Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88007
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20026
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/16/22 in all areas

  1. நீங்கள் இருவரும் சொல்லுவது ஓரளவுக்கு உண்மை. இருவருமே அடிமை முறையை கொண்டுதான் தங்களை வளப்படுத்தினார்கள், மெக்ஸிக்கர்கள் அடிமை முறையை சட்டப்படி முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள், அனால் அமெரிக்கா கொஞ்சம் லேட். ஆங்கிலேயர்கள் infrastructureஐ நன்றாக கவனித்து தங்களுக்கு உட்பட்ட இடங்களை வளப்படுத்தினார்கள், ஸ்பானியர்கள் இந்த விடயத்தில் அவ்வளவு சொல்லும்படியாக இருக்கவில்லை. இருவருமே இங்குள்ள மக்களுடன் கலந்த முறைகளில் வேறுபாடு உண்டு. வெள்ளை அமெரிக்கர்கள், பெரும்பாலானவர்கள் ஜெர்மானியர்கள், அடுத்து ஐரிஷ் உம் ஆங்கிலேயர்களும் , இங்குள்ள native மக்களுடன் அவ்வளவாக கலக்கவில்லை, ஆனால் ஸ்பானியர்கள் நன்றாகவே கலந்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருப்பதுபோல் மெக்சிக்கர்களிடமும் ஒருவகை சாதி முறை உண்டு. கலப்பு குறைந்த, வெள்ளையின தோற்றம் கொண்டவர்கள் உயர் சாதிகளாகவும், நன்றாக கலந்தவர்கள் குறைந்த சாதிகளாகவும் கருதப்படுவதாக மெக்ஸிகோவில் இருந்து வந்த ஒருவன் சொன்னான், எவ்வளவு தூரம் இவை அங்கெ நடையின்முறையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த கலப்பின் அளவு விஞ்ஞானரீதியானது நிருபிக்கப்பட்டதல்ல, நமது சாதி போன்ற ஒரு சமூக கட்டமைப்பு (Social Construct) தற்பொழுது அமரிக்காவும் மெக்ஸிகோவும் சில இடங்களை, native மக்களுக்குரிய தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளார்கள். அமெரிக்காவில் அவர்களுக்கும் அவர்களின் இடங்களுக்கும் வரிகள் மற்றும் இதர சலுகைகள் நிறைய உண்டு. பக்கங்களில் இருப்பவர்கள் அங்கு சென்று சாமான்களும் வாங்கிக்கொண்டு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வருவார்கள். பொருளாதார நிலைமைகளினால், மெக்ஸிகோவில் இவை அவ்வளவாக நன்றாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்த கதை எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை, முன்பு அங்கீகரிக்கப்பட்ட செவ்இந்தியர்களின் தலைவர்கள், எவரையுமே தங்கள் இனத்தில் சேர்க்கலாம், அப்பிடி சேர்த்தவர்கள் உடனடியாக அமெரிக்கா குடியுரிமை பெறுவார்கள், சில சீனர்கள் இப்படி அவர்களின் இனத்தில் சேர்ந்து அமெரிக்கர்கள் ஆனார்கள், பின்பு இந்த முறையை ஒளித்து விட்டார்கள் என்று ஒரு கதை உலாவியது. தமிழ் சிறி, எனது பிள்ளைகளுக்கு படிப்பதுக்கு உதவி செய்யும்பொழுது அந்த பாடப்புத்தகங்களிலில் இருந்து நான் இவற்றை நிறைய அறிந்து கொண்டேன். கொலம்பஸ் இறங்கியது கிழக்கு கரை. 1600 கடைசியிலும் 1700 ஆரம்பத்திலும், மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பக்க மாநிலங்கலில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்றது. ஸ்பெயின் அரசரின் கட்டளைக்கு இணங்க, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் நடைபெற்றது. படைவீரர்களுடன், பாதிரியார்களும் ஆண்களும் பெண்களுமான குழுவாக சென்று குடியேறினார்கள். அமெரிக்கா-மெக்ஸிகோ யுத்தம் நடந்தது 1848இல். அதன்முடிவில் பல மாநிலங்களை/நிலங்களை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கிழக்கு பக்கங்களில் (அதிக மக்கள் கொண்ட இடங்கள்) ஆங்கிலேயர்களும், நடுப்பகுதிகளில் பிரான்ஸ் உம், தென் அமேரிக்காவில் இருந்து, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவின் மேற்குவரைக்கும் ஸ்பானியர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். கிழக்கின் சில பகுதிகளில் (உதாரணம் நியூயார்க், Delaware) Dutch West India கம்பெனி மூலம் ஹாலந்தும் ஆதிக்கம் செலுத்தி செவ்விந்தியர்களுடன் வியாபாரம் செய்தார்கள். 1776 இல் கிழக்கில் இருந்த 13 மாநிலங்கள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது, பிறகு Louisiana மற்றும் சில நடுப்பகுதிகளை பிரான்ஸின் நெப்போலியன் உடனான ஒப்பந்தத்தின் மூலம் வாங்கினார்கள், பிறகு மெக்ஸிக்கோவிடம் இருந்து மேற்கு பகுதிகளை பிடித்தார்கள், வடஅமேரிக்காவில் ரஷ்யா இருப்பது நல்லதல்ல என்ற காரணத்தினால், கிட்டடியில் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி சேர்த்தார்கள். ரஷ்யாவிற்கும் அலாஸ்காவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இருக்கும் இரண்டு சிறிய தீவுகளுக்கிடையில் எல்லை பகுதியை வகுத்தார்கள். ஒரு தீவு ரஷ்யாவிடமும் மறு தீவு அமேரிக்காவிடம் இருக்கிறது. தற்பொழுது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2.4 மைல்கள் மட்டுமே. நான் எனக்கு தெரிந்தவற்றை பொதுவாக, மேலோட்டமாகவே எழுதியுள்ளேன், தவறுக்கு இருக்கலாம்.
  2. நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன். அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர். “உனது ஐடியைத் தருகிறாயா?” “என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்” “யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே” “ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?” எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன். “ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள் கறுவினாலும் வெளியே சொல்லவில்லை. அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி. கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான். “நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன். அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான். அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான். நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது. அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள். அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன். அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான். ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன். அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ... ........
  3. மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.
  4. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
  5. மாமா… காய்ஞ்சு போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போய்ட்டா?
  6. குமாரசாமி அண்ணை…. அந்த “மஞ்சள் பையை”…. கிருபன் ஜீயும், மறக்கவில்லை. 😜
  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head nets சறம் - Lungi வெற்றிக்கொடி - Victory Flag நீர்க் கலன் - water can தலைமயிர் பாணி - Hair style தலைக்கவர் - Headcover காதுப்பஞ்சு - Earcotton முதலில் குப்பியில் இருந்து தொடங்குவோம். குப்பி - cyanide capsule 'விளக்கப்படப் புரவு: நன்னிச் சோழன்' 'போராளியின் நெஞ்சினில் குப்பி & தகடு' குப்பியானது ஆடியால்(Glass) ஆனது ஆகும். இதை கறுப்பு கறுப்பு அல்லது சிவப்பு நிறக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டிருப்பர். இதனுள் 'சயனைட்' என்னும் வேதியல் நஞ்சு (மேற்கண்ட படத்தில் உள்ள குப்பியினுட் வெள்ளை நிறத்தில் உள்ள பொடி) இருக்கும். இதைக் கடித்த 5 நொடிகளுக்குள் மரணம் வந்துவிடும். இதைச் சாதாரண புலிவீரர்கள் அணிந்திருப்பர். கரும்புலிகள், வேவுப்புலிகள் மற்றும் புலிகளின் புலனாய்வாளர்கள் போன்றவர்கள் 'இரட்டை குப்பிகள்' அணிந்திருப்பர். இதைக் கடித்த அடுத்த நொடியே இவர்களிற்கு சாவு. கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போராளிகளின் குப்பிகள் கடல்காற்றாலும் வேறு சில காரணிகளால் பாதிக்கப்படுவதாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். இது புலிவீரர்களை சிங்கள, இந்தியப்(இந்திய அமைதிப் படைக் காலம்) படைகளின் பிடிபாட்டில் இருந்து காப்பாற்றிக் கொள்ள உதவியதோடு, சமர்க்களத்தில் பிடிபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் சித்திரவதைகள் பற்றிய கவலையினை இல்லாது செய்தது. → இந்த குப்பியானது ஒரு புலிவீரனுக்கு பெருமை மிகுந்த அடையாளமாகவும், த.வி.பு இயக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தது. 'இது இந்திய அமைதிப் படைக் காலத்தில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் உள்ள வீரர்களின் கழுத்தில் இரட்டைக் குப்பி தொங்குவதைக் காண்க.' | படிமப்புரவு: India Content Photos, Pictures, Photograph Online for Website வாய்க்குப்பி: இதன் பயிற்சி தனிவிதம். தண்டனை பெறாமல் பயிற்சி ௭டுப்பது மிகமிகக் கடினம். இதில் வேறு விதமானதும் உண்டு. அதற்கு இரும்பு வளையம் இருக்காது இதைவிட சிறியது, பரிசோதனைக்குழாய் மதிரி 5 அம்பியஸ் பியுஸ் அளவு வரும். ஒரு பக்கம் லாத்திரி மெளுகால் அடைக்கப்படும். 24 மணி நேரமும் பதுகாப்பற்ற பரப்புகளில் இருக்கும் போது வாய்க்குள் கன்னத்துக்கும் பல்லுக்குமிடையில் இருக்கவேண்டும். பிடிபடும் போது கொடுப்புப் பற்களால் கடிக்க 4 நொடிகளில் கதைமுடியும். முறையாக கடிக்கத்தவறின் பிடிபட நேரிடும். தகடு - Dog Tag இந்தத் தகடானது உலக படைத்துறைகளில் உள்ள ஒவ்வொரு வீரனும் அணிவது போன்று புலி இயக்கத்தின் ஒவ்வொரு வீரர்களும் (மக்கள்படை அணியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது) அணியும் ஓர் படைத்துறை அணிகலனாகும். இதைக் கறுப்பு நிறக் கயிற்றில் கோர்த்துத் தொங்கவும் கட்டியிருக்கவும் செய்வர். இதில் உள்ள எண்ணானது ஒவ்வொரு புலி உறுப்பினரதும் எண்ணாகும். இது அந்த உறுப்பினர் எத்தனையாவது ஆளாக இயக்கத்தில் சேர்ந்தார் என்பதைக் குறிக்கும். சிறிய எண்ணென்றால் மூத்த உறுப்பினர்; பெரிய எண் என்றால் புதிய உறுப்பினர் என்பது பொருளாகும். முதலாவது எண்ணான '01' ஆனது அவ்வியக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட எண்ணாகும். இந்த எண்ணின் அடிப்படையில் அந்த உறுப்பினரின் முழுத் தகவல்களும் அவ்வியக்க குறிப்பேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டு தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதை உரிய அனுமதியிலாமல் எவராலும் பார்க்க முடியாது.. வீரச்சாவெய்திய ஓர் உறுப்பினரின் எண் மற்றோராளிற்கு வழங்கப்படாது. இத்தகடுகளானவை 1991, 1992 காலத்தில் இயக்கத்திற்குள் நடைமுறைக்கு வந்தது. அக்கால கட்டத்தில் இது ஒவ்வொரு மாவட்ட படைத்துறைப் பிரிவுக்குமென கொடுக்கப்பட்டிருந்தது. பின்னாளில் இது ஒவ்வொரு அடிபாட்டு உருவாக்கத்திற்குமென தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. 1996 இற்குப் பின் புலிகளின் நிலக் கட்டுப்பாடு பெருமளவில் சுருங்கியதால் தகடுகள் யாவும் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டன. அதன் பின்னர் 2002 இற்குப் பின்னர் கட்டளைப் பணியகங்களை அடிப்படையாகக் கொண்டு சண்டையில் நிற்கும் போராளிகளுக்கும் துறைகளை அடிப்படையாகக் கொண்டு துறைசார் போராளிகளுக்கும் வழங்கப்பட்டன. மாவட்ட அடிப்படையில்(1991 - 1995): அ - மட்டு-அம்பாறை இ - வன்னி ஈ - மணலாறு உ - யாழ்ப்பாணம் (& அங்கு இயங்கிய துறைகளுக்கும்) ஊ - மன்னார் தலைமைச் செயலகம் - 0 (பின்னாளில் (எப்போதிலிருந்து என்று தெரியவில்லை) 'த' என்னும் குறியீடு வழங்கப்பட்டது) இந்த '0'-ஐ 'O' என்றும் அழைப்பர் - 1991 காலப்பகுதியில் இக்குறியீடுகள் எதுவும் நிரந்தரமானவை அன்று. வித்துடல்களில் இருந்து எதிரி கழற்றி எடுத்து ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவான் என்பதால் இவை காலத்திற்கு காலம் மாற்றப்படும், பட்டது. பின்னாளைய படையணிகள், பிரிவுகள், துறைகள் மற்றும் ஏனையவற்றிற்கு வழங்கப்பட்ட குறியீடுகள்: இம்ரான்-பாண்டியன்: க படையப் புலனாய்வு: ஃ 'இரு வேறு புலிவீரர்களின் தகடுகள்' இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால் ஒன்று தொலைந்தாலும் மற்றொன்றினை வைத்து அவர் இன்னாரென்று அடையாளப்படுத்த முடியும். இம்மூன்றினுள் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும் தகடே மணிக்கட்டுத் தகடு ஆகும். இதில் மட்டும் த.வி.பு. என்று எழுதப்பட்டிருக்காது. பெரும்பாலான கழுத்துத் தகடுகளில் குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு புலிவீரனின் உடலில் இருக்கும் இம்மூன்றிலும் ஒரே உறுப்பினர் எண்கள் & குறியீடுகளே குறிப்பிடப்பட்டிருக்கும். இம்மூன்றையும் அனைத்து தவிபு உறுப்பினர்களும் அணிந்திருப்பர் (மக்கள் படை பற்றி நானறியேன்). 'கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குருதி வகை பொறிக்கப்பட்ட கழுத்துத் தகடு.' ஒருவேளை வித்துடல் எதிரியிடம் சிக்குண்டால், எதிரியானவன் இந்தக் குப்பியையும் தகட்டையும் கழட்டியெடுத்து தனது ஆழஊடுருவும் அணி மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவும் சிங்கள உளவாளிகள் ஆகியோரிற்கு கொடுத்தனுப்புவதும் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு அரங்கேறிய நிகழ்வுகளாகும். (2006 ஆம் ஆண்டு இரத்தினபுரம் இரும்புப் பாலத்திற்கு அருகில் வைத்து இதை அணிந்து வந்த ஒரு சிங்கள உளவாளியைப் பிடிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த காட்டிற்குள் அவன் செருப்புக் கூட இல்லாமல் தப்பி ஓடிய நிகழ்வும் நடந்தது. நிகழ்வு நடந்த பின்னர் இவ்விடத்திற்கு நன்னிச்சோழன் ஆகிய நானும் சென்றிருந்தேன்.) 'லாமினேட் தகடுகள், வெற்றுக் குப்பிகள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுத் தகடுகள் ஆகியவை உள்ளதைக் காண்க' மேற்கண்ட படிமத்தில் 'Lamination' செய்யப்பட்ட காகிதம் உள்ளதல்லவா, அது விடுதலைப் புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே அணியப்பட்ட ஓர் அணியமாகும். இதை கறுப்புக் கயிற்றில் கட்டி கழுத்தில் வெளியே தெரியும்படியாக தொங்கவிட்டிருப்பர். இதில் "த.வி.பு" என்ற சுருக்கமும் படையணிக் குறியீடும் புலி உறுப்பினர் எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும், குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்காது. இவை 2008 ஆகக்கடைசியில் பாவனைக்கு வந்துவிட்டன. இவற்றை ஆகக்குறைந்தது காயக்காரரைக் காவும் பணியில் ஈடுபட்டிருந்த போராளிகள் தொங்கவிட்டிருந்தனர் என்பதை புலிகளின் நிகழ்படம் ஒன்றின் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. அடையாள அட்டை: அடையாள அட்டையின் முன்புறத்தில் உரியவரின் வரிப்புலிப் படத்தின் மேல் புலிகளின் முத்திரையுடன் அடையாள அட்டையின் பாவனைக் கால அளவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பின்புறத்தில் (கிடமட்டமாக) அப்புலிவீரனின் இயக்கப்பெயர், பிறந்த திகதி, உயரம், குருதி வகை, உறுப்பினர் கையொப்பம், இன்னொருவரின் ஒப்பந்தம் மற்றும் அடையாள அட்டை எண் என்பன அடங்கியிருக்கும். விடுதலைப்புலிகளின் நிரந்தரப்படை: முன்பக்கம்:- 'மேற்கண்ட படத்தில் இருப்பவர் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப் கேணல் விநாயகம் ஆவார்' பின்பக்கம்:- விடுதலைப்புலிகளின் மக்கள்படை: இவை உள்ளூர் (நடைமுறை அரசின் கட்டுப்பாட்டு ஆட்புலங்கள்) பாவனைக்கு மட்டுமே. ''முன்பக்கம்" கைமேசு - gloves இதை இவர்கள் சமர்க்களங்களில் அணியார். மாறாக பகைப்புலத்தில் நடைபெறும் சிறப்பு நடவடிக்கைகளின்போது மட்டுமே அணிவர். அடிபாட்டுச் சப்பாத்து - Combat shoe இவர்களின் சண்டைச் சப்பாத்து ஏனைய சப்பாத்துகளைப் போல இருந்தாலும் இதனில் ஒரு வேறுபாடு உண்டு. அதாவது இவர்களின் சப்பாத்துகளில் கால் உள்ளுடுத்தும் வாயின் கீழ்ப்பகுதியிலிருந்து மேனோக்கி வரித்துணி தைக்கப்பட்டிருக்கும். (கீழே படத்தில் காண்க). இது எப்பொழுதும் புலிவீரர்களால் அணிந்திருக்கப்படவில்லை. சமர்க்களங்களில் இதை அவர்கள் அணியார். ஆனால் குறிப்பாக அணிநடைகளின் போது பங்கேற்கும் அனைத்துப் புலிவீரர்களும் இதை அணிவர். அதே சமயம் பயிற்சிகளின் போதும் இதை சிலர் அணிவதுண்டு. இச்சப்பாத்தின் பக்கவாட்டு உருமறைப்பு தரைப்புலிகளுக்கு (தரைச் சிறுத்தைப்படை & காட்டுச் சிறுத்தைப்படை உம் கூட) பச்சை வரிப்புலியிலும், கடற்புலிகளில் தரைப்பணிச் சீருடைக்கு மட்டும் நீல வரிப்புலியிலும் இருந்தது. கடற்கலவர், கரும்புலிகள் மற்றும் வான்புலிகள் ஆகியோருக்கு எந்தவொரு வரித்துணியும் தைக்கப்படாமல் வெறுமனே கறுப்பு நிறத்தில் இருந்தது. தரைப்புலிகள்: கடற்புலிகள் & சிறுத்தைப்படை: கீழுள்ள படிமத்தில் வலது பக்கத்தில் கடற்புலி தரைப்பணிச் சீருடை அணிந்தபடி நிற்கும் பெண் போராளியின் சப்பாத்தை நோக்குக. '10-10-2002' கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag புலிவீரர்கள் சமர்க்களங்களில், புயத்தில் ஓர் வெள்ளைத் துணியும் மணிக்கட்டிலும் ஓர் வெள்ளை நிற பட்டையும் கட்டியிருப்பார்கள். இது இவர்களை தற்படை வேட்டில்(friendly fire) இருந்து விலக்குவதோடு சமர்க்களத்தில் மாறுவேடத்தில் கலக்கும் எதிரிகளிடம் இருந்து வேறுபடுத்த உதவியது. 'சமர்களத்தில் வெள்ளை நிற கைப்பட்டை கட்டி நகரகழியினுள் பதுங்கியிருக்கும் பெண் போராளி ' இதே போன்ற கைப்பட்டைகளை சிங்களப் படைகளும் அணிவார்கள்.. அவை வண்ணம் வண்ணமாக இருக்கும். ஆனால் அவ்வண்ணங்கள் குறிப்பிடும் செய்தி பற்றி நானறியேன். 'பிரிகேடியர் தீபனுடன் நிற்கும் வெள்ளை நிற புயத்துணி கட்டிய ஆண் போராளிகள். அருகில் தரித்து நிற்பது ஒரு நிலத் தோரணம்(Land Rover) ஆகும்.' சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker 'உந்துகணை(Rocket) செலுத்தியின் குழலில் ஒட்டுப்படம் ஒட்டப்பட்டுள்ளதை நோக்குக' 1990 ஆம் ஆண்டு வரை புலிகள் இவ்வாறான ஒட்டுப்படங்களைப் பயன்படுத்தியிருந்தனர். இதை ஏன் பயன்படுத்தினர் என்று நான் அறியேன். ஆனால் நான் நினைக்கிறேன், இதன் மூலம் பிற இயக்கங்களில் இருந்து தம்மியக்கத்தின் ஆய்தங்களை வேறுபடுத்தியோ அல்லது தம்மியக்கப் போராளிகளை வேறுபடுத்தியோ காட்டியிருக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே! சுடுகலத்தோல் - Gunskin புலிகள் தங்களின் சுடுகலங்களிற்கு சுடுகலத்தோல் பூண்டிருந்தார்கள். ஆனால் இத்தோல்கள் சுடுகலனிற்கு முற்றுமுழுதாக பூணப்படவில்லை. மாறாக ஏ.கே. வகை துமுக்கிகளின்(Rifle) பிடங்கு மற்றும் உந்துகணை செலுத்தியின் சுடுகுழல்(barrel) ஆகியவற்றிற்கு மட்டுமே பூணப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பூணப்பட்ட தோல்கள் நெடு வரியும் கிடைமட்ட வரியுமாக இருந்தது. →பிலிறுந்தம் - சொல் வழங்கியவர் தமிழ்த்திரு இராமகி அவர்கள் ஆவார். 'ஆர்.பி.யீ சூட்டாளர் ஒருவரின் தோளில் உள்ள உந்துகணை பிலிற்றுந்திய கைக்குண்டு செலுத்தியின் சுடுகுழலிற்கு சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும். முதுகில் வெற்றிக்கொடியையும் சுருட்டி வைத்துள்ளார்.' 'ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56இன் பிடங்கிற்கு(butt) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்' 'ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56 இன் கைப்பற்றில்(hand grip) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்' இவ்வாறு பூணப்பட்டுள்ள சுடுகலத்தோலானது வரி உருமறைப்பு(camouflage) கொண்ட துணியால் செய்யப்பட்டது ஆகும். கவனி: இவருடைய செலுத்தியின் வெந்(Breech)-இல் ஒரு தோல்(skin) போடப்பட்டுள்ளது. புலிகளின் படைக்கலங்களின் அணிய விரிவுகளை கண்டீர்களா? அற்புதம்! தலை வலை (Head nets): இதனை இவர்கள் பூச்சிகள் மற்றும் நச்சு உயிரிங்களிடம் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக அணிந்திருக்கிறார்கள். சறம் - Lungi இது இவர்களின் இருபால் தரைச் சமர்ப் போராளிகளால் மட்டும் உடலினில் யாத்தப்பட்டது. சிலர் இதனை சள்ளையில் கட்டியிருந்தனர்; சிலர் இதனை துப்பட்டி போல கழுத்தில் சுத்தியிருந்தனர்;சிலர் மாலை போன்று அணிந்திருந்தனர். இஃது, சமரில் காயமுற்றால் கிழித்துக் கட்டவும், கட்டிக் கொண்டு குளிக்கவும், இன்ன பிற தேவைகளிற்கும் பயன்பட்டது. இதன் நிறம் பெரும்பாலும் நீல நிறத்திலே காணப்பட்டது. பச்சை நிறம் உடைய சறத்தை யாத்தோரும் சமர்க் களத்தில் தென்பட்டனர். 'இப்படத்தில் உள்ள 3 பெண் பொராளிகளில் முன்னவரின் சள்ளையிலும் இரண்டாமவரின் கழுத்திலும் சறம் இருப்பதை நோக்குக' வெற்றிக்கொடி - Victory Flag இது புலிக் கொடி அன்று. ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடி. இதை முன்னேறித் தாக்கல் சமரின் போது போராளிகளில் ஒரு சிலர் கொண்டு செல்வர். 'இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே மேற்கண்ட கொடியாகும்' நீர்க் கலன் - Watercan கீழக்கண்ட வடிவிலான கலன்கள் புலிகளிடம் இருந்த நீர்க் கலன்கள் ஆகும். ஆனால் இதை விட சோடா புட்டில்களையும் நீர்கொள் கலன்களாக பயன்படுத்தினர். 'மட்டு-அம்பாறையினைச் சேர்ந்த படையணியினர்' தலைமயிர் பாணி - Hair style பெண்களின் :- 'இப்படிமத்தில் தெரியும் பிடரிகளை நோக்குக. அதில் உள்ள தலைமயிர் பாணிதான் பெண்புலிகளின் தலை மயிர் பாணியாகும். இதில் உள்ள 6 பெண் போராளிகளும் மாலதி படையணி படையணிச் சீருடை அணிந்துள்ளனர். இது தவிர இயக்கத்தில் சேர்ந்த உடன், பெண்களின் தலைமயிர் கட்டையாக வெட்டப்படும். வளர்ந்தவுடன் இரட்டை பின்னலிட்டு உச்சந்தலையில் மேற்கண்டது போல கட்டுவர். ஆண்களின்:- இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கும்போது மொட்டை அடித்துவிடுவர். பிறகு பயிற்சி முடிந்தவுடன், களத்தில் நிற்கும் போது, கட்டையாக வெட்டியிருப்பர். விதப்பாக சொல்லவேண்டுமெனில் 'police cut' என்று சென்னையில் வழங்கும் முடிவெட்டும் பாணிதான் இவர்களுடையது(அதற்காக இவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது அன்று) ஆனால் கன்னமீசையை மழித்திருப்பர். ஊடுருவிச் செல்லும் புலிகள் அணியும் 'மழைக்கவசம்' 'ஊடுருவி உள்ள புலிவீரர்கள் மழைக்கவசம் அணிந்துள்ளதை நோக்குக' தலைக்கவர் - Headcover இது மேற்குலகின் 'Helmet covering cloth' போன்றது. வரிப்புலி உருமறைப்பாலான தலையில் அணியும் ஒருவிதமான துணியாகும். இதன் தோற்றமானது இது இசுரேலியர்களின் தலைச்சீரா துணி போன்றல்லாமால் கொஞ்சம் நீளமானது. ஒரு நீளமான உருள்கலன் போன்ற வடிவிலான இதன் ஒரு முனையில் இருக்கும் திறவல் மூலம் தலையில் போடப்படுகிறது. பின்பக்கம் மடித்து விடப்படும் (படிமத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று) இது சோதியா படையணியினரால் மட்டுமே அணியப்பட்டதாகும். 'சோதியா படையணியினர் தலைக்கவர் அணிந்துள்ளதை நோக்குக' காதுப்பஞ்சு இது உந்துகணை சூட்டாளரும் அவரது துணைவனும் உந்துகணை வேட்டொலி தம் காதினை பாதித்துவிடாதவாறு காதினுள் வைத்துக்கொள்ளும் ஒரு சாதாரண பஞ்சாகும். இதை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உந்துகணை அடித்த பெரும்பாலானோர் அணிந்திருப்பர். கீழ்க்கண்ட படிமத்தில் உந்துகணை சூட்டாளரின் துணைவனின் காதில் இது தெரிவதை(வெள்ளை நிறத்தில்) நோக்குக: கொசுறு: புலிவீரர்கள் அணியும் சீருடைகளின் முழுக் காற்சட்டையிலும் மேற்சட்டையிலும் பெண்களின் உள்ளாடையிலும் தொடரிலக்கம் கறுப்பு நிற நூல் கொண்டு தைக்கப்பட்டிருந்தது. அத்தொடரிலக்கமானது நான்கு எண்கள் கொண்டது ஆகும். மேற்சட்டையில் வலது மார்பில் தைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு புலிகளின் அனைத்துக் கிளைகளினது சீருடை மற்றும் படையணிச் சீருடை ஆகியவற்றில் தைக்கப்பட்டிருந்தது. உசாத்துணை: சொந்தமாக எழுதியது (தகட்டுக் குறியீடு & வாய்குப்பி பற்றிய தகவல் மட்டும் ஒரு முன்னாள் போராளி வழங்கியவர்) செ.சொ.பே.மு. https://eelam.tv/watch/எம-ம-உலக-ல-உயர-த-த-ம-emmai-ulakil-uyarththum-originla-version-tamil-eelam-songs_V9fei3U2lk6u93j.html படிமப்புரவு LTTE Home page | Sankathi24 பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn TamilNet (TamilNet) தேசக்காற்று http://veeraveengkaikaL.com (http://veeraveengkaikaL.com) Tamil Guardian அருச்சுனா புகைப்படக் கலையகம் YouTube India Content Photos, Pictures, Photograph Online for Website Log In or Sign Up Istock images ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  8. புடின் திரும்பவும் அலஸ்காவை தரச்சொல்லி கேட்டு இருக்கிறார் இல்லாவிட்டால் அணுகுண்டு பாவிப்பம் என்று சமீபத்தில் அறிவித்து உள்ளார் .
  9. இந்தப் பெரிய மொள்ளமாரி முடிச்சவுக்கி லண்டன் மாநகரத்திலை இருந்து கொண்டு கேக்கிற கேள்வியைப்பார்? 😎
  10. றியலி அக்கா ஏதாவது ஒரு கிருமி கொல்லியும் பையில கொண்டு போங்கோ அந்தரமாவத்துக்கு உதவும்..✍️.🤭
  11. நீர்வேலியான்…. நான்கு பந்தியில், பெரிய விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி. அதிலும்… அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் 2.4மைல் தூரம் என்பதை ரசித்தேன். சிறி யோசித்து பாருங்கோ இதே சரித்திரத்தை நான் எழுதியிருந்தால் சரித்திரமே மாறியிருக்கும். அந்த பாவத்திலிருந்து என்னை காப்பாற்றியுள்ளார் @நீர்வேலியான்.
  12. உங்கடை வாழ்க்கையிலை வந்தி அம்பிடுற ஆக்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான ஆக்கள் தான்......😁 நல்லதொரு சமூகக்கதை......👍
  13. வணக்கம் வாத்தியார்........! பெண் : செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் … பெண் : நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து வெள்ளச் சுழியில் விழுந்து மலராய் பெண் : இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ பெண் : இதயம் கரைகள் மறந்து திசைகள் தொலைந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஆண் : { பூப்பது மறந்தன கொடிகள் புன்னகை மறந்தது மின்னல் காய்ப்பது மறந்தது காடு காவியம் மறந்தது ஏடு } (2) பெண் : ஏனோ ராணா ராணா ஆண் : யானோ நின்னை மயக்கினேன் நின்னை மயக்கினேன் நின்னை மயக்கினேன்.....! ---இதயம்---
  14. வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்......! 😴
  15. புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்... புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...
  16. அதுதானே ....ஆயுர்வேதத்துக்கு ஆயுள் கெட்டி........! 👍 கவிதைக்கு நன்றி கோபி.......!
  17. அப்பிடியெண்டால் நீர்வேலியான் காட்டாயம் அந்த கோயில்லை தூக்குக்காவடி எடுத்திருப்பார்....😁🤣
  18. பயணம் பற்றிய உங்கள் பகிர்வுக்கு நனறி.
  19. கோயில் என்ன கோயில். ஆர் நடத்துற கோயில்? அர்ச்சனை ஏதும் செய்தியளோ? அன்னதானம் போட்டினமோ? சும்மா மொட்டையாய் கோயிலுக்கு போய் கும்பிட்டன் எண்டால் என்ன மாதிரி? 😎
  20. நன்றி கொழும்பான். சிறி 1490களில் கொலம்பஸ் அமெரிக்காவை வந்தடைந்தார். ஆனாலும் அவர் ஏதோ இந்தியாவின் ஒரு கரையில்த் தான் வந்திறங்கியதாக நம்பினார்.
  21. ஈழப்பிரியன் & நீர்வேலியான்…. சுவராசியமான தகவல்களுடன் அருமையான ஒரு கட்டுரையை வாசித்த திருப்தி ஏற்பட்டது. 1700’களில் அமெரிக்க, மெக்சிகோ யுத்தம் நடந்தது என்றால்… “கொலம்பஸ” எப்ப அமெரிக்காவை கண்டு பிடித்தவர். நான் அறிந்தவரையில்…. கொலம்பஸ் கண்டு பிடித்த அமெரிக்காவுக்கு, 250 வயசு என நினைக்கின்றேன். 😁
  22. மிக்க நன்றி, நீர்வேலியான்…! ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!
  23. கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்
  24. ரெனிஸ் விளையாட்டில் சில நகைச்சுவைகள்!!!!
  25. நம்ம யாழ்ப்பாணம் est avec Sinthuja Gengasivam et Sinthuja Gengasivam. fttHier, à5 1506pons:ga23uoed · வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது... வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள #மலேசியா முன்னேறிவிட்டது... வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள #டென்மார்க் முன்னேறிவிட்டது... வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள #சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது... வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள #அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது... வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறிவிட்டது... வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள #அமெரிக்கா முன்னேறிவிட்டது... வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறிவிட்டது... இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும் தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,, நீர்வளம், நிலவளம், மலைவளம், வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம், இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல், அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை? சிந்தனைக்கு......!
  26. "நிக்குமோ.... நிக்காதோ..." என்று, புதிய மொடல் கால்சட்டை அறிமுகம். 😂
  27. வெரிசொறி யாயினி.......கவிதை நிழலாக இருந்ததால் நிழலில் ஆண் பெண் தெரியவில்லை.......! 😂
  28. தியா பெண்ணல்ல ...ஆண் பிள்ளை.✍️.🤭
  29. கடந்தகால நினைவுகளை நிழலோடு ஒப்பிட்டவிதம் சிறப்பு........! 👍 நன்றி சகோதரி.......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.