ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
உகாண்டா சர்ச்சை - ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விளக்கம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகாண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் அச்சிடப்பட்ட காகிதங்களை கொண்டு செல்வதற்கான முன்பதிவு கிடைத்ததாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானப் பொதி முழுமையாக வணிக செயற்பாடாக அமைந்ததுடன், அதனூடாக விமான நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டா அரசாங்கத்தின் முன்பதிவிற்கமைய, பாதுகாப்பான அச்சிடும் செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, அச்சிடப்பட்ட உகாண்டா நாட்டின் நாணயத்தாள்களை கொண்…
-
- 4 replies
- 614 views
-
-
பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற வளாகத்திலும் , சபாநாயகரின் உத்தியோகபூர் இல்ல வளாகத்திலும் வன்முறையான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு கட்டடங்களை கைப்பற்றுவதல்ல என்பதால் , அரசியலமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார அவரது முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் ம…
-
- 4 replies
- 545 views
- 1 follower
-
-
எமது சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியமில்லை எனில் சிங்களப் படைகளுக்கும் சாத்தியமில்லை: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்துக்கள் சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியப்படும் வரை சிறிலங்காப் படைகளின் சுதந்திரமான நடமாட்டங்களையும், போக்குவரத்துக்களையும் அனுமதிக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது த…
-
- 4 replies
- 1.7k views
-
-
யாரை நோக? http://www.bbc.co.uk/news/world-south-asia-11846369 Why Sri Lankan Tamils won't remember war dead this year By Swaminathan Natarajan இப்படி ஒரு செய்தி BBC இல் இருக்கு, நானும் வாசித்து பார்த்து இந்த தலையங்கத்திர்ற்கும், எங்கட நடராஜன் இன் செய்திர்ற்கும் ஏதேனும் தொடர்பிருக்கா என்று பார்த்தால், அம்சா சொன்ன ஒரு ஒரு கருத்தது தான் இவர் போட்ட தலையகத்திர்ற்கு பதில் சொல்லுகிறது.."அவர்கள் விடுதலை வீரர்கள் இல்லை, அவர்கள் பயங்கரவாதிகள் ......" எனது கவலையெல்லாம், இந்த கூலிக்கு மாரடிக்கும் இந்த நடராஜன், மற்றும் இன்னோரென்ன ஆக்களை கூட (காசு கொடுத்து) வெல்ல முடியாமல் இருக்கிறோம் என்பது தான். ஒவ்வொரு செய்தி நிறுவனமும் சில சில கட்டுபாடுகளை/ நோக்கங்களை வைத்தி…
-
- 4 replies
- 906 views
-
-
திருமலையில் பிரபல தமிழ் வர்த்தகர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொலை. (ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 15:45 தமிழீழம்) (உதயகுமார்) இன்று திருமலையில் அருள் என்றழைக்கப்படும் ஜோசப் செபராஜா என்ற பிரபல வர்த்தகர் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மதியம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லண்டனில் நீண்ட காலமாக வாழ்ந்து, சமாதான காலத்தில் திருமலை திரும்பி பிரபல வர்த்தக நிறுவனத்தை இவர் நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி "கேணல்" சொர்ணத்தின் சகோதரரான இவர், சில மாதங்களாக இலங்கை புலனாய்வுத் துறையினரின் கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தவரென்று குடும்பத்தினர் தெரிவித்தார்கள். இன்றைய சூழலில் சிறீலங்கா அரசு தம…
-
- 4 replies
- 2.2k views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம்! – நடராஜன் மகிந்தவிற்கு ஆலோசனை Friday, June 10, 2011, 17:30 உலகம், சிறீலங்கா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் உறவினரான திருகுமார் நடராஜனை ஜனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய யோசனை பற்றி ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரியொருவர் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு திட்டித்தீர்த்துள்ளார். தமிழ் நாடு அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நேற்றிரவு 8 மணியளவிலேயே ஜனாதிபதிக்க …
-
- 4 replies
- 1.4k views
-
-
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில் உடைகளில் சென்ற இராணுவத்தினர் மக்களை மிரட்டியுள்ளனர். புதிய அரசு பொறுபேற்ற பின்னர் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அவரிடம்,நாங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருந்து பழகி விட்டோம். எனவே உயர் பாதுகாப்பு வலய காணிகளுக்கு பத…
-
- 4 replies
- 729 views
-
-
பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தம் – உதய கம்மன்பில 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இதில், பொலிஸ் அதிகாரத்தை சிறிது காலம் கழித்தும், …
-
- 4 replies
- 736 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் .போதனா மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். கொரோனா தொற்று காலப்பகுதியில் யாழ்.போதனா மருத்துவமனையில் இவர் சிறந்த சேவையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா (newuthaya…
-
-
- 4 replies
- 601 views
-
-
அம்பாறையில் பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை அம்பாறையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 4 replies
- 1.3k views
-
-
முரசுமோட்டையில் இரண்டாவது நாளாகவும் விமானக் குண்டுத் தாக்குதல் 4 பேர் பலி. 20க்கும் அதிகமானோர் காயம். வீரகேசரி இணையம் 1/1/2009 4:15:40 PM - கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவீல் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் தர்மபுரம் வைத்தி்யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களி்ல் ஒருவர் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, முரசுமோட்டை பகுதியில் இரண்டடாவது நாளாக இன்றும் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை நோக்கி் தொடர்ச்சியான…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐநாவில் பொய் கூறியவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்- மங்கள சமரவீர குற்றச்சாட்டு Published on January 17, 2013-10:38 am · ஐக்கிய நாடுகள் சபையில் பொய் கூறிய ஒருவரை மகிந்த ராசபக்ச பிரதம நீதியரசராக நியமித்துள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை எதிர்த்த சட்டவுரைஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். விசேடமாக சட்டவுரைஞர் வெலியமுனவை தாக்குவதற்காக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த டொல்பின் சந்தன என்பவர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை ஒரு விபத்…
-
- 4 replies
- 792 views
-
-
பிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவிற்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார். தற்பொழுது தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) நாடாளுமன்றில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எல்.பிரேமலால் ஜய…
-
- 4 replies
- 497 views
-
-
புலிகள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை – அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும் ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார். காணாமற்போனோர் குறித்து தேட அரசாங்கம் தயா…
-
- 4 replies
- 518 views
-
-
சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு மணலாற்று பகுதியிலுள்ள விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கும் என நேற்று விஜயம் செய்த போதே மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அங்கு மகிந்த மேலும் கருத்து தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி அதை தமிழர்களின் இரசதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வருவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. கூட்டு எதிர்க…
-
- 4 replies
- 430 views
-
-
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் December 26, 2021 சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆம் ஆண்டுகள் பூா்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது அத்துடன் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியிலும் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்ற…
-
- 4 replies
- 453 views
- 1 follower
-
-
இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை திறப்புவிழாவுக்கு வடமாகாண விவசாய அமைச்சரான வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லையென விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் விவசாய அமைச்சரை அழைத்தால் தான் கலந்துகொள்ளப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரணைமடு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பன்னங்கண்டி, இராமநாதபுரம் நெற்களஞ்சியசாலைகள் இன்று திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு நெற்…
-
- 4 replies
- 523 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவால்? புகைப்படங்கள் இணைப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவாலான முறையில் நாம் இந்த தேர்தலில் சுயேற்சையாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் இவ்வாறு வன்னி மாவட்ட சுயேற்சைக்குழுவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் வன்னி மாவட்ட ஈபிஆர்எல்எவ் எம்பியுமாகிய இராசு குகனேஸ்வரன் தெரிவித்தார். வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுடைய சுயமான மீள்குடியேற்றம் அதுமட்டுமல்ல அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்கப்படவேண்டும். இந்த விடயத்தை முன்னுரிமைப்படுத்தி தேர்தலின் போட்டியிட முன்வந்துள்ளோம். வன்னி மாவட்ட மக்களுடைய தேவைகளை இயன்றளவு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்ட திரு குகனேஸ்வரன், நாங்கள் எந்த தேசி…
-
- 4 replies
- 1.7k views
-
-
14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவி சிறிலங்காவின் அதிபருக்கு ஈரானில் நடைபெறவுள்ள 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவியை சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீ-15 நாடுகளின் உச்சிமாநாடு எதிர்வரும் 17ம் திகதி ஈரானில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு ஆரம்பமாகவுள்ள 14வது ஜீ-15 உச்சி மாநாட்டின் போது சிறிலங்காவின் அதிபருக்கும் ஈரான் ஜனாதிபதிக்குமிடையே முக்கிய சந்திப்பும் இடம்பெறவுள்ளது. ஜீ-15 உச்சிமாநாட்டில் இலங்கை கென்யா, சிம்பாவே, ஈரான், அல்ஜீரியா ஆஜென்ரீனா, பிறேசில், சிலி, எகிப்து இந்தியா, இந்தோனேசியா ஜமெய்க்கா, நைஜீரியா, மலேசியா, மெற்சிக்கோ, பெரு, செனகல் மற்றும் வேனிசுவேலா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.13வது ஜீ-15 உச்சிமாநாட்டின…
-
- 4 replies
- 435 views
-
-
இலங்கையிலிருந்து சென்னை நகருக்குள் உளவாளியை அனுப்பி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் சமீபத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர் உசேன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, கியூ பிரிவு போலீசார் ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் ஜாகீர் உசேன், மேலும் திடுக்…
-
- 4 replies
- 533 views
-
-
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை தான் மனதில் உத்தேசித்து வைத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இத்தீர்வு யோசனை அரசியல் கட்சிகளும், மக்களும் ஏற்று அங்கிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், தனது மனதில் உள்ள அரசியில் தீர்வு அவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்காமல் இருக்கலாம் அதனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல. பொதுமக்கள் கூட மறுக்கலாம். மக்களின் மனதினுள் உள்ளவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு என்ன தேவை என்பதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதனால் ஒரு குழுவினை நியமித்து இருசாரர் தரப்பிலும் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததுடன் 2011 ஆம் ஆண்டில் வடக…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரபாகரனைக் கொன்று போரை முடிவுக்குக் கொண்டு வர ஐதேக தீட்டிய இரகசியத் திட்டம்! – அம்பலப்படுத்தினார் சஜித். [Thursday 2014-10-23 09:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கொலை செய்வதற்கு, புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களை வழங்கியதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சூரியவெவ ரன்முதுவெவ என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும…
-
- 4 replies
- 681 views
-
-
இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா? வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?
-
- 4 replies
- 2.2k views
-
-
ஐ.தே.கவின் மாநகர சபை உறுப்பினர் கொழும்பில் சுட்டுக்கொலை. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தெகிவளை-கல்கிசைக்கான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொழும்பு புறநகரான தெகிவளையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்டவர் ஆரியரட்ன சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். -Puthinam-
-
- 4 replies
- 1.5k views
-
-
திருமலையில் சிறீலங்கா கடற்படையின் பேருந்து பாதையை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவமானது ஹபரணவில் இருந்து புறப்பட்ட கடற்படைப்பேரூந்தே கந்தளாய் அகுபுர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டதாக தெரியவருகிறது. thanks: pathivu.com
-
- 4 replies
- 1.4k views
-