ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் புதிய தலைவராக குமாரசாமி. நந்தகோபன் என்ற் ரகு அல்லது கோகுலன் பிள்ளாயானால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கருனா நீக்கப்பட்டதாக பிள்ளாயான் கூறியதாக.............. தொடர்ந்து வாசிக்க................
-
- 7 replies
- 3k views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்யக் கூடும் - சரத் பொன்சேகா யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்யக் கூடுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்றுக்கொள்ளாது, யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வீசா அனுமதியின்றி நேரடியாக விசாரணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்…
-
- 7 replies
- 944 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு‐ அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது யாழ் நகரம் , திருநெல்வேலி, தென்மராட்சியின் சில பகுதிகள், அச்சுவேலி உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை பலாத்காரமாக மூட மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலைவேளை படையினராலும் காவற்துறையினராலும் முறியடிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிக்கு குறுக்காக தடைகளை ஏற்படுத்தி த…
-
- 7 replies
- 2k views
-
-
சட்டவிரோதமான முறையிலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சர்ச்சையை கிளப்பியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவும் அப்போதைய அமைச்சர்களும் மிகவும் நாகரீகமாக முறையில் அமைதியைப் பேணியுள்ளதாகவும், அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி வகித்த டி.எம் ஜயரட்ன பதவி விலகவில்லை, பதவியிலிருந்து விலக்க…
-
- 7 replies
- 658 views
-
-
ஓய்வுபெற்றவர்கள்- அரசியலுக்கு வரக்கூடாது – சுமந்திரன் எம்.பி.!! பதிவேற்றிய காலம்: Oct 9, 2018 ஒய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை அவர்களது துறை சார்ந்த விடயங்களில் ஆலோசனைக்காகவும் பக்கபலமாகவும் ஈடுபடுத்த யோசனைகளை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது. ஒய்வு பெற்றவர்கள் அவர்களின் துறையை விட்டு அரசியலுக்கு வரக்கூடாது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய ஓய்வூதியர் தின விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித…
-
- 7 replies
- 1.2k views
-
-
வடக்கு – தெற்கு மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் தீர்க்கவில்லை – முரளி குற்றச்சாட்டு வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் பூர்த்தி செய்யவில்லை என இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிபிசிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை மக்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ஜனநாயகம் மட்டுமன்றி உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் தெற்கிலும், வடக்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யவ…
-
- 7 replies
- 1k views
-
-
பின்வரும் முகவரிகளில் நேரடி ஒளிபரப்பினைப் பார்வையிடலாம் TVI – canada Eurotv - Europe
-
- 7 replies
- 2.1k views
-
-
கடந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணையை அடிப்படையாக கொண்டே, இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பெட்ரிக் வென்ட்ரெல் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவற்i நிறைவேற்ற போதுமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திராத நிலையில், இது தொடர்பில் மேலும் செயற்பாடுகளை கோரி இந்த முறை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் …
-
- 7 replies
- 653 views
-
-
-
வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன் இலங்கை மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பது சரி. இந்த விடயங்கள் நடக்காது. அதுவே உண்மையும் கூட. இந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பும் இருந்து கொண்டிருக்கிறதென அமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே இருப்பதனை வாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண் டும் என அவர் மேலும் தெரிவிக்கையில், முழுப் பாராளுமன்றமுமே இப்…
-
- 7 replies
- 871 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அளித்த உறுதிமொழியை குறித்த உறவுகள் நிராகரித்துள்ளனர். தாம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வரப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். பிரபாகரனின் இரத்த உறவுகளான, டென்மார்க்கில் உள்ள மனேகரன், இந்தியாவிலுள்ள ஜெகதீஸ்வரி மற்றும் கனடாவில் உள்ள வினோதினி ஆகியோரே மஹிந்த ராஜபக்சவின் உறுதிமொழியை நிராகரித்துள்ளனர். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் இயற்கையானது என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்…
-
- 7 replies
- 1.4k views
-
-
வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பம்பைமடுவில் உள்ள வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டனர். வளாக நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்தது. இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். …
-
- 7 replies
- 1.3k views
-
-
மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை Wednesday, September 7, 2011, 10:43 சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்…
-
- 7 replies
- 1.3k views
-
-
பேஸ்புக் , வட்ஸ் எப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார். நேற்றைய தினம் சில பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் சமாதானத்தை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/119809
-
- 7 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி கோட்டாவின் நேரடிக் கண்காணிப்பில் 12 விட யங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட் டுள்ளதாக தென்னிலங்கை ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1. குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழியச் சிறை. 2.முச்சக்கரவண்டிகள் இற க்குமதி செய்வது முற்றாகத் தடை. 3. பாடசாலை அனு மதியின்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தி யாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர். 4.பகிடிவதை செய்து சிக்கினால் 8 வரு டம் பரீட்சை எழுத தடை விதிக்கப் படும். 5. பாராளுமன்ற உறுப்பினர் 80மூ மேல் அமர்வுகளில் சமுகமளித்திருத்தல் வேண்டும். தவறினால் 5 வருடங் களுக்கு எந்தவித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது. 6. அரச ஊழியர்கள் சே…
-
- 7 replies
- 837 views
-
-
காத்தான்குடியில் பதற்றம்! (படங்கள்) மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்து இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் மையவாடியில் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததோடு மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும், இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும், கலகம் தடுக்கும் படையினரும், போக்குவரத்து பொலிசாரும், …
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது! இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்த நபர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்…
-
- 7 replies
- 1.5k views
-
-
யாழ். நகரில் ஒரு கிலோ மீனின் விலை ஆயிரம் ரூபா
-
- 7 replies
- 2.2k views
-
-
டேவிட் கோர்லட் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலிற்க்கும், பாலியல் சித்திர வதைகளுக்கும் உள்ளானதாக தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தாங்கள் இலங்கை பாதுகாப்பு படையினராலேயே துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லசாப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவினால் நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். அதன் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவபவர்கள் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு இலங்கையில் நரகத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்…
-
- 7 replies
- 780 views
-
-
நோர்வே அரசு மீதும் தன் மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நோர்வேயின் முன்னாள் அரசு மீதும், சொல்ஹெய்ம் மீதும் ஜனாதிபதி நேற்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் குறித்த மறுப்பு அறிக்கையை நாளை வெளியிடவுள்ளதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ஜனாதிபதி தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாதவை. அவர் பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120896&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 881 views
-
-
சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்: மனம் திறந்தார் சு.நிசாந்தன் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை எனவும், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் எனவும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து நிசாந்தன் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். …
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக புதிய ஒரு கட்சி உருவெடுத்து விடுமோ என்ற ஏக்கம் இந்தியாவையும் தொட்டு விட்டமை தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகின்றமை தெரிந்ததே. இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாதென்ற முடிவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மிகவும் உறுதியாக உள்ளார். அதாவது, இந்தியாவை மீறி எந்த நாட்டாலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட முடியாது என்பதில் இரா.சம்பந்தர் கொண்டுள்ள உறுதிப்பாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதற்காக எங்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்தியா சொல்வதாகவே இருக்கும் என்ற கருத்தை எச் சந்தர்ப்பத்த…
-
- 7 replies
- 787 views
-
-
சுதந்திர தினத்திலிருந்து தமிழ்,சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றப்படும் : அரசாங்கம் எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் …
-
- 7 replies
- 614 views
-
-
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒட்டுக்குழு அமைப்பைச் சார்ந்தோர் 1000 பேரை சிறீலங்கா இராணுவத்துக்குள்ளும்.. பொலீஸுக்குள்ளும் உள்வாங்கும் வேலைகளை ஆரம்பிக்க மேற்படி அமைப்பு சிறீலங்கா அரசைக் கோரியுள்ளது. ஏற்கனவே சுமார் 1500 ஆயுதப் பயிற்சி பெற்ற கருணா குழு உறுப்பினர்கள் அரச ஆதரவு மற்றும் பொது தொண்டு நிறுவனங்களின் உதவியோடு புனருத்தாரன பயிற்சி அளிக்கப்பட்டு சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு படை (Civil Defence Force ) அங்கம் பெற தயார்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறீலங்காவின் சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் பெறுபவர்கள் பின்னர் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பணிக…
-
- 7 replies
- 1.8k views
-
-
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந…
-
- 7 replies
- 2k views
-