கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அனாதை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொன்று, 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த மருதப்பன் மீதான வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. வழக்கின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்த நீதிபதி, இருதரப்பு நியாயங்களையும் கேட்டபிறகு பேச ஆரம்பித்தார். ‘‘மருதப்பனின் கைரேகையும், அவருடைய இருப்பிடத்திலிருந்து எடுக்கப்பட்ட நகைகளும், மருதப்பன்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறது. மருதப்பன் ஆறுமாத கைக்குழந்தையின் உயிரைக்கூட விட்டு வைக்கவில்லை. அந்த ஆறு மாத கைக்குழந்தை இவர் கொள்ளையடிப்பதை தடுக்கப்போவதில்லை. இது மிகவும் கொடூரமான செயல். மருதப்பனிடம்…
-
- 3 replies
- 1.9k views
-
-
பரமேஸ்வரி படுக்கையில் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இது தன் வீடு இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. கண்களைச் சுழலவிட்டு அவ்விடத்தை அடையாளம் காண முற்பட்டாலும் எதுவும் நினைவில் வர மறுக்கிறது. பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணவே இல்லை. தாகம் எடுப்பதுபோல் இருக்கிறது. யாரையாவது கூப்பிட வேண்டும் என எண்ணி கூப்பிட எத்தணிக்கிறாள். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை. என்ன இது தொண்டை அடிக்குதே. யாருமில்லையா என எண்ணியவளுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி எழ முயல்கிறாள். அதுவும் முடியவில்லை.பதட்டம் மேலும் அதிகரிக்க இரு கைகளையும் கண்டபடி அசைத்ததில், மேசையில் இருந்த எதோ ஒன்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியதில் பக்கத்து அறையில் இருந்த தா…
-
- 30 replies
- 3.1k views
-
-
அந்தரங்கம் புனிதமானது "புவனா! என்ன சொல்றதுன்னே தெரியலே...... இதைப் பத்தி பேசக்கூடாதுன்னு நினைத்தேன்... ஆனால் யாரிடமாவது பேசினால் மனம் கொஞ்சம் லேசாகும்னு தோணுது.... அம்மாகிட்ட பேசமுடியாத பல விஷயங்களை உன்கிட்ட பேசி இருக்கேன்.... வா காபி சாப்டுண்டே பேசலாம்" புவனா கை பிடித்து கூட்டிப் போனாள் சுமிதா... " சரி வா.... " இருவரும் கான்டீன் பக்கம் சென்றனர்.... அங்கு கூட்டம் அதிகம் இல்லை... இவர்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்... "சொல்லு சுமிதா... என்ன? " குழப்பத்துடன் இருந்த புவனா கேட்க.... " எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 மாசம்தான் ஆறது....சந்தோஷமாத்தான் இருக்கோம்.... நேத்திக்கு அவர் வாக்கிங் போயிருந்தப்போ மெசேஜ் வந்தது அவருக்கு ..... …
-
- 3 replies
- 2.1k views
-
-
கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம் அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள். இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்ச…
-
- 50 replies
- 8.3k views
-
-
என் உள் மனது இன்றைக்கும் உச்சரிக்கும் ஓர் பெயர் நிவேதா.... எத்தனை புயல்கள், எத்தனை பூகம்பங்கள், எத்தனை ஆழிப்பேரலைகள் வாழ்வில் வந்து தாக்கிவிட்டுச் சென்ற போதும் எல்லாக் காயங்களையும் கொஞ்ச நேரமாவது ஆற்றிக்கொள்ளும் மருந்தாய் என் வாழ்வில் தென்றலாய் வந்து வருடிச்செல்லும் ஓர் பெயதான் நிவேதா.... ஆம் பாடசாலை செல்லும் வயதில் ஏற்பட்ட பருவக்காதல் தான். பலரும் சொல்வார்கள் பாடசாலை செல்லும் வயதில் ஏற்படுவது உண்மையான காதலல்ல அது ஓர் இனக் கவர்ச்சியென்று. அது இனக் கவர்ச்சியானால் ஏன் அது இன்றைக்கும் நீடிக்கிறது, அவள் பெயரின் நினைவு இன்றைக்கும் ஏன் என் நினைவை வருடிச் செல்கிறது, ஏன் என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது.... சரி.. சரி... வாருங்கள் என் வீட்டு அடுப்படியில் இருந்து அவள்…
-
- 18 replies
- 3.9k views
-
-
"குடும்பத் தலைவி" என்னுடன் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான், இன்று என் அண்ணாவை திருமணம் செய்யப் போகிறவர். அவளின் பெயர் 'தமிழ்', அவள் படிப்பிலும் அழகிலும் சாதாரணமே. ஆனால் நல்ல பண்பாடும் மற்றும் கலைகளிலும் ஈடுபாடு உள்ளவள். நான் அதற்கு எதிர்மாறு. படிப்பிலும் மற்றும் அழகிலும் முன்னுக்கு நிற்பவன். அதனால் கொஞ்சம் இறுமாப்பும் உண்டு. படிக்கும் காலத்தில் நான் அவளை கணக்கிலேயே எடுப்பதில்லை. சிலவேளை கொஞ்சம் அவள் கவலை அடையக் கூடியதாக, பலரின் முன்னிலையில் பகிடி கூட செய்துள்ளேன், அவள் அது எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து, பொருட் படுத்தாமலே விட்டு விடுவாள். நான் இறுதி பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, உதவி விரிவுரையாளராக அதே பல்க…
-
- 0 replies
- 866 views
-
-
1995 இல் அவனை முதன் முதலில் பார்த்தபோது அவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. என்னைச் சுற்றி வலம் வந்துகொண்டிருந்த மற்றையவர்களில் அவனும் ஒருவனாகக் கரைந்துபோயிருந்தான். எதுவென்று புரியாத பயத்திலும், அவசரத்திலும் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. கிருலப்பனை வீட்டிலிருந்து காலையில் அவசர அவசரமாக பஸ்பிடித்து அரக்கப் பரக்க ஓடி, புதினப்பத்திரிக்கையில் உரைபோட்ட காட்போட் பைலுடனும், வீட்டுக்குப் போட்டுப் பழசாகியிருந்த பாட்டாச் செருப்புடனும், பெல்ட் கட்டாமல் வெறும் பாண்டுடன், கட்டைக் கைச் சேர்ட்டுடன் என்னைப் பார்த்தீர்களென்றால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். 1995 ஒக்டோபரில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகி முதல் மூன்று மாதங்களிலும…
-
- 36 replies
- 9.2k views
-
-
வசனம் யோ.கர்ணன் நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ கழுத்தறுப்புக்கேஸ் என்று நினைச்சுக் கொண்டுதான் காதுக்குள்ள வைச்சனனான். இது வேற கேஸ். நான் படுக்கையிலயிருந்து துள்ளியெழும்பினன். ரெலிபோன் கதைச்சது ரதி. அவள் என்ர மச்சாள். கதைச்சதை விட கூட நேரம் ஒப்பாரி வைச்சு அழுதாள். அழுகைக்கிடையில சொன்ன விசயம், அவளின்ர புருசனை இரவு ஒன்பது மணி போல ஆரோ கடத்திக் கொண்டு போயிற்றினமாம். எனக்கு தலைசுத்தத் தொடங்கீற்றுது. இப்ப கொஞ்ச…
-
- 10 replies
- 1.9k views
-
-
எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் …
-
- 16 replies
- 2.5k views
-
-
20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும். பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே …
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் கந்தசாமி வசிக்கிறார். …
-
- 4 replies
- 982 views
-
-
[size=5]பனங்கொட்டை பொறுக்கி[/size] குரு அரவிந்தன் உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்…
-
- 3 replies
- 1.1k views
-
-
மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 ) இந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்... கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ₹250 கடன் வாங்கினான். சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான் . சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டாள். . மனைவியிடம்..நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான். மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... கணவனின் பல மன்றாடுதலுக்குப்பிறகு மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை . 1). *Rs. 2 5 0* 2). *Rs. 2 5 0* ------------------ *Rs. 4 10 0* ------------------ ஆக மொத்தம் ர…
-
- 0 replies
- 549 views
-
-
பகுதி 1 'கெதியாக் கதவைப்பூட்டு 'அந்த கட்டையைப்போட்டு இறுக்கிச்சாத்து 'என் இரட்டைச்சகோதரி அவசரப்படுத்தினாள். அவசரப்பட்டு செய்ததாலோ என்னவோ கதவு பூட்டப்படவே இல்லை. 'திராங்கைப்போட்டனியே...ச்சோ சந்திக்கு வந்திட்டாங்கள்'...'கையும் நடுங்குது என்னால் சாத்த முடியேல்லை....'ச்ச்சும்மா இறுக்கி மூடிவிட்டுச் சாய்ந்து நிற்பமா...அவங்கள் போற வரைக்கும்...........!!! அவளைப்பார்த்து நெஞ்சு பதறப் பதறப் பதட்டம் மேலோங்கக் கேட்டேன்.. மிகுதி..... http://www.karumpu.com/post/2009/02/22/eelam1.aspx
-
- 17 replies
- 2.9k views
-
-
குழைத்த சாதம் ......... ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன. அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு மத்தியில் வாழ முடியாதென்று முடிவெடுத்து . வீட்டையும் நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம் செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் பட…
-
- 15 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதை யாரோ அந்தப் பெண்... அழகான பெண்... உள்ளே வந்தமர்ந்தாள். ‘‘சொல்லும்மா. என்ன ப்ராப்ளம்?’’ டாக்டர் கேட்டார். ‘‘நான் எங்கே போனாலும்... எங்கே வந்தாலும்... எங்கே நின்னாலும்... யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு டாக்டர். யாரோ என் பின்னாடி இருக்காங்க!’’ - அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். ‘‘இது ஒருவித இல்யூஷனோட ஆரம்பக் கட்டம். சரி பண்ணிடலாம். மருந்தெல்லாம் வேண்டாம்’’ என்றவர், சிறிது நேரம் கவுன்சலிங் கொடுத்துவிட்டு, ‘‘அடுத்த வாரம் வாம்மா!’’ என்றார். அவள் வெளியில் சென்றாள். அடுத்த நோயாளியாக இன்னொருத்தி உள்ளே வந்தாள். ‘‘டாக்டர்...’’ ‘‘சொல்லும்மா’’ ‘‘நான் எங்கே போனாலும், எங்கே வந்தாலும், எங்கே நின்னாலும்...’’ ‘‘என்னம்மா அதே மா…
-
- 1 reply
- 726 views
-
-
பகுதி ....1 என்ன இவள் இப்படிச் சொல்லிக் கொண்டு வாறள் எண்டு எல்லாரும் நினைக்கிறது எனக்கு விளங்குது..என்ன செய்யிறது..?நானும் எனது ஆக்கத்துக்கு பல தரப் பட்ட பெயர்களை வைத்துப் பார்த்தேன் இது தான் தற்போதைய நிலையில் புலம் பெயர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் போல இருந்துச்சு "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எண்ட பெயரை வைச்சுட்டன்..எனது எழுதுக்கு பச்சை புள்ளி தராட்டிக்கும் பறவாயில்லை...சிவப்பு மட்டும் குத்திப் போடாதியள்..எனக்கு சிவப்பை கண்டாலே அலர்ஜி..எனது முன்னேற்றத்துக்கு தட்டிக் கொடுப்பதும் தள்ளி விழுத்துவதும் உங்கள் கைகளில் தான் இருக்கு.இனி விடயத்துக் வாறன்.. எல்லோரும் அறிந்த விடயம் பெருவாரியாக 1983,1984 ஆண்டுப் பகுதியிலிருந்து வெளிநாடுகள…
-
- 15 replies
- 3.9k views
-
-
இது இன்னொரு வாழ்க்கை! பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியைப் பிரித்து, இவர் அருகில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணை மறுபுறமாய் அமர வைத்தார். பக்கத்தில் வந்து அமர்ந்த அந்த நபர், கொஞ்சம், பருமனாக இருந்தார். கூடவே, அவருடைய பத்து வயது மகனை, மடி மீது உட்கார வைத்ததும், கலியமூர்த்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் இன்று வரும் வழியில் பாதிரி செல்லையாவைப் பார்த்தேன். காய்கறி வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்தவர், என்னைப் பார்த்ததும் நிதானித்தார். “பச்சை படியும்விதம் ஷேவ் செய்யப்பட்டு, மீசையற்ற மொழுமொழு கன்னங்கள் கொண்ட ஆண்களைப் பார்த்தால் gay போலவே தோன்றுகிறது” என்றவுடன், திடுக்கிட்டு கன்னத்தைத் தடவியபடி சிரித்தார். எனது வெள்ளைப் பக்கங்கள், அவரது கறுப்புப் பக்கங்கள் மீது இருவரும் பரஸ்பர மரியாதைகொண்டிருந்தோம். உரையாடலைக் காய்கறிகளின் நச்சுத்தன்மையிலிருந்து தொடங்கியவர் பிறகு, சர்ச்சில் சிறு வேலைகள் செய்யும் லாரன்ஸும், விக்டரும் குடித்துவிட்டு சர்ச்சுக்கு வருவது குறித்தும், தேர்தல் காலங்களில் தேவாலயத்தை அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
போத்தல் பித்தளை அலுமினியம். இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இ…
-
- 27 replies
- 7.2k views
-
-
முன்னொரு பொங்கல் நாளில் யோ.கர்ணன் இன்றைய பொங்கலைப் போலவே மூன்று வருடங்களின் முன்னரும் ஒரு பொங்கல் நாள் வந்தது. அன்று நாங்கள் யாரும் பொங்கி, சூரியனிற்குப் படைக்கவில்லை. அன்று விடிந்ததன் பின், அது ஒரு பொங்கல் நாளென்றே நினைக்க முடியவில்லை. அது பற்றிய சிந்தனையெதுவுமிருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றுதான் நான் அகதியானேன். ஒரு அகதிக்குரிய முழுமையான அர்த்தங்களையுணர்ந்து அகதியானேன். மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை அன்றுதான் எடுத்து வைத்தேன். இதுவரையான யுத்த இயல்புகளிற்கு மாறாகவே இறுதியுத்தமிருந்ததினால், யுத்தத்தின் வழமையான அறிகுறிகளெதுவுமின்றியே மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சத்தமின்றி மெதுமெதுவாக நுழைந்து கொண்…
-
- 2 replies
- 1k views
-
-
கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை : நவின். எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! …
-
- 3 replies
- 1.5k views
-
-
மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார். மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி ஆறு வயதிற்கு மேல் ஒரு மனிதனுக்கு புதிதாக மச்சம் வளர முடியும்… ஆச்சர்யந்தான். சில நிமிடங்கள் ரொம்பவே பெருமையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் தனக்குத்…
-
- 3 replies
- 1.7k views
-
-
புலி நான்!" பொறுப்புகள் இப்போதுதான் அதிகமாகின்றன! அப்பா இருக்கிறார் அவரெல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் எனத் தெம்பாக ஊர் சுற்றிய காலம் இனி இல்லை! அவருக்கு ஒரு சோதனை எனும் போதுதான் என் பணி இன்னமும் தீவிரமாகிறது! என்ன நிகழ்ந்தாலும் என் பிள்ளைகளுக்கு ஒன்றும் நிகழாது என வலம் வந்த அம்மாவால் இனி சும்மா இருக்க முடியாது! இப்போது இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது என்னுள் வேட்கை! தாய்க்குத் தலைமகனாக, தந்தைக்குச் செல்ல மகளாக இனி நானே தலையெடுக்க வேண்டும்! என் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டும்! அப்பா இப்பவும் எம்மிடையேதான் இருக்கிறார், இப்போதும் எமக்கு அவரே காப்பு என்பதைப் புரியவைக்க வேண்டும்! ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்! துவண்டுவிழக் கூடாது நான் இப்போது! …
-
- 1 reply
- 1.1k views
-