ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த நாட்டின…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் அன்புமிகு மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம். கடந்த ஒரு வாரமாக தங்களின் அரசியல் பணி மிகுந்த சிரமமுடையதாக இருந்திருக்கும். போதாக்குறைக்கு சம்பந்தர் ஐயாவும் உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிவிட்டு, தமிழரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினன் நான், மாவை சேனாதிராசாதான் அக்கட்சியின் தலைவர் என்று ஒதுங்கிக் கொண்டார். ஒரு சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் ஐயா யாழ்ப்பாணம் வந்திருந்தால் அது உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும். என்ன செய்வது! காலம் பிழைக்கும் போது முதலில் அருகில் இருப்பவர்கள்தான் விலத்திச் செல்வர். எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இப்படியயாரு சோதனையை அக்கட…
-
- 5 replies
- 758 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:03 PM யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறையில் இருந்து நேற்று வியாழக்கிழமை, முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்க்கவென பெண்ணும், இரண்டு ஆண்களும் கீரிமலை பகுதிக்கு வந்துள்ளனர். கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த…
-
- 5 replies
- 776 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 JAN, 2024 | 10:47 AM பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175034
-
- 5 replies
- 368 views
- 1 follower
-
-
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’ January 6, 2025 10:37 am முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார…
-
-
- 5 replies
- 357 views
-
-
இந்திய இலங்கை விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி சென்னை தாம்பரம் விமான தளத்தில் நடக்க இருப்பதால், இலங்கையை சேர்ந்த விமானப் படையினர் சென்னை வந்தனர். தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் உடனடியாக தன்னுடைய கண்டன அறிக்கையை வெளியிட்டார். பின்பு வைகோ, ராமதாஸ், கருணாநிதி போன்ற தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர். தடையை மீறி ஊர்வலம் சென்றதாக மதிமுகவினர் 100 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான தளத்தை முற்றுகை இட முயன்ற …
-
- 5 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார் எனவும் அவர் தெரிவித்தார். நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சரத் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், போர் முடிவ…
-
- 5 replies
- 900 views
-
-
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலைய பூசகர் இன்று மாலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். http://www.tamilskynews.com/
-
- 5 replies
- 1.9k views
-
-
புலிகளின் தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது என்கிறது அரசாங்க புலனாய்வுப் பிரிவு 20 அக்டோபர் 2012 சர்வதேச புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என அரசாங்க புலனாய்வுப் பிரிவை கோடிட்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார் என கண்டுபிடித்துள்ள அரச புலனாய்வுத் துறை அவர்குறித்து பல கதைகளை தெரிவித்துள்ளது இங்கிலாந்தில் 12 வருடங்கள் வசித்து வந்த இவர்…
-
- 5 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி பிடித்துவிட்ட களிப்பில் அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போது இங்கு தென்னிலங்கையில் மக்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி களியாட்டம் ஆடுகின்றனர். நாட்டு மக்களோ பசி பட்டினியாலும் பொருளாதார சீரழிவினாலும் அல்லல் படுகின்றமையை மறந்துவிட்டது. தமிழ்மக்கள் ஏன் கிளர்ந்து எழுந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரியாத நிலைலே உள்ளது. ஏழைகள் ஒவ்வொரு வித்திலும் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மோசமான பட்டினியில் தமது நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கையில் இவர்கள் சிங்கக் கொடியை ஏந்திக் குதூகலிக்கின்றனர். மக்கள் இவ்வளவு மோசமான நிலயிலிருக்கும் போது அதிகாரத் தரப்பினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ்கின்றனர். இன்று இந்த நாட்டில் தமிழ் மக…
-
- 5 replies
- 1.6k views
-
-
விசேட அதிரப்படையின் குற்றச் செயலை முறைப்பாடு செய்த தாய் படையினால் கொலை செய்யப்பட்டார். விசேட அதிரப்படையின்தான் தனது மகள் மீது பாலியல் மேற்கொண்டதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்த மறுநாள் விசேட அதிரடிப்படையினரால் தாய் சித்திரவதை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நேற்று இரவு வெல்லாவெளி பகுதியில் அமைந்தள்ள வீட்டிற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சிறுமியின் தகப்பனை கடுமையாக தாக்கி கட்டி வைத்து தாயை கடுமையான சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். சடலம் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 1ம் திகதி வெல்லாவெளி பகுதியைச் சுற்றிவளைத…
-
- 5 replies
- 1.2k views
-
-
கவலைப்படுவதா அல்லது சந்தோஷபடுவதா? எனக்கு கண்டியை சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆளைத்தெரியும்.. பயங்கர புலி எதிர்ப்பாளர். தமிழர்கள் எண்டால் இளக்கரமாகதான் பாப்பார். நாங்கள் தேவை எண்டபடிய வந்து ஒட்டி கொண்டிருக்கிறவர். அவரின் தம்பியும் மைத்துனரும் ஒண்டாக பெயிண்ட் கடைவைத்திருக்கிறார்களாம். முந்தநாள் இரவு, இருவரையும் தூள்காறராக சித்தரித்து போட்டு தள்ளி விட்டார்கள். கொலையாளிகள் சிங்களவர்களாம். யார் எண்டு தெரியாமல் ஆரம்ப குழப்பத்தில் பொலிஸில் சொன்னபோது.... அவர்கள் சொன்னார்களாம், நாட்டில் சுத்திகரிப்பு நடக்கிறது எண்டும், விஷியத்தை பெரிசு பண்ணினால் நாட்டு துரோகம் செய்வத்தாக எடுத்துகொள்ளப்படும் எண்டு எச்சரிப்பு விடப்பட்டிருக்கிறது. லேசா வருத்தமா இருந்தாலும் சும்மா போன் ப…
-
- 5 replies
- 1k views
-
-
வன்முறைகளற்ற சாத்வீக போராட்டமே தென்னாபிரிக்காவின் விடுதலைக்கு வித்திட்டதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜனநாயக இளைஞர் இணையம் நடத்திய நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவுரை நிகழ்வில் உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; நாட்டின் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஒரு மாமனிதர். அவரின் செயற்பாடுகள் தொடர்பில் புதிதாக சொல்லத் தேவையில்லை. ஒரு பெரும்பான்மை சமூகம் அங்கிருந்த சிறுபான்மை வெள்ளையினத்தவரிடம் அடிமையாக வாழ்ந்தனர். உலக வரலாற்றில் இது மிகவும் …
-
- 5 replies
- 552 views
-
-
தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்திலே சிந்திய இரத்தத்துக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் குளிருக்குள் தங்கள் குருதியை உறைய வைத்து ஆற்றிய பணிக்குமான ?முதற் கட்ட அறுவடை? மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியுள்ளது. போராளிகள் மக்கள் என்னும் சமுத்திரத்துக்குள் நீந்தும் மீன்கள் என்பது பொருத்தமான நேரத்தில் புலனாகியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது. புலிகளினுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற ?இக்கட்டு சிந்தனை? சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிக…
-
- 5 replies
- 2.7k views
-
-
Published By: VISHNU 18 JUL, 2024 | 02:00 AM கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (17) இடம்பெற்றிருந்தது. புதன்கிழமை (17.07.2024) மாலை 3 மணியளவில் சிறிகோத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நிர்வாக குழுவின் அழைப்பினை ஏற்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைப்பீடம் கருணா அம்மான் தலைமையில், உபதலைவர் ஜெயா சரவணா மற்றும் செயலாளர் செந்தூரன் ஆகிய குழுவினர், ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சராக உள்ள அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையில் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர…
-
-
- 5 replies
- 374 views
- 2 followers
-
-
இலங்கை ஜனாதிபதி பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் டேவிட் கமரூனை இன்று சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றில் விடுதலை புலிகளை தொடர்ந்து தடை செய்யுமாறும் அவர்களுக்கு நிதி சேகரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறித்தியுள்ளார். இவருடன் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டு தகவல்களை வழங்கியதாக தெரியவருகிறது. முன் எப்பொழுதும் இல்லாதவாறு இலங்கை உயர்ஸ்தனிகராலயம் தமிழ் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது ஆச்சரியமான விடையமொன்றாகும். கடந்த ஆண்டில் B.B.C க்கு அளித்த பேட்டியில், தாமே அருகிலிருந்து பார்த்ததை போல வங்கி அட்டை மோசடிகளில் இலங்கை தமிழரே ஈடுபடுவதாக பரப்புரை ஒன்றை மேற்கொண்டது முதல் நேற்று நடைபெற்ற புலிகள் எதிர்பு ஆர்…
-
- 5 replies
- 2k views
-
-
அரிய வாய்ப்பு : ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.! இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஜனாதிபதி ஊடகப் பரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமையவே ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் பார்வைக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்து வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். குறித்த மாளிகை ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆளுனர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக காணப்பட்டது. 1948 இலங்கை சுதந்திரம…
-
- 5 replies
- 691 views
-
-
இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் "மணிமேகலை உணவுக்கூடம்" இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எம் தமிழ் மக்களிடையே கொடுக்கும்…
-
- 5 replies
- 737 views
-
-
ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு நீதிகோரி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது by : Jeyachandran Vithushan கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக கொழும்பில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதற்காக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த முன்னிலை சோசலிச கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் குறித்த போராட்டத்தினை நடத்துவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத…
-
- 5 replies
- 638 views
-
-
உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர் நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களாக நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றா…
-
- 5 replies
- 2.1k views
- 1 follower
-
-
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூச்சியத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சிறிகொத்தவில் நேற்று(07) தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரணில். அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என்றார். வரலாற்று அரசியல் பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/பூஜ்ஜியத்திலிருந்தே-மீண/
-
- 5 replies
- 942 views
-
-
யாழ். அபிவிருத்தி; அங்கையனின் அறிவிப்பால் சீற்றமடைந்த டக்ளஸ் கோட்டாவிடம் முறையீடு வடக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தனக்கு தெரியப்படுத்தப்படவேண்டுமெனவும் தனது அனுமதியுடனேயே அவை செயற்படுத்தப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ். மாவட்ட செயலருக்கு உத்தரவிட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தனது கடுமையான எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் எனக் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அமைச்சர் டக்ளஸின் முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து மாவட்டக் க…
-
- 5 replies
- 641 views
-
-
அனைத்துலகத்தின் நிதி உதவிகளை தாமதப்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அவர்கள் அரசியல் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகள் இல்லாது சிறிலங்காவால் வாழமுடியும் என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகள் இல்லாது சிறிலங்காவால் வாழமுடியும், சிறிலங்காவின் வெளிநாட்டு கையிருப்பு மிகவும் குறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா அரசு அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை கடனாக கோரியிருந்தது. சிறிலங்காவின் வெளிநாட்டு கையிருப்பு ஆறு கிழமைக்கு தேவையான இறக்குமதிகளை…
-
- 5 replies
- 843 views
-
-
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மஹிந்தவை நம்பலாம்: சித்தார்த்தன் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத்தருவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்தியகுழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களிற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தருவார் என நம்புகின்றோம். இவற்றிற்கான தீர்வினை மஹிந்த அரசு எழுத்திலே தரவேண்…
-
- 5 replies
- 1.1k views
-