அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைத்தீவில் இந்தியாவும் சீனாவும் - ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்களும் [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:21 GMT ] [ புதினப் பணிமனை ] இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை. 'புதினப்பலகை'க்காக ம.செல்வின் சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இறுகிவரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கநிலைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாரிய சவாலாக உருவாகி வளர்ந்து வருகின்றது என்பதனை புதுடெல்லியில் உள்ள அதிகாரக்கட்டமைப்பு தொடக்கம் சாதாரண இந்தியக் குடிமகன்வரை அனைவரும் புரிந்துள்ளனர். …
-
- 1 reply
- 767 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பமானபோதே, அது எங்குபோய் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஏனென்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஓர் அரசாங்கத்துக்கு முன்னால்- ஆண் ஒருவரைப் பெண் ஆக்குவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் செய்ய முடியும் என்று கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விடவும், மிகையான அதிகார…
-
- 1 reply
- 693 views
-
-
அடர்ந்து வளர்ந்திருக்கும் வனாந்தரத்திற்கும், வனாந்தரத்திற்கு நடுவே மழை வெள்ளத்தால் நிரம்பிக்கிடக்கும் ஒரு ஒடுங்கிய மண்சாலைக்கும் பின்னால் நாகரீக வேடுவர்களாய் மாற்றப் பட்டிருக்கும் மக்களின் கதை அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வடக்கின் வசந்தம் வீசாமல், அபிவிருத்தியினால் அலங்கரிக்கப்படாமல் அலங்கோலப்பட்டிருக்கும் ஒரு கிராமம் புதிய குடியிருப்பு என்ற மிகப் பின்தங்கிய கிராமம். kilinochchi people 2013கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னர் தோன்றிய, இன்றுவரை அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல கிராமங்களில் இதுவும் ஒன்று. மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் நிலமற்ற மக்களை கொண்டு 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த புதிய குடியிருப்பு கிராமத்தில் இன்று 60ற்கும் மேற்…
-
- 1 reply
- 2.6k views
-
-
30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு 18 ஏப்ரல் 2013 கலாநிதி எம்.எஸ்.அனீஸ் 30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான முரண்பாடுகளுக்கு காரணமான விடயங்கள் குறித்து இந்தக் கட்டுரையுடன் முரண்படுவோர் ஆரோக்கியமான பதில் கட்டுரைகளை radiokuru@yahoo.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் அவற்றையும் குளோபல் தமிழ்ச் செய்திகள் பிரசுரிக்கும். இலங்கையின் முப்பது வருடகால விடுதலை போராட்டமானது ஏற்படுத்திய ஆற…
-
- 1 reply
- 515 views
-
-
போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன? - காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC)என நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அந்த வகையி…
-
- 1 reply
- 468 views
-
-
இலங்கை தாயக அரசியல் களம் இலங்கை உள்ளுராட்சி சபை தேர்தல் தமிழ் மக்கள் பேரவை | மாற்று அரசியல் கூட்டமைப்பு
-
- 1 reply
- 416 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பலரது பேசுபொருளாகியிருக்கும் இன்றைய நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்தை விடக் குறைவான காலமே இருக்கின்ற இந்த நிலையிலும் தேர்தல் குறித்த திடமான ஒரு முடிவை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது. இதற்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சித் தாவல்கள் அரச சொத்துக்களைப் பாவித்தும் சட்டவிரோத பணத்தினைப் பாவித்தும் மக்களிடையே குறிப்பாக கிராமப் புற மக்களிடையே வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மக்களிடையே எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை, இன்னும் மதில் மேல் பூனையாக இருக்…
-
- 1 reply
- 953 views
-
-
ஏன் 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும்? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டமானது, இந்தியாவின் நேரடியான தலையீட்டின் விளைவு. இதன் காரணமாகவே இன்றும் இந்தியா அது தொடர்பில் பேசிவருகின்றது. தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில், இது தொடர்பில் பலவாறான குழப்பங்கள் உண்டு. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுகின்றவர்களை பின்வரும் மூன்று பிரிவுகளாக நோக்கலாம். ஒரு பிரிவினர், 13வது திருத்தச்சட்டத்தின் போதாமை தொடர்பில் பேசுகின்றனர். இன்னொரு பிரிவினர் 13வது திருத்தச்சட்டமென்பது, இந்தியாவின் தேவைக்காக பேசப்படுவதாக கற்பனை செய்கின்றனர். இன்னொரு பிரிவினரோ, 13வது திருத்தச்சட்டத்தை ஒரு தீண்டத்தகாத விடயமாக பார்க்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்…
-
- 1 reply
- 390 views
-
-
உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 06:44 Comments - 0 “ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த் தரப்புக்குள் சில பகுதியினரிடம் ‘எள்ளல்’ தொனியிலான உரையாடலையும் தென் இலங்கையிடம் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்ம…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்.. October 10, 2019 பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைளைத் தீர்மானிப்பவையாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிக்காக 35 பேர் போட்டியிடுகின்ற ஒரு தேர்தல் அனுபவத்தை இந்தத் தேர்தலின் மூலம் நாடு சந்திக்கின்றது. இ;வ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் …
-
- 1 reply
- 958 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 15 யாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன. எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதையே, ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள். அரசியல் அறிவும் அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை, அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது. இன்னொரு கட்டத்தில், இன்னமும் தமிழர் அரசியலில் நீடித்திருக்கும் சாதி, மதம், வர்க்க பேதம் ஆகிய சிந்…
-
- 1 reply
- 534 views
-
-
[size=2] [size=4]பராக் ஒபாமாவுக்கு மேலும் நான்கு ஆண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. [/size][/size] [size=2] [size=4]ஒரு கட்டம் வரை, ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவோடு ஒட்டியும், பிறகு அவரை மிஞ்சியும் சென்றபோதும், இறுதிகட்டத்தில் ஒபாமாவால் சுலபமாக ரோம்னியை வீழ்த்தமுடிந்தது. வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில்,ஒபாமா 303 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.[/size][/size] [size=2] [size=4]ஹார்வர்டில் சட்டம் பயின்ற பராக் ஒபாமா, இலினாய்ஸ் செனடராக (2005-2008) இருந்தவர். 2008 அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னைத் தோற்கடித்து அதிபரானார். 2012 தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதற்குக் கீழ்வரும் காரணங்கள் பொதுவாக முன்வைக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
துரோகம் இழைத்தது யார்? : ஆயுதக் குழுக்களுக்கு அருகதை இல்லையா? மாவீரர் நாளன்று கிளிநொச்சியில் நடந்த மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளியிட்டிருந்த கருத்து தற்போதைய அரசியல் சூழலில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயம் ஒன்றைத் தொட்டுச் சென்றிருந்தது. “2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதக் குழுக்களாக இருந்தவர்கள் இப்போது மாவீரர் நாள் பற்றிப் பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மாவீரர் நாள் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் அரசுடன் இணைந்து எப்படிச் செயற்பட்டார…
-
- 1 reply
- 498 views
-
-
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் கடந்த வாரம் அதிக முக்கியத்துவத்தை பிடித்திருந்தது. இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஒன்றுக்கான பணிப்பாளர் நியமனம் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தது கிடையாது. அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. அது மாத்திரமே இந்த அளவுக்கு சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டமைக்கு காரணமல்ல. புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான படை அதிகாரிகளுக்கு அளித்து வரும் உயர் பதவிகள், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னரான சூழல், பிரிகேடியர் துவான் சுரேஷ் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம். இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு களோடு 23 வருஷங்கள் போராடி, உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்ட…
-
- 1 reply
- 926 views
-
-
காணாமல்போன பிள்ளைகளுக்கு தீர்வுகிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 24 OCT, 2022 | 04:20 PM K.B.சதீஸ் காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளி திருநாளான இன்று தமது பிள்ளைகளும், உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையில், நமது சைவ மதத்தில், இது கிருஷ்ணர…
-
- 1 reply
- 341 views
- 1 follower
-
-
சீனா உருவாக்கும் ‘நிழற்படை’ கே. சஞ்சயன் / 2019 மே 31 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:35 Comments - 0 ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு விதிவிலக்கானது அல்ல என்பதை, நிரூபித்திருக்கிறது. அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ‘ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொண்டா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? Veeragathy Thanabalasingham December 23, 2025 Photo, Sakuna Miyasinadha Gamage இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது. மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார…
-
- 1 reply
- 233 views
-
-
பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு? – அகிலன் பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு? பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தக் கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பி யிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப் பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப் பட்டிருக்கின்றார். அதே வேளையில் பேச்சுக்களுக்கு முன்னோடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இவை எல்லாம் பகிரங்கப் படுத்தப்படாமல் இரகசியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், தகவல்கள…
-
- 1 reply
- 368 views
-
-
வடமாகாணசபையின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்:- கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதே நாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற்கட்டுரை எழுதுபவர்கள் சிலரும், ஓர் ஊடகவியலாளரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்கள். அச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியவரும் அதில் பங்குபற்றினார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக சந்திப்பு நடந்தது. பலதைப் பற்றியும் உரையாடப்பட்டது. ஒரு மாற்று அணியைக் குறித்தும் உரையாடப்பட்டது. விக்னேஸ்வரன் மிகவும் வெளிப்படையாகப் பேசினார். ஐக்கியத்தைக் குலைப்பது இப்பொழுது நல்லதல்ல என்பதே அவருடைய பதிலின் சாரா…
-
- 1 reply
- 666 views
-
-
பதின்மூன்றை ஈழத்தமிழர்களுக்காகக் காண்பித்துக் கொண்டு டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா? இலங்கையின் விருப்பங்களுக்கு உடன்பட்ட ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் பதிப்பு: 2023 ஜன. 21 10:39 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: ஜன. 21 21:54 தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தொடர்ச்சியாகக் காணப்படும் முரண்பாடுகள், பிரிந்து நின்று அமெரிக்க இந்திய அரசுகளின் தந்திரோபாயங்களுக்கு உட்படுதல், மற்றும் கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களுடனான தனிப்பட்ட உறவுகள் போன்ற நேர்மையற்ற அரசியல் செயற்…
-
- 1 reply
- 560 views
-
-
“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி. இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறிய…
-
- 1 reply
- 324 views
-
-
தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன். யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன. நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது. ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள்…
-
- 1 reply
- 152 views
-
-
September 10, 2013 அரசியல் பார்வை 0 8 பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந…
-
- 1 reply
- 621 views
-