Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19152
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    23926
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/23/21 in all areas

  1. The thinner tree was cut years ago and the big one has been holding and feeding it since then. They "wake up" together in the spring and "go to sleep" together in the autumn. https://twitter.com/RebeccaH2030/status/1395352584018399234/photo/1
  2. பாசம் என்றால், இதுதான் பாசம்.......! 🐴
  3. புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.
  4. என்றென்றும் மறக்க முடியா கே.எஸ்.ராஜாவின் குரல்
  5. வணக்கம் வாத்தியார்.....! கனவோடு தானடி நீ தோன்றினாய். கண்களால் உன்னை படம் எடுத்தேன்... என் வாசலில் நேற்று உன் வாசனை... நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்... எதுவும் புரியா புது கவிதை... அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன். கையை மீறும் ஒரு குடையால். காற்றோடுதான் நானும் பறந்தேன். மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன். முதல்மழை என்னை அழைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே. பெயரே தெரியாத பறவை அழைத்ததே. மனமும் பறந்ததே... இதயமும்... ஹோய். இதமாய் மிதந்ததே... ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால். என் வாழ்வில் அந்த நாளே இல்லை... ஒ... ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால். அந்நாளின் நீளம் போதவில்லை... இரவும் பகலும் ஒரு மயக்கம். நீங்காமலே நெஞ்சில் இருக்கும். உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்... இறந்தாலுமே என்றும் இருக்கும். பெயரே தெரியாத பறவை அழைத்ததே... இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே.......! ---முதல்மழை என்னை அழைத்ததே---
  6. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது பெண் : உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம் ஆண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ….. பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ….. ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவை பகலாய் அறியும் பருவம் இரவை பகலாய் அறியும் பருவம்.....! ---பூமாலையில் ஓர் மல்லிகை---
  7. மட்டக்களப்பில் பன்றிகள் கூடப் பறக்குமாம் - ஜெயராஜின் தொடர் புனைவுகள் இணையம் : தமிழ்நேஷன் ஆங்கில மூலம் : சச்சி சிறிகாந்தா காலம் : 28, ஆடி2005 இல்லவே இல்லை, பன்றிகள் பறக்கமுடியா உயிரினங்கள் எனும் இயற்கை நியதிக்கு அப்பாற்பட்ட கண்டுபிடிப்பொன்றை நான் இங்கு மேற்கொள்ளவில்லை. சண்டே லீடரில் ஊடக வியாபாரத்திற்கான புரட்டுக்களைப் புனையும் டி பி எஸ் ஜெயராஜின் ஆடி, 24 2005 இன் இன்னொரு புனவுதொடர்பான எனது கருத்தையே அவ்வாறு எழுதினேன். ஜெயராஜின் புனைவுகளின் பிரகாரம் மட்டக்களப்பில் பன்றிகள் பறக்கின்றன என்றுதான் ஒருவருக்கு எண்ணத் தோன்றும். அவர் அப்பன்றிகளை தான் வசிக்கும் கனடா தேசத்திலிருந்து மிகத் தெளிவாகப் பார்க்கிறார். அவர் அண்மையில் புனைந்துதள்ளிய புரட்டுக்களுக்குப் பின்வருமாறு தலைப்பிட்டுத் தொடர்கிறார், "புலிகளுக்கு அவர்களின் பாணியிலியே கசப்பான பாடம் படிப்பிக்கப்பட்டு வருகிறது". ஜெயராஜின் புனைவுகளை இதுவரை படிக்காதவர்களின் வசதிக்காக அவரது புனைவின் முதல் 214 வார்த்தைகளை நான் இங்கே பதிவிடுகிறேன். "பல வருடங்களில் முதல்த் தடவையாக புலிகள் மிரட்டப்பட்டு, பயந்து ஒடுங்கி முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.இவ்வளவுகாலமும் தமிழ் இனத்தைத் தனது பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுருத்திக் கட்டுப்படுத்தி வைத்திருந்த புலிகள் இயக்கத்திற்கு அவர்களின் பாணியிலேயே தண்டனை வழங்கப்பட்டு வருகிறது". "வழமைக்கு மாறாக, புலிகளால் அடக்கப்பட்டு தடுக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ் ராணுவ அமைப்புக்களை ஒன்றுதிரட்டியுள்ள அரசும் ராணுவப் புலநாய்வுத்துறையும் அவர்களைக் கொண்டே புலிகளுக்கு சரியான தண்டனையினை வழங்கத் தொடங்கியிருக்கிறது. வழமைபோல புலிகளால் இதனை ஜீரணிக்க முடியவில்லை". "புலிகளாலும், தமது சொந்த நலன்களுக்காக புலிகளை ஆதரிப்பவர்களாலும் கருணாவின் பிரசன்னம் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கப்பட்டாலும் கூட, அவர் கிழக்கில் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதே உண்மை. கருணா தனது குடும்பத்தை சந்திக்கும் நிமித்தம் இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடொன்றுக்கும் இடையில் அடிக்கடி பயணித்து வருகிறார். அவர் கடந்த வைகாசி 6 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார், ஆனால் கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி அவர் மீண்டும் திரும்பிவந்து தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறார் என்று தெரியவருகிறது". "நான் மேலே குறிப்பிட்டதுபோல, கருணா எனும் நாமம் மிகவும் பிரசித்தமாகிவிட்டது. அவருக்கு ஆதரவான பெருமளவு போராளிகள் கிழக்கு மாகாணத்திலும், பொலொன்னறுவை மாவட்டத்திலும் நிலை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறான ராணுவ கட்டமைப்புக்களில், பல்வேறு இடங்களில் நிலைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமாக இயங்கிவரும் கருணா ஆதரவாளர்களுக்கு வளங்கல்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அரச ராணுவம் வழங்கிவருகிறது". "சிறிலங்கா ராணுவ புலநாய்வுத்துறை கருணா அமைப்பிற்கான நெறிப்படுத்தல்களை வழங்குவதுடன், வழிகாட்டியாகவும் செயற்படுகிறது. ஒரு குழுவாக இயங்கும் கருணா அமைப்பினருக்கு குறைந்தது ஒரு பலம் மிக்க நாட்டின் வெளியுறவுப் புலநாய்வுத்துறை தேவையானளவு நிதியினை வழங்கி வருகிறது".
  8. பரபரப்பு பத்திரிக்கையில் ரிஷியினால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று. யாழ்ப்பாணத்தில் றோவின் உளவாளிகளின் வருகை பற்றி இக்கட்டுரை பேசுகிறது. கருணாவைப் பிரிப்பதிலும், புலிகளைப் பலவீனப்படுத்தி இறுதியில் அழிப்பதிலும் முன்னின்று செயலாற்றிய இந்தியர்களின் செயற்பாடுகளைப்பற்றி நான் ஆக்கங்களை இணைத்துவருவதால், இதனையும் இங்கு இணைக்கிறேன். "தமிழகத்தில் இருந்து மூட்டைகட்டி வீடு வீடாக துணிகள் விற்பவர்கள் இங்கு களமிறங்கி யுள்ளனர். இவர்கள் தமிழகத்திலிருந்து விமானம் வழியாக கொழும்புக்கும் அங்கிருந்து விமானம் வழியாக யாழ் பாணத்துக்கும் வருகின்றனர். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் இவர்களில் எந்தவொரு வியாபாரியும் கொழும்பிலிருந்து தரை மார்க்கமாக யாழ் பாணம் வருவதில்லை. மூட்டைகளை காவியபடி யாழ் பாணத்தின் சகல குச்சொழுங்கைகளுக்கும் சென்று வியாபாரம் செய்கின்றனர். கடைகளைவிட மலிவாகக் கொடுக்கின்றனர். கடனுக்கு கொடுக்கின்றனர். மக்களின் குடும்ப நன்பர்களாக தம்மை வளர்த்துக் கொள்கின்றனர். கடன் வழங்கி மீளமீள வீடுகளுக்கு வருகின்றனர். பேச்சுவாக்கில் தகவல்களை திரட்டுகின்றனர். இவர்கள் குறைந்து பட்சம் பிஏ வரை படித்துள்ள பட்டதாரிகள். ஆஜானுபாகுவானவர்கள். தமிழகத்தின் பரம்பரைத் துணி வணிகர்கள் அல்ல இவர்கள். இவர்களுடன் பேச்சுக் கொடுத்து பார்த்தால் ஒரு ஆச்சர்யம் இவர்களில் பலருக்கு துணிவகைகளின் பெயர்களே சரியாகத் தெரிந்திரு பதில்லை! இவர்கள் யாழ்நகரில் தங்குவது மக்கள் தொடர்பு உள்ள இடங்களில் அல்ல. யாழ் நாகவிகாரை முன்பாக விகாரையின் கட்டு பாட்டில் படையினரின் பாதுகா பில் உள்ள விடுதிகளில்தான் இவர்கள் தங்குகிறார்கள். பெருமளவில் சாமிமார்கள். ஜோதிடர்கள் சித்த மருத்துவர்கள் இங்கு விமான மூலம் வருகின்ற னர். உதயன் (யாழ் பாணத்திலிருந்து வெளியாகும்) பத்திரிகையில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று விளம்பரம் போட படுகின்றது. இதை பார்த்து மக்கள் அவர்களிடம் செல்கின்றனர். அவர்கள் தமது போக்குவரவுச்செலவை ஈடுசெய்யும் வகையில் கட்டணங்களை அறவிடுவதில்லை. அவர்கள் மக்களை பல தடவைகள் தம்மிடம் மீண்டும் மீண்டும் வரச் செய்கின்றனர். மேலதிக சிகிச்சை பரிகாரம் எனக்கூறி அவர்களை தமிழகத்துக்கு வருமாறு அழைக்கின்றனர். அப்படி இந்தியாவரை போன யாழ் பாணத்தவர்களும் இருக்கின்றனர். இது யாழ் பாணத்தில் வசிக்கும் தமிழ்மக்களை தமது ஏஜன்ட்களாக தயார் செய்யும் வழி என்று ஊகிக்க படுகிறது. இதைவிட, யாழ் போதனா மருத்துவ மனைக்கு முன்பாக குறி சொல்லும் பெ களின் அம்மா வாங்க, அய்யா வாங்க என்ற குரல்கள் அதிகமாக உள்ளது. இவர்களும் விமானத்தில் வருபவர்களே. தமிழகத்தின் பொருளாதார வசதியை அறிந்தவர்களுக்கு ஒரு விபரம் தெரிந்திருக்கும். குறி சொல்பவர்கள் பஸ்ஸில் போய் வருவதே அவர்களுக்குக் கட்டு படியாகாத சமாச்சாரம். இங்கே அவர்கள் சர்வசாதாரணமாக விமானங்களில் போய்வருகிறார்கள்! தமிழகம்-கொழும்பு விமானக்கட்டணம் 16 ஆயிரம் ரூபா கொழும்பு - யாழ் விமானக் கட்டணம் 9 ஆயிரம் ரூபா. யாழ் பாணத்தில் தங்கும் செலவுவேறு இருக்கிறது. குறிசொல்ல பெறுவது 5ரூபா 10ரூபா. கணக்கை போட்டு பாருங்கள். இது கட்டு படியாகுமா என்று! யாழ் பல்கலைக்கழகத்துக்கு ஊடக பயிற்சி நெறிக்கு 180 மில்லியன் ரூபாவை டென்மார்க் அரசு ஒதுக்கியது. இதனை நடைமுறை படுத்தும் பொறுப்பை புதுடில்லி னெஸ்கோ கேட்டு பெற்றுக்கொண்டது. ஊடகக் கல்வியை செயற்படுத்தும் பொறுப்பு அருட்செல்வம் என்ற தமிழகம் மனோன்மணியம் சுந்தரர் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் ஒப்படைக்க பட்டது. யார் இந்த அருட்செல்வம்? விடுதலை புலி எதிர்ப்புக் கருத்தை கொண்டவர். அதே கருத்தை கொண்ட றோவின் ஆளான பேராசிரியர் சூரியநாராயணன் விடுதலை புலிகளுக்கு எதிராக புத்தகங்களை வெளியிடுவதை தொழிலாகச் செய்பவர் என்று சொல்ல படுவதுண்டு. இந்த அருட்செல்வம் யாழ் பல்கலைக் கழகத்தில் 6 மாத contractல் நுழைந்தார். 6 மாதங்கள் முடிந்த பின்னரும் இவர் இந்தியா செல்லவில்லை! இவரது யாழ் பாண contractஐ நீடிக்கும்படி டில்லியில் பார்த்துக் கொண்டார்கள். இப்போது 2 ஆண்டுகளாக யாழ் பாணத்தில் தொடர்கின்றார். இவர் யாழ்ப்பாண ஊடகவியாலாளர்களுடன் கற்பித்தல் என்ற காரணத்தால் நெருங்கி பழகச் சந்தர்ப்பம் அதிகம். யாழ் பாண பத்திரிகைகளில் ழைந்து, அவற்றின் லே-அவுட் சரியில்லை, சரியான விதத்தில் லே-அவுட் செய்து கொடுக்கிறேன் என்று தானாகவே உதவ முன்வந்தார் என்று சொல்ல படுகிறது. இவரை யாழ் தினக்குரல் மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது. அதனுள் நுழைந்து இந்திய ஆதரவு பத்திரிகையாக அதனைச் செலுத்தத் தொடங்க ஆபத்தினை உணர்ந்த நிர்வாகம் அவரிடம் இருந்து விலகியது என்று சொல்கிறார்கள். இவர் மூலமாகத்தான் மீடியாவுடன் சம்பந்த பட்ட யாழ் நகர்வாசிகளை றோ கவர் பண்ண இருப்பதாக ஒரு கதை உளவுவட்டாரங்களில் மிக பிரசித்தம். இந்தியக் கடற்பிரதேசத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களில் சிலர் அவ்வ போது வழிதவறி இலங்கைக் கடல் எல்லைகளுக்குள் ளைவது அவ்வப்போது நடக்கும் காரியம்தான். அவர்களை சிலசமயங்களில் இலங்கைக் கடற்படையினர் கைது செய்வார்கள். விசாரணைக்காக வடபகுதிக்கு கொண்டும் செல்வார்கள். ஆனால் விசாரணை முடிவடைந்த பின்னர் இவர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க படுவார்கள் அல்லது, இந்தியக் கடலெல்லைக்குள் கொண்டுபோய் விடப்படுவார்கள். யாழ் பாணத்தில் நடமாட அனுமதிக்க பட மாட்டார்கள். இதுதான் வழமை சமீப காலமாக. வழிதவறி வந்துவிட்ட இந்திய மீனவர்கள் என்ற பெயரில் சிலர் நகருக்குள் நடமாடுவது அவதானிக்க பட்டிருக்கிறது. இவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து நாட்டுக்குள் கொண்டு வந்தார்களா? அப்படிக் கைது செய்திருந்தால் எப்படி நகருக்குள் நடமாட அனுமதித்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை! எப்படியிருந்தாலும் ஒரு மிகவும் unusual situation. இது. immigration formalities எதுவும் முடிக்க படாமல் யாழ் பாணத்துக்குள் நடமாடும் வெளிநாட்டவர்கள்! இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? எப்படி வெளியே போவார்கள் அல்லது எப்போது போவார்கள்? உளவு வட்டாரங்களில் இது சம்பந்தமாக கூற படும் முக்கிய தகவல். இலங்கை-இந்திய கடல் எல்லைகள் வரை இந்தியக் கடற்படையின் கப்பல்களில் வரும் சிலர், இலங்கைக் கடற்பகுதி தொடங்கும் இடத்தில் வைத்து மீனவர் படகுகளில் ஏற்றப்படுகின்றனர். அந்த மீனவர் படகுகள்தான் வடபகுதிக் கடற்கரைகளை நோக்கிச் செல்கின்றன! அப்படியானால் அவங்க யாருங்க சார்?
  9. 2. டி பி எஸ் ஜெயராஜ் - சண்டே லீடர் ஆவணி 21, 2005 "புலிகளுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு தமது அகம்பாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு கருணாவுக்கான இடத்தைக் கொடுப்பதுதான். கருணாவை தனியான ஒரு தரப்பாக கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் நடத்த வேண்டும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் மூன்றாம் தரப்பாக அமரவைக்கப்படுதல் அவசியமாகும். இதன்மூலம் கருணா முன்னணி அரசியல் - ராணுவச் சக்தியாக ஆக்கப்படுவதோடு, அரசியல் ஜனநாயக நீரோட்டத்திலும் கலக்கப்படுதல் அவசியமாகும். கருணாவை போரின் வேட்டை நாயாகப் பார்க்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்". "ஆயுதங்கள களையப்பட்ட பின்னர் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கு புலிகளால் வழங்கப்பட்ட தண்டனைகளைப் பார்க்கும்போது, கருணாவிடம் இருந்து ஆயுதங்களைக் களையுங்கள் என்று கேட்பது நகைப்பிற்குரியது. பிரபாகரன் ஆயுதங்களைக் கீழ் வைத்தால் ஒழிய கருணா ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் இடைக்கால தீர்வாக மோதல் தவிர்ப்பு சூழ்நிலையினை பிரபாகரன் தரப்பும் கருணா தரப்பும் ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமானது. புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டோ அல்லது கருணாவுடன் சுமூகமாக மோதல் தவிர்ப்பு நிலைக்கு வந்தால் மட்டுமே கிழக்கில் நடக்கும் சகோதரப் படுகொலைகளை நிறுத்த முடியும். பிரபாகரனோ அல்லது கருணாவோ இம்மோதல்களில் தோற்றால்க் கூட, நேரடியாகப் பாதிக்கப்படப்போவது கிழ்க்குத் தமிழினம் அடங்கலான ஒட்டுமொத்தத் தமிழினமும் தான்". 3. ரோகினி ஹென்ஸ்மன் - தி ஹிந்து , சென்னை, ஆவணி 22, 2005 "புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம், பிரபாகரன் தரப்பு, கருணா தரப்பு ஆகியவற்றை சம அந்தஸ்த்துள்ள தரப்புக்களாக அமர்த்துவது அவசியமானது. முக்கியமாக, கருணா தரப்பினருக்கும், பிரபாகரன் தரப்பினருக்கும் இடையிலேயே பெரும்பாலான மோதல்கள் நடந்துவருவதால், அவர்களுக்கிடையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதும் அவசியமானது. ஆக மொத்தத்தில் அரசு, பிரபாகரன் தரப்பு கருணா தரப்பு ஆகிய முத்தரப்புக்களுக்கும் பொதுவான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மிக அவசியமானது. சிலவேளைகளில் பிரபாகரன் தரப்பு யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டாலும் கூட கருணா தரப்பிற்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் ஒன்று செய்யப்படுதல் மிக அவசியமானது. கிழக்கில் இடம்பெற்று வரும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் யுத்த முனைப்புக்களை குறைக்க இது அவசியமானது. ஆகவே, கருணா தரப்பை சம அந்தஸ்த்துள்ள தரப்பாக மதிப்பதன்மூலம், கிழக்கில் அமைதியினை உருவாக்க முடியும்".
  10. இந்திய றோவின் திருகுதாலங்களும் கருணாவும் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா இணையம் : தமிழ் நேஷன் காலம் : 22 ஆவணி 2005 சங்கீத விற்பன்னர்களான சுப்புலக்ஷ்மியாக இருக்கட்டும், மதுரை மணி ஐய்யராக இருக்கட்டும் அல்லது சீர்காழி கோவிந்தராஜனாக இருக்கட்டும், இவர்களின் குரலைக் கேட்ட ஒரு சில நொடிகளிலேயே பாடுவது இன்னார்தான் என்பதனை தமிழ் மக்கள் துல்லியமாக இனங்கண்டுகொள்வார்கள். இந்த ஒவ்வொரு பாடகர்களுக்கும் உரித்தான தனித்தன்மையான குரலும், நுணுக்க அசைவுகளும் தமிழரின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால் அவர்களின் குரலினை அடையாளம் காண்பது அவர்களுக்கு இலகுவானது. அவ்வாறே தமது அன்றாட வாழ்க்கையில் கடந்த 15 - 20 வருடங்களாக இந்தியாவின் மிகக் கேவலமான உளவுப்பிரிவு, றோ செய்துவரும் கைங்கரியங்களை இனங்கண்டுகொள்வதும் தமிழர்களுக்குக் கடிணமானது அல்ல. றோவின் நாசகாரக் கைகள் தமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வொன்று நடைபெறும்போது அதனைப்பற்றி அளவுக்கதிகமாக தனது ஊடக அடிவருடிகள் மூலம் எழுதிக்கொள்கிறது. ஆனால், எந்தச் சுரமும் அற்று வெற்றுக் கீதங்களாக றோவினால் புனையப்பட்டு மீட்டப்படும் இந்த சுதிகெட்ட பாடல்களை தமிழ்மக்கள் திரும்பியும் பார்ப்பதில்லையென்பது வேறுவிடயம். சர்வதேச புலநாய்வு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அமைப்பொன்றின் தகவல்களின்படி சுமார் 8000 இலிருந்து 10,000 உளவாளிகள் றோவுக்காக இயங்குவதாகவும், இவர்களுக்கான வருடாந்தச் செல்வாக இந்திய ரூபாயில் குறைந்தது 1,500 கோடிகள் றோவினால் வாரியிறைக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இந்தப் பணத்தில் ஒருபகுதி இலங்கையில் ஈழத்தமிழருக்கெதிரான அதன் சதிகளுக்காகப் பாவிக்கப்படுகிறது என்பதும் ரகசியமல்ல். இவ்வமைப்பின் கருத்துப்படி சுமார் 20 - 25 கோடி இந்திய ரூபாய்கள்வரை இலங்கையில் றோ தமிழருக்கெதிரான தனது சதிகளுக்கு பாவித்துவருவதாகத் தெரிகிறது. பின்வரும் இரு சம்பவங்கள் இந்திய றோவையும் அதன் அடிவருடிப் பத்தியாளர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிகிறது. 1. வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை 2. இலங்கையரசாங்கம் 2002 சமாதான உடன்படிக்கை தொடர்பாக புலிகளுடன் பேசப்போவது வெறும் 2 நாள் இடைவெளியில் றோவின் ஊதுகுழல்களில் மூவர் எழுதியிருக்கின்றனர். இவர்களின் எழுத்துக்களின் சாராம்சம் யாதெனில், மீண்டும் கருணாவை முன்னுக்குக் கொண்டுவாருங்கள் என்பதுதான். சண்டே லீடர் பத்திரிக்கையில் புலிகள் பற்றிப் புரணிபாடும் அதே டி பி எஸ் ஜெயராஜ் தற்போது உச்சஸ்த்தானியில், "கருணாவுக்கான அங்கீகாரத்தை கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் வழங்கியே தீரவேண்டும்" என்று கூக்குரலிட்டிருக்கிறார். அவரைப்பொறுத்தவரை கருணாவும் அவரது ஆதரவாளர்களும் ஒஸ்லோவில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பினராக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் முன்னணி அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல் - ராணுவ தலைமையாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று அவர் கோருகிறார். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவ்வப்போது எடுத்துவிடும் ஜெயராஜ் தனது கற்பனை பலூன்களில் றோவின் காற்றினை அடைத்து பறக்கவிட்டிருக்கிறார் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியது. அவரைப்போன்றே , மனிதவுரிமை வாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரோகினி ஹென்ஸ்மனும், புதிய போர் நிறுத்த உடன்படிக்கை முத்தரப்பினரான அரசாங்கம், பிரபாகரன் பிரிவு, கருணா பிரிவு ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும் என்று கூவியிருக்கிறார். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் பெரும்பாலான மோதல்கள் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையிலேயே அண்மைக்காலமாக நடந்துவருகிறது என்பது. ஆகவே, யுத்த நிறுத்தம் என்பது முத்தரப்புக்களிடையேயும் செய்யப்படுதல் அவசியமாகிறது. ஆனால், ஜெயராஜினதும் ரோகினியினதும் கோரிக்கைகளில் பாரிய ஓட்டைகள் உள்ளன. கிழக்கில் இரு தரப்புக்கள் மட்டுமே தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று அரசாங்கம், மற்றைய தரப்பு புலிகள். 2004 சித்திரையில் உயிரைக் கைய்யில் பிடித்துக்கொண்டு, கல்களிடையே வாலைச் சுருட்டிக்கொண்டு கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபின்னர் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சிறு நிலப்பகுதிகூட இப்போது இல்லையென்பது இவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கடந்த 20 வருடங்களில் றோவின் அடிவருடி பத்தியெழுத்தாளர்கள் ஒரு சகதிக்குள் சிக்குண்டிருப்பதாகவே படுகிறது. இலங்கையின் பாராளுமன்ற நிகழ்வுகள்பற்றி இவர்களுக்குச் சற்றேனும் அறிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 1980 களின் நடுப்பகுதியிலிருந்து 1994 வரை காமினி திஸாநாயக்காவே இவர்களுக்கான தகவல்களை வழங்கிவந்தார். 1989 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகளின்பொழுது றோ சார்பான இரங்கல் உரையினையே காமினி திஸாநாயக்கா படித்திருந்தார். காமினி திஸாநாயக்காவின் மரணத்தின்பின்னர் றோவிற்கான தகவல் வழங்குனராக லக்ஷ்மன் கதிர்காமர் திறம்படச் செயலாற்றியிருந்தார். ஆனால், லக்ஷ்மன் கதிர்காமரும் திடீரென்று அகற்றப்பட்ட பின்னர் றோவுக்கான தகவல்கள் சடுதியாகத் தடைப்பட்டுப் போனது. ஐக்கிய தேசியக் கட்சியில் காமினி அரசியலில் செயற்திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அநுர பண்டாரநாயக்காவை தனது அருகில் வைத்துக்கொள்ளுமுன்னர், லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு செயல்வீரனாக சந்திரிக்காவுக்குத் தெரிந்தார். ஆகவே, றோவுக்கான ஏஜெண்டுக்களை கொழும்பு அரசாங்கத்தில் மிகச் சுலபமாக அதனால் நிலைநிறுத்த முடிந்திருந்தது. ஆனால், இப்போது முன்னாள் ஆயுதக் குழுத் தலைவரும், துணைராணுவக் குழு - அரசியல்க் கட்சி பிமுகருமான டக்கிளஸ் தேவாநந்தாவையே சந்திரிக்கா அரசின் செய்திகளைத் தமக்குக் காவிவரும் ஏவலாளியாக றோ வைத்திருக்கிறது. ஆனால், இந்த தேவாநந்தாவினால் சந்திரிக்காவின் உள்வட்டத்தை நெருங்குவதைக் கனவில்க் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. சந்திரிக்காவைப் பொறுத்தவரை டக்கிளஸ் எனும் ஆயுததாரி ஒரு ராணுவ வீரனுக்கான தகைமையையோ, கூலிகளுக்குக் கொல்லும் துணைப்படையினனுக்கான தகைமையையோ கொண்டிருப்பதாக அவர் சிறிதும் நம்பவில்லைபோலத் தெரிகிறது. ஆகவேதான் கருணாவை சந்திரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ நிபுணனாக, கொலைக்குழுத் தலைவனா நிறுத்த றோவும் அதன் பத்தியெழுத்தாளர்களும் அரும்பாடுபட்டு வருவது தெரிகிறது. றோவின் ஊதுகுழல்களாகச் செயற்பட்டுவரும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸின் பாலச்சந்திரன், சண்டே லீடரின் ஜெயராஜ், ஹிந்துப் பத்திரிக்கையின் ரோகினி ஆகிய மூவரின் அபத்தப் புனைவுகள் உங்களுக்காகக் கீழே தரப்படுகின்றன. 1. பி கெ பாலச்சந்திரன் - ஹிந்துஸ்த்தான் டைம்ஸ், ஆவணி 20, 2005 "புலிகளைப்பொறுத்தவரை கிழக்கில் அவர்களின் இருப்பென்பது மிகவும் பலவீனமானதாகவே படுகிறது. அங்கே அவர்களின் கட்டுப்பாட்டின் அஸ்த்தமக் காலம் தெரிவதோடு, அங்குள்ள பல்லின சமூகமும் அவர்களின் இருப்பிற்கு உதவப்போவதில்லை. வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியாத போதிலும், கருணாவின் இருப்பென்பது, அவர்களை ஏனைய போராளிக் குழுக்களை விழிப்பதுபோல "துணைராணுவக் குழுக்கள்" என்று புலிகள் விழித்தாலும் கூட, புலிகளின் ஆயுதம் தரிக்காத அரசியல் போராளிகளின் பாதுகாப்பிற்கு மிகக் கடுமையான அச்சுருத்தலை கருணாவினால் கொடுக்க முடியும்". "கருணாவை சட்டைசேயத்தேவையில்லை என்று புலிகள் உதறித் தள்ளினாலும் கூட, அவரது பெயர் புலிகளுப் பெரும் அச்சுருத்தலாகவே இப்போது உச்சரிக்கப்பட்டு வருகிறது. தம்முடன் சில மாதங்களுக்கு முன்னர் வரை இருந்த கருணாவின் ஆதரவாளர்களே தமக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை புலிகள் மறுக்கமுடியாது". "கருணாவின் பிரச்சினை அரசைப் பொறுத்தவரை பெருத்த சவாலாகவே மறியிருக்கிறது. கருணாவுக்கெதிராகச் செயற்படுவதோ அல்லது அவருக்கு தாம் வழங்கிவரும் ஆதரவினை நிறுத்துவதென்பதோ அரசுக்கு இலகுவான முடிவாக இருக்கப்போவதில்லை. ராணுவத்தின் சில படைப்பிரிவுகள் கருணாவை வெளிப்படையாகவே ஆதரித்துவருவதாகப் பேசப்படும் நிலையில், அவரைத் திடீரென்று கைவிடுவது தமது அரசியல் நிலையினைப் பலவீனமாக்கும் என்று அரசு நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், புலிகளைப் பலவீனப்படுத்தி பிளவுபடுத்திய கருணா தெற்கின் சிங்களவரைப் பொறுத்தவரை ஒரு வெற்றி நாயகன். கருணாவைக் கொண்டு புலிகளைப் பலவீனப்படுத்தி, பிரபாகரனின் பலத்தை முற்றாகவோ பகுதியாகவோ அழிப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் அரசின் பேரம்பேசும் பலத்தினை அதிகரிக்க தெற்கின் சாதாரண சிங்கள் மக்கள் விரும்புவது தெரிகிறது". "கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசு நடத்த எத்தனிக்குமாக இருந்தால், அதுவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் செயலாகிவிடும் . அதுமட்டுமல்லாமல், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை என்பது புலிகளுக்கெதிரான அரசின் ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படும் அபாயமும் இருப்பதாக அரசின் சமாதானப் பணியகத்தில் தலைவர் ஜயந்த தனபாலவின் கூற்றும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று".
  11. வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம் ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம் ஆண் : கொலுசு குல்பு காட்டுது வளையல் வளைச்சி போடுது தினுசா ரெட்டை சடை பின்னல் கட்டி இழுக்குது ஆண் : மூக்குத்தி மொறச்சி பாக்குது ஜிமிக்கி ஆட்டம் போடுது தழுக்கா நெத்தி பொட்டு என்ன சுட்டு தள்ளுது ஆண் : கலரு மில்கு ஒயிட்டு மா கண்ணன் டியூப் லைட்டு மா உதடு அல்வா ஸ்வீட்டு மா மொத்தமா எனக்கு கிடைக்குமா குழு : சோக்கா சொன்ன போ ஆண் : ஆதென் அபேஸ் பண்ணிட்டா ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா சல்பி மிட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா......! --- கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்---
  12. கொரோனா பேசுகிறேன்....ஏன் மனிதா! என்னைக் கண்டு பயப்படுகிறாய் ..?நான் கிருமி அல்ல …கடவுளின் தூதுவன் ...ஆயிரமாயிரம் பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்தியவன் தானே நீ…ஆயிரமாயிரம் விலங்குகளை கொன்று பயணித்தவன் தானே நீ ....ஆயிரமாயிரம் மரங்களை அழித்து...நாற்காலியில் அமர்ந்து தேனீர் பருகியவன் தானே நீஆயிரமாயிரம் பறவைகளை அழித்து...தொலைபேசியில் உரையாடியவன் தானே நீஇப்போது புரிகிறதா! வலி என்றால் என்ன என்று …?பணத்துக்கு ஒரு நீதி..வீதிக்கு ஒரு சாதி. ...பெயருக்கு ஒரு வாழ்க்கை ....என வாழ்ந்தவன் தானே நீ ..இப்போது என்னை கண்டு பயந்து நடுங்கி ஓடுகிறாய் ... வானத்தை போல் பரந்த மனம் கொண்டாயா ….?நிலத்தை போல் சமமாக பிறரை நினைத்தாயா ….?நீரைப் போல் தன்னலமின்றி தாகம் தீர்த்தாயா ....?காற்றை போல் அனைத்தையும் அரவணைத்தாயா ….?நெருப்பை போல் தீயதை பொசுக்கத் துணிந்தாயா .. ...?பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?காற்றை மாசுபடுத்தவா ?இயற்கையை அழிக்கவா ?பூமியை கழிப்பிடமாக்கவா ?ஒன்றை மட்டும் புரிந்துகொள் ....உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல ....இந்த உண்மையை உணர்ந்தால்....கடவுளையே கண்டுபிடித்த உனக்கு ....எனக்கான மருந்தினைகக் கண்டுபிடிப்பது சிரமம் அல்ல ….அச்சம் கொள்ளாதே. ...நானே வெளியேறுவேன் ....பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக ….உலகம் நிறைந்த பிஞ்சுக் குழந்தைகளுக்காக .... ️ படித்ததில் பிடித்தது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.