அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்றொரு பழமொழி. இந்தப் பழமொழியைத் தான் இப்போது தமிழர்கள் நாடுகிறார்களோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் வடக்கில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்சியை மையப்படுத்தி வெளிவரும் கருத்துக்களில் இருந்தே, இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. முதலில் மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகையை சாதகமானதாக தமிழர் தரப்பிலும் சிலர் நோக்கத் தொடங்கியுள்ளதைப் பற்றிப் பார்க்கலாம். உள்ளூராட்சித் தேர்தலுக்கு…
-
- 3 replies
- 755 views
-
-
சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம கலாநிதி சரத் அமுனுகம கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம ஆசிரியர் மெனிக் டி சில்வாவிற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் நான்கு தமிழ் மார்க்ஸியவாதிகள், சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட அவர்கள் அங்கம் வகித்த மார்க்ஸிய கட்சிகளினால் அவற்றின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு உரியவர்களானார்கள். ஆனால், அவர்களது இறுதியான அரசியல்கதி 1950 க…
-
- 0 replies
- 429 views
-
-
சதாம் உசேன்- அமெரிக்காவின் அவசரம் அமெரிக்க ஆங்கிலோ ஏகாதிபத்தியத்தின் கடுமையான நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, இராக் பொம்மை அரசாங்கம், சதாம் உசேனை அவசர அவசரமாக 30.12.2006 அன்று இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்குத் தூக்கிலிட்டுக் கொன்று விட்டது. 23ஆண்டுகாலம் இராக்கில் மிருகத்தனமான கொடுங்கோலாட்சி நடத்தியவர் சதாம் என பி.பி.சி., சி.என்.என்.,போன்ற ஏகாதிபத்திய ஊடகங்கள் மணிக்கணக்கில் செய்துவரும் வர்ணனைகள் இந்தக் கொடிய சர்வதேசக் குற்றத்தை நியாயப்படுத்த முனைகின்றன. ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ இழைத்ததாக சதாம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றிலொன்றுதான், 1982 இல் டுஜைய்ல் என்னும் இராக்கிய கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்ய அவரும் குற்றம் சாட்டப்பட்ட பி…
-
- 1 reply
- 1.1k views
-
-
சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 06:35 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய உரையாடல்களில் கோட்டாபயவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்காகவே, ‘வியத்கம’ என்கிற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தன்னுடைய விரு…
-
- 0 replies
- 729 views
-
-
வலைப்பதிவில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் இந்திய தமிழ் அன்பர்களுள் எமது பிரச்சனை பற்றி மிக தெளிவான அறிவோடும், ஆக்க பூர்வமாகவும் விமர்சிக்கும் ஒருவர் தமிழ்சசி. ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன். உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வ…
-
- 9 replies
- 2.2k views
-
-
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3 புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது. இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன். புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழி…
-
- 2 replies
- 1.5k views
-
-
போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி முருகாநந்தன் தவம் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன. கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச…
-
- 1 reply
- 480 views
-
-
சத்திய சோதனை! களத்திலிருந்து பசீர் காக்கா / காக்கா அண்ணா காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். 'சோகசோபிதசொர்ணக்குயில்' இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார். 'மயானத்தில் மன்னன்' என்ற பேரிலும் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதாபாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக …
-
- 0 replies
- 725 views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது இனப்பிரச்சினையில் இருந்து மதப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் ஆதாரமாக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் சிறீலங்கா மீதான (இதனைச் சிறீலங்காவிற்கு எதிரானது என்று சொல்வதுதவறு) பிரேரணை அமையவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த 25 நாடுகள் இம்முறையும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் …
-
- 0 replies
- 760 views
-
-
சந்தனத்தை அழித்து முகத்தில் சேற்றைப் பூசிய தவராசா! கூட்டுக் கோபத்தைச் சரியாகச் செயற்படுத்திய கிழக்குப் பல்கலை. மாணவர்கள் தயாளன் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஒரு தமிழனா? என்ற கேள்வி போய் மனிதனா என்ற கேள்வியே மேலோங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சபை உறுப்பினர்களின் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் பங்களிப்பைப் பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இது அந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம்தான். இவர்களின் மன அழகு எப்படிப்பட்டதோ முக அழகுக்கு வைக்கப்பட்ட பொட்டுப் போன்றது அது. அங்கு சிந்தப்படும் கண்ணீரை ஒவ்வொருவரிடமும் சென்று துடைக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இந்த நினைவேந்தலுக்கு எம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்…
-
- 0 replies
- 403 views
-
-
சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்த வேண்டும் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக, கூட்டமைப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த தருணத்திலும், பின்னர் பொதுத் தேர்தல் காலத்திலும் கூட, “புதிய ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் பேசுவோம்” என்று கூட்டமைப்பு கூறியது. அதன்போக…
-
- 0 replies
- 368 views
-
-
சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம் March 9, 2019 நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த நான்கு வருடங்களும் கழிந்து போயிருக்கின்றன. …
-
- 0 replies
- 610 views
-
-
சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் ! - பைஸ் - உண்மையில் இங்கு கவலை என்னவெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அவற்றுக்குத் தீர்வு காணவோ அல்லது அவை பற்றி சண்டை பிடிக்கவோ எவரும் முன்வரவில்லை. மாறாக தத்தமது தனிப்பட்ட நலன்களுக்காக போராடுவதிலேயே அனைவரும் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால், அவற்றுக்காக சண்டை பிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் தனித்துவக் கட்சியின் இன்றைய நிலை சந்தி ச…
-
- 1 reply
- 506 views
-
-
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி! February 15, 2024 — கருணாகரன் — நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திர…
-
- 0 replies
- 763 views
-
-
சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முத்துக்குமார் தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பேருரையினை நிகழ்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினை அழைத்திருக்கின்றது. அவர் 'யுத்ததத்தின் முடிவு சமாதானமாகாது' என்ற தலைப்பில் தனது நினைவுப் பேருரையை ஆற்றியிருக்கின்றார். தந்தை செல்வா தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு காலகட்டத்தை நகர்த்திய பெருமைக்குரியவர். 1949 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் தமிழ் இன அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்துச் சென்றார். மக்களை இணைத்த வெகுஜனப் போராட்டம் என்ற அரசியல் அணுகுமுறையினை ஆரம்பித்து வைத்தார். தந்தை செல்…
-
- 4 replies
- 687 views
-
-
சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன? ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன . 'இதில் ஒன்றுமே இல்லை' என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப்போவதுமில்லை. இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம். அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 'சர்வதேச சுயாதீன விசாரணை' என்கிற சொல்லாடலை இணைத்தவுடன், அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது என சில நுனிப்புல் மேய்வோர் ஆர்ப்பரிக்கத…
-
- 1 reply
- 810 views
-
-
சந்தேகங்களை களைவாரா ‘மாவை’? -புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார். தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்த…
-
- 1 reply
- 715 views
-
-
சனல் 4, ஜ.எஸ்.ஜ.எஸ் தாக்குதலை மடைமாற்றுகின்றதா? - யதீந்திரா சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான ஆசாத் மௌலானா என்பவரால் கூறப்படும் விடயங்கள்தான், குறித்த காணொளியின் பிரதான விடயமாகும். அவரது கூற்றின்படி, இந்தக் தாக்குதலானது, ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகும். இதில் பிள்ளையானும் தொடர்புபட்டிருக்கின்றார். பிள்ளையானுடன் இருந்த ஒருவர் என்னும் வகையில் பிள்ளையானுடன் தொடர்புடுத்தியே, மௌலானா விடயங்களை கூறுகின்றார். அப்படிக் கூ…
-
- 4 replies
- 657 views
-
-
சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? நிலாந்தன். September 10, 2023 சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. முன்னைய வீடியோவைப் போலவே, இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையற்றவை என்பதனை அது வெளிப்படுத்தியிருக்கிறது. அசாத் மௌலானா அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் கூறுகிறார்… ” அதிகாரத்துக்காக தமது சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள்” என்று. அசாத் மௌலானா பிள்ளையானின் உதவியாளராக இருந்தவர். அவருடைய தகப்பன் ஈ.பி.ஆர்.எல்எப். இயக்கத்தில் இருந்தவர். சொந்தப் பெயர் மிகிலார். இயக்கப் பெயர் கமலன். தமிழகத்தில் …
-
- 1 reply
- 552 views
-
-
சனல் நாலு வீடியோ ஏற்படுத்திய அதிர்வுகள்? நிலாந்தன். “போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.போர் என்பது கூட்டு முயற்சியாகும்.. போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது. கூட்டு முயற்சியின் அவசியத்தை கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டி இருந்தேன். ராணுவத்தால் மட்டும் போர் செய்ய முடியாது. கடற்படை இருக்க வேண்டும். வான்படை இருக்க வேண்டும். நமக்கு சிவில் பாதுகாப்பு படை இருந்தது. போலீசாரின் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறந்த அரசியல் தலைமைத்துவம் இருக்க வேண்டும். பிக்குகள் எம்மை தைரியப்படுத்தினர். வைத்தியர்கள் தாதிமார் சிகிச்சை அளித்தனர். மக்கள் வரி செலுத்தினர். தமது பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கினர். அமெரிக்கா நமக்கு தொழில் நுட்ப உதவிகளை …
-
- 1 reply
- 649 views
-
-
சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்! Sep 11, 2023 07:00AM IST ராஜன் குறை அண்ணா தன் நூலுக்கு ஆரிய மாயை என்று பெயர் சூட்டக் காரணம் ஆரியம் பிறரை மயக்கி தன்னை ஏற்கச் செய்யும் தன்மை கொண்ட து என்பதைக் குறிக்கத்தான். ஆரியம் என்று ஒன்றுமில்லை; அப்படி இருப்பது போல மாயத்தோற்றம் மட்டும்தான் இருக்கிறது என்ற பொருளில் அவர் அந்த பெயரைச் சூட்டவில்லை. ஆரியம் என்று ஒன்று இருக்கிறது. அது பிறருக்கு நன்மை தருவது போல தோற்றமளித்து அவர்களையும் தன் கருத்தியலை ஏற்கச் செய்கிறது என்பதைக் குறிக்கவே அவர் ஆரிய மாயை என்று பெயர் வைத்தார். நாம் அந்த மாயைக்கு ஆட்படாமல், ஆரியத்தின் உண்மையான தன்மையை அறிய வேண்டும். நானும், நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வ…
-
- 2 replies
- 774 views
-
-
இலங்கையின் ஏழாவது சனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காத போதும் தெற்கின் பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மக்களின் மனநிலையை காட்டும் இலங்கை சனாதிபதித் தேர்தல் 2019 வரைபடம், பல சேதிகளை சொல்லியுமுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாக்குகளின் உதவியுடன் ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றது. எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, இறுதியுத்த மீறல்கள் தொடர்பான விடயங்கள், காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முதலியவை தொடர்பில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நிறைவு பெறாத நி…
-
- 3 replies
- 1.2k views
-
-
2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்... ஆ.ர் அன்புடையீர் குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது பிரசுரித்து உதவுக நன்றி. யாதவன் நந்தகுமாரன். இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்…
-
- 1 reply
- 676 views
-
-
"சம காலத்தில் தமிழர் தரப்பு நியாயங்கள்" எதிரொலி (21/02/2021) சீன அரசுக்கு ஒரு தளம் வடக்கு கிழக்கில் கொடுக்கப்படுகிறது என்பதை நான் ஏற்கவில்லை.(டக்ளஸ்)
-
- 0 replies
- 327 views
-