ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
யா்ழ். கந்தர்மடத்தில் வெள்ளப்பெருக்கு இந்த வெள்ளத்தை பார்த்ததும் எவரும் யாழ்ப்பாணத்தில் மழை பெய்து விட்டது இதனால் வற ட்சி நீங்கி விட்டதென நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்.இது யாழ்ப்பாணம் கந்தர்ம டம் பகுதியில் செல்லும் நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம். இன்று மதியத்திலிருந்து இந்த நீர்க்குழாய் வெடித்து நீர் ஓடியபோதிலும் யாழ்.மாநகரசபை அதனை கவனமெடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.விளைவு வீதி அருகே இருந்த கடைகளுக்குள் எல்லாம் வெள்ளம் ஓடியதுதான். http://onlineuthayan.com/news/18943
-
- 7 replies
- 817 views
-
-
யாழ். மாநகர சபையைக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல! - இரா.சம்பந்தன்.! யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. யாழ். மாநகர சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூ…
-
- 7 replies
- 1k views
-
-
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளை இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்தியத் துணைத் தூதரகமும் இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கும் முதல் வெளிநாட்டுப் பிரமுகராக, சல்மான் குர்ஷித் இடம்பெறுவார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தமி…
-
- 7 replies
- 489 views
-
-
தமிழ் மக்களின் நிலங்களைத் தொடர்ந்து அபகரித்து வரும் சிறிலங்கா அரசாங்கம் தனியாருக்குச் சொந்தமான முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தையும் அரச சொத்தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல காலமாகவே தமிழ் மக்களின் போக்குவரத்துத் தெய்வமாக விளங்கி வந்த முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய சூழலில் பல சிங்களக் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகமும் தற்போது இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டு கோயிலில் காணிக்கையாகச் சேரும் பணமும் அரச கஜானாவிற்குச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனிடையே இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலயத்திற்கு உரிமை கோரி சிலர் வந்த போதிலும் அவர்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் …
-
- 7 replies
- 1.4k views
-
-
தென்னாபிரிக்க மத்தியஸ்தம் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்! - கேணல் ஹரிகரன் கணிப்பு. [sunday, 2014-04-27 08:45:42] இலங்கையில் அரசியல் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்கின்றமை தொடர்பாக இந்திய அரசாங்கம் அவதானமாக இருக்கும் என்று இந்திய இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்கா இந்தியாவுடன் சிறந்த உறவை பேணுகின்ற நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானை போல இந்தியா தென்னாபிரிக்காவை அச்சுறுத்தலான நாடாக கருதாது. ஆனால் இந்தியாவும் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்து வருகிறது.…
-
- 7 replies
- 988 views
-
-
இலங்கை முழுவதும் எல்லா இனங்களுக்கும் சொந்தமானது. இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ<!--more--> இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவத்தில் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு சக்திகளால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களின் மூலம் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது என்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றின் மூலமே இனப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வொன்றை முன்வைக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ஷ …
-
- 7 replies
- 968 views
-
-
சிரி லன்கா அரசாங்க அறிவித்தல். [முத்திரை மாற்றம்]
-
- 7 replies
- 3k views
-
-
கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வானொலிகளில் ஒன்றான வெற்றி எப். எம்மின் நிகழ்ச்சி முகாமையாளரும் ஊடகவியலாளருமான, லோஷன் என்று அழைக்கப்படும் வாமலோஷனன், ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேரடியாக வீட்டுக்குச் சென்று கைது செய்தவர்கள் ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரே என்பதை உறுதிப்படுத்தியுள்ள லோஷனுடைய குடும்பத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததன் காரணமாகவே தாம் கைதுசெய்துள்ளதாக, கைது செய்யும்போது வழங்கும் காரணத்தை உள்ளடக்கிய சீட்டில் ஸ்ரீலங்காப் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனினும் வாமலோஷனன் முன்னர் பணியாற்றிய வானொலி ஒன்றிலிருந்து, மீண்டும் தம்மோடு இணைற்துகொள்ளுமாறு தொடர்ச்சியாக அழுத்தங் கொடுக்கப்பட்டதாகவும். அதனுடன…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி Posted by: Mathi Published: Tuesday, December 18, 2012, 10:04 [iST] விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர். புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது. ஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழ…
-
- 7 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கியியைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன் போது, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியினால் வெளியிட்ட வாழ்த்து செய்தியும் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கத்தினரால் வாசிக்கப்பட்டது. http://onlineuthayan.com/News_More.php?id=797261794327108864
-
- 7 replies
- 753 views
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3 தினமலரில் வந்துள்ள செய்தி. புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ: அவரது மின்னஞ்சல் முகவரி. cmcell@tn.gov.in ***
-
- 7 replies
- 2.5k views
-
-
சம்பந்தன், விக்கினேஸ்வரன் நாளை சந்தித்துப் பேச்சு (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வர னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவருக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் முரண்பாடான நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தையில் இணக்கப்…
-
- 7 replies
- 351 views
-
-
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம்(13-04-2018) திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிநலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு…
-
- 7 replies
- 1.3k views
-
-
தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுக்கு வாருங்கள் – ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்து !! தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நில ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், படுகொலை, அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களும் …
-
- 7 replies
- 348 views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 13:08 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "தமிழ் மக்களின் அவலங்களை சிறிலங்கா அரச தலைவர் கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் தமிழர்கள் தமது அவலங்களை புறந்தள்ள ஓரணியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை." கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர்களான மேஐர் வினோதரன், லெப். பிரியன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "உலகில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் மக்களுடைய முழுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக போராளிகள் என்ற வரலாறு இல்லை. உலகில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் உச்ச நெருக்கடிகள் ஏற்படுக…
-
- 7 replies
- 1.6k views
-
-
கொழும்பில் "புலி விமான" பீதி- மின்சாரம் துண்டிப்பு [வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 21:27 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானம் வருகின்றது என்று கொழும்பில் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொழும்பின் சிங்கள ஏடு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விமானம் மன்னார் வழியாக கொழும்பு நோக்கி பறப்பதாக நேற்று வியாழக்கிழமை மாலை தகவல் பரவியதாகவும் இதனையடுத்து மாலை 6.45மணிமுதல் 7.05 மணிவரை கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 7 replies
- 3k views
-
-
கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு? கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் சற்றுமுன்பு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அறிந்தேன். இது தாக்குதலா அல்லது விபத்தா என்று தெரியவில்லை.
-
- 7 replies
- 2.9k views
-
-
கிழக்கில் நஸ்ரித்தான் என்ற முஸ்லிம் நாடு உதயமாகவுள்ளது கிழக்கில் முஸ்லிம்களுக்கென நஸ்ரித்தான் என்ற புதியநாடு விரைவில் உருவாகும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கின் கரையோரமாக முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாக அலகு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்திருந்தார். அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் இப்போதைய ஜனாதிபதி மைத்த…
-
- 7 replies
- 883 views
-
-
29 MAY, 2024 | 03:43 PM பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றினை நடத்திச் செல்லும் இவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம். சுமார் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள இவர் இலங்கையின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுப்பதற்காக கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், இவர் எல்ல பி…
-
-
- 7 replies
- 646 views
- 1 follower
-
-
இந்தியாவின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை இலங்கைக்கு பாரிய அளவில் உதவுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதையும் ஏனைய ஆதரவுகளையும் தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு கொழும்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஆதரவாரளர்கள் நிதி சேகரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். 'இந்து' பத்திரிகைக்கு இது தொடர்பாக ரோகித்த மேலும் தெரிவித்ததாவது : விடுதலப் புலிகளின் மையக் கட்டமைப்பு தற்போதும் சிதைவுறாமால் இருக்கின்றதா? என்று அவரிடம் 'இந்து' கேள்வி எழுப்பியது. வெளிமட்ட உதவி தடுக்கப்பட வேணடிய தேவை உள்ளதாகவும் அதுவே …
-
- 7 replies
- 1.4k views
-
-
பலவீனமா? தந்திரோபாயமா? வன்னிக் களமுனை குறித்துக் குழப்பம்! - ஜெயராஜ் - விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவர்; அடுத்த மாவீரர் தினத்தில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் எதுவும் இருக்காது பதுங்குகுழிகளிலேயே மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும்; கிளிநொச்சி மீதான தாக்குதலுக்கு இராணுவம் தயாராகிவிட்டது என்பது போன்ற பிரகடனங்கள் சிறிலங்கா அரச தரப்பில் இருந்து வெளிவந்த வண்ணமுள்ளன. இவ்வாறாகப் பிரகடனங்கள் வெளிவருகின்றபோதும் - சிறிலங்காப் படைத்தரப்பில் தற்பொழுது சில கேள்விகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவும், உடனடியாகப் பதில் தேடப்பட வேண்டியவையாகவும் உள்ளன. சற்று, ஆழமாக நோக்கினால் படைத்தரப்பு சில குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதை நிராகரித்துவிட முடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, சனத் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். 40 மில்லியன் டொலர்கள் செலவில் ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து மஹேல ஜயவர்த உள்ளிட்ட தரப்பினர் இதற்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்ததை அடுத்து நாட்டில் பெரும் பேசும் பொருளாக இந்த விடயம் காணப்பட்டது. …
-
- 7 replies
- 784 views
-
-
மஹிந்த நிபந்னையின்படி, தலைவர் பிரபாகரன் சரணடைந்தால், அங்கு போரை நிறுத்துவது பற்றி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் பேசுவார். காங்கிரசின் கொறடா சி.ஞானசேகரன் தெரிவித்தார். போரை நிறுத்த முடியாது என்று டில்லியில் கடந்த வியாழன் மஹிந்த கூறியதை அடுத்து, இந்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது என எதிhக்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலாக பேசிய போது காங்கிரஸ் கொறடா சி.ஞானசேகரன் : 'தமிழகம் கொந்தளிக்கும்' என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தினார்கள். இலங்கை தனி நாடு. அதற்கென இறையாண்மை உண்டு. மத்திய அரசு மூலமாகத்தான் அதற்கு நடவடிக்கை எடுக்கச் சொல்ல முடியும். 'கொந்தளிப்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, ஏதோ நாமே ஆயுதம் எடுத்து இலங்கைக்குப் போய் போரட வேண்…
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது கண்டித்தும் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் சிவப்பிரகாசம் தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் இன்று சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கோகுலகிருஷ்ணன் தீக்குளித்து இறந்துள்ளார். 40வயதாகும் கோகுல கிருஷ்ணன் இன்று காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்ததும் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக்கொண்டார். பற்றி எரியத் தொடங்கியதும் அவர் ஓடத் தொடங்கியுள்ள…
-
- 7 replies
- 1.1k views
-
-
253 ரூபாயினால்... அதிகரிக்கப்பட்டது, மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்! கடந்த நள்ளிரவு முதல், அமுலுக்கு வரும் வகையில்... ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய் https://athavannews.com/2022/1295635
-
- 7 replies
- 627 views
- 2 followers
-