வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
இராவணனுக்கும் வரலாறு இருக்கு.. வாசுதேவன் நாயர் விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமான கட்டுரை: பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும் நான் அப்பவே படிச்சுட்டேன். எட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிரச்சுரம் ஆச்சு. எல்லோரும் ஆச்சர்யமாக பாத்தாங்க. விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமி…
-
- 3 replies
- 2.6k views
-
-
மாலதி மைத்ரி வல்லினம்.காமில் வெளிவந்த என்னுடைய கேள்வி-பதில் தொடரில் நான் தெரிவித்திருந்த ஒரு கருத்துக்கு லீனா மணிமேலையின் எதிர்வினை அடுத்து வந்த இதழில் வெளியிடப்பட்டது. அதற்கான மறுப்பை நான் எழுத இருந்த நேரத்தில் வல்லினம்.காம் வெளிவராத நிலை ஏற்பட்டது. அதனால் எனது எதிர்வினை இங்கு பதிவு செய்யப்படுகிறது. வல்லினம் இதழில் வெளிவந்த கேள்வியும் பதிலும். கேள்வி சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள் ? பதில் லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களை…
-
- 1 reply
- 1.5k views
-
-
“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” -திருமாவளவன் நேர்காணல் & எழுத்து: கருணாகரன் இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெ…
-
- 1 reply
- 2.1k views
-
-
சிட்னிக்கு தனது நான்கு வயதில் புலம் பெயர்ந்தவர் செல்வி உமா புவனேந்திரராஜா. இவருக்கு 16 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோய் காரணமாக இவரது பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. நோயின் காரணத்தினை வைத்தியர்களினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் தனது கல்வியை தொடர்ந்து படித்து பட்டதாரியானார். சிலவருடங்களின் பின்பு முல்லைத்தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக மனிதாபிமானம் உள்ள புலம் பெயர் வாழ் தமிழர்கள் வன்னி சென்றார்கள். இவர்களைப் போல வன்னி சென்ற உமா, அங்கங்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள், காது கேட்காதவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வன்னியிலே தங்கிவிட்டார். அவர்களுக்கு கல்வி, கணணி கற்பித்தார். வன்னியில் ம…
-
- 19 replies
- 3.1k views
-
-
? உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன? நான் பேர்னாட்ஷோவின் ரசிகன். உலகில் மிக முக்கியமான மூவரைச் சொல்லுங்கள் என அவரை ஒரு நிருபர்; கேட்டார். 'முதலாவது சேர்;ச்சில், இரண்டாவது ஸ்டாலின், மூன்றாமவர் பேரைச் சொல்லத் தன்னடக்கம் தடுக்கிறது' என ஷோ கூறினார். ? நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்? இது எதிர்மறையான கேள்வி. இளம் வயதில் அரச சேவையில் - மேலதிகாரிகளோடு முரண்பட்டிருக்கிறேன். வயதாக ஆக முரண்படாமல் இணக்கமாக சமூகத்தில் பழகக் கற்றிருக்கிறேன். ? இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? மஹாகவியும் முருகையனும் செய்த „கவிதைச் சமர்... நினைவில் நிற்கிறது. „மார்க்ஸுன் கல்லறையிலிருந்து ஒரு குரல்... என்று வெங்கட் சாமிநாதன் எழுத…
-
- 1 reply
- 917 views
-
-
மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது. 1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. நோர்மா டொகேர்ட்டி, யாங்…
-
- 6 replies
- 2.7k views
-
-
சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. துயிரில் இருந்து மீண்டெழுந்து புதிய வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் அல்லது தொலைந்த வாழ்வைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற முன்னோக்குதத்துவம் ஏற்புடைய ஒன்றே. ஆனால், எமக்காக எமது பெயரால் நடப்பவற்றை எல்லாம் நன்மையானவை என்று பேசாது ஏமாளிகளாக இருந்து விடமுடியாது. உள்ளூர் கொண்டாட்டங்கள், தேசியக் கொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார். ''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' ''ரொம்பச் சோர்வாக இருக…
-
- 4 replies
- 816 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.[/size] [size=4]எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.[/size] [size=4]அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதி…
-
- 0 replies
- 852 views
-
-
சூரியோதயத்தின் அழகான விடிவைப்போல் தமிழரின் வாழ்வும் ஓர் நாள் அழகாய் விடியும். இந்த உதயத்தின் போது வெளியான நிறங்களாக எம் தேசியக்கொடி வானில் பறக்கும்.
-
- 0 replies
- 862 views
-
-
போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன். சுமதிரூபனின் இயக்கத்தில் மேடையேறப் போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன். வழமையான தமிழ் நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ). அணங்கு அடையாளம் 1 தோற்ற மயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார். ஒளி சத்தியசீலன். ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி. மேடை உதவி ஈஸ்வரி. நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அற…
-
- 2 replies
- 2.4k views
-
-
வணக்கம் என் நண்பர்களே எமக்கு கிடைத்த முத்துக்களை பற்றி பத்மலிங்கம் ஒரு அருமையான கர்நாடகா சங்கீத முத்து புத்தூரில் பிறந்து எங்களுக்கு பெருமையை தந்த உன்னதமான ஒரு சொத்து http://www.youtube.com/watch?v=1Sts_4UnJxE நன்றி முகனூல்
-
- 0 replies
- 648 views
-
-
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்! வாலி பிறந்த நாள்: 29 அக்டோபர், 1931 கோடிக் கணக்கான மக்களின் உணர்வுக் கடலில் கரைந்துகொண்டே தனது தனித்துவ ஆற்றலையும் தக்கவைத்துக்கொண்டவர் வாலி. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல், வரலாறு, பாலியல், சமய நம்பிக்கைகள் என்ற அனைத்து உணர்வுகளும் பொழுது போக்கு வடிவமான சினிமாவுடன் பின்னிப் பிணைந்தவை. இயல்பான பாலியல் வேட்கைகள்கூடத் தொடர்ந்து ஒடுக்கப்படும் நம் சமூகம், தனது ரகசிய ஆசைகளைத் தொடர்ந்து சினிமா வழியாகவே தீர்த்துக்கொள்கிறது. சாதாரண ஆண்-பெண் நட்புக்கும், காதல் உறவுகளுக்கும் தடைவிதிக்கும் தமிழகம்தான் 24 மணிநேரமும் ஊடகங்கள், நவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் வழியாகப் பாலுறவைக் கனவு கண்டுகொண்டே இருக்கிறது. வழிபாடு, வன்ம…
-
- 0 replies
- 711 views
-
-
அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே. மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணனிக் காலம்வரைக்கும் சு…
-
- 16 replies
- 4.3k views
-
-
தமிழ் திரை இசை நூலகம் திரு.B.H.அப்துல் ஹமீது அவர்கள் நெகிழ்ச்சியான நினைவுகள்
-
- 0 replies
- 568 views
-
-
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர் - வர்ணகுலசிங்கம் மாஸ்ரர்என்றபெயர் மிக இளவயதிலிருந்தேஎனக்குப் பரிச்சயமானது. எனது சகோதரிகள் இருவர் இசைக் கலைஞர்களாகவும், எனதுதந்தையார் இசைஆர்வலராகவும் இருந்தமை இந்தவாய்ப்பைத் தந்திருக்கின்றது. ந. சண்முகரத்தினம் மாஸ்ரர், திலகநாயகம் போல் மாஸ்ரர், பொன் புஸ்பரத்தினம் அவர்கள், ச. சண்முகராகவன் அவர்கள் எனதலை சிறந்த இசைக் கலைஞர்கள் வகுப்பெடுப்பதும்;, இசைச் கச்சேரிகளுக்கென பயிற்சிகள் நடப்பதும் எனது வீட்டுச் சூழல். மிருதங்கவித்துவான் இ. பாக்கியநாதன் அவர்களிடம் எனதுசகோதரன் மிருதங்கம் பழகியமை, சர்வேசரசர்மா அவர்களது வீட்டில் வருடாவருடம் நிகழும் நவராத்திரி இசைக் கச்சேரிகள், இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல்கள் என இ…
-
- 0 replies
- 816 views
-
-
உங்கள் கலை ஆர்வம் இந்தியக் கலை, கலைஞர்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. சிவாஜி (நடிகரல்ல - படம்), விவேக், அஜித் (தலயாம்) என்று சொல் அபிசேகங்கள் பக்கம் பக்கமாக செய்கிறீர்கள். அரட்டை அடிக்கிறீர்கள். பரவாயில்லை. எங்கள் கலைஞர்கள் பக்கமும் சற்று கடைக்கண் பாருங்கள். அவர்கள் பற்றி, அவர்கள் படைப்புக்கள் பற்றிய குறிப்புகள் இட்டால் திரும்பியே பார்க்காதவர்கள் அனேகர். அவர்கள் படைப்புகளை இணைப்புகள் இட்டால் மாத்திரம் சந்தோசம் அடைகிறீர்கள். படலைக்கு படலை டிவிடி வந்தது. இணைப்பு தரமுடியுமா என்று கேட்கிறீர்கள் வெட்கம் . காதல் மொழி இணைப்பு தந்தால் தான் கேட்பீர்கள். என்ன.? கோடிகள் பெறுபவர்களுக்கு தொடர்ந்தும் கோடிகள் சேர்க்க வழி பார்க்கிறீர்கள். நம்மவர்களுக்கு 10 டொலர். 10 ஈரோ கொடுத்தால் க…
-
- 42 replies
- 8.8k views
-
-
தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி - லெ.முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் 'மல்லிகை' இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான 'சுமையின் பங்காளிகள்' என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் 'பறவைகள்' நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவம் நம் சமுதாயத்தில் எத்தனை பேருக்குண்டு? (கேஷாயினி எட்மண்ட், மீரா, இலங்கை) இலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்கிளப்பைச் சேர்ந்த கேஷாயினி எட்மண்ட் "மீரா" என்ற புனைபெயரில் தமிழ் இலக்கியவெளியில் அறிமுகமானவர். , யங் ஏசியா ஊடகநிறுவனத்தில் தயாரிப்பாளராக பணியாற்றிய மீரா தற்போது பெண்ணியம் இணையத்தின் ஆசிரியர்களுள் ஒருவராகவும், சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். திரைப்பட மற்றும் ஊடக கல்லூரியில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள மீரா பல்கலைக்கழகத்தில் கட்டடப்பொறியியல் மாணவியாக கல்விகற்று வருகின்றார். இசை , கவிதை எழுதுதல் சமூக நோக்கு ,ஊடகம் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் பன்முக ஆற்றல் உள்…
-
- 1 reply
- 1k views
-
-
கலைஞனைப் புரிந்துகொள்ளல் May 2, 2014 at 10:22pm ஜா. தீபாவின் மொழிபெயர்ப்பில், உலகத் திரைப்படநெறியாளர் பதினைந்து பேரின் நேர்காணல்களைக் கொண்டதான மேதைகளின் குரல்கள் நூலிலிருந்து, நெறியாளர் ஐவரின் கருத்துகளின் சில பகுதிகளை இங்கு தருகிறேன். படைப்பாளிகளின் நேர்காணல்களை நான் எப்போதும் விருப்பத்துடன்படிப்பது வழக்கம்; அவர்களின் கருத்துலகையும், படைப்புச் செயற்பாடையும் புரிந்துகொள்வதற்குத் துணை செய்பவை அவை! சத்யஜித் ரே (இந்தியா). 1. உங்கள் படத்தின் பெண் கதாபாத்திரங்கள்வலுவானவர்களாக இருக்கின்றனர். வங்காளத்தினுடைய சமூக வரலாற்றின் பாதிப்பா இது? · நான் எந்தக் கதையைப் படமாக எடுக்கிறேனோ அந்தப்படத்தின் எழுத்தாளரின் ‘பார்வை’யைத்தான் ந…
-
- 0 replies
- 691 views
-
-
ஒன்டாரியோவை சேர்ந்த டினு நேசன் புதன்கிழைமை பிரமாதமாக ஆடி முதல்பரிசை வென்றவர் வியாழன் முன்றாவது இடத்திற்கு போய்விட்டார் .லண்டனில் பிறந்த தான் பிரச்சனை காரணமாக இதுவரை இலங்கை செல்லவில்லை அங்கு ஒரு முறை போகவேண்டும் என்றும் சொன்னார் . ஈழத்தமிழருக்கு பெருமை தேடித்தந்த நேசனுக்கு வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
கதா காலட்சேபம், பாவைக் கூத்து, வில்லுப் பாட்டு என உழன்ற தமிழர்களுக்கு 1950க்குபின் பிறந்த அனைவருக்கும் நாடக, திரைப்பட கதாநாயகர்களே முதலில் தங்கள் கனவுகளின் பிரதியாக பரிணமித்தார்களெனலாம். அவ்வாறு அன்றும்,இன்றும் தமிழ்ப் படங்களில் நம் மனம் கவர்ந்த அனைத்து கலைஞர்களை சற்றே நினைவு கூறும் விதமாக, அவர்களைப் பற்றி தெரிந்த விடயங்களை இங்கே பகிரலாம் என எண்ணுகிறேன். யாழ் உறவுகளும், ஈழக் கலைஞர்கள் பற்றியும் பதிந்தால் சுவாரசியமாக இருக்கும். டிஸ்கி : யாழில் கிழடுகள்(???) அட்டகாசம் அதிகமாபோச்சுது என எண்ணும் இக்கால இளசுகள் இத்திரியை தவிர்ப்பது நலம். முதலில் என் மனம் கவர்ந்த கலைஞர்... எஸ்.வி.ரங்காராவ் B.Sc. தன் வாழ்நாளில் முதுமையை பார்த்தறியாத ஒருவர் திரைப்…
-
- 36 replies
- 12.6k views
-
-
எனது வேசித் தொழிலில் ஒரு ஆணுடைய பணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இரண்டாவது ஆணினுடையதை ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா. மீறினால் என்னை நிர்வாணமாக நிறுத்தி கொல்வார்கள் ஐயா. மேலும் கேடு கெட்டவர்களோடு நான் உடனுறைந்தால் சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா. மாட்டேன், முடியாது. உங்களை அறிந்த பிறகு அதைச் செய்ய மாட்டேன். கட்டுகளற்ற சிவனே, என் சொல் உண்டு. கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் மிச்சமிருப்பது இந்த ஒரு கவிதை மட்டுமே. பெரும்பாலான காலகட்டங்களில் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளாக வேண்டியிருந்த பெண்களுக்கு பக்தியும், பக்தியின்பாற்பட்ட காதலுமே சுதந்…
-
- 0 replies
- 708 views
-
-
சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம் தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தப்பட்டவர்கள் என்று என்னதான் பொருள் இருந்தாலும் நடைமுறையில் இந்திய சமூகத்தில் உணர்வு மட்டத்திலே தலித் அடையாளம் ஒருவருக்கு என்றைக்கும் உவப்பான அல்லது உயர்வைத் தருகிற ஓர் அடையாளம் அல்ல. சாதி இந்துக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சொல்லப்போனால் கூடுதல் திறனுடன் (முதலாளித்துவ கல்வியில் தொடங்கி அனைத்து துறைகளிலும்) இருந்தும், தலித் என்பதற்காகவே ஒடுக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோம் என்றால் அது புராண காலத்து சம்புகனில் தொடங்கி, நந்தன், அம்பேத்கர் தொடர்ச்சியாக தடகள வீராங்கனை சாந்தி வரை மிக நீண்டதாக அனைத்து தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். சாதி அடையாளம் ஆதிக்க சாதிய…
-
- 10 replies
- 2.1k views
-
-
“தமிழ்ப் பாரம்பரியம் பேசுபவர்கள் கடைசியில் சாதியெனும் கழனிப்பானையில் கையை விடுவதைத்தான் நாம் பார்க்கமுடிகிறது” - பிரளயன் நேர்காணல் & எழுத்து: ம. நவீன் சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்டவர், பிரளயனாக அறியப்பட்டது வானம்பாடி இயக்கத்தின் தொடர்பறாத நீட்சியினால்தான். மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முயற்சிக்குப் பயிற்சி வழங்கவே தமிழகத்திலிருந்து குறுகியகால வருகையளித்திருந்தார் பிரளயன். அந்தக் குறுகியகால நட்பில் அவரது தத்துவக்கூர்மையையும் வரலாற்று அறிவையும் ஆய்வுத்தெளிவையும் அறிய முடிந்தது. பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணைஇயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தா…
-
- 1 reply
- 6k views
-