/ தமிழர்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாட்கள் ஒரு மிகவும் துன்பகரமான காலம்; வலி சுமந்த மாதம். 40,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஐநா சபாநாயகர் கூறியிருந்தார். எம் தமிழீழத் தேசத்தின் தலைவரையும் இழந்த[?] மாதம். இந்த ஒரு வருட காலம் கடந்த பின்னும், எம் மதிற்புக்குரிய தலைவரை துறந்த பின்னும், நாம் ஏன் இன்னும் தமிழீழக் கனவோடு சிதறிக்கிடக்கின்றோம்? தலைவர் இறந்துவிட்டார்? இற…
-
- 16 replies
- 1.7k views
-
-
பௌயர் வருகை இல்லை: நோர்வே அறிவிப்பு நோர்வேயின் சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கைக்கு வருவதாக வெளியான செய்திகள் அனத்துமே ஊகமானவை- அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவரகப் பேச்சாளர் எரிக் நுரென்பெர்க் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஜோன் ஹன்சன் பௌயர், இலங்கைக்கு வருகை தருகிறார் என்றும் கிளிநொச்சி செல்கிறார் என்றும் வெளியான செய்திகள் எப்படி உருவானது என்று தெரியவில்லை. நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்முடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டு பேசியதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றார் அவர். -புதினம்
-
- 3 replies
- 1.7k views
-
-
Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 11:22 AM இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/205660
-
-
- 27 replies
- 1.7k views
- 2 followers
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
வடக்கு இளைஞர்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு!! வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் தொழில் துறையிலும் நாட்டம் செலுத்துவது மிகவும் அரிதாகி வருகிறது. அநேக மானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தங்களின் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை வீணடிக்கின்றனர். என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் தமிழ் மாணவர்களின் வீதம் சடுதியாக குறைவடைந்து வருகிறது. கலைப்பீடத்துக்கே அதிகளவான தமிழ் மாணவர்கள் தெரிவாகின்றனர். விஞ்…
-
- 23 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேரழிவு நாசங்களை விளைவித்து வரும் இலங்கை மீது சர்வதேச ஆயுதத்தடையை விதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகைளை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வற்புறுத்திக் கேட்டிருக்கிறது அந் நாட்டின் மனித உரிiமைகள் அமைப்பு ஒன்று. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தும் மகஜர் ஒன்றைத் தாயாரித்து, அதில் ஆஸி. மக்களின் கையொப்பத்தைச் சேகரித்துப் பெற்று அந்நாட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. 'குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான அஸ்திரேலியர்களின் அமைப்பு'(Australian For human Rights Of Voiceless) என்ற நிறுவனமே மனித உரிமைகளில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியப் பிரஜைகள் மத்தியில் இத்தகைய மகஜரில் கையொப்பம் திரட்டி வருகின்றது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
குருநகரில் இருவர் கடற்படையின் எறிகணை வீச்சில் பலி. இன்று விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான சிறுத்தீவில் கடற்படைமுகாம் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினரின் செல் வீச்சுக்கு குறைந்தது இருவர் கொல்லப்பட்டார்கள். ஜோசப் பிரான்சிஸ், ஜோசப் பிரான்சிஸ் சகாயராணி ஆகிய தம்பதிகளே கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 9 பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். Civilians killed in shelling after LTTE raid [TamilNet, Thursday, 29 May 2008, 01:32 GMT] At least two civilians, a couple, were killed and nine persons were wounded when shells hit the coastal villages Kurunakar, Kozhumpuththu'rai, Paasaiyoor and in the areas close to J…
-
- 5 replies
- 1.7k views
-