நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன் அரசனான மகிந்தராஜபக்ஷவும் எத்தகைய போர் குற்றவாளிகள் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிவரும் பல காணொளிகள் நிரூபித்து வருகின்றன. …
-
- 0 replies
- 609 views
-
-
இடதுசாரி அலையில் தென் அமெரிக்கா -சுவிசிலிருந்து சண் தவராஜா. சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது. 2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்…
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR | X 11 பிப்ரவரி 2024 மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்…
-
- 3 replies
- 361 views
- 1 follower
-
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென் பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய எந்த கூட்டணியானாலும் அதனுடன் இணைந்து போட்டியிட தயார் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஈ.பி.டி.பி கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருவதால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஈ…
-
- 5 replies
- 545 views
-
-
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைவர் சீமான் ஆகியோர் தெரிவித்தனர். கூடங்குளம் முதல் அணுஉலையைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பான உண்மை நிலவரங்களை வெளியிட வேண்டும்; இது தொடர்பாக மத்திய அரசும் அணுசக்தி துறையும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; தவறினால் அணுஉலை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்…
-
- 0 replies
- 372 views
-
-
இடைக்கால கணக்கு அறிக்கையை முடிந்தால் சபையில் சமர்ப்பித்து காட்டுங்கள் ;ஏரான் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினையோ அல்லது கணக்கு அறிக்கையினையோ முடிந்தால் சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்காட்டுமாறு முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரட்ண வீரகேசரிக்கு வழங்கிய பிரத்திய செவ்வியின் போது சவால் விடுத்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே பிரதமராகவும், இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்த பின்னர் மீண்டும் பிரதமர் பதவியை சட்டவிரோதமாக பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்காலத்தில் ஒருவருடம் முன்னதாக 2015இல் ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் தேர்தலில் தோல்வியைத்…
-
- 0 replies
- 418 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் அனைவரும் எதிர்பார்த்தபடியேதான் மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்காக இடம் பெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மூன்று தொகுதிகளில் ஒன்றிலாவது தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க. அல்லது விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் ஒன்று வெற்றிபெற்றிருந்தால் அதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேவேளை அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்…
-
- 0 replies
- 373 views
-
-
இடையில் மாற்றமடைந்ததா சீனாவின் உணவுக் கலாசாரம்? உணவு பழக்கவழக்கமென்பது நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவொன்றுதான் . என்றாலும் தென்கிழக்காசியாவின் உணவுக்கலாசாரம் என்பது மற்றைய நாடுகளில் உள்ள பலரையும் மிரளவைத்து விடுகின்றதென்றால் அது மிகையில்லை! அவ்வகையில் சீனர்கள் ஏன் நமக்கு அருவருப்பாக தெரியக்கூடிய பலவற்றையும்கூட உணவாக உண்ணுகின்றனர் என்பதே இன்றைய இக்கட்டுரையின் கரு . இன்றைய சூழலில், உலகில் உள்ள அனைவருக்குமே China என்றாலே கடுங்கோபம் வருமளவிற்கு அந் நாட்டிலிருந்து பரவிய covid19 கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகின்றது! கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் பரவிய சார்ஸ் (2002) போன்ற வைரஸ்களும்கூட சீனாவின் whuhan மானிலத்திலுள்ள ” wildlife market ” என்கிற வனவிலங்…
-
- 0 replies
- 466 views
-
-
இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறியமை தமிழ் மக்களுக்கு வெற்றியே - சுமந்திரன் எம்.பி. பிரத்தியேக செவ்வி இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையை அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்து பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் நாடு திரும்ப…
-
- 0 replies
- 287 views
-
-
இணைய வேண்டிய நேரமிது! - மு. வீரபாண்டியன்First Published : 08 Jul 2011 01:37:51 AM IST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் கடந்த 18,19 ஆகிய இரு தினங்கள் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்றதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருமைப்பாட்டையும், அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஜூலை 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரியக்கங்களை நடத்திட, கட்சி அணிகளையும், பொதுமக்களையும், அறைகூவி அது அழைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்காக உடனடிச் செயல் திட்டமாகவும், எதிர்கால அரசியல் தீர்வாகவும் சில முன்மொழிவுகளைக் கூற, இந்திய நாட்டின் பிரதமரை கட்சியின் உயர்மட்டக் குழு சந்திப்பது எனவும…
-
- 0 replies
- 929 views
-
-
மாக்சியப் பண்டிதர்களாகவும்,அறிவு ஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம்,புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜன நாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது. தமிழ் ஈழமக்கள் இந்தப் போ…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழத்தான் கிருபா லைக்கா சுபாஸ்கரனை அடுத்து 10 டாலருக்கு இணையம் நடத்தும் இணைய போராளிகளின் அடுத்த இலக்கு தமிழ் தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மேல் பாய்கிறது. ஆனந்த கிருஷ்ணன் ஈழத்தின் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவரும் மலேசியாவில் குடியேறியவரும் ஆவார். இவர் உலகின் 82 வது செல்வந்தரும் மலேசியா நாட்டின் 2 வது செல்வந்தராகவும் உள்ளார். உலகின் முதல் 100 செல்வந்தர்களுள் உள்ள ஒரே தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் மலேசிய நாட்டின் Maxis மற்றும் இந்திய Aircel நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் என்பதுடன் மேலும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக…
-
- 0 replies
- 596 views
-
-
இதயசுத்தியுடனான நடவடிக்கையே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் அரசியல் தீர்வின் அவசியம் குறித்து தமிழ் தரப்பினரால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் இன்னமும் உறுதியான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் இந்த முயற்சி விடயத்திலும் தொடர்ச்சியான இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று எதிர்க்கட…
-
- 0 replies
- 336 views
-
-
இதனால்தான் கொலை நடந்தது : Formar CBI Officer Ragothaman Interview About Rajiv Gandhi Murder | LTTE.
-
- 0 replies
- 408 views
-
-
பொதுவாக ஒரு கிரிமினல் வழக்குகள், விடயங்களை ஆர்வத்துடன் தொடர்வேன். முன்னர் 'சபிக்கப்பட்ட வைரம்' தொடரும் எழுதி இருந்தேன். இன்று அம்மாவும் கொலைகார பிள்ளைகளும் குறித்து பார்ப்போமா. அம்மா, ஜெயலலிதா ஒரு அரசியல் விபத்து. தன்னை 'வைத்திருந்த' எம்ஜிஆர் இறுதி பயண ஊர்தியில் ஏறி அமர்ந்த போது, ஒருவரால் கிழே இழுத்து தள்ளப்பட்டபோது அவரது அரசியலும் ஆரம்பம் ஆனது. கூடவே வந்து சேர்ந்தார் சசிகலா. இந்த பெண்மணியின் பேராசையே, நடிப்பின் மூல வருமானம், எம்ஜியார் ஆதரவு, தாயாரின் சொத்து என ஓரளவு வசதியாக இருந்த ஜெயலிலிதாவின் வாழ்வினை பலவகைகளில் நாசமாக்கியது. அமைச்சர்கள் ஊழல் செய்ய ஊக்குவிற்பதும், அதில் குறிப்பிட்ட வீதம், போயஸ் கார்டனுக்கு வர வேண்டும் என்று, வரும் பணத்துக்கு கண…
-
- 4 replies
- 996 views
-
-
-
- 0 replies
- 456 views
-
-
http://www.perarivalan.com/ இது அநீதி முறுக்கிய தூக்குக்கயிற்றின் கீழே வெகுகாலமாய் நின்று கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கான இணையவெளி. ஏற்கெனவே ஒருமுறை நிச்சயித்திருந்த தண்டனைக்கான நாளை, நாம் எல்லோரும் தெருக்களில் இறங்கி நின்று, ஒட்டுமொத்தமாய்ப் போராடி வெற்றி கண்டோம். தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் ஒரு முறை எழுச்சியில் மரணதண்டனையை முற்றும் முழுதுமாய் இந்தியாவிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை என் உடலின் உள்ளத்தின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இது தான் நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. இன்றைய நிலையில், சமூக ஊடகங்கள் தாம் நம் பக்கபலமாயும் பாதையாகவும் இருக்கமுடியும். பேரறிவாளனின் இணைய வெளியைப் பயன்படுத்தி நாம் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க வேண்டு…
-
- 0 replies
- 315 views
-
-
இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா? ஒரு சுதந்திர நாட்டில் என்ன என்ன எல்லாம் இருக்கும்? 1.) முதலில் எல்லோருக்கும் உணவு, உடை, உறைவிடம் இருக்கும். 2.) கருத்துச் சுதந்திரம் இருக்கும். 3.) மலைகளும், பள்ளத்தாக்குகளும் போல பணக்காரர், ஏழை இருக்காது. 4.) தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஒரு சட்டம் தெரியாத மக்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருக்காது மேற்குலக நாடுகளில் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு ஒருவராவது உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மேற்கூறப்பட்ட 4ம் நிறைந்த இடமாகவே இருக்கின்றது. இந்தநாள் இந்தியாவிற்கு வெள்ளையனை வெளியேற்றப்பட்ட ஒரு தினமாகக் கொண்டாடலாம். சுதந்திரமான ஒரு தே…
-
- 7 replies
- 919 views
-
-
முப்பது வருடங்களுக்கு மேல் தொடர்ந்த அத்தியாயம் ஒன்றினை அடுத்து இப்போது இரண்டாவது । । இது மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை ........ அங்கின நெலம என்ன?" எல்லாம் முடிஞ்சி வா," ஆ? என்ன சொல்றிங்க" "எங்கட ஊடு, கடே, ஆட்டா எல்லாத்துக்கும் நெருப்பு வெச்சி வா, வைப் புள்ளங்க கூட ரோட்டுல நிக்கிறம் வா😭, " "யாரு வா செஞ்சாங்க, எங்க இருக்கிறிங்க இப்ப? கேபியூ போட்டுத்தானே ஈக்கி?" "எங்களுவளுக்குத்தான் கேபியூ போட்டிருக்காங்க வா, அவகளுக்கு இல்ல😭" "சரி அழாதீங்க வா, எங்க இருக்கிங்க இப்ப?" "எங்கட ஆட்டாக்கு நெருப்பு வெச்சி, ஊடு கட எல்லாம் எரிஞ்சிட்டுவா, ரெண்டு பள்ளியும் ஒடச்சி, குரான் எல்லாம் நாசம் பன்னிட்டாங்க வா, நடந்து புள்ளயல் வைப் எல்லாம் எங்கவா போவம்" …
-
- 1 reply
- 471 views
-
-
மகிந்தவின் இளைய மகன் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் விளையாடும் றக்பி போட்டியை (ஒரேயொரு நாள் மாத்திரம்) தனது வாசஸ்த்தலமான அலரி மாளிகையிலிருந்து நேரடி தரிசனமாகப் பார்ப்பதற்கு 20 லட்சம் ரூபாய்களை மகிந்த செலவு செய்துள்ளார். மகிந்தவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவின் மகள் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கா வந்து இறங்கியவுடன், அவ்விடத்திலிருந்தே ராணுவ உலங்குவானூர்தி மூலம் தனது வீட்டைச் சென்றடைந்தார். இந் இரு விடயங்களும் தென்னிலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
- 5 replies
- 1.8k views
-
-
டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில், நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந…
-
- 6 replies
- 1.2k views
-
-
இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம் படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” - கலகொட அத்தே ஞானசார தேரர் (15.06.2014) “தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனை, சுயகட்டுப்பாடுள்ளவனை பிக்கு எனக் கூறுங்கள்.” - புத்தபெருமான் மேடையில் கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். வாயிலிருந்து நஞ்சும் நெருப்பும் கொட்டுகின்றன. கீழே பெருமளவு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பொதுமக்களும் பௌத்த துறவிகள…
-
- 1 reply
- 655 views
-
-
சமீப காலமாக என் மனதில் தோன்றியது நாங்கள் புலியை ஒதுக்கி வைக்கிறோமோ என்று எங்களுக்காக இவ்வளவு பாடுபட்டு எமக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த தேசிய தலைவருக்கும் எமக்காக உயிர் நீத்த 20000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களையும்,இன்னும் போராடும் வீரர்களையும் நாம் மறந்து விட்டமோ என நினைக்க தோன்றுகிறது. புலம் பெயர் நாட்டில் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்னும் காரணத்தால் நாம் புலிக் கொடியை தூக்கி பிடிப்பது இல்லை.இதனால் மாற்று கருத்தாளர்கள் நினைக்கிறார்கள் புலி ஆதரவாளர்கள் புலியை மறந்து விட்டார்கள் என சமீபத்தில் லண்டனில் நடந்த பேரணி பற்றி கூட மாற்று கருத்தாளர்கள் இது புலிக்காக வந்த கூட்டத்திலும் பார்க்க மக்களுக்காக வந்…
-
- 12 replies
- 1.4k views
-
-
தமிழினத்தின் இடர்கள் என்னுடைய தரப்படுத்தல்...... 1 Osama bin laden 2 Indias' foreign policy over Sri Lanka 3 Ban ki Moon 3 China 4 Sonia 5 Hindu Ram 6 Karuna & co 7 Karunanithi 8 Gotabaya 9 Sarath fonseka 10 George W bush 11 Mahinda Rajapakshe 12 World Bank and IMF 13 Richard BOucher(America's defence commander for asia and pacific region) 14 Arumugam thondaman 15 Chandrasekar 16 Yasusi Akasi 17 scho 18 subramanya swami இது சரியா??
-
- 7 replies
- 2k views
-
-
வெக்கம் மானம் சூடு சொரனை இதுல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு திரியறவன் செய்யிற வேலையா இது நீங்களே சொல்லுங்க மக்கா... Injured Indians still in hospital இத போயி நாம கேட்டாக்க அண்டைநாடு பிராந்திய நலன் காக்கும் ராஜ தந்திரநடவடிக்கை அது இது சல்ஜாப்பு சொல்லுவாங்க.ஏற்கனவே ஒரு தடவ டவுசர கழட்டி அனுப்புனாங்கங்கிற ஒரு காரணத்த வச்சுகிட்டு சும்மா அவங்கள போயி நோண்டிகிட்டு இருந்தா இப்படித்தான் பொடனியோட ஒன்னு போட்டு அனுப்புவாங்க. நம்ம இந்திய அதிகாரிகள் போயி ஈழத்துல அல்லக்கை வேலை பாக்கிறதைதான் சொல்லுறேன் மக்கா. தெரியாமத்தான் கேக்கிறேன் அவங்க தனிநாடு வாங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை. எதுக்கு "பேஸ்மட்டம் (பசெமென்ட்) வீக்"க்குன்னு வடிவேலு ஆட்டிகாட்டுறது மாதிரி ஊரு பூராம் ஆட்ட…
-
- 3 replies
- 1.3k views
-