Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. 1995 இதே காலப் பகுதி... மாதகல் பக்கமா ஒரே கன்போட் அடி... குரும்பசிட்டி.. சண்டிலிப்பாய்.. அளவெட்டிப் பக்கமா.. ஒரே செல்லடியும்.. துப்பாக்கிச் சண்டையும்... ஆமி முன்னேறி வந்திட்டானாம்.. சனங்கள் எல்லாம் உடுத்த உடுப்போட கத்திக் கொண்டு ஓடுதுகள்... ! ஓடிறதுகள் ஓட.. இன்னும் கொஞ்ச சனம்.. காலாற.. கோயில் வழியவும்.. சேர்ச் வழியவும் அடைக்கலம் தேடுதுகள்... என்ன கொடுமை இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா..??! கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்த நான்.. மக்கள் வீதி ஓரங்களில் களைப்பு மிகுதியில் மரங்களுக்கு கீழ நின்று ஓய்வெடுக்கிறதை கண்டிட்டு எனக்குள்ள அங்கலாய்த்தும் கொண்டன். பலாலில இருந்து.. அச்சுவேலிக்கால வெளிக்கிட்டு முன்னேற முயன்ற ரத்வத்த அங்கிள் அங்க அடி அகோரம…

  2. 1966 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் நான் முதல் காலடி எடுத்து வைத்தேன்.எனது ஆரம்ப கல்வியை அந்த கிராமப்பாடசாலையில்தான் ஆரம்பித்தேன். தற்பொழுது அது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அன்று மகாவித்தியாலயமாக இருந்த பாடசாலை இப்பொழுது பல்கலைகழகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான் ஆரம்ப கல்வி பயிலும் பொழுது நாலு சிறிய கட்டிடம்தான் இருத்தது.எனது தந்தையார் அரச திணைக்களத்தில் தொழில் புரிந்தார்.அந்த கிராமத்தில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வேறு அரச சார்பு திணைக்களமும் இருந்தன.அநேகமான அரச உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர்.இது சில ஊர்வாசிகளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். முக்கியமாக படித்த சமுகத்தினரிடையே, எங்களுடைய வேலைஎல்லாம் வெளிமாவட்டத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் இருந்தப…

    • 22 replies
    • 2.3k views
  3. கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன் என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. – த.அகிலன்- – 01- அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் என்றும் சொல்ல முடியாது, படகுகள். துரதிஸ்டவசமான உண்மையென்னவெனில் யுத்தபூமிகளிலிருந்து தப்பிப்பதற்கு பலரிடமுமுள்ள முதல் தெரிவாகவும் வாய்ப்…

  4. என்னுடைய கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் படையினன் மிகவும் இளமையாகவும் என்னை விட குள்ளமாகவும் இருந்தான். முகத்திலும் ஒரு அப்பாவித்தனம் தெரிந்தது. யுத்தத்தில் என்னவெல்லாம் செய்திருப்பான் என்பதை முகத்தை வைத்துக் கணிப்பது கடினமாக இருந்தது. „இதிலே ஓடுவது ஜேர்மனிய நேரமா' என்று அவன் என்னிடம் ஒரு புன்னகையோடு கேட்டான். அப்பொழுதுதான் கவனித்தேன். நான் இலங்கை நேரத்திற்கு கடிகாரத்தை மற்றாமல் விட்டிருந்தேன். ஆம் இது ஜேர்மன் நேரம்தான் என்று அவனுக்கு பதிலளித்தேன். அவன் மணிககூட்டை இன்னும் நெருக்கமாக வந்து பார்த்தான். புலம்பெயர்ந்தவர்களிடம் படையினர்கள் அன்பாகப் பேசி அன்பளிப்புகளை பெறுகின்ற செய்திகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இவனும் அன்பாக வேறு இருக்கின்ற…

  5. ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக , கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும் , இளைஞர்களும் , நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது. குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதை…

  6. [size=6]நமக்கு வேண்டாம் கொலைத் தொழில் [/size] [size=2][size=4]கோடை வெயிலும் குளிர் காற்றும் குழைந்து கிடந்தன…[/size][/size] [size=2][size=4]அவசர உலகில் அவன் அவசரமாக நடந்து கொண்டிருந்தான்…[/size][/size] [size=2][size=4]” பொத் பொத் .. ” என்ற ஓசையுடன் அவன் சப்பாத்துக்கள் தரையில் மோதின.. அவசரம்..[/size][/size] [size=2][size=4]கீழே பார்த்தான்..[/size][/size] [size=2][size=4]ஒரு பூச்சி..[/size][/size] [size=2][size=4]சாணத்தின் நிறம்.. சிறக்கைகளில் கருமையாக கோலங்கள்..[/size][/size] [size=2][size=4]அதனுடைய அசைவு சாதாரணமாகப்படவில்லை… ஏராளம் பிரச்சனைகளை சுமந்து அந்தரப்படுவது தெரிந்தது..[/size][/size] [size=2][size=4]பூச்சிகளின் உலகில் அத…

    • 8 replies
    • 865 views
  7. எழிலரசன் என்கிற சகுனி -சித்தாந்தன்- அந்த நாட்களில் ‘சகுனி’ என்ற அவனின் பெயரே அவன் மீதான நட்புக்கு காரணமானது. அந்தப் பெயரின் இலகுத் தன்மையும் லாவண்யமும் எனக்குப் பிடித்துக் கொண்டதால் நான் அவனை நண்பனாகக் கொண்டேன். . மற்றப்படி அவனிடம் ஈர்ப்பு ஏற்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை. தினமும் வகுப்பாசிரியர் இடாப்புக் கூப்பிடும் போது சகுனியை அழைக்கும் விதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. வகுப்பிலேயே நான்தான் மிகவும் உயரம் குறைந்தவனாக இருந்தேன். சகுனியோ என்னைவிட இரண்டு மடங்கு பெரியவன் போலிருந்தான். நான் அவனுடன் திரிவதை அவ்வப்போது எனக்கொரு பாதுகாப்பெனக் கருதிக் கொண்டேன். ஒரு நாள் இடைவேளையின் போது சகுனி என்னை வெளியே கூட்டிப் போனான். நான் இண்டைக்கு ஒரு விளையாட்டை…

    • 1 reply
    • 2.1k views
  8. (1976ம் ஆண்டு 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து... வன்னி மாணவன் ஒருவனின் பார்வையினூடாக... வன்னி மண்ணின் வாழ்வும் மன வளமும்... பதிவுக்கு சற்று நீளமாக இருக்கலாம், எனினும்,.. இருநூறு மீற்றர் - சிறு கதை - "நாளைக்குப் பின்னேரம் வரதனுக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா?" "இல்லை ஐயா" "நாளைக்குப் பின்னேரம் என்னோடு வவுனியாவுக்கு வர வேண்டும், வசதியோ?" "ஓம்" " பாடசாலை விட்டதும் நாங்கள் வவுனியாவுக்குப் போவோம்.வீட்டில் அவ்வாறு சொல்லி வரவும்" "ஓம் ஐயா" "இப்பொழுது வீட்டுக்குப் போகலாம்" எனக்கெண்டாக் காத்திக பறக்கிறது போல.புது வாத்தியார் வந்தபிறகு பள்ளியும் நல்ல திருத்தம்.பிள்ளையள் விருப்பமாய் பள்ளிக்கு வருகினம்.போன தவணை பள்ளியில விளையா…

    • 7 replies
    • 1.1k views
  9. ஒரு நாட்டிலை ஒரு சின்ன கிராமம் இருந்திச்சாம். அந்த கிராமத்திலை ஒரு ஆச்சி இருந்தாவாம். அவாக்கு கருணை உள்ளமாம். ஆர் கஸ்டப்பட்டாலும் அவவாலை பாத்துக் கொண்டிருக்க ஏலாதாம். இப்படி இருக்கேக்கை பக்கத்து;க கிராமங்களிலை எல்லாம் சரியான வறுமை வந்திட்டாம். அதாலை அந்த ஊர் ஆக்கள் தாங்கள் வளத்த நாய்களை எல்லாம் கலைச்சு விட்டிட்டினாம். அந்த நாய்கள் எல்லாம் எங்கை போற எண்டு அந்தரிச்சுக் கொண்டு நிண்டுதுகளாம். இப்படி இருக்கேக்குள்ளை பக்கத்து ஊரிலை இருந்த அந்த ஆச்சி இப்படி அந்தரிச்சு அந்த ஊருக்கு வந்த நாய்களை எல்லாம் அரவணைச்சு தன்ரை தோட்டத்திலை வாழ விட்டாவாம். தானும் இந்த ஊருகளுக்கு போகேக்கை றோட்டிலை நாய்களைக் கண்டால் தூக்கிக் கொண்டு வந்து தன்ரை தோட்டத்திலை விடுவாவாம். அப்படி ஒரு…

  10. [size=6]நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது. [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, June 26, 2012 அண்ணை இப்பத்தான் அண்மையில தடுப்பிலயிருந்து வெளியில வந்தவர். 25வரியம் இயக்கத்தில இருந்தவர். ஒரு நல்ல களமுனைச்சண்டைக்காரனும் கூட. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சுடுகலனும் , கனரகமும் அதுகளை இயக்கிற வகையளுமே. ஆயுதங்களோடை அண்ணை காடுகளெல்லாம் நடந்து திரிஞ்சவர். தாயகக்கனவை நெஞ்சில சுமந்தபடி அண்ணை உருவாக்கிய போராளிகள் அண்ணையின் கையிலை வீரச்சாவான நேரங்களிலயெல்லாம் அண்ணை தன்ரை கண்ணீரை மறைச்சு இலட்சியத்தை இறுக்கமாவே வரிச்சுக் கொண்டு இயங்கின மனிசன். 2006மாவிலாற்றில சண்டை துவங்கினோடனும் மாவிலாற்றில சண்டைக்களத்தில நிண்டார். பிறகு சம்பூர் , மூதூர் , கொக்க…

    • 6 replies
    • 1.3k views
  11. போராளி காந்தா இறுதிச்சமர் முடிவில் தனது பிள்ளைகளோடு இராணுவக்கட்டுப்பாட்டை நோக்கி வந்த நேரம் எறிகணைபட்டு வீரச்சாவடைந்துவிட்டார். கையில் சரிந்த காந்தாவின் உடலை அவரது போராளிக்கணவன் தனது மனைவியின் உடலை நாய்களுக்கு இரையாகாமல் புதைத்துவிட்டு வருவதாக உறவுகளிடம் சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் உறவுகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு காந்தாவின் உடலைப்புதைத்துவிட்டுப் போகப்போனவர். இன்றுவரையும் திரும்பி வரவில்லை. காந்தாவின் மகளும் மகனும் ஓர் உறவினால் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். தாயையும் தந்தையையும் இழந்த அந்தப்பிள்ளைகளுக்க எல்லாமுமாக அந்த உறவு அவர்களைத் தனது சொந்தப்பிள்ளைகளுக்கும் மேலாக கவனிக்கிறார். காந்தாவின் மகளோடு கதைக்கிற போது காந்தா வெளிநாட்டில் இருப்பதாக நம்புகிற அவளது குழந்தைக் கன…

  12. இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் கந்தசாமி வசிக்கிறார். …

    • 4 replies
    • 982 views
  13. நோஸ்ராடாமஸ்.... 1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது …

  14. படிப்பு தவிர்ந்த நேரத்தில் ரொம்ப யாலியாக இருப்பது எனது வழக்கம். நன்றாக தூங்குவேன். நன்றாக சாப்பிடுவேன். நன்றாக ஊர் சுத்துவேன். நல்ல படங்கள் அதிலும் ரஐனி படம் முதல் காட்சி பார்ப்பேன். பாடசாலை கட் பண்ணாமல். அண்ணருடைய வீடு ஐம்பெற்றா வீதியில். மதியம் பாடசாலை முடிய அப்படியே 155இலோ 101 இலோ வந்திறங்கி 167 எடுப்பேன். சிலவேளை அப்படியே 167இல் போவேன் அல்லது கடைக்கு வந்து சைக்கிளில் சென்று சாப்பிட்டுவிட்டு வருவேன்.. (கலருகள் ஏறுவதைப்பொறுத்தே போக்குவரத்து வாகனம் தெரிவு செய்யப்படும் உள்ளே போவதா வெளியில் தொங்குவதா என்பதுதும் அவர்கள் உளள்ளே இருக்குகும் இடத்தைப்◌ாறுத்தேத ததீர்மானிக்கப்படும் ) அதன் பின் ஐயாவைப்பிடிக்கமுடியாது. ஒன்றில் ஊர் சுற்றுவது. அல்ல…

  15. பாடசாலை மாறி போயிருந்த காலம். அறிமுகங்களும் பலவகை கெடுபிடிகளுடன் பகிடி வதைகளும் அமர்க்களமாய் இருந்தநேரம். நான் போன போது அந்த சி வகுப்பு என்றால் ஒரு படி கீழே தான் இருந்தது. குளப்படியில பாடசாலையில் முதல் ரகம். ஏதாவது ரிப்போட் செய்யப்போனால் அதிபர் கூட எட்டடி தள்ளி நிற்பார். பயம் வரும் வகையில் இருந்தது படிப்பு விடயம். ஒரு நாளைக்கு ஒருவர் என்றாலும் தண்டிக்கப்பட்டு மைதானத்தில் வெய்யிலில் காயாத நாளில்லை. படிப்பிக்க வந்த புது வாத்திமாரெல்லாம் இந்த வகுப்புக்கு போகமாட்டோம் என ஒப்பாரி வைக்கத்தொடங்கிவிட்டனர். அதிலும் பெண் ஆசிரியைமாருக்கு விசேச கவனிப்பு. பொருளியல் பாடத்தில் சரக்கு வந்தடைடந்தது என்று அவர் சொன்னதற்காக போட்ட கூச்சலில் அந்த ஆசி…

  16. Started by கோமகன்,

    எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்…

  17. ஆநதி ஒரு முன்னாள் பெண் போராளி. அவர் எழுதிய உயிரே உயிரே! என்ற நாவல் தினமணியின் கதிர் இணைப்பில் வாரம் தோறும் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இங்கே இணைக்கலாம் என நினைக்கிறேன். இணைக்கலாந்தானே?! நான் எழுதிய நாவல்களில், வெளிவரும் முதலாவது நாவல். சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இதை எழுதினேன். என் போர்க்கால வாழ்க்கையில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறேனே தவிர நாவலெதுவும் எழுதவில்லை. மனசுக்குள் நாவலுக்கான வடிவங்கள் இருந்தாலும் ஆற அமர்ந்து எழுத நேரமிருக்கவில்லை. அடிப்பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத் தர இப்போதும் எனக்குத் தயக்கம்தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்க…

    • 29 replies
    • 4.1k views
  18. Started by jkpadalai,

    “உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி….” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்…

    • 11 replies
    • 1.9k views
  19. ராஜ்சிவா- இதோ 2012ம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ’2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான். “சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது. இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.அது….! ‘மாயா’. மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன…

  20. இன்றைக்கு தந்தையர் நாள் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதிலே இருந்து என்னுடைய ஈழப் பயணக் கட்டுரையை தொடர்கிறேன். பல குழப்பங்களுக்கு மத்தியிலும் நான் ஊருக்குப் போவதற்கு முடிவெடுத்ததற்கு என்னுடைய தாயும் தந்தையும் முக்கிய காரணம். என்னுடைய தாய் ஜேர்மனிக்கு வந்து எல்லோரையும் பார்த்து விட்டுப் போய் விட்டார். ஆயினும் அவருக்கு வேறு ஒரு கவலை. அவரை பல விதமான நோய்கள் ஆட்கொண்டிருந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பேயே அவர் இறந்து விடுவார் என்று வேறு அவரிடம் ஒரு சோதிடன் சொல்லியிருந்தான். இரண்டு மகன்களும் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில், இருவருமே இதுவரை தாயகத்திற்கு வந்து போகாத நிலையில், அதற்கான வசதிகள் இல்லாத நிலையில், தனக்கு ஒன்று என்றால் யார் எல்லாவற்றையும் செய்வார்கள் என்…

    • 17 replies
    • 1.8k views
  21. [size=5]வருடம்: 1976, [/size] [size=5]மாதம்: ஜூன்[/size] [size=5]நாள்: 27 [/size] குவைத் நாட்டில் இருந்து பகரைன் வழியாக வந்த, SQ763 இலக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்கிய நேரம் காலை 6 மணி 45 நிமிடங்கள். விமானத்தில் இருந்து வெளியேறிய ஐந்து பயணிகளில் நால்வர் நேராக transit பகுதிக்கு சென்று சென்று பாரிஸ் நோக்கிச் செல்லும் Air France AF139 விமானதிற்க்கான check in முடித்து, அங்கிருந்த இருக்கைகளில், ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் வெவ்வேறு இடங்களில், அமர்ந்தார்கள். அதே காலை 8:59 மணியளவில் Air France 139 விமானத்தின் பைலட், கப்டன் Michel Bacos, இஸ்ரேலிய நாட்டின் Ben Gurion விமான நிலையத்தில் இருந்து ஏதன்ஸ் வழிய…

    • 47 replies
    • 11.7k views
  22. ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம் என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார். அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராட…

  23. அண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக இலக்குகள் எதுவுமின்றி நான் அலைந்துகொண்டிருந்தேன்....என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்....நடமாடும் பொம்மைகள்போல் விளையாடிக்கொண்டிருந்த வெள்ளையினக் குழந்தைகளின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தபடி பொன்னிறத்தில் அமைந்த அந்த அற்புதமான மாலைப்பொழுதை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது விளையாட்டில் தன்னைமறந்த குழந்தை ஒன்று திடீரெனத் தவறி அங்கிருந்த சிமெண்ட் நிலத்தில் விழுந்துவிட்டது.காலில் சிறிதாக அடிபட்டுவிட்ட…

  24. அச்சக் காடு - கிருஷ்ணா டாவின்ஸி கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது. படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில்…

  25. கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்தமடத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர். கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட புத்தமடத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கிழவரிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்குப் பைத்தியமா? தெய்வத்தையே எரித்து விட்டீர்களே” என்று கோபத்தில் கதறினார். உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது, அக்கிழவர் சொன்னார், ''நான் எலும்புகளைத் தேடுகிறேன். நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண…

    • 0 replies
    • 728 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.