ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
"வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துக ளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை" இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தார். "வடமாகாணசபையைக் கைப் பற்றுவது அரசா, கூட்டமைப்பா என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐந்து தேர்தல் தொகுதிகள் திகழ்கின்றன. 14 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் கூட்டமைப்புக்கும், நான்கில் அரசுக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தமிழ் கூட்டமைப்ப…
-
- 4 replies
- 549 views
-
-
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க- “விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார். அவர் இந்தக் கருத்தை தெரிவித்து 24 மணிநேரம் முடிவதற்கு முன்னரே- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலரான செல்வராசா பத்மநாதன் (கே.பி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தகவல். கே…
-
- 4 replies
- 2.1k views
-
-
காணொளி : இசைப்பிரியாவின் கொலை தொடர்பில் இந்திய ஆங்கிலத் தொலைகாட்சியில் இடம்பெற்ற சூடான விவாதம் காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9854:2013-11-03-22-19-16&catid=1:latest-news&Itemid=18
-
- 4 replies
- 930 views
-
-
நாம் எதிர்பார்க்கும் அளவு விடயங்கள் நடக்கவில்லை – சம்பந்தன் புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: புதிய அரசமைப்பு விடயத்தில் அரசு சில கருமங்களைச் செய்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. அரசு துரிதமாகச் செயற்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும். கடந்த அரசு…
-
- 4 replies
- 498 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடாத்த காத்திருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ. அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குமரன் பத்மநாதனிடம் விசாரைண நடத்தப்பட உள்ளது. இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதிலுக்காக காத்திருப்பதாக சீ.பி.ஐ. அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய புலனாய்…
-
- 4 replies
- 573 views
-
-
நல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் த.தே. கூட்டமைப்பின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார நேரடி ஒலிபரப்பு: நேரடி ஒலிபரப்பை கேட்க இங்கே அழுத்துங்கள்: Live Broadcast
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிருமாறு மகிந்தவுக்கு மோடி அறிவுரை கூற வேண்டும்! - என்கிறார் 'ஹிந்து' ராம். [Tuesday, 2014-05-27 09:25:55] இலங்கையில், தமிழ் மக்களுக்கு, உரிய அதிகாரப்பகிர்வை அளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையும் அறிவுரையும் வழங்க வேண்டும் என்று 'தி ஹிந்து' பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், பதவியேற்பு விழாவில் பங்குபெற்றது ஒரு சிறப்பான அம்சம் எனவும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு என்றும், அதை அடித்தளமாகக் கொண்டு முன்னேற்றங்களை காண வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். மோடியின் பதவ…
-
- 4 replies
- 828 views
-
-
அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ _ட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கொழும்பு, ஒக். 13 அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும்சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக வகை…
-
- 4 replies
- 636 views
-
-
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினா…
-
- 4 replies
- 766 views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேரடி சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக, "முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், எனக்கும், ஐக்கிய இலங்கை வட்டத்துக்குள், அ முதல் ஃ வரை அனைத்தையும் அலசும், முக்கிய கலந்துரையாடல்" என மனோ கணேசன் தனது டுவீடர் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதல்வர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் பல்வேறு பரஸ்பர சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரையாடினோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றாலும் பொது வேட்பாளர் தொ…
-
- 4 replies
- 583 views
-
-
http://www.youtube.com/watch?v=w5r2FlZUOBw
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவிற்கு தற்போதும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய மத்திய கூட்டரசின் பிரதான கட்சிகளில் ஒன்றான இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் டி.ராஜா கூறியதாவது: சிறிலங்கா அரசு நடத்தும் இராணுவத் தாக்குதல்களின் குணாம்சம் மாறியுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் மீதான தாக்குதலாக- போராக மாறியுள்ளது. தமிழ் மக்களினது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. ராஜபக்ச அரசாங்கமானது இராணுவ ரீதியான தீர்வுக்கு முயற்சிக்கின்றது. …
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 04:04 இலங்கையின் மன்னாரிலுள்ள தமது காற்றாலை மின்சக்தி திட்டத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக இந்திய செல்வந்தர் கெளதம் அதானியின் அதானி குழும அதானி கிறீன் எனர்ஜி தீர்மானித்துள்ளது. தமது பணிப்பாளர் சபையின் முடிவை இலங்கைக்கு அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளதாக அதானி குழுமத்துக்கான பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இலங்கையரசாங்கம் விரும்பினால் எதிர்கால கூட்டிணைவுக்கு தயாராகவுள்ளதாகக…
-
- 4 replies
- 306 views
- 1 follower
-
-
[size=4]94-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சந்திரிகாவின் உளவாளி ரணில் தான்[/size] [size=4]1994-ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்த லில் ஐக்கிய தேசியக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸநாயக்கவை தோற்கடிப்பதற்காக பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு தகவல் வழங்கியவர் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின.[/size] [size=4]அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத் தகவலை வெளியிட்டார்.[/size] [size=4]ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட காமினி திஸநாயக்வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இத்தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களுக்கு அவர் இந்த தக…
-
- 4 replies
- 806 views
-
-
ஈழத் தமிழ் இனம் தன்னுடைய நியாயமான அரசியல் கோரிக்கைகளை பெறுவதில் தடைகள் இருப்பதென் பதற்கப்பால் பாதையற்ற நிலையில் தவிக்கிறது. ஊரைக் காணாதவர்களும் வீடுகளைப் பார்க்காதவர்க ளும் எங்கள் மக்கள். வவுனியாவைத் தெரியாதவர்களும் யாழ்ப்பா ணத்தை தெரியாதவர்களும் வன்னியைத் தெரியாதவர்களும் என்று துண்டிக்கப்பட்ட போர் வலயங்களில் எங்கள் மக்கள் வாழ நிர்பந்தி க்கப்பட்டார்கள். பல்லாண்டுகளாக மூடப்பட்ட பாதைகளும் பல்லாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட வீதிகளும் எங்களுடைவை. அறுந்த வீதிகளும் தடைப்பட்ட வீதிகளும் எங்கடையவை. போராடும் ஈழத் தமிழினம் பாதைகளுக்காகவும் போராடியிருக்கிறது. எங்களுடைய பயணத்தின் பாதைகள் இன்னும் இறுக மூடப்பட்டிருக்கின்றன. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் போருக்குப் பிந்…
-
- 4 replies
- 878 views
-
-
[size=4]'நிமலரூபன், நில்ருக்ஷன் பாணியில் சதீஸ்குமாரின் நிலையும் ஏற்பட அரசு பகீரத பிரேயத்தனம் செய்து கொண்டிருக்கிறது' என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதி சுந்தரம் சதீஸின் தற்போதைய நிலைமையை விளக்கி கொழும்பிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னணியின் ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா, சுந்தரம் சதீஸின் மனைவி கவிதா, கைதியின்…
-
- 4 replies
- 737 views
-
-
போரியலின் புதிய பரிமாணம் செய்மதி தொலைக்காட்சி செய்மதித் தொலைக்காட்சி இன்று போரியலின் ஒரு புதிய பரிமாணமாகக் கொள்ளப்படுகிறது. பெரும் படையெடுப்புகளுக்கான திட்டமிடலின் இன்றியமையாத அங்கமாக இதை மேலைத்தேயப் போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1991 இல் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈராக்கின் மீது படையெடுத்த காலத்திலிருந்து இவ்விடயம் தொடர்பாக நிரம்ப ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. போரியலின் இப்புதிய பரிமாணத்தை சி.என்.என். விளைவு (C.N.N.Effect) என அழைப்பர். சி. என். என். என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளில் துரித வளர்ச்சி கண்ட ஒரு அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு. (Cable Television Network என்பதன் சுருக்கம்) இதை 24ஃ7 வகைத் தொலைக்காட்சி என்பர். அதாவது, ஒரு நாளில் 24 மணித்தியா…
-
- 4 replies
- 3.5k views
-
-
எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் எப்போதோ ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்காமல் முதலமைச்சர் கருனாநிதி நேரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவுள்ள இளைஞர் அணி மாநாட்டின் அழைப்பிதழை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோயம் பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்கள் தமது நாட்டில் அமைதியாக வாழ வேண்டும். மத்திய அமைச்சர்களாக உள்ளவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினையை தந்திகள் மூலமாக தீர்க்கமுடிய…
-
- 4 replies
- 2.9k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் "உதயனு'க் குத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: "நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்' என்று கூறினார். ஆனாலும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கதறினேன். ஆனால் அதனையும் மீறி அந்த நால்வரும் தர்ஷானந்தை அழைத்துச் சென்று வெளியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டனர். அவரை…
-
- 4 replies
- 1.1k views
-
-
கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டாதா என்பது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் பணியக அதிகாரிகள் ஐவரை சிஐடியினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். https://newuthayan.com/கைப்பற்றிய-போதை-பொருட்கள/
-
- 4 replies
- 673 views
-
-
காணி தகராறு காரணமாக பௌத்த பிக்கு ஒருவர் குத்திக்கொலைச்செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவ, எகடஉயன பகுதியிலுள்ள விஹாரையின் பிக்கு ஒருவரே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் பிரதேசவாசிகள் குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு தீ மூட்டி கொளுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தையடுத்து தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவரும் பொரல்லஸ்கமுவ பகுதியில் வைத்து இன்றுக்காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58255-2013-02-04-03-30-52.html
-
- 4 replies
- 500 views
-
-
ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்தது ‘ஐயோ’ சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததும் உலகப் புகழ்பெற்றதுமான ஒக்ஸ்போர்ட் அகராதி, தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காகத் தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. http://w…
-
- 4 replies
- 618 views
-
-
'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்': முதலமைச்சர் சி.வி. தலைமையில் கொழும்பில் இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாடு : நேரடி ஒளிபரப்பு http://www.virakesari.lk/
-
- 4 replies
- 391 views
-
-
கடந்த வருடத்தில் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள கடற்படை இலங்கை கடற்படை கடந்த வருடத்தில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. எவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் …
-
- 4 replies
- 529 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு... தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1249093
-
- 4 replies
- 702 views
-