Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ) July 5, 2020 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள். அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்ப…

    • 7 replies
    • 1.4k views
  2. தேங்காயின் விலை 100 ரூபாய்! September 15, 202001 Share0 அடுத்த மாதம் முதல் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 85 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன் தேங்காய்கள் மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம…

    • 7 replies
    • 917 views
  3. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்க…

  4. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வ

  5. முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள மக்களின் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து சென்ற ஏராளமான சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களும் இணைந்து பங்கேற்றிருந்தனர். தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளினால் காலங்காலமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட நீதியற்ற செயல்களுக்கு சிங்கள மக்கள் மன்னிப்பு கோரும் சிறப்பு வழிபாடாகவே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டினை நிகழ்த்திய பிரதான ஏற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கல் வழிபாட்டின்போது கூறுகையில், 2009ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைக்குள் இவ்விடத்தில் பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர். அப்பொழு…

    • 7 replies
    • 808 views
  6. திங்கள், ஜனவரி 4, 2010 12:45 | ஞானசீலன், யாழ்பபாணம் தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்! தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்க இடம் இன்றி அலைந்த திரிவதாகவும் இராணுவ முகாம்களுக்கு செல்லும் இவர்களை படையினர் அழைத்துக் கொண்டு வந்து தமிழ் பொதுமக்களின் வீடுகளில் தங்க வைப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள் தக்க வைக்க மறுக்கும் தமிழ் மக்கள் மிரட்டடப்படுவதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மிக நெருங்கிய உறவினர் கூட…

    • 7 replies
    • 1.6k views
  7. மட்டு.கல்லடி பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள்- பார்வையிட மக்கள் வெள்ளம் வீரகேசரி இணையம் 11/30/2010 09:01:14 PM மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்கமுடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும். இவ்வாறு கடந்த 2004 ஆம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்பு…

  8. ஐ.நாவில் மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டி­ வ­ரும் – சுமந்­தி­ரன் எம்.பி.!! ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இன்­னு­மொரு தீர்­மா­னம் நிறை­வேற்­ற­ வேண்­டும். இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான பன்­னாட்டு அழுத்­தத்­தைக் கொடுப்­ப­தற்கு, பன்­னாட்டு மேற்­பார்வை நீடிக்­கப்­ப­ட­வேண்­டும். மற்­றொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்ப­டுவ­தன் ஊடா­கவே அத­னைச் செய்ய முடி­யும். அமெ­ரிக்கா இல்­லா­த­தால் மாற்­று­வழி ஊடா­கவே செய்­ய­வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­…

  9. 1600 மில்லியன் ஜப்பானிய யென் உதவித் தொகையைப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பொதுத்துறைக்கு அதிகாரம் அளித்து ஜப்பான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு இதன்படி, ஜப்பான் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1600 மில்லியன் (3.3 பில்லியன் ரூபா) வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பணம் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கான தாய் மற்றும் குழ…

  10. 01 JUN, 2024 | 08:12 PM ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை (01) மாலை மூன்று மணியளவில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என …

  11. தமிழ் - சிங்கள மாணவர் மோதல்: இலங்கை ஜனாதிபதி கவலை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். ஜெர்மன் அரசின் நிதி உதவியுடன் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயற்சி நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டார். நாளைய தலைவர்களாகிய இளைஞர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது. பல்கலைக்கழகங்களையும், தொழிற் பயற்சிக் கல்லூரிகளையும் தேசிய நல்லிணக்கத்தை உருவா…

  12. கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேலுள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 5 பவுண் தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்பொன் இயந்திர தகடும் திருடா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமா…

  13. எனக்கு மட்டுமல்ல... உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான் ‐பேராசிரியர் இராமசாமி நேர்காணல் ‐ டி.அருள்செழியன்‐ 26 August 10 05:05 am (BST) பேராசிரியர் இராமசாமி, "பினாங்கு ராமசாமி" என்றே அறியப்படுகிறார் ‐ மலேசியாவின்:‐ பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், "மகிந்தா ராஜபக்ஷே, கோத்தபய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிரடி அறிக்கைவிட்ட…

  14. இராஜினாமா கடிதத்தில், கையொப்பமிட்டார் கோட்டா ! இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். இருப்பினும் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் அதனை மறுத்திருந்த சபாநாயகர், தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாகவும் ஜனாதிபதி நாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே…

  15. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது ,நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை இறிதியாக இன்று சமர்பிக்க பட்டுள்ளது, இதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். மூவர் அடங்கிய இந்த நிபுணர்கள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்றைய தினம் பான் கீ மூனிடம் இதை ஒப்படைத்துள்ளது எவ்வாறெனினும் இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் தற்பொது பகிர்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&vi…

  16. கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !! கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் …

  17. Published By: DIGITAL DESK 3 16 JUN, 2023 | 12:29 PM யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞனை மறித்துள்ளனர். இவ்வாறு மறித்த பொலிஸார் அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் திறப்பினை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சோதனை சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டனர். இதன்போது, குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் அனைத்தும் தன்னிட…

  18. Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 08:35 AM இலங்கை இந்தியாவின் நியாபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை கருத்தில் கொள்ளும் ஆனால் ஓரு நாட்டுடன் மாத்திரம் சேர்ந்து செயற்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை தனது நாட்டிற்கும் மக்களிற்கும் எது மிகசிறந்ததோ அதனை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் டெய்லிமிரரின் ஓன்பயருக்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கேந்திர அமைவிடம் சர்வதேச வல்லரசுகளுடனான அதன் நெருங்கிய உறவுகள் பல வாய்ப்புகளை வழங்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார். அவைரும் இலங்கைமீது …

  19. "வெசாக் வாரத்தை முன்னிட்டு மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்க வேண்டுகோள்" வெசாக் வாரத்தினை முன்னிட்டு மோதல் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து அமைதி நிலவ வழிசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவசர கடிதங்களை சர்வமத தர்மசக்தி நிதியம் அனுப்பியுள்ளது. இந்நிதியத்தின் கூட்டம் நேற்று போருக்கெதிரான முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க இக்கடிதத்தினை நிதியத்தின் இணைப்பு செயலாளர் வண.வெலிகம தம்மிஸ்வர தேரோ கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செய்தி அவரது செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கான செய்தி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக வும்அனுப்பிவைக்கப்பட்டுள்ள

  20. 13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகிய…

  21. கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஏற்கெனவே ஆறு பெண்களுக்கு உதவியுள்ளதாகவும் விந்தணு தானம் குறித்து தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் அதனை குறிப்பிட்டள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் தம்பதிகளுக்கு உதவுவதில் இது ஒரு பெரிய படியாகும். சமீபத்தில் திறக்கப்பட்ட விந்தணு வங்கி, ஏற்கெனவே விந்தணு தானத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை பதிவு செய்துள்ளனர். இந்த முயற்சியின் மூலம் சுமார் 200 மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உள்ளனர் குழந்தை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். …

  22. [size=4]சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து ஆறாவது மாதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சிறிலங்கா தேயிலைச் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஜுலை மாத தேயிலை ஏற்றுமதி 4.2 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாத தேயிலை ஏற்றுமதி 25.17 மில்லியன் கிலோவாக இருந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம் தேயிலை ஏற்றுமதி 24.11 மில்லியன் கிலோவாக குறைவடைந்துள்ளது. 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி 3.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2011இன் முதல் ஏழு மாதங்களிலும். 195.83 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஏழு …

    • 7 replies
    • 470 views
  23. இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும்இ கச்சத்தீைவ திரும்பப் பெறக் கோரியும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஇ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும்இ கச்சத்தீவை திரும்பப் பெறக் கோரியும் ரயில்மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்கிருந்து சென்டிரல் ரயில் நிலையம் நோக்கி அவர்கள் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக கிளம்பினர். இதையடுத்து கி.வீரமணிஇ தொல்.திருமாவளவன்இ…

  24. நேற்றைய தினம் (18.12.2008) பிரித்தானிய நாடாளுமன்றில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் இன அழிப்பில் ஈடுபட்டிருந்த முன் நாள் ஈராக்கிய அதிபர் சதாம் குசேனுக்கு மரண தண்டனை வழங்கிநீர்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு யாருக்கு மரணதன்டனை வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். 30 நிமிடம் நடைபெற்ற விவாதம் காணொளில் பார்க்க....... http://vimbamkal.blogspot.com/2008/12/blog-post.html

  25. தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14) சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.