ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா பௌத்தத்துக்கு முதலிடம் குறித்து சிறுபான்மையினர் அச்சம் காணிகளை மீள கையளியுங்கள மலையக தமிழர்களின் நிலைமை கவலைக்குரியது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள் (ரொபட் அன்டனி) முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இரா ணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது. அதாவது இது தமிழர் களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுப்படுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இப்படியும் நடக்கிறதாம் ! ஐநாவில் சிங்களத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றும் முன்னால் ராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சவீந்திர சில்வாவுக்கெதிராக அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையொன்றை அதன் புலநாய்வுத்துறை மூலம் தயாரித்து வருகிறதாம். வன்னிக் கொலைக்களத்தில் அப்பாவிகள் மேல் நடத்தப்பட்ட படுகொலைகளின் ஓளிப்படத்தொக்குப்புகளின் ஒரு பகுதி வெளிநாட்டுச் செய்திப் பிரிவுகளுக்குப் போய்ச் சேர உதவிய ரூபவாகினியின் ஒளிப்படப் பிரிவின் அதிகாரியொருவருக்கும் சவீந்திரவுக்கும் தொடர்பிருப்பதாகவும், இதன்போது பெருந்தொகையான பணம் கைமாறப்பட்டதாகவும் இவர்மேல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஐ. நா வில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவர் தனது முதல…
-
- 6 replies
- 1.5k views
-
-
வத்திகானின் மக்கள் யாத்திரை கேந்திர நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் அரின்சஸ் கர்தினால் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது, மடு தேவாலயம் குறித்தோ, அல்லது வேறு அரசியல் தலைப்புகளிலோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என இலங்கையில் உள்ள வத்திகான் அபோஸ்தலர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மடுதேவாலயத்தை இராணுவம் கைப்பற்றியமையை வத்திகான் பாராட்டியுள்ளது என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. வத்திகான் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்த போது மடு தேவாலயம் பற்றியோ, அரசியல் விடயங்கள் குறித்தோ எதுவும் பேசாத நிலையில் அரச ஊடகங்களின் ஊடாக ராஜபக்ஸ அரசாங்கம் அரசியல் லாபம் பெறும் நோக்கில் மத த…
-
- 0 replies
- 1.5k views
-
-
26 ஆகஸ்ட் 2011 தூக்குத் தண்டனை விவாகரம் தமிழக சட்ட மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு -தமிழகம் முழுக்க போராட்டம். இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதன…
-
- 11 replies
- 1.5k views
-
-
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை! [ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:06 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] அமெரிக்க புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24.01.06) கொழும்பு வரவுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் அபாயம் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நடடிவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் அமெரிக்காவுக்கு நேரடியாக சென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இக்குழுவினரின் வருகை அமையவுள்ளது என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படிக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சு அதிகாரிகள் சிலரும் இடம்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
10.01.09 தாயக முக்கிய செய்திகளை இங்கே இணைக்கப்பட்டுள்ளது நன்றி
-
- 0 replies
- 1.5k views
-
-
மணலாறில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட்டன வீரகேசரி இணையம் 5/1/2008 11:09:55 AM - மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகளின் புதிய விமானத்தளத்துக்கு விமானங்கள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.இதுவரை இலங்கை இராணுவத்தின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் 5 ஆவது தடவையாகவும் விமானத்தாக்குதலை நடத்தி உள்ளனர். புலிகளின் விமானங்களை இலங்கை விமானப்படையினரால் இதுவரை இடைமறிக்க முடியவில்லை.கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் Zlin Z-143L ரக இரண்டு இலகு ரக விமானங்கள் முல்லைத்தீவிலிருந்து அதிகாலை 1:25 ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] கண்டல்காட்டுப் பகுதி ஊடான முன்னேற்றம் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு. நாகர்கோவில் பகுதிக்கும் எழுதுமட்டுவாள் பகுதிக்கும் இடைப்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. கண்டல் காட்டுப் பகுதி ஊடாக இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்கள் இன்று மதியம் 12 மணியுடன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையின் மனித உரிமை மீறல்கள்; பதிலளிக்காவிடின் அழுத்தம் அதிகரிக்கும்; மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரதிப் பேச்சாளர் மார்க்ரோனர், சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை இலங்கை வழங்கத் தவறும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மற்றும் விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை இலங்கை ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைநகர் மற்றும் முள்ளியவளைப் பகுதிகளில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=37
-
- 0 replies
- 1.5k views
-
-
தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா? [19 - August - 2007] -பீஷ்மர்- கடந்த வாரம் இலங்கை அரசு சர்வதேச நிலையில் மேலும் சில `அடி'களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் மனிதாபிமானப் பணி நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக வந்த ஹோம்ஸின் அறிக்கை அரசாங்கத்துக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் மூதூரையடுத்து கொல்லப்பட்ட பிரஞ்சு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்ற ஹோம்ஸின் குறிப்பு இலங்கையின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்கள் இந்த வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபட்டதாக தெரியவில்லை. இவையெல்லாவற்றுக்கும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஐ.நாவைச் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-19 07:37:47| யாழ்ப்பாணம்] திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வம் நேரில் தோன்றி, மகனே! என்ன வேண்டும் என்று கேட்கமாட்டா. இறைவன் வழிகாட்டுவான். அந்த வழியைப்பின்பற்ற வேண்டும் என்பதே அந்தப் பழமொழியின் முடிபு.அதன் பிரகாரம் ஈழத்தமிழர்களாகிய நாமும் திக்கற்றவர்களே! இந்தியா பாதுகாக்கும்-தமிழகம் விடாது என்றெல்லாம் நினைத்து நம்பி எல்லாம் இழந்தாயிற்று. எங்களுக்கு உதவ எவருமே இல்லை என்ற கையறு நிலையில், இப்போது ஒரு வழி பிறந்திருக்கின்றது. இந்த வழி பிறப்பதற்கு உள்ளூர்த் தமிழ் அர சியல் தலைமைகள் காரணமன்று. மாறாக, சர்வ தேச மனித உரிமை அமைப்புகள், மன்னிப்புச் சபை, சனல் 4, விக்கிலீக்ஸ் மற்றும் சர்வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
வணக்கம் நாதம்செய்திகள் : சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்பட நேரஞ்சல்..... தொடர்ந்து ஒளிபரப்பில்...... http://naathamnews.com/?p=4425
-
- 4 replies
- 1.5k views
-
-
கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார். சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பக…
-
- 19 replies
- 1.5k views
-
-
மகிந்தவை ஆதரித்துப் பேசுமாறு வேலுப்பிள்ளை துன்புறுத்தப்பட்டார். kayathri தேசிய தலைவரின் தந்தை அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 19 வது வயதில் பிரித்தானிய ராணியின் முடி ஆட்சிக்குட்பட்டு இலங்கை இருந்தபோது, பணியாற்ற ஆரம்பித்தார். அவர் முதலில் பணியாற்றியது பிரித்தானிய அரசிற்காகும். பின்னர் அவர் இலங்கை அரசாங்கத்தின் கீழ் 39 வருடம் வேலைசெய்து தனது 58 வது வயதில் இளைப்பாறினார். அரசாங்கத் திணைக்களத்தில் வேலை பார்த்ததால் சிங்கள மொழியை சரளமாக வாசிக்கவும் பேசவும் வல்லவர். இவர் முல்லைத்தீவு, கிளிநொச்சி, துணுக்காய், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார். போர் மூண்டவேளையில் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த இவர்கள், தமது மகன் ஆட்சிக்குட்பட்டிருந்த பெருநிலப்பரப்பு குற…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு, எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்… தமிழ் மக்கள் பேரவை பேரவை செயலகம், பலாலி வீதி, கந்தர்மடம் 31.08.2018 அன்று மாலை 4.30 மணிக்கு இணைத்தலைவருரை எல்லோருக்கும் வணக்கம். ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன. எமது பதவிக்காலம் முடிந்ததும் ஆளுநர் ஆட்சி நடத்தப் போகின்றார். அவர் ஆட்சியின் போது எமக்குப் பாதிப்பான நடவடிக்கைகள் நடைபெறப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக பௌத்த விகாரைகளைத் திறந்து வைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. பலரும் உங்கள் இணைத்தலை…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்.குடாநாட்டிற்கு 2025ம் ஆண்டிலாவது சுத்தமான நீரை வழங்குங்கள் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சிவச்சந்திரன் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்;.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தில் 80 வீதமான மக்களும், 20வீதமான வளங்களுமே உள்ளன.ஆகையால் வளப்பங்கீடு செய்தல் மிக அவசியம்.அத்துடன் நீர் பிரச்சனையை தீரப்பதற்கு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் விஞ்ஞான பூர்வமான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீர் பிரச்சனை தற்போது ஐ.நா பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.அதுமட்டுமல்லாது,மலக்கழிவு கலக்காத கிணறு நகரத்தில் தற்போது இல்லை என…
-
- 15 replies
- 1.5k views
-
-
தமிழீழத் தொலைக்காட்சியில் இவ்வார ஆய்வாக நடைபெற்ற "சிறீலங்காவும், நிதி நிலமையும்" - கலந்து கொண்டவர்கள் திரு.வீராவுடன் தமிழீழ பொரூளதார ஆய்வாளர் திரு.பாலகிருஸ்ணன் மற்றும் தமிழீழ வைப்பகத்தின் நடுவப் பணி மேலாளர் திரு.இந்திரமோகன்
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பில் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது தமிழர்கள் வெளியேற்றப்பட்ட மறுநாள் சம்பவம், தலைகுனிவில் சிறிலங்கா காவல் துறை! பாரிய வீதியோர குண்டொன்றை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து செயலிழக்க செய்துள்ளனர்! 7கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு சோதனை சாவடி ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது! Sri Lanka slammed for deporting Tamils, bomb defused By Simon Gardner COLOMBO (Reuters) - Sri Lankan police defused a big roadside bomb in Colombo on Friday as local and international rights groups slammed the government for rounding up minority ethnic Tamils and deporting them to the war-ravaged north. The military said a 7…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாணத்தில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் சிறிலங்காப் படைகள் அகற்றப்பட்டு விடும் என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் கதை விட்டிருக்கிறார் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சென்னையில் இருந்து சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்களிடமே, வடக்கில் எஞ்சியுள்ள படையினரை அகற்ற தனக்கு ஒருமாதம் காலஅவகாசம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை பிரிஐ வெளியிட்டுள்ளது. “வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். பத்தில் இரண்டு பகுதிகள் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகளில் இர…
-
- 5 replies
- 1.5k views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் ஒரு வாரகாலமாக நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பலில் உள்ள அதிசக்தி வாய்ந்த ஒலி‐ஒளி அலைவீச்சு கருவிகள் காரணமாக திருகோணமலையில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவாக தெரிவதில்லை என பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகள் முற்றாக தெரிவதில்லை எனவும் சில தொலைக்காட்சிகளில் இந்திய அரச தொலைக்காட்சி சேவைகள் தென்படுவதாகவும், அதனை காண மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பி இணைப்பு தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை. இதேவேளை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பல் தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்கள் திருகோணமலையில் இருக்கும் என கூறப்படுகிறது. http://www.tam…
-
- 1 reply
- 1.5k views
-
-
NDTV ஒளிபரப்பிய இலங்கை குறித்த விவரணம்: பெரும் சர்ச்சை இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது. ஆனால் இந்த விவரணத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம், அந்த விவரணத்தைத் திரும்பப் பெற்றுவிடுமாறு குறித்த தொலைக்காட்சி சேவைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவரணத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறும் காரியவாசம், தற்போது இடம்பெயர் முகாம்களிலும், முட்கம்பிக்குப் பின்னாலும் 3 முதல் 6 லட்சம் வரையான மக்கள் இருப்பதாக பேராசிரியர் செனோய் குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள் என விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இன்று இரண்டாவது தடவையாக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பௌத்த பிக்கு ஒருவரால் குற்றப் புலனாய்ப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனிடம் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 2019 நவம்பர் 14 ஆம் திகதி விக்னேஸ்வரன் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையில், இலங்கையின் மூத்தகுடிகள் தமிழர்களே என குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது எனவும், சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனவும் பௌத்த பிக்க…
-
- 16 replies
- 1.5k views
-
-
"சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர் சம்மேளனம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கனை நினைவு கூர்ந்து நினைவுப்பாடல் http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3 ஆக்கம்: தாயகக் கலைஞர்கள்
-
- 3 replies
- 1.5k views
-