Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 04:42 GMT ] [ கார்வண்ணன் ] இந்திய ஊடகங்களான ‘ஹிந்து‘ மற்றும் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ ஆகியவற்றை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான சாடியுள்ளார். ‘கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சகோதரர்‘ என்ற தலைப்பில் கடந்த 16ம் நாள் கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக ‘ஹிந்து‘ நாளேடு ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதுகுறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார். தனது செவ்வி ஒன்றை பெறுவதற்கு இந்திய ஊடகவியலாளர் அழுத்தங்களை கொடுத்ததாவும் தான் மறுத்து விட்டதால், அந்த ஆத்திரத்திலேயே தன்னைப் பற்றி அவதூறான ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளதாகவ…

  2. சிங்கள மக்களை திசை திருப்ப சிலாகிக்கப்படும் 'சிலாவத்துறை" நடவடிக்கை -புரட்சி (தாயகம்)- தென்தமிழீழத்தில் கடந்த ஆண்டு தமிழ் மக்களின் வாழ்விடங்களின் மீது தொடங்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றி அகதி முகாம்களிலே அவல வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலைக்குள் தள்ளியிருந்தன. மேலும் செய்திகளுக்கு..... http://www.tamilnaatham.com/articles/2007/...chi20070907.htm

  3. சென்னை (ஏஜென்சி, ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2007 (16:15) 'இலங்கை தமிழர்களுக்காக போராடி வரு‌‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளுக்கு ஆதரவு கொடு‌த்தா‌ல் கு‌ற்றமா?' எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர். '‌விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌ரி‌ப்பவ‌ர்க‌ள் ‌திருமாவளவ‌ன் உ‌ள்‌பட யாராக இரு‌ந்தாலு‌ம் கடும் நடவடி‌க்கை எடு‌க்க‌ த‌மிழக அரசு தய‌ங்க‌க் கூடாது' எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் இள‌ங்கோவ‌ன் காட்டமாக கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். இத‌ற்கு பதிலளித்து திருமாவளவ‌ன் கூறியதாவது: இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. அதை மறுபடியும் நீட்டிக்கத்தான் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இ…

  4. செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்… நடராஜா குருபரன்:- உன் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்பனே… உன் உயிரை தற்கொடையாக கொடுத்ததன் ஆழ அகலம் பற்றி ஒன்றும் அறியேன்… உன் மரணத்திற்கு பலரும் பல்வேறு கற்பிதங்களை மெருகேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்…. மாவீரர் வாரத்தில் நவம்பர் 27ஆம் நாளுக்கு அண்மித்த உன் மரணம், வீர மரணம் என்கிறார்கள்… தற்கொடை என்கிறார்கள்… வீர மறவன், தமிழர் மானம் காக்க புறப்பட்ட வீரத் தமிழன், மாவீரன் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டுகின்றார்கள்… இணையங்கள் சமூக வலைத்தளங்கள் யாவற்றிலும், நீ வியாபித்து இருக்கிறாய்… உன் வயதில் எனக்கோர் மகன் இருக்கிறான்.…

  5. செய்தி ஆய்வு - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளதும் திட்டமிட்ட கூட்டுப் படு கொலைகளே புலிகளின் முன்னாள் போராளிகளது மரணங்கள் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. கோபி, தெய்வீகன், அப்பன் ஆகியோரை இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தேடப்படும் பட்டியலில் இணைத்து சுவரொட்டிகளை ஒட்டியதில் இருந்து அவர்கள் பதவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும்வரை நிகழ்ந்தவை ஒரு திட்டமிட்ட நாடகம் என ஆரம்பத்தில் இருந்தே குளோபல் தமிழ்ச் செய்திகள் தெரிவித்து வந்தது. உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல ஊடகங்களும், சில தரப்புகளும் தத்தமது நலன்கள் இருப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை வியாக்கிய…

  6. அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது-கிளிநொச்சியை கைப்பற்றியமை குறித்து பிரிட்டன் அறிக்கை வீரகேசரி நாளேடு 1/7/2009 8:47:29 AM - கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரஷன் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும்நாம் உன்னிப்பாக அவதானித்து …

    • 2 replies
    • 1.3k views
  7. Started by Dash,

    கடந்த சில நாட்களாக பிரித்தானிய பத்திரிகைகள் நேரடியாக அரசை கண்டிக்கத் தொடங்கி உள்ளன முக்கியமாக வன்னியைல் இருந்து ஆக 4000 மக்களே வெளியேறியதாக times icrc மேற்கோள் காட்டி முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்து Hilary Clinton கூட நேற்று இலங்கை அரசை கண்டித்து இருந்தார், http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6152190.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6147694.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6140140.ece. http://www.guardian.co.uk/world/2009/apr/24/srilanka

    • 0 replies
    • 1.3k views
  8. 15.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....436a10798e657d9

  9. ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைதினையடுத்து, எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்;ப்பாணம், பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'தமிழ் நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா அதிகமான சேவைகளை செய்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அந்த மக்களுக்கான முன்னேற்றங்கள்…

  10. வெள்ளி 01-06-2007 18:56 மணி தமிழீழம் [முகிலன்] மணலாறில் புலிகள் எறிகணைத் தாக்குதல்: பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ படுகாயம் மணலாறு பகுதியில் எறிகணைகள் வீழந்து வெடித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற 23-2 பிரிகேட் தளபதி படுகாயமடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளின் மோட்டார் அணியினரால் மணலாறுப் பகுதியான அதவதுநுவலப் பகுதில் உள்ள இராணுவ நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் நேற்று படைச்சிப்பாய் ஒருவர் காயமடைந்து மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். நேற்று எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இராணுவ நிலைகளைப் பார்வையிடச் சென்ற பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மீதே இன்று விடுதலைப் புலிகள் தாக்கு…

  11. விளாத்திகுளம் தோல்விக்கு தளபதி மானவடுதான் காரணம்: கொழும்பு ஊடகம் மன்னார் - வவுனியா விளாத்திகுளம் சமரில் சிறிலங்கா இராணுவம் பாரிய இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தமைக்கு 57 ஆவது படையணியின் தளபதியாக இருந்த பிரிக்கேடியர் சுமித் மானவடுவின் திறமையின்மைதான் காரணம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி விபரம்: தற்போது 57 ஆவது தாக்குதல் படையணிக்கு 56 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான கலாட் படைத் தளபதியாகிய பிரிக்கேடியர் ஜெகத் டயசை நியமித்ததன் மூலம் சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னர் 51 ஆவது படையணியின் 6 ஆவது பிரிக்கேட்டுக்கு தலைமை தாங்கியவர் பிரிக்கேடியர் டயஸ். 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு நெருக்கட…

    • 1 reply
    • 1.3k views
  12. இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழில் 3ஆம் இணைப்பு - முதலமைச்சரை தனிப்பட்ட வகையில் சந்தித்தார் முன்னாள் இந்திய அமைச்சர் பாசிதம்பரம் - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- GTMN இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பயணம் குறித்து இலங்கைக்கான இந்தியாவின் யாழ் துணைத்தூதரகம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை... இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் எனவும், பயணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனை தனி…

  13. பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் இன்று காலை பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இத்தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என இன்னும் சரியாக தெரியவரவில்லை. லண்டன் போலீசாரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது இதுபற்றி கூறமறுத்துவிட்டனர். இத் தாக்குதலில் சிறு சேதங்கள் தூதரங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. http://athirvu.com/

  14. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கழகத்தின் சார்பில் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் பட்டினியால் செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை அனுப்பவும்இ வட கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் விவரம் வருமாறு: சென்னை நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: மெமோரி யல் ஹால்இ சென்னை; தலைமை: வழக்கறிஞர் கோ. சாமிதுரை எம்.ஏ.இ பி.எல்.இ (திராவிடர் கழகப் பொருளாளர்); முன்னிலை: கலி. பூங்குன்றன் (கழகப் பொதுச்செயலாளர்)இ கு.வெ.கி. ஆசான்இ அ. குணசீலன்இ வழக்கறிஞர் அருள்மொழிஇ மு.அ. கிரிதரன்இ கவிஞர் செ.வை.ரெ. சிகாமணிஇ இரா. வில்வநாதன்இ இர. இராம சாமிஇ ஆவடி ஆர். திருநாவுக்கரசு வட சென்னைஇ தென் சென்னைஇ தாம்பரம்…

  15. 2000 மாம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மைகொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்செய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2000மாம் ஆண்டு மே மாம் 22ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கபண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அப்டீன்போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்குஅளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படுகொல…

  16. வன்னியில் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக விசேட செய்தியாளர் கூறுகிறார். நேற்று மே 2 ஆம் திகதிமுதல் இந்த செய்தியை தட்டச்சுச் செய்யும் இந்த நேரம் வரை அந்த மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே படையினரின் நிலைகளை ஊடறுத்து உட்சென்றுள்ள புலிகளின் அணியினர் இந்த தாக்குதலை திடிரென நேற்று இரவு ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த மோதல்களின் அதிர்வுகள் தென்மராட்சியின் கரையோரம் வரை கேட்கக்கூடியதாக இருந்தது எனவும் கடலிலும் தரையிலும் இருந்து ஏவப்படும் எறிகணைகள் விடத்தல் தீவு, கெற்பலிப் பிரதேசங்களிலும் வடமராட்சியின் சில கரையோர…

    • 0 replies
    • 1.3k views
  17. சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி. கட்சி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினால் இலங்கை படைத்தரப்பினர் மீது சர்வதேச அரங்கில் பாதகமான எண்ணக்கரு உருவாகியுள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் இழப்பதற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நியாயமான வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப…

    • 0 replies
    • 1.3k views
  18. சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவின் மூத்த மகனும், ஊவா மாகாண சபையின் முதலமைச்சருமான ஷசிந்திர ராஜபக்‌ஷவைத் தவிர,ஏனைய அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களையும் மாற்றுவதற்கு மகிந்தர் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்துவரும் மகிந்த , அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கு மிகவும் விசுவாசமான முதலமைச்சர் சிலரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி தென் மாகாண முதலமைச்சராக சஜின் வாஸ் குணவர்தனவை நியமிக்க மகிந்த தற்போது இறுதித் தீர்மானம் எடுத்துள்ளார். அத்துடன் மேல் மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றத் தான் தயார் என துறைமுக சேவைகள் பிரதியமைச்சர் ரொஹித்த அபேகுணவர்தன நாமல் ராஜபக்‌ஷவிற்கு கடந்தவாரம் அறிவி…

  19. வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட சரிகமபா லிட்டடில் சாம்ப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய கில்மிசா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்ட…

  20. இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோ…

  21. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்? வீரகேசரி வாரவெளியீடு 3/29/2009 3:56:54 PM - இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இப் போது சர்வதேச ரீதியில் பேசப்படும் வலியுறுத் தப்படும் ஒரு விவகாரமாகி விட்டது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். இராணுவத்தீர்வு சாத்திய மில்லை என்று பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டன. இந்தக் கட்டத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அரசாங்கத் துக்கா? விடுதலைப் புலிகளுக்கா? சர்வதேச சமூகத்துக்கா? அல் லது வேறு அரசியல் கட்சிகளுக்கா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் தீர்வு காண்பதற்கு குறுக்கே நிற்பது யார் என்ற கேள்விக்கு தமிழ் மக்களிடத்த…

    • 1 reply
    • 1.3k views
  22. எல்.ரி.ரி.ஈ. தொடர்பான நிகழ்ச்சிகள், வைபவங்களுக்கு இலங்கை அரசு தடை தமிழீழ விடுதலைப் புலிகளள் தொடர்பான பிரசாரங்கள், வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கூறினார். இதை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டுமென ராஜதந்திர மார்க்கங்களூடாக அரசாங்கம் கோரும் எனவும் அவர் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்தவாரம் நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், இரகசியமான அறிக்கையொன்றின்படி, சிறையிலுள்ள எல்.ரி.ரி.ஈ. கைதிகள் மாவீரர் தினத்தை கொண்டாட முற்பட்டபோது சிறைச்சாலை அத்தியட்சகர் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டிருந்தால் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும். ஏனெனில் சிங்கள சிறைக்கைதிகள் அவர்களை தாக்க தி…

  23. கிளிநொச்சியில் தேசிய விளையாட்டுப்போட்டி நடத்தப்படும் – மகிந்த நம்பிக்கை! கிளிநொச்சி மாவட்டத்தில் விரைவில் சிறீலங்காவின் தேசிய விளையாட்டுப்போட்டி நடத்தப்படும் என, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டுப்போட்டியின் 34வது விழாவில் இன்று மாலை கலந்துகொண்டு உரையாற்றிய மகிந்த, கிளிநொச்சியினை தமது படைகள் விரைவில் கைப்பற்றுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.tamilseythi.com/srilanka/mahinda-2008-07-10.html நிருபர்: ஈழச்செல்வன்

  24. தீவிரவாதத் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அனைவரும் அனைத்துத் தியாகங்களையும் செய்யவேண்டும்.'' இவ்வாறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான ெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் படையினர் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து அவர் பி.பி.ஸியின் சிங்கள சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: இப்போது நாட்டிலுள்ள நிலைமை வழமையான ஒரு நிலைமை அல்ல. அரச படைகள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் தனிநபருக்கோ அல்லது ஒரு ுழுவினருக்கோ எதிரான நடவடிக்கை அல்ல. ஆனால், மறுபுறத்தில் இது…

  25. யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பினில்; அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கம் தரப்பு வெளியிட்ட அறிக்கையினை மருத்துவ அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பினில் அவ்வமைப்பு இன்று விடுத்துள்ள அறிக்கையினில் குடிநீரில் எண்ணெயானது வெற்றுக் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் நிலையில நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து பல்வேறு செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இது பொதுமக்களை பாரிய அளவில் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்ந நிலையில் பொதுமக்களின் சுகாதார விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கமானது 27.03.2015 அன்று இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.