ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள் இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர். அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும்,…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.manithan.com/news/data/upimages/gtff.jpg /size]அரசு விசனம் உலகத்தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் நியூயோர்க் சென்றிருந்த போது ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் இலங்கை அரசு விசனம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு அரசையும் சாராத உறுப்பினர் ஒருவர் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை சந்தித்தமை தொடர்பில் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் பான் கீ மூனுடனான இந்தச் சந்திப்பின் பின்னணியில் சக்திவாய்ந்த ஒரு நாடு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மாபெரும் மறியல் போரட்டம் பிபிசி நிலையத்தின் முன்னால் இன்று இலண்டனில் மாலை 2:30 மணியளவில் 23.01.09 ரெயில் WHITE CITY WOODLANE LONDON W12 7R BUS 72,95,220,272
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க, அமெரிக்க அரசின் ராஜாங்கத் துறையின் அழைப்பின் பேரில் வாஷிங்டன் சென்றிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இரா.சம்பந்தன் தலைமையில், வாஷிங்டன் வந்திருக்கிறது. இது குறித்து தமிழோசையிடம் பேசிய , தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26லிருந்து ராஜாங்கத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்தார். பல மூத்த அதிகாரிகளை இதுவரை சந்தித்திருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், இனி வரும் நாட்களில் மேலும் சில முக்கிய செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.…
-
- 24 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒரே முறையில் முகமாலை ஊடாக ஏ-9 பாதையில் கொண்டு செல்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து: ஏ-9 பாதை நிரந்தரமாக மீளத் திறக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு ஒரே முறையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்றார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு: பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஏ-9 பாதையூடாக ஒரே முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். இந்தப் பண…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துநெட்டி மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்திய கூலிப்படையினரின் படங்களை ஜே.வி.பி வெளியிட்டுள்ளது. இவர்கள் இராணுவத்தினரின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிப்பதாகவும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இப்படங்களை ஜே.வி.பி யின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. www.tamilcnn.com
-
- 4 replies
- 1.5k views
-
-
அரசபடைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் கருணா குழு! தமிழகத்தில் வைத்து அம்பலப்படுத்துகிறார் இலங்கை பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன். இராமேஸ்வரம் ஓக. 02 இலங்கை அரச படைகளுடன் இணைந்து கருணா குழுவினர் பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என தமிழத்தில் வைத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் உயிரிழக்க நேரிடுகின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம், கோஸ்வாமி மடத்தில் குடும்பத்தினருடன் தற்சமயம் தங்கியிருக்கும் தொழிற்கல்வி மற்றும் தெழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பி. ராதாகிருஸ்ணன், நேற்று இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தசிசனம் செய்தார். இந்தச் சந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
2012 ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவ்வாறு தற்போது அமெரிக்காவில் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையினை யுத்தக்குற்றங்களாகவோ குறுக்கிவிடுவதற்கோ அல்லது சில யுத்த அத்துமீறலாகப் புறந்தள்ளி விடுவதற்கோ நாம் இடமளிக்க முடியாது என இடித்துரைத்த பிரதமர் அவர்கள் 2012ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
-
- 13 replies
- 1.5k views
-
-
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர். இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலை…
-
- 6 replies
- 1.5k views
-
-
பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Posted on June 4, 2020 by தென்னவள் 15 0 முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது. இச் சிலை வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கால…
-
- 13 replies
- 1.5k views
-
-
லண்டனில் ஒரு தமிழ் இளைஞரைக் கொலைசெய்து, மற்றொரு இளைஞரைக் கொல்ல முயன்றார் என்று குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிவந்து இலங்கையில் வாழ்ந்துவந்தார் எனக்கூறப்படும் தமிழ் இளைஞர் சிலாபம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். கொழும்பு, பொலிஸ் பகுதியில் அமைந் துள்ள சர்வதேச பொலிஸ் பணியக (இன்டர் போல்) பிரிவைச் சேர்ந்த பொலிஸாரே சிலா பத்துக்குச் சென்று இவரைக் கைதுசெய்தனர். சிவப்பிரகாசம் ராஜேஸ்கண்ணா என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி உபாலி அபேவர்தன முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார். இவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். லண்டனில் 2004ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி மகேஸ்வரன் கணேசன் என்ற இளைஞரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்டதில் கொலையுண்ட கேணல் உதயதீர என்ற படை அதிகாரி யாழ்ப்பாணத்தில் 11 ஆண்டு காலமாக செயற்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.5k views
-
-
2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள். இந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் த…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர். ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும் என்பதே எமது கட்சியான தொழிற்கட்சியின் நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கெவின் றட் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 83 பேரையும் அகதிகளாக ஏற்க உதவ வேண்டும் எனக்கோரி பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அனுப்பிய கடிதத்துக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெவின் றட் பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கடும் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. நேற்று காலை இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். பல்வேறு போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு தங்களது நாட்டு கடற்படை காரணம் அல்ல, விடுதலைப் புலிகள்தான் சுட்டனர் என்று இலங்கை வெளியுறவு அமைச…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் காய்த்துள்ள பேரீச்சை மரம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பேரீச்சை மரம் பூத்து காய்த்துள்ளது. பாலைவனப் பகுதியில் விளைய கூடிய பேரீச்சை மரத்தை பணம் வரும் மரமாக மாற்றி வெற்றியடைந்திருக்கின்றனர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர். அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் 30 வருடங்களாக சாவகச்சேரி பகுதியின் வீடு ஒன்றில் பராமரித்து வந்த குடும்பத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர். அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Palm-…
-
- 3 replies
- 1.5k views
-
-
வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] கண்டல்காட்டுப் பகுதி ஊடான முன்னேற்றம் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு. நாகர்கோவில் பகுதிக்கும் எழுதுமட்டுவாள் பகுதிக்கும் இடைப்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. கண்டல் காட்டுப் பகுதி ஊடாக இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்கள் இன்று மதியம் 12 மணியுடன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கோரி இரு புத்த பிக்குகள் சாவும் வரை உண்ணாவிரதம். விடுதலைப் புலிகளைச் தடைசெய்யக் கோரியும், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி இரு பெளத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தங்காலையில் அமைந்துள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு வாசஸ்தலத்திற்குச் சென்ற இரு பெளத்த பிக்குகளும் மனு ஒன்றைக் கையளித்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளை தடை செய்ததையும் பங்கரவாதச் தடைச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்ததை எழுத்து மூலம் சிறீலங்கா அரசாங்கம் அறிவிக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படு…
-
- 7 replies
- 1.5k views
-
-
கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டியதாக கிழக்கு மாகாண அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ. நாசீர் அஹமட் இவ்வாறு கடற்படை அதிகாரியை, அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் முன்னிலையில் இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரைமுறை தெரியாவிட்டால் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடுமையாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு முதல் அமெரிக்கத் தூதுவர் மேடைக்கு அழைக்கப்பட்டமையை பகிரங…
-
- 21 replies
- 1.5k views
-
-
-
ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த மூன்று நபர்களும் தமிழ்நாட்டினுள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து திருச்சி பகுதியில் நடமாடிய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழில…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பில் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது தமிழர்கள் வெளியேற்றப்பட்ட மறுநாள் சம்பவம், தலைகுனிவில் சிறிலங்கா காவல் துறை! பாரிய வீதியோர குண்டொன்றை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து செயலிழக்க செய்துள்ளனர்! 7கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு சோதனை சாவடி ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது! Sri Lanka slammed for deporting Tamils, bomb defused By Simon Gardner COLOMBO (Reuters) - Sri Lankan police defused a big roadside bomb in Colombo on Friday as local and international rights groups slammed the government for rounding up minority ethnic Tamils and deporting them to the war-ravaged north. The military said a 7…
-
- 3 replies
- 1.5k views
-
-
மனிதநேயத்துக்கெதிரான மாபெரும் இனப்படுகொலையை மேற்கொண்ட போர்க் குற்றவாளி மகிந்த இராஜபக்சஆற்றவிருக்கும் உரையினை நிறுத்தக்கோரியும் பொதுநலவாய அமைப்பின் மனிதாபிமானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் இச்செயலைக் கண்டித்தும் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் ஐரோப்பியவாழ் தமிழ்ப்பெண்களுக்கு ஒர்அவசரமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள். தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த மகிந்த இராஜபக்சவை பிரித்தானிய மாகாராணியின் வைரவிழாவிற்கு அழைத்திருப்பது தமிழ்மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்றம் புரிந்து தமிழ்மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்த மகிந்த இராஜபக்ச லண்டன் மண்ணில் காலடிவைப்பதை ஒருபோதும் அனுமதிக் கூடாது எனவும் ,…
-
- 1 reply
- 1.5k views
-