நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
தேவையான பொருட்கள்: ------------------------------- பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: -------------- வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும். ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்…
-
- 3 replies
- 2.1k views
-
-
புதினா வடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும். எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறம…
-
- 11 replies
- 2.1k views
-
-
தேவையான பொருட்கள்: பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும் மைதா - 2 கப் முட்டை - 3 சர்க்கரை - 1 1/2 கப் ஆயில் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன் பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 6 replies
- 2.1k views
-
-
திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: கோதுமை - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் பால் - ஒன்றரை கப் நெய் - 100கிராம் செய்முறை: கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும். கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெ…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஈஸியான... காளான் சூப் அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ். அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது) சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 1 reply
- 2k views
-
-
எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.
-
- 17 replies
- 2k views
-
-
சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா? இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். தேவையான பொருட்கள்;- 2 சுண்டு கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு உங்களுக்கு ஏற…
-
- 10 replies
- 2k views
-
-
நெல்லிக்காய் சொதி பிள்ளைகள் நெல்லிக்காய் புளிக்கிறதென்று சாப்பிடுவது குறைவு அல்ல சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சொதி அல்லது சம்பல் சொய்து கொடுப்பது வழக்கம், நேற்று இடியப்பத்துட்டன் அருநொல்லி சொதியும் மனைவி செய்தார், சந்தோஷமாக சுவைத்து சாப்பிட்டார்கள். வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான். சொதி செய்முறை தேவையெனில் - சுட்டது நெல்லிக்காய் சொதி தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்…
-
- 10 replies
- 2k views
-
-
என் குழந்தைகளுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் இலகுவாக உள்ளே போகாது. எப்பவும் ஏதாவது ஒரு அசைவ உணவு வேண்டும். ஆகக் குறைந்தது Chicken இருந்தால் தான் விரும்பிவினம் (அப்பனை மாதிரி என்று அவசரமாக முடிவெடுக்கக் கூடாது. எனக்கு மரக்கறி சாப்பாடு மிகவும் பிடிக்கும்) சரி, இப்படியே போனால் பிள்ளைகளுக்கு மரக்கறியே பிடிக்காமல் போய்விடும் என்பதற்காக நான் கண்டு பிடித்த ஒரு தீர்வுதான் மரக்கறிகளையும் கோழியையும் கலப்பது. தேவையானவ 1. கோழி: முழுக் கோழி (நாட்டுக் கோழி என்றால் இன்னும் நல்லம்) 2. Oyster souse மரக்கறிகள்: 3. Red pepper 4. Green pepper 5. லீக்ஸ் 6. கோவா 7. தக்காளி 8. கொஞ்சம் Spinach இவற்றுடன் 9. உள்ளி: உள்ளிப் பல்லுகள் 10 10.வெங்காயம் 1…
-
- 16 replies
- 2k views
-
-
காரமான மட்டன் மசாலா மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…
-
- 2 replies
- 2k views
-
-
INGREDIENTS * 1 1/2 pounds meaty frog legs * 1 cup milk * 1 eggs, lightly beaten, divded * 1 teaspoon garlic powder * 1/2 teaspoon onion powder * * 1 cup all-purpose flour * 1/4 cup fine dry bread crumbs * 2 tablespoons yellow cornmeal * 1/2 teaspoon baking powder * 2 teaspoons salt * 1 teaspoon fresh ground black pepper * 1 teaspoon cayenne pepper * 1 teaspoon paprika * 1/2 teaspoon dried oregano * 1/2 teaspoon ground thyme * 1/4 teaspoon cumin * 1 teaspoon dried parsley * * 1/2 cup olive oil * 3 tablespoons butter * * 1 small onion, diced * 5 large mushrooms, diced * 2 tablespoons all-purpose flour * 1 cup milk …
-
- 3 replies
- 2k views
-
-
-
அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம் -3 வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நி…
-
- 14 replies
- 2k views
-
-
மட்டன் கிரேவி மிக சுவையாகச் செய்வது எப்படி
-
- 10 replies
- 2k views
-
-
இறால் - சைனீஸ் ஸ்டைல் இறால் - சைனீஸ் ஸ்டைல் தேவையான பொருட்கள் :- உரித்த இறால் - 500 கிராம் தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது - 1 மேஜைக்கரண்டி சைனீஸ் உப்பு - 1 சிட்டிகை மோனோ சோடியம் குளுடோமேட் கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 2 ஙூ மேஜைக்கரண்டி முட்டையின் வெள்ளைப் பகுதி - 1 உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி எண்ணெய் - 1 லிட்டர் செய்முறை :- முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், ஙூ தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும். அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளி சாஸ், …
-
- 0 replies
- 2k views
-
-
காரசாரமான இறால் மசாலா விடுமுறை நாட்களில் வீட்டில் அசைவ உணவை நன்கு வாய்க்கு சுவையாக சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் உங்களுக்கு இறால் மிகவும் விருப்பம் என்றால் அதனை நன்கு காரசாரமாக மசாலா செய்து சாப்பிடுங்கள். இங்கு மிகவும் சிம்பிளான மற்றும் காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் இறால் - 250 கிராம் பட்டை - 1 துண்டு சோம்பு - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் …
-
- 2 replies
- 2k views
-
-
இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம். எமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை. சரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. இன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம். அந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன். அதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான். அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்…
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
-
கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 200 கிராம் சின்ன வெங்காயம் - கால் கிலோ கருவாடு - 100 கிராம் தக்காளி - 2 பெரியது பச்சை மிளகாய் - 4 பூண்டு - 4 பல் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் கறிவேப்பிலை , - சிறிது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் கொத…
-
- 4 replies
- 2k views
-
-
தேவையான பொருட்கள் : மைதா-ஒரு கோப்பை கோதுமை மாவு-ஒரு கோப்பை எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி உப்புத்துள்- ஒரு சிட்டிகை துருவிய பனீர்- முக்கால் கோப்பை துருவிய தேங்காய்- அரைகோப்பை வெல்லம்-1/2 கோப்பை ஏலக்காய்-நான்கு பொடித்த முந்திரி -காலக் கோப்பை நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப செய்முறை : 1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும். 2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும் 3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் . 4.பின்பு அதே வாணலியில்…
-
- 23 replies
- 2k views
-
-
துவரம்பருப்பு 100 கிராம் புளி 10 கிராம் அன்னாசி 4 துண்டுகள் உலர்ந்த மிளகாய் 6 தனியா 5 கிராம் கொத்தமல்லி சிறிது கறிவேப்பிலை சிறிது கடுகு அரைத்தேக்கரண்டி எண்ணெய் 10 கிராம் உப்பு தேவையான அளவு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள். பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள். எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள். மேலும் நன்றாகக் கொதி…
-
- 2 replies
- 2k views
-
-
இறால் குழம்பு தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் குழம்பிற்கு... எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்…
-
- 4 replies
- 2k views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் தால் இதுவரை பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பாகற்காய் தால் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள்…
-
- 0 replies
- 2k views
-
-
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி – 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிதளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் செய்முறை : * …
-
- 16 replies
- 2k views
-
-
கம கமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்.!! யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடா நாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது. உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அ…
-
- 4 replies
- 2k views
-