Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7053
    Posts
  2. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    9976
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38770
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/19/23 in all areas

  1. இது போன்ற கணக்குகளில் சொல்லப் படும் கருத்துக்களை கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ மனைக் கட்டிடம் மீது நேராக எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்பது உண்மை, ஆனால் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால், கட்டிடத்தின் ஒவ்வொரு ஜன்னலும் உடைந்து சன்னம் பறந்திருக்கிறது. மருத்துவமனை பாதுகாப்பு என்று நம்பிய மக்கள் தஞ்சமடைந்து, வாகனத் தரிப்பிடதிலேயே தங்கியிருந்த சான்றுகள் தெரிகின்றன (மெத்தைகள்). அருகில் ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் இருந்திருக்கிறது, அங்கே சிறுவர்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் நூற்றுக் கணக்கானோர் இறந்து, காயப்பட்டிருக்கின்றனர் என நம்பக் காரணங்களாக இருக்கின்றன. ஒரு வீடியோ உட்பட பலரின் பேட்டிகள் கருத்துகளை உள்ளடக்கிய செய்தியில் இவையெல்லாம் காட்டப் படுகின்றன. https://www.nytimes.com/2023/10/18/world/middleeast/gaza-hospital-israel-hamas-explained.html மனித உயிர் இழப்புகளைப் பொய் என்று நிறுவ நாம் உதவக் கூடாது, இது பாதிக்கப் பட்ட மக்களை இன்னும் காயப்படுத்துவது போலாகும்!
  2. அமைதியாக இருக்கும் எங்களை ஏன் சண்டைக்கு. இழுக்கிறீர்கள். ??? 🤣
  3. எனக்கு வெளிநாட்டில் அதுவும் போரின் சுவடுகளே இல்லாத மேலைநாடுகளில் இருந்து கொண்டு நன்னி( நன்னி வெளியில் இப்படி உள்ள பலரின் யாழ் பிரதி நிதி) போன்றவர்கள் எழுதுவது போரின் ரொம்ப தொலைவில் கண்டி கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு எமது பாடசாலைகள் சந்தைகள் கோவில்கள் தேவாலயங்கள் வைத்தியசாலைகள் மீது சிங்களப்படைகள் குண்டுவீசியபோது பலநூறு பொதுமக்கள் இறந்ததை ஆங்கில ஊடகங்கள் எழுதியபோது இறந்தவர்களவ தமிழர்கள் அல்ல புலிகள் என்றும் தாக்கப்பட்டது புலிகள் முகாம் என்றும் அப்பாவி தமிழர்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் ராணுவத்தினர் என்றும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி எழுதிய சிங்களவர்கள் நாபகம் வருகின்றனர்..
  4. மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும். எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும். இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன. மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று. 2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை. நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. 'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன். 'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை. ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன. அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு. தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை. அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம். பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன். உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது. மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும். வாழ்த்துக்களும் வணக்கமும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5
  5. இனியும் அமைதியாக இருப்பது பயனில்லை அண்ணா 😂 உங்கள் நாட்டில் உள்ள ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் யேர்மன் ஜனநாயகத்தை அழித்தொழிப்பது என்று செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுங்கோ என்று வேண்டுகோள் விடுகின்றோம். [நியுகோலானை காசாவாக மாற்றுமாறு டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.]
  6. இஸ்ரேலில் ஜேர்மன் அரச தலைவருக்கு ஏற்பட்ட நிலை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு சென்ற ஜேர்மன் பிரதமர், ஹமாஸ் அமைப்பின் ஏவுகணை தாக்குதலில் விமான நிலையத்தில் படுக்க வைக்கப்பட்ட காட்சி எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 17ம் திகதி தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள விமான நிலையத்திற்கு ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் நாடு திரும்புவதற்காக வந்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் இதன்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டார். பின் சில நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டார். https://ibctamil.com/article/condition-of-the-german-prime-minister-in-israel-1697718919
  7. உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது மேற்கின் நலன்கள் VS ரஸ்ய நலன்களுக்குமான யுத்தம் என்பதை யாழ் களத்தினர் பலர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். இதைப் பலர் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்ற போதும் அவர்களைப் பலர் ஏளனம் செய்தனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
  8. அருமை ஐலண்ட். ஒரு அமரிக்க ஜனாதிபதி உங்களை போல் சிந்தித்தால் போதும். இந்த பிரச்சினை தீர்ந்து விடும். இலங்கையில் விட்ட பிழையை இங்கே விடக்கூடாது. ஓம். ஆரம்பத்தில் ஹமாசை நம்பி செய்தி வெளியிட்ட பிபிசி போன்ற ஆக்களும், இப்போ இது இஸ்ரேல் செய்தது என்பதில் இருந்து பின்னடிக்கினம். 2009 போல் இல்லை இப்போ. OSINTC எனப்படும் ஓப்பன் சோர்ஸ் இண்டெலிஜின்ஸ் ஆட்கள் எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சு மேய்வார்கள்.
  9. கமாஸை ஒட்ட நறுக்க வேணும். இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது இனி... ஒக்க துடைச்சழிக்க வேணும். அங்காலை லெபனான் எல்லையிலை ஆங்காங்கே மோதல் நடைபெறுகிறது... இன்னொரு செய்தி, மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேரெல்லாம் கொல்லப்படவில்லையாம். வெகு குறைந்தளவிலான மக்கள் தான் கொல்லப்பட்டனராம். மேலும் அது மருத்துவமனையிலிருந்த ஒரு ஊர்தி தரிப்பிடம் மீதான தாக்குதலாம். மெய்யுண்மை (facts) தெரியவில்லை.
  10. இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகுது இவர் மேல் இருந்த மதிப்பு நன்றாக குறைந்து விட்டது ... ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின் வேலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.