எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்…
-
- 4 replies
- 1.4k views
-
-
கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும். July 22, 2019 தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில் ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே அகதிகளாக வாழ வைத்த கொடுமையும் அவ்வாண்டில் நடைபெற்றன . சுமார் 3,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 1983 கலவரத்த்திற்கு முன்னதாக. சிறுபான்மை இன மக்களுக்கு நடந்த துயரத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் …
-
- 1 reply
- 1.5k views
-
-
மனங்களைவிட்டு நீங்காத திருமலை படுகொலைகள் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார். வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 7 replies
- 2.1k views
-
-
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 01 April 5, 2018 பீஷ்மர் விடுதலைப்புலிகள் அமைப்பு யுத்தத்தில் தோல்வியடைந்ததை இன்னும் ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாதவர்கள் பலருள்ளனர். காரணம்- புலிகள் அவ்வளவு பலத்துடன் இருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வியடைவார்கள் என யாரும் கற்பனையே செய்திருக்கமாட்டார்கள். விடுதலைப்புலிகள் ஏன் யுத்தத்தில் தோல்வியடைந்தார்கள்? இந்த கேள்விக்கு இன்றுவரை பலரிற்கு விடை தெரியாது. யுத்தத்தின் கடைசிக்கணங்கள் எப்படியிருந்தன? விடுதலைப்புலிகள் எங்கே சறுக்கினார்கள்? யுத்தத்தை புலிகளின் தலைமை எப்படி அணுகியது? ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை? நெருக்கடியான சமயங்களில் புலிகளின் தலைமைக்குள் நடந்த சம்பவங்கள் என்ன? பெரும்பாலானவர்களிற்கு மர்…
-
- 315 replies
- 78k views
- 3 followers
-
-
மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.! Last updated Jun 11, 2019 “இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரி…
-
- 6 replies
- 2.7k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது. கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன. …
-
- 5 replies
- 2.9k views
-
-
மே 18 - 2019 காட்சிகளும் படங்களும் கருத்துக்களும்
-
- 7 replies
- 3.5k views
-
-
தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம் நான்கு தசாப்தங்கள் கழிந்துவிட்டன. சரியாகச் சொல்வதானால் யாழ்.நூலகம் எரித்தழிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழர்களின் கலாசார தலைநகராகிய யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீச்சுவாலையில் கலாசார, கல்வி, பண்பாட்டு ரீதியான இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த வன்முறையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்பாக தமிழ் மக்கள் மனங்களில் இன் னும் கனன்று கொண்டிருக்கின்றது. மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற தருணம் அது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதை எப்படியாவது தடுத்து, குறைந்தது ஒரு ஆசனத்தையாவது…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று ! தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை அதன் அறிவுத்தடங்களை அதன் சரித்திரத்தை அழிக்கவேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்டுகின்றன. அப்படித்தான் இலங்கையின் யாழ்ப்பாண நூலகமும் எரித்து அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் 31.05.1981- 01.06.1981 யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்த…
-
- 11 replies
- 3.4k views
-
-
யாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு..! யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்த போது சாட்சியமாக இருந்த முதன்மை நூலகர் ரூபா நடராஜா தமது அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் கலாசார அடையாளமான தொன்மையின் சின்னமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம் அது.1933-ம் ஆண்டு முதல் மெது மெதுவாக உருவாக்கப்பட்டு தென்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
, கோகுலரமணி கணேஸ் - கிண்ணியா, திருகோணமலையில் சிங்கள பௌத்த பிக்குகளின் அடாவடித்தனைத்தை எதிர்க்கும் திருகோணமலை சைவர்கள் மூன்று மொழிகளிலும் கதைத்து பிக்குகளை எதிர்க்கும் தமிழ் பெண்
-
- 0 replies
- 1.4k views
-
-
ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை Maatram Translation on May 29, 2019 பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின் ஒரு பாகமாகியுள்ளது. ஆனால், 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைச் சம்பவங்கள் இன்னமும் அவ்வாறு உலக மக்களின் கூட்டு நினைவில் ஒரு பாகமாக உள்ளடக்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தினம் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்…
-
- 0 replies
- 559 views
-
-
-
பத்தாண்டுகள் கடந்து திரும்பிப் பார்க்கின்றோம்...! பத்தாண்டுகளின் பின்னரும் இனவழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றமில்லாத நிலையை அவதானிக்கிறோம் என்கிறார் நினைவேந்தல் கூட்டமைப்பின் இணைத்தலைவரான வண.அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் LAKRUWAN WANNIARACHCHI (கோப்புப்படம்) (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது பகுதி இது.) இன்று மே 18. இது வெறும் தேதி மட்டுமல்ல. தாய் - தந்தையை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினரை, உயிர் நண்பர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தேதி. ஆம், இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009…
-
- 0 replies
- 929 views
-
-
2015இல் வெளிவந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த அவலங்களையும், இன அழிப்பின் பின்பான நிலவரங்களையும் விபரமாக எடுத்துக்காட்டும் ஒரு ஆவணப்படம்
-
- 0 replies
- 650 views
-
-
பிபிசி செய்திகள் எப்போதும் ஆளும் வர்க்கம் சார்பாகவே இருக்கும். நேற்று ஒரு நேயர் உள்ளூர் பிபிசி வானொலியில் அதை நன்றாக வறுத்தெடுத்தார், வடக்கு ஐயர்லாந்த் சம்பந்தமாக . சேனல் 4 தான் எமது முள்ளிவாய்க்கால் இன அழிப்பை மட்டுமல்ல ஐயர்லாந்த் பிரச்னையையும் தெளிவாக உலகுக்கு எடுத்து சொன்னது என்று அறிந்தேன். முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு பிபிசி யின் பார்வை இந்த தயாரிப்பு https://www.bbc.co.uk/news/av/stories-48270851/civilians-trapped-between-sri-lanka-s-army-and-the-tamil-tigers
-
- 0 replies
- 1k views
-
-
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்” களியாட்டங்களைத் தவிர்ப்போம்! AdminMay 11, 2019 கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுக…
-
- 2 replies
- 1k views
-
-
மே 10, 1989 காலை 5:45 மணி. யாழ்ப்பாணம் இந்திய இராணுவமும் அதனோடிணைந்த ஒட்டுக் குழுக்களும் யாழ்ப்பாண மண்ணை ரத்தத்தால் தோய்த்தெடுத்துக் கொண்டிருந்த கொடிய காலங்களின் இன்னுமொரு நாள் புலர்ந்து கொண்டிருந்தது. அரங்கேற இருக்கும் இன்னுமொரு அநியாய படுகொலையின் கொடூரத்தை அறியாமலே யாழ்ப்பாணத்தின் கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. இருள் முற்றாக விலகாத அந்த அதிகாலை வேளையில், கோயில் வீதியில் அமைந்திருந்த அகிலனின் வீட்டின் முன்னால் இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுவான ஈபிக்காரன்களும் வந்திறங்குகிறார்கள். கோயில் வீதியில் இருந்த மேல் மாடி வீட்டில், மேல் வீட்டில் அகிலன் குடும்பமும், கீழ் வீட்டில் பரி யோவான் கல்லூரியின் கிரிக்க…
-
- 2 replies
- 2.6k views
-
-
“தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்புக்கு 43-வது அகவை! AdminMay 5, 2019 தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு இன்று 43-வது அகவையில் கால் பதிக்கிறது. “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற இயக்கத்தை தனது சிறந்த நெறிப்படுத்தலினாலும், அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் . சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீதும், தமிழர் வாழ்விடங்கள் மீதும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு அடித்தளம் இட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் த…
-
- 5 replies
- 2k views
-
-
“நாகவிகரையில்பூசை நடந்ததாம்ரூபவாகினி சொல்லிற்று..இனி என்ன?“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்! சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்,முனியப்பர் கோவில்முன்றலிலும் கட்டலாம்,பெருமாள் கோவில் தேரிலும்பிள்ளையார் கோவில்மதிலிலும் கட்டலாம்!எவர் போய் ஏனென்று கேட்பீர்?முற்ற வெளியில்“தினகரன் விழாவும்”காசிப்பிள்ளை அரங்கில்களியாட்ட விழாவும் நடைபெறலாம்!நாகவிகாரையிலிருந்துநயினாதீவுக்குபாதயத்திரை போகும்!பிரித் ஓதும் சத்தம்செம்மணி தாண்டிவந்துக…
-
- 3 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-