கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
பெரியாத்தா வீட்டுவாசலிலேயேபெரியாத்தாஉட்கார்ந்திருப்பார்.வீட்டுக்கு வருபவர்களின்கண்களில் சட்டென படவேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம்.தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு. தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை. “வாங்க தம்பி! உட்காருங்க” “நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க” “நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியேசெத்துட்டாருயா” “எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?” “எல்லாம் குடிதான…
-
- 2 replies
- 961 views
-
-
[ A+ ] /[ A- ] பெயர் : நரேன். தொழில் : பாண் போடுவது. தகுதி : இலங்கை அகதி . தந்தை பெயர் :வல்லிபுரம் . தொழில் :பாண்போடுவது. உபதொழில் :கள்ளு அடிப்பது . ************************************************************* 1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெ…
-
- 0 replies
- 703 views
-
-
விடை கொடு விடை கொடு மண்ணே... வாகனம் ஓடும் சத்தம், காற்று வீசும் ஓசை, வண்டிக்குள் எம் மூச்சுக்காற்று இவை தவிர அந்தச் சூனியப் பிரதேசத்தில் வேறு சத்தமில்லை. சாம்பல் பூத்த வானம் சலனம் தீர்ந்து சயனித்திருந்தது. வெந்து கிடந்தது மண்; வேகம் இழந்து வீசியது காற்று. கருகிக் கிடந்தன மரங்கள். குவிந்து கிடந்தன எரியூட்டப்பட்ட வாகனங்கள். மூச்சடங்கிக் கிடந்தது முல்லை நிலப்பரப்பு. மொட்டையாய் நின்றன கற்பகத்தருக்கள். கோலமிழந்து கிடந்தன வாழ்வின் எச்சங்கள். கூரை இழந்து நின்றன குடியிருந்த கோயில்கள். விதவைக் கோலம் பூண்டிருந்தன தெருக்கள். இறுதிக்கட்ட போரின் பின் தொலைக்காட்சிகளிலும் கணனிகளிலும் பார்த்து மனம் கனத்த கொடுமையான நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மனக்கண்ணில் ஒருகணம் நிழற்படமாய் விரிய மனதை …
-
- 37 replies
- 6.3k views
-
-
[size=6]காலச்சூரியன்களும் சிறைக்கம்பிகளும் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, November 3, 2012 சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான். சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தை அக்கால வீதிநாடகங்களும் பரப்புரைக்கூட்டங்களும் உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி விடுதலைப் போராளியானான். அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம் போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது. பகைகுகையில் இறங்கிப் பணி செய்ய அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை …
-
- 6 replies
- 1.3k views
-
-
தண்ணீரிலே தாமரைப் பூ (1) 'வசந்தங்கள் வாழ்த்துரைக்க வான்மேகம் பூத்தெழிக்க சொந்தங்கள் சூழ்ந்து நிற்க சொர்க்கமே அருகிருக்க மங்கள மேளமது சங்கமம் என ஒலிக்க தங்கமாய் வந்ததொரு தரமான வசந்தவிழா' விடிந்தால் திருமணம். வீடு முழுவதும் உறவினர்கனாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கூடிக் கூடி குதூகலமாகப் பேசுவதும் அலங்காரம் செய்வதுவும் திருமண காரியங்களுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பதுமாக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற தெரிந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தல் அலங்காரம் செய்பவர்கள் ஒரு பக்கம் மும்முரமாக செயற்பட்டுக்கொண்…
-
- 30 replies
- 6.6k views
-
-
FROM MY UNFINISHED SHORT NOVEL "LOVE BEFORE THE WAR" போருக்கு முந்திய காதல் என்கிற குறுநாவல் எழுதி வருகிறேன். அதில் இருந்து ஒரு சிறு பகுதி. நான் அம்மா வளர்த்த பிள்ளை. அம்மா பிள்ளையாக வளர்ந்ததில் சின்ன வயசில் இருந்தே எனக்கு பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் அமரிக்கன் மிசனறிகளின் செல்வாக்கில் வளர்ந்தவள் என்பதால் பெண்கள்மீதான என்னுடைய அளப்பரிய நேசத்தை புரிந்துகொண்டாள். ஆனால் ‘கொடியில் காயப்போட்ட சேலையைக் கண்டால்கூட ராசன் அதுக்கப்பால் நகரமாட்டான்’ என நண்பர்கள் எப்போதும் என்னைக் கிண்டலடித்தார்கள். சேலைகள் மீதான என் மோகம் காமத்தை முழுமையாக உணராத சின்ன வயசுகளில் இருந்தே ஆரம்பித்தது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.. அப்போதெல்லாம். அம…
-
- 1 reply
- 1.1k views
-
-
எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி எழும் நான், அந்த கனவு தந்த பயத்தில் இருந்து மீளாமல் கண்ணீர் வடிய நெடு நேரம் படுக்கையில் அமர்ந்திருப்பேன். “கெனா”ல இப்படி கெதக்’குனு பயப்படாதட்டி, யட்சி பிடிசுக்குவா”. ஒவ்வொரு முறை அலறி எழும்போது அம்மாச்சியின் இந்த வார்த்தைகள் மனசுக்குள் வந்து மேலும் பயத்தை அதிகரிக்கவே …
-
- 0 replies
- 1.2k views
-
-
உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த நாயின் முழுநேர வேலை உலாத்துதல்தான். கடந்த 2 நாளில் என்னையும் என் தோழர்களையும் போல் அதுவும் உலவுவதை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை அந்த நாய் எங்களை பின் தொடர்ந்திருக்கவும் கூடும். பழைய தமிழ் சினிமாவில் வரும் இச்சாதாரிநாகம் போல, எனக்குப் புரியவில்லை. அந்த ஓநாயின் பார்வை கொண்ட கருநாயின் 5 பெரும் தென்படுதல்களை நான் உங்களுக்கு சொல்லப்போறன். தென்படுதல் ஒன்று: நகைக்கடைகாரருக்கு பிறகு. “வணக்கம் சேர். நாங்கள் யாழின் கரங்கள் அமைப்பின் மாணவர்…
-
- 0 replies
- 887 views
-
-
எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும் - அங்கம் - 1 12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் அது தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது. அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி..... அந்த …
-
- 26 replies
- 5.5k views
-
-
இக்போ இனத்தவர் சொல்வதுண்டு - ‘முதிர்ந்த கழுகின் இறகு எப்பொழுதுமே அப்பழுக்கற்று இருக்கும்’ என. சிறுகுறிப்பு; நைஜீரிய, பெண் எழுத்தாளர் சிமமாண்டா அடிச்சீயின் நாவலுக்கு (சொல்வனத்தில் அவரைப்பற்றியும் அவரது நாவல் பற்றியும் வந்த கட்டுரை இங்கே) முன்னோடியாக அவரே எழுதிய சிறுகதை இங்கே மத, இன வேறுபாட்டில் தொடங்கும் பிரிவினைக் குரல், போராட்டத்தில் இறங்கி, இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் பின்னே பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கிறது. பெருந்துயரத்தினூடே வளரும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சுயநலத்தையும் துவேஷத்தையும் லட்சியவாதத்தையும் அவர்கள் பார்வையினூடே விவரிப்பது மட்டுமல்லாமல், மனித மனங்கள் இந்த சுயநலத்தை நியாயப்படுத்துவதையும் கூட அடிச்சீ கதையில் விவரித்த…
-
- 0 replies
- 928 views
-
-
அதிகாலை லண்டனில் இருந்து ரவிராஜ் போன் ,அடுத்த கிழமை கனடா வருகின்றேன் ஒரு வார இறுதி நாளை ப்ரீ ஆக வைத்திரு,மற்றது உன்ரை பழைய ஆளின் கணவர் மண்டையை போட்டுவிட்டார் ,எனக்கும் துரத்து சொந்தம் தானே போக இருக்கின்றேன் என்றான் . நான் போனை வைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டேன்.பின்னர் அதுபற்றி மறந்தும் விட்டேன். ஏனோ பின்னேரம் போல பழைய படம் ஓடத்தொடங்கியது.அப்போ தான் O/L PASS பண்ணி A/L போன காலம், சோட்ஸ்சும் பான்ஸ்சும் மாறி மாறி போட்ட வயது.பாடசாலை முடிந்ததும் எந்த அலுவல் இருந்தாலும் அதைவிட்டு ஓடிவந்து 3.45 பஸ்ஸை பிடித்து வீடு வந்து ஊரில் இருக்கும் மைதானத்திற்கு ஓடும்காலம்.என்னால் ஏழு நாட்களும் அந்த மைதானத்திற்கு போகாமல் இருக்க முடியாது .CRICKET,FOOTBALL இதுவே எனது LIFE .இரவு வந்து ப…
-
- 50 replies
- 7.4k views
-
-
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இ…
-
- 0 replies
- 488 views
-
-
ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான். சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற…
-
- 1 reply
- 1.1k views
-
-
அழிந்துவரும் வரும் கலைகளில் ஒன்றான புலிக்கூத்து நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு - வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷ்யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொண்டனர். இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இந்த ஆற்றுகையை நிகழ்த்தினர். வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்பட…
-
- 3 replies
- 1.5k views
-
-
பரபரப்போடு... கூட்டம் கூடுகிறது... கேள்விகளை தொடுக்கிறார்... (வெள்ளையின ஆங்கிலேய) முகாமையாளர்: உங்கள் பெயர்தான் கோலியாத்தா..?! கோலியாத்: ஆம்.. நானே தான் அது. முகாமையாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது எமது நிறுவன ஒழுங்கு விதிக்கமைய பராதூரமாக பார்க்கப்படுகிறது..! அந்த வகையில் தான் இந்த விசாரணைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீங்கள் அண்மையில் அப்படி ஏதாவது குற்றம் செய்ததாக உணர்கிறீர்களா..??! கோலியாத்: நானா. அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே..?! முகாமையாளர்: உங்களுக்கு சீதாவை தெரியுமா..??! கோலியாத்: என்ன அந்த மகாபாரத சீதாவா.. மன்னிக்கனும்.. இராமாயண சீதாவா.... அவாவை தெரியும். (முகாமையாளர் இந்தப் பதிலைக் கேட்டு முழிக்கிறார். …
-
- 8 replies
- 1.8k views
-
-
கப்பல்காரன் வீடும் வக்சலாவும் ... யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் ! அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்ப…
-
- 0 replies
- 2k views
-
-
மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார். “ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது. “ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர். அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் …
-
- 4 replies
- 1.3k views
-
-
சீனாவில் எப்படி பாட்டி வடை சுட்ட கதை! - பேரா.பர்வீன் சுல்தானா https://www.facebook.com/video/video.php?v=10202785308383005
-
- 2 replies
- 3k views
-
-
கூப்பன் கடை...... (நினைவுகள் ) இஞ்ஞாருங்க மகள் சாப்பிடுகிறாள் இல்லை .ஒருக்கா என்னென்று கேளுங்கோவன் என்று என் மனைவி பத்மா சொல்ல சி மன்னிக்கவும் அஸ்வனா சொல்ல என் மனிசி பெயர்தான் பத்மா அவள் வெளி நாடு வந்த பிறகு அஸ்வனா என்று பெயரை மாற்றிக்கொண்டாள் .ஆனால் பாஸ்போட்டில் பத்ம அரசி தான் ஆனால் அது பழைய பெயராம் .ஆனால் நான் வாய்க்கு இனிமையாக பத்மா என்று கூப்பிட்டால் கூட ஒரு முறைப்பு முறைப்பாள் அதனால் வீட்டில் மட்டும் செல்லமாக அவளை பத்மா என்று கூப்பிடுவேன். ஏன் மகள் சாப்பாடு வேண்டாம் இல்லை அப்பா எனக்கு பசிக்கவில்லை என்றாள் மகள் அஸ்வினி.நானும் மனிசி என்ன செய்திருக்கிறாள் என்று பார்க்கபோனேன்.ஏனென்றால் இந்த ரீவில காட்டுற சமையல் குறிப்புக்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஏதாவது…
-
- 17 replies
- 2.5k views
-
-
கண்டி வீரன் ஷோபாசக்தி சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் …
-
- 4 replies
- 820 views
-
-
தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா. .அவனை அவசர படுத்தினார். இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் , கொஞ்சம் பொறண்ணை இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை இங்கு கன காலமாக செய்யிறார் அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும் அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன …
-
- 11 replies
- 1.9k views
-
-
திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்துப் பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழு…
-
- 0 replies
- 916 views
-
-
கிளி அம்மான் -கோமகன் இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூட…
-
- 20 replies
- 2.8k views
-
-
எழுச்சி - ஷோபாசக்தி சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை. பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் முப்பது பவுண் நகையும் வீடு வளவும் சீதனமாக தருமலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
வெளியில் நடந்து செல்லணும் மகன் வெளிக்கிட நேரமாச்சு.. நானும் மனைவியும் நடக்கத்தொடங்கினோம்.. சிறிது நடந்தும் ஆளைக்காணவில்லை.. தொலைபேசி எடுத்தேன் வீட்டில் தான் நின்றிருந்தார் போய்க்கொண்டிருக்கின்றோம் ஓடிவா என்று விட்டு தொலைபேசியை வைத்தேன்.. மனைவி பேசினார் ஓடி வா என்கிறீர்கள் பிள்ளை ஓடி வந்து விழுந்துவிட்டால்.. அடிப்பாவி பொடிக்கு 22 வயசு பட்டதாரி எஞ்சினியர் பொத்திக்கொண்டு வா என்றேன்.. சத்தியமாக ஓடி வா என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு ஓடிவந்து விழுந்து விட்டால் என்று தான் சில செக்கனுக்கு முன் நானும் நினைத்தேன்............
-
- 9 replies
- 3.3k views
-