Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பா.ஜ. கட்சியின் மூத்த தலைவர் வெங்கையநாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’2 லட்சம் இலங்கை தமிழர்கள், குறைந்தபட்சம் கழிவறை வசதிகூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள். ஆனால் இங்கு உண்ணாவிரதம் என்ற சில மணிநேர நாடகத்தை நடத்தி, அங்கு போர் நிறுத்தம் வந்துவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதுபற்றி பேசவே இல்லை. எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டிய உண்ணாவிரதம், பந்த் போன்ற போராட்டங்களை யாருக்கு எதிராக இவர்கள் நடத்தினார்கள்? இலங்கைத் தமிழர்களுக்கு அங்கு சமஉரிமை, அந்தஸ்து அவர்கள் நாட்டில் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தரப்பட வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளையோ தீவிரவாதத்தையோ நாங்கள் ஆ…

    • 3 replies
    • 1.5k views
  2. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamilmirror.lk/150163#sthash.9Qy1IJL1.dpu

    • 0 replies
    • 1.5k views
  3. கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் கடந்த மாதத்தில் இலங்கை தொடர்பாக பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் நடந்து வரும் நகர்வுகள் தொடர்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை அடியொற்றி தமிழ் இணையதளங்களிலும் அந்தச் செய்தி தொடர்பான அனுமானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.கிருஷ்ணாவின் இலங்கைப் பயணம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திலுள்ள தென் ஆசியப் பிராந்தியம், மனித உரிமை, போர்க்குற்றத் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் பின்னணியை கொழும்பு டெலிகிராப் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. இலங்கை சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெறாமல், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்காமல்,இந்தியாவிலுள்ள ஷிர்டி சாய்பாபா கோவிலுக…

    • 8 replies
    • 1.5k views
  4. வடமுனையில் புலிகளிற்கும்,படையினரிற்கும

  5. மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல் April 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி வ…

  6. வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சிங்கள இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  7. இராணுவத்தளபதியை எங்கும் குறிவைத்து தாக்க முடியும் என்பதனை நிரூபித்துக்காட்டிய புலிகள்: "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007, 05:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தளபதியே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர் என்று "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு இன்று வெள்ளிக்கிழமை எழுதிய தனது பாதுகாப்பு ஆ…

  8. போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர் வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத அளவிற்கு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச அரசால் மறைக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் ஏனையோருக்கு இதுகுறித்த தகவல்கள் தெரியவரவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டார். வன்முறைகளிலும், கொலைகளிலும், பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களே இவ்வாறான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ள…

    • 5 replies
    • 1.5k views
  9. மிகச் சிறப்பாக செயற்பட்ட இம்ரான் - பாண்டியன் படையணி போராளிகள் தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு [திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2008, 11:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] களமுனைகளில் மிகச்சிறப்பாக செயற்பட்ட லெப். கேணல் இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தாயக களமுனைகளில் தாக்குதல் நடத்த வந்த எதிரிக்கு எதிராக தாக்குதலை நடத்தி அழிவுகளை கொடுத்து முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சமர் ஆய்வு மையத்தின் ஊடாக சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை சிறப்பாக …

    • 0 replies
    • 1.5k views
  10. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் குருநாகலில் போட்டியிடுகின்றார். இரட்டைக் கொடி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.http://www.pathivu.com/news/41556/57//d,article_full.aspx

  11. தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார். இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்கள அரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள். இ…

  12. புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!? விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான “மலேசியா ராஜன்” சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், இவரை நேற்று காலை கொழும்பில் கைது செய்ததாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் முக்கிய – மூத்த – உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமானநிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து …

  13. கிழக்குப் பத்திரிகையாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம். சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறுவது தற்பொழுது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மீது சிறீலங்காப் படைத்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது கொலைத் தாக்குதல்களும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. 31.05.2004ம் திகதி மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான திரு ஐயாத்துரை…

    • 0 replies
    • 1.5k views
  14. ராமேஸ்வரத்தில் நின்று கொண்டு குரல் கொடுத்தால் பக்கத்திலிருக்கிற இலங்கைக்கு கேட்கும். தனி மனிதன் குரல் கொடுத்தால் இது சாத்தியமில்லை. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு நின்று குரல் கொடுத்தால்? இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது தமிழ் திரையுலகம். கருப்பு பேட்ஜ் அணிந்து கண்ணீர் வடித்திருக்கிறது. காது மடல்களே கிழிந்து போகிற அளவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. எதற்கும் அசைந்து கொடுக்காத இலங்கை அரசின் மீது, தனது கோபத்தை காட்ட, இதோ... ராமேஸ்வரத்திற்கே செல்ல தீர்மானித்திருக்கிறது திரையுலகம். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். உணவு, உடை மற்றும் மருத்துவ…

  15. போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி 'கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

    • 13 replies
    • 1.5k views
  16. சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பீற்றர் சால்க் "தன்னை இல்லாதொழி எனும் தெய்வீகத்துறவறம் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் கற்பித்தல்" என்ற தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  17. : இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பே…

  18. EXCLUSIVE இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச்சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மாலை 5.மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க…

  19. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - ´இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. ´இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. ´தி இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு - ´சிஃபோர்´ எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்ப…

  20. சுமந்திரன்: தமிழருக்கு எதிராக நடப்பது இன அழிப்பே! - 2013 தமிழர் மீதான இன அழிப்புக்கு எதிராக இலங்கைப் பாராளுமன்றத்தில் சுமந்திரனின் சீற்றம் . . . பேச வேண்டிய இடத்தில் பேசுவோம். மோத வேண்டிய இடத்தில் மோதுவோம். Ref சுமந்திரன்: சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றே நீதிக்கான பாதை "சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றே நீதிக்கான பாதை" - சிங்களப் பேரினவாதிகளால் நிறைந்த இலங்கைப் பாராளுமன்றில்முழங்கிய சுமந்திரன்...... Ref சுமந்திரன்: மாவீரர் நாள் நினைவு திரு. சுமந்திரன் மாவீரர் நாள் நினைவு கூரப்பட அனுமதி கோரி பாரளுமன்றில் வாதாடிய போது . . . Ref: Sumanthiran Speaks in Sri Lanka Parliament (Rajapakse Regime rules) Video சிறுபான்மை சமூகங்களிற்காக சீறிய சும்ந்திரன் சிறுபான்…

  21. தாண்யடி கிராமத்தின் பெயரை சிங்களத்துக்கு மாற்றியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 17:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை தாண்டியடி கிராமத்தின் பெயரை சிறிலங்கா அரசாங்கம் சிங்களப் பெயராக மாற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இரானுவத்தினரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்களை சிறிலங்கா அரசாங்கமானது சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்து வருகிறது. கடந்த 28.07.07 அன்று இலுப்படிச்சேனை வீதிக்கு ராஜபத்திரன மாவத்தை என்று பெயர் சூட்டப்பட்டது. தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச மக்களை நேற்று திங்கட்கிழமை ஒன்று கூட்டிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாண்டியடிப் …

  22. பம்பலபிட்டிய கடலில் தமிழர் ஒருவரை அடித்து கொன்றதற்காக வெலிகடை சிறையில் அடைக்கப்பட்ட போலிஸ் கான்ஸ்ரபிள் சிறைச்சாலையில் மாரடைப்பால் காலமானதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=72368

  23. யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை: யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    • 4 replies
    • 1.5k views
  24. மலசல கூடம் கட்டப்போகிறாராம் ஆளுனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பொதுசன நூலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனி;ன் நாடுகளது நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கணனி மையத்தை உடனடியாக இடித்தகற்றிவிட்டு அங்கு நவீன மலசலகூடமொன்றை அமைக்க வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். நிர்மாண வேலைக்கான அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக தொடர்புடைய தரப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மூடப்பட்ட கணனி மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது என்பது பற்றியோ மீளத்திறக்கப்படுவது பற்றியோ தகவல்கள் தமக்கு தரப்பட்டிருக்கவில்லையென நூலக நிர்வாகம் கூறுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியினது அடாவடிகள் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவையே. நினைத்த மாத்திரத்தில் உட…

  25. போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம் இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்த இளம் பெண் ஒருவருக்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இந்தத் திருமண வைபவம் வவுனியாவில் நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தினால் இடப்பெயர்வு மட்டுமல்லாமல், உயிர் உடைமைகளுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாயினர். பல குடும்பங்கள் பிரிந்து போயின. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆதரவற்றவர்களாயினர். இந்தச் சிறுவர் சிறுமியர் அரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.