ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143578 topics in this forum
-
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி! [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 10:53.07 AM GMT ] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந…
-
- 6 replies
- 1.5k views
-
-
தேசியத் தலைவரால் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன் கடந்த மாவீரர் நாளன்று, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம், பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்த ராஜபக்சவிற்கு தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட கால அவகாசம், இவ்வருட மாவீரர் நாளுடன் நிறைவடையும் எனக் கூறப்படுவது மிகவும் தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார். மாறாக சிறீலங்கா அதிபருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்து, தற்போது யுத்த …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.! இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நி…
-
- 9 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் நிலைமைகளையும் அவதானித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியில் செம்பியன்குளம், கருவேப்பமுறிப்புக்குளம் ஆகிய பிரதேசங்களை அண்டி…
-
- 10 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்- மன்னார் ஆயர் சார்பாக அறிக்கைAUG 06, 2015 | 13:31by புதினப்பணிமனைin செய்திகள் தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம், சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் சார்பாக- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.விக்டன் சோசை அடிகளார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசெப் ஆண்டகை சார்பாகவும், அவர் தம் ஆலோசனை மன்றத்தின் சார்பாகவும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு.…
-
- 3 replies
- 1.5k views
-
-
02.10.1995 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிக் கலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளநிலா 15ம் ஆண்டு நினைவு வணக்க நாளும், ஓயாத அலைகள் 4 நடவடிக்கையில் 02.10.2000 அன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தில்லையழகன்(தில்லை) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 8 replies
- 1.5k views
-
-
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி 13 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கப்பம் கோரி வர்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர் ‐ யாழ்ப்பாணத்தில் இருந்து GTN செய்தியாளர்‐ 20 April 10 03:49 pm (BST) மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடிகாரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். துரைசிங்கம் அஜித்குமார் எனும் 13 வயதுடைய இந்த மாணவன் தனது முகாமிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சமயம் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள…
-
- 13 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
மீண்டும் சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இராணுவ தலைமையகத்திற்குள் சரத் பொன்சேகாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மிகவும் சக்தி வாய்ந்த குண்டு அவருடைய வருகைக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டதால் சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலிருந்த பூச்சாடிக்குள் பாரிய சக்தி வாய்ந்த குண்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும் சரத் பொன்சேகா காரியாலயத்திற்கு வருவதற்கு சில வினாடிகளுக்கு முதல் அந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டதால் சரத் பொன்சேகா தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். எனினும் இந்த தகவலை வெளியே ஊடகங்களுக்கு வெளிவராதபடி இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்து வருகின்றது. http://www.nitharsanam.com/?…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிசய பறவை! வெள்ளி, 04 பெப்ரவரி 2011 09:21 யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிசயமான பறவை ஒன்று மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றது. காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் நீர்வேலிப் பிரதேசத்தில் இப்பறவை விழுந்து இருக்கின்றது. இப்பகுதி மக்கள் பறவையைக் காப்பாற்றி கூண்டிலில் அடைத்து வைத்து உள்ளார்கள். இதன் தோற்றம், குணம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இது ஒரு வகையான ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்றும் பருவ கால மாற்றத்தால் வெளிநாடு ஒன்றில் இருந்து பறந்து வந்து இருக்கின்றது என்றும் ஊகிக்கப்படுகின்றது. இப்பறவையை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். tamilcnn.com
-
- 9 replies
- 1.5k views
-
-
பிரார்த்திக்கும் உதடுகளைவிட கொடுக்கும் கை புனிதமானது! -நக்கீரன் (கனடா)- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு உலகறிந்த இராசதந்திரியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எந்த நெருக்கடிக்குள்ளும் சிரித்த முகத்தோடும் மயக்கும் புன்னகையோடும் வலம் வந்த ஒரு மானிடனை இழந்து விட்டோம். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் வளர்த்தெடுத்த ஒரு நல்ல தம்பியை இழந்து விட்டார். உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். கோடான கோடி மக்கள் பிறந்து பின்னர் இறக்கிறார்கள். இந்தக் கோடான கோடி மக்களில் உலகம் ஒரு சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எஞ்சியவர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு : இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.அதேசமயம், இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை, இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.கரடியனாறு காவல் நிலையத்தில் டைனமைட்டுகள் வெடித்துச் சிதறியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் சீனர்கள், மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள். உயிரிழந்தவர்களில் பலர் முன்னாள் விடுதலைப் புலிகள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தமிழர்களை சீன நிறுவனம் தனது சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தியிருந்ததாம். வெடிவிபத்தில் இந…
-
- 6 replies
- 1.5k views
-
-
காட்டாறு போல வருகிறது பொருளாதாரப் பேரிடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-02 15:48:00| யாழ்ப்பாணம்] அத்தியாவசிய உற்பத்தி பொருட்களின் வீழ்ச்சி, ஆடம்பர பொருட்கள் அதீத நிரம்பல், மனித உழைப்பை சோம்பேறி ஆக்கும் நவீன கருவிகளின் படைப்புக்கள் என எல்லாமும் சேர்ந்து எங்கள் வாழ்வை தொலைத்து நிற்கின்றன. இதனிடையே விடுதலைப் புலிகளை தோற் கடிப்பதை மட்டும் மையமாக கொண்டு நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் யுத்தத்திற்கு தாரை வார்த்துவிட்ட பெரும்கொடுமையின் விளைவை நாடு இப்போது சந்திக்க தலைப்பட்டுள்ளது. இவ் வாறாகப் பொருளாதார நெருக்கடி இந்த நாட்டு மக்களின் வயிற்றை மட்டுமல்ல, தொண்டையையும் சேர்த்து இறுக் கப் போகின்றது. இத்தகையதொரு மிக மோசமான நிலையை தென்பகுதி மக்கள் எதிர்கொள்வதும் …
-
- 5 replies
- 1.5k views
-
-
உதயன் மீதான தாக்குதல் இலங்கை அரசுக்கு நெருக்கடி; நேற்றும் வொசிங்டனில் எதிரொலி யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்லிடம் உதயன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். உதயன் நாளிதழ் மீதும், பொதுவாக ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், ஆகப்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2/26/2008 11:18:22 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விளக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது தொடர்ச்சியாக 9 சதவீதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலராக இருந்த போதிலும்கூட நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. …
-
- 6 replies
- 1.5k views
-
-
சென்ற திங்களன்று சரத்பொன்சேகா மற்றும் ரணில் உடனான கலந்துரையாடலில்கூட்டமைப்பினர் எட்டு முக்கிய விடயங்களை முன்வைத்ததாகவும் அவற்றை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கொழும்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த எட்டு விடயங்களாவன: 1 12,000 புலி உறுப்பினர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும் 2 உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குதல் 3 வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல் 4 இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக விடுவித்து துரித மீழ் குடியமர்வினை செய்தல் 5 மீழ் குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பு 6 வடக்கு கிழக்கு மீழ் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்தல் 7 கிழக்கில் புதிய குடியேற்றங்களை நிறுத்துதல் 8 அரசிய…
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் சில்லாலை சந்தைப் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு பின்னரே மூச்சுத்திணறலால் மரணமடைந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையான 27 வயதான செல்வராஜா அனுஷா என்ற இந்த யுவதி கடந்த 8 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.கால்கள் இரண்டும் மடங்கி வளைந்த நிலையில் நிலத்தில் பட்டும் படாமலும் சடலம் காணப்பட்டது. அத்துடன் கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கம் இன்றி காணப்பட்டது. இதனால் இவர் கொலை செய்யப்பட்ட பின்னர் தூக்கில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய அரசே! இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடில்லியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் செஞ்சோலைச் சிறுவர்களைப் பொறுப்பேற்கும் அரசு! சனி, 19 பெப்ரவரி 2011 23:31 வட மாகாணத்தை சேர்ந்த 5000 அநாதைச் சிறுவர்களை பொறுப்பேற்று வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த கால யுத்தத்தின்போது பெற்றோரை இழந்தவர்களும் இச்சிறுவர்களில் அடங்குவர். இத்தகவலை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரஸ்ரீ வழங்கினார். வட மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் அரசின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் சிறுவர் இல்லங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க மாவட்ட மட்டத்தில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இவர் தெரிவித்து உள்ளார். புலிகள் இயக்கத்தினரால் கைவிடப்பட்ட சிறுவர்களும் பராமரிக்கப்படுவார்கள் என்றும் இவர் கூறி உள்ளார். குறிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=143808
-
- 3 replies
- 1.5k views
-
-
மாவீரர் நினைவு நாளைக்கு குழப்பும் சிங்கள கை கூலிகளின் முகமூடி கிழிப்பு. Tuesday, October 4, 2011, 10:23 கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி எதிர்வரும் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் எக்சல் மண்டபத்தில் (EXCEL) நடைபெறவுள்ளது.-தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆனையிறவும் அதனூடே முல்லைத்தீவும் -எ.இராஜவர்மன்- தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போ…
-
- 2 replies
- 1.5k views
-
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண…
-
- 1 reply
- 1.5k views
-
-
பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் [15 - January - 2007] [Font Size - A - A - A] (தினக்குரல்) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை. அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை.…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஓமானில் புலம்பெயர்ந்துள்ள தம்பதியின் நிதியுதவியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தொல்புரம் மூட்டடியில் புற்றுநோயால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபா நிதியில் இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியராச்சி மற்றும் நன்கொடையாளரான ஓமானைச் சேர்ந்த மோகன் சங்கர் தம்பதி இணைந்து வீட்டைப் பயனாளியிடம் கையளித்தனர். நன்கொடையாளர்களால் வீட்டுக்குத் தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 1.5k views
-