Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19134
    Posts
  2. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5832
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38770
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/15/23 in all areas

  1. https://www.facebook.com/kumaravelu.ganesan பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். யூதர்கள் வரலாறு 1-20 Kumaravelu Ganesan ----------------------------- 1.https://www.facebook.com/1153120557/videos/10225739431129855/ 2.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225755370488329 3.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225823677155953 4.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225836514756885 5.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225844268350720 6.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225851799418992 7.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225870951337778 8.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225899725897124 9.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225929559802953 10. https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225959619274421 10.1 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225972802884003 10.2 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 11.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 12.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226033148392603 13.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226058944717495 14.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226325207773905 15.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226336456095106 16. https://www.facebook.com/1153120557/posts/10226385173753017/?mibextid=WiMSqg 17. https://www.facebook.com/1153120557/posts/10230558689568304/?mibextid=WiMSqg 18. https://www.facebook.com/1153120557/posts/10230573832906878/?mibextid=WiMSqg 19. https://www.facebook.com/1153120557/posts/10230620051702319/?mibextid=WiMSqg 20. https://www.facebook.com/1153120557/posts/10230727412626275/?mibextid=WiMSqg
  2. ஒரு முகநூல் பதிவு: 'பாலஸ்தீனம்' என்பது, பலர் எண்ணுவது போல, ஒரு நாடோ அல்லது தனிநாடாக விரும்பும் ஒரு பிரதேசமோ அல்லது அரேபியர்கள் மட்டும் வாழும் ஒரு பிரதேசமோ அல்ல. அது புவியியல் ரீதியாக வழங்கப்பட்ட ஒரு பெயர். தற்போதைய இஸ்ரேல், பலஸ்தீன சுயாட்சிச் சபைக்கு உட்பட்ட பிரதேசம், ஜோர்டான், லெபனானின் ஒரு பகுதி இவையெல்லாம் பாலஸ்தீனம் என்பதற்குள் அடங்கும். பலஸ்தீனம் என்பது என்றும் ஒரு தனி நாடாக இருக்கவில்லை. ஆகவே அதன் எல்லைகள் என்றுமே தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், யேசுநாதர் பிறந்த பிரதேசத்தை அடையாளப்படுத்துவதற்கு 'பாலஸ்தீனம்' என்ற பெயர் பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் இதனைப் புனித பூமியாகக் கருதி வந்தனர். அதற்கும் முற்பட்ட காலத்தில் இதே பிரதேசம் இஸ்ரேல் என்றும் அழைக்கப்பட்டது. அதில் வாழ்ந்த யூதர்கள் ரோமானிய ஆக்கிரமிப்புக்குப் பின் உலகின் பல பாகங்களுக்குச் சிதறி ஓடினர். ரோமர்களின் ஆட்சிக் காலத்திலேயே இயேசு பெத்லேஹேம் நகரில் பிறந்தார். பிற்காலத்தில் துருக்கிய ஓட்டோமான் பேரரசு புனித பூமியை ஆட்சி செய்தது. ஓட்டோமான் பேரரசின் ஒரு மாகாணம் ஜெருசலேம் மாகாணமாகும். இது சிலவேளை பலஸ்தீன மாகாணம் எனவும் அழைக்கப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் பின், ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடையவே, ஐரோப்பிய வல்லரசுகள் மத்திய கிழக்கைத் தமக்குள் பங்குபோட்டுக் கொண்டன. சிரியா பிரென்ச் ஆட்சிக்கு உட்பட்டது. பலஸ்தீனமும் ஈராக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டன. இதன்போதுதான் "பலஸ்தீன" மாகாணத்தின் எல்லைகள் முதன் முறையாக வரையறை செய்யப்பட்டன. இதன் எல்லைகளை படத்தில் காணலாம். ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகள் அப்போது இருக்கவில்லை. ஜெருசலேம் நகரைத் தலைநகராகக் கொண்டு, ஜோர்டான் நதியின் இரு கரைகளிலும் பரந்து, அது சென்று வீழும் சாக்கடலை நடுவில் வைத்து, அதன் இரு கரைகளிலும் பாலைவனத்தைக் கொண்ட பரந்த பிரதேசம் பலஸ்தீனமாக வரையறை செய்யப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் யூதர்களின் தாயகத்தை உருவாக்குவதற்கு அல்லது மீளமைப்பதற்கு பிரிட்டிஷார் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால் அக்காலத்தில் பாலஸ்தீன மாகாணமெங்கும் அரபுக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து யூதர்கள் பெருவாரியாகப் பலஸ்தீனத்திற்குத் திரும்பினர். ஜோர்டான் நதியின் இருகரைகளையும் உள்ளடக்கிய பரந்த பிரதேசம் பாலஸ்தீனத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாவுக்கு பிரிட்டிஷ் அரசினால் வழங்கப்பட்டது. இவ்வாறு ஜோர்டான் நாடு உருவானது. பாலஸ்தீனத்தின் எஞ்சிய பிரதேசத்தில் யூதர்கள் தமது தனிநாட்டை - இஸ்ரேலை - அமைத்துக்கொண்டனர். இக்காலத்தில் பாலஸ்தீனம் என்று ஒரு நாடோ மாகாணமோ இருக்கவில்லை. தொடர்ந்து வந்த இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான போர்களில் இஸ்ரேல் ஜோர்டான் நதியின் மேற்குக்கரையை ஜோர்டான் நாட்டிடம் இருந்து கைப்பற்றிக்கொண்டது. அதேபோல காஸா பிரதேசத்தை எகிப்திடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது. ஆனால் இந்தப் பிரதேசங்களில் அரேபிய முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக வசித்து வந்தனர். அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சர்வதேசச் சட்டப்படி இஸ்ரேலுக்குள் அடங்கமாட்டா என்பதால் அவை பாலஸ்தீனம் என்று அழைக்கப்படலாயின. பின்பு அந்தப் பிரதேசங்களில் பாலஸ்தீனம் என்ற தனிநாட்டை அமைக்கவேண்டும் என்று வல்லரசுகள் கொள்கையளவில் இணங்கின. இந்தப் பிரதேசமே (அதாவது ஜோர்டான் நதியின் மேற்குக்கரை, காஸா) இன்று பாலஸ்தீனம் எனப்படுகிறது. இது பிரிட்டிஷ் பலஸ்தீன மாகாணத்தின் ஒரு சிறு பகுதி மாத்திரமே. (மத்திய கிழக்கின் வரலாறும், புவியியலும் அறிவோம் - II )
  3. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது. இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம். இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.
  4. இஸ்ரேல்.. அகதிகளாக வெளியேறச் சொல்லிவிட்டு.. அந்த அகதிகள் மீது குண்டு தாக்குதல் நடத்தி இருப்பது அப்படியே யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது சாரை சாரையாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது நாவற்குழி பகுதியில் வைச்சு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல பொது மக்கள் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார்கள். ஆக அடக்குமுறையாளர்களுக்கு கொள்கை வகுக்கும் அமெரிக்க மேற்குலக ஜாம்பவான்கள்.. தங்கள் நலனுக்காக.. பலவீனமான இனங்களில்.. மனித இன அழிப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் மீண்டும்.. இனங்காட்டுகிறது. உக்ரைனில் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. கொசவாவில் மதிப்பினமாம்.. சேர்பியாவில் பிரிவினைக்கு ஆதரவாம். ஏனெனில் நேட்டோ ஊடுருவலுக்கு அது அவசியம். ஜோர்ஜியாவில் சுதந்திர தேசங்களை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. ஜோர்ஜிய ஒருமைப்பாட்டுக்கு உழைப்பினமாம்... ஏனெனில் ஜோர்ஜியாவின் அமைவிடம் நேட்டோவுக்கு அதன் விரிவாக்கத்திற்கு அவசியம். முன்னர் அமெரிக்கவும் மேற்குலக நாடுகளும்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த குர்திஷ் மக்களின் போராட்ட அமைப்பின் ஆதரவை.. சிரியாவில் அரசுக்கு எதிரான மோதலுக்கும் நேட்டோ ஊடுருவலுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் போது.. மேற்குலக ஜாம்பவான்கள்.. குர்திஷ் இன மக்களின் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்க நேரிட்டது. இன்று... நேட்டோ நாடான துருக்கி தொடர்ந்தும்.. குர்திஷ் இனப்படுகொலை செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினமாம். (துருக்கியும் முஸ்லிம் தான்.. குர்திஷும் முஸ்லிம் தான்) அதேபோல்.. தான் பலஸ்தீன மக்கள் விடுதலையிலும்.. மேற்குலகம் இஸ்ரேலின் ஊடாக மத்திய கிழக்கில் தன் ஆக்கிரமிப்பு ஊடுருவல் நிலைப்பாட்டை போனிக் கொள்ள இஸ்ரேலின் எல்லா விதமான பயங்கரவாதச் செயல்களையும் அங்கீகரித்து நிற்கிறது. ஈழத்திலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஆதரவோடு.. தங்களின் பூகோள நலனை பெற்றுக் கொள்ளத் தக்க வகையில்.. அமெரிக்காவும் அதன் மேற்குலக கூட்டாளிகளும்.. தமிழர்களின் தார்மீக விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. இனப்படுகொலைகளின் ஊடாக.. தமிழர்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக அதனை.. குசிப்படுத்துவதன் ஊடாக தமது நலனை பேணிக் கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு ஹிந்தியா கூட்டு உடந்தையாக உள்ள அதேவேளை.. சீனா போட்டியாளராக இருப்பதால்.. அப்பப்ப.. போர்க்குற்றம்.. மனித உரிமைகள் கோசங்களை சர்வதேச அரங்கில் போட்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்கள் பக்கம் அதிகம் சார்ந்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள். இப்படியாப்பட்ட அமெரிக்காவையும்... அதன் மேற்குலகக் கூட்டாளிகளையும்.. ஏன் இங்கு சிலர் ஆதரிக்கினம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவினது முழு இராணுவ பொருண்மிய உதவியோடு கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்கள் தான்.. தலிபான்கள்.. பில்லேடனின் அல்குவைதா அமைப்பு.. ஐ எஸ் ஐ எஸ்.. போன்றவை. இவை ஏதோ ஒரு தருணத்தில் அமெரிக்காவினால் அதன் மேற்குலக ஏஜெண்டுகளால்..ஏமாற்றப்பட்டதன் விளைவே.. அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிரான அவர்களின் சில நடவடிக்கைகள்.. மேலும் சில நடவடிக்கைகள்.. அமெரிக்காவின் தலையீடுகளை இட்டு இவர்களால் அமெரிக்காவின் அதன் மேற்குக் கூட்டாளிகளின் உளவு அமைப்புக்களின் தூண்டுதலின் பெயரில் இடம்பெற்ற கலகங்கள். குறிப்பாக.. துனிசியாவில் ஆரம்பித்து.. லிபியாவில் கடாபியை முடிக்க தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சிப் போராட்டங்கள். இவற்றின் முடிவில்.. அமெரிக்காவால்.. மேற்குலகால் ஏமாற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோரே.. பின்னர் பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள். இதையிட்டு.. அமெரிக்கா தன் தவறுகளை ஒத்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டது கூட இல்லை. இப்படியாப்பட்ட அடக்குமுறைகளுக்கு துணைபோவதும்.... தமது பூகோள நலனை மட்டும் முன்னிறுத்தி மட்டும்..செயற்படும்.. அமெரிக்க.. மேற்குலக நாடுகளையும் அவர் தம் ஏஜென்டு நாடுகளையும் அரசுகளையும்.. குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளையும்..ஆதரிப்பது என்பது உலகில் உரிமைகள் மறுக்கப்பட்டு.. ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. இஸ்லாமிய மக்களின் அவர் தம் சொந்த பூர்வீக நில மற்றும் ஆட்சி உரிமைப் போராட்டம் என்பது வேறு. இந்தப் பகுப்பறிவுள்ள யாழ் கள உறுப்பினர்கள் தெளிவாத்தான் எல்லாம் எழுதினம். இந்த தெளிவற்றவை தான்.. தாம் எதற்கு எதை ஆதரிக்கினம் என்ற ஒரு விளக்கமே இன்றி.. மாற்றுக் கருத்து நிலை என்ற சப்பை போட்டி மனப்பாங்கிலும்.. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கோதாவிலும்.. அப்பட்டமான இனப்படுகொலைகளையும்.. மனித இன உரிமை மீறல்களை செய்யும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளை கேள்விக்கு உட்படுத்தாமலே ஆதரிக்கவும் செய்கிறார்கள். ரஷ்சிய - உக்ரைன் மோதலின் அடிப்பட்டைக்காரணம்.. டான்பாஸ் பிராந்திய மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளும் இனப்படுகொலையும். இதன் பின்னணியில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத மற்றும் சதி திட்டங்களை தீட்டிக் கொடுத்தது அமெரிக்காவும் மேற்குலக நேட்டோ நாடுகளும் என்பது எப்போதோ வெளிப்பட்ட பின்னும்.. புட்டினின் இந்த சதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை என்னென்பது. புட்டின்.. ஒரு அழிக்கப்படும் இனத்தின் காவலராக உள்ள வரை.. அவர் பக்கம் தர்மம் இருக்கும். அதற்காக புட்டினும் ரஷ்சியாவும் தமிழ் மக்களின் அழிவுகளை தடுக்க வந்தார்கள்.. அல்லது தடுக்க உதவினார்கள் என்பது அல்ல அதன் அர்த்தம். மேற்குலகின் தேவைகளுக்காக அழிக்கப்படும் குறைந்தது.. ஒரு இன மக்களின் பாதுகாவலராகவாவது.. புட்டின் இருக்கிறார் என்பதுதான் ரஷ்சிய - உக்ரைன் மோதலின் யதார்த்தமாகும்.
  5. "நியாயத்தை கதைப்போம்" கேட்டுக் கொண்டபடி பெயர் நியாயம் என மாற்றப்பட்டுள்ளது.
  6. வழமையாக "தர்மத்தின் தலைவன்😎" புரினின் ஆதரவாளர்கள் பரப்பும் போலிச் செய்திகளில் ஒன்று. இதைப் போன வாரமே "தகவல் சோதிக்கும்" அமைப்புகள் பொய்யென்று அறிவித்து விட்டன. https://apnews.com/article/fact-check-misinformation-weapons-israel-hamas-draft-5a12af9e78e5cbd42d74b026cb4e566c https://www.verifythis.com/article/news/verify/israel-hamas-war/bbc-ukraine-hamas-video-fake-fact-check/536-ab186ea2-4907-4ad0-8db8-7969dded6d85
  7. விரிவான தகவல்களுக்கு நன்றி. எனது கருத்து தற்போதைய வரும் செய்திகளை வைத்த ஒரு பார்வை மட்டுமே.
  8. உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை. ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது. இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது. காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது. பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது. இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது. பிகு 1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன. 2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும். #ஜாடிக்கேத்த மூடி இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க: 2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது. இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.
  9. இது கூட சரி என்று படவில்லை. நமக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை இஸ்ரேலியர்களுக்கு ஒரு கண் போனால் போதும் என்ற மதவெறி சிந்தனை மட்டுமே.
  10. இணைப்புக்கு நன்றி கோஷான். இதிலிருந்து தெரிவது காஸாவில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறி முதற்கட்டமாக சுயாட்சி கொண்ட பாலஸ்தீனம் உருவாக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான இடைவெளியை ஹமாஸ் துஷபியோகம் செய்து யுத்த தயாரிப்புகளில் மாத்திரம் கவனம் செலுத்தி இருக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம். தனது சொந்த மக்களையே பலியாடுகளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஹமாஸ் இயக்கம் முற்பட்டுள்ளது. சமாதான இடைவெளியை பயன் படுத்தி தனது பிரதேசங்களை அபிவிருத்திக்கும் மேலும் சமாதான பேச்சுக்களை நடத்தி பாலஸதீனத்தில் அரசியல் ஸதிரத்தன்மையை ஏற்படுத்த பயன் படுத்தாமல் தொடர்ந்து யுத்த தயாரிப்புகளிலும் இஸ்ரேலை சீண்டி யுத்தத்தை தொடர்வதுமே ஹமாஸின் நோக்கமாக இருந்துள்ளது. மக்கள் அழிவுகளை காரணம் காட்டி உலக அனுதாபத்தை திரட்டி தமது நோக்கத்தை அடையலாம் என்பதே ஹமாசின் திட்டமாக இருந்துள்ளது.
  11. பலவீனமே... பலமாய் மாறிய, அருமையான கதை. 👍 பகிர்விற்கு நன்றி சுவியர். 🙂
  12. இதை நான் பார்க்கவில்லை. ஆனால் காஸாவினுள் ஒரு நெடிய சுரங்க கட்டமைப்பு உள்ளதும் அது இஸ்ரேலுக்குள்குள்ளும், எகிப்துள்ளும் முன்னர் ஊடுருவியுள்ளதும் உண்மைதான். இப்படியான சுரங்கங்களை தவிர்க்க எல்லையில் இஸ்ரேல் பத்தடி ஆழத்தில் காங்ரீட் சுவர்களை அமைப்பதும் உண்டு. அதேபோல் காசா-எகிப்து இடையான எல்லையில் பிலடெல்பியா கோடு என ஒரு சிறு பகுதியை இஸ்ரேல் கண்காணிக்கும் (எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்த படி). இந்த எல்லை வழியாக ஆட்கள் மட்டும் போகவே அனுமதி (பொருட்கள் இஸ்ரேல் பக்கம் உள்ள சாவடி வழியாகவே போகலாம்). இதற்கு கீழாலும் சுரங்கம் அமைத்து எகிப்தில் இருந்து பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறி இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதுண்டு. இந்த சுரங்கங்களில் சிலது இஸ்ரேல் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அமைத்தவை. ————- லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் காவல் அரணில் ஹிஸ்புல்லா கொடி பறக்கிறாதாம்.
  13. Palani Yappan · #வெற்றியின்_ரகசியம் ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் "குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ... முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர், போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், "குருவே , நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது... அஸ்ட்ரோ வெ.பழனியப்பன் Voir la traduction
  14. இலங்கைக்காக இந்தியாவை மிரட்டிய அமெரிக்க அதிகாரி வோல்ட்டர்ஸ் வொயிஸ் ஒப் அமெரிக்கா மற்றும் திருகோணமலைத் துறைமுகப் பாவனை தொடர்பான விடயங்களில் ஜெயாருக்கு அழுத்தம் கொடுத்த வோல்ட்டர்ஸ் அமெரிக்காவுக்குச் சார்பான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இரணவிலைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வொயிஸ் ஒப் அமெரிக்காவின் அஞ்சல் நிலையத்திற்காக ஜெயாரை அழுத்திப் பெற்றுக்கொண்ட வோல்ட்டர்ஸ், இதற்கான ஒப்பந்தத்தினை ஆவணி 1983 இல் கைச்சாத்திட்டார். நிலங்களை அமெரிக்காவின் பெயருக்கு மாற்றும் ஒப்பந்தம் 1983 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதன்படி 800 ஏக்கர்கள் நிலம் தொட்டுவ எனும் பகுதியில் இருந்தும் மீதி 200 ஏக்கர்கள் நாத்தாண்டிய பிரதேசத்தின் இரணவிலப் பகுதியில் இருந்தும் 1985 ஆம் ஆண்டு தை 15 ஆம் திகதி அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க வானொலி அஞ்சல் சேவையின் நிலையம் ஒன்றினை இரணவில பகுதியில் அமைப்பதனை இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் வெகுவாக எதிர்த்திருந்தன. மேலும், திருகோணமலைத் துறைமுகப்பகுதியில் அமெரிக்க நலன்களை முன்னிறுத்திச் செயற்பட ஜெயவர்த்தனவுக்கு வோல்ட்டர்ஸ் மூலம் கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு என்று அவற்றினை சர்வதேச அமைப்பொன்றிற்கு குத்தகைக்கு வழங்கியது. மூன்று தனியார் நிறுவனங்களான ஒரொலியம் சிங்கப்பூர், மேற்கு ஜேர்மனிய எண்ணெய்த் தாங்கி நிறுவனம் மற்றும் ட்ரேடின்பன்ட் எனப்படும் சுவிஸர்லாந்தை தலைமையமாகக் கொண்டியங்கும் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டே திருகோணமலை எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது. மேலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஜெயவர்த்தன அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்கிற ரொனால்ட் ரீகனின் கோரிக்கையினையும் வொல்ல்ட்டார்ஸ் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்திருந்தார். ஆனால், வோல்ட்டர்ஸின் இராணுவ திட்டத்தை மூடி மறைப்பதற்காக ரீகன் வெளியிட்ட செய்தியே அரசியல் தீர்வு வழங்கக் கோரும் நாடகம் என்பதனை எல்லோரும் அறிந்தே இருந்தனர். இந்தியாவின் உணர்வுகளை அமைதிப்படுத்தும் முகமாகவே ரீகன் அரசியல்த் தீர்வு குறித்த கோரிக்கையினை விடுத்திருந்தார். மேலும், இதே கருத்தினை இந்தியாவுக்குத் தெரிவிக்க வோல்ட்டர்ஸ் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு சென்று வந்தார். அனால் வோல்ட்டர்ஸின் தேவைக்கதிகமான அழுத்தத்தினால் இந்தியா அமைதியடைவதற்குப் பதிலாக எரிச்சலடைந்தது என்றுதான் கூறவேண்டும். இந்தியாவின் தில்லியை வோல்ட்டர்ஸ் சென்று அடைவதற்கு முன்னரே அவரும் ஜெயவர்த்தனவும் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான முழுத் தகவல்களையும் இந்தியா அறிந்தே வைத்திருந்தது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகள் குறித்த பல தகவல்களை அமெரிக்கா வோல்ட்டர்ஸ் ஊடாக‌ இலங்கைக்கு வழங்கியிருந்தது என்பதனை இந்தியா அறிந்துகொண்டது. மேலும் லலித் அதுலத் முதலியுடன் வோல்ட்டர்ஸ் பேசும்போது தமிழ்நாட்டிலும், உத்தர்பிரதேசத்திலும் இயங்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாமகள் தொடர்பான செய்மதிப்படங்களைத் தாம் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதுவும் இந்தியாவுக்குத் தெரியவந்திருந்தது. இந்தியா செல்லும் வோல்ட்டர்ஸ் அங்கே அவர்களை நன்றாக ஏமாற்றப்போகிறார் என்று லலித் அதுலத் முதலி தனது நண்பர்களுடன் பெருமையாகப் பேசிக்கொண்ட விடயமும் இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது. இந்த விடயங்களையெல்லாம் தில்லியின் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிவைத்தவர் கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவர் சத்வால் என்பது குறிப்பிடத் தக்கது. தில்லிக்கான தனது விஜயத்தின் நோக்கத்தினை எப்படியாவது அடைந்துவிட வோல்ட்டர்ஸ் முயன்றார். அங்கு வெளிவிவகாத்துறை அதிகாரிகளுடன் பேசிய அவர், ஜெயவர்த்தன எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இந்தியா கரிசணை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜெயவர்த்தனவை நேர்மையான மனிதர் என்று காட்ட முயன்ற வோல்ட்டர்ஸ், ஒருபுறம் சிங்கள இனவாதிகளை எதிர்கொள்ளும் ஜெயார் இன்னொருபுறம் தமிழ் தீவிரவாதத்தினை எதிர்கொண்டு நிற்பதாகக் கூறினார். ஆனால், வோல்ட்டர்ஸினால் வெல்லம் தடவப்பட்டுக் கொடுக்கப்படும் குளிசையை இந்திய அதிகாரிகள் உட்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. இதனையடுத்து தனது வழமையான வெருட்டும் தொனியைக் கையாண்டார் வோல்ட்டர்ஸ். இந்திய அதிகாரிகளிடம் பேசிய வோல்ட்டர்ஸ், தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு பயிற்சியளிப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரினார். அதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள் தாம் தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சிகள் எதனையும் வழங்கவில்லை என்று மறுத்தனர். அதற்குப் பதிலளித்த வோல்ட்டர்ஸ் இந்தியாவில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கான பயிற்சி முகாம்கள் இயங்குவதைத் தாம் செய்மதிகள் மூலம் படம் பிடித்துவைத்திருப்பதாகவும், இந்தியா உடனேயே இவற்றினை மூடாவிட்டால் சர்வதேச செய்திச் சேவைகளுக்கு தாம் அவற்றினை வெளியிடப்போவதாகவும், இது இந்தியாவை சர்வதேசத்தின்முன்னால் தர்மசங்கட‌மான நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும் மிரட்டினார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பாதகமான சூழ்நிலையினையே இலங்கைக்கு அது ஏற்படுத்தியது. அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஜோசப் அடெபோ, நியு யோர்க் மேயர் எட் கொச் மற்றும் சபாநாயகர் டிப் ஓ நீல். அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளும், காங்கிரஸ் உறுப்பினர்களும் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்வது ஜெயவர்த்தனவைப் பலப்படுத்தவே என்று இந்தியா சந்தேகம் கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை கமிஷனின் தலைவர் ஜோசப் அடெபோ தலைமையில் ஆறு அமெரிக்க செனட்டர்கள் 1984 ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தூதுக்குழு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென்று இலங்கைக்கு உடனடியாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. மேலும் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் சகல வசதிகளுடனும் கூடிய தாக்குதல்க் கடற்படைக் கப்பல் ஒன்றினைத் தமக்குத் தருமாறு இலங்கை வேண்டிக்கொண்டபோது, அதனைச் சாதமான முறையில் பரிசீலிக்கவும் அத் தூதுக்குழு ஒத்துக்கொண்டது. இக்குழுவிற்கு மேலதிகமாக ஆசிய ‍- தென்னாசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் மேர்பியும் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
  15. இப்படி நல்ல பல உங்களுக்கு பிடித்திருப்பதால் எனக்கு உங்களை பிடிக்கும்.
  16. இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். இந்த மனித பேரவலதிலும் நக இயலுமா? பார்த்து விட்டு சொல்லுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.