Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 01 மார்கழிப் பனிக்குளிரின் சில்லிட்ட இளங்காலைத் தென்றல் உடலைத் தழுவிய போதும், ஜெயந்தாவின் மனதைப் போலவே அவளின் உடலும் உஷ்ணமாகவே இருந்தது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயந்தா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினாள். உடல் தன்போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடி இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. காலைத் தாமரை மலர் போல எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் ஜெயந்தாவின் முகம் மாலைத் தாமரையாய் வெம்பி வாடி இருந்தது. இவள் கண்களிலும், இதழ்களிலும் எப்போதும் விளையாடும் குறும்புச் சிரிப்பு சென்ற இடம் தெரியவில்லை. அந்த வாட்டத்திலும் அவள் பேரழகு கண்ணைப் பறித்தது. சுற்றுப் புறத்தை மறந்து உதட்டை அர…

  2. “சேர் உதால போகலாமோ” என நான் கேட்க, ம், ம் போங்க போங்க என அந்த ஆமிக்காரன்; கூறினான். நானும் நண்பனும் மோட்டார் சைக்கிளில் வெள்ளந்தியாய் சிரித்தபடி , “தாங்கியூ சேர்” என்று கூறியபடி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நோக்கி விரைகின்றோம். யாழ். இந்து மைதானத்தை நெருங்கும்போது மைதானத்தில் ஒரே கூட்டம். வழமையாகப் பூட்டிக் கிடக்கும் மைதானத்து வைரவர் கோவில் கேற்றுக்கள் திறந்து விடப்பட்டிருந்தன. உள்ளே ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சகிதம் நிறைய பேர் கவலை தோய்ந்த முகத்துடன் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்குது என்று, நானும் நண்பனும் மின்னல் நேரத்தில் மோட்டார் சைக்கிளை நீராவியடி பிள்ளையார் கோவிலடி வீதிக்கு திருப்பினோம். சந்திய…

  3. உயர்ந்து பரந்து விரிந்து காட்சியளித்த அந்த பிரமாண்டமான கட்டிடத்தை எனது கார் நெருங்கியது. நெருங்க நெருங்க என் மனமும் நொறுங்க ஆரம்பித்தது.வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு 200 மீற்றர் தூரத்தில் காட்சியளித்த அந்த வெள்ளைக்கட்டிடத்தின் நுழை வாயிலை அண்மித்தேன்...உள்ளே கடமையில் இருந்தவர்கள் கதவினைத்திறப்பதற்காக பொத்தானை அழுத்தியதும் அந்தக்கண்ணாடி கதவு மெதுவாக திறந்து கொண்டது.மெதுவாக எனது கால்களை உள்ளே வைத்து பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.கடமையில் உள்ளவர்கள் விபரத்தை கேட்டார்கள்.கூறினேன். அவர்கள் கையில் வைத்திருந்த பத்திரத்தில் பெயரைத்தேடி குறிப்பிட்டபின் எனது கடவுச்சீட்டை வாங்கினர். அதன் பின் என்னிடம் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சிறிய அலுமாரி…

    • 38 replies
    • 3.2k views
  4. வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும். இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள். எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்…

    • 37 replies
    • 4.9k views
  5. தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என…

  6. Started by shanthy,

    இது கதையில்லை அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார். உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....? வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத…

    • 6 replies
    • 1.3k views
  7. "மறுபடியும் இந்தத் தடவை யாரைக் கெடுக்கிறாய்?" தோளின் பின்னாலிருந்து சுவாமிநாதனின் குரல் கேட்டதும், விசு பேனாவை மேஜை மீது வைத்துவிட்டான். இனி அவன் இருக்கும் வரை எழுத ஓடாது. "புதுப் பறவையா?" சுவாமிநாதன் கேட்டான். விசு சிரித்தான். சுவாமிநாதனைப் பார்த்தால் அவனுக்குச் சிரிப்பு வரும். இயலாமையை நல்லதனம் என்று நினைத்துக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்பவர்கள். சுவாமிநாதன் நல்லவன். சிகரெட் பிடிக்கமாட்டான். சீட்டாட மாட்டான். முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு பாடத்தை சிரத்தையாகக் கேட்பான். பெண்களின் நிழல் கூடப் பிடிக்காது. அவனைக் கண்டால் விசுவுக்கு பாவமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் விசு என்றால் சுவாமி நாதனுக்கும் இரக்கம்தான். " பெண்களுக்கே இல்லாத …

  8. அசோகன் மாமாவை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று நீண்ட நேரமாக கீ போர்ட்டுக்கு முன்னால் இருந்து சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்,இப்படி அறிமுகப்படுத்துவது தான் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்,"ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பம் ஆதர்சனமாக , முன்னோடியாக , வழிகாட்டியாக இருக்கும் அப்படி எங்களின் குடும்பத்துக்கு இருந்தவர்கள் தான் "நடராஜா" மாமா குடும்பம்,மாமா என்றால் எனக்கு மாமா அல்ல,எனது அப்பாவிற்கு மாமா,சரியாகச் சொன்னால் எனது அப்பம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் நடராஜா,எங்களுடைய குடும்பம் நடராஜா மாமா குடும்பத்தை முன்னோடியாக , ரோல் மாடல் ஆக எடுத்து முன்னேறியவர்கள் என்பதில் எந்த விதமான மிகைப் படுத்தல்களும் இல்லை,நடராஜா மாமாவின் மூத்த மகன் தான் இந்தக் கதையின் …

  9. நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான். அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....! நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;. இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு. எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக…

    • 9 replies
    • 1.9k views
  10. [21] அஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது. அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான். எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது. உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது. தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான். 'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்... "நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன். வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மா…

    • 9 replies
    • 2.8k views
  11. 1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டா வெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இ…

  12. விரும்பிக் கேட்டவள் எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : எஸ்.இளையராஜா ''அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா...'' என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டு இருந்தான். ஸ்ரீனிவாஸோடு பொருந்தவில்லை என்றபோதும், அந்த இளைஞன் பாடலை அனுபவித்துப் பாடுகிறான் என்பது புரிந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பாடலைக் கேட்கும்போதும் மனம் கனத்துவிடுகிறது. பல நேரங்களில் என்னை மீறி நான் அழுதுவிடுவதும் உண்டு. 'சினிமா பாட்டைக் கேட்டு யாராவ…

  13. பூதக்கண்ணாடி ஜே.பி. சாணக்யா ஓவியங்கள்: அனந்தபத்மநாபன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு …

    • 2 replies
    • 980 views
  14. இது முற்று முழுதாக ஒரு அரசியல் தொடர் அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்-1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந…

  15. வெங்கடேசன் இருக்காரா?’ “இன்னும் ஆபீசிலிருந்தே வரலியே! உள்ளே வாங்க!” என்று என்னை வரவேற்றாள் வெங்கடேசனின் மனைவி. “பரவாயில்லை. நான் அப்புறம் வரேன். போன வாரம் நான் வந்துட்டுப் போனதை சொன்னீங்களா?” “சொன்னேன். எப்படியும் இந்த மாதக் கடைசிகுள்ளே குடுத்துடறேன்னு சொல்லச் சொன்னாங்க. உங்க மனேஜர் கிட்ட சொல்லி நீங்கதான் எப்படியாவது கொஞ்சம் போருத்துக்கச் சொல்லணும்.” “அவரு நம்ப மாட்டாரு. இதோட நீங்களும் பத்துப் பதினைஞ்சு தடவைக்கு மேல் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.” “இல்லை. இந்த தடவை மட்டும் எப்படியும் நிச்சயம் குடுத்துடுவார். இப்ப ஒரு இடத்தில் டேம்பரரியா வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தயவு செய்து போருத்துக்கச் சொல்லுங்க.” நான் தெருவில் இறங்கி நடந்தேன். வெங்கடேசனின் மனைவியை …

    • 10 replies
    • 2.2k views
  16. “படிச்ச மனோ வந்து நிற்கின்றான் ,இரவு மாக்கூசுக்கு வா” கதைத்த வேறொன்றும் நினைவில்லை படிச்ச மனோ என்ற சொல்லை தவிர. எட்டாம் வகுப்பில் இருந்து A/L வரை என்னோட படிச்சவன் இந்த படித்த மனோ. எவருக்கும் அடங்காத ஆனால் மிக ஆழுமையுள்ள ஒரு பிறப்பு.முதலாம் பிள்ளை என்பது O/L வரை அவனுக்கான இடம்.அதை இன்று உலகம் பூராக இருக்கும் யாழ் இந்து டாக்குத்தர்களோ,எஞ்சினியர்களோ எத்தனையோ பகீரத பிராயத்தனம் பண்ணியும் அந்த அவனுக்கான இடத்தை மாற்ற முடியவில்லை. ஒரு போல் பொயின்ற் பென், ஒரு கொப்பி, வாராத தலைமயிர், காக்கிகாற்சட்டை, பட்டன் பூட்டத சேட் இதுதான் அவனின் அடையாளம். இரண்டு மனோக்கள் எங்கள் செற்றில் இருந்ததால் நல்லா படிக்கும் இவன் படித்த மனோ .மற்றது மொக்கு மனோ .படிப்பிற்கும் இவனுக்கும் வெகுதூரம்,வீட்ட…

    • 20 replies
    • 3.4k views
  17. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா . யாழ் எஸ். பாஸ்கர். அவுஸ்திரேலியாவில் 12 ஆவது எழுத்தாளர் விழா கடந்த 13.05.2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேணில். பிறஸ்ரன் நகர மண்டபத்தில், திருவள்ளுவர் அரங்கில், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படவிருந்த விழா சீரற்ற காலநிலை காரணமாக 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடைவேளையின்றித் தொடர்ந்து நடைபெற்றது. இடையே பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், விழா முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டன. ஓவியர் ஞானம், கலைவளன் சிசு நாகேந்திரம்…

    • 0 replies
    • 887 views
  18. [17] போனை வைத்துவிட்டு உட்கார்ந்தவனின் நெஞ்சம்.... இப்பொழுது மிகவும் கலங்க ஆரம்பித்தது. அவளுக்கு வீஸா கிடைத்ததை அறிந்ததும்... இன்னும் சில நாட்களில் அஞ்சலி தன்னை விட்டு தூரமாக பிரிந்து செல்லப் போகின்றாள் என்பதனை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல் எண்ணங்கள் அல்லாடியது. "போக வேண்டாம் என்று சொல்லுவமோ..." என்றுகூட ஒருகணம் யோசித்துவிட்டு, "இல்லையில்லை... அவள் படிக்கட்டும்....! என்ர சின்னத்தனமான ஆசைக்காக அவளின்ர படிப்பைக் குழப்பக் கூடாது" என முடிவெடுத்தவனால்... அவளின் பிரிவினைத் தாங்கும் மனநிலைக்கு இலகுவில் வர முடியாமல்.... தவித்தான். அவனிற்கு அப்போது தேவைப்பட்டது 'தனிமை' ஒன்றுதான். சற்று நேரத்துக்கு எங்கேயாவதுபோய் தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்ப…

    • 56 replies
    • 11.8k views
  19. எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் …

  20. அம்மாளாச்சி.. என்ர மகளுக்கு கெதியா விசா கிடைக்கச் செய்..! அவளுக்கு இப்ப கலியாணப் பலனாம்.. நல்ல மாப்பிள்ளை கிடைக்கச் செய் தாயே. அப்படி செய்திட்டி எண்டா.. உனக்கு வடை மாலையும் சாத்தி, அடுத்த முறை அவள் டென்மார்க்கில இருந்து காசனுப்பினா தங்கத்தில ஒரு பொட்டும் செய்து தாறன். என்ர அம்மாளாச்சியெல்லே..! ஒரு முறை விழுந்து கும்பிடுற தெய்வத்தை.. வாசலுக்கு வாசல் விழுந்து கும்பிட்டுக் கொண்டு.. மீனாட்சியம்மா.. தன்ர குடும்பக் கடவுளான அம்மாளாச்சியிடம் வைச்ச வேண்டுதலை கோவிலில் இருந்து வீதி வரைக்கும் உச்சரிச்சுக் கொண்டே.. வீட்டை நோக்கி நடக்கலானா..! வீட்ட போனவா.. கேற்றடியில கிடந்த லெற்றரை எடுத்து.. விலாசத்தைப் பார்த்தா. மகள் டென்மார்க்கில இருந்து எழுதி இருந்ததால.. பெரிய எதிர்ப்பார்ப…

  21. [13] 'துவாரகா'...... இவனது நல்லதொரு சிநேகிதி. அவன் கொழும்பு வந்த காலத்திலிருந்துதான்... அவனுக்கும் விமலுக்கும் துவாரகா அறிமுகமாகியிருந்தாள். அவளது துடுக்குத்தனமான பேச்சும் , சில வேளைகளில் 'ஆம்பிளைப் பெடியள்' போல அவள் செய்யும் குறும்புகளும்.... துவாரகாவை ஒரு "பெண் சிநேகிதி" என்று வேறுபடுத்தி நினைக்காத அளவுக்கு அவர்களுக்குள் ஒரு எண்ணத்தினை ஏற்படுத்தியிருந்தது. "அடியே... நீ ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திருக்க வேண்டியனி.!!! தப்பித் தவறி... பெட்டையாய்ப் பிறந்திட்டாய்" என்று சொல்லுவான். கொஞ்சம் குண்டாக இருப்பாள். அதனாலோ என்னவோ நல்லா சாப்பிடுவாள். அவளது தாய் தந்தை இருவருமே வாய்பேச இயலாதவர்கள். ஒரே ஒரு அண்ணா. அவர் அப்பொழுது ஒரு பிரபலமான தனியார் தமிழ் வானொலியில் …

    • 46 replies
    • 9.1k views
  22. ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்…

    • 3 replies
    • 4.7k views
  23. கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். எம்.கே.முருகானந்தன் என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதை…

  24. இது வெறும் நகைச்சுவைக்காகவே என்னால் எழுதப்பட்டது . உள்நோக்கங்கள் எதுவும் இதில் இல்லை . நேசமுடன் கோமகன் ************************************************************************************************************************* நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா , நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு . நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன் . விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா . நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது . அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன் . எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.