Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88024
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/02/22 in all areas

  1. பார்வை ஒன்றே போதுமே..........(8). சோமு அப்பால் சென்றதும் சாமிநாதன் முத்துவிடம் ஏன் முத்து அந்தக் கடையை நாங்கள் வாங்கினால் என்ன என்று சொல்ல....என்னய்யா நீங்கள் புரியாமல் கதைக்கிறீங்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கு போவது. அதுவும் மாடியுடன் கூடிய பெரிய கடை. பின்னாலும் பெரிய வளவு இருக்கு. என்னை நம்பி யார் அவ்வளவு பணம் தருவினம். சும்மா நடக்கிறதைச் சொல்லுங்கோ. அவ்வளவு அனுபவசாலியே வியாபாரம் இல்லாமல் கடையை விக்கிறார். நடக்கும் முத்து நீ அவர் வந்தால் என்னிடம் சொல்லு, நாங்கள் அவரிடம் கதைத்துப் பார்ப்போம். பின் இருவரும் தமக்குள் யோசனையுடன் தங்கள் தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள். அப்போது முத்து தனக்குள் கதைப்பது போல் நான் இப்போது படித்திருக்கும் படிப்புக்கு இப்படி ஒரு இடம் கிடைத்தால் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது..... நீ ஒன்றுக்கும் யோசிக்காதே முத்து அது சரிவரும் என்றுதான் என் மனசு சொல்லுது என்று சாமிநாதன் முத்துவுக்கு ஆறுதல் சொல்கிறார். அன்று மதியம் முத்து இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக வீதியைக் கடந்து எதிரில் உள்ள உணவகத்துக்கு வருகிறான். அப்போது ஒரு கார் அவனைக் கடந்து வந்து அந்தக் கடைக்குமுன் நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய அந்த மனிதர் முத்துவைக் கண்டதும் "முத்து இங்கு கொஞ்சம் வந்துட்டு போ" என்று அழைத்தார். அவனும் என்ன ஐயா என்று அவர் முன் சென்று பவ்யமாக நின்றான்.மனதுக்குள் இப்பதான் இவரைப் பற்றி கதைத்தோம் பார்த்தால் முன்னே வந்து நிக்கிறார் என்று நினைக்கின்றான். அவர்தான் சோமு வேலை செய்யும் புடவைக் கடையின் முதலாளி. அவரும் முத்துவின் தந்தையும் பால்ய நண்பர்கள். அவனது தந்தையின் மரணச்சடங்குக்கு வந்தபோது முத்துவின் கையில் ஒரு என்பலப்பில் பணம் வைத்துக் குடுத்துவிட்டு சென்றவர். அந்தப் பணத்தை வைத்துதான் தந்தையின் இறுதிக் காரியங்களை ஒரு குறைவுமில்லாமல் செய்தவன். அவர் காரின் டிக்கியத் திறந்து சில சோடி சப்பாத்துகள், செருப்புகளை அவனிடம் குடுத்து இவை எனது மனிசி மற்றும் பிள்ளைகளுடையது, இவற்றை பழுதுபார்த்து பொலிஸ் பண்ணிக் கொண்டுவந்து தா என்று சொல்லி அவனிடம் கொடுக்கிறார். அவனும் சரி ஐயா நான் இந்த வேலைகளை முடித்து பின்னேரம் வீட்டுக்கு போகும்போது உங்கட வீட்டில் குடுத்து விட்டு போகிறேன் என்றான். அவர் பர்சில் இருந்து பணம் எடுத்து குடுக்க வரும்போது, அவனும் வேண்டாம் ஐயா இருக்கட்டும் என்று சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு போகிறான். சாமிநாதனின் வீட்டில் அவரை எல்லா இடமும் தேடிக் களைத்து விட்டார்கள். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களுடைய வணிக வளாகத்தில் அவர் கம்பெனி விஸ்தரிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் சொல்லி இருந்தார்கள்.ஆனாலும் ரேகாவுக்கு எல்லாம் விளங்கி விட்டது. தனது நடத்தைப் பிழையால்தான் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டார் என்று. இந்த உண்மையை பிள்ளைகளிடமும் சொல்ல முடியவில்லை. ரவிதாசும் நிர்மலாவும் மிகவும் கலங்கிப் போனார்கள். அப்பாவை யாராவது கடத்தி இருப்பார்களோ, அப்படியென்றாலும் இந்நேரம் கப்பம் கேட்டு போனாவது செய்திருக்க வேண்டுமே என்று தவிப்பாக இருக்கின்றது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. போலீசுக்கு தகவல் குடுக்கிறதுக்கும் தாயார் வேண்டாம் என்று தடுக்கிறா. ரேகா நினைக்கிறாள் போலீஸ் வந்தால் அவர்கள் நிட்சயம் வேலைக்காரர், ட்ரைவர்களிடம் அவர் வழக்கமாய் போகும் இடங்கள், கிளப்புகள் என்று விசாரிப்பார்கள். அப்படிவரும் போது தனக்கு மிகவும் அவமானமாய் போய்விடும். மேலும் இது வெளியே தெரிந்தால் வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். ரவிதாஸ்தான் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் கம்பெனி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறான்.ஒரு ரகசிய ஏஜென்ட் மூலமாகவும் தகப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறான். நிர்மலாவும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் கம்பெனி வேலைகளிலும் உதவியாக இருக்கிறாள். அன்று கம்பெனியில் வேலை முடிந்து ரவிதாசும் நிர்மலாவும் ஒரேகாரில் கதைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது நிர்மலா அவனிடம் அண்ணா இன்று எங்கள் கம்பெனி வக்கீல் தவராசா இருக்கிறார் எல்லோ அவர் தனது உதவியாளர் என்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினவர். இனி எங்களது வியாபாரம் சம்பந்தமான எல்லா விடயங்களையும் அவாவிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்னவர். அப்படியா ....தவராசா தன்னிடம் ஒருவரை ஜூனியராக சேர்க்கிறார் என்றால் அவர் மிகவும் கெட்டிக்காரராகத்தான் இருப்பார். பேசிக்கொண்டு வரும்போது கார் வீட்டுக்கு வந்து போர்டிகோவில் நிக்கின்றது..........! பார்ப்போம் இனி.......! ✍️
  2. மிஸ்டர் ராஜவன்னியன் தயவுசெய்து மேடைக்கு வரவும்......இங்கு ஒருவருக்கு குளிர் விட்டு போச்சு.......! 😂
  3. அன்புள்ள சுமேரியரே மூட்டைப் பூச்சியினால் நீங்கள் படும் சிரமத்தை வடிவேலு அவர்களும் யாழில் படித்துவிட்டு, ஒரு நவீன மெசினை உருவாக்கிப் பாவம் அவர் படும் பாட்டைப் பாருங்கள்.
  4. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
  5. ஊசி ஏத்தியும், வயசுக்கொடுமை தாங்க முடியலை.. சாமியோவ்! 🤗
  6. சரியாய் கண்டுபிடித்து விட்டீர்கள். எனக்கு மூட்டை கடிக்காமல் விட்டிட்டுது. மனிசன் தான் 100 போச்சே எண்டு கடுப்பேத்திறார்😃 மனிசன் துள்ளி விளையாடுற கொடுமையும் குறையேல்லைத்தான்😀 நான் மூட்டைஇருப்பதாக நம்பியதில் தான் கடி 😀😀😂 சித்தெறும்பு என வீட்டுத் தோட்டத்தில இருக்குத்தான். ஆனால் கட்டிலுக்குமா வரும்.???? 😂
  7. கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீ... கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி பால் நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே வானவில் நீ சூடிட மேலாடையாகுதே கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா... உன்னை உள்ளம் என்னுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான் கண்ணம்மா... கண்ணம்மா... என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீ...
  8. கதை நல்லாயிருக்குத் தான்…! மூட்டைப் பூச்சி இல்லையென்றால் கடிச்சது என்ன? மனிசன் நுள்ளி விளையாடுது போல….!
  9. அம்மாவின் சொல் கேட்டு கமலாவை மணமுடித்தார் இல்லையெனில் அருமையான தம்பதிகளாகும் வாய்ப்பு..👍.இன்னா கெமிஸ்ரி.👌
  10. துடுப்பாட்ட ஸ்ரிக்கர் சேகரித்த நினைவுகள் உள்ளதா.?
  11. பார்வை ஒன்றே போதுமே........(2). ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள். உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள். சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......! பார்ப்போம் இனி......! ✍️
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி. சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.