Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது காணாமல் போயுள்ள வவுனியா அல்ஹாமியா பாடசாலையைச் சேர்ந்த கார்த்திகேசு நிரூபன் என்ற ஆசிரியரைக் கண்டு பிடித்துத் தருமாறு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடத்தியுள்ளனர். மகனை மீட்டுத் தருமாறு கதறும் தாய் வவுனியா தெற்குக் கல்வி வலயப் பணிமனைக்கு எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ்த்தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். ஆசிரியர் நிரூபனைக் கடத்தியவர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிர…

  2. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தின் போது பொதுமக்கள் உயிரிழந்தமைக்கான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தவில்லை எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடுமையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதனை மறுப்பதற்கு இல்லை என அவர்…

  3. 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? தமிழ் பெண்பிள்ளைகள் என்றால் உனக்கு என்ன கேவலமானவங்களா? முள்ளி வாய்காலில் எங்களை அழித்திட்டா எங்கடை உணர்வை அழிக்கலாம் என்று நினைக்கிறியாடா?' கிளிநொச்சி நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் பயணித்த இளம் பெண்னை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்க முற்பட்ட படைச்சிப்பாய் நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது. சிவில் உடையில் சென்ற குறி;த்த இராணுவச்சிப்பாய் தனது கைகளால் குறித்த யுவதியினை கிள்ளியுள்ளார். ஆதனை பொறுக்காத குறித்த யுவதி ஆவேசத்துடன் 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? தமிழ் பெண்பிள்ளைகள் என்றால் உனக்கு என்ன கேவலமானவங்களா? முள்ளி வாய்காலில் எங்களை அழித்திட்டா எங்கடை உணர்வை அழிக்கலாம் என்று நினைக்கிறியாடா?' என்றவாற…

  4. மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது 125ஆவது ஆண்டு பிறந்த தின நினைவையொட்டி சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…

  5. சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் By VISHNU 13 SEP, 2022 | 09:26 PM ( எம்.நியூட்டன்) தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதேஅவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில்…

  6. பயிற்சி கட்டணங்களை கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் - இந்திய அமைச்சர் By RAJEEBAN 21 OCT, 2022 | 12:04 PM இந்தியாவில் பயிற்சிக்கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமாக காணப்பட்டது இந்தியாவில் பயிற்சிகளிற்கான கட்டணங்களை கூட செலுத்தமுடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என அஜய் பட் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளை தங்கியிருப்பதால் ஜனநாயக நாடொன்று எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இலங்கையின் அனுபவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார். …

  7. திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை – கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை. என்று சீமான் பரப்புரை செய்து வந்தார். அதே நேரத்தில் தி.மு.க தமிழனத்தை அழித்த துரோகி என்றும், அ.தி.மு.க தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடீரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார். இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதி மு க உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார்…

  8. வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார் புங்குடுதீவில் படுகொலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

    • 4 replies
    • 788 views
  9. Friday, March 25th, 2011 | Posted by thaynilam தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது- ரூபவாஹினி உத்தரவு சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து எரிச்சல் கொண்ட ரூபவாஹினி உயர் மட்டம்…

  10. செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…

    • 4 replies
    • 1.2k views
  11. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 07:41 PM ஆர்.ராம் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும், நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று கூடி கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகிய ஏழு கட்சிகளே இந்தக் ஹர்த்தாலுக்கான பகிரங்கமான அழைப்பினை விடுத்து…

  12. போர் இல்லாத நேரத்தில் கூட படைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா? இதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது Sayanolipavan 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை தாம் ஆதரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுட் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் மீனவர்களுக்கு நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை கூட்டமைப்பு வரவேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் உள்நாட்டுப் போர் இல்லாத …

  13. [sunday, 2011-10-02 11:51:15] கனடிய அமைச்சர்கள் சிறீலங்காவிற்கு இந்த வருட இறுதிக்குள் விஜயம் மேற்கொள்வார்கள் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும் சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அது இந்த வருடம் இடம்பெறாது எனத் தெரியவருகிறது. மனிதவுரிமைகள் விவகாரத்தில் மேம்பாடு காண சிறீலங்காவிற்கு கனடா காலக்கெடு வழங்கியுள்ளதாக கனடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். போரின் பின்னான கற்றலிற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை இன்னமும் இரண்டு மாதங்களில் சிறீலங்கா பகிரங்க அறிக்கையாகச் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கையின் கூறப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுமே இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களிற்கும் கன்சவேட்…

  14. அல்தாப் அஹமட் யாழ்ப்­பாணம், செம்­மணி மனிதப் புதை­கு­ழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்­சி­யூட்டும் அத்­தாட்­சி­களே வந்­த­வண்­ண­முள்­ளன. கடந்த சில நாட்­க­ளாக சிறு­வர்­களின் எலும்புக் கூடு­களும் அவர்கள் பயன்­ப­டுத்­திய பொருட்­களின் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டமை இந்த மனிதப் புதை­கு­ழி­களின் பின்னால் மறைந்­தி­ருக்கும் ஈவி­ரக்­க­மற்ற அரக்­கர்­களைக் கண்­ட­றிந்து தண்­டிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வ­தா­க­வுள்­ளன. கடந்த வாரம் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது, ஒரு குழந்­தையின் மனித எச்­சங்­களும், அத்­துடன் ஆங்­கில எழுத்­துக்­க­ளுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்­பாத்து போன்ற பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்…

      • Thanks
      • Like
      • Haha
    • 4 replies
    • 388 views
  15. வடபகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வராது என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதானது கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு எனவும் 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அவர்களுக்குப் பலமாக இருப்பதாகவும் அந்தப் பலம் இன்னமும் அழிக்கப்படாததால் முன்னேறிச் செல்லும் இராணுவத்தி…

  16. கிளிநொச்சி தருமபுரம் காட்டுப்பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி பொலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. தா்மபுரம் பொலீஸாருக்கு பொது மக்கள் மூலம் கிடைத்த இரகசிய தகவலையடுத்து தா்மபுரம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையில் பொலீஸாா் 23-07-2016 சனிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் புளியம்பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டிருந்து நபரையும்,28 போத்தல் சகிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான பெ…

  17. நல்லூர்த் திருவிழாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வாழ்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ் மிரர் பத்திரிகையால் வெளியிடப்படும் இந்த விசேட மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நம்நாட்டின் பிரசித்தி பெற்ற இந்து சமய வழிப்பாட்டுத் தலங்களில் நல்லூர் கந்தசுவாமி திருத்தலம் முதன்மையானதாகும்.…

  18. வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மா…

  19. ததேகூ வடக்கு மக்களுக்காக ஒரு கல்லையாவது பெற்றுக் கொடுத்தார்களா ? பஷில் ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான கல்லை கூட பெற்றுக் கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியுமா என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்று அமைச்சர் சூளுரைத்தார். மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட…

    • 4 replies
    • 391 views
  20. நல்லாட்சியில் தமிழர் வைத்த நம்பிக்கை வீழ்ச்சியடைகிறது-கூட்டமைப்பு எச்சரிக்கை புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்திருந்தனர் எனினும் அவர்கள் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை வீழ்ச்சிகண்டு வருவதாக அரசாங்க த்தை எச்சரித்தார் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரி வித்து ள்ளார். வடக்கு, கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடு விக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றபோதும் இராணுவம் உட்பட அரச படைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் செல்வம் அடைக்கல …

    • 4 replies
    • 416 views
  21. முள்ளிவாய்க்கால் விவகாரம் – அவசரமாக மஹிந்தவைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் 3 Views யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார் அதன் பின்னரே நிலைமையை சமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது; நினைவுத்தூபி அழிக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததுமஇலங்கைக்கான இந்திய தூதுவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தொடர்புகொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அவ்வேளை பிரதமர் குருநாகலில் உள்ள தனது தொகுதியில் மக்களை சந்திப்பதில…

  22. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தி திறன் விருத்தி அமைச்சருமான பசீர் சேகுதாவூதின் மகளின் திருமண விருந்துபசார வைபவம் இன்று மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஈஸ்ட் லகூன் ஹோட்டலிலுள்ள நினைவுப் பதிவேட்டில் ஜனாதிபதி கையொப்பமிட்டார். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்) http://tamil.dailymirror.lk/--main/100338-2014-02-16-10-54-01.html

  23. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்த அதிகாரமில்லையாம்! – கோமின் தயாசிறி கூறுகிறார். [Friday, 2014-03-28 08:26:42] ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு விசாரணை நடாத்தும் அதிகாரம் கிடையாது என சிரேஸ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், விசாரணை நடத்தும் அதிகாரம் கிடையாது. நவனீதம்பிள்ளைக்கு இல்லாத அதிகாரமொன்றை அமெரிக்கா இந்த தீர்மானத்தின் ஊடாக வழங்க முயற்சித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங் கிடையாது.எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் குறுகிய நோக்கத்திற்காக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்…

  24. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு உதவும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கென அமெரிக்க அரசாங்கம் இந்த வருடம் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்த்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் பாடசாலையை விட்டு விலக நேரிடும் சிறுவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறும் சிறுவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வலுவூட்டு…

    • 4 replies
    • 604 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.