Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38771
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts
  3. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    14998
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/12/23 in Posts

  1. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
  2. அவர் தமிழர், சிங்களவர் என்று பிரித்து பார்க்கவில்லை. யாழ்ப்பாணத்தில் விடுதியிலும், சிங்களப் பகுதிகளில்… கிராமத்து வீடுகளிலும் தங்கியுள்ளார். இலங்கையில் இறங்கிய முதல் நாள் மட்டும் கொழும்பில் நின்றதாகவும், அங்கு ஒரு ஹொட்டேலில் இரண்டு பேர் படுக்கும் அறைக்கு 150 € கொடுத்ததாகவும், அது அதிகமாக தெரிந்ததால் உள்ளூர் நகரங்களில் தங்க முடிவு எடுத்ததாகவும் கூறினார். உள்ளூரில்…. 20 € விலிருந்து 35 € விற்கு அந்த குடும்பத்தினருடன் தங்கக் கூடிய திருப்திகரமன அறைகள் கிடைத்ததாக சொன்னார். கொழும்பில் நின்ற காலங்களில்… பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்த மாதிரியும், வங்கிக்கு சென்றால் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களாம். (வெளிநாட்டு பணத்தை வாங்கி விற்பவர்காளாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.) அத்துடன் இலங்கை தெருக்கள் முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக இருந்தனவாம். திருகோணமலை கடலில் சுழியோடிய போது, கடலுக்கு அடியிலும்.. பிளாஸ்ரிக் போத்தல்களை கண்டதாக கூறினார். தனக்கு அங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை.. கிடைப்பதை வைத்து, மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறினார். உதாரணத்துக்கு…. ஒரு வீட்டில் ஒரு சிறுவர் சைக்கிள் இருந்தால்… அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் அதனை மாறி, மாறி ஒடி குதூகலமாக இருந்தார்களாம். பெரியவர்களிடம் நவீன தொலை பேசிகள் இல்லாமல் “Nokkia“ கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டே திருப்தியான வாழ்க்கை வாழ்வதாக குறிப்பிட்டார். ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
  3. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  4. அமெரிக்காவில் வேலையில் ஓய்வெடுத்தவர்கள் மெக்சிக்கோ, ஜமேக்கா போன்ற இடங்களிற்கு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். (சிலர்). வரும் ஓய்வூதிய பணத்தில் இங்கு வாழ்வதை விட அங்கு வாழ போதுமானது என கூறுகிறார்கள்.
  5. புடலங்காய் பொரியல் , நீங்கள் இதுநாள் வரை செய்ததைவிட இது சிறப்பாக இருக்கும் .....செய்து ரசித்து ருசித்து சாப்பிடவும் .......! 👍
  6. பொலிஸ்காரனுக்கு வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசை என்பது உண்மைதான். வாகனத்தை மறித்துவிட்டு தாங்கள் வெளிநாடு வருவது எப்படி என ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. தவிர கைவிசேடம் கேட்பவர்களும் உண்டு.
  7. வாகன விபத்துக்களில் கடுமையாக பாதிக்கபடுவர்களும் மன நல மருத்துவரிடம் வருகிறார்கள்.ஒன்று அதிக பணம் பெறும் முயற்சியில் வருவார்கள் மற்றயைவர்கள் உண்மையாகவே மனோ ரீதியாக பாதிக்கபட்டவர்களாகவும் இருப்பார்கள்..சில வேளைகளில் அந்த நாட்களை கடத்துவது மிகவும் கடினமாக இருக்கும்...அம்மாக்கள் : பிள்ளைகள் வயது வந்தோர்..இப்படியாக பல தரட்டப்பட்வர்களையும் பார்க்க கூடியதாக இருக்கிறது..சிலரைப் பார்க்கும் போது அவர்கள் சொல்லும் விடையங்களை கேட்கும் போது அழுகை வந்துடும்..நான் எழுத விரும்புவதில்லை யார் எல்லாம் பார்க்கிறார்களோ தெரியாது தானே..அவர்களது வாழ்வு சம்பந்தப்பட்டது..
  8. நல்ல தலைப்பு விசுகு. எமது ஊரில் உண்மையிலேயே சுகயீனமானவர்களே அங்கொடையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் முழுமுழு கிரிமினல்களே இருக்கிறார்கள். ஏதாவது பாரிய குற்றம் செய்து விட்டால் வழக்கறியரின் முதல் வேலை இவருக்கு மூளை சரியில்லை.கொஞ்சநாள் இருப்பார் நடிப்பார் வழக்கு தள்ளுபடி. எதுவித குற்றம் செய்யாமல் ஒருத்தர் இருந்தால் இனித்தான் குற்றம் செய்ய போகிறார்.
  9. யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...! சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்! இது தான் நமது நாட்டின் நிலை....! நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!
  10. அதே தான் கொடுமை அய்யா. மனநிலை வைத்தியரை சென்று பார்த்தால் தங்களது குடும்பத்தையே மற்றவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று சிகிச்சை பெற மாட்டார்கள் இப்படி பாதிக்கபட்டவர்கள் மற்றவர்களுக்கு பயந்து மத மாற்று குழுக்களின் வலயில் விழுவதுண்டு.
  11. Travel Wonders · Street Art in Florence, Italy.....!
  12. இங்க பாருடா குயின் எலிசபெத் பேரன் இங்கிலீசில எல்லாம் திட்டுறார் ...உங்கட பெரிய படிப்பிக்கும்,பணத்திற்கும் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்கட காசை கொண்டு போய் பிச்சைகார நாட்டில கொண்டு போய் கொட்டுகிறீர்கள் ...போய் அமெரிக்காவில் கொட்டலாமே?...உங்களை தங்க தாம்பாளம் வைச்சு கூப்பிடினம். அங்க போய் இருக்க போவதுமில்லை .அங்கிருங்ப்பவர்களுக்காய் ஒரு மண்ணாங்கட்டியும் புடுங்க போவதுமில்லை ..ஆனால் இங்கிருந்து கொண்டு உங்களுக்கு தமிழீழமும் ,சுயாட்சியும்,மண்ணாங்கட்டியும் வேண்டும் நீங்கள் அங்கே போய் வீடுகள் ,காணிகள் வாங்கேலை என்று யார் அழுதா?...உங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவதற்காய் அங்கே போய் வீடுகள் ,காணிகள் அறா விலைக்கு வாங்கிப் போட்டு ,அங்கேயிருப்பவர்களை இவற்றை வாங்க முடியாத நிலைக்கு தள்ளுவது உங்களை போல ஆட்கள் தான்....சிங்களவன் இனவாதி தான் அதில் எந்த மாற்றுக கருத்துமில்லை ...அவர்கள் ஒரு காலத்தில் திருந்த வாய்ப்புண்டு ...ஆனால் உங்களை மாதிரி பண திமிர் பிடித்த ஆட்களால் தமிழருக்கு அழிவு...உங்களை போன்றவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லை ...நாடு நல்ல கீழ் நிலைக்கு போகோணும் அதை விஸ்கியை குடித்து கொண்டு உங்களை மாதிரி ஆட்கள் ரசிக்கோணும் நீங்கள் எழுதினது தான் அதே உங்களுக்கே திரும்பி சொல்கிறேன் ...உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாம்...உங்கள் பணக்கார மேற் தட்டு வர்க்கத்தை வைத்து மற்றவரை எடை போட வேண்டாம்
  13. தேவையான ஒரு தலைப்பு. மன நிலை சமநிலை குழம்புவதை இன்னும் ஒரு இழுக்காக stigma பார்க்கும் நிலையில்தான் எம் சமூகமும், ஏனைய சமூகங்களும் உள்ளன. இதனடிப்படையில் ஒரு கதை எழுதிகொண்டிருக்கிறேன். உங்கள் பதிவு வருகிறது. Great minds think alike 🤣 பிகு 134 பஸ்சுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி போகும் ஒரே பஸ் 🤣
  14. பிரித்தானியாவில் எனக்கு தெரிந்து எத்தனையோபேர் வீட்டு சமையலுக்கு வீடு துப்பரவு செய்ய வைத்திருக்கினம் வாகன ஓட்டுநர் வைத்திருக்கினம் பிள்ளையை வயது வந்த பெற்றோரை பார்க்க ஆள் வைத்திருக்கினம். ஊரிலிருந்து sponsor செய்தவையும் உண்டு. இங்கும் தனியார் வைத்தியசாலைகள் GP உண்டு. எங்கட பல ஆட்களுக்களுக்கு அரசாங்க பணத்தில் வாழ்பவர்களையும் கள்ள மட்டைக்காரர்களையும் தான் தெரியும். ஏனென்றால் அவர்களை சுற்றி அவர்கள் தான்.
  15. எமது மக்கள் அதிகம் குடியேற விரும்புவது G7 + Au+NZ இல் தான் என நான் நினைக்கிறேன். இந்த 9 நாட்டில் எங்கே போவது என்பதில் பலருக்கு அதிகம் தெரிவு இருப்பதில்லை. எங்கே மாணவ, வேலை வீசா கிடைக்கிறதோ, எங்கே மனைவி/கணவன் அமைகிறாரோ, எங்கே ஏஜென்ட் கொண்டுபோய் விடுகிறாரோ, அல்லது எங்கே குடும்பத்தினர், ஊர்காரார் ஏலவே உள்ளார்களோ - அதுவே தெரிவாகிறது. இது முடியாதவர்கள்தான் அடுத்த தெரிவாக எனைய வெப்ப வலய நாடுகளில் குடியேறுகிறனர். அதிலும் சிங்கபூர் போவோர் மட்டுமே நிரந்தரமாக தங்குகிறனர். மேலோட்டமாக பார்த்தால் இது முழுக்க முழுக்க பொருளாதார அடிப்படையான முடிவாக தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த பொருளாதார முன்னேற்றம் கட்டி எழுப்பபட்டுள்ளது இந்த நாடுகளில் இருக்கும் ஓப்பீட்டளவு மேம்பட்ட ஜனநாயகத்தில், வியாபாரம் செய்வது உட்பட்ட மனித சுதந்திரம் மதிக்கப்படுவதிலும், சட்டத்தின் மேலாண்மையிலுமே. உதாரணமாக, ஒரு தமிழர் அம்பாந்தோட்டையிலோ, அபுதாபியிலோ கடை திறந்தால் - அது எந்த நேரமும் பறிக்கப்படலாம் என்ற பாதுகாப்பற்ற/நிச்சயமற்ற தன்மையை உணர்வார். ஆனால் அடிலேடில் கடை திறந்தால் அப்படி பறிக்கப்படுவதில் இருந்து அவுஸ்ரேலிய சட்டம் தன்னை பாதுகாக்கும் என உணர்கிறார். அதனால் முதலையும், உழைப்பையும் முதலிடுகிறார். இதில் உள்ளூர்காரர் (native) என்பதை விட அந்த நாட்டின் ஜனநாயக சுட்டி எங்கே உள்ளது என்பதே பிரதானமாகிறது. தமிழர்கள் G7+ ANZ ஐ தேடி வரும் காரணம் - பாதுகாப்பு - அதில் பெளதீக, பொருளாதார, சிந்தனை, கலாச்சார, மத, கல்வி பாதுகாப்பு+சுதந்திரம் அடங்கியுள்ளது.
  16. பல சமயம் முடிவுகளை எடுக்கும் போது உள்ளுணர்வு அடிப்படையிலேயே எடுக்கிறோம் என கருதுகிறேன்(Herd mentality?). பொருளாதாரம், காலனிலை போன்ற வாழ்வாதாரத்தில் முன்னிற்கும் சில நாடுகளை தவிர்த்து குளிர் நிறைந்த ஒப்பீட்டளவில் பொருளாதார ரீதியில் குறைவான நாடுகளில் ஏன் எம்மவர்கள் அதிகளவில் குடியேறுகின்றனர்? முக்கியமாக பாதுகாப்பு உணர்வு(Native),மற்றது ஒவ்வொருவரது பட்டறிவு(Perception)?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.