ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்ற…
-
- 6 replies
- 1.9k views
-
-
கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக .................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_7924.html
-
- 6 replies
- 3k views
-
-
போரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை! குற்றவாளிகள் தப்புகிறார்கள்!! சாடுகிறது அமெரிக்கா! இலங்கையில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், ஊழல், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டோர் தண்டனையில் இருந்து தப்புகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் 2015' என்ற அறிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டது. அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு, கடந்த ஆண்டில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்…
-
- 6 replies
- 468 views
-
-
சிறீதரனின் தந்தையார் காலமானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர், இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஐரோப்பாவில் …
-
- 6 replies
- 751 views
- 1 follower
-
-
வலைப்பாட்டில் கடற்புலிகளுக்கும் கடற்படைக்கும் இடையில் பெரும்சமர் நடந்ததாக தீபம் செய்தயில் கூறுகின்றார்கள். வேறு ஒரு இடத்தில் காணவில்லை. யாராவது ஏதாவது அறிந்தீர்களா?
-
- 6 replies
- 3.9k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாணவர்கள் சுதந்திரமான மனநிலையுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 497 views
-
-
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும் BattinewsJanuary 12, 2021 யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன், விடுதலைப் புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவுகூரல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அவ்வாற…
-
- 6 replies
- 1.1k views
-
-
தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐ.தே.க நிராகரிப்பு 17 மே 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணை…
-
- 6 replies
- 855 views
-
-
(நமது நிருபர்) பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். பலாலிக்கு விஜயம் செய்திருந்த அவர் விமான நிலையத்தின் சூழலை களஆய்வு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயற்றிட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பலாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் வடிகால்கள், வாகனத் தரிப்பிடங்கள், ஓய்வுப்பகுதிகள், நடைபாதைகள், மருத்துவமனை வசதிகள், சூரியசக்தி மின்சார ஒளிவிளக்குள் உள…
-
- 6 replies
- 605 views
-
-
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய வீரமணி, ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், "திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி…
-
- 6 replies
- 786 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார் என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பின் போது வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதமொன்றை சம்பந்தன் மோடியிடம் கையளித்தார். விக்கினேஸ்வரனையும் தன்னைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார் எனவும் மோடி தெரிவித்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புதுடில்லியின் நன்கு அறியப்பட்ட 7 ரேஸ்கோர்ஸ் வீதி என்ற முகவரிக்கு முன்னால் கூட்டமைப்பினர் சென்ற அந்த மூன்று வாகனத் தொடரணியை பாதுகா…
-
- 6 replies
- 649 views
-
-
நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது? ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிச…
-
- 6 replies
- 451 views
- 1 follower
-
-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையும், கிழக்கு மாகாண சிவில் சமூகமும் ஒன்றிணைந்து நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்'' எனும் தலைப்பிலான பிரகடன நிகழ்வு நாளை புதன்கிழமை நடை பெறவுள்ளது. இந்த நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலில் நடை பெறவுள்ளது.முஸ்லிம்களின் எழுச்சி அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடும் தரப்புக்களுக்கான அழுத்தங்களாக மாற்றப்பட வேண்டும், அரசியல் அதிகாரங்களுடன் தொடர்புபடும் எந்த விடயத்திலும், முஸ்லிம்கள் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் செயற்பட்டு முஸ்லிம் தலைமைகள் வென்றெடுக்கவேண்டும்,…
-
- 6 replies
- 596 views
-
-
புலிகளின் விமான பலத்தை ஒழிக்க அமெரிக்கா - இந்தியா வழங்கிய அறிவுறுத்தல்கள் [07 - June - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காகவும் அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவும் அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்களும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்களும் புலிகள் இயக்கத்தின் யுத்த பலத்தை ஒழிப்பதற்கு அரசு எடுக்கவேண்டிய உடனடியான நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுப் பட்டியல்களுடன் தமது பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக ஞாயிறு லங்கா தீபவுக்கு அறிவிக்கப…
-
- 6 replies
- 3.5k views
-
-
யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கே நாட்டை ஒப்படைக்க வேண்டும். மாறாக நாட்டை பிரிவினைக்கு கொண்டு செல்லும் தலைவரை தெரிவசெய்வது ஆபத்தானது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்கள் சுதந்திரகமாக வாழ்வதும் நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதும் மஹிந்தவால் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் வெற்றி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் மோசமான ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும். இந்த ஆட்சியை உருவாகியது மக்கள் அல்ல. மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சி மாற்ற…
-
- 6 replies
- 855 views
-
-
சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்புக்கு பஸ் வண்டியில் சென்றுள்ளார்:- யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மு.தம்பிராஜாவின் 19 வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லரின் ஆலோசனைக்கு அமைய யாழில் இருந்து கொழும்புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த ஆகியோருடனான குழுவுடன் இணைந்து அவரை இவ்வாறு கைது செய்ததாகவும், நேற்று இரவு 11.00 மணிய…
-
- 6 replies
- 1.3k views
-
-
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்…
-
-
- 6 replies
- 560 views
-
-
சென்னை: மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக திமுக வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல. இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும் என்று இல்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைக் குழுவின் ஆணையர் நவநீதம்பிள்ளையே தனது அறிக்கையில் இலங்கை…
-
- 6 replies
- 722 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கப்பம் கோரல் கொள்ளை கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும் இவர் தலைமையிலான ஈ.பி.டி.பியினர் கப்பம் பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக யாழ். வணிகர் கழகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்த…
-
- 6 replies
- 597 views
-
-
இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார். வரவுசெலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும…
-
- 6 replies
- 872 views
-
-
தீர்ப்பு எழுதி 14 வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டது -எம்.ஏ. சுமந்திரன்! தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் யாழ் மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்..... ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட…
-
- 6 replies
- 753 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மறைந்து 10 வருடங்கள் நிறைவு சிரேஷ்ட ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆந் திகதி ஆயுதம் தாங்கிய குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, மயில்வாகனம் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரும் தாக்குதலுக்கு இலக்காகினர். நிமலராஜன் பிபிசி தமிழ், சிங்கள சேவை மற்றும் வீரகேசரி, ராவய ஆகிய பத்திரிகைகளின் நிருபராகக் கடமையாற்றினார். இவரது படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன் வர வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வலியுறுத்திக் கூறியிருந்தது. 2002 ஆம் ஆண்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்…
-
- 6 replies
- 872 views
-
-
மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …
-
- 6 replies
- 1.7k views
-
-
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அண்மையில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் செய்தியில் இது குறித்து பதிவிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ, “அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார். “முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்” என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் த…
-
- 6 replies
- 1k views
-
-
பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம், காணாமல்போன யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பொன்னையா மகிணன் (வயது 62) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே, இவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது. வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், க.பொ.த. (உ/த) பரீட்சை மதி…
-
- 6 replies
- 1.9k views
-