படம்: ரங்கராட்டினம் (1971)
இசை : V.குமார்
வரிகள் : கண்ணதாசன்
பாடியோர் : A.M ராஜா & L.R ஈஸ்வரி
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)
ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்
பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)
தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..