Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87993
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16477
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/24/22 in all areas

  1. தியானத்திற்கான முதல்படி. ரமண மகரிஷி.
  2. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
  3. "நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார். அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் ஊரில் இருக்கிற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்' வாங்கி வாருங்கள்" என்றார். "எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க, "என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாகக் கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார். அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச் சென்றார் . அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும்.இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். 'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்குண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள 'கேக்'கை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்" என்று ஒரு பெட்டியை கொடுத்தார். எவ்வளவு தொகை என்று கேட்டு பணத்தைக் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று ஊருக்குத் திரும்பும் வழியில், மனைவியிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார். "விடுங்கள், அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் அல்லது நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று நினைத்திருக்கலாம்" என்றார் மனைவி. இருந்தாலும் அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு வந்து அந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 'கேக்'குடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில் "நண்பா, என்னுடைய பேச்சை மதித்து நீ என் மகனுக்காக 'கேக்' வாங்கி வந்தாய். தொகை எவ்வளவு என்று கேட்டு, அதைத் திரும்பக் கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. நீ வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்த பெட்டியில் வைத்து அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து இதை எடுத்துக் கொள்" என்றிருந்தது. அதைப் படித்தவுடன், அவரை... நண்பன் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவன் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாகக் கருதுகிறான் என்று வேதனையடைந்தார். மனம் வேதனைப்பட்ட அவர், உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு "உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு" என மன்னிப்பு கேட்கப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னார். அவ்வாறெல்லாம் பேசி இன்னொரு தவறை செய்யாதீர்கள். உங்களைப் பற்றி அவர் உயர்வாக நினைத்திருக்க, "அவரைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்" என்று இப்பொழுது சொன்னால் அவர் வேதனைப்படுவார். உங்களின் மீதுள்ள மதிப்பு குறைந்து விடும் என்றார் மனைவி. ஆம். பெரும்பாலும் நாம் அவசரப்பட்டு யூகத்தின் அடிப்படையிலும், ஆதாரங்கள் இல்லாமலும் மற்றவர்களைப் பற்றி தவறான முடிவுக்கு வந்துவிடுகிறோம். தெளிவான ஆதாரங்கள் கிடைக்காதபோது ஒருவரை குறை கூறுவது குற்றமாகும். அவர் தவறே செய்திருந்தாலும் அதற்கு... ஏதோ ஒரு நிர்பந்தம் அல்லது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் என நாம் நினைப்பதால் நமக்கு இழப்பேதும் இல்லை. ஆனால் தவறு செய்யாத ஒருவரை நாம் யூகத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கி மற்றவர்களிடம் பரப்பினால் நாம் குற்றவாளி ஆகிவிடுவோம். *நலமுடன் நட்பை பேணுவோம்.*
  4. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
  5. 🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
  6. வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. கள்ளச்சாவி போட்டாவது......! வீதியைப் பெரிதாக்க வேலியை வெட்டுகிறார்கள் வேலிக்கு மேலால் வாசமில்லா வண்ணம் கொண்ட போகன்வில்லா மனமில்லை ஆனால் மயக்கும் அழகு தரையில் விழுந்த கொடியில் சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள் பாக்கியமும் பர்வதமும் வேடிக்கை பார்க்க, வருகின்றாள் செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி என்ன செல்லாத்தை எங்க இங்கால ஒண்ணுமில்லை சும்மா வந்தேன் உன்னிடம் ஒன்று கேட்பேன் கோவிக்காமல் உத்தரம் கூறு வாசமில்லா மலர் கொய்த வனிதாவும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் சொல்லனை என்ன விசயம் நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன் பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள் ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன் உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும் கள்ளச்சாவி போடும் நல்ல குடிகாரன் அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு என்ன துணிவில் வந்தாயம்மா பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும் பெண் இருந்தால் கேட்பது வழமை அவளையும் ஒருக்கால் கேட்பமென்று என்ன பிள்ளை வனிதா, மாமி சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும் இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது இனியொரு வரனும் வராமலும் போகலாம் நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம் கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம் திருடன் என்றாலும் இருக்கட்டுமே நான் திருத்தப் பார்ப்பேன் குடிகாரன் ஆனாலும் என்ன அவரைக் குறைக்கச் சொல்லுவேன் பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம் என் முந்தானையில் முடிஞ்சுடுவேன் வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம் அம்மா தாயே கருமாரி திரிசூலி ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன் கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும் கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல் கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....! யாழ் 24 அகவைக்காக ஆக்கம் சுவி .....!
  7. ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே. இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல. அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல். அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை, செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம். ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும். அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும். கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்? காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான். தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு. நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம், அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம் எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம். நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான். இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும். வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய். யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.
  8. பறவாயில்லை நன்றாகவே போகிறது.தொடருங்கோ...✍️😄
  9. 90க்கு முன் வெளிநாடுவந்த பலரின் நிலை.
  10. தொடருங்கள், சுவியர்…!
  11. தப்பு தப்பா செய்யாமல் சரியாக சுவையாக உப்புமா செய்யுங்கள்.......! 👍
  12. படம்: ஆருக்கு மாப்பிள்ளை ஆரோ(1975) இசை : விஜயபாஸ்கர் பாடியோர் : SPB & VJ
  13. வணக்கம் வாத்தியார்......! நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல் என் பெண்மை திரண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2) கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா.....! ---காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக---
  14. எதையும் தாங்குவேன் அன்புக்காக......! 👍
  15. இந்த மாதிரியான நீர்குமிழிகளை அரசுகள் கூட உருவாக்குகின்றதோ? ( உண்மை இல்லை ஒரு சந்தேகம் மட்டுமே) உதாரணமாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது அந்த கடனின் வட்டியை உங்களது வரியிலிருந்து தள்ளுபடி செய்யலாம். இதனால் நன்மை பெறுவது செல்வந்தர்கள், அதனை பார்த்து மற்றவர்களும் வீடுகளை வாங்க வீட்டு விலை அதிகரிக்கும் செல்வந்தர்கள் அதிகரித்த விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள், அதன் பின் நீர்குமிழி உடைந்து விலை சாதாரண மட்டத்திற்கு வந்த பின் சிலேட்டை அழித்து விட்டு மீண்டும் ஆரம்பிப்பார்கள், இதனால் பாதிப்படைவது பாட்டாளிகளே. வீடுகள் மட்டுமல்ல பங்குகள் போன்ற அனைத்து முதலீடுகளில் பெரும்பாலும் நன்மை அடைவது செல்வந்தர்கள் (இதில் நிறைய விதி விலக்குகளும் உண்டு). வளங்களை சமமாகப்பிரிப்பதே வரியின் அடிப்படை, என்று கொண்டுவரப்பட்ட வரி, அதிகமாக செல்வந்தர்களுக்கே சாதகமாகவுள்ளது (பாட்டாளிகளின் வரி விகிதம் வருமானத்தினடிப்படையில் பல மடங்கு செல்வந்தர்களை விட அதிகமாகவுள்ளது). வருமானங்களை சமமாக பிரிக்கப்படும் நிலை உருவானால் ஒட்டு மொத்த சமூகமும் சிறந்த வாழ்க்கை தரத்தை எட்ட முடியும், அமெரிக்காவில் 1950 - 1970 காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் வருமான இடை வெளி குறைவாக இருந்ததாக கூறுகிறார்கள் ( மிக சிறிய அளவில்) இந்த காலத்தை பொற்காலம் என கூறுகிறார்கள் (இதன் உண்மைதன்மை தெரியாது). இந்த முதலீடுகளில் பங்கு பெற்றும் காலங்கள்தான் அதன் வெற்றியை தீர்மானிக்கின்றது. முதலீடுகளில் ஆரம்பத்தில் முதலிடுபவர்கள் அதிக வெற்றியாளராகவும் உச்ச பகுதியில் முதலிடுபவர்கள் தோல்வியாளராகவும் (குறைந்த பட்சம் சில ஆண்டுகளாவது) காணப்படுகிறார்கள். https://www.investopedia.com/terms/b/bell-curve.asp#:~:text=A bell curve is a,a symmetrical bell-shaped curve.&text=The width of the bell curve is described by its standard deviation. இது ஒரு வட்டம் போல நிகழும் (கால சுழற்சி). https://en.wikipedia.org/wiki/Diffusion_of_innovations இந்த Bell curve மற்றும் "S" curve அடிப்படையிலேயே பழக்க வழக்க பொருளாதார நிகழ்வதாகக்கூறுகிறார்கள். the three skills of top trading இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( இணையதளத்தை இணைப்பது சரியல்ல என்பதால் இணைக்கவில்லை). பங்கு சந்தையில் சொல்வார்கள் " Don't fight with the trend", "Cut your loss and run your profit" ஆனால் நடைமுறையில் நாம் அதற்கு எதிர்மறையாகவே செயல்படுவோம். விலை வீழ்ச்சி அடைகிற பங்குகளை வாங்குவோம் (Catching falling knife), ஏற்கனவே நட்டத்திலுள்ள பங்கினை விலை மேலும் குறைந்த பின்னும் திரும்பவும் வாங்குவோம் (Doubling down). அதே நேரம் சிறிதளவது இலாபம் வந்தவுடன் பங்குகளை விற்றுவிடுவோம், ஆனால் சில பங்குகள் நட்டம் அதிகரித்து கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஆனால் எங்களால் விற்க முடியாது. இவை அனைத்தும் எனக்கு ஏற்பட்டது, இவற்றிற்கு காரணம் சரியான முதலீட்டு திட்டமின்மையே.
  16. விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை அதிகரித்தால் அதன் விறபனை குறையும். ஆனால் அசையா சொத்துக்களான முதலீடுகள் (Asset) நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக வீடு, பங்கு போன்றவை விலை அதிகரிக்க அதற்கான கேள்வி அதிகரிக்கும் அதற்கு காரணம் முதலீட்டு செலவுகளின் எதிர்பார்ப்பே எதிர்காலத்தில் வாங்கிய விலையினை விட அதிக விலைக்கு விற்கலாம் என்பதாகும். இதனால் தான் இப்படியான முதலீடுகள் உண்மையான விலைகளை விட அதிகளவான விலையினை ஏற்படுத்துகிறது (Bubbles) வரலாற்றில் பல வகையான நீர் குமிழிகள் (Bubbles) உருவாகியிருக்கின்றன என கூறுகிறார்கள். ருலிப், தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட் போன்றவையை உதாரணமாக சொல்கிறார்கள். https://www.investopedia.com/terms/d/dutch_tulip_bulb_market_bubble.asp இந்த நீர் குமிழிகள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக்கூறுகிறார்கள். ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட விலையினை உடைய கடனில் உள்ள வீட்டின் பெறுமதியினை துணையாக வைத்து அதன் போலியான பெறுமதியை முதலீடாக்கி அதே சந்தையில் இன்னொரு வீட்டை மிகைப்படுத்தப்பட்ட விலையில் மீண்டும் கடனில் வாங்கினால் என்னவாகும். ருலிப்பினை வங்கிகள் கூட ஒரு சொத்தாக அங்கீகரித்திருந்தது என்பதை இப்போது பார்ப்பவர்களுக்கு நகைசுவையாக இருக்கலாம் ஆனால் அந்த காலத்தில் ஒருவரும் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. முதலீடுகளில் மற்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போது இவ்வாறான துயரம் நிகழுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.