Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19134
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  3. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    9997
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/16/23 in all areas

  1. என்றாவது முஸ்லிம் அகதிகளை முஸ்லிம் நாடுகள் / அரபு நாடுகள் வரவேற்று உள்ளனரா? இல்லை. ஆனால், இந்த முஸ்லிம்களை மேற்குலகு நோக்கி அகதிகளாக போவதற்கு தூண்டுவார்கள். மேற்கு நாடுகளும் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்கும். அப்படி, மேற்கில் குடியேறிய பின், இதே அரபு நாடுகள் பள்ளிவாசல்களை அமைக்வும், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கவும் (NGO), இஸ்லாமிய கல்வி நிலையங்களை கட்டியமைக்கவும் பெருமளவு நிதி உதவி செய்யும். இவ்வாறுதான் அவர்களின் (இஸ்லாமியர்களின்) கனவான, உலகெங்கும் தம் மதத்தை பரப்பி, உலகில் அதிக சனத்தொகை கூடிய இனமாக / மதமாக மாற்றுகின்றனரோ என்ற எண்ணம் எனக்கு எழுவது உண்டு (conquering the world) இதை நீங்கள் குடியேறி இருக்கும் நாடுகளில் கூட அவதானித்திருப்பீர்கள்.
  2. 2008 - 2009 காலப்பகுதியில் வன்னிக்குச் செல்லவேண்டிய உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் என்பவற்றை தடுத்து தமிழர்களைப் பட்டினி நிலைமைக்குக் கொண்டுவந்து அவர்களின் போரிடும் மனத்திடத்தை உடைத்து இலகுவாக ஆக்கிரமிக்கலாம் என்று மகிந்த நினைத்துச் செயற்பட்டான். மேலும் சுமார் 420,000 தமிழர்களின் எண்ணிக்கையினை வேண்டுமென்றே 70,000 என்று காண்பித்து தனது படுகொலைகளை மறைக்கவும், அனுப்பவேண்டிய உணவைக் குறைக்கவும் அவன் முடிவெடுத்துச் செயற்பட்டான். இன்று காஸாவில் நடப்பது கிட்டத்தட்ட அதுதான். ஒரே வித்தியாசம் 2.3 மில்லியன் மக்களுக்கான மருந்து, உணவு, எரிபொருள் என்று அனைத்தையுமே இஸ்ரேல் தடைசெய்திருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக வெளியேற பாதைகளையும் அது விட்டுவைக்கவில்லை. தப்பியோடும் மக்கள் மீதும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த உலகு மனிதநேயத்தின்பாற் செயற்படுவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை பலஸ்த்தீனர்களின் அவலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
  3. ஆம் விளம்பரம் பகுதி நீக்கப்பட்டுள்ளது. யாழில் விளம்பரம் இட விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் நீங்கள் துயர்பகிர்வில் பதிந்து கொள்வதில் தடை எதுவும் இல்லை
  4. எங்கே.ம் வெளியேற விடுகிறார்கள்? ஒரே எல்லையை சக அரபு/முஸ்லிம் நாடான எகிப்து இறுக்க மூடி வைத்துள்ளது. மக்கள் காத்து கிடக்கிறார்கள்? காரணம்? எப்படி சும்மா இருந்த லெபனானை பலஸ்தீன அகதிகளின் வருகை உள்நாட்டு போரை உருவாக்கி சீரழிச்சதோ அப்படி தமக்கும் நடக்கும் என்ற பயம். இந்த மக்களை, ஹமாசை போசித்த ஈரான் பொறுப்பெடுப்பதே முறை. அவர்கள் ஹமாசை பொறுப்பெடுப்பார்களா என்பதே சந்தேகம். இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.
  5. தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?
  6. பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத பெரிய நாடுகளோ வல்லரசு நாடுகளோ இருக்கின்றதா? பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத நாடு ஏதாவது இருந்தா தெரியப்படுத்துங்க பிளீஸ்.
  7. https://www.facebook.com/kumaravelu.ganesan பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். யூதர்கள் வரலாறு 1-20 Kumaravelu Ganesan ----------------------------- 1.https://www.facebook.com/1153120557/videos/10225739431129855/ 2.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225755370488329 3.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225823677155953 4.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225836514756885 5.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225844268350720 6.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225851799418992 7.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225870951337778 8.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225899725897124 9.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225929559802953 10. https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225959619274421 10.1 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225972802884003 10.2 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 11.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 12.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226033148392603 13.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226058944717495 14.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226325207773905 15.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226336456095106 16. https://www.facebook.com/1153120557/posts/10226385173753017/?mibextid=WiMSqg 17. https://www.facebook.com/1153120557/posts/10230558689568304/?mibextid=WiMSqg 18. https://www.facebook.com/1153120557/posts/10230573832906878/?mibextid=WiMSqg 19. https://www.facebook.com/1153120557/posts/10230620051702319/?mibextid=WiMSqg 20. https://www.facebook.com/1153120557/posts/10230727412626275/?mibextid=WiMSqg
  8. தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை. பலஸ்தீனியர்களும் கூட இல்லை. அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது… ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது. ஐ சீ ஆர் சி… முஸ்லிம் நாடுகள்… வத்திகான்… HRW… Amnesty International …. எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான். யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**. இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல. நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.
  9. ரோந்து வந்த ராணுவத்தினர் மீசாலையில் வைத்து எனது அண்ணனை கைது செய்து குருநகர் முகாம் கொண்டு போய் எதுவித துன்புறுத்தல்களும் இன்றி அன்றிரவே விடுவித்துவிட்டனர்.
  10. சரியான கணிப்பீடு. இவ்வாறான காரணங்கள் அடிப்படைவாதம், தீவிர தேசியவாதங்கள் வளர்ந்து வருவதற்கான காரணிகள். ஒரு இனம் அல்லது மதக்குழுவினர் இப்படி தான் இருக்க வேண்டும. என்பதை அடிப்படைவாதிகள் தீர்மானித்து அதை ஒட்டு மொத்த மக்கள் மீதும் திணிக்கும் நடைமுறை. பெரும்பாலான மக்களை அதை மனசார விரும்பாமல் விட்டாலும் காலப்போக்கில் இந்த கும்பல் மனநிலையின் பாதிப்புக்குள்ளாகி அதன் பார் ஈர்க்கப்படுவர்.
  11. இந்த திரியின் தலைப்பை 'இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு' என்று மாற்றியுள்ளேன்
  12. பயங்கவாதத்தை தூண்டி, பயங்கரவாதிகளையும் உருவாக்கி அவர்களுக்கு ஆயுத உதவிகளையும் செய்து பின் அதையே சாட்டாக வைத்து அந்த நாடுகளின் வளங்களையும் சுரண்டுவதால்தானே உங்களால் உந்த நாடுகளில் ஒய்யாரமான வாழ்க்கையை வாழ முடிகிறது!!
  13. தேசிய பாதுகாப்பு அமைச்சினை உருவாக்கிய ஜெயவர்த்தன‌ தமிழ் இனக்கொலையில் முன்னின்று செயற்பட்ட லலித் அதுலத் முதலி ஜெயவர்த்தனவின் இராணுவ முஸ்த்தீபுகளுக்கு நிகராக தமிழ்ப்போராளிகளும் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு வந்தனர். 1983 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியளவில் வட இந்தியாவுக்குச் சென்ற முதலாவது தொகுதிப் போராளிகள் தமது மூன்றுமாத காலப் பயிற்சியை நிறைவுசெய்திருந்தனர். இரண்டாவது தொகுதியினருக்கான பயிற்சிமுகாம்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அமைக்கப்பட்டன. இந்திய உளவுத்துறை ரோ அதிகாரிகளை பயிற்சியாளர்களாகக் கொண்டு தமிழ்நாட்டு முகாம்களை போராளிகளே இயக்கிவந்தனர். பங்களூரில் இயங்கிய புலிகளின் முகாமினை ரோ அதிகாரிகள் கவனித்துக்கொண்டனர். காத்தான்குடி மக்கள் வங்கிக் கொள்ளை இந்தியாவில் பயிற்சியினை முடித்துக்கொண்ட போராளிகள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வந்து சேர்ந்துகொண்டிருந்த தறுவாயில், சிறிய அமைப்பாக பனாகொடை மகேஸ்வரனின் தலலைமையில் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் 1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் தாக்குதல் ஒன்றினை நடத்தியது. காத்தான்குடியில் இயங்கிவந்த மக்கள் வங்கியின் அலுவல்கள் ஆரம்பித்த காலை 9 மணிக்கு ஆறு போராளிகள் உள்நுழைந்தனர். முஸ்லீம் முகாமையாளரைப் பணயக் கைதியாகப் பிடித்துக்கொண்ட அவர்கள், ஏனைய பணியாளர்களை வங்கியின் அறையொன்றினுள் அடைத்துவிட்டு வங்கியில் இருந்த இரண்டரை லட்சம் பணம் மற்றும் 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இதுவரை வடக்கில் மட்டுமே இயங்கிவந்த போராளி அமைப்புக்கள் இச்சம்பவத்தின் மூலம் கிழ்க்கிற்கும் தமது நடவடிக்கைகளை விஸ்த்தரித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த அரசு கலவரமடைந்தது. . அதுவரை இலங்கையில் இடம்பெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் இந்த கொள்ளைச்சம்பவத்திலேயே அதிகளவான பணமும் நகைகளும் திருடப்பட்டிருந்தன. காத்தான்குடி பல பணக்கார முஸ்லீம் வியாபாரிகளின் வாழிடமாகத் திகழ்ந்தது. வங்கிக் கொள்ளையினையடுத்து தேடுதலில் இறங்கிய பொலீஸாரும், இராணுவத்தினரும் திருடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியினை பிளாத்திக்குப் பைகளில் சுற்றியபடி வீடொன்றில் இருந்து மீட்டனர். ஆனாலும், மீதி நகைகளோடு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற பனாகொடை மகேஸ்வரனும் அவரது சகாக்களும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். தன்னிடம் இருந்த பணத்தினைக் கொண்டு பனாகொடை மகேஸ்வரன் தமிழ்நாடு - கேரளா எல்லையில் தனது அமைப்பிற்கென்று பயிற்சி முகாம் ஒன்றினைத் திறந்தார். விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னர் வரை இங்கிலாந்தில் பொறியியலாளராகக் கல்விகற்று வந்த மகேஸ்வரன், தொழிநுட்பத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தவர். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி சில கைத்துப்பாக்கிகளை தனது முகாமில் செய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சமூக விரோதிகளுக்குப் புலிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனைகள் மகேஸ்வரனின் தமிழ்த் தேசிய இராணுவம் வங்கிக்கொள்ளையினைப் பயன்படுத்தி மக்களிடம் தம்மைக் காட்டிலும் பிரபலமாவதை புலிகள் விரும்பவில்லை. ஆகவே, மக்களின் காவலர்கள் தாமே என்று காட்டுவதற்காக காத்தான்குடி வங்கிக்கொள்ளை இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ஆறுபேருக்குப் புலிகள் மரண தண்டனை நிறைவேற்றினர். இவர்களுள் ஐவர் மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க ஆறாமவரின் தலை வெட்டப்பட்டிருந்தது. மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுடப்பட்டவர்களின் தலைகளில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருந்தது. அவர்களின் உடல்களுக்கருகில் கையால் எழுதப்பட்ட அறிவித்தல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. "நீங்கள் ஒரு துரோகி. துரோகிகளுக்கான எமது தண்டனை இதுதான்" என்று அது கூறியது. மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவரும் குற்றவாளிகள். ஆறாமவர் பாலியல்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பலமுறை தம்மைத் திருத்திக்கொள்ளுமாறு புலிகளால் எச்சரிக்கை விடப்பட்டே வந்தது. ஆனால், இவர்கள் அறுவரும் அதனைச் சட்டை செய்யவில்லை. புலிகள் குற்றவாளிகளுக்குப் பொதுவான எச்சரிக்கை ஒன்றினை முன்னர் வெளியிட்டிருந்தனர். பலர் அதனை கிண்டலடித்து உதாசீனம் செய்திருந்தனர். புலிகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரம், "சமூக விரோதச் சக்திகளை துடைத்தெறிவோம்" என்கிற தலைப்பில் வெளியாகியிருந்தது. "விடுதலைப் போராட்டம் சமூக விரோதச் செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கக் கூடாது. விடுதலைப் போராளிகள் மக்களைக் குற்றங்களில் இருந்தும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் காப்பவர்களாகத் திகழ வேண்டும்" என்று கூறியதுடன் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் அவற்றினைக் கைவிட்டுத் திருந்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது. இப்பிரசுரத்தின் இறுதிப்பகுதியில், "சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவோர் தம்மைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்" என்று கூறியிருந்தது. சங்கிலியன் பஞ்சாயத்து முறையினை அறிமுகப்படுத்திய புலிகள் 1982 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுப் போயிருந்தது. ஆனைக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களையடுத்து பொலீஸார் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்தனர். சுமார் 16 சிறிய பொலீஸ் நிலையங்கள் பொலீஸாரால் மூடப்பட்டன. வீதி ரோந்துக்களில் மட்டுமே தமது நடவடிக்கைகளைப் பொலீஸார் சுருக்கிக் கொண்டனர். இதுகூட இந்தியாவில் பயிற்றப்பட்ட போராளிகள் யாழ்க்குடாநாட்டில் நடமாடத் தொடங்கியடதையடுத்து குறைவடையத் தொடங்கியது. கண்ணிவெடி மற்றும் பதுங்கித் தாக்குதல்களால் பொலீஸார் மிகுந்த அச்சம் அடைந்து காணப்பட்டனர். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருந்த இந்தச் சூழ்நிலையினை சமூக விரோதிகள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். களவுகள், தெருச் சண்டியர்களின் அடாவடிகள், பாலியல் பலாத்காரங்கள் என்பன யாழ்க்குடாநாட்டில் பரவலாக ஆங்காங்கே நடந்துவரலாயின. ஆகவே, இவற்றிலிருந்து மக்களைக் காப்பற்ற புலிகள் முடிவெடுத்தனர். புலிகளின் "மின்கம்பத் தண்டனை" யினை மாற்றியக்கங்கள், குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்திருந்தன. புலிகள் எல்லைமீறிச் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஒரு ஆணவம் கொண்ட அரசுபோல விடுதலைப் போராளிகள் நடந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் கூறினர். ஜனநாயகமும், சட்டம் ஒழுங்கும் புனிதமானவை என்று அவை வாதிட்டன. தம்மீதான விமர்சனங்களுக்கு புலிகள் ஒரு அறிக்கை மூலம் பதில் வழங்கியிருந்தனர். "நாம் மிகவும் ஆபத்தான சமூக விரோதிகளையே களையெடுத்தோம். இவர்கள் குற்றவாளிகள் மட்டுமல்லாது துரோகிகளாகவும் செயற்பட்டு வந்தவர்கள். அரசின் முகவர்களாக செயற்பட்டு வந்த இவர்கள், மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பல இடைஞ்சல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். மிகவும் கொடூரமான இக்குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்களின் குற்றச் செயல்களுக்காக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டத‌ன் பின்னரே அவர்களின் குற்றங்களுக்கு ஏற்றவகையில் தண்டனை வழங்கினோம். கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட ஏனையவர்களைக் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்திருக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. சங்கிலியன் பஞ்சாயம் என்கிற பெயரில் மக்கள் தீர்ப்பாயங்களையும் புலிகள் உருவாக்கினர். இந்து நீதித்துறையின் பாரம்பரியத்தில் கிராம மட்டத்தில் நிலவிவந்த பஞ்சாயத்து முறையின் அடிப்படியிலேயே இவை உருவாக்கப்பட்டன. பொதுவான இடம் ஒன்றில் கூடும் கிராமத்தின் முதியவர்கள், வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவர். யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலியனின் பெயரினை புலிகள் இந்தக் கிராமப் பஞ்சாயத்து முறைக்குச் சூட்டினர். வடக்குக் கிழக்கில் புலிகள் இன்று ( 2005) நடைமுறைப்படுத்திவரும் நீதிமன்றங்களின் ஆரம்பப் படியே "சங்கிலியன் பஞ்சாயத்து" என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளை தமது காவலர்களாகப் பார்க்கத் தலைப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்த்ததைப் போன்றே சமூக விரோதிகளுக்கான மரண தண்டனை பலனைக் கொடுத்தது. புலிகளின் செயலினை மக்கள் வரவேற்றிருந்தனர். புலிகளின் போராளிகளைத் தமது காவலர்கள் என்னும் நிலைக்கு மக்கள் உயர்த்தியிருந்தனர். மக்கள் மனதில் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தினை மேலும் மேம்படுத்தும்படி பிரபாகரன் தனது போராளிகளிடம் கோரினார். "மக்கள் உங்களைத் தமது காவலர்களாக நினைக்கும் சூழ்நிலையினை உருவாக்குங்கள்" என்பதே பயிற்சி முகாம்களிலும், வகுப்புகளிலும். பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வுகளிலும் தனது போராளிகளுக்கு பிரபாகரன் கற்றுக்கொடுத்த மந்திரமாகிப் போனது. இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல் தமிழர் தாயகத்தில் இராணுவத்தினதும் பொலீஸாரினதும் நடமாட்டத்தினை மட்டுப்படுத்துவதும், தமிழ் மண்ணை அரசின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதுமே விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக போராளிகளால் கருதப்பட்டது. இதனை அவர்கள் மண்மீட்புப் போர் என்றே அழைத்தனர். இந்த இலக்கினை அடைவதில் அனைத்துப் போராளிக் குழுக்களும் இணைந்து செயற்படுவதென்று முடிவெடுத்தனர். அதன்படி புலிகளே முதலாவது நடவடிக்கையில் இறங்கினர். 1984 ஆம் ஆண்டு மாசியில் குருநகர் பகுதியில் இருந்த இராணுவ முகாம் கட்டடம் மீது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதோடு அதேவருடம் பங்குனி 20 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களையும் கொன்றனர். குருநகர் முகாமில் தங்கியிருந்த இராணுவத்தினர், ஆள்ப்பற்றாகுறையினால் 1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளின் பின்னர் பலாலி முகாமுக்குத் தம்மை மாற்றியிருந்தனர். அவர்கள் வெளியேறிச் சென்றபின்னர் இக்கட்டடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இராணுவத்தினர் மீண்டும் குருநகர் முகாமிற்குள் நுழையப்போகிறார்கள் என்கிற வதந்தி பரவத் தொடங்கியது. ஆகவே, இதனைத் தடுக்கும் முகமாக இக்கட்டடங்களைப் புலிகள் தகர்த்திருந்தனர். விமானப்படையைச் சேர்ந்த இரு வீரர்களான ரொகான் ஜயசேகரவும், சரத் அனுரசிறியும் யாழ்ப்பாணத்திலிருந்து கோண்டாவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் பயணமாகிக்கொண்டிருந்தனர். இவர்கள் பேரூந்தில் பயணமாவதை அறிந்துகொண்ட புலிகள் கோண்டாவிலுக்கு அண்மித்த பகுதியில் பேரூந்து வரும்போது அதனை மறித்து உள்ளிருந்த ஏனைய பயணிகளை கீழே இறங்கச் சொல்லிவிட்டு இரு விமானப்படை வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலைக்குப் பின்னர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மேல் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத் தக்கது. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தறுவாயில் கோண்டாவிலில் விமானப்படையினர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி வந்திருந்தது. இக்கூட்டத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராக அமைச்சர் அதுலத் முதலியே செயலாற்றினார். கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் இத் தாக்குதல் சம்பவம் குறித்து லலித் அதுலத் முதலி குறிப்பிட்டார். "புலிப் பயங்கரவாதிகள் அனைத்துக் கட்சி மநாட்டைக் குழப்ப முயல்கின்றனர். இனப்பிரச்சினைக்குச் ச‌மாதானமான முறையில் தீர்வொன்று காணப்படுவதை அவர்கள் எதிர்க்கின்றனர். இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்று காணப்பட வேண்டுமானால் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் 2004 டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக சர்வகட்சிக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். மாநாடு முடிந்ததன் பின்னர் என்னுடன் பேசிய லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவே புலிப் பயங்கரவாதிகள் குறித்துப் பேசுமாறு தன்னிடம் கூறியதாகவும், அவர்கள் அழிக்கப்படுவது குறித்த அறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் தன்னைக் கோரியதாகவும் கூறினார். நான் லலித்தின் வேண்டுகோளினை ஆசிரியர் மணிக் சில்வாவிடம் கூறினேன். அவர் அதனை பக்கச் செய்தியாக பத்திரிக்கையில் வெளியிட்டார். அன்றைய தலைப்புச் செய்தியும் நான் எழுதியது தான். அது ஜெயவர்த்தனவினால் அமைக்கப்படப் போவதாகக் கூறப்பட்ட இரு குழுக்கள் பற்றியது. அதுகுறித்து பின்னர் பார்க்கலாம். தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பாதுகாப்பு அமைச்சராகவும் ஜெயாரினால் முடிசூடப்பட்ட லலித் அதுலத் முதலி மூன்று நாட்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு, பங்குனி 23 ஆம் திகதி, வர்த்தகம் மற்றும் கப்பற்றுறைக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் லலித் அதுலத் முதலிக்கு தேசியப் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பதவியும், உதவிப் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பதவியும் மேலதிகமாக ஜெயாரினால் வழங்கப்பட்டது.
  14. ஹமாசை கைவிட்டதா ஈரான்? ஈரானை, ஈரானின் நலன்களை, குடிகளை, இஸ்ரேல் தாக்காது விடின், இஸ்ரேலுடன் நாம் மோதலுக்கு போக போவதில்லை என ஐநாவில் இயங்கும் ஈரான் தூதரகம் அறிவித்துள்ளதாம். இது ஈரான் ஹமாஸை கைவிட்டு விலகுவதை காட்டுகிறதா அல்லது பதுங்கி பாயும் உத்தியா எனத் தெரியவில்லை.
  15. உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை. ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது. இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது. காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது. பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது. இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது. பிகு 1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன. 2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும். #ஜாடிக்கேத்த மூடி இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க: 2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது. இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.
  16. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது. இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம். இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.
  17. இஸ்ரேல்.. அகதிகளாக வெளியேறச் சொல்லிவிட்டு.. அந்த அகதிகள் மீது குண்டு தாக்குதல் நடத்தி இருப்பது அப்படியே யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது சாரை சாரையாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது நாவற்குழி பகுதியில் வைச்சு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல பொது மக்கள் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார்கள். ஆக அடக்குமுறையாளர்களுக்கு கொள்கை வகுக்கும் அமெரிக்க மேற்குலக ஜாம்பவான்கள்.. தங்கள் நலனுக்காக.. பலவீனமான இனங்களில்.. மனித இன அழிப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் மீண்டும்.. இனங்காட்டுகிறது. உக்ரைனில் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. கொசவாவில் மதிப்பினமாம்.. சேர்பியாவில் பிரிவினைக்கு ஆதரவாம். ஏனெனில் நேட்டோ ஊடுருவலுக்கு அது அவசியம். ஜோர்ஜியாவில் சுதந்திர தேசங்களை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. ஜோர்ஜிய ஒருமைப்பாட்டுக்கு உழைப்பினமாம்... ஏனெனில் ஜோர்ஜியாவின் அமைவிடம் நேட்டோவுக்கு அதன் விரிவாக்கத்திற்கு அவசியம். முன்னர் அமெரிக்கவும் மேற்குலக நாடுகளும்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த குர்திஷ் மக்களின் போராட்ட அமைப்பின் ஆதரவை.. சிரியாவில் அரசுக்கு எதிரான மோதலுக்கும் நேட்டோ ஊடுருவலுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் போது.. மேற்குலக ஜாம்பவான்கள்.. குர்திஷ் இன மக்களின் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்க நேரிட்டது. இன்று... நேட்டோ நாடான துருக்கி தொடர்ந்தும்.. குர்திஷ் இனப்படுகொலை செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினமாம். (துருக்கியும் முஸ்லிம் தான்.. குர்திஷும் முஸ்லிம் தான்) அதேபோல்.. தான் பலஸ்தீன மக்கள் விடுதலையிலும்.. மேற்குலகம் இஸ்ரேலின் ஊடாக மத்திய கிழக்கில் தன் ஆக்கிரமிப்பு ஊடுருவல் நிலைப்பாட்டை போனிக் கொள்ள இஸ்ரேலின் எல்லா விதமான பயங்கரவாதச் செயல்களையும் அங்கீகரித்து நிற்கிறது. ஈழத்திலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஆதரவோடு.. தங்களின் பூகோள நலனை பெற்றுக் கொள்ளத் தக்க வகையில்.. அமெரிக்காவும் அதன் மேற்குலக கூட்டாளிகளும்.. தமிழர்களின் தார்மீக விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. இனப்படுகொலைகளின் ஊடாக.. தமிழர்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக அதனை.. குசிப்படுத்துவதன் ஊடாக தமது நலனை பேணிக் கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு ஹிந்தியா கூட்டு உடந்தையாக உள்ள அதேவேளை.. சீனா போட்டியாளராக இருப்பதால்.. அப்பப்ப.. போர்க்குற்றம்.. மனித உரிமைகள் கோசங்களை சர்வதேச அரங்கில் போட்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்கள் பக்கம் அதிகம் சார்ந்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள். இப்படியாப்பட்ட அமெரிக்காவையும்... அதன் மேற்குலகக் கூட்டாளிகளையும்.. ஏன் இங்கு சிலர் ஆதரிக்கினம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவினது முழு இராணுவ பொருண்மிய உதவியோடு கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்கள் தான்.. தலிபான்கள்.. பில்லேடனின் அல்குவைதா அமைப்பு.. ஐ எஸ் ஐ எஸ்.. போன்றவை. இவை ஏதோ ஒரு தருணத்தில் அமெரிக்காவினால் அதன் மேற்குலக ஏஜெண்டுகளால்..ஏமாற்றப்பட்டதன் விளைவே.. அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிரான அவர்களின் சில நடவடிக்கைகள்.. மேலும் சில நடவடிக்கைகள்.. அமெரிக்காவின் தலையீடுகளை இட்டு இவர்களால் அமெரிக்காவின் அதன் மேற்குக் கூட்டாளிகளின் உளவு அமைப்புக்களின் தூண்டுதலின் பெயரில் இடம்பெற்ற கலகங்கள். குறிப்பாக.. துனிசியாவில் ஆரம்பித்து.. லிபியாவில் கடாபியை முடிக்க தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சிப் போராட்டங்கள். இவற்றின் முடிவில்.. அமெரிக்காவால்.. மேற்குலகால் ஏமாற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோரே.. பின்னர் பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள். இதையிட்டு.. அமெரிக்கா தன் தவறுகளை ஒத்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டது கூட இல்லை. இப்படியாப்பட்ட அடக்குமுறைகளுக்கு துணைபோவதும்.... தமது பூகோள நலனை மட்டும் முன்னிறுத்தி மட்டும்..செயற்படும்.. அமெரிக்க.. மேற்குலக நாடுகளையும் அவர் தம் ஏஜென்டு நாடுகளையும் அரசுகளையும்.. குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளையும்..ஆதரிப்பது என்பது உலகில் உரிமைகள் மறுக்கப்பட்டு.. ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. இஸ்லாமிய மக்களின் அவர் தம் சொந்த பூர்வீக நில மற்றும் ஆட்சி உரிமைப் போராட்டம் என்பது வேறு. இந்தப் பகுப்பறிவுள்ள யாழ் கள உறுப்பினர்கள் தெளிவாத்தான் எல்லாம் எழுதினம். இந்த தெளிவற்றவை தான்.. தாம் எதற்கு எதை ஆதரிக்கினம் என்ற ஒரு விளக்கமே இன்றி.. மாற்றுக் கருத்து நிலை என்ற சப்பை போட்டி மனப்பாங்கிலும்.. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கோதாவிலும்.. அப்பட்டமான இனப்படுகொலைகளையும்.. மனித இன உரிமை மீறல்களை செய்யும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளை கேள்விக்கு உட்படுத்தாமலே ஆதரிக்கவும் செய்கிறார்கள். ரஷ்சிய - உக்ரைன் மோதலின் அடிப்பட்டைக்காரணம்.. டான்பாஸ் பிராந்திய மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளும் இனப்படுகொலையும். இதன் பின்னணியில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத மற்றும் சதி திட்டங்களை தீட்டிக் கொடுத்தது அமெரிக்காவும் மேற்குலக நேட்டோ நாடுகளும் என்பது எப்போதோ வெளிப்பட்ட பின்னும்.. புட்டினின் இந்த சதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை என்னென்பது. புட்டின்.. ஒரு அழிக்கப்படும் இனத்தின் காவலராக உள்ள வரை.. அவர் பக்கம் தர்மம் இருக்கும். அதற்காக புட்டினும் ரஷ்சியாவும் தமிழ் மக்களின் அழிவுகளை தடுக்க வந்தார்கள்.. அல்லது தடுக்க உதவினார்கள் என்பது அல்ல அதன் அர்த்தம். மேற்குலகின் தேவைகளுக்காக அழிக்கப்படும் குறைந்தது.. ஒரு இன மக்களின் பாதுகாவலராகவாவது.. புட்டின் இருக்கிறார் என்பதுதான் ரஷ்சிய - உக்ரைன் மோதலின் யதார்த்தமாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.