Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்­து­விட முடி­யாது : இரா.சம்­பந்தன் சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்து விட முடி­யாது. சுரே­ஷுடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தற்கு தயா­ர­ாகவே உள்ளேன். இவ்­வி­டயம் குறித்து அடுத்த கட்ட நட­வ­டிக்கைகள் விரைவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான வகி­பா­கத்­தினைக் கொண்­டி­ருக் கும் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­தி­கா­ர­மாக தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என கூட்­ட­மைப்பின் ஸ்தாபக பங்­கா­ளிக்­கட்­ச…

  2. நாட்டை... முடக்க, தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் எனவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது நாட்டை முடக்கும் நிலை அல்ல எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். எந்த நேரத்திலும் முழுமையாக முடங்கும் அபாயத்தில் இலங்கை? இன்று ந…

  3. எந்தவொரு தீர்மானத்துக்கும்... ஒத்துழைப்பு, வழங்க தயார்: ஜனாதிபதி கோட்டா கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1290462

  4. புகலிட கோரிக்கையாளர்களை நியூசிலாந்து வரவேற்க வேண்டுமா? பத்திரிகையில் கருத்துக் கணிப்பு! நியூசிலாந்துக்கு செல்ல முயன்றபோது இந்தோனேசிய கடல் படையினரால் கைது செய்யப்பட்ட 87 தமிழர்களையும் நியூசிலாந்து அரசு வரவேற்க வேண்டுமா? கூடாதா? என்கிற கருத்துக் கணிப்பை மேற்கொண்டு வருகின்றது நியூசிலாந்து நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான The Dominion Post. ஆனால் இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் இது வரை இத்தமிழர்களுக்கு மிகவும் பாதகமாகவே உள்ளன. இது வரை 654 பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்து உள்ளனர். வரவேற்க வேண்டும் என்று 113 பேரும், கூடாது என 541 பேரும் வாக்களித்து உள்ளார்கள். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8485

    • 4 replies
    • 835 views
  5. இலங்கை சென்ற நோர்வே தமிழ் இளைஞரைக் காணவில்லை [திங்கட்கிழமை, 14 மே 2007, 17:58 ஈழம்] [அ.அருணாசலம்] நோர்வே நாட்டின் குடியுரிமை பெற்ற சௌந்தரராஜன் தம்பிராஜா (வயது 31) என்ற தமிழ் இளைஞர் கடந்த மார்ச் 31 ஆம் நாளில் இருந்து இலங்கையில் காணாமல் போய் உள்ளார். காணாமல் போவதற்கு முன்னர் இவரை சிறிலங்காப் படையினர் விசாரணை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 1993 ஆம் ஆண்டில் இருந்து 13 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்த சௌந்தரராஜன் தம்பிராஜா, கடந்த வருடம் தனது திருமண விடயமாக இலங்கை சென்றிருந்தார். அவ்வேளையில், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் உக்கிரமடைந்த மோதல்களைத் தொடர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்தார். இந்நிலையிலேயே கடந்த மார்ச் மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்க…

  6. February 27, 2019 கேப்பாபுலவு பகுதியில் தமது பூர்விக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கும் வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவனுக்குமிடையில் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு உடனடி தீர்வுகள் ஏதுமின்றி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் போராட…

    • 4 replies
    • 387 views
  7. ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 2 கொலம்பிய, பாலஸ்தீன அமைப்புகளுக்கு உதவுவதற்காக அந்த அமைப்புக்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த 7 நபர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்பும் டென்மார்க் சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருத்து கூறுகையில், தாம் இந்த வழக்கின் முலம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதையே வெளிக்காட்ட முயன்றதாகவும், அதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வா…

  8. தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக முன்மவைக்கப்படும் அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் முன்னெடுத்து வரும் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பரவலாக்கலை சிங்களவர்கள் எதிர்க்கின்றனர் என கூறுவது யார்?. நான் ஜனாதிபதியாக இருந்த போது, எம்லிப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். அப்போது மேடையில் இருந்த எமது கட்சியை சேர்ந்தவர்கள் இது குறித்து அதிகம் பேசவேண்டாம் …

  9. கடற்படைசிப்பாய் யொருவரை துப்பாக்கியால் சுட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதையடுத்து அந்த கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இதுபோன்ற உள்…

  10. இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின…

    • 4 replies
    • 605 views
  11. யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும், இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. சிறீலங்கா அரசினது இந்த இராணுவ மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அதாவது தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதனூடாக தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவே இந்த இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டமும் அமைந்துள்ளது. இந்த நிலப்பறிப்பு …

    • 4 replies
    • 717 views
  12. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கை கடும் அதிருப்திக் குள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாராளமாகப் பறப்பது குறித்தும் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துகளையோ வேறெந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படவோ அனுமதிக்கப் போவதில்லை யென முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது. ஆனால் நேற்றுமுன் தினம் …

    • 4 replies
    • 747 views
  13. வெளிமாவட்டங்களைச் சோந்த தமிழர்கள் கண்டியிலிருந்து வெளியேறவேண்டும். 09.07.2008 / நிருபர் எல்லாளன் எதிர்வரும் 17ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரகர பௌத்த வழிபாட்டுக்கு முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து சென்று கணடியில் தங்கியுள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு சிறிலங்கா பொலிசார் அறிவித்தல் விடுத்துவருகின்றனர். http://www.sankathi.com/

    • 4 replies
    • 1.7k views
  14. மட்டக்களப்பில் யானை தாக்கியதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.மட்டக்கள

  15. பகற்கனவு காண்கிறார் மஹிந்த சாடுகின்றன பிரதான கட்சிகள் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளியோம் உள்ள பதவியும் இல்லாமல் போகும் என்கிறது ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கை வர­லாற்றில் பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யாக பல்­வேறு திருப்பு முனை­களை ஏற்­ப­டுத்தும் வரு­டமே 2017 ஆம் ஆண்­டாகும். இந்த வரு­டத்தில் பாரிய மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும். இத்­த­கைய நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ புது­வ­ரு­டத்தில் ஆட்­சியை கவிழ்ப்போம் என்று கூறு­வது பகல் கன­வாகும். எக் ­கா­ரணம் கொண்டும் ஆட்சி மாறாது. இவ­ரது கூற்­றுக்கு நாம் அஞ்­ச­போ­வ­தில்லை என ஐக்­க…

  16. இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தகால நிகழ்வுகள் பற்றி தற்போது வாஷிங்ரனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியு மான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த விசாரணை உள் நாட்டு பாதுகாப்பு திணைக்களம் DHS மற்றும் உள் நாட்டு குடிவரவு, சுங்க கட்டுப்பாட்டு திணைக்களம், உள்ளிட்ட சட்ட அதிகாரிகளால் நடத்தப்படுமென் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் முறியடிப்பு முயற்சி இந்த விசாரணைகளை நிறுத்துவதற்கு அல்லது அதனை முறியடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியில் பகீரதப் பி…

  17. 53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடாவும் எதிர்ப்பு 28 November 09 02:32 am (BST) எதிர்வரும் 2011ம் ஆண்டு 53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்த யோசனைத் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடா ஆதரவளிக்காது என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்கா…

  18. ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தமிழீழத்தமிழர்களின் விடுதலை உந்து சக்தியாக இருக்கும் என்று ஒரு சாராரும் அது ஒரு அயோக்கிய தீர்மானம் என்று இன்னொரு சாராரும் வாதாடுவதை பார்க்கிறோம். என்னைப் பொறுத்தவரை கொடும்புயலில் சிக்கி சின்னா பின்னமாகிப் போன படகில் இருந்து கொந்தளிக்கும் ஆள்கடலில் தூக்கி வீப்பட்ட ஒருவனுக்கு மிதவை ஒன்று கிடைத்தை போன்றது தான் இந்த தீர்மானம்.திசை தெரியாத ஆபத்துக்கள் நிறைந்த கடலிலில் அந்த மிதவையை பிடித்துக்கொண்டு தற்காலிகாக அவன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவன் கரை சேர்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக தீர்மானம் தமிழீழ மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையாவிட்டாலும் அது சிங்கள ஆட்சியாளர்க…

  19. இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ கட்டணம் 1 கி.மீ.க்கு ரூ.100 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெட்ரோல் டீசல் விலை (இன்று இலங்கையில் வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்). இலங்கையில் பெட்ரோல் டீசல் விலையை மறுபரிசீலனை செய்து உயர்த்தியுள்ளதாக இலங்கை ஆற்றல்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக நியூஸ்ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு மறுசீரமைக்கப்பட்ட விலைப்பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, பெட்ரோல் விலை ரூபாய் 450 ஆகவும…

  20. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரித்து, அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய அடிப்படையில் எமக்கெனத் தனியரசை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் நல்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனைத் தவிர வேறு வழி கிடையாது என்பதனையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியானதையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட கோரிக்கையைக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் விடுத்திருக்கிறது. …

  21. 'இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஈடுபடுத்தும் சதி' - இலங்கையுடன் தகவல் தொடர்பு இணைப்பா? இந்தியஇலங்கை கடற்படைகளுக்கு இடையே மேற்கொள்ளப் படவிருப்பதாக கூறப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை அரசுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவக்கூடாது என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத் தொலை தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 13 ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்தி…

  22. அமெரிக்காவின் கருத்துக்கள் தவறானது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் பண்புகள் ஏனைய நாடுகளிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சகல குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை எனவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் கருத்து பிழையானத…

  23. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் காணி, காவல்துறை அதிகாரங்கள் ஒப்படைப்பதற்கு தயக்கம் காட்டவில்லை என்றும் அது பிறர் கையில் சிக்குவதை அவர் விரும்பவில்லை என்றும் சிறிலங்கா அமைச்சரும் ஈபிடிபி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் கையில் இந்த அதிகாரங்களை கொடுத்தால் பிரச்சினையில்லை. ஆனால் அது பிறர் கையில் கிடைத்தால் சிக்கலாகி விடும் என்றே சிறிலங்கா அதிபர் நினைக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று ஈபிடிபி கருதுகிறதா என்று எழுப்பிய கேள்விக்கு அவர், அவசியமான…

  24. ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர். இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்திய வண்ணம் ஐ.நாவை நோக்கிச் சென்றனர். தமீழிழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களை தாங்கிய வண்ணமும் எங்கள் தலைவன் பிரபாகரன், எங்களுடைய நாடு தமிழீழம் என்ற கோசங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான தமிழ்…

  25. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி இதனைக் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நா…

    • 4 replies
    • 624 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.