ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
எவராலும் தடுத்து நிறுத்த முடியாது சபையில் ஈழவேந்தன் எம்.பி. சூளுரை சிங்களவர்களை இனிமேலும் நம்புவதற்கு தயாரில்லை. தமிழன் தன்னைத்தானே ஆளுவதை எவராலும் தடுக்கமுடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான ஈழவேந்தன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். பாராளுமன்றத்தில் தற்போதைய கல்வி நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்; `தமிழன் தன்னைத்தானே ஆளவேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்துள்ளான். தமிழன் தன்னைத் தானே ஆளுவான். இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழையும், தமிழ்க் கல்வியாளர்களையும் அரசாங்கம் திட்டமிட்டு சாகடித்து வருகிறது. போதாக்குறைக்கு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய முன்னணியின் சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண…
-
- 10 replies
- 1.3k views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலியும் தோல்வியடைந்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆனந்தசங்கரி 2896 விருப்பு வாக்குகளை மட்டும், பெற்று ஆறாவது இடத்தையே பிடித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1.ப.அரியரட்ணம் - 27,264 வாக்குகள் 2. குருகுலராஜா - 2…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி 13-01-2006 18:53 மணி தமிழீழம் [நிருபர் முகிலன்] அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம். அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறை…
-
- 0 replies
- 1.3k views
-
-
கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்காவையும் அவருக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளையும் விடுதலை செய்யுமாறு மகிந்த றாஜபக்சவிடம் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு பீடங்களின் தலைவர்களும் இணைந்து தமது கையெழுத்துடன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள போதெல்லாம் மகா சங்கம் அரசாங்கத்தை சரியான வழியில் வழி நடத்தியுள்ளது என்றும் அந்த வகையிலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்குகளைக் கொன்று தலதா மாளிகையைத் தாக்கிய பிள்ளையான் கருணா போன்றவர்களை மன்னித்து அமைச்சர் பதவிகளை வழங்க முடியுமென்றால் சரத் பொன்சேகாவையும் ஏன் மன்னிக்க முடியாது என மகாநாயக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளன…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு! By kugen ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு: இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய ஏகாதிப…
-
- 8 replies
- 1.3k views
-
-
லங்கா டிசென்ட் இணையத்தளத்திற்கு இன்று காலை முதல் தொழில்நுட்ப தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது முழுமையாக அரசியல் பழிவாங்கல் என லங்கா டிசேன்ட்டின் ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் கொழும்பு சாட்டட் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட அலுவலகம் ஒன்றில், நிபுணர்கள் குழு ஒன்று இயங்கிவருகிறது. இது இணையத்தளங்களை எவ்வாறு தடைசெய்யலாம் என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் லங்கா டிசென்ட் ஆசிரியர் குழுக்ம் குறிப்பிட்டுள்ளது. லங்கா டிசென்ட் முன்னாள் அமைச்சரும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியுமான மங்கல சமரவீரவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இணையத்தளமாகும். ஆரசாங்கத்தின் இந்த நடவடிக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தந்ததுடன் கைலாசபதி அரங்கத்திற்கு முன்னால் உள்ள நினைவுத்தூபியினையும் சுற்றிப்பார்த்து விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் குறித்த சீருடையிரிடம் வளாகத்திற்குள் ஏன் நுழைந்தீர்கள் என்று கேட்ட போது மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தாங்கள் வந்ததாக கூறிவிட்டு சென்ற…
-
- 8 replies
- 1.3k views
-
-
சிங்களத்தின் புகழ் பூத்த இரண்டு டிவிசன் படையாட்களை முன்னகர்த்திப் புலி வேட்டைக்குப் புறப்பட்ட சிங்களப் படைத் தலைமை, எமது வீரர்கள் களத்தில் காட்டிய வீரத்தின் முன் நின்றுபிடிக்க முடியாது எதிர்பாராத தோல்வியோடு அவமானத்துடன் தமது படைகளை பின்வலித்துக் கொண்டனர். ஒரே நேரத்தில் முகமாலையின் வலதும் - இடதுமாகக் கைகளை அகல விரித்தாற் போல நீண்டு கிடக்கும் புலிகளின் முன்னரங்கத்தின் பல இடங்களிலும் உடைப்பை ஏற்படுத்திப் படைகளை உள்நுழைப்பதே படைத்தலைமையின் நோக்காகும். சிங்கள மரபுப் போர்ப் படைக்கு வலுவூட்ட ஆட்லறி - மோட்டார் மற்றும் டாங்கிகளின் உயர் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை எத்தனிப்பைப் புலி வீரர்கள் தமது முன்னரங்குகளிலேயே முறியடித்து விட்டனர். இரவு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகாவம்சத்தின் ஆறாவது பாகம் : புலிகளுடனான யுத்த வெற்றி முக்கிய பங்கு! [ பிரசுரித்த திகதி : 2011-04-05 03:02:19 PM GMT ] 1978 ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியின் வரலாற்றை உள்ளடக்கி மகாவம்சத்தின் ஆறாவது பாகத்தை எழுதும் பணிகளை கலாசார அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. மகாவம்சத்தின் ஆறாவது பாகம் பெரும்பாலும் ராஜபக்ஷ பரம்பரையின் புகழ்பாடும் ஒன்றாக அமையும் என்பதுடன், விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியும் அதில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது. அதன் போது ஜனாதிபதி மஹிந்தவை நவீன துட்டகைமுனுவாகவும், அவரது சகோதரர்களை படைத்தளபதிகளாவும் சித்தரிக்கும் வகையில் வரலாறு திரிபுபடுத்தப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இலங்கையின் இது…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
http://epaper.dinamani.com/epaperimages/12...-01/3557828.JPG
-
- 0 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை, 17, ஜூலை 2010 (22:27 IST) இலங்கையில் நடந்த ஐஃபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் - ஏ.ஆர்.ரகுமான் பேட்டி! வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கிலாந்தில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இதற்காக லண்டன் சென்றிருக்கும் அவர் அங்கே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, இலங்கையில் நடந்த ஐஃபா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த்திரையுலகம் முடிவு எடுத்தது சரிதான் என்றும்....மிகவும் உணர்வுப்பூர்வமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த முடிவு சரியானதாகவே அமைந்திருக்கும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விஷயம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறா…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகிந்த ஆட்சி மீது குவியும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் -வேலவன்- சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு. விலைவாசி ஏற்றம், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு மத்தியில் சிக்கிப் போயிருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அது இன்று நெருக்கடிக்குள்ளேயே சிக்கியுள்ளது. இதுவரை அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் நெருக்கடிகளைச் சந்திக்கவில்லையாயினும் அல்லது அது பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தையும் மற்றும் சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும் வரவு-செலவுத் …
-
- 0 replies
- 1.3k views
-
-
நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம் வாய்க்கொழுப்பெடுத்து பேசித்திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்றக்கோரி நாளை 08-10 -2009 வியாழன் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான். இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு…
-
- 2 replies
- 1.3k views
-
-
மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர். 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அ…
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : Tue Jun 26 7:27:45 EEST 2007 குடாநாட்டில் ஐவரைக் காணவில்லை; ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐவ ரைக் காணவில்லையென மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீசாலை தெற்கு சோலையம்மன் கோயிலடியைச் சேர்ந்த வர்களான வடிவேலு ரவீந்திரன்(வயது 32), சின்னத்தம்பி சிவந்தன் (வயது 27) ஆகியோர் கடந்த சனிக்கிழமை கொடிகாமம் சிவில் நிர்வாக அலுவலகத்துக்கு கையொப் பம் இடச் சென்ற பின்னர் காணாமற்போயுள்ளனர் என அவர்களது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கொடிகாமம் மந்துவிலைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ் வரன்(வயது 21) என்பவர் கடந்த 16ஆம் திகதி கொடிகா மம் சிவில் நிர்வாக அலுவலகத்துக்கு கையொப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து அவதானமாக கருத்து வெளியிடுமாறு சர்வதேச பணியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யுத்த நிலவரம் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு, இலங்கையில் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் தொடர்பில் தகவல் தெரிவிக்க விசேட அவசர தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. செனல் 4 ஊடகவியலாளர்களை கைது செய்து நாடு கடத்தியதனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்குமிடங்கள், பொது இடங்களில் இலங்கை அரச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையான தொனியில் எடுத்துரைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்…
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து தாம் நன்கு உணர்ந்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். சகல அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது அவசியம் எனவும் அந்த கடிதத்தில் சோனியாh காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வெகுவிரைவில் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக விரைவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்? 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப…
-
- 8 replies
- 1.3k views
-
-
மீண்டும் கொழும்பில் வெள்ளை வான்கள்! 2 persons abducted in white van in Borella [TamilNet, Wednesday, 04 August 2010, 10:43 GMT] Two persons including a woman were abducted in Colombo Tuesday night around 10.30 p.m. by unidentified persons arrived in white van. The couple were walking along the road between Borella and Fort when the van stopped and forcibly took them and fled, according to complaints lodged with the Borella Police. Whereabouts of both persons were still not known according to preliminary inquiry by the police. The victims identities also were not revealed by the police.
-
- 2 replies
- 1.3k views
-
-
யே.வி.பி இன் கவலைகள்: புலிகளின் ஏமற்றும்தந்திரம், எங்களையும் எமது பீட்டன் மாதனமுத்தாபோல் பாவிக்கின்றாதா? விமானங்களும் இல்லை விமானஎதிர்ப்பு ஆயுதங்களுமமே இல்லாமல் வெறும் பயம் காட்டியே தமிழ்ஈழத்தை அடைந்துவிடப்போகிறார்களா? சமாதானத்தை தூக்கிஎறிந்துவிட்டு சண்டைக்கு போய்விடலாம் என்றால், ஒருவேளை அடிவாங்கும் நிலைவந்தால் உலகம் கைகொடுக்காதே, சரி சமாதான எல்லைக்குள் நின்றே அவர்கள் ஆயுதபலத்தின் உச்சத்தை பார்க்கலாம் என்றால், அதற்க்கும் பதிலளிக்கிறார்கள் இல்லையே. எமதூடகத்தின் பச்சைப் பொய்களுக்கு மக்கள்சிந்தனை பலியானதுபோல் எமதுதலைமைச் சக்த்திகளின் சிந்தனைகளும் எடுபட்டுவிட்டதா? இது தானய்யா காரணம் உலகின் கண்களுக்கு சமாதானத்துக்கு பச்சைக்கொடியும், புலிகளின் கண்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும் - கலெம் மக்ரே:- 22 அக்டோபர் 2015 இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவிலயாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார். ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி இலங்கை அரசாங்கமும் ஆவணப்படத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இனியும் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஆவணப்படத்தை ஒளிபரப்புச் செய்வதனை தாமதிக்கக் கூடாது என அவர் தெரிவி;த்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், அரசியல் பொறுப்பாளர் பா நடேசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் சென்று செயல்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், போரின் கடைசி மணித்துளிகளில் பிரபாகரன் இட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா நடேசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள வரிகள்: சுடருக்கு, இங்கு எல்லாம் நிறைவடைந்துவிட்டது. உங்களுக்கு அண்ணர் குறிப்பிட்டதுபோல, எல்லாவற்றையும் வெளியில் சென்று செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கேஸ்ரோ எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவித்திருப்பார். எதிர்ப்பார்க்காதM திருப்பம் ஏற்பட்டது உங்களுக்குத…
-
- 1 reply
- 1.3k views
-