Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்?

Featured Replies

தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்?

 

இந்த கேள்வி எம்மில் எல்லோருக்கும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஒரு அரசியல் வெற்றியாக, குறிப்பாக டெல்லியின் இலங்கை அணுகுமுறையில் நிலையான மாற்றத்தை கொண்டுவர உதவவேண்டும் என்பது, மாற்றவேண்டும்.


உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

 

நன்றிகள்!

  • தொடங்கியவர்

எனது பார்வையில் இந்த மாணவர் போராட்த்திற்கு மட்டுமல்லாமல் பல வழிகளில் புதிய தலைமுறை ஊடகம் சேவை செய்து வருகின்றது.

 

அவர்களின் ஊடகத்திற்கு கை கொடுக்கலாம். எல்லா சமூக வலை தளங்களிலும் அவர்களின் பிரசன்னம் உள்ளது, அதில் நாம் இணைந்து பலம் சேர்க்கலாம்.


இல்லை ஒரு நன்றிக்கடிதம் அனுப்பலாம்.

-----------------------------------------------------------------

 

to : news@gennowmedia.com

 

Subject: ஈழ தமிழர் விடயங்கள்: மனமார்ந்த நன்றிகள்

 

அன்புடன் புதிய தலைமுறை ஊடகத்திற்கு,

 

நீங்கள் அண்மைக்கலாமாக செய்திகளை மிகவும் சிறப்பாக வழங்குவதை பாராட்டுகின்றேன்.

 

ஒரு வரலாற்று காலகட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை அந்த நிகழ்வுகளை பக்கச்சார்பு அற்று வழங்கும் உங்களின் ஊடக பண்பிற்கு நன்றிகள்.

 

தொடரட்டும் உங்கள் சேவைகள்.

இப்படிக்கு,

 

---------------------------

ஒரு ஈழத்தமிழன்.

 

 

 

 

Edited by akootha

  • தொடங்கியவர்

to : cmsec@tn.gov.in,  cmcell@tn.gov.in

Subject : Please do not suppress students' rights to express 

Selvi  J Jayalalithaa
Hon'ble Chief Minister
of TamilNadu.

Vanakkam,

The students in TamilNadu want to express their genuine political will on Tamils in Sri Lanka. Their right to peaceful protest and hunger strikes are fundamental to any democratic system. 

 

Let the students use their democratic rights!

 

Please help make history !!

 

Anpudan,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்?

 

இந்த கேள்வி எம்மில் எல்லோருக்கும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஒரு அரசியல் வெற்றியாக, குறிப்பாக டெல்லியின் இலங்கை அணுகுமுறையில் நிலையான மாற்றத்தை கொண்டுவர உதவவேண்டும் என்பது, மாற்றவேண்டும்.

உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

 

நன்றிகள்!

 

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

  • தொடங்கியவர்

to : ilamugil@dmk.in

 

Subject: DMK should cease its support to Congress now!

 

Dear DMK,

 

Now the people of TamilNadu have loudly spoken their verdict on what should India do about Sri Lanka, I would like to see DMK withdrew its support to Congress in New Delhi to immediate effect. 

 

Only this can send a clear message to Sri Lanka which continues its genocide against Tamils.

 

Sincerely,

 

  • தொடங்கியவர்

156091_349945331776052_1670680654_n.jpg

 

"தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப்போராட்டம் தரணியெங்கும் வாழும் தமிழருக்கு புது நம்பிக்கை தருகின்றது – திசைகள் இளையோர் அமைப்பு டென்மார்க்"

 

======================

 

கடல்கள் பல நம்மைப் பிரித்தாலும் சூழ்நிலை எம்மை திக்குத் திக்காக வைத்தாலும் தமிழர் என்கின்ற தொப்பிள்க்கொடி உறவு எமை, எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தழராது கைகோர்த்து இணைந்திருக்கும் என்பதை உங்கள் மூலம் மறுபடியும் உணர்கின்றோம், ஆனந்தமடைகிறோம். கடந்த காலங்களில் காயங்கள் பலதை சந்தித்த எம் இதயங்களில், உங்களின் உணர்வுக் குரல்கள் எமக்கு உற்சாகத்தை தருகின்றது. எத்தடையையும் உடைத்து தமிழனுக்கு விடிவு மலர்ந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கின்றது.

 

நாம் தமிழ் இளையோர் எதிர்காலத் தமிழ்த் தலைமுறையின் ஆணிவேர்கள் தமிழ் இனத்தின் எதிர்காலத்தை இவ்வுலகில் வடிவமைப்பவர்கள். எம்மால் முடியும், நாம் நினைத்தால் சாத்தியமடையும், இல்லாவிட்டால் சாத்தியமடைய வைப்போம், மாற்றி அமைப்போம் என்று உறுதியாக காலவரையின்றி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கிறீர்கள், இது உங்களின் அசையா இனப்பற்றை வெளிக்காட்டுகின்றது. காலங்காலமாக தமிழர்கள் மீது சிங்களம் கோரத்தாண்டவம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. இது உலகறிய 2009ம் ஆண்டில் முற்றிலும் திட்டமிட்ட தமிழினப் படுகொலையாக மாறியது. உலகமோ தனது கண்களை மூடியிருந்தது, அப்போதும் உலகில் அனைத்து திசையிலும் தமிழன் தரையிறங்கிப் போராடினான், ஆனால் எமக்கு நீதி கிடைக்கவில்லை.

 

இன்று இலட்சக்கணக்கான உயிர்களை நாம் இழந்து உலகமே கண்டறியாத கேவலமான, நெஞ்சைப் பிழக்கவைக்கும் பல சம்பவங்களை சிறார்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் ஏற்படுத்தி, தொடர்ந்தும் சொந்த மண்ணில் அடிமையாய் செத்துப்பிழைக்கும் நிலையில் எம் இனம் உள்ளது, இதை Channel 4 ஆவணமாக திரையாக்கி உலகிற்கு வெளிக்காட்டி உள்ளது. இந்த ஆவணப் படத்தில் அடங்காத உண்மைகள் இன்னும் பல. நாம் இந்த சந்தர்ப்பந்தை நழுவவிடக்கூடாது இன்னுமோர் பேரழிவை எம்மினம் தாங்காது. இதை நீங்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றீர்கள் உறுதியுடன் செயற்படுகின்றீர்கள்!


தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி சென்று நேர் வழி சென்றால் நாளை நமதே இந்த நாளும் நமதே என்று மனம் தளராமல் அனைத்துலக தமிழர்களும் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நாம் வாழும் நாடுகளில் முன்வைப்போம், நீதிக்காகப் போராடுவோம் என்று உறுதி மொழி எடுப்போம் தமிழர் தாயகம் மலரும். இது காலத்தின் கட்டாயம்.

 

 

இங்ஙனம்
திசைகள் இளையோர் அமைப்பு டென்மார்க்

அனுப்பியாச்சு



முகநூல் உள்ளவர்கள் எல்லோரும் தயவு செய்து அவற்றில் வாழ்த்தும் நன்றியும் தெரிவியுங்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை யாரும் உசுப்பேற்றவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்களாகவே வழங்கிய உரையை வாசித்தால் அது தெரிந்திருக்கும். தமிழக மாணவர்களையும் புலம்பெயர் அமைப்புகள் எதுவும் உசுப்பி விடவில்லை. அவர்களாக தான் போராட்டத்தை தொடங்கினார்கள்.

 

எங்கு போராட்டம் நடக்க வேண்டுமோ அங்கு போராட்டம் நடக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் நடக்கிறது. அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.

 

  • தொடங்கியவர்

மாணவர்களின் போராட்டத்தில் நாம் எவ்வாறு பங்கெடுக்கலாம் ?

 

மாணவர்கள் களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்களுக்கான ஆயுதங்களை நாம் தரவேண்டும். குறிப்பாக தோழர் பிரபாகரனின் ஆவணப்படங்கள் அடங்கிய நூலான 'என்ன செய்யலாம் இதற்காக' என்ற நூலினை அனைத்து போராடும் தளத்திக்கு தருவோம்.

 

மேலும் அதுபோன்ற நூல்கள், வெளியான காணொளிகள் போன்றவற்றை தந்து இவை பற்றி தெரியாத மற்ற மாணவர்களும் இதில் பங்குபெற வழி செய்வோம். ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளையும் போராட்ட மையமாக்குவோம். மாணவர் சக்தி மகத்தான சக்தி. நமது போராட்டங்களை இனி முன்னேடுக்கபோவது இளைய தலைமுறையே !!

 

முகநூல்

  • தொடங்கியவர்

164458_439148062826617_1494792476_n.jpg

தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் போற்றி ஆதரவு தந்து ஊக்கப்படுத்தவேண்டிய விடயம்.

ஆனால் நம்மவர்கள், அதாவது நமது அமைப்புகள், அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

உலகத்தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழஅரசு, தேசிய அவைகள், புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்மாணவர்

அமைப்புகள் போன்றவை இதுவரை அப்போராட்டத்தை ஆதரித்துப் பாராட்டி அறிக்கை விட்டதாக இல்லை.

ஒருசில மாணவர் அமைப்புகள் மட்டுமே ஆதரவு அறிக்கைகளை விட்டுள்ளன. இது மிகுந்த வருத்தத்துக்குரிய

விடயமாகும்.நமது விடுதலைப்போராட்டம் வெற்றிபெற புலம்பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்

ஒன்றுபட்டு நெருக்கமான தொடர்புகளைப் பேணுதல் மிகமிக அவசியமாகும். எனவே நமது அமைப்புகள் இதுபற்றி

கூடிய கவனம் செலுத்தவேண்டும்.

 

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் சம்பந்தமாக

புலம்பெயர் தமிழ் அமைப்புகளும்  மற்றும் அதன் தலைமைகளும்

மௌனம் காப்பது கண்டிக்கப்படத்தக்கது

நன்றி அகூதா, அனுப்பியாச்சு . ஒவ்வொருமுறையும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு தவிப்பது எமது பழக்கம். இது சரியான தருணம் என்றே தோன்றுகின்றது. நன்றி தமிழக உறவுகளே.

ஈழத்தமிழருக்கு நீதி வேண்டி தமிழக மாணவர்கள் "ஓயாத அலை" களாக பேரெழுச்சி கொண்டு நடத்திவரும் போராட்டங்களை மனமார வரவேற்கிறோம். இந்த போராட்டங்களுக்கு முழமையான ஆதரவையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் :

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

 

- முகநூல் -

 

பி.கு: இது தொடர்பான அவர்களின் முழு அறிவுப்பு இருந்தால் யாராவது இங்கு இணையுங்கள். :rolleyes:

  • தொடங்கியவர்

தமிழக மாணவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் ஆதரவு நிகழ்வுகள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119030

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் கொஞ்ச நாளின் பிறகு இங்கு காணமல் போய் விடும் அதன் பிறகு எல்லோரும் வீதியில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் செய்வோம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

ஆ ,,,,,அப்ப பின்ன ...................மேலும் உங்கள் புத்திமதிக்கு காத்திருக்கிறோம் எடுத்து விடுங்கள் ......... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

 

யாழ் பல்களைகளக மாணவர்களை எப்படி உசுப்பேத்தியது என விளக்கமாக கூறுங்கள் பார்க்கலாம்? மற்ற திரி ஓன்றில் முருகதாசையும் உசுபேத்தி தான் தீயிட்டார் என்ற கருத்துப்பட எழுதி உள்ளார்கள். எத்தனை பேர் இப்படி புகுந்து விளையாட வெளிக்கிட்டுள்ளீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

 

சிறீலங்கன் எம்பசியில் வேலை செய்யிறவரா இருப்பாரோ? :wub:

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு பிரான்சு வாழ் மாணவர்களான தமிழ் இளையோர்களின் ஆத்மாத்தமான ஆதரவை நல்கின்றோம்.இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.இலங்கையின் சனாதிபதி தமிழினப்படுகொலையின் சூத்திரதரியும் குற்றவாளி என்றும் அறிவிக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஓரே தீர்வு தமிழீழ தேசமே என்றும்.இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து தாய்த்தமிநாட்டில் மாணவர்களும், இளையோர்களும், முன்னெடுத்திருக்கும் விழிப்புப்போராட்ட தீச்சுவாலையானது இந்திய தேசத்தையும், சிங்கள தேசத்திற்கு துணைபோகும் இந்திய ஆட்சியாளர்களையும், சனநாயகவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களையும், ஆட்டம் காண வைத்துள்ளது.

நாளுக்கு நாள் வீரியம் பெற்று வரும் இப் போராட்டத்திற்கு பிரான்சு வாழ் மாணவர்கள் இளையோர்களாகிய நாம் எமது நன்றியையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஒரு நாட்டின் உன்னத வளர்ச்சி பாதையில் மாணவர்களின் பங்கானது மிகவும் மகத்தானது. மாணவர்களின், உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும், கோரிக்கைகளையும், யாரும் எந்த சக்திகளும் புறந்தள்ளி விட முடியாது என்பது உலக வரலாறு கண்ட உண்மை.

தர்மத்தின் வழியில், உண்மையின் வழியில், நியாயத்தின் வழியில், நீதி கேட்டு நிற்கும், இளைய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கையை ஆளும் தரப்பில் உள்ளவர்களும், அரசியல் வாதிகளும், சனநாயகவாதிகள் எனக்கூறிக்கொள்பவர்களும், மனிதநேயத்தை மதிக்கின்ற நீதிமான்களும் மதிப்பளித்தேயாக வேண்டும். நிறைவேற்றியேயாக வேண்டும் எனக்கேட்டுக் கொள்கின்றோம். தினம் தினம் தினவெடுக்கும் போராடும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், இளையோர்களுக்கும், எமது உயிரிலும் மேலான தமிழக மக்களுக்கும் அவர்களின் போராட்டத்திற்கும் உறுதுணையாக பிரான்சு வாழ் மாணவர்களும், இளையோர்களும், மக்களும் எப்பவும் துணைநிற்பர் என்பதோடு ஐரோப்பிய நாடுகளிலும், தமிழ்மக்கள் சிதறிவாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழர் இளையோர் அமைப்பு – பிரான்சு

 

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

 

ஆமாம். வாருங்கள் சிங்களவனுக்குப் பணிவிடை செய்து பிழைப்பினை ஓட்டுவோம்...

269262_618741211476057_868608464_n.png

 

420101_618740874809424_1631327474_n.png

 

- முகநூல் -

  • தொடங்கியவர்

to: sg@un.org

 

16 MAR 2013

 

Hon. Ban Ki Moon.
UN Secretary General
United Nations
New York, USA

 

Subject : Sri Lanka : Tamil Spring demands UN referendum 

 

Dear UN Secreatry General,

 

About one million Tamil in the state of TamilNadu, India, have been staging peaceful demonstrations demanding a UN sponsored referendum on Tamils' Right to Self-Determination , for the last five days. This is a growing movement where there are eighty millions Tamils around the world.

 

The fact is that Tamils in Sri Lanka cannot co-exist in Sri Lanka as genocide continues.

 

I urge Your Excellency to help Tamils exercise their right to be free!

 

 

Sincerely,

Edited by akootha

நன்றி அகூதா, 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.