எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது …
-
- 10 replies
- 7.6k views
-
-
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம் 74 Views ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இடம்பெற்று வருகின்றன. திருக்கோணேஸ்வரம், இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் இருக்கின்றது. மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.6k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 7/27/2009 - வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப் பிடிக்கும் திட்டமும் சரி, அதன் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், கருத்துகளும் சரி குழப்பமானதாகவே உள்ளன. இது சர்வதேச சமூகத்தையும், பொதுமக்களையும் திருப்திப் படுத்துவதாக அமைய வில்லை என்பதே உண்மை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் 180 நாட்களுக்குள், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தப் போவதாக அறிவித்தது. இந்த 180 நாள் வேலைத்திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு காலம் ஏற்கனவே முடிந்து விட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பத…
-
-
- 383 replies
- 47k views
- 1 follower
-
குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ… ஜெரா படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை (தகரம், கிடுகு, பனையோலை, பழைய சேலை, பெட்சீற், பிளாஸ்ரிக் தகடுகள், காட்போர்ட் மட்டை, சிப்போர்ட் என பல கலவைகளால் அந்தக் கூடுகளின் கூரைகளும், சுவர்களும் காப்பிடப்பட்டிருக்கின்றன) அடையும் சின்னச் சின்ன சந்துபொந்துகளெல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள். எப்போதோ நடந்த கோயில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழனுக்கு முக்கியமானது கல்வி, ஆனால் சுதந்திரம் காலம் தொட்டு தமிழனின் கல்வி வளம் அழிக்கப்பட்டது, ஒரு காலத்தில் 50% மாணவர்கள் தமிழராகவே இருந்தனர் ஆனால் இப்பொது இது நன்றாகவே குறைந்து விட்டது இதற்கு நாம் என்ன செய்யலாம், நிச்சயமாக தமிழரின் கல்விக்கு சிங்களவன் துணை நிற்கப் போவதில்லை, தமிழ் மாணவர் எவ்வளவு படித்தாலும் அவர்கள் கல்வியில் தொழிலில் முன்னேறாமல் இருக்க சிங்கள தேசம் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளும், அதானால் சிறீலங்காவில் இருக்கும் அரச கல்வி முறையில் இருந்து கொண்டு தமிழன் முன்னேற முடியாது, அதானால் நாம் இப்படி செய்தால் என்ன? புலம் பெயர் தமிழர் எல்லாம் சேர்ந்து தமிழ் மாணவர்களுக்காக தனியார் பல்கழைகழகம் ஒன்றை தொடங்கினால் என்ன? புலம் பெய்ர்ந்தவர்களிடம் பண வசதி இருக்கி…
-
- 17 replies
- 1.8k views
-
-
பேராசிரியர் தயா சோமசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெருந்தகையீர் வணக்கம், குடிநீர் கழிவு எண்ணெயால் மாசுபடுத்தப்பட்டதால் வலிகாமம் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையின் பேசப்படாத விடயங்களையும் பாதிப்புப் பற்றி மக்களுக்கு உண்மை நிலை தெரியப்படுத்தப்படாதுள்ள நிலையையும் “வடஇலங்கையில் நடந்தேறும் பெரிய அளவிலான சூழல் இடர்” என்ற தங்கள் கட்டுரை வெளிக் கொணர்ந்தது. இக்கட்டுரை 'கொழும்பு ரெலிகிறாவ்' இலும் (colombotelegrah.com) 'பூகோள தமிழ்ச் செய்திகளிலும்' (globaltamilnews.net) முழுமையாக வெளிவந்தது. பங்குனி 9, 2015 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் தினசரியிலும் பிரசுரமாகியிருந்தது. வலிகாமம் பகுதி மக்களில் அனேகர் கிணற்று நீரை மாசுபடுத்திவரும் கழிவு எண்ணெய் பா…
-
- 1 reply
- 649 views
-
-
பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள் பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது ஈழம். வியட்நாம் அழைத்ததா? நாம் போனோம். க்யூபா கூப்பிட்டதா? நாம் போனோம், பாலஸ்தீனம் அழைத்ததா போனோம். பூமிப் பரப்பில் கொடூரம் விதைக்கப்படும் எந்த மண்ணும் அழைக்காமலே, மானுடநேயராய் குரல் தந்தோம். கூப்பிடாத குரலுக்கு நாமொரு சாட்சியாக நடந்தோம். ஈழம் அழுது அழுது கூப்பிட்டபோதும் கேட்காத காதுகள், இரக்கமில்லா இதயத்துடன் நின்றோம். போய் இறங்கிய போது கூட, ஆப்பம் பகிர்ந்து கொடுத்த அடாவடிக் குரங்காய் நடந்து கொண்டது இந்தியா. (ஈழக்கதவுகள் - ப.ம் - 9) 01. தோழர் பா.செயப்பிரகாசம் இப்படியொரு நூலை எழுதப்போவது பற்றி முன்னரே என்னிடம் கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை கதைக்கும…
-
- 0 replies
- 826 views
-
-
நேற்று "தீரா வலி தரும் தீபாவளி" என்று சிறிய கவிதை எழுதியதை 54 பேர் முகநூலில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரிலும் எத்தனை பேர் அக்கவிதையை விளங்கிக்கொண்டனர் ??? சிறு வயதில் நானும் மற்றவர்போல் புது ஆடை உடுத்தி கோயிலுக்குச் சென்றுவந்து ஆட்டிறைச்சிக் கறியுடன் அம்மா பரிமாறும் உணவை ஆவலுடன் உண்டவள் தான். புதிய ஆடை வாங்குவது மகிழ்வான விடயம் தான். ஆயினும் அதைவிட வேறு எந்த விளக்கமும் சிறுவயதில் தேவையாக இருக்கவில்லை. நரகாசுரன் அசுரன். அவன் அழிவது நல்லது தான் என்பதுடன் விடயம் முடிந்துவிடும். கொஞ்சம் வளர்ந்தவுடன் நண்பிகளின், கூடப்படிப்பவரின் உடையுடன் போட்டிபோடுமளவு எமது தீபாவளி ஆடைத் தெரிவு அவ்வளவே. புலம்பெயர்ந்து சென்ற பின் எமக்கு நினைத்த நேரத்தில் ஆடைகள் வாங்க முடியும் …
-
- 12 replies
- 2k views
-
-
தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம் யாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி (சனிக்கிழமை) இந்த அரும்பொருட் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சில…
-
- 3 replies
- 1.5k views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன. இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வ…
-
- 0 replies
- 3k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 62 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். சீ.றஞ்சன் (வயது 36) பே.நல்லசாமி (வயது 65) ம.தெய்வேந்திரராசா (வயது 42) ஜெ.ஜோதிகா (வயது 07) உ.யோகேஸ்வரன் (வயது 10) ச.மகாலிங்கம் (வயது 45) ச.அமிர்தலிங்கம…
-
- 0 replies
- 1.4k views
-
-
தையிட்டி – இலங்கையில் ராணுவம் இறுதியாக விடுவித்த பகுதியில்
-
- 0 replies
- 503 views
-
-
நான் எனது கையால் கணவரை ஒப்படைத்தேன் எப்படி மரணச் சான்றிதழ் பெற முடியும், கதறும் முன்னாள் போராளி யுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த வதையில்,ஒட்டுசுட்டான் கொரணி என்ற கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியான முல்லைத்தீவு ,முத்தையன்கட்டு பகுதியில் வசிக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சினி தனது துயரங்களை கண்ணீரோடு இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார். 2009ம் ஆண்டு ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்திடம் எனது கணவரை ஒப்படைத்தேன். விசாரித்து விட்டு அனுப்புகின்றோம் என்று கூறி எங்களை முதலில் அனுப்பிவிட்டனர். ஆனால் இன்று வரை காணவில்லை. விசாரணைக்கு என்னை அழைத்து மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தனர். நான் எ…
-
- 0 replies
- 704 views
-
-
The disappearing act in Sri Lanka Sunila Abeysekera: Sri Lankan intelligence has always been extremely good at torture, "forget the torture; just overcrowding, lack of access to medical attention, and then including on top of that the beatings and the waterboarding. You know, you name it, we hear stories about it." Sharmini Peries of real news speaks to Sunila Abeysekera award-winning human rights defender and the Executive Director of INFORM, an organization working to spread the word on Sri Lankan human rights violations on the ongoing torture allegations in Sri Lanka and the so-called "internment camps" where roughly 300,000 refugees of the recent co…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ் இடப்பெயர்வு ஒக்டோபர் 30, 1995
-
- 0 replies
- 804 views
-
-
வணக்கம் தாய்நாடு....கல்மடுக்குளம் கிளிநொச்சி
-
- 2 replies
- 392 views
-
-
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் நானும் இப்படி ஒரு யோசனை கேட்கவேண்டும் என்று இருந்தேன் சென்ற ஆவணி விடுமுறைக்கு இங்குள்ள லூர்து மாதா சேர்ச்சுக்கு போயிருந்தேன் மனமெல்லாம் வெறுமையாக இருந்தது. ஆனால் அங்கு நான் கண்டவர்கள் அநேகமானோர் சிங்களவர்களாக இருந்தனர். சிலர் வணக்கம் சொன்னார்கள் பிரெஞ்சில். சிலர் புன்புறுவலோடு நிறுத்திக்கொண்டார்கள் சிலர் ஒதுங்கிப்போனார்கள் சிலர் பார்வையால் ஒரு வெட்டுவெட்டினார்கள். வேறு சிலர் தம்மிடையே ஏதோ என்னையும் எனது பிள்ளைகளையும் பார்த்து கதைத்தார்கள். நான் இதை எடைபோட்டேன். ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் வழியில் கண்டு இன்னொரு பாசையில் வணக்கம் சொல்கிறது. இரண்டும்இரு துருவங்களாக மாறி மாறி பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறது. அவர்களை தே…
-
- 0 replies
- 775 views
-
-
பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூ…
-
- 7 replies
- 2.4k views
-
-
The current situation is one in which we are heading for these macroeconomic imbalances. The current high budget deficit, inflation, the impending huge trade deficit, the dislocation of sectors of the economy such as tourism, foreign investment, fishing and agriculture in the East, the huge trade deficit, the impending balance of payments crisis and the depreciation of the currency can be largely traced to the war expenditure and its consequences. These are only the economic costs and consequences. The human and social costs are immense and incalculable. The social costs have increased sharply in recent months during this Christmas period. A record number of refugees…
-
- 3 replies
- 3.2k views
-
-
காட்டிக்கொடுக்கும் தமிழர்களை ஒற்றுமையாய் இருக்கும்படி அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலையை 4 தமிழன் ஆதரித்தால் 6 தமிழன் எதிர்க்கிறான்! தான் கண்களால் கண்டவற்றை வைத்தே கதைக்கிறார்.
-
- 0 replies
- 874 views
-
-
உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்…! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை எ…
-
- 1 reply
- 674 views
-
-
"விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்றுக் கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" கந்தையா தில்லைவிநாயகலிங்கம…
-
-
- 2 replies
- 601 views
-