Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மருத்துவமனை சூழ கடும் எறிகணை தாக்குதல்கள். நோயாளிகள் அல்லோலகல்லோலம் கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடும் எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் - அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகள் பெரும் பீதிக்கு உள்ளாகியதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களையடுத்து மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்புக்காக மருத்துவ மனையின் தளப்பகுதியில் வந்திருந்தனர். பொழுது விடிந்ததும் இஙகு தங்கியிருந்த சிகிச்சை பெற்ற பல நோயாளர்கள் தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மரு…

  2. சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பேன் ஜனாதிபதி உறுதி அளித்தார் - விக்கிலீக்ஸ் ஜே.வி.பி.யை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதியதாக அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன், அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டாட் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ‘கிராமத்திலிருந்து வந்தவன் நான்’ ‘நம்புங்கள்’ ‘சம…

  3. ''பான் கீ மூனும் ஏமாற்றிவிட்டார்'' அநாதைகளாகி விட்டோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) எமது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆறுதல் வார்த்தையாவது கூறி எம்மை சமாதானப்படுத்துவார் என எதிர்பார்த் திருந்த போதும் அவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லை. பான் கீ மூனும் எம்மை ஏமாற்றிவிட்டார். இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைவதோடு எமது பிரச்சி னைகளுக்கு ஐ.நா. தீர்வளிக்கும் என வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போ யுள்ளது என பாதிக்கப்பட்ட தமிழ் மக் கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள் ளனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் …

  4. தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.. வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேர…

  5. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நேற்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தானின் கப்பல்துறை அமைச்சர் சார்டர் நபில் அகமட் கபோல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா உள்ளது. தாக்குதலில் கலந்து கொண்ட குழுவில் இருந்த 3 பேர் இந்தியாவில் இருந்து எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பாய் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இதனை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா வெளிப்படையாக …

    • 6 replies
    • 1.3k views
  6. நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களின் இந்த உரிமைப்போராட்டத்துக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் கொக்கிளாய் பங்குத் தந்தை,தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கல நாதன்,தமிழ்தேசிய மக்கள் …

  7. இலங்கைக்கு பாதகமாக அமையுமா? ட்ரம்ப் அரசின் அறிக்கை: கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்த கலந்துரையாடுவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதன் பிரகாரம் …

  8. இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு…

  9. எந்தவொரு, வன்முறையையும்... மன்னிக்கமாட்டோம் – குண்டர்களால் தாக்கப்பட்ட பாதிரியார்கள் அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த கைகலப்பில் அவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தாங்கள் எப்போதும் சமாதானம், இன நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகவும், எந்தவொரு வன்முறையையும் மன்னிக்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து இலங்கையர்களிடையே நிலையான அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் இரண்டு பாதிரியார்களும் மீண்டும் வலியுறு…

    • 6 replies
    • 832 views
  10. வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை ! நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் ! யாழ்...ப்பாணத்தில் முக்கிய கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிக்கும் நான் ஒரு முன்னாள் போராளி. இன்றைக்கு இராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து எழுத வேண்டும் , உங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எனது பெயரோ இல்லை ஈமெயில் முகவரியோ தேட முனையும் யாவருக்கும் ஒரு செய்தி, நீங்கள் என் கணணி முகவரி பற்றி தேட முயற்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ஏன் என்றால் இது வெளிநாட்ட…

  11. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் வரமாட்டார்கள் இதுவே இறுதி சந்தர்ப்பம்; அமைச்சர் டிலான் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அர­சி­ய­ல­மைப்பு பணி­களை இடை­நி­றுத்த அர­சாங்­கத்­திற்கு காணப்­படும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை தகர்ப்ப­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்த பின்னர் பெரும்­பா­மையை இல்லாமல் செய்யுங்கள். அதன்­பின்னர் ஜோன் சென­வி­ரத்ன மாத்­தி­ர­மல்ல நானும் வருவேன். ஏனெனில் இதுதான் இறுதி சந்­தர்ப்பம். இனிமேல் தமிழ் மக்­களில் இருந்து சம்­பந்தன் போன்ற தலைவர் ஒருவர் வர­மாட்டார் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். அதி­கார பகிர்வு விட­யத்தில் கூட்டு எதிர்க்­கட்சி பிள­வு…

    • 6 replies
    • 636 views
  12. அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை! தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார். கீதா …

    • 6 replies
    • 806 views
  13. ”ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது”: டக்ளஸ் ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸத்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கர…

    • 6 replies
    • 505 views
  14. மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர். இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து …

    • 6 replies
    • 588 views
  15. பொதுமக்கள் மீதான வன்முறைகள் தமிழருக்கு விரோதமான சக்திகளை தீவிரவாதிகளாக்கிவிடும்

    • 6 replies
    • 1.9k views
  16. வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒ…

  17. பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் August 18, 2025 10:33 am வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழர…

  18. [size=2] Oct 21, 2012[/size] வரலாற்றுத் தவறிழைத்தது யார்? பிரபாகரனா? சொல்யஹய்மா? - தாயகத்தில் இருந்து வீரமணி. [size=4] [size=4] அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல அமெரிக்காவின் அன்பு முகத்தை நோர்வேயின் சிறீலங்காவிற்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் த…

  19. சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது. தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலா…

  20. கிளிநொச்சிக்கு... "டபிள் புரொமோஷன்" – மனந்திறந்தார் ரூபவதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஒரு வரப்பிரசாதம் என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இதனை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான டபிள் புரொமோஷன் எனவும் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் இன்று(வியாழக்கழமை) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பின் நிதிப் பங்களிப்பில் ‘இயக்கி’ என்…

    • 6 replies
    • 577 views
  21. PreviousNext பிக்கு ஒருவருக்கு எதிராக விகாரை முன் திரண்ட தோட்ட மக்கள்! வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்கு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு வட்டவளை…

    • 6 replies
    • 446 views
  22. கொழும்பில் ஒபாமாவின் படத்துக்கு செருப்படி! [Thursday, 2014-03-27 08:53:38] ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இலங்கைக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன் ஒபாமாவின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து வந்த அவர்கள் அதற்கு செருப்பால் அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். http://seithy.com/breifNews.php?newsID=106553&category=TamilNews&language=tamil

  23. சிங்கள காடையர்களால் அப்பாவி தமிழ் தொழிலாளி படு கொலை. தொடர்ந்து இடம் பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு அப்பாவி தமிழ் மகன் படு கொலை செய்யப்பட்டு உள்ளார். மத்துகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான கோழி, கால்நடை பண்ணை ஒன்றை குறி வைத்து சிங்கள குண்டர் படை ஒன்று கை வரிசை காட்டி உள்ளது. கடும் போதையில் இந்த இனத்துவேசிகள் இரவு நேரத்தில் பண்ணையை தாக்கி, சொத்துக்களை சூறையாடும் நோக்கில் உள்ளே புகுந்துள்ளார்கள். அங்கே காவல் கடமையில் ஒரு தமிழரும், ஒரு சிங்கள இனத்தவரும் இருந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் கடமையை செய்து பண்ணையை பாதுகாக்க முற்பட்ட போது மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உள்ளார்கள். இந்த பாதுகாவலரில் ஒருவர் சிங்களவர் என அறிந்து…

  24. கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இலகுவாக கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பணத்தை செலுத்துவதன் மூலம் எவரும் கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான இணைப்புகளின் ஊடாக தீவிரவாதிகள் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெறுவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சரத் லூகொட தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் இலக்கு வைத்த…

  25. பொதுஜன முன்னணி பதவியை இழக்கிறார் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நீக்க கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொருத்தமான பெயர்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.