கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக “காக்கைச் சிறகினிலே” இதழ் குழுமத்தினரால் நடத்தப்பட்ட புலம்பெயர் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ‘காக்கைச் சிறகினிலே’ இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016′ யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கி.பி. அரவிந்தன் அவர்களின் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக…
-
- 15 replies
- 3.2k views
-
-
சென்ற வாரம் **** அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது.. தொடர்ச்சி**** இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எம…
-
- 1 reply
- 2.4k views
-
-
2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் வானொலிகளை திருப்பி கொண்டு, அடுக்கப்பட்டு கிடந்த துணிகளால் ஆன மண் மூடைகளுக்கு நடுவே கிடந்த அந்த பொழுது. அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே பாதுகாப்பாக படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று. நாங்கள் வழமையான சில பணிகளில் கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ”…
-
- 0 replies
- 1.7k views
-
-
ரொறன்ரோவில் அது ஒரு கோடைகாலம் வானொலிகளும் டிவிக்களும் மார்க்கம் மைதானத்தில் மாறி மாறி போட்டி போட்டு பண்டிகை செய்யும் காலம்.. ஆம்... வளமைபோல அந்த குடும்பமும் பண்டிகை காண உற்றார் உறவினரோடு பண்டிகை நடைபெறும் மார்க்கம் மைதானத்தை வந்தடைந்தது.. அவர்களைக் காணும் நண்பா்களும் உறவினா்களும் இந்தியாவிலிருந்து அந்த நடிகையும் வந்திட்டாவாம் - அந்த பாடகரும் வந்திட்டாராம் என்ன..! என குசு குசுத்தபடி தமது தமது பிள்ளைகளுக்காக சவாரிகளுக்காக பற்றுச் சீட்டுக்களை பெற்று தமது பிள்ளைகளை சந்தோசப்படுத்தியவாறு அந்த மைதானத்தின் ஒரு பக்கத்தை சுற்றிவருகிறார்கள்.. மைதானத்தினுள் மக்கள் திரள் திரளாக வருகிறார்கள் அந்தச்சிறுவனது தாயாருக்கு எச்சரிக்கை உணா்வு மேல…
-
- 0 replies
- 1.3k views
-
-
என் அத்தை மக…. சினிமா பாடல் வரிகளை விசில் அடித்துக் கொண்டு சிவா வீட்டுக்கு கீழ் உள்ள நிலவறையில் காரை நிறுத்தி விட்டு மாடிப்படியேறி ஓடுகிறான். அன்று வெள்ளிக்கிழமை வார இறுதிநாள். திருமணமாகி இரு வாரங்களே கடந்த புது துணைவி. அவளுடனான புதுவாழ்க்கைக்கு இடையே இருவரது பணிகளின் குறுக்கீடு. இருந்தாலும் அவன் சந்தோசமாகவே இருந்தான் தான் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்வை அவனின் துள்ளல் நடை பறைசாற்றியது. பணியிடத்தின் பணிச்சுமைகளை இறக்கி விட்டு புத்துயிர் பெற்றவனாய் இன்ப சொரூபமான அவளை நோக்கி செல்கிறான். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.5k views
-
-
ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னொரு காலத்தில் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் தேவதைகள் வாழும் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு ஆமையும் எருதும் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தன. ஆமை தேவதைகளுக்குப் படகு ஓட்டியது . எருது தேவதைகளுக்கு வண்டி ஓட்டியது. ஆமையும் எருதும் ஏனென்று காரணம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று பகமை பாராட்டுவதைப் பார்த்து தேவதைகள் ஆச்சரியப் பட்டன. அந்த ஆமையிடன் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதேபோல எருதும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்திருந்தது. ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இ…
-
- 3 replies
- 1.5k views
-
-
கசங்கிய கடிதம் ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது. படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார். உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில்…
-
- 5 replies
- 2.5k views
-
-
இடமும் வலமும் ஆர். அபிலாஷ் கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க அர்ஜுனன் வருகிறான். ஏற்கனவே அங்கே துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்து தூங்கி விழுந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனன் செருமுகிறான். துரியோதனன் அதிர்ந்து விழிக்கிறான். அர்ஜுனனை அடையாளம் கண்டதும் அவன் மீண்டும் அசட்டையாய் கண்ணை மூடிக் கொண்டு தலையை முன்னும் பின்னுமாய் அசைத்து தூக்கத்தை தொடர்கிறான். அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே கிருஷ்ணன் தூங்கும் கட்டிலைத் தவிர வேறு அறைகலன்களே இல்லை. கிருஷ்ணனின் கால்மாட்டில் மட்டுமே உட்கார்வதற்கு இடம் உள்ளது. அர்ஜுனன் தன் உடலை ஒடுக்கி ஓரமாய் ஒண்டிக் கொள்கிறான். அர்ஜுனனின் இருப்பு துரியோதனனை தூங்க விடாமல் பண்ணுகிறது. அவன் பாதி கண்ணை திறந்து பார்க்…
-
- 1 reply
- 1.5k views
-
-
மோகினிப்பேய் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை என்று அவனுக்குத் தெரிந்தது. இனி அப்படியான சுதந்திரமும் தான் நினைத்ததைச் செய்ய நேரமும் கிடைப்பதென்றால் அவனடைய உழைப்பு வருமானம் போன்றவற்றையும் யோசிக்க வேண்டும் என்பது யதார்த்தத்தின் வெளிப்படை என உணர்ந்தான். பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சநாட்கள் தான் நினைத்தததைச் செய்யலாம் என்ற அவனுடைய அந்…
-
- 6 replies
- 3k views
-
-
தாயாகத் தந்தையாக… சேர்மனியில் பிரதானமான நகரங்களில் ஒன்று பிராங்போட் மெயின்ஸ். அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் தனத்தின் நண்பரின் திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதற்கு வந்திருந்தான். திருமணத் தம்பதியினருடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, நின்றபோது, மேடைக்கு முன்னிருந்த அனைவரினது கண்களும் அவனையும் அவன் பிள்ளைகளையும் உற்று நோக்கின. புகைப்படம் எடுந்து முடிந்தபின் தனம் தனது பிள்ளைகளை அணைத்துக் கூட்டிச் சென்று, முன்பிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். அப்போது அங்கே வந்த ஒருவர் "இவர்கள் என்ன இரட்டைப் பிள்ளைகளா" என வினாவினார். தனம் "ஓமோம்..." என்றான் "இரட்டைப் பிள்ளைகள் ஆணும் பெண்ணு…
-
- 6 replies
- 3.6k views
-
-
<iframe frameborder="0" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/?feed=https%3A%2F%2Fwww.mixcloud.com%2FThayagam%2Fsathurangam-290216%2F&light=1" width="100%"></iframe> <i> </i><br /> மறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது. எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர் அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சே…
-
- 3 replies
- 1.4k views
-
-
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப் (சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை) _______________________________________________ காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவ…
-
- 2 replies
- 4.6k views
-
-
விகடன் தாத்தாவா? காந்தி தாத்தாவா? விகடன் குழும சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் (28.12.1935 – 19.12.2014) அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள். அப்படியொரு மகோன்னத மனிதர் அவர். எங்கோ குக்கிராமத்தில், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, கடையில் தொங்கும் ஆனந்த விகடன் பிரதிகளை அண்ணாந்து பார்த்து வியந்த சிறு துரும்பு நான். பின்னாளில் ஆனந்த விகடனில் பணியில் சேருவேன், அவரைச் சந்திப்பேன், பழகுவேன், அவரின் அபிமானத்தைப் பெறுவேன் என்றெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தவன். அவரோடு பழகக் கிடைத்த வாய்ப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவனானேன். இன்று அவரின் முதலாண்டு நினைவு நாள். அவரைப் பற்றி எழுத விரும்புகிறேன். எழுத வேண்டும். எழுத எத்தனையோ உண…
-
- 3 replies
- 2.1k views
-
-
நிலங்கீழ்வீடு பொ.கருணாகரமூர்த்தி எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்…
-
- 1 reply
- 1k views
-
-
சைக்கிள் -தர்மினி- மூன்று பக்கங்களும் கடல்களும் ஒரு பக்கம் மணற் கும்பிகளும் என எங்கள் ஊர் ஒடுங்கியதும் சிறியதும். ஆகவே, பள்ளிக்கூடம், லைப்ரரி, ஞாயிறு தேவாலயம் என எங்கே போவதென்றாலும் (இந்த இடங்கள் தவிர வேறெங்கும் போறதேயில்லை) கால்நடை தான். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது. வழியில் எங்கேயாவது மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய் கண்டால் கல்லெறிவதோடு சரி. சைக்கிள் ஓடும் யாரைப்பார்த்தும் ஆசையே வரவில்லை. எப்பிடித்தான் ஓடுறார்களோ? என ஆச்சரியம் தான். பக்கத்து ஊரிலிருந்து விஞ்ஞானம் படிப்பிக்க வரும் ரீச்சர் தங்களைத் திட்டுவதைக் காரணமாகக் கொண்டு ரீச்சரின் சைக்கிளை என் வகுப்புப் பொடியங்கள் சிலர் ரயறை வட்டாரிக் கூரால் குத்திக் காற்றை …
-
- 1 reply
- 2.3k views
-
-
தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்காக கொ…
-
- 8 replies
- 1.9k views
-
-
உயிர்க்கொல்லிப் பாம்பு - நோயல் நடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன. வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கன…
-
- 8 replies
- 1.7k views
-
-
தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1) மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருவே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை. பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில…
-
- 25 replies
- 14.2k views
-
-
நீக்கல்கள் – சாந்தன் அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்… வீட்டிலிருந்தே ‘ஸ்பெஸிம’னை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகி…
-
- 5 replies
- 3.6k views
-
-
அர்த்தம் அற்ற பிழை அனோஜன் பாலகிருஷ்ணன் கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள். அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களி…
-
- 6 replies
- 1.8k views
-
-
பாடைக்கம்புகள் இரண்டையும் எடுத்து வளம் பார்த்து கல்லின் மேல் வைத்துவிட்டு, தலைமாடு கால்மாடு என இரண்டு இரண்டு கம்புகளாக அளவு எடுத்து வெட்டி சணல்கயிறால் கட்டத்தொடங்குகிறேன். திடீரென பறைமேளச்சத்தம் உச்சத்தொனியில் ஒலிக்க, முகத்தைத் திருப்புகிறேன். கொஞ்சம் மங்கலாக தெளிவில்லாமல் உருவங்கள் தெரிகிறது. வாசலில் கட்டிய வாழைக்குட்டி மட்டும் இலையை அசைத்துக் கொண்டு நிற்பது தெளிவாக தெரிய, பாடைக்கு கட்ட நான்கு வாழைக் குட்டி வெட்டனும் என நினைத்தபடி கத்தியை எடுக்க கையை நீட்டுகிறேன். உடல் அசைவினால் கழுத்தில் இருந்து நீர்க் கோடு மெல்லிய வெப்பத்துடன் உருண்டு ஓடியது. உடலெங்கும் ஒருவித கசகசப்பாய் இருக்கவே கையால் கழுத்தை துடைத்துக் கொண்டே கண்களைத் திறந்தேன். பக்கத்து கட்டிலில் நண்பன் மூச்சின…
-
- 7 replies
- 1.9k views
-
-
நீண்ட காத்திருப்பின் பின்.. டபிள்டெக்கர் வந்து சேர்ந்தது. அதில் ஏற முண்டி அடிக்கும் கூட்டத்திடம்.. இதுகளுக்கு ஒரு ஒழுங்கு வரிசையில வரத்தெரியாதா... என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி.. மேல் தட்டை பார்த்தேன். அது காலியாகக் கிடந்தது.. நான் டெக்கரில் ஏறுவதில் போட்டி போடுவதை விடுத்து மேல இடம் இருக்குத்தானே கடைசியா ஏறுவம் என்று பின்னடித்தேன். அழகிய பூப்போட்ட மேற்சட்டையும்.. ஸ்கேட்டும் அணிந்தவளாக அவள்.. சமர் உடுப்பில் கலக்கினாள். அவளின் எலுமிச்சம் கலர் தோலுக்கு அந்த உடுப்பு எடுப்பாக இருந்தது. அவளும் என்னைப் போலவே அதே டபிள்டெக்கரில் ஏறப் போனவள்.. பின்னர்.. பின்னடித்தவளாய் பின்னகர்ந்து வந்து என் முன் நின்றாள். என்ன ஒரு வேவ் லென்த்.. ஒரே விதமாய் சிந்திக்கிறாளே என்று என் மனசு தனக…
-
- 17 replies
- 7.4k views
-
-
அப்பிள்: க. கலாமோகன் ஓவியங்கள்: செல்வம் நான் ஒரு பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பலவகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு வாரத்தில் கடை மூடப்படுமெனவும் தீர்க்க தரிசனம் செய்தனர். எனது மனதோ தளரவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வாடிக்கையாளர்கள் பெருக்கெடுத்தனர். உண்மையிலேயே வாடிக்கையாளிகள் என்பதே சரி.. எனது மனதைத் தளரவைத்தவர்களும் மெல்லமெல்ல வாடிக்கையாளர்களாகினார்கள். ஏன் எனக்குள் இந்தத் திட்டம் ஏற்பட்டது என்பது இன்னும் விளங்கமுடியாமல் உள்ளது. நான் பிரபல அப்பிள் பிரியன் அல்லன். பழங்களின் வடிவங்களில் எனது மனதை ந…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஹங்கிப்* பெண் ஹெலன் ஃபோர்ப்ஸ் தமிழில் : கொற்றவை சமயலறை கடிகாரத்தில் ஐந்து மணி அடித்தது. சிமெண்ட் தரை வேயப்பட்ட சலவையறையில், களைப்பாய் இருந்த அந்த சலவைக்காரப் பெண் தன் தோள்களை வளைத்து, உடம்பை முறுக்கி எழுந்தாள், துணிகள் மீது தண்ணீர் தெளித்து வழக்கமான தனது பணியோடு அன்றைய நாளையும் தொடங்கினாள். கடைசி ஈரத் துணியை மடித்து துணிக் கூடைக்குள் வைத்து அடுக்கி முடித்ததும் ஒரு அகலமான துருக்கித் துண்டால் கூடையை மூடி மேஜையின் கீழ் தள்ளிவிட்டு, மேல்மாடிக்குச் சென்றாள். அன்றைய தினக் கூலியைக் கொடுக்க திருமதி. அட்வுட் காத்திருந்தார்; சிறந்த வீட்டுப் பராமரிப்பாளரான அவர் தான் நியமித்த ஒவ்வொரு பணியாளருக்கும் தன் கையால் கூலி கொடுப்பதை தன் கடமையாகக் கொண்டிருந…
-
- 2 replies
- 2.7k views
-
-
ஏகாந்தம் என்பதும் உனது பெயர் இளங்கோ வழமை போல வேலைக்குப் போவதற்காய் நிமலன் ஆறு மணிக்கு எழும்பியிருந்தான். இரவு திரைச்சீலையை மூடாததால் சூரிய ஒளி அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இன்றைக்கும் வேலைக்குப் போக வேண்டுமா என நினைக்க இன்னும் சோம்பல் கூடியது. சட்டென்று இன்று வேலைக்குப் போகாவிட்டால் என்ன எனவும் தோன்றியது. நல்ல விடயங்களை பிற்போடக்கூடாது என்று யாரோ சொன்னது நிமலனுக்குள் ஒலிக்க, உடனேயே மானேஜரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வேலைக்கு வரமுடியாதிருக்கின்றது எனத் தன் குரலைப் பதிவு செய்தான். சோம்பலாய் விடிந்த பொழுது இப்போது நிமலனுக்கு உற்சாகமாய் மாறியிருந்தது. கட்டிலிலிருந்தபடி இன்று என்ன என்ன செய்யலாமென பட்டியலிட முயற்சித்தான்…
-
- 0 replies
- 1.4k views
-