அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும் – நிலாந்தன்… June 2, 2019 கழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது. பாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதி…
-
- 0 replies
- 963 views
-
-
கோத்தாவை சிக்க வைக்கும் ஐநாவின் வலை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை விசாரணை என்றவுடன் பெரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் சிங்களத்துக்கு, இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல முளுசும் வேலை ஒன்றினை கச்சிதமாக ஐநா செய்துள்ளது. DBS ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இதில், கோத்தா எப்படி சிக்கி இருக்கிறார் என்று அழகாக விபரிக்கின்றார். சிங்களவர்களில் காணாமல் ஆக்கப்பட்டுள் ளோர் குறித்தும் அதில், கோத்தாவின் வகி பாகம் குறித்தும், ஐநா செய்த விசாரணை குறித்து, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதி உள்ளது. தமிழர் தொடர்பில் செய்வதுபோலவே, இதணையும் சிங்களம் எதிர்க்க முடியுமா? சிங்களம் என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளூர் விசாரணை என்று, ஐநாவுக்கு அல்…
-
- 9 replies
- 963 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பலரது பேசுபொருளாகியிருக்கும் இன்றைய நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்தை விடக் குறைவான காலமே இருக்கின்ற இந்த நிலையிலும் தேர்தல் குறித்த திடமான ஒரு முடிவை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது. இதற்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சித் தாவல்கள் அரச சொத்துக்களைப் பாவித்தும் சட்டவிரோத பணத்தினைப் பாவித்தும் மக்களிடையே குறிப்பாக கிராமப் புற மக்களிடையே வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மக்களிடையே எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை, இன்னும் மதில் மேல் பூனையாக இருக்…
-
- 1 reply
- 962 views
-
-
நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல் காரை துர்க்கா / யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது, மனதுக்கு ஒருவித புதுத் தென்பைத் தரும். தினசரி, வீட்டுக்கும் வேலைக்கும் இடையே, ஓயாது ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கும் ‘படிப்பு படிப்பு’ என ஒரே பரபரப்புக்குள் வாழும் இளவயதினருக்கும், ஓர் இடைக்கால நிவாரணம் இது, என்றால் மிகையல்ல. “என்னதான் வசதிகள், வாய்ப்புகள் கண்முன்னே பல்கிப் பெருகி இருந்தாலும், பதுங்குகுழியின் பக்கத் துணையோடும், குப்பி …
-
- 0 replies
- 962 views
-
-
மதமும் மனிதர்களும் _____________________ உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது . இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் …
-
- 3 replies
- 962 views
-
-
அஜ்மல் கசாப் தூக்கு : இந்திய அரசின் இன்னொரு சாதனை ! - அ.மார்க்ஸ் சாதனை ! ஆமாம், அப்படித்தான் இந்திய அரசு பீற்றிக்கொள்கிறது. 2008 நவம்பர் 27 தொடங்கி கடும் பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்த இளம் கைதியை, 110 கோடி இந்திய மக்களுக்கும் தெரியாமல், மூன்று நாட்களுக்கு முன் புனேயிலுள்ள எரவாடா சிறைக்குக் கொண்டுசென்று நேற்று (நவம்பர் 21) காலை ஏழரை மணிக்குத் தூக்கிலிட்டு, மதியத்திற்குள் சிறை வளாகத்திலேயே புதைத்துக் கதை முடித்தது குறித்து இந்திய அரசு அப்படித்தான் பெருமை கொள்கிரது. இந்திய மக்களுக்கு என்ன, மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் கூடத் தெரியாதாம் என்றும் செய்திகள் கசியவிடப் படுகின்றன. ‘ஆபரேஷன் எக்ஸ்’ என இந்த இரகசியத் தூக்கிற்குப் பெயரிட்டு, …
-
- 2 replies
- 962 views
-
-
ஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று. சந்தோஷத்தை சத்தமாக கொண்டாடமல் அடக்கி வாசித்து விட்டு, அவலத்தை அகிலமெல்லாம் கேட்கத் தக்கத்தாக அழுது ஒப்பாரி வைப்பதும் மற்றுமொரு கெட்ட பழக்கம். எங்களுக்கு எந்த சின்ன நல்லதும் நடந்து விடக் கூடாது, நடந்தால் தப்பாகி விடும் என்ன மனநிலையும் அதில் அடக்கம். 2015 தேர்தலில் மைத்ரி-ரணிலை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று அலட்டித் திரியும் நாங்கள், மறுவளமாக மகிந்த ஆட்சி பீடமேறியிருந்தால் அரங்கேறியிருக்கக் கூடிய அவலங்களைப் பற்றி கதைக்க ம…
-
- 2 replies
- 961 views
-
-
இனி, முஸ்லிம்களே பலிக்கடாக்கள் எம்.எஸ்.எம். ஐயூப் அரசாங்கத்தை நிறுவத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவைப் பெறுவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினதும் அதன் நட்புக் கட்சிகளினதும் அரசியல்வாதிகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் கூறினார்கள். கூறியதைப் போலவே அவர்கள், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் பொதுவாகத் தமிழ், முஸ்லிம் சமூகங்களினது ஆதரவின்றியே, ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள். பின்னர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் போதும், அதற்காகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில்லை எனக் கூறினார்கள். ஆனால…
-
- 2 replies
- 961 views
-
-
எண்ணெய் ஊற்றும் இனவாத அரசியல் மொஹமட் பாதுஷா சமூகங்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும், பொதுவாகவே நிரந்தரமான தீர்வு காண்பதை விடுத்து, மய்யப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத விடயங்களுடன் முடிச்சுப்போட்டு, பூதாகரமாக்கி, காலத்தைக் கடத்துகின்ற போக்குகளையே, இலங்கையின் அரசியல் சூழலில் கண்டு வருகின்றோம். குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத ரீதியான அபிலாஷைகள், கோரிக்கைகள் என்று வருகின்ற போது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி, அதில் யாகம் வளர்க்கின்ற வேலையைத்தான், பெருந்தேசிய அரசியல்வாதிகள் சிலரும் அவர்களை ஆட்டுவிக்கின்ற இனவாத சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒன்றாக, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) எரிப்பு விவகாரமும்…
-
- 1 reply
- 961 views
-
-
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? Hasanah Cegu isadeen on May 3, 2019 பட மூலம், Lakruwan Wanniarachchi Photo, Los Angeles Times எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அ…
-
- 0 replies
- 961 views
-
-
-
- 1 reply
- 961 views
-
-
கைது செய்யப்படுவாரா கரன்னகொட? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 படையினரை முன்னிறுத்திய அரசியல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒரு சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள், நடந்து கொண்டிருக்கின்றன. அட்மிரல் வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதுவும், அட்மிரல் கரன்னகொட தான், தனக்கு நெருக்கமான அதிகாரியாக இரு…
-
- 0 replies
- 961 views
-
-
செப்டெம்பர் 26, ஈழத்தமிழினத்தின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். காந்தியின் அகிம்சைப்போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டுச் சென்ற, லெப்.கேணல்.திலீபன் மரணித்த நாள். ஆயுதப்போராட்டத்தின் ‘வான்’ பரிமாணத்தை எட்டிவிட ,முப்பொழுதும் உழைத்த கேணல். சங்கரை, எதிரியின் ஆழ உடுருவும் கோழைப்படையணி முள்ளியவளையில் வீழ்த்திய நாள். அந்த நாள்....ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டெழும் தேசங்களுக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் விடுதலை உணர்வினை ஊட்டும் நாள். 266 மணி நேரம், மரணத்துள் வாழ்ந்த திலீபனின் ஒருமுகப்பட்ட சிந்தனை 5 அம்சக் கோரிக்கைகளிலேயே நிலைத்து நின்றது. சாவினை அரவணைத்தபடியே இலக்கோடு வாழ்ந்தார் திலீபன். இனத்தின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, அழிப்பவனோடு நல்லிணக்க அரசியல் பேசும் அடிபணி…
-
- 2 replies
- 960 views
-
-
‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதுரம் மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 29 திங்கட்கிழமை, மு.ப. 11:54 Comments - 0 வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நி…
-
- 0 replies
- 960 views
-
-
திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்.. October 10, 2019 பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைளைத் தீர்மானிப்பவையாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிக்காக 35 பேர் போட்டியிடுகின்ற ஒரு தேர்தல் அனுபவத்தை இந்தத் தேர்தலின் மூலம் நாடு சந்திக்கின்றது. இ;வ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் …
-
- 1 reply
- 960 views
-
-
நவிபிள்ளை அம்மையார், விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘இராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தனித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள். இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போ…
-
- 2 replies
- 960 views
-
-
நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்ய முடியும்? [size=4]ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012 09:12 [/size] [size=4]டெசோவின்போது சவுக்கு வருந்தியது இலங்கைத் தமிழர் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என.[/size] [size=4][/size] [size=4]முள்ளிவாய்க்காலின்போது மட்டுமல்ல குஜராத் படுகொலைகள்போதோ அல்லது விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதோகூட மனிதநேயர்கள் அதிகம் செய்யமுடியவில்லை.[/size] [size=4]கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்குகிறது. கட்டிடத்தொழிலாளர்கள் விபத்துக்களில் மரணமடைகின்றனர், அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். பல முனைகளிலிருந்தும் அடித்தட்டுமக்கள் மீது இடையறா தாக்குதல். இந்நிலையில் ஆள்வோரின் அராஜகத்தை அல்லது அக்…
-
- 0 replies
- 960 views
-
-
விக்னேஸ்வரன் வாங்கிய குட்டு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, மு.ப. 09:45Comments - 0 அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம், மாகாண முதலமைச்சரின் பரிந்துரைகளுக்கு அமைய, மாகாண ஆளுநர், (மாகாண) அமைச்சர்களை நியமிக்க முடியும் என்று வரையறுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கவில்லை. இதை, 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சாதாரண ஒருவர் வாசிப்பதனூடாகவே, அறிந்து கொள்ள முடியும். அப்படியிருக்க, 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகார எல்லைகள் குறித்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்குப் போதிய விளக்கங்கள் இல்லை என்று வாதிட முடியாது; அது அவ்வளவுக்கு எடுபடாது. …
-
- 3 replies
- 960 views
- 1 follower
-
-
பொது வாக்கெடுப்பு சாத்தியமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-8
-
- 1 reply
- 959 views
-
-
வடமாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? - நிலாந்தன் 28 செப்டம்பர் 2014 வடமாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வட மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும் குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடமாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே. கண்டி வீதியில் பழமை வாய்ந்த கைதடி முதியோர் இல்லம் ம…
-
- 3 replies
- 959 views
-
-
M.A.சுமந்திரன் அவர்கள் கலந்துகொண்ட UTV இன் The Battle நிகழ்ச்சி
-
- 1 reply
- 959 views
-
-
வெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா? கே. சஞ்சயன் / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:19 Comments - 0 உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள், அதன் தொடர்ச்சியாகக் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, உச்சக்கட்ட முயற்சிகள் இப்போது நடந்தேறி வருகின்றன. இந்த இக்கட்டான நிலைமையை, தாங்கள் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிக் கொண்டே, இதை அரசியலாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான தரப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. இந்த அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ஒன்று இரண்டல்ல; அந்தப் பட்டியல் நீளமானது. இதை வைத்து அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகளில், ச…
-
- 0 replies
- 958 views
-
-
-இலட்சுமணன் உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில், பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி…
-
- 0 replies
- 958 views
-
-
“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார் Menaka Mookandi / 2018 ஒக்டோபர் 04 வியாழக்கிழமை “இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என…
-
- 3 replies
- 957 views
-
-
மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள் அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால்…
-
- 3 replies
- 957 views
-