நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இனவாதிகளென்று கூறிவிட முடியாது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற சிங்கள தேசம் தந்த மகான்கள் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட காலங்களிலும் சரி பின்னரும் கூட தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்காக குரல் கொடுத்தே வந்தார்கள். மனிதாபிமானம் என்பது அனைத்து இன மக்களுக்குள்ளும் இருக்கிறது என்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது. கருணாரட்னாவின் சமீபத்தில் வெளிவந்த கருத்துக்களை விரிவுபடுத்தி எழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம். தற்கால வடக்கு மாகாணத்தில் நிலவும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைகளை வன்மையாக கண்டித்து நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன நீண்டதொரு பட்டியலை வெளியிட்…
-
- 0 replies
- 766 views
-
-
அஹ்ஸன் அப்தர் / Ahsan Afthar கொழும்பு பௌத்த பாளி பல்கலைக் கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம் பெற்றுக் கொள்வதற்கும் தயாராகி வருகின்றார். இந்நிலையில், களுத்துறையில் உள்ள தனது பிரிவெனாவில் கல்வி கற்கும் இளம் பௌத்த துறவிகளுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் பணிகளையும் செய்து வரு கின்றார். ரதன தேரரின் தாய்மொழி சிங் களம் ஆகும். ஆனால் இப்போது தமிழ் மொழியில் தேர்ச்சியடைந்து தமிழை கற்பிப்பதோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் அன்றாட வாழ்க்கையில் தனது தனிப்பட்ட கருமங்களையும் தமிழ்மொழியில் ஆற்ற…
-
- 1 reply
- 637 views
-
-
(ஓ)கோத்தபாய சொன்னது ரொம்பச்சரி. இனிமேலும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. என்பது. இப்போது பெருச்சாளிப் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. அதைக் முளையிலே கிள்ளிவிட அனைவரும் செயற்படவேண்டும். உலக நாடுகள் கண்மூடி இருக்கக்கூடாது. இப்படிப்போனால் தமிழர்கள் இலங்கையில் வேரோடு அழிக்கப்பட்டுவிடுவார்கள். உலகம் தன் தவறை உணர்ந்து இனியாவது தமிழரின் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். சிங்களப்பயங்கரவாதம் முடக்கப்பட வேண்டும். உலகம் இதைச்செய்யத்தவறின் மனிதஉரிமை மீறல்களுக்கும், ஒரு இனத்தின் உரிமைக்கும் தீங்கிழைத்ததை இறைவன் மன்னிக்கமாட்டான். உலகமே பயங்கரவாதம் உலகத்தைப் பயங்கரவாதமே ஆளுகின்றது. என்ற வார்த்தைக்கு விதிவிலக்கு அழிக்கமுடியாதது.
-
- 1 reply
- 879 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குமுன், தமிழர்களையும் இணைத்துக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் அண்மையில் புதுடில்லிக்கு வந்தபோது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். இதையேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி வந்தபோது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் கூறியிருப்பார் என எடுத்துக்கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் இரு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்ற தமிழ் தேசியக…
-
- 1 reply
- 738 views
-
-
சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா? அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அகியோரைக் கொலை செய்யவதற்கான முயற்சி ஒன்றினை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதில் பொலிஸ் மா அதிபருக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்கிற கோணத்திலும் விசாரணைகள் நடக்கின்றன. பொலிஸ் திணைக்களத்திற்குச் சொந்தமான துப்பாக்கிகள் இரண்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை அரசியல் தலைவர்களின் கொலைக்குப் பயன்படுத்தப்பட இருந்தனவா என்கிற கோணத்திலும் விசாரணை முன்னெ…
-
- 0 replies
- 528 views
-
-
பிரித்தானியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த நிலையில், பல்லின மக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்ட நிலையில் சிங்களத்தின் தமிழர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து மனித நேயன் சிவந்தன் தனது உணவு மறுப்புப் போராட்டத்தை 22 நாட்களாக தொடர்ந்து முடித்துள்ளார். இப்போராட்டம் இன்று சர்வதேச மக்களை ஈர்த்துள்ளது. அவர்கள் இப்போராட்டத்தின் நோக்கம் பற்றியும் சிங்களத்தினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் சிவந்தனின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அழித்திருந்தன. இந்தநிலையிலும் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஓய்ந்தபாடில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் சிறீலங்க…
-
- 0 replies
- 445 views
-
-
சிங்களவர்களுக்கு புரியவைக்க முடியுமா? இலங்கை என்கிற நாடு பிளவுபடாமல் பிரியாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு இதுவே என்று சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு ஒன்றின் ஊடாக இதனைச் சாதிக்க முடியும் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய அரசமைப்பு முயற்சிகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இரத்தினபுரியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசமைப்பே ஒரே வழி என்கிற அடிப்படையில், அதற்கு ஆத…
-
- 0 replies
- 269 views
-
-
சிங்களவர்களும் -தமிழர்களும் எப்போதுமே விரோதமானவர்களாக இருந்திருக்க வில்லை பி.கே.பாலசந்திரன் 0000000000000 *காலனித்துவஆட்சிக்கு முன்னைய காலங்களில், மோதல்களுக்கும் ஒத்துழைப்பிற்கும் இடையில் உறவுகள் மாறி மாறி அமைந்திருந்தன . *கி.பி 9 ஆம் நூற்றாண்டில், சிங்கள மன்னர்கள் தங்கள் பாதுகாப்புகளை அதிகரித்துக்கொண்டதுடன் தென்னிந்திய சூறையாடுபவர்களை தடுக்க இராஜதந்திரநடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் . * இலங்கையில் நடைமுறையில் இருந்த தேரவாத பவுத்தத்தின் வாகனமாக பாளிமொழி இருந்தபோது, இலங்கை பவுத்த பிக்குகள் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டதுடன் , அதில் படைப்புகளை எழுதினர்,அத்துடன் அந்த மொழியில் இந்திய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டனர். *போர்கள் இருந்தபோதிலும், தெ…
-
- 5 replies
- 674 views
- 1 follower
-
-
சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள் மகாவம்சம் என்னும் சிங்களவரின் அபத்தமான காவியம். அங்கே குவேனி என்னும் இளவரசி,அரச குடும்பத்தில் இருந்து தப்பி காட்டினுள் ஓடுகிறாள். ஓடியவள், காட்டில் ஒரு சிங்கத்தினை காண்கிறாள். அது சிங்க முகம் கொண்ட மனிதன் என்றால் பரவாயில்லை, ஆனால்,மனிதரையே அடித்து தின்னும், காட்டு விலங்கு. அதன் மேல் காதல் கொண்டு, இணைந்து, சிங்கபாகு, சிங்கபாலி எனும் இரு குழந்தைகளை பெறுகின்றாள். வளர்ந்த சிங்கபாகு, தங்கையை, தகப்பன் சிங்கத்தின் பாலியல் வன்முறை இருந்து பாதுகாக்க, தந்தை சிங்கத்தினை கொன்று, தனது தங்கை சிங்கபாலி யினை தானே மணந்து, அவர்கள் மூலம் வந்த இனமே சிங்களம். (தலயில அடிக்காதீங்க). தகப்பன் சிங்கம், விவசாயம் செய்து புள்ளை, குட்டியல வளத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிங்களப் பேரினவாத அரசின் கோரப் பற்களைப் பிடுங்குவதற்காக சர்வதேச சமூகம் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்ற நிலையில் அதன் தீவிரத் தன்மையையும் கடந்து அவுஸ்திரேலியா சிட்னியில் ஒரு குழுவினர் மிகத் தீவிரமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பணியினை செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்துகின்ற மிக முக்கிய குழுவாக தம்மை அறிவித்துக்கொள்கின்ற அமைப்பு ஒன்று இந்த நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. அந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பது எதற்காக என்று ஆராய்ந்தால் அது “பண்ணையாரும் பத்மினியும்” என்ற தென்னிந்திய சினிமாப் படத்தினை திரையிடுவதற்கு மக்களைத் திரட்டுவதற்காக என்ற பதிலே கிடைத்திருக்கிறது. குறித்த அமைப்பி…
-
- 0 replies
- 601 views
-
-
http://www.tamilmurasuaustralia.com/2013/01/blog-post_21.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா----- படங்களை பார்க்க மேல் உள்ள இணையத்தை கிளிக் செய்யவும் ------நேரடியாக இணைக்கமுடியவில்லை
-
- 4 replies
- 565 views
-
-
பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஜோலா தனது கடைசி நாவலை 'வெரைட்' [உண்மை] என்று தலைப்பிட்டு இந்த அழியாத வார்த்தைகளை எழுதினார். "உண்மை நிலத்தடியில் புதைக்கப்படும் போது அது வளரும், அது மூச்சுத் திணறும், அது ஒரு வெடிக்கும் சக்தியை சேகரிக்கிறது, அது வெடிக்கும் நாளில், அது எல்லாவற்றையும் வெடிக்கச் செய்கிறது." வரலாற்றிலிருந்து மக்களும் அரசாங்கங்களும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று ஹெகல் தனது வரலாற்றுத் தத்துவத்தில் குறிப்பிட்டார். இந்த அவதானிப்பு நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. சேனல் 4 வீடியோ அதன் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது ஈஸ்டர் ஞாயிறு படுகொலை பற்றிய புதிய விசாரணையைத் தூண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் தொடர்பில் சனல் 4 ஆவண…
-
- 1 reply
- 522 views
-
-
சிந்து சமவெளி- 5000 ஆண்டு திராவிடப் பண்பாடு. : சூர்யா சேவியர் அக்டோபர் 2024 - Uyirmmai Media · சமூகம் 1922ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் ஜான்மார்ஷல் நடத்திய அகழ்வாய்வில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது இந்நகரங்கள் இரண்டும் நிலப்பரப்பின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ளன. உலக வரலாறு குறித்த சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை இக்கண்டுபிடிப்புகள் உருவாக்கியது. இவற்றின் கட்டமைப்புகள் கி.மு.2500 ல் நாகரிகத்தின் உச்சநிலையை அடைந்திருந்ததை உலகிற்கு உணர்த்தியது. இதில் ஆச்சரியமான ஒரு விசயம் யாதெனில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கலின் அளவு இன்று வரை மாறாமல் இருப்பது தான். அங்கிருந்த மிகப்பெரும் தானியக் களஞ்சியம் தனியுடமை இல்லாத கூ…
-
- 1 reply
- 469 views
-
-
சின்னத் தேர்தலும் பெரிய கேள்விகளும் மொஹமட் பாதூஷா உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சத்தியத்தன்மை குறித்த வாதப் பிரதிவாதங்களே, இன்று அரசியல் அரங்கை நிரப்பியுள்ளன. தேர்தல் நடந்தால், நாட்டில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாம் முற்றாகத் தீர்ந்து விடும் என்ற அளவுக்கு அதன் முக்கியத்துவம் பெருப்பித்துக் காட்டப்படுகின்றது. இந்தப் பின்னணியில், தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் பூர்த்தியாகி, ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் சபைகளைக் கலைத்து, மார்ச் மாதத்தில் வாக்…
-
- 0 replies
- 175 views
-
-
நேற்று 09.11.08 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். சின்னத்திரைக் கலைஞர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தியிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன், இயக்குனர் செல்வமணியுட்பட மற்றும் பலரின் உரைகளின் பகுதியடங்கிய பிரத்தியேக வீடியோத் தொகுப்பு http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 0 replies
- 789 views
-
-
சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக சட்டநடவடிக்கை: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஏப்ரல் 5ம் திகதி (திங்கட்கிழமை) தமிழ்வின் இணையத்தளத்தில் ‘வழி தெரியாமல் வழி காட்டும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ‘என்ற தலைப்பில் ஜோய் தனபாலன் என்பவருடைய செய்தியை வெளியிடும் பொழுது பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னம் அந்தச் செய்தியில் போடப்பட்டிருந்தது. சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டுச் சட்டங்களுக்குஅமைவாக இயங்கும் அமைப்பு தனது உத்தியோகபூர்வ செய்தியையே தனது சின்னத்துடன் வெளியிட முடியும். ஆனால் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஜோய் தனபாலன் என்கின்ற தனிநபரின் செய்திக்கு பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்தியிருப்பது ம…
-
- 6 replies
- 908 views
-
-
சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் ஆர். அபிலாஷ் சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரைஅவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும்தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போதுகொண்டாடியது, தன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம்வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டி “ஒருவர் உங்களிடம் 2004இல் தவறாகநடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்கமுடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்தசின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண…
-
- 75 replies
- 9.5k views
- 1 follower
-
-
சியால்கோட்டில் பிரியந்த குமார படுகொலையும் இலங்கையில் தமிழ் முஸ்லிம் படுகொலைகளும், மனோகணேசன் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும்இ இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை. தனிப்பட்ட முறையில் கொலைகள் தாக்குதல்கள் உலகம் முழுக்க நடக்கின்றன. ஆனால் இன மத மொழி அடிப்படையில் இவை நடக்கும் போதுதான் தலைப்பு செய்தியாகின்றன. அது சரிதான். இன மதம் உணர்வுகள் போதை வஸ்து மாதிரி ஆரம்பித்தால் முடிவுக்கு இலேசில் வராது. சுதந்திர இலங்கையில் தமிழருக்கு எதிரான இனரீதியான தாக்குதல்கள் படுகொலைகள் 1950 களில் ஆரம்பித்து 1956 1958 1961 1977 1981 1983 ஊடாக 2000கள் வரை தொடர்கின்றன. தமிழராக பிறந்த ஒரே காரணத்தால் இனரீதியாக பல நூறு தமிழர்கள் சி…
-
- 0 replies
- 237 views
-
-
[TamilNet, Sunday, 04 February 2024, 15:40 GMT] இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இன அழிப்புப் போரொன்றை ஓர் அரசு நடாத்தினால் அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான 1948 ஆம் ஆண்டுச் சட்டத்தின் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஊடாக அவ்வரசு எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை சியோனிச இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கைச் சர்வதேச நீதிமன்று நம்பகமான நீதிவரம்புக்குட்படும் (prima facie jurisdiction) குற்றச்சாட்டாக ஏற்றுக்கொண்டமை கனதியாக நிறுவியுள்ளது. இதுவரை காலமும் தமது நலன்களுக்கேற்ப அமெரிக்காவும் அதன் அணிவகுப்பும் சர்வதேசச் சட்டங்களையும் நிறுவனங்களையும் ‘விதிகளின் பாற்பட்ட சர்வதேச ஒழுங…
-
-
- 1 reply
- 314 views
-
-
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அகதியாக நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளும் பெரிய அளவில் அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யவில்லை. கடந்த வாரம் அகிதிகள் குழு ஒன்று ஐரோப்பாவிற்கு செல்லும் போது, துருக்கி அருகே அந்த படகு விபத்துகுள்ளானதில் ஆலன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள். உலகின் மனசாட்சியை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த அந்த 3 வயது சிறுவனின் மரணத்திற்குப் பிறகு அகதிகளின் வாழ்வில் புதிய மாற்றம் சிறிய அளவிலேனும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரி…
-
- 0 replies
- 251 views
-
-
துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர். இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எது…
-
- 1 reply
- 823 views
-
-
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசினை பதவி விலகக் கோரி கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எதிர்ப்பாளர்களை இராணுவம் மூலம் அதிபர் ஆசாத் ஒடுக்கி வந்தநிலையில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து ஐ.நா. வெளியிட்டு வந்த அறிக்கை, ஐ.நா. பொதுச் சபையில் சிரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் தடைகளை விதிப்பதற்கும் வழிவகுத்தன. இறுதியில் ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனான் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதனைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. படையினரையும் அனுப்பிவைத்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் இன்னமும் த…
-
- 0 replies
- 554 views
-
-
நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுத்திக்கொண்டிருந்தார்.1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார். கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்தபின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்…
-
- 4 replies
- 691 views
-
-
[size=3][size=4]சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்வ…
-
- 0 replies
- 420 views
-
-
அடுத்த ஆண்டு சிறந்த ஈழத்தவர் திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கப்படும் என்ற முழக்கத்துடன் பரிஸ் தமிழ்த் திரைவிழா ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக சிறப்புடன் நிறைவுகண்டுள்ளது. கடந்த ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இத்திரைவிழாவில், யாழ்பாணம் உட்பட சுவிஸ், அவுஸ்றேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஏழு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட்டிருந்ததோடு கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தன. சுவிசில் இருந்து திரைத்துறைக் கலைஞர்கள் உட்பட பிரான்சின் தமிழ்ச்சூழலில் செற்பட்டு வருகின்ற பல்வேறு துறைசார்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்விற்கு பங்கெடுத்து சிறப்பூட்டியிருந்தனர். மூன்று தiலைமுறைகளைக் கண்டு நிற்கும் புலம்பெயர் வாழ்வியல் பயணத்தி…
-
- 2 replies
- 431 views
-