நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
அப்போது துப்பாக்கிச்சூடு... இப்போது தூக்குத் தண்டனை! தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால், வெட்டிப் போடுவார்கள் என்பதற்கு உதாரணம் கொழும்பில் இருந்து வந்திருக்கும் கொடூரச் செய்தி. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது என தனது கடற்படையினர் மூலமாக தினந்தோறும் அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இலங்கை அரசு, 5 தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறது. எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் மீனவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது அவர்களது வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கி…
-
- 0 replies
- 581 views
-
-
ஒரு 19 வயது இளம்பெண், தன்னை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒருவரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பேனாக் கத்தியைப் பயன்படுத்துகிறாள். அந்தக் கத்தி, அம் மனிதனைக் கொன்று விடுகிறது. அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு முன்னர் 7 கொடிய வருடங்களை அவள் சிறையில் சித்திரவதைகளோடு கழிக்கிறாள். அந்தப் பெண் ரிஹானா ஜப்பாரி(Reyhaneh Jabbari). கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை, மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அநீதியிழைக்கப்பட்ட அந்தப் பெண், மரணிக்கும் தினத்துக்கு முன்னர் தனது தாய் ஷோலேக்கு அனுப்பியிருந்த கடிதம் இது. (நன்றி - JENYDOLLY) "இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண…
-
- 1 reply
- 645 views
-
-
இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம். இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்…
-
- 0 replies
- 607 views
-
-
-
- 1 reply
- 366 views
-
-
ஒரு மனித உரிமைக் குழுவினர் "The Social Architects" என்ற பெயரில் ஈழத் தமிழரின் அவலங்களை ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள். தற்போது அவர்கள் வன்னிப் போர் முனையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர். அதன் முதலாவது முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆங்கிலம் மூலம்: மின்னஞ்சல் யாழ் இணையத்திலிருந்து ஒதுங்கி விட்ட ஆனால் மின்னஞ்சலில் என்னுடன் தொடர்பில் உள்ள ஒரு யாழ்கள உறவு கடந்த மாதம் (செப்டெம்பர்) இதை அனுப்பியிருந்தார். நீண்ட நாட்களின் பின் இன்று மின்னஞ்சலை திறந்த போது கண்டேன். யாழிலும் இணைத்துள்ளேன்.
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா? ஜெரா படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்” என்று அழைக்கின்றனர். கண்ணீரைத் துடைத்தபடி எழுந்திருக்க முயற்சிக்கும் அவரை இரு பிள்ளைகளும் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போய் கார் பின் இருக்கைகளுக்குள் இருத்துகின்றனர். அம்மா யன்னலுக்கு வெளியே பார்க்கிறார். பனி அழகாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. எங்கட இடத்துக்கு காரை விடு, முன் இருக்கையில் அமர்ந்திருப்பவன் சொல்கிறான். அதெப்பிடி, இந்த முறை எங்கட இடத்தில தான் விளக்குக் கொளுத்த வேணும் என்கிறான் காரை செலு…
-
- 0 replies
- 659 views
-
-
சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன்.
-
- 226 replies
- 23.6k views
-
-
எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்:- 18 அக்டோபர் 2014 கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்வை அன்றைய சந்திரிகா அரசு ஏற்பாடு செய்திருந்தது. அடுத்த சுதந்திர தின நிகழ்வினை கிளிநொச்சியில் நடத்துவோம் என பகிரங்க சவால் விட்டார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை. இதற்குப் பதிலடியாக குண்டு பொருத்தப்பட்ட வாகனத்தை தலதா மாளிகைக்கு அனுப்பி விட்டனர் விடுதலைப்புலிகள். அந்த வருடம் சுதந்திர நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. …
-
- 0 replies
- 446 views
-
-
சொன்னபடி சீதனம் கொண்டு வராததால், முதல் நாளே, கோபத்தில் புலியாய் பாய்ந்து மணப் பெண்ணை அடித்து, கடித்து கொன்றார் மாப்பிளை குமார்.. > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > கர்நாடகாவில் இனப்பெருக்கத்திற்காக பெண் புலியுடன் விடப்பட்ட ஆண் புலி, அப்பெண் புலியைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
எபோலா என்ற வார்த்தையே எனக்குள் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வார்த்தையைக் கேட்பதுகூட வெறுப்பாக இருக்கிறது. அது என்னுடைய குடும்பத்தையும் பள்ளிப் படிப்பையும் நாசமாக்கிவிட்டது. வாழ்க்கை திடீரெனத் துன்பமயமாகிவிட்டது. என்னுடன் அத்தையும் சில உறவினர்களும் இந்த வீட்டில் இப்போது இருக்கிறார்கள் என்பது மட்டுமே எனக்கு ஆறுதல். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் முன்பு மகிழ்ச்சி யாக இருந்தோம். இப்போதோ நான் பீதியில் ஆழ்ந் திருக்கிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமான மக்கள், நண்பர்கள், பல குடும்பங்கள் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகிவிட்டனர், இன்னமும் இறந்து கொண்டிருக்கின்றனர். உறவினர்களை இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எபோலா உண்மைய…
-
- 0 replies
- 467 views
-
-
இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை என். சரவணன் படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால் ஈவிரக்கமின்றி வெறித்தனமாக தாக்குவதும், வீதியில் விழுந்தபடி அந்த பெண் தாக்க வேண்டாம் என்று மன்றாடி தன்னை பாதுகாக்க எடுக்கும் காட்சியும் களவாக கையடக்க தொலைபேசியொன்றின் மூலம் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவுடன் இது பலரை பதற வைக்கும் செய்தியாக ஆனது. குறிப்பாக சிங்கள இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய…
-
- 0 replies
- 455 views
-
-
'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 76வது பிறந்த தினத்தை முன்னிட்ட ஞாபகார்த்த நினைவுப் பேருரை தலைப்பு: 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' உரை நிகழ்த்துபவர்: க.ச.இரத்தினவேல் சிரேஸ்ட சட்டத்தரணி காலம்:- 04-10-2014 சனிக்கிழமை நேரம்:- பி.ப 3.30 – 6.30 மணி வரை இடம்:- திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகம், இல.286, பிரதான வீதி, யாழ்ப்பாணம் மேற்படி நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்தக் குழு, இல. 136, கண்டிவீதி, யாழ்ப்பாணம், தொடர்புகளுக்கு:- 0773024316 http://globaltamilnews.…
-
- 3 replies
- 459 views
-
-
இனி என்ன ஆவார் ஜெயலலிதா? ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது; ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம்; நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்!’ - இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! 'தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்!’ என்றார். குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து…
-
- 9 replies
- 3.9k views
-
-
தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு சின்னக்கருப்பன் மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம், இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது. அங்கோர் வாட் என்னும் நகரமே மரம் செடி கொடிகளுக்கு இடையே காணாமல் போயிருந்தது. அந்த பிரதேசங்களில்தான் போல்போட் என்னும் கம்யூனிஸ்ட் நாகரிகத்தையே ஒழித்துவிடுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்து, மனிதர்களை மிருகங்கள் நிலைக்கு கொண்டுசென்றால்தான் கம்யூனிஸம் மலரும் என்று ந…
-
- 0 replies
- 669 views
-
-
ஜெ : சில குறிப்புகள் சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? 1) நிலப்பிரபுத்துவ மனோபாவம் அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத திரளான மக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
சதம் இருக்க மனிதம் உள்ளவனாக இருந்த மனிதன்… ஜெரா படம் | Panoramio அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன் என்று வேலை வெட்டியில்லா தவன்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில் அஞ்சு சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல அஞ்சு சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும், ரூபாய்களின் அறிமுகமும் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும் காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்களிடம் சதத்தின் பெறுமதி குறித்த கதைகள் நிறை…
-
- 0 replies
- 366 views
-
-
நன்றிகள் வினவு .கொம்http://www.vinavu.com/2014/09/16/manipur-criminals-as-judges/ இவர்களிடம் தான் நாங்கள் நீதி கேட்க துடிக்கிறோம் சொந்த மக்களின் உரிமைகளை மதிக்காதா உத்தமர்களிடம்.... மணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போலி மோதல்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சங்கமும் மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பும் அம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போலி மோதல்படுகொலைகளில் 1528 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படுகொலைகள் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தன. நினைவிடம் அசாம் துப்பாக்கிப் படை நடத்திய மாலோம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் 13-ம…
-
- 0 replies
- 652 views
-
-
லைக்கா, கத்தி அரசியல், வியாபாரம்..... நான் இலங்கையில் கேள்விப்பட்டது: இது தான் பின்புலமா? இலங்கையின் மொபைல் உலகை 'dialog' ஆக்கிரமித்திருக்க, இந்தியாவின் பாரிய 'Airtel' உள்ளே புகுந்து, ரணகளப் படுத்தி விட்டது. இந்தியா, மற்றும் ஏனைய அயல் நாடுகளில் சந்தையினை பிடித்து வைத்து இருக்கும், ராட்சத 'Airtel' உடன் போட்டியிட, இலங்கையருக்கு சொந்தமான பிரித்தானிய லைக்கா, இலங்கை அரசால் உள் அழைக்கப் பட்டுளதாக தெரிகிறது. அரச ஆதரவுடன் பலமாக லைக்காவும், கால் பதித்த அதே வேளை, பிரித்தனியாவின் ஐரோப்பாவின் வியாபார, பின்புல வேலைகளுக்கான பெரிய அலுவலகத்தினை தமிழ் நாட்டில் வைத்து இருக்கும் லைக்காவிற்க்கு அங்கே குடைச்சல் கொடுக்க 'Airtel' பின்புலத்துடன் சிலர் எடுத்த ஆயுதம் தான் கத்தி, ராஜபக்சே …
-
- 5 replies
- 991 views
-
-
இரண்டு மரங்களுக்கிடையிலான அரசியல் ஜெரா படம் | Theatlantic மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும், அது கக்கிய நிலத்திணிவுகளிலும் ஊர்வனவும், நகர்வனவும் அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தன. மீன்கள், நத்தைகள், சங்குகள், சிப்பிகள் முதலான வன்ம உயிரிகள் பிரசவமாகிக்கொண்டிருந்தன. நெரிசலற்ற வாழ்க்கைத் தொகுதி சுவாரஷ்யமிக்கதாயிருந்தது. உயிரிகளின் குதூகலமான வாழ்க்கை, பல கலப்பு உயிர்களின் உருவாக்கத்திற்கு காரணமாகியது. இந்தக் குதூகலமும் நீடித்திருக…
-
- 0 replies
- 537 views
-
-
நீங்கள் Facebookல் இருப்பவர் என்றால், உங்களின் நண்பர் மூலம் அல்லது நண்பர் ஒருவரின் நண்பர் மூலம், இந்த ரெயின் செய்தி பற்றி அடிக்கடி அறிந்து கொண்ட அனுபவம் இருக்கும்தானே? - இங்கே யாழிலும் இணைப்புகள்வருவது உண்டு.. இது பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கு தெரிந்த ஒரு உறவினர் இடம் கதைத்த பொது இது ஒரு வெறும் ஷோ ஒழிய ஏதும் பிரயோசம் இல்லை என்று சொன்னார்- அவர் கூடுதலாக வவுனியா -யாழ் பயணிக்கும் பயணி ஒருவர். ஒன்று சீட் பிரச்சனை, மற்றது நேரம்.பஸ் எதோ 1 மனித்தியாத்திர்க்கு ஒருக்கா ஓடுவதாகவும், ரெயின் 2/ 3 தரம் மட்டுமே ஓடுவதாகவும். இங்கே வட அமெரிக்காவில், பொது போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர ..அந்த கால CTB ஐ விட மோசம். வீட்டுக்கு ஒரு கார் , இரண்டு கார் வைத்திருப்பார்கள் .…
-
- 41 replies
- 3.2k views
-
-
விடுப்பு மூலை: வலி தெரியாதவரின் அரசியல் நந்தி முனி வன்னியப்புவின் உறவினர் ஒருவர் இறந்து போய்விட்டார். வன்னியப்பு சாவீட்டுக்குப் போனார். ஐயர் இன்னமும் வரவில்லை. சனங்கள் ஆங்காங்கே வெற்றிலை பாக்குத் தட்டத்தை சுற்றியிருந்து வெற்றிலையோடு அரசியலை சப்பித் துப்பிக் கொண்டிருந்தார்கள். வன்னியப்பு இதில் எதிலும் இணைய விரும்பாது ஒதுங்கிப்போய் தனிய இருந்தார். ஆனாலும் பேப்பர் ரிப்போட்டர் அவரைக் கண்டுவிட்டார். கிளாக்கரும் கண்டு விட்டார். இருவரும் ஒரு வெற்றிலைத் தட்டத்தையும் தூக்கிக் கொண்டு அப்புவுக்கு அருகே வந்து குந்தினார்கள். ரிப்போட்டர் - என்னப்பு தனிய வந்து குந்திட்டீங்க அப்பு - உதுகளுக்குள்ள போயிருந்தா வெத்தலையோட அரசியலையும் சப்பித் துப்ப வேண்டியது தான். அது தான் தனிய வந்த…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய செவ்வி
-
- 2 replies
- 699 views
-
-
லைக்கா நிறுவனம் மகிந்த அரசுடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் பணத்தைச் சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டே லீடர் என்ற ஊடகம் 2008 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தும் வேறு காரணங்களுக்காகவும் அந்த ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுதுங்க்க கொலைசெய்யப்பட்டார். பின்னதாக 2009 ஆண்டில் மந்தனா இஸ்மையில் அதன் தொடர்ச்சியைப் எழுதிய போது அரச கூலிகளால் தாக்கப்பட்டார். இலங்கை வாழ் தமிழ் – சிங்கள மக்களின் வரிப்பணத்தைக் ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா நிறுவனம் என்ற பல்தேசிய பெரு வியாபாரிகள் தென்னிந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்க்கு மேலாக ஈடுபட்டுவருகின்றனர். தமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக…
-
- 1 reply
- 684 views
-
-
மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்து விட்டன. தேர்தலுக்கான சரியான கால நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இம்முறை எதிரணியினர் அதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆளும் தரப்பைப் பொறுத்த வரையில் தற்போதைய ஜனாதிபதிக்கு மாற்றீடான வேட்பாளர் ஒருவர் இல்லாததால் அந்தப் பக்கம் சலசலப்பு எதுவும் காணப்படவில்லை. ஒருவர் இரண்டு தடவைகளுக்கு அதிகமாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிக்கலாம் என்றதொரு நிலை உரு வாகியுள்ளதால், இம்முறை இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பெயரும் அடிபடுவதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து காணப்படுகின்றனர். போர் வெற்ற…
-
- 0 replies
- 602 views
-
-
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 8th August ; Friday ; Morning show—10 am உயிரணுவில் உள்ள DNA அமைப்பை தமிழில் விளக்க முடியுமா ? ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம் www.tamilarchives.org – Worlds First and Exclusive Scientific…
-
- 0 replies
- 523 views
-