Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சித்திரை – வைகாசி மாதத்தின் உச்சிப்பொழுது. வவுனியா செட்டிக்குளம்பகுதியில் காட்டின் நடுவே...மரங்களை அழித்து, அவலங்களுடன் அலறியபடி வந்த மக்களை இராணுவம் முகாம்களுக்குள் அமுக்கிய காலப்பகுதி... மூத்த தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிய முகாம்களில் ஒன்று அது. நான்குபுறமும் பளபளக்கும் தகரக்கொட்டில். போதாததற்கு மேற்கூரையும் பளபளத்தது..கையில் கொண்டுவந்த சிறிய கைப்பையை வைத்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்தபோது, அவளிடம் உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது. அவள் தன் கையில் கிள்ளிக்கிள்ளிப் பார்த்தாள். கிள்ளும்போது வலித்ததால் தான் உயிருடன் இருப்பதை அவள் உறுதிப்படுத்திக்கொண்டாள்........ “வர விரும்பாத வரக்கூடாத இடத்திற்கு வந்தாயிற்று...இனி எக்கணமும் எதுவும் நடக்கலாம்....” என அவளின்…

    • 0 replies
    • 496 views
  2. சமீபத்தில் காணக்கிடைத்த தமிழ் மொழி தொடர்பான புத்தகம்......இதற்க்கு மேல் என்ன தேவை

  3. இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு புண்உமிழ் குருதி கீதா சுகுமாரன் கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில் அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி பிடி மண்ணுமற்றலையும் என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர் - சுஜந்தன் (அகதிமுகாம்) குருதியோடிய கூந்தலில் வீழ்ந்தொட்டின இலையான்கள் மண்ணுண்டு கிடந்தது கிழித்தெடுத்த முலைகள் கருகி யோனி குகை பிளந்து உளுத்திருந்தது எறும்படுக்க பார்த்தேன் - பா. அகிலன் எரிகணை பட்டுத் தெறிக்க, காயம்பட்ட இரண்டரைவயதுக் குழந்தையின் கைகளை மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன் இக்கணம் கடவுள் நீரற்ற விழிகளுடன் அலறும் தாய் ஒரு பிசாசு - சேரன் பிணக்குவியலில் தடுக்கி விழுந்தெழுந்து இறுகிய வி…

  4. இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், சிங்…

  5. படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 30 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏற…

  6. வி. தெட்சணாமூர்த்தி வி. தெட்சணாமூர்த்தி தவில் இசைவித்தகர் ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார். யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக…

    • 2 replies
    • 1k views
  7. இராணுவத்தால் சூழப்பட்ட கனகாம்பிகை அம்மன் ஆலய கிழக்கு வீதியை மட்டும் விடுவித்தால் போதுமா? வடக்கில் மக்களின் குடிநிலங்களில் மாத்திரமின்றி பொது இடங்கள் பலவற்றிலும் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். அதனால் பொது இடங்களின் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆதிக்கத்தை தளர்த்த முடியாத நிலைமை தொடர்கின்றது. கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் பெரும் படைத்தளங்களை அமைத்து குடியேறியுள்ளனர். இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பின் புறமாகவும் ஆலய வலது புறமாகவும் பாரிய பிரதேசங்கள் இராணுவமுகாமாக காணப்படுகின்றது. இந்த பகுதிகள் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு தேவையானவை. அன்னதான மடங்கள், நிகழ்வு மைதானங்கள் என்பவற்று…

  8. யாழ் தீவுகள் உருவான வரலாறு 23/11/2014 · by Info · in ஆய்வுகள் யாழ் தீவுகள்-thamil.co.ukயாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப…

  9. கொழும்பு மிரருக்காக ஜெரா “மயூரன், 85 ஆம் ஆண்டு, 6 ஆம் மாசம் 21 ஆம் திகதி பிறந்தவன். ஏழாம் ஆண்டோட பள்ளிக்கூடம் போகாமல் விட்டிட்டான். அவனுக்குப் படிக்கப் பிடிக்காமல் போயிற்று,” என்று தன் மகன் பற்றிய அறிமுகத்தைத் தருகின்றார் ரவீந்திரன் றோஸ்மலர் என்கிற 50 வயதுத் தாய். தம் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் அம்மாக்களில் றோஸ்மலர் ரவீந்திரனும் ஒருவர். இந்தப் பதிவுக்கான கதை தொடங்கும்போது அவர் பிரதேச வைத்தியசாலை ஒன்றின் நோயாளர் பிரிவில், நீண்ட வரிசையின் கடைசி நுனியில் இருக்கிறார். எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட இடத்தில்தான் தன் மகன் பற்றிய பேச்சைத் தொடங்கினார். வரிசையும் மெல்ல மெல்ல நகர அவரது மகன் பற்றிய கதையும் நகர்ந்தது. “சரி படிக்காட்டிலும், தொழில் ஏதும் தெரிஞ்சி க…

    • 0 replies
    • 446 views
  10. TRIBUTE TO SUNTHAR- KI.PI ARAVINDAN சக கவிஞன் கி.பி.அரவிந்தன் நினைவாக. - வ.ஐ.ச.ஜெயபாலன் என் இழமையில் இறந்த தோழர்கள் சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்தேன். * முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரரான போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள். தங்களுக்கு ஆகாதவகள் மரணங்களுக்கு எழுதிய அஞ்சலிகள் பற்றி எல்லாரும் வாசித்தோம் என்று பட்டும் படாமலும் அழுத்தமாகத் தெரிவிப்பார்கள். ஈழத்து போர்க்கள வாழ்வில் அஞ்சலி எப்பவும் எங்களை நிழல்போல தொடர்ந்ததல்லவா? * ஆனால் இப்ப என்னால் அஞ…

    • 1 reply
    • 577 views
  11. புத்தூர் ஆழ்கிணறுகள் நலத்தடைக் குகை அமைப்பு என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட உண்மையாகும். ஆனால் புத்தூர்க் கிணறு வரலாறு முழுவதுமே யாழ்மக்களை ஆச்சரியப்படுதியே வந்துள்ளது. புத்தூர்க் கிணறுகள் சார்ந்த நம்பிக்கைகள் தேடல்களை யாராவது பதிவு செய்யவேண்டும். புத்தூர் குகைக் கிணற்றுக்கும் கீரிமலை கேணிக்கும் தொடர்புள்ளது என்பது மிகப் பழைய நம்பிக்கையாகும். புத்தூர்க் கிணற்ரில் போடப்படும் எலுமிச்சம்பழம் கீரிமலையில் மிதக்கும் என்பார்கள். இது கிணற்றின் நிலத்தடிக் குகை அமைப்புப்பற்றிய தொன்மை விஞ்ஞான பூர்வமானது எனவே கருதுகிறேன். நமது அறிஞர்கள் புத்தகங்களில் இருந்தல்ல நமது தொன்மங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் தமது தேடலை ஆரம்பிக்க வேணும். யாழ்பாண வளற்ச்சிக்கு தனது கைப் பணத்தயு…

    • 6 replies
    • 1.8k views
  12. யாழ்ப்பாணக்குடாநாட்டு நிலத்தடி நீர்வளத்தை அவை மாசடையாத வரை மிsivachandran.Rகையான பாவனையால் அவை உவர்நீராக மாறாது இருக்கும்வரை பயன்படுத்த முடியும். இன்றைய யதார்த்த நிலை நாம் எதிர்பார்ப்பது போல் இல்லை. சிலர் வற்றாத நீர் ஊற்றான நிலாவரரைக் கிணற்றில் இருந்து குடாநாட்டிற்கு நீரைப் பெறலாமே எனக் கூறுகின்றார்கள். அரசியலில் செல்வாக்குப் பெற்று கொள்கை வகுப்பாளர்களாக உள்ளவர்கள் இவ்வாறு கருத்துச் சொல்லும் போது குடாநாட்டின் எதிர்கால நீர் விநியோகம் பற்றி அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. விஞ்ஞான முடிவுகளுக்கு அப்பாற்பட்ட பாரம்பரியக் கதைகளை நம்பி எதிர்காலத்திற்கான திட்டங்கள் தீட்டினால் எமது சந்ததியின் எதிர்காலம் என்னாவது? எனவே நிலாவரைக்கிணற்றின் உருவாக்கம் அதனுள் காணப்படும் நீர்வளம் பற்றி நாம…

    • 0 replies
    • 1.3k views
  13. புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தனுக்கு அஞ்சலி. கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்னும் இயற்பெயரை கொண்ட எழுத்தாளரும் போராளியுமான கி.பி. அரவிந்தன் மார்ச் 8 அன்று பாரீஸில் காலமானார். இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க நெடுந்தீவில் பிறந்த இவர், 62 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். ஆனால், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை 62 ஆண்டுகளிலேயே இவர் பெற்றுவிட்டார். அவர் வாழ்ந்த அன்றைய நாட்களில் ஈழத்துச் சூழல், ரத்தத்தை சிந்த வைத்து, ஆழ்ந்த அனுபவத்தைக் கற்றுத்தந்திருக்கிறது. அரசியல் அனுபவத்தை இலக்கிய அனுபவமாக மாற்ற, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது, லத்தீன் அமெரிக்கப் பெருவெளியில், இவ்வாறான தனித்துவங் களைக் காண முடியும். அரசியல் செயல்பாடு, இலக்கிய…

    • 12 replies
    • 5.1k views
  14. கொழும்பு மிரருக்காக ஜெரா நேற்றைய தினம் ஊடகம் பற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். நிகழ்வு தொடங்க நேரதாமதம் எடுத்ததால் நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பல வருட தோயல் கண்ட சுருங்கிய சேலை, கையில் ஒரு பொலித்தீன் பை மற்றும் பிடியற்ற, துணி கிழிந்த ஒரு குடையுடன் மெல்லிதான ஒரு தாய் எங்களைக் கடந்து முன்வரிசைக்கு சென்றார். அவர் கடந்ததும் எங்களுக்கிடையில் வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. அவர் குறித்தும் நாங்கள் அந்த இடத்தில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். குடை, பை மற்றும் அவர் அடங்கலாக கதிரையின் அரைப் பங்கு நிரப்பப்பட்டது. நுனிக்கதிரையில் அமர்ந்தார். பையுக்குள் கையை நுழைத்து வைத்த பொருள் பத்திரமாக உண்டோ என்பதுபோல் எதையோ பரிசோ…

    • 0 replies
    • 398 views
  15. சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர். கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக் கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியி…

    • 0 replies
    • 1.2k views
  16. போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 08:30.18 PM GMT ] போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள். இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது. இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார். பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்ப…

  17. தமிழ் நாட்டையும் – தமிழ் ஈழத்தையும் இன்று ஆள்வது யார்? நாம் நினைப்பது போல இன்று தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லை. தமிழர்கள் அங்கு சுதந்திரமாக வாழவும் இல்லை. தமிழ் நாட்டில் தமிழர்கள் இன்று ஒட்டு போடும் அடிமைகளாக வாழ்கிறார்கள். இதற்கான அடித்தளம் நாயக்கர்கள் காலத்தில் போடப்பட்டிருக்கிறது. சுருக்கமாக காண்போம். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆக்கிரமித்துக்கொண்ட இசுலாமியர்களை விரட்டுகிறேன் என்ற சாக்கில் மதுரைக்கு படையெடுத்து வந்த குமார கம்பணன் என்ற தெலுங்கு வடுகன், முசுலிம்களை விரட்டிவிட்டு தமிழகத்தை தானே கைப்பற்றி தனது பிரதானிகளைக் கொண்டு ஆளத்தொடங்கினான். விசயநகர அரசை நிறுவிய அரிகரர், புக்கர் இருவரில் புக்கரின் புதல்வன்தான் இந்த குமார கம்பணன். அதன்பிறகு நூற…

  18. உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்…! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை எ…

  19. இதை கண்டிப்பாக பாருங்கள்புரியும்.. https://www.facebook.com/nammtamillar.London/videos/370519106474033/?pnref=story

    • 0 replies
    • 373 views
  20. சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிட்ட நேரத்தில் தண்ணீர் மாசுபடும் விடயம் பற்றி எமது கவனங்கள் திரும்பியிருக்கின்றன. அதுவும் நல்லதே. 2025ம் ஆண்டில் இலங்கையில் சகலருக்குமான குடிநீர் தட்டுப்பாடு வரப்போகின்றது என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பரவலாக சிறுநீரக நோய் பீடிக்கப்பட்டு இறப்புக்கள் ஏற்படுவதும் நீர் மாசுபடுவதலேயே என பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கின்றன. எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும் குடிநீர் மாசடையும் பிரச்சினை மறுபுறமுமாக நாம் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். வுட மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் 2.5 மில்லியன் மக்கள் மத்த…

    • 0 replies
    • 412 views
  21. உலகில் வயதான பெண் என்று கருதப்படும் மிசாவோ ஒகாவா தனது 117 வயதில் ஜப்பானில் கடந்த முதலாம் திகதி காலமானார். கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு 3 பிள்ளைகளும், 4 பேரப்பிள்ளைகளும் மற்றும் ஆறு கொள்ளுப்பிள்ளைகளும் உள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்ததுடன், இவர் பிறந்து ஐந்து ஆண்டுகளில் பின்பே ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பருவ வயதில் இருக்கும் போது தான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனதுடன் அவரது 70 வயதில்தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான் என்பது சிறப்பம்சமாகும். 114 வயதின் போது அவர் உலகின் மிக அதிக வயதான பெண் எ…

    • 0 replies
    • 1.5k views
  22. இன்னொரு சாதாரண நாள் போல் இந்த புத்தாண்டு தினமும் தேய்ந்து கொண்டிருக்கிறது.எனது கிராமத்தை பிரிந்து தொலை தூரத்தில் இருப்பதனாலோ அல்லது வேறு காரணத்தினாலோ இந்த நாளுடன் என்னால் இலகுவில் ஒட்டி கொள்ள முடிவதில்லை. என்னை பொறுத்தளவில் நான் நன்கு அனுபவித்த சித்திரை புத்தாண்டு கி.பி.2000 உடன் முடிந்து போனது.அதன் பின் நான் கண்ட சித்திரைக்களெல்லாம் தேய்முகமாகவே இருந்திருக்கிறது கிராமங்களிலும் நகரங்களிலும்.இப்போது வாணவேடிக்கைகளும் இல்லை வாணலியில் வறுத்தெடுத்த பட்சணங்களும் இல்லை.எல்லாமே ஒரு இயந்திரத்தனத்துடன் நகர்கிறது. கிராமங்கள் முற்றுகைக்கு உட்பட்டிருந்த அந்த நாட்களில் அண்மையில் இருக்கும் இராணுவ முகாம்களுக்கோ அல்லது காவல் நிலையங்களுக்கோ சென்று இந்த புத்தாண்டு நாட்களில் வெடி சுட…

    • 1 reply
    • 879 views
  23. 12.04.1996 சிறிலங்காவின் கொழும்புத்துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கங்கள் ae5566a4dfd347c73d65198797ce2eb1

  24. சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கலப்புச் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சில படித்த மனிதர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தங்களைச் சமூக அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்களால் இதுவரையில் எந்த விதமான வெளிப்படையான ஆராய்ச்சிகளோ அல்லது மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்யும் முறை சம்பந்தமான ஆராய்ச்சிகளோ முன்னெடுக்கப்படாத நிலையில் சரியான முறையில் பரிசோதனைகளைச் செய்து வெளிவரும் முடிவுகளைப் பிழையென வாதிட்டு அதனைப் பிழையான வழியில் மக்களிடம் திணிக்க முயற்சிக்கின்றனர். சில விசமிகள் தாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் பரிசோதனை முடிவாக வராத பட்…

    • 0 replies
    • 331 views
  25. 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் தான், மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார். போரில் உயிரிழந்தவர்களுக்கா…

    • 0 replies
    • 458 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.