Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87993
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    929
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46798
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/06/23 in all areas

  1. வணக்கம் யாழ் வாசகர்கள், உறுப்பினர்கள், பொறுப்பு சார்ந்தோர் அனைவருக்கும்! 🙏🏾🙏🏾🙏🏾 அகவை 25இல் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு/கருத்துக்களத்திற்கு வாழ்த்துக்கள்! 💐💐💐 யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய திரு. மோகன், பங்காளர்கள், இருபத்து ஐந்து வருட காலத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோஒன்றாக பயணித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! 👏🏾👏🏾👏🏾 “சட்ஜிபிடி” (ChatGpt) எனும் செயற்கை நுண்ணறிவை அடித்தளமாக வைத்து இயங்கும் ஒரு தொழில்நுட்ப வசதி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 👍🏾👍🏾👍🏾 நீங்களும் இந்த வசதியை/சேவையை பயன்படுத்தக்கூடும். உங்களைப் போலவே நானும் சட்ஜிபிடியுடன் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடியுள்ளேன், இதன் வீச்சுக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளேன். 🤝🏾 சட்ஜிபிடியுடனான எனது எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்கின்றேன். அதேபோலவே நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. ✌🏾 📍📍📍 முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஆட்களிடம் ஒரு தகவலை அறிவது என்றால் சம்மந்தமில்லாத பத்து விசயங்கள் பற்றி அலுக்க அலுக்கபேசி, கடைசியில் சுத்திவளைச்சு அறியப்படவேண்டிய விசயத்துக்குள் செல்லவேண்டும். என்று சமூக ஊடகம் வந்ததோஅன்று தொடக்கம் காலம் தலை கீழாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தேடற்பொறியில் ஒருஆள் பெயரை எழுதி ஒரு தட்டி தட்டி விட்டால் அவர் பற்றிய எல்லா வண்டவாளமும்: நல்லது, கெட்டது, நடந்தது, நடக்கக்கூடாதது எல்லாவற்றையுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக உள்ளது. தமதுபதினொரு வயசு பிள்ளையின் சாமத்தியவீட்டை யூரிரியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் தொடக்கம் முருகண்டியில் நின்று சோடா குடித்தது வரை அண்ணை கந்தசாமியின் சரித்திரம் ஒளி, ஒலியுடன் இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் புதிய அறிமுகமான சட்ஜிபிடி பற்றி பார்த்தால்இரண்டு விதமான ஆபத்துக்கள் தெரிகின்றன. ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுமெதுவாக நடைபெறும். நாம் அதிக நேரத்தை செலவளிப்பதும் பலவிதமான தேவைகளுக்கு எமது சொந்த ஆற்றலை, சிந்தனையை பயன்படுத்தாது சட்ஜிபிடியிடம் தங்கி வாழவேண்டிய நிலை நடைபெறலாம்/ஏற்படுத்தப்படலாம்/ஏற்படலாம். மற்றையது: நாம் நமது அந்தரங்க விடயங்களை சட்ஜிபிடியுடன் பகிர்ந்துகொள்வது, நமது உள்ளக்கிடக்கைகளை சட்ஜிபிடிக்கு தெரிவிப்பது, நமது உள் அரங்கை சட்ஜிபிடியிடம் காண்பிப்பது தனிமனிதன் எனும் அளவில் நமக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வளவு காலமும் சோசல் மீடியா எனப்படுபவை எமது புற/வெளி தகவல்களைத்தான் பெறுகின்றன/சேகரிக்கின்றன. பிரைவசி/privacy எல்லாம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் பேணுகின்றது என்பது கேள்விக்குறி. இப்போது சட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு பொறி மூலம் வெளியார்/நிறுவனங்கள் எமது அந்தரங்க உலகினை அறியக்கூடிய, எட்டிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு/ஆபத்துக்கள் உள்ளன. கிடைக்கின்ற எமது தகவல்களை சட்ஜிபிடி உரிமையாளர்கள்/நிறுவனத்தினர்/ஆய்வாளர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது வேறு விடயம். அது வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது உளவறிதலுக்கோ கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், எமக்குள் ஊடுறுவல் நடக்கின்றது என்பது யதார்த்தம். எனவே, சமூக ஊடகங்கள் விடயத்திலும் சரி சட்ஜிபிடி விடயத்திலும் சரி எமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், எமது நேரத்தை, ஆற்றல்களை, தனித்துவத்தை காப்பாற்றவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾 தொடரும்..
  2. 👆1569´ம் ஆண்டு கட்டப் பட்ட... 454 வருடங்கள் பழமையான 👆 மருந்தகம் (Apotheke) (Dispensary) இது, இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. 🙂 👇 கீழே உள்ள படம் 👇 அதன் முழுமையான நான்கு மாடி கட்டிடம். 454 வருடங்களுக்கு முன், மரத்தால்…. நான்கு மாடியில் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. 🙂 ஜேர்மனியின் பழைய கால 🏚️ கட்டிடக் கலை மிகவும் அழகானது. 🥰 இரும்பை விட, மரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்படியான கட்டிடங்கள் 600 - 700 வருடங்கள் தாண்டியும், இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 👍 இப்படியான கட்டிடங்களை... வீட்டின் உரிமையாளர் நினைத்தாலும், வெளியில் எந்தப் புதிய மாற்றத்தையும் செய்ய முடியாது. வெளியே உள்ள மரங்களோ, சீமெந்து பூச்சுக்களோ பழுதாகி இருந்தால்.... அதனை அகற்றி மீண்டும் அதே மாதிரி புதியவை வைக்கப் பட வேண்டும். இதனை அந்தந்த இடத்து நகரசபை, கண்காணித்துக் கொண்டு இருக்கும். 😎 இப்படியான கட்டிடங்கள் ஜேர்மனியின் எல்லா இடங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும்... சில இடங்களில்... மிக நெருக்கமாகவும், அதிகமாகவும் காணப்படும். 🏚️ இங்கே உள்ள படங்கள் அண்மையில் நான் (Reha) தெரப்பி செய்வதற்காக சென்ற (Tübingen) என்ற நகரத்தில் காணப்படும் கட்டிடங்களே இவை. ஒரு குறுகிய இடத்தில், பல ஆயிரம் கட்டிடங்களை கண்டு பிரமிப்பாக இருந்தது. 🤗 அவர்கள்... அந்தக் காலத்து வீதிகளை கூட மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே பேணி, பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். 👍 இந்த நகரத்தில் மக்கள் அதிகரிக்க, அதற்கு அருகிலேயே நவீன கட்டிடங்களுடன் 🏥 புதிய நகரத்தை உருவாக்கி, பழைய நகரத்தின் அழகு கெடாமல் வைத்திருப்பது... பல உள்நாட்டு உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாது 👯‍♂️ ✈️ வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஆயிரக் கணக்கில் வர வைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்தப் படங்கள்... இந்த வருடம் 📆 தை, மாசி மாதங்களில் எடுக்கப் பட்டவை. படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சரியான பதில் சொல்பவருக்கு... "கெட்டிக்காரன் / காறி" என்ற பட்டம் வழங்கப் படும். 😂 💖 யாழ். களத்திற்காக... 💖 செய்தியும், படப் பிடிப்பும்: தமிழ் சிறி. 😂 படங்கள் இன்னும் வரும்.... 🙂
  3. தனி நபர் தகவல்களை பகிர்வதுதான் இன்றைய வாழ்க்கை முறையாகிவிட்டது. அதற்கென்றே சிலர் சுற்றுலா செல்கின்றனர். யூரியூப்பில் அதற்கென பக்கங்களும் ஆரம்பித்து பணம் சம்பாதிக்கின்றனர். தனிப்பட்ட விடயங்களை பகிர்வதன் மூலம் சம்பாத்தியம் செய்து வீடு காணிகள் வாங்குமளவிற்கு இந்த உலகம் வந்து விட்டது. நான் எனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு இணையத்தில் தேடிய பின்...... அடுத்து வரும் தினங்களில் இணையத்தில் செல்லுமிடமெல்லாம் நான் தேடிய பொருள் விளம்பரமாக வரும்.
  4. கட்டக்கலை சம்பந்தமான ஒரு சிறந்த திரியை ஆரம்பித்துள்ளீர்கள். நான் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் இதே மாதிரி வீடுகளும் வீதிகளும் உண்டு. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்படாத இடங்கள் என பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றார்கள். இப்படியான இடங்களில் அரசு அனுமதியின்றி ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது. இது நான் வசிக்கும் இடத்தின் மறு பகுதியில் உள்ள இடம்.படம் நான் எடுத்ததல்ல. உபயம் கூகிள் .
  5. உண்மையில் ஞாயிறுக்கிழமை காலமய் என்று எழுதிவிட்டு பிறகு எந்த விடிய வெள்ளனவும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். இங்கு ஒவ்வொரு ஊர்,சிற்றி என்று சன நடமாட்டம் மாறுபடும்.மெம்பிஸில் காலை 6.30 மணிக்கு மேல் தான் கொஞ்ச நடமாட்டம் தொடங்கி 9 மணிவரை ஒரே திருவிழாதான். நல்ல தகவல் சிறி. அப்ப ஒரு மெடிக்கல் டிஸ்ட்ரிக்ட் என்று அழைக்கலாம். நிச்சயம் இங்க உள்ள வீட்டை படம் எடுத்து பதிவிடுகிறேன். அது தனி வீடில்லை. என்றபடியால் கிருபா அண்ணா பயப்படுத்தினமாறி துவக்கு வராது😂
  6. எல்லாம் பெரிய வீடுகளும் ஆள் நடமாட்டமும் அவ்வளவு இல்லை. யூனிவெர்சிட்டிக்கு அண்மையில் என்பதால் அநேகமானவை மாணவர்கள் தான் இருக்கிறார்கள். என்றபடியால் துவக்கோட வரமாட்டார்கள் என்று நினைக்கிறன். உண்மைதான் இந்த பெரிய நிலப்பரப்பில் இல்லாத சுவாத்தியங்களே இல்லை. புளோரிடா, ஹவாய் போனால் எங்கட சனம் பனை, தென்னை, பாக்கு, வாழை என்று வச்சிருக்கினம் எங்க ரதியை காணவில்லை?
  7. பொய்யிலே பிறந்துபொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ... புலவர்கள் என்றாலே பொய் தான் போல இருக்கு .😀
  8. சிறியர் அருமையான படங்கள் இணைப்பிற்க்கு நன்றி.
  9. எப்படி இருக்கு... இந்தக் கோழிக் கூடு. 🤣
  10. அங்கை எங்கே பழைய கட்டிடங்கள்? நாடே 18ம் நூறாண்டுக்கு பிறகு உருவானது. முன்னம், மன்ஹட்டன் பகுதி, டச்சுக்காரர்களினால் 17ம் நூறாண்டு ஆரம்பத்திலும், பிரிட்டிஷ்காரர்களால் 17ம் நூறாண்டு பின்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது. 18 நூறாண்டு பின்பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட யுத்தத்தின் பின்னே, 19ம் நூறாண்டில் கட்டிடங்கள் உருவானது.
  11. ஓம் நுணாவிலான். பேர்லினுக்கு முன்பு, பொன் (Bonn) தான் தலைநகரமாக இருந்தது. இந்தக் கட்டிடங்களை... நினைவுச் சின்னமாக பாதுகாக்கின்றார்கள். சில வருடங்களுக்கு முன், இப்படியான பராமரிப்புக்காக ஒரு வீட்டின் நிலத்தை இடித்த போது பல சாடிகளில் லட்சக் கணக்கான பழைய அரிய நாணயக் குற்றிகளை கண்டெடுத்தார்கள். 🙂
  12. சிறி சனி இரவு நியூயொர்க் வந்துவிட்டோம். இனி அடுத்த பயணம் லொஸ்அங்கிலசும் சன்பிரான்சிஸ்கோவும் 18 புறப்பட்டு அடுத்த 18 வருவோம். பழைய கட்டடங்கள் முழுவதும் மன்கற்றனில் கிறீன்விச் வில்லேச் எனும் இடத்திலேயே உள்ளது.இப்போதைக்கு அந்த பக்கம் போகமாட்டேன். போனால் நிச்சயம் படம் எடுத்து போடுகிறேன்.
  13. பொன்னில் (Bonn)நிறைய பழைய கட்டிடங்கள் உள்ளன. பேர்லின் தலைநகரம் ஆக முதல் பொன் தான் தலைநகரமாக இருந்தது என நினைக்கிறேன். ஜேர்மனின் பழைய கட்டிடங்களை ஒரு நினைவுக்காக அரசு வைத்துள்ளது என ஒரு ஜேர்மன்காரர் கூறினார். படங்களுக்கு நன்றி, தமிழ் சிறி.
  14. சுமார் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே நான் இது சம்பந்தமாய் குறிப்பிட்டிருந்தேன்......நான் சில கடைகளுக்கு சென்று பொருட்கள் பார்த்துவிட்டு சிலதை எடுத்துக் கொண்டு வீட்டை வந்திட்டன்....பின் அது சம்பந்தமான விளம்பரங்கள் எனது போனிலும் கணனியிலும் வரத் துவங்கி விட்டன ........ போனை பொக்கட்டில் கொண்டு திரிகிறதே எமக்குத் தொல்லைபோல் இருக்கிறது.......! 😁
  15. ஈழப்பிரியன், எனக்கும் நியூயோர்க்கில் உள்ள இப்படியான கட்டிடங்களை பார்க்க ஆசையாக உள்ளது. நீங்கள் இந்த மாதம் நியூயோர்க் செல்வதாக முன்பு குறிப்பிட்ட நினைவு. அப்படி சென்றால்.. நேரம் ஒதுக்கி சில படங்களை இணைத்து விடுங்களேன். 🙂
  16. முதல்வர் சுராலின் அவர்களால் 5.3.2023 அன்று கீழடி அருங்காட்சியகம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.. இனி தமிழ்நாடு வரும் அனைத்துலக தோழர்களும் தங்களின்ர பயண அட்டவணையில் சேர்த்து கொள்ளலாம் .. 👍
  17. வித்தியாசமான ஒரு ஆய்வு..! தொடருங்கள்…!
  18. புதிய விடயத்தை ஆரம்பித்துள்ளீர்கள். 👍🏽 இதனைப் பற்றி மேலும் விபரமாக அறிய ஆவலாக உள்ளோம். 🙂
  19. நல்ல கட்டுரை. ஆனாலும் இதன் பலன்களும் பல உண்டு, அதனையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்,
  20. உங்கட வீட்டுக்கு கிட்ட இந்தப்படங்களை எடுத்தீர்களா சிறி? எனக்கும் இப்படி முந்திய காலத்து மர, செங்கல், கருங்கல் கட்டிடங்களை பார்க்க நல்ல விருப்பம். நல்ல அழகான படங்கள் சிறி. படங்களை விடிய வெள்ளண எடுத்திருப்பீர்கள். சரியா? ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள். மிகவும் குளிர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மினசோட்டா மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அங்கு உள்ளமாதிரியே கட்டிடங்கள் வீடுகளை கட்டி, தமது தனிப்பட்ட பண்டிகைகள், கலாச்சாரங்களை தொடர்ந்து வந்தார்கள். 75 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களை பார்த்தே அவர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்று சொல்ல முடியுமாம். இப்ப எல்லாமே மாறிவிட்டது. ஆனால் பழைய கட்டிடங்களை பார்த்து ஓரளவுக்கு சொல்லலாம். இன்று வழமையை விட கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வந்தேன். இந்த மாதிரி வீடுகள் ( மூன்றாவது படம்) வீடுகளை பார்த்துவிட்டு மிகவும் அழகாக மற்ற வீடுகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என்று யோசித்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன்.
  21. நிறைய தகவல்கள் சொல்லப் போறீங்கள் போல இருக்கு, வாசிக்க ஆவலாக உள்ளேன்........தொடருங்கள்......! 👍
  22. எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இவைபற்றி அறிய சிறிய ஆவல். தொடருங்கோ ஏதாவது விளங்குதோ பார்ப்பம்.
  23. வரிகள் ஒவ்வொன்றும் பல கடந்த கால நினைவுகளை கூறுகின்றது.. இன்று பலவித கோணங்களில் வாழ்வு போனாலும் எங்களை ஏதோவொரு வழியில் இயங்கவைப்பது இந்தக் கடந்த கால நினைவுகளே.. கவிதைக்கு நன்றி!!
  24. என்ன இருந்தும் என்ன சுதந்திரம் இல்லாமல் போய்விட்டதே.
  25. தம்பி உதயன் நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி இந்த திரியை அப்படியே அங்கே நகர்த்தி வைக்க சொல்லுங்கள்.......அப்போதுதான் இதில் இருக்கும் கருத்துக்களும் அப்படியே அங்கு வரும் .......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.