Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    15755
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10110
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/12/22 in all areas

  1. சிலருக்கு இது தெரிந்து இருக்கலாம். - US Fed அவசரமாக கூட வேண்டிய சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை பாவித்து, பெப்ரவரி 14 2022 கூடுகிறது. வங்கிகள் நிதி நெருக்கடி நிலையை சாமலுக்க கூடிய நிலையில் இருப்பதாக Fed இன் அங்கத்தவர்கள், உத்தியோக பற்றற்ற முறையில் கலந்துரையாடியது தெரிய வந்துள்ளது.
  2. அமெரிக்க வருடாந்த நுகர்வோர் விலை சுட்டெண் 7.5 ஆக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்க ஐரோப்ப்பிய பங்குச் சந்தையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
  3. இரண்டாவதாக பதிவேற்றிய ஒளிப்பதிவில் நுகர்வோர் விலை சுட்டெண் அறிவிப்பின் பிட் கொயின், தங்கம், SPY சந்தை மாற்றம் சிறிய அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நுகர்வோர் விலை சுட்டெண் 0.4% ஆனால் நடைமுறை நுகர்வோர் விலை சுட்டெண் 0.6% ஆக வந்திருந்தது, எதிர்பார்க்கப்பட்ட நுகர்வோர் விலை சுட்டெண்ணை விட 0.2% அதிகம், இதன் பிரதிபலிப்பு வட்டி வீதம் அதிகரிப்பாக இருக்கும் என்பதால் பங்கு சந்தையில் சரிவும் தங்கம் பிட் கொயினில் விலை அதிகரிப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், சந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாக பங்கு சந்தை, தங்கம், பிட் கொயின் என அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஐரொப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதை மட்டுபடுத்துவதாகவும் பங்குனி மாதத்தில் முற்றாக பணமுறிகளை வாங்குவதை கைவிடுவதாக அறிவித்தது (PEPP) , முதலீட்டாளர்கள் பலரும் எதிர்பார்த்த வட்டி வீத அறிவிப்பு வெளிவரவில்லை, யுரோ நாணயம் சடுதியாக அதிகரித்தது முதலாவது ஒளிப்பதிவில் காட்டப்பட்டுள்ளது. இது எதனால் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை, ஆனால் முன்பு பதிவிட்ட எலியட் அலை தொழில்னுட்ப பதிவில் ஐரோப்பிய நாணயம் உயரலாம் என பதிவிட்டிருந்தேன், திங்கள் கிழமை 90 புள்ளிகளும், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவிப்பின் பின்னர் 130 புள்ளிகளுமாக கடந்த வாரம் மொத்தமாக 311 புள்ளிகள் அதிகரித்திருந்தது, 3 வார விலை மாற்றத்தினை 1 வாரத்திலேயே அடைந்தது. அத்துடன் யுரோ நாணய சுட்டெண்ணும் அதிகரித்தது, இது முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த வட்டி வீத அதிகரிப்பில்லாமல் யுரோ நாணயம் விலை அதிகரித்திருந்தது, மறுவளமாக அமெரிக்க நாணயம் எந்தவித மாற்றத்தினையும் எதிர்பாரா அதிகரிப்பான நுகர்வோர் விலை சுட்டெண் ஏற்படுத்தவில்லை, ஏன் என்பது விளங்கவில்லை.
  4. கெளசல்யனின் காலிங்க வகுப்பு கெளசல்யன், மட்டக்களப்பு - அம்பாறை தமிழ் மக்களின் பெருமளவினரை அடக்கிய காலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர். இந்த சமூக அமைப்பு முக்குவர் சமூகத்தில் வருகிறது. படுவான்கரை கிராமங்களான பண்டாரியாவெளி, படைக்காத்தவெளி, அரசடித்தீவூ, கொக்கட்டிச்சோலை, களுதாவளை ஆகியவற்றில் முக்குவர் சமூகத்தினரே வாழ்ந்து வருகின்றனர். காலிங்கக் குடியினர் எனும் சமூகத்தினர் தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த போர்வீரர்களான கலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகிறது. காலப்போக்கில் இந்த போர்வீரர் மரபில் வந்த இக்குடியினர் கிழக்கில் தாம் வாழ்ந்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கெளசல்யன் மட்டுமில்லாமல், புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளான ரமேஷ், துரை, நாகேஷ் போன்றவர்களும் இதே காலிங்க வகுப்பினைச் சார்ந்தவர்கள் தான். இந்த சமூக அமைப்பைச் சேர்ந்த பல இளைஞர்கள் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பின் காலத்தில் புலிகளோடு தம்மை இணைத்துக்கொண்டவர்கள். அதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஏனைய சமூக அமைப்புக்களில் இருந்தே பல போராளிகள் இயக்கத்தில் இணைந்துவந்தனர். தனது 16 வயதில், 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கெளசல்யன் புலிகளின் கஞ்சிகுடிச்சியாறு முகாமில் தனது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர் புலிகளின் வடமுனைப் போர் அரங்கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் கெளசல்யன். இந்திய ராணுவம் வெளியேறி, அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் ஆரம்பித்த நேரத்தில் கெளசல்யன் கும்புறுமூலையில் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டார். அத்துடன் வாகரை - கதிரவெளிச் சமர்களிலும் கெளசல்யன் பங்கெடுத்திருந்தார். சமர்களத்திலும், இயக்கத்தினுள்ளும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டி வந்ததினால், அவர் விரைவாக புலிகளின் பதவி நிலைகளுக்கு உயர்த்தப்பட்டதுடன், சிறிது காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் நிதித்துறைக்குப் பொறுப்பானவராக தலைமையினால் நியமிக்கப்பட்டார். 1994 இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்ட தமிழேந்தியின் கீழ் செயற்பட்டு வந்தார். சந்திரிக்காவுடனான சமாதானக் காலபகுதியில் மீண்டும் கிழக்கிற்கு வந்த கெளசல்யன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிதி மற்றும் வரித்துறைக்குப் பொறுப்பானவராக இயங்கி வந்தார். யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வன்னிக்குச் சென்று, தம்மை மீளவும் ஒருங்கிணைக்கத் தொடங்கிய 1995 காலப்பகுதியில் கெளசல்யன் வன்னிக்குச் சென்றார். 1996 இல் இடம்பெற்ற புலிகளின் மிகவும் வெற்றிகரமான தாக்குதல்களில் ஒன்றான ஓயாத அலைகள் 1 முல்லை முகாம் தகர்ப்பில் கெளசல்யனும் பங்காற்றியிருந்தார். வன்னியில் 1996, 1997, 1998 ஆகிய காலப்பகுதியில் இடம்பெற்ற சமர்க்களங்களில் போரிட்ட படையணிகளுக்கு வழங்கல்களை செய்வதிலும் கெளசல்யன் ஈடுபட்டிருந்தார். 1998 இல் கிழக்கிற்கு மீண்ட கெளசல்யன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் நிதித்துறைக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார். பல லட்சக்கணக்கான பணத்தை மிகவும் நேர்மையுடனும், கண்ணியமாகவும் கெளசல்யன் இயக்கத்தின் சார்பில் கவனித்து வந்தார். அவரின் நேர்மை பற்றி இயக்கத்திற்குள் எல்லாருமே பேசுமளவிற்கு போராட்டம் மீதும், தலைமை மீது அதிக பற்றுடனும் நேர்மையுடனும் செயற்பட்டவர் கெளசல்யன். கிழக்கு மாகாணத்தின் தளபதியாகவிருந்த கருணாவினால்க் கூட கெளசல்யனினின் நேர்மை மீது ஒரு குற்றச்சாட்டையேனும் வைக்க முடியவில்லை. கெளசல்யனின் நேர்மையும், விசுவாசமும் எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும், கருணாவினால் அவர் நிதித்துறையிலிருந்து நீக்கப்பட்டு கிழக்கு மாகாண துணை அரசியல்த் துறைப் பொறுப்பாளராக கரிகாலனின் கீழ் அமர்த்தப்பட்டார். கெளசல்யனுக்கு வழங்கப்பட்டது ஒரு பதவி உயர்வு என்று கருணா சொல்லிக்கொண்டாலும்கூட, அவரை நிதித்துறையிலிருந்து அகற்றுவது கருணாவுக்கு மிகவும் அவசியமானதாகத் தெரிந்தது. நிதிப்பொறுப்பிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவின் நிதிக் கையாடல்களுக்கு இருந்த ஒரே தடையும் அகற்றப்பட்டது. தனது சகோதரனான ரெஜி எனப்படும் ரெஜினோல்ட்டை நிதித்துறைக்குப் பொறுப்பாக நியமித்த கருணா, பாரிய நிதிமுறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியதுடன், இக்கையாடல்களைப் பாவித்து தன்னைச் சுற்றி விசுவாசமான கூட்டத்தையும் கட்டி வளர்க்கத் தொடங்கினார். புலிகளிடமிருந்து கருணா விலகிச் செல்லவேண்டிய அவசியத்தை கருணாவின் நிதிக் கையாடல்களே முதன்முதலில் ஏற்படுத்தின.
  5. தன் வீட்டுக்கு செல்லும் மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு... நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன். நான் திரும்பி வர 10 நாளாகும். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன். பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க இருந்து கண்டு எடுத்தேன். மூக்குக்கண்ணாடியை அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. வேலைக்காரிக்கு சம்பளம் கொடுத்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம். காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு டெய்லி அவங்ககிட்ட கேட்டு வழிய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற. சமையல் கட்டு பக்கம் போக வேணாம். ஸிங்க்கை காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன். சாமி படத்துக்கு விளக்கேத்தி ரெண்டு ஸ்லோகம் சொல்லுங்க. வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க. ஜிப்பா வேணாம். உங்க ஜிப்பா கலர்ல எனக்கு Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு. அன்னைக்கு தெரியாம நீங்க போட்டு போனதைப் பார்த்து அனிதா சிரிச்சா. Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம். ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா கொடுத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க மாட்டாங்க. பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க. உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க. அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க. தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க... A.M. மா... P.M. மா... Confirm பண்ணிட்டு பால்கனிக்கு வாங்க. உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை. என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே முடிஞ்சிடுச்சு. நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம். பத்து நாள் wi-fi cut password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க. அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station. கட்டக் கடேசியா ஒண்ணு. ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன். சொல்லாம... இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம். என்னா ஒரு வில்லத்தனம்.
  6. சந்தை சில சமயம் செய்திகளுக்கு தொடர்பில்லாமல் செயற்படும், அதனை நியாப்படுத்தும் வகையில் சொல்வார்கள் " Good analysis bad trader " https://www.goodreads.com/book/show/100779.Reminiscences_of_a_Stock_Operator இந்த புத்தகத்தில் ஜெசி லிவர்மொரின் பங்கு சந்தை அனுபவங்கள் கூறப்படுகிறது. அதில் ஜெசி லிவர்மோர் அடிசன் கமாக் என்பவர் எவ்வாறு, சந்தை நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஜோசப் எனும் பங்கு சந்தை, பொருளாதார பற்றி எழுதும் பத்திரிகையாளர், அடிசன் கமாக்கிடம் ஒரு சந்தையின் முக்கியமான தகவலை கூறுவார், வில்லியம் ரொக்கர்பெலோ தனது எரிசக்க்தி பங்கினை ஒவ்வொரு 3/8 அதிகரிப்பிற்கும் 1500 பங்குகள் வீதம் விற்கிறார் என்பதாகும். பத்திரிகையாளரான ஜோசப்பிற்கு அடிசன் பங்கு சந்தை சரிவில் முதலிட்டிருப்பது தெரியும் அதனால் அந்த செய்தியினை கூறியவுடன் அடிசன் தனது பங்கு சந்தை சரிவு முதலீட்டினை அதிகரிப்பார் என எதிர்பாத்திருந்தார் (சாதாரணமாக அனைவரும் அதனையே செய்வார்கள்), ஆனால் அடிசன் அந்த பங்குகளை அதே விலை மாற்றத்தில் அதேயளவில் வாங்கினார். பின்னர் அந்த பங்குகளை கொண்டே பங்கு சந்தை சரிவை ஆரம்பித்து வைத்தார் என குறிப்பிடுகிறார். இங்கு பெரிய வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறுதான் வேறுபடுகிறார்கள். இந்த பெரிய வர்த்தகர்கள்தான் சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனாலும் சில சமயம் இந்த பெரிய வர்த்தகர்கள் கூட சில பங்குகளில் மாட்டி விடுவார்கள், அந்த பங்கிற்குரிய நிறுவனம் திவாலாகி கொண்டிருக்கும் அதிலிருந்து வெளியேறுவதற்காக தேர்ந்தெடுப்பது சில்லறை வர்த்தகர்களை. செயற்கையாக தற்காலிகமாக பங்கின் விலையை வலிந்து உயர்த்தி கழிவு விலையில் பங்கு வாங்கும் சில்லறை வர்த்தகர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் இந்த பெரிய வர்த்தகர்கள். இதனை பங்கு சந்தையில் "Dead cat bounce" என்பார்கள்.
  7. யார் தீர்க்கதரிசி.? யாழ்ப்பாண மில்க் ஒயிற் சவர்க்கார வரலாறு.!.👌
  8. படம் : எதிரொலி (1970) இசை : KV மகாதேவன் பாடியோர் : TMS & LR ஈஸ்வரி
  9. என்று தணியும் இந்த சுதந்திர தாக்கம்......! 😁
  10. "கேர்ணல்" கருணாவும் அவனது பிரதேசவாதப் புரட்சியும் மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு, புலிகளின் தேனகம் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முக்கிய தளபதிகள் , பொறுப்பாளர்களை கருணா கூட்டியிருந்தான். சுமார் 150 புலிகளின் தலைவர்கள் அடங்கிய அந்த கூட்டத்தை கருணாவே நடத்தினான். கிழக்கில் 1987 இல் இருந்து பிரபாகரனுக்கு விசுவாசமாக போர்நடத்திய அதே கருணா இன்று அதே தலைவருக்கு எதிராக பிரதேசவாதக் கோசத்தைப் பாவித்துப் புரட்சி செய்துகொண்டிருந்தான். அன்று அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினருக்கு தமது காதுகளையே அவர்களால் நம்பமுடியவில்லை. புலிகளின் தலைமைமீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் கருணா முன்வைத்துக்கொண்டிருந்தான். அவனது குற்றச்சாட்டுக்கள் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறைப் பொறுப்பாழர் தமிழேந்தி, காவல்த்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகிய புலிகளின் மிக முக்கிய தலைவர்கள் மீதே முன்வைக்கப்பட்டன. கருணா விடுத்த கோரிக்கையென்னவென்றால், இந்த மூவரையும் தவிர்த்து, கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான அதிகார பலம் கொண்ட, தன்னிச்சையாக இயங்கும் நிர்வாக அமைப்பொன்றுதான். "வன்னித்தலைமையின் கீழ் நாம் செயற்பட விரும்பவில்லை, வடக்கு மைய்யத்தைச் சுற்றி நாம் இயங்கப்போவதில்லை, அதனைத் தூக்கியெறிந்துவிட்டு கிழக்கிற்கென்று தனியான ஒரு அமைப்பை நாம் உருவாக்குவோம்" என்று அவன் அங்கு கூடியிருந்தவர்களிடம் கர்ஜித்தான். இதைக்கேட்ட அனைவருமே ஒருகணம் அதிர்ந்துபோயினர். பலரின் முகத்தில் விரக்தியும் விசனமும் ஒட்டிக்கொண்டது. ஆனால், கருணாவின் எண்னத்தை ஏற்கனவே அறிந்துவைத்திருந்த அவனுக்கு நெருக்கமானவர்கள் அமைதியாக இருந்து அவன் சொல்வதை ஆமோதிக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் கருணாவுடன் சேர்ந்து நிற்கப்போவதாக வெளிப்படையாகவே கூறினர். ஆனால், இதில் வேடிக்கையென்னவென்றால், அன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கப்போவதாகக் கூறிய பலர் பின்னர் வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் இணைந்துகொண்டதுடன், கருணாவின் துரோகத்தையும் கடுமையாகச் சாடத் தவறவில்லை.
  11. மக்களால் நேசிக்கப்பட்ட கெளசல்யன் கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, பிரபலமான ஒரு தலைவராக கெளசல்யன் விளங்கினார். கிழக்கின் பெரும் பணக்காரர்களும், இடைநிலை வசதிபடைத்தோரும் கெளசல்யனின் காணிச் சீர்திருத்தங்களை அவ்வளவாக விரும்பாவிட்டாலும், கிழக்கின் ஏழை விவசாய மக்கள் அவரை போற்றி வந்தார்கள். இந்த ஏழை மக்களாலேயே கிழக்கு மாகாணம் நிரம்பியிருந்தது. கெளசல்யனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான இந்த ஏழைத் தமிழர்கள் அவர்மேல் கொண்ட பற்றினாலும், அவரது இழப்பினால் ஏற்பட்ட உண்மையான சோகத்தினாலும்தான் அங்கு வந்து தம்மால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவனுக்கான அகவணக்கத்தினைச் செலுத்தினார்கள் என்றால் மிகையில்லை. அவரைப்பற்றிய விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும், தனது பணியில் அவர் காட்டிய நேர்மையும், போராட்ட இலட்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியா பற்றுறுதியும் எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது. கெளசல்யனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் கருணா பிரதேசவாதச் சாயம் பூசிக்கொண்டு புலிகளை விட்டுப் பிரிந்து ராணுவத்துடன் இணைந்தபோது ஏற்பட்டது. தனது உயிருக்குக் கருணாவினாலும்ம் அவரது விசுவாசிகளாலும் நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்திருந்தபோதும், தலைமைக்கெதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட்டுவருவதை கெளசல்யன் கடுமையாக எதிர்த்தார். கிழக்கின் மைந்தனாக இருந்தபோதும் கருணாவின் இந்த துரோகத்தனத்தை வெளிப்படையாக அவர் விமர்சித்தார். கருணாவின் துரோகத்தனத்திற்கெதிரான கெளசல்யனின் கடுமையான விமர்சனமும், நிலைப்பாடும் அக்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே, இதுபற்றி நாம் பேசுவது முக்கியமானது.
  12. கிழக்கு முஸ்லீம்களுடன் சமாதானமாகச் செல்ல விரும்பிய கெளசல்யன் நெடுங்காலமாக கிழக்கின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் தலைமையின் நம்பிக்கையினை இழந்த காலப்பகுதியில் கெளசல்யன் கிழக்கு மாகாண அரசியல்த்துறைக்குப் பொறுப்பானவராக தலைவரால் நியமிக்கப்பட்டார். தான் துரோகிகளால் கோழைத்தனமாகக் கொல்லப்படும்வரை தனது பணியில் திடமான உறுதியுடனும், தலைமைக்கு விசுவாசத்துடனும் செயற்பட்டு வந்தார். கெளசல்யனின் அரசியல் ரீதியினான வெற்றிகளில் முதன்மையானது கிழக்கு முஸ்லீம்களுடன் அவர் செய்துகொண்ட நட்புறவு. தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே இனரீதியிலான வன்முறைகள் எழுவதை கெளசல்யன் இறுதிவரை தடுத்து, இரு சமூகங்களுக்குமிடையே ஒற்றுமையினை நிலைநாட்ட தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தார். கெளசல்யன் கொல்லப்பட்ட செய்தி கிழக்கில் பரவியபோது கிழக்கின் பல முஸ்லீம் நகர்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டதும், கெளசல்யனின் வித்துடல் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டபோது அந்நிகழ்வில் கலந்துகொண்ட பெருமளவிலான இஸ்லாமியத் தமிழர்களும் கெளசல்யனின் இன ஒற்றுமை முயற்சிகளுக்கான சாட்சிகள் என்றால் அது மிகையில்லை. கெளசல்யன் இடதுசாரிக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவர். விவசாய குடும்பத்திலிருந்து வந்த கெளசல்யன் காணி சீர்திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். ரமணனுடன் இணைந்து பெரும் பணக்கார தமிழ் , முஸ்லீம் காணி உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். ஆனால், துரதிஷ்ட்டவசமாக கெளசல்யனின் நவீன விவசாய முயற்சிகள் கிழக்கில் வெற்றியளிக்காமல் போய்விட்டன. இதற்குக் காரணம் புதிதாக காணிகளைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளிடம் அவற்றை நிர்வகிக்கவோ, பராமரிக்கவோ தேவையான நிதி வளங்களோ அல்லது அனுபவமோ போதுமானதாக இருக்கவில்லை. புலிகளின் பெருமளவு கவனமும் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு போராடுவதில் குவிந்திருக்கும்போது, ஏழை விவசாயிகளுக்கான அவர்களது உதவியென்பது இக்காலத்தில் போதுமானதாக இருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இந்த விவசாயிகளுக்கான உதவித் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வசதிகள் புலிகளிடம் அன்று இருக்கவில்லை. தொடர்ச்சியான போரும், ஆக்கிரமிப்பும் ஒருகாலத்தில் இலங்கையில் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட கிழக்கின் இப்பகுதிகளை கடுமையாகப் பாதித்திருந்தன. கிழக்கில் வரிவிதிப்புகளை மேற்கொண்டாலும்கூட, கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிறு கைத்தொழில் முயற்சிகளை கெளசல்யன் முன்னெடுத்து வந்தார். புலிகளின் உதவியுடன் பாறைகளை அகல்தல், கட்டுமானப் பணிகள், வாகனங்களை வாடகைக்கு விடுதல், வெதுப்பக முயற்சிகள், சிறு கடைகளுக்கான நிதி முதலீடுகள், சிறு புடவைக் கைத்தொழில் என்று பல துறைகளில் கெளசல்யன் இயக்கத்தின் உதவியுடன் மக்களை ஈடுபடுத்தி வந்தார். இவை பெருமளவு லாபத்துடன் இயங்கவில்லையென்றாலும் கூட, நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பொறுப்பான நிதித்துறையிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவினால் இத்திட்டங்களை நடத்தும் பொறுப்பு அவரது விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் இயக்கத்திற்கென்றும், மக்களின் உதவித்திட்டங்களுக்கென்றும் சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் கருணாவினாலும், அவரது விசுவாசிகளாலும் களவாடப்பட்டது.
  13. விலேஜ் விஞ்ஞானி மிகவும் எளிமையான தானியங்கிக் கதவு.......! 👍
  14. தமிழீழ நடைமுறையரசின் வைப்பகமான தமிழீழ வைப்பகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.bankoftamileelam.net' இன் முகப்பின் தோற்றம். (இதில் தமிழ் ஆங்கிலம் என இரு விருத்தும் இருந்தது) இதில் உங்களுக்குத் தேவையான மொழியைச் சொடுக்கினால் இங்கு கொண்டு செல்லும்: நான் தேர்ந்தெடுத்தது தமிழ். வலைத்தளம் பாமினி எழுத்துருவில் உள்ளதால் இவ்வாறு ஆகிவிட்டது.
  15. கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக் கொன்ற மங்களம் மாஸ்ட்டரும் தூயசீலனும் வாகனத்தில் பயணம் செய்தவர்களான கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக்கொன்றது மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் கருணா குழு முக்கியஸ்த்தரும், தூயசீலன் எனப்படும் அவரது உதவியாளரும் தான் என்று அறியமுடிந்தது. தூயசீலன் புலிகளின் காலத்தில் களுவங்கேணிப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்ததோடு, 2004 சித்திரையில் வாகரையில் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வினோதன் படையணியின் தளபதியும் கருணாவின் நெருங்கிய சகாவுமான பாரதிதாசனின் முகாம் உதவியாளராக மங்களம் மாஸ்ட்டர் என்பவர் பணியாற்றியதாகவும் அறிய முடிகிறது. இத்தாக்குதலில் ஒரு ஏ கே 47 ரகத் துப்பாக்கியும், எஹ் கே 33 ரக தானியங்கித் துப்பாக்கியும் இவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலைகள் எதுவாக இருந்தபோதிலும், கருணாவினாலும், பரந்தன் ராஜனினாலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளுக்கு பாரிய இழப்பாகவே கருதப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் போராளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் கெளசல்யன், மேஜர் புகழவன், மேஜர் செந்தமிழன், இரண்டாம் லெப்டினன்ட் நிதிமாறன் ஆகிய பதவியுயர்வுகளை புலிகள் வழங்கியிருந்தனர். இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவுக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை புலிகளுக்கு பாரிய இழப்பாகவே அன்று கணிக்கப்பட்டது. கெளசல்யன் அமைதியான சுபாவம் கொண்ட மென்மையாகப் பேசும் கெளசல்யன் ஒரு சிறந்த சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர். வெளிப்படையாகப் பேசாத, தன்னடக்கம் கொண்ட அவர் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர் என்று பரவலாக அறியப்பட்டவர். அவ்வாறே, இலட்சியத்திலிருந்து விலகாத, எதற்காகவும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காத, இலட்சியத்தில் இருந்து பின்வாங்காத உறுதியுள்ள மனிதராக புலிகளால் அறியப்பட்டவர். கூச்சசுபாவமுள்ளவராக இருந்தாலும், மக்களுடன் மிக அதிகமாக நெருங்கிப்பழகியவர் அவர். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருக்கிருந்த வல்லமை புலிகளிடத்தில் பெரும் பேசுபொருளாகவே இருந்துவந்தது. 2005 இல் அவரது படுகொலையின் மூலம் ஒரு சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தவரை, புலிகளின் இரண்டாவதுநிலை தலைவராக எதிர்காலத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரை அவ்வியக்கம் இழந்தது. இளையதம்பி நாகேந்திரன் லிங்கராசா எனும் இயற்பெயருடைய கெளசல்யன் 1972 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பாண்டாரியாவெளியில் பிறந்தவர். மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் இவ்வூர் அமைந்திருக்கிறது. ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தாலும்கூட, மிகச்சிறந்த போராளியாக அவர் பரிணமித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.