Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31987
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2957
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/23/23 in all areas

  1. எனக்கும் யார் குறி போடுகிறார்கள் என்று அறிந்து பயனில்லை. அதை விட, இந்த மாற்றம் இல்லாமலே யார் கருத்திற்கு யார் விருப்பக் குறி போட்டிருப்பர் என்று ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சரியாக ஊகித்திருக்கிறேனா என்று பரிசோதிக்க, சில திரிகளை தற்போது சுற்றிப் பார்த்த போது, என் ஊகிப்பு கிட்டத் தட்ட 100 வீதம் துல்லியமாக இருக்கிறது😂!
  2. குழுவாதம் அப்படியே தான் இருக்குது.. என்பதற்கு பச்சை புள்ளிப் பட்டியல் சாட்சி. என்ன இப்ப குழு மாறி குழு பச்சை போட்டு மகிழுது. மொத்தத்தில்.. இந்தப் பச்சை சிவப்பை முற்றாக அகற்றி விடுவது நல்லது. தம் அப்.. தம் டவுன் மட்டும் விடலாம். கணக்கு.. பட்டியல் இவற்றையும் இல்லாமல் செய்தால்.. குழு வாதத்திற்கு.. குழு பச்சை குத்தலுக்கு இன்னும் தேவையே இல்லாமல் போகும். முதுகு சொறிவதும் இல்லாமல் போகும்.
  3. யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை புள்ளிகள் வழங்குபவர்கள் சரியான முறையில் வழங்குகின்றார்களா என்பதையும் கண்காணிப்போம். தவறாகப் பயன்படுத்துவதும் குழுக்களாக இணைந்து புள்ளிகள் வழற்குவதும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் சில காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவே புள்ளி வழங்கும் முறையில் தடை வழங்கப்படும். கால மாற்றத்திற்கேற்ப இடை நிறுத்தப்பட்ட இந்த புள்ளி வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
  4. இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
  5. அலன் தம்பதிகளைக் கடத்திச்சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு இலங்கையில் தமிழர் மீதான யுத்தத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையினரின் பங்களிப்பு மற்றும் இஸ்ரேலிய இராணுவ வல்லுனர்களின் பயிற்சிகள், இவற்றினை இலங்கைக்கு ஒழுங்குசெய்து கொடுத்ததில் அமெரிக்கா ஆற்றிய பங்கு ஆகியன தமிழ் மக்களைப் பொறுத்தவரை அமெரிக்காவின் உண்மையான நோக்கம் குறித்த பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அமெரிக்கா மீதும் அதன் வெளியக உளவுத்துறையான சி.ஐ.ஏ மீதும் கடுமையான வெறுப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் நிதி உதவியோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்து வந்ததுடன் இத்திட்டங்களில் பணியாற்றிவந்த அமெரிக்கர்கள் குறித்தும் கேள்வியெழுப்பி வந்தனர். இலங்கையில் பணிபுரியும் அமெரிக்கர்கள் அனைவரும் அதன் உளவுத்துறையான சி.ஐ.ஏ யின் முகவர்கள்தான் என்று அவர்கள் வாதிட்டு வந்தனர். ரூலிங் கம்பெனி ஒப் ஒஹையோ எனும் அமெரிக்கக் கம்பெனி ஒன்று நீர்வழங்கும் திட்டம் ஒன்றினை பருத்தித்துறையிலும், சாவகச்சேரியிலும் முன்னெடுத்து வந்தது. இத்திட்டத்தில் புதிதாகத் திருமணம் முடித்திருந்த இளவயதுத் தம்பதியினரான 30 வயது நிரம்பிய ஸ்டான்லி ப்றைசன் அலன் மற்றும் அவரது மனைவியான 28 வயது நிரம்பிய மேரி எலிசபேத் அலன் ஆகியோர் 1983 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து பணிபுரிந்து வந்தனர். குருநகர், கடற்கரை வீதியில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்கியிருந்தனர். தமது அமைப்பின் பெயரை சர்வதேசத்தில் அறியச் செய்ய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு கடத்தலில் இறங்கியது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உளவுப்பிரிவிவான மக்கள் ஆய்வுப் பிரிவு, அலன் தம்பதிகள் குறித்து சில சந்தேகங்களைக் கொண்டிருந்தது. அலன் தம்பதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த இந்தப் பிரிவு இவர்கள் சி.ஐ.ஏ யின் உளவாளிகளே என்று சென்னையில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைமைப்பிரிவிற்கு அறிவித்தது. தமது அமைப்பிற்கு சர்வதேச கீர்த்தியை ஏற்படுத்தும் பொருட்டு அவ்வமைப்பின் தலைவர்களான பத்மநாபா, டக்ளஸ் தேவான‌ந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மணி மற்றும் ரமேஷ் ஆகியோர் திட்டம் ஒன்றினை வகுத்தனர். அதன்படி அலன் தம்பதிகளைக் கடத்துவதென்றும், அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகக் கோருவதென்றும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிப்பதென்றும் முடிவெடுத்தனர். கடத்தலுக்கான உத்தரவை இட்ட டக்ளஸ் தேவானந்தா திட்டத்தினைச் செயற்படுத்தும் பொறுப்பு ஈ.பி.ஆர். எல்.எப் அமைப்பின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்திடம் (பி.எல்.ஏ) ஒப்படைக்கப்பட்டது. இராணுவப் பிரிவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த தனது உறுப்பினர்களிடம் இத்திட்டத்தினைச் செயற்படுத்துமாறு பணித்தார். யாழ்ப்பாணப் பிரிவும் இதனை நேர்த்தியாகச் செய்தது. வைகாசி 10 ஆம் திகதியன்று இரவு 7 மணிக்கு சில இளையவர்களை அலன் தம்பதிகள் தனியாக இருக்கின்றார்களா என்று பார்த்துவர அனுப்பியது ஈ.பி.அர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு. அலன் தம்பதிகளின் வீட்டுக் கதவினைத் தட்டிய இளையவர்கள் தாம் நூலகத்திற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். நிதியுதவி செய்ய முன்வந்த அலன், அவர்களை மறுநாள் வருமாறு கேட்டுக்கொண்டார். இளையவர்கள் அங்குஇருந்து அகன்ற இரு மணித்தியாலங்களின் பின்னர் அலன் தம்பதிகள் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவர்களது வீட்டில் பணிபுரிந்தோர் இரவுணவை அருந்திக்கொண்டிருக்க, ஈ.பி.ஆர்.எல்.எப் இராணுவப்பிரிவின் உறுப்பினர்களான ரெக்ஸ், மோகன், குமார், இந்திரன் மற்றும் ரோகன் ஆகிய ஐவரும் அலன் தம்பதிகள் தங்கியிருந்த விடுதியின் பின்கதவினால் உள்நுழைந்து பணியாளர்கள் இருவரையும் அருகிலிருந்த அறை ஒன்றினுள் கட்டிப்போட்டனர். பணியாளர்களை சத்தம் எழுப்பவேண்டாம் என்று மிரட்டிய ஆயுததாரிகள், மறுநாள் காலை விடிந்தபின்னர் அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட விடயம் குறித்து பொலீஸாரிடம் தெரியப்படுத்துமாறு கூறினர். பின்னர், அலன் தம்பதிகள் படுத்திருந்த அறையினருகில் சென்ற அவர்கள் கதவைத் தட்டவும் ஸ்டான்லி கதவினைத் திறந்தார். மேரியும் அவரின் பின்னால் கதவினருகில் வந்து நின்றார். தாம் வைத்திருந்த ஆயுதங்களை அலன் தம்பதிகளுக்கு நேரே பிடித்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், உடனடியாக ஆடைகளை அணிந்துகொள்ளுமாறு மிரட்டினர். பின்னர் அவர்களின் கைகளையும் கண்களையும் கட்டிப்போட்டனர். கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அலன் தம்பதிகளை வீட்டின் முன்வாசலால் இழுத்துச் சென்ற அவர்கள், பிக்கப் ரக வாகனம் ஒன்றின் பின்னிருக்கையில் அவர்களை அடைந்தபடி மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். இச்செய்தி குறித்து டெயிலி நியூஸ் பத்திரிகையில் எழுதுமாறு நான் பணிக்கப்பட்டேன். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கென்று தரமான நிருபர்களும், புகைப்பிடிப்பாளர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். ஆனால், ஆங்கிலத்தில் அவர்கள் புலமை வாய்ந்தவர்களாக இருக்கவில்லை. ஆகவே, அவசரமான செய்திகளை தொலைபேசியில் அவர்கள் என்னிடம் கூற நான் அதனை ஆங்கிலத்தில் எழுதிக் கொள்வதென்பதே வழக்கமாக இருந்து வந்தது. அத்துடன், கொழும்பிலிருந்து எனக்குக் கிடைக்கும் தகவல்களையும் செய்தியுடன் இணைத்துக்கொள்வேன். ஜெயவர்த்தனவுக்கு கடிதத்தில் நிபந்தனைகளை அனுப்பிய ஈ.பி.ஆர்.எல்.எப் வைகாசி 10 ஆம் திகதி, வியாழக்கிழமை அன்று அலன் தம்பதிகள் கடத்தப்பட்டிருந்தனர். வைகாசி 11 ஆம் திகதி, வெள்ளி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியைச் சந்தித்த சிறுவன் ஒருவன் அவரிடத்தில் காகித உறை ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அதில் மிக அவசரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த உறையினுள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருப்பதை அரசாங்க அதிபர் தேவநேசன் நேசைய்யா கண்ணுற்றார். அக்கடிதத்தில் மூன்று செய்திகள் அடக்கப்பட்டிருந்தன. முதலாவது செய்தி அலன் தம்பதிகளை மக்கள் விடுதலை இராணுவம் கடத்திச் சென்றிருக்கிறது என்பது. அவர்கள் சி.ஐ.ஏ யின் முகவர்கள் என்பதாலேயே கடத்தப்பட்டுள்ளதாக அது கூறியது. இரண்டாவது, அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளை கூறியிருந்தது. முதலாவது நிபந்தனை, அரசால் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கும் 20 போராளிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது. இந்த 20 பேரின் பெயர்களையும் அது குறிப்பிட்டிருந்தது. முதலாவது பெயர் வண பிதா சிங்கராயர். இரண்டாவது பெயர் நிர்மலா நித்தியானந்தன். ஏனையவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயற்ப்பாட்டாளர்கள். இர்ண்டாவது நிபந்தனை 50 மில்லியன் பெறுமதியான தங்கம் கப்பமாகத் தரப்பட வேண்டும் என்பது. மூன்றாவது செய்தி யாதெனில் தமது நிபந்தனைகளை முழுவதுமாக இலங்கையரசாங்கம் நிறைவேற்றத் தவறுமிடத்து அலன் தம்பதிகளுக்கு என்ன நடக்கும் என்பது. அதாவது, தமது நிபந்தனைகள் வெள்ளி பிற்பகல் 12 மணியிலிருந்து 72 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்படாது போனால் அலன் தம்பதிகள் ஆறு மணித்தியால இடைவெளிக்குள் தம்மால் கொல்லப்படுவார்கள் என்பது. தனது கடத்தலுக்குள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை இழுத்துவிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு இந்த நிபந்தனைகளுள் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது விடுவிக்கப்படும் 20 கைதிகளும், 50 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் மக்கள் விடுதலைப் படை அவர்களையும் தங்கத்தையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்பதும் தான். அலன் தம்பதிகளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட பிக்கப் வாகனம் காங்கேசந்துறை சேத்தான்குளம் பகுதியில் அநாதரவான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட தம்பதிகள் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதனையே இது காட்டியது. இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கத்தை இணைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு நிபந்தனை வெளியிட்டிருந்தது முதலமைச்சர் ராமச்சத்திரனை சினங்கொள்ள வைத்தது. மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இக்கடத்தல் சம்பவம் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜெயவர்த்தன, பிரேமதாச, லலித் ஆகியோர் அமெரிக்காவுக்கு நிலைமையினை விளங்கப்படுத்தியிருந்தனர். அலன் தம்பதிகளின் நிலைமை குறித்து அமெரிக்கா கவலைப்படத் தொடங்கியது. லலித் அதுலத் முதலியைச் சந்தித்த அமெரிக்க தூதர், அலன் தம்பதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் வன்முறைகளை தனது அரசாங்கம் கண்டிப்பதாகவும் அமெரிக்கத் தூதரிடம் லலித் கூறினார். மேலும், அப்பாவி இளம் தம்பதிகளை பாதுகாப்பாக விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தமது அரசாங்கம் செய்யும் என்றும் அவர் கூறினார். இந்தியாவையும் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும் அவமானப்படுத்த அலன் தம்பதிகளின் கடத்தலினைப் பாவித்த இலங்கையரசு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சத்வாலை தனது அலுவலகத்திற்கு அழைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ் .ஹமீத், அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்று வினவினார். ஜெயவர்த்தன மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவரான சத்வால் பின்னாட்களில் என்னுடன் பேசும்போது, ஹமீத் தன்னிடம் கடத்தலுடன் தமிழ்நாட்டிற்குத் தொடர்பிருக்கிறதா என்று வினவியபோது தாம் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார். தமிழ்ப் போராளிகளால் தாம் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறினார். சத்வாலை அவமானப்படுத்தியதுடன் ஹமீத் நின்றுவிடவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சரான நரசிம்ம ராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், அலன் தம்பதிகளின் கடத்தலில் தமிழ்நாட்டு அரசாங்கம் செய்திருக்கும் பங்களிப்புக் குறித்து தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ராவ், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு இக்கடத்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறினார். ராவிடம் பேசும்போது ஹமீத் பின்வருமாறு வினவினார், "தமிழ்நாட்டில் அதிகாரத்தில் உள்ள சிலருடன் பேசாது, தாம் கேட்கும் கைதிகளையும், தங்கத்தையும் தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்று கடத்தல்க்காரர்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். கடத்தலில் தமிழ்நாட்டு அரசாங்கம் வகித்திருக்கும் பாகம் குறித்து இலங்கையரசாங்கம் இந்தியாவிடம் வினவியது பற்றி அறிந்துகொண்டபோது எம்.ஜி.ஆர் கொதித்துப் போனார். முட்டாள்கள், முட்டாள்கள் என்று அவர் வைதுகொண்டார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்காவின் கொடியினை எரித்ததற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் சிலர் கைதுசெய்யப்பட்டிருந்தபோது, அவர்களை எம்.ஜி.ஆர் தலையிட்டு விடுவித்திருந்தார். சர்வதேசத்தின் கவனம் தம்மீது விழவேண்டும் என்பதற்காக எதையாவது செய்தாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அமெரிக்க தூதரகத்திற்கு மூன்று முச்சக்கர வண்டிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் வந்திறங்கினர். தூதரக வாசலில் காவலுக்கிருந்த உத்தியோகத்தர்கள் நோக்கி ஓடிச்சென்ற ரமேஷ் அவர்களை நோக்கி தான் கொண்டுவந்திருந்த கமெராவை உயர்த்திக் காண்பித்தார். ஆரம்பத்தில் அதனை ஒரு துப்பாக்கியென்று எண்ணிய காவலாளிகள் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். அதனையடுத்து அமெரிக்கக் கொடியை கீழே இழுத்து வீழ்த்திய அவர்கள் அதற்குத் தீமூட்டினர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தபோதும் எம்.ஜி.ஆர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்திருந்தார். எம்.ஜி.ஆரின் பணிப்பில் கைதுசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் அலன் தம்பதிகள் கடத்தப்பட்டத்தைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் கடத்தப்பட்டதற்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களையும் உடனடியாகக் கைதுசெய்யும்படி தமிழ்நாடு பொலீஸ் அதிபரை எம்.ஜி.ஆர் பணிக்க, அவரும் அவர்கள் அனைவரையும் கைதுசெய்தார்.
  6. ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளாகிவிட்ட போரை ஆதிக்க சக்திகளால் மட்டுமே நிறுத்த முடியும் என்பதையே ஐநாவிலே குப்பையில் போடப்பட்ட போர்நிறுத்தம் கோரிய மனு சுட்டுகிறது. ஐ.நா 2008இல் தமிழீழத்திலேயே தோற்றுவிட்டது. எனவே அது ஐ.நா சபையல்ல அறிக்கைச்சபை மற்றும் ஆக்கிரமிப்பு நாடுகளுக்கான சபை போன்ற பாத்திரங்களையே வகிக்கிறது. ஐ.நா உண்மையில் அதிகாரமுள்ள சபையெனில் சிறிலங்காவால் தமிழீழத் தமிழர்கள் மியன்மாரால் ரொகிங்கியர்கள் துருக்கியால் குர்திஸ்கள் இந்தியாவில் காஸ்மீர் மணிப்பூர் என இன அழிவுகள் தொடராது தடுக்கப்பட்டிருக்கும். ஐ.நாவில் கூடும் ஆதிக்க சக்திகளின் சதுரங்க ஆடுகளமாகிவிட்டபின் ஐ.நாவை அப்பாவி மக்கள் நம்புவதால் பயன் உண்டா? நன்றி
  7. எனது கருத்து விரும்பப்பட்டுள்ளது என்பது போதும். யார் எனது கருத்துக்கு பச்சை உட்டுள்ளார்கள் என்பதை அறிந்து எனக்கு என்ன பிரயோசனம் என்று எனக்கு புரியவில்லை. நிர்வாகத்தின் இந்த முடிவை நான் வரவேற்கவில்லை.
  8. உங்கள கருத்து பிடித்திருப்பதால் ஒரு பச்சை👍😀. முற்றாக நீக்கி விடுங்கள் என்பதுதான் என் ஒரிஜினல் கோரிக்கை. செவி மடுக்கவில்லை. ஆனால் கடந்த 12 மாதத்தில் யாழில் குழுவாதம் குறைந்து, ஒவ்வொருவரும் தனியாளாக எழுதுவதாக எனக்கு படுகிறது. பிரமையோ தெரியவில்லை🤣.
  9. புள்ளிகள் இடுவதை மறைத்ததை நான் வரவேற்றேன். அண்மைகாலமாக யாழ்களத்தில் குழுவாதம் மிகவும் குறைந்து காணப்பட்டமைக்கு இது ஒரு முக்கிய காரணி என நான் கருதுகிறேன். இப்போ இந்த மாற்றம் ஏன் என்பது விளங்கவில்லை. பச்சை புள்ளியை பார்க்கும் படி செய்து விட்டு, பின் அதை கண்காணிப்பது, சிலருக்கு மட்டும் புள்ளி இடும் வசதியை நீக்குவது என்பது நிர்வாகம் ஒரு தலைபட்சமாக நடக்கிறது என்ற அதிருப்தியை தரும். நிர்வாக சுமையும் கூடும். இதனால் நிச்சயம் குழுவாதம் மீண்டும் தலை தூக்கும் என நான் திண்ணமாக நம்புகிறேன். உடையாத ஒன்றை திருத்தாதீர்கள்.
  10. மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.
  11. "குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? " பாலத்தீன தூதர் கண்ணீர் காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன. பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார். 14 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இப்போ அதை நிலை அதே வேண்டுகோள் அதே கதறல் முதல்க்கோணல் முற்றிலும் கோணல் எம் அழிவை அனுமதித்து கொண்டாடிய அதே மக்கள் அவர்களது அரசுகள் இன்றாவது முதல் தவறை முதல் கோணலை உணர்ந்தால் உலகம் முழுவதும் மக்கள் நிம்மதிப்பெரு மூச்சு கேட்கும்
  12. ஊரவர்கள் பார்ப்பது சந்தோசம் அப்பிடியே எல்லா உறுப்பினர்களும் பதியுமாறு உள்ள தடைகளை இந்த நேரத்தில் நீக்கிவிடலாமே?
  13. எப்போது இருந்து நடைமுறைப்படுத்தப்படும்? சிவப்புப் புள்ளியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கமுடியும் என்று நம்பவில்லை! இது ஒருவரின் reputation score ஐ குறைக்க வழிவகுக்கும்!
  14. இவரின் அம்மம்மா வாரத்துக்கு மூன்று முறை இப்படி செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்திருக்கின்றார்.......நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம் .......! 😂
  15. மேலேயுள்ள சீனிக்கிழங்கை ஆட்டையைப் போட வரும் ஆணை.........! 😂
  16. புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே ........! 😍
  17. இராணுவத்தின் நடமாட்ட முடக்கமும், யாழ்ப்பாணப் படுகொலைகளும் யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக் கிளை காலை 9 மணிக்கு தனது வேலைகளை ஆரம்பித்ததும் எட்டு ஆயுதம் தரித்த‌ இளைஞர்கள் திடு திடுப்பென்று உள்நுழைந்தார்கள். பின்னர் அங்கிருந்த 12 லட்சம் ரூபாய்களை எடுத்துக்கொண்டு வங்கியின் முகாமையாளரின் காரிலேயே ஏறித் தப்பிச் சென்றனர். அரசாங்கம் சித்திரை 10 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 மணித்தியாலய ஊரடங்கு உத்தரவை இட்டது. அன்றிரவு பெருமளவு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கும் அருகிலிருந்த தனியார் கட்டடங்களுக்கும் தீயிட்ட இராணுவத்தினர் அங்கு கண்ணில் பட்ட பல பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். யாழ்நகரின் தென்கிழக்குப் புறமாக அமைந்திருந்த‌ கத்தோலிக்கர்களை அதிகமாகக் கொண்டதும் சனநெரிசல் மிக்க பகுதியாகவும் விளங்கிய‌ குருநகர் நோக்கி இராணுவத்தினர் நகர முற்பட்டனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுக்க பொதுமக்களும் சில பாதிரியார்களும் இணைந்து வீதித்தடைகளை ஏற்படுத்தினர். வாகனங்கள் வீதிக்குக் குறுக்காக நிறுத்திவைக்கப்பட்டன. வீதிகளில் ஆங்காங்கே டயர்களும், மரக்குற்றிகளும் எரிக்கப்பட்டன. மக்களை அணிதிரட்டும் வேலைகளில் புலிகள் இறங்கியிருந்தனர். புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டுவும் அவரது போராளிகளும் அப்பகுதியில் நின்றதோடு பெற்றொல் எறிகுண்டுகளையும் சில கைய்யெறிகுண்டுகளையும் மக்களுக்குப் பகிர்ந்தளித்தனர். புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டனர். தமது இராணுவத்தை போராளிகளும் பொதுமக்களும் இணைந்து தடுத்ததமையானது இராணுவ உயர்பீடத்தில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி விட்டதுடன் கொழும்புப் பத்திரிக்கைகள் இதனைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். டெயிலி நியூஸ் பத்திரிகைக்குச் செவ்வியளித்த இராணுவ அதிகாரியொருவர் இப்படி ஒருபோதும் நடந்ததில்லை என்று ஆத்திரத்துடன் கூறினார், "பயங்கரவாதிகள் புதிய உத்திகளைக் கைக்கொள்கிறார்கள். நாம் இதனை எதிர்பார்க்கவில்லை. எமது இராணுவத்தின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதென்பது முன்னர் நடவாதது" என்று கூறினார். அரச தகவல்த் திணைக்களம் விடுத்த அறிக்கையில், "சித்திரை 10 ஆம் நாள் இரவு எமது இராணுவ ரோந்து அணிகள் வீதித் தடைகளை எதிர்கொண்டன. அவர்கள் முன்னேறிச்சென்ற பலவிடங்களில் எரியூட்டப்பட்ட டயர்கள் வீதிகளில் தூக்கி வீசப்பட்டன. பலவிடங்களில் ஆயுதம் தரித்த இளைஞர்கள் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டார்கள். பயிற்றப்பட்ட இராணுவத்தினருக்கு ஒப்பாக அவர்களின் தாக்குதல்கள் அமைந்திருந்தன" என்று கூறுகிறது. கலாநிதி தேவநேசன் நேசைய்யா யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தேவநேசன் நேசைய்யா கூறுகையில் குறைந்தது 50 தமிழர்களையாவது அன்றிரவு இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற‌தாகக் கூறினார். ஆனால், யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி சித்திரை 9 ஆம் திகதி முதல் நடைபெற்ற இராணுவத்தினரின் தாக்குதல்களில் குறைந்தது 234 தமிழர்கள் கொல்லப்பட்டிருய்ப்பதாகக் கூறியது. அரசாங்கத்தின் வாராந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய அமைச்சின் செயலாளர் டக்ளஸ், "கொல்லப்பட்ட அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று என்னால் கூறமுடியாது. எமது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படும்போது அவர்கள் எல்லாத்திசைகளிலும் எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் வேறு என்னதான் செய்ய முடியும்? அதைவிடவும், ஒருவர் பயங்கரவாதியா இல்லையா என்று வேறுபடுத்திப் பார்ப்பது எப்படிச் சாத்தியம்?" என்றும் கூறினார். அந்த நாள் இரவு புலிகளின் போராளிகள் நாம் எவ்வளவு நேர்த்தியானவர்கள் என்பதனையும், தாம் கற்றுக்கொண்ட பயிற்சிகள் எவ்வளவு நுணுக்கமானவை என்பதனையும் செயலில் காட்டியிருந்தார்கள். அன்று 8:15 மணிக்கு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்கிக்கொண்டே உள்நுழைந்தார்கள். அங்கிருந்த பொலீஸார் தாம் வைத்திருந்த ஒற்றைச் சூட்டுத் துப்பாக்கிகளை எறிந்துவிட்டு ஓட்டமெடுத்தார்கள். பொலீஸ்நிலையக் கட்டடத்திற்கு குண்டுகளை வைத்துத் தகர்த்த புலிகள் பொலீஸாரின் வாகனங்கள் இரண்டிற்கும் தீமூட்டினார்கள். பின்னர் அங்கிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். ஆவணி 9 ஆம் நாள் புலிகள் தலைமையில் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல் விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. புலிகள் முதன்முதலாக கார்வெடிகுண்டினை வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருந்தனர். மக்களை இராணுவத்திற்கெதிராக அணிதிரட்டியிருந்தனர். இராணுவத்தின் முன்னேற்றத்தை வெற்றிகரமாகத் தடுத்திருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல் விடுதலைப் போராட்டம் தீவிரமடைவதனையும், புதிய நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதையும் எடுத்துக் காட்டியது. வெளிநாட்டுக் கூலிப்படையினரை அமர்த்திக்கொண்ட பேரினவாதிகள் இராணுவத்தினர் எதிர்பார்த்திராத இத்தாக்குதல் லலித் அதுலத் முதலிக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியிருந்தது. 1983 ஆம் ஆண்டு மார்கழியளவில் தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவருவதை அவர் அறிந்திருந்தார். 1984 ஆம் ஆண்டி சித்திரை மாதத்தின் முதல்ப் 10 நாட்களும் தமிழ்ப் போராளி அமைப்புக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளில் திறனுடன் செயற்பட்டு வருவதைக் காட்டியிருந்தது. சித்திரை 11 ஆம் திகதி கூடிய தேசிய பாதுகாப்புச் சபை பாக்கு நீரினையினைக் கடந்து, சென்று வரும் போராளிகளின் படகுகளை தடுப்பதற்கான வழிவகைகள், நடவடிக்கைகள் பற்றித் தீவிரமாக ஆராய்ந்தது. கூட்டத்தின் முடிவில் இலங்கையின் கடற்பரப்பிற்குள் கட்டுப்படுத்தப்பட்ட கடற்பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. அன்று மாலை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லலித் அதுலத் முதலி கடற்படைத் தளபதியின் அனுமதியின்றி இந்தக் கட்டுப்பாட்டுக் கடற்பிரதேசத்திற்குள் எந்தக் கப்பலோ அல்லது படகோ உள்நுழைய முடியாது என்று கூறினார். கடற்படைத் தளபதியின் அனுமதியினைப் பெற்றுக்கொண்ட கடற்கலங்களுக்குப் பாதுகாப்பாக இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகொன்று கூடவே வரும் என்றும் அவர் கூறினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் போதைவஸ்த்துக் கடத்தல்களைத் தடுப்பதற்கும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினைத் தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். ஷின் பெட் கூலிப்படையினர் இஸ்ரேலிய உள்ளக புலநாய்வுத்துறையான ஷின் பெட்டின் வருகை குறித்து லலித் அதுலத் முதலியிடம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது. அத்தருணத்தில் இலங்கை ராணுவத்திற்கு ஷின் பெட்டின் அதிகாரிகள் பயிற்சியளித்துவருவதை லலித் ஒத்துக்கொண்டார். மேலும், பல இஸ்ரேலிய அதிகாரிகளும் இலங்கை இராணுவத்திற்கு கொழும்பில் பயிற்சிகளை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார். தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து பின்வருமாறு வினவினார் லலித், "பயங்கரவாதிகளே பயிற்சிகளை எடுக்கும்போது எமது இராணுவத்தினர் பயிற்சிகளை மேற்கொள்வதில் என்ன குற்றமிருக்கிறது?". "அண்மைய நாட்களில் எமது இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களைப் பார்க்கும்போது பயங்கரவாதிகள் கரந்தடிப் போர்முறையில் நேர்த்தியாகப் பயிற்றப்பட்டிருப்பது தெரிகிறது" என்றும் அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக, ரவி ஜயவர்த்தனவின் கீழ் இயங்கிய பொலீஸாரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை படையான விசேட அதிரடிப்படைக்கான பயிற்சிகளுக்காக இங்கிலாந்து கூலிப்படையான கீனி மீனியின் பயிற்சிகளையும் இலங்கை அரசாங்கம் அடுத்துவந்த சில மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டது. பிரித்தானியாவின் விசேட படைப்பிரிவான ஸ்பெஷல் எயர் சேர்விசஸ் என்றழைக்கப்படும் படையின் முன்னாள் வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இலங்கைப் பொலீஸாருக்கு பயிற்சியளித்து வந்தனர். மேலும், இங்கிலாந்தின் முன்னாள் படைவீரர்களும், அதிகாரிகளும் நேரடியாகாவே யுத்ததில் ஈடுபட்டதோடு, சிலர் குண்டுவீச்சு விமானமோட்டிகளாகவும், தாக்குதல் உலங்குவானூர்திகளைச் செலுத்துபவர்களாகவும் செயற்பட்டுவந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீதான குண்டுவீச்சில் இங்கிலாந்தின் விமானமோட்டிகள் நேரடியாகவே ஈடுபட்டனர். ஒரு பிரித்தானிய வீரருக்கு மாதாந்தச் சம்பளமாக 2500 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸினை இலங்கை அரசாங்கம் வழங்கியது. இங்கிலாந்துப் பிரதமர் மாக்ரட் தச்சரின் பூரண அனுமதியுடனும், ஆசீர்வாதத்துடனும் இங்கிலாந்தின் முன்னாள் படைவீரர்கள் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வந்தனர். 1984 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் பிரித்தானியாவின் பல ஆயுத உற்பத்தியாளர்கள் இலங்கைக்கு பலவிதமான ஆயுதங்களை விற்றிருந்தனர். அவற்றுள் 20 இராணுவக் கவச வாகனங்கள், இரவுநேரப் பார்வை உபகரணங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், கனர இயந்திரத் துப்பாக்கிகள் என்பனவும் அடங்கும். பாக்கிஸ்த்தானும் இலங்கைக்கு இராணுவ பயிற்சிகளையும் பெருமளவு ஆயுதங்களையும் கொடுத்துதவியது. குறிப்பாக சியா உல் ஹக் ஆட்சிக் காலத்திலேயே இது அதிகரித்துக் காணப்பட்டது. இலங்கை இராணுவத்தில் சுமார் 8,000 வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் வெளிநாட்டுக் கூலிப்படையினரால் பயிற்றுவிக்கப்பட்டனர். பாக்கிஸ்த்தானிய இராணுவத்தால் பயிற்றப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் தம்மை அடையாளப்படுத்த கறுப்பு நிற சீருடைகளை அணிந்திருந்தனர். அக்காலத்தில் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான படுகொலைகளைப் புரிந்தவர்களில் இந்தப் படைப்பிரிவே முன்னிலை வகுத்திருந்தது. சம்பிரதாய இராணுவத்தை தமிழர்களை ஒடுக்கும் பாரிய இயந்திரமாகக் கட்டியமைத்த லலித் இராணுவத்தின் போரிடும் திறனை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டிய லலித் அதுலத் முதலி, அதன் எண்ணிக்கையினையும் அதிகரிக்கத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு அமைச்சராக அவர் பதவியேற்றபோது வெறும் 15,000 வீரர்களை மட்டுமே இலங்கை இராணுவம் கொண்டிருந்தது. இவர்களுள் 11,000 வீரர்களைத் தவிர மீதி 4,000 பேரும் தன்னார்வ வீரர்களாகச் செயற்பட்டுவந்தவர்கள். ஆகவே, இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கான மிகக்குறைந்த கல்வித்தகமமை மற்றும் உடற்கட்டுமானம் ஆகியவற்றினை வெகுவாகக் குறைத்த லலித் அதுலத் முதலி, இராணுவத்திற்கான பாரிய ஆட்சேர்ர்பொன்றினை முடுக்கிவிட்டார். கடற்பாதுகாப்புப் பிரதேசம் நடைமுறைக்கு வந்த முதல் வாரத்தில் தமது கட்டளையினை மீறிச் சென்றதாக ஒரு கடற்கலத்தை இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்திருந்தனர். 25 குதிரைவலுக்கொண்ட இரு வெளியக இயந்திரங்களைக் கொண்டிருந்த அந்தப் படகில் தமிழ்நாட்டிற்குப் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில இளைஞர்கள் இருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 பேரில் ஒருவரது வயது வெறும் 16 என்பது குறிப்பிடத் தக்கது. அந்தச் சிறுவனை விசாரிக்க லலித் அதுலத் முதலி பலாலிக்குச் சென்றார். தன்னைப் பலவந்தமாக இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வதாக அந்தச் சிறுவன் லலித்திடம் கூறினான். தான் பயிற்சிக்காக வராவிட்டால் தனது பெற்றோரைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்கள், ஆகவேதான் மிகவும் கொடூரமான இப்பயங்கரவாதிகளுடன் இந்தியாவுக்குப் பயிற்சிக்குச் செல்லச் சம்மதித்தேன் என்றும் அவன் கூறினான். லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை இச்சிறுவன் பெரும் பிரச்சாரப் பொருளாகக் கருதப்பட்டான். தமிழ் பொலீஸ் உளவாளிகளைக் களையெடுத்தல் 1984 ஆம் ஆண்டு வைகாசி 1 ஆம் திகதி கல்முனையில் வைத்து தமிழ் பொலீஸார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்ப் பொலீஸ் விசாரணையாளர்கள் மற்றும் பொலீஸ் உளவாளிகள் ஆகியோரை அழிப்பதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமாக இச்சம்பவம் நடத்தப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்ட முதலாவது பொலீஸாரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மறுநாள், வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேரூந்துத் தரிப்பிடத்தில் இன்னொரு தமிழ்ப் பொலீஸாரான நவரட்ணமும் சுட்டுக் கொல்லப்பட்டார். போராளிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட பொலீஸ் பிரிவில் இயங்கிவந்த நவரட்ணம், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேரூந்துகளில் பயணிக்கும் இளைஞர்களை விசாரிப்பதற்கென்று அன்று பணியில் அமர்த்தப்பட்டிருந்தவர். நவரட்ணத்தைச் சுட்டுவிட்டு போராளிகள் இருவரும் உந்துருளியில் தப்பிச் சென்றிருந்தனர். இருநாட்களுக்குப் பின்னர், வைகாசி 4 ஆம் திகதி சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் பொலீஸாரின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணையாளர் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். 1983 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி சீலனன் மறைவிடம் பற்றிய தகவல்களை குருநகர் இராணுவ முகாமில் இயங்கிய இராணுவப் புலநாய்வுத் துறைக்கு அறியத் தந்து சீலனின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததற்காகவே சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். யாழ்க்குடாநாட்டின் சிவில் நிர்வாகத்தைக் கையக‌ப்படுத்திக்கொண்ட இராணுவம் போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே அதிகரித்துவந்த மோதல்ச் சம்பவங்களால் தமிழ்மக்களின் அபிமானத்தைப் போராளிகள் பெற்றுக்கொள்ளும் நிலைமை உருவானது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சிவில் நிர்வாகம் முற்றாக முடக்கப்பட்டு இராணுவம் நிர்வாகத்தினை முழுமையாகப் பொறுப்பெடுத்துக் கொண்டது. பலாலி கூட்டுப்படைத் தளமும், ஆனையிறவுத் தடைமுகாமும் யாழ்க்குடாநாட்டின் நிர்வாகத்தின் தலைமைச் செயலகங்களாக மாற்றம் பெற்றன. இவ்விரு முகாம்களினதும் பொறுப்பதிகாரிகளே யாழ்க்குடாநாட்டின் நிர்வாகக் கொள்கைகளை வகுத்ததோடு, நிர்வாக நடைமுறைகளையும் முற்றான இராணுவ நலன்கள் சார்ந்து செயற்படுத்தி வந்தனர். இராணுவ தளபதிகளின் தாந்தோன்றித்தனமான அடக்குமுறை - நிர்வாகச் செயற்பாடுகள் சிவில் நிர்வாக அதிகாரிகளை முடக்கிப் போட்டிருந்தது. நிர்வாகத்துறையில் மிகுந்த கல்வித்தகமையினையும், அனுபவத்தினையும் பெற்றிருந்தபோதிலும், மிகக் குறைவான பாடசாலைக் கல்வியினைக் கூட பூர்த்திசெய்திராத‌ இராணுவ அதிகாரிகளின் கட்டளைப்படி, அவர்கள் கூறுவதை காத்திருந்து செவிமடுத்து , நடைமுறைப்படுத்தும் நிலையினை அன்றைய இராணுவ அடக்குமுறை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் ‍ சிங்கள இனங்களுக்கிடையே பிளவை அதிகரிக்கவைத்த விடயங்களில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத் தக்கது.
  18. நவீன துட்டகைமுனுவாக தன்னை வரிந்துகொண்ட லலித் அதுலத் முதலி தமிழ் மன்னனான எல்லாளனைக் கொல்லும் சிங்கள மன்னன் துட்டகைமுனு ‍ மகாவம்சக் கதை 1984 ஆம் ஆண்டு பங்குனி 23 ஆம் திகதி வர்த்தகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சராகவிருந்த லலித் அதுலத் முதலி, தேசியப் பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பாதுகாப்பு அமைச்சராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்டார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியும், சட்டத்தரணியுமாகவிருந்த லலித், ஜெயவர்த்தனவுக்குப் பின்னர் ஜனாதிபதியாகும்ம் கனவிலும் இருந்தவர். ஆகவே, தேசியப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பதவிகள் அவரைத் தேடி வந்தபோது, தனது கனவினை அடையும் பாதையில் ஒரு மைல்க்கல் என்று அதனை இருகரங்களாலும் ஏற்றுக்கொண்டார். பதவியேற்றவுடன் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த அவர், தமிழ்ப் பிரிவினைவாதத்தினை முற்றாக அழிப்பேன் என்று சிங்களவர் முன் சபதம் எடுத்ததோடு மகாவம்சம் எனும் சிங்களவர்களின் சரித்திரக் கதையில் தமிழ் மன்னனான எல்லாளனை சூழ்ச்சியால் வீழ்த்தி, இலங்கை முழுவதையும் சிங்கள ஆதிக்கத்தினுள் கொண்டுவந்த மன்னனான துட்ட கைமுனிவின் புதிய‌ அவதாரம் தானே என்றும் எண்ணிச் செயற்பட்டு வந்தார். தமிழர்களுக்கு எதிரான ஜெயவர்த்தனவின் அரசியல் செயற்பாடுகளை சரியான முறையில் அறிந்துகொள்வதற்கு 80 களில் சிங்கள அரசியல் பயணித்த வழி பற்றி புரிந்துகொள்வது அவசியமானது. 1988 ஆம் ஆண்டு நிறைவிற்கு வரவிருந்த ஜெயவர்த்தனவின் இரண்டாவது பதவிக்காலத்தின் பின்னர் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றுவதற்கு ஜெயாரின் சகாக்களான லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் தனித்தனியே முயற்சித்துக்கொண்டிருந்தனர். ஆகவே, தெற்கில் சிங்கள மக்கள் முன்னிலையில் தாமே சிறந்த சிங்களத் தேசியவாதத் தலைவர் என்று காட்டவேண்டிய தேவை அவர்கள் மூவருக்கும் இருந்தது. இது, அவர்களுக்கிடையே போட்டியினை உருவாக்கியிருந்தது. தமிழர்களின் கனவான தமிழீழத் தனிநாட்டினை உடைக்கவும், தாயகக் கோட்பாட்டிற்கான சாத்தியப்பாட்டினை திட்டமிட்ட நில அபகரிப்புக்கள் மூலம் இல்லாதொழிக்கவும் ஜெயார் மேற்கொண்டுவந்த மூன்றாவது வழித் திட்டத்தின் நடத்துனராக காமிணி திசாநாயக்க செயற்பட்டு வந்திருந்தார். பிரேமதாச தமிழ் மக்களுக்கான சமஷ்ட்டி அடிப்படையிலான சுயாட்சிப் பிராந்தியக் கோரிக்கையினைச் சிங்களத் தரப்பில் முற்றாக எதிர்க்கும் தலைவராக தன்னை முன்னிறுத்து வந்தார். ஜெயவர்த்தவினால் தமிழ்ப் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை இராணுவ ரீதியில் அழிக்கும் செயல்வீரனாக லலித் அதுலத் முதலி தனது புதிய பதவிமூலம் சிங்களவர்கள் முன் வலம்வரத் தொடங்கினார். யாழ்ப்பாணத்தில் லலித் நடத்திய பாதுகாப்புக் கூட்டமும் அவருக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த புலிகளும் பாதுகாப்பு அமைச்சகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவுடன், முப்படைப் பிரதானிகளையும், பொலீஸ் மாதிபரையும் சந்திக்க முக்கிய பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டினார் லலித். அக்கூட்டத்தினை செய்தியாளர் என்கிற முறையில் பதிவுசெய்ய என்னையும் அவர் அழைத்திருந்தார். கூட்டம் முடியும் தறுவாயில் பேசிய லலித், "நாளை நாம் யாழ்ப்பாணம் போகிறோம். ஜனாதிபதி எனக்கு இரண்டு வேலைகளைத் தந்திருக்கிறார். முதலாவது, பயங்கரவாதத்தினை முற்றாகத் தோற்கடிப்பது. இரண்டாவது, சம்பிரதாய இராணுவமாக இயங்கும் எமது இராணுவத்தை போரிடும் சக்தியாக உருமாற்றுவது. கொழும்பில் குந்தியிருந்துகொண்டு இவற்றினை எம்மால் சாதிக்க முடியாது. நாம் போர்க்களத்திற்குச் சென்றாக வேண்டும். நாளை காலை யாழ்ப்பாணத்திலிருந்து, பயங்கரவாதத்தினை முறியடிக்கும் திட்டத்தினை நாம் வகுக்கப்போகிறோம்" என்று கூறினார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அதுலத் முதலியுடன் செல்லும் பத்திரிக்கையாளர் குழாமில் இருந்து நான் விலக்கிக்கொள்ள முடிவெடுத்தேன். லலித் அதுலத் முதலியின் மற்றைய அமைச்சான வர்த்தகம் மற்றும் கப்பற்றுறை பற்றிய செய்திகளையும், கொழும்பில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சி மாநாட்டின் செய்திகளையும் நான் கவனித்துக்கொள்கிறேன் என்று அவரிடம் கூறினேன். தமிழ்ச் செய்தியாளன் என்கிற வகையில் இராணுவத்தினரால் நான் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கட வாய்ப்பிருக்கிறது என்றும், குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்கிற வகையில் எனக்கு உயிர் அச்சுருத்தலும் ஏற்படலாம் என்றும் நான் அவரிடம் கூறினேன். நான் கூறிய காரணங்களை அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். "சபா, நீங்கள் கூறுவது சரிதான்" என்று என்னிடம் கூறினார் அவர். அவர் மீதான மரியாதை எனக்கு இன்னும் அதிகமானது. ஜெயவர்த்தன ஜெனரல் சேபால ஆட்டிகலவை பாதுகாப்புச் செயலாளராகவும் தனது புத்திரன் ரவி ஜயவர்த்தனவை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார் லலித் அதுலத் முதலி. சேபால ஆட்டிகல, ரவி ஜயவர்த்தன, முப்படைகளின் பிரதானிகள் மற்றும் பொலீஸ் மாதிபர் ஆகியோர் லலித்துடன் யாழ்ப்பாணம் சென்றனர். யாழ்ப்பாண மாவட்ட‌த்தில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த உயர் இராணுவ மற்றும் பொலீஸ் அதிகாரிகள் அங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டனர். மாநாடு ஆரம்பித்த 30 நிமிடங்களில் பொலீஸ் மாதிபரிடம் இரகசியமாகப் பேசிய யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர், பருத்தித்துறையில் ஒரு பொலீஸ் சார்ஜண்ட்டும் இரு கொன்ஸ்டபிள்களும் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறினார். அதனை லலித்திடம் தெரிவித்தார் பொலீஸ் மாதிபர். செய்தியைக் கேட்டதும் லலித் அதிர்ச்சியடைந்தார். புலிகள் இந்தத் தாக்குதலை மிகக் கவனமாகத் திட்டமிட்டிருந்தனர். லலித் அதுலத் முதலிக்கு செய்தியொன்றினைச் சொல்வதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. புலிகளின் தாக்குதல்ப் பிரிவைச் சேர்ந்த சில போராளிகள் பொலீஸார் வரும்வரையில் காத்திருந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். தாக்குதலில் ஒரு சார்ஜண்ட்டும், இரு கொன்ஸ்டபிள்களும் அவ்விடத்திலேயே கொல்லப்பட இன்னும் இரு கொன்ஸ்டபிள்களும் பொலீஸ் சாரதியும் காயப்பட்டனர். தாக்குதலின் பின்னர் பொலீஸாரின் ஆயுதங்களைப் புலிகள் எடுத்துச் சென்றிருந்தனர். சுண்ணாகம் சந்தைப் படுகொலை இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதாவது பங்குனி 26 ஆம் திகதி விமானப்படை வீரர் ஒருவர் சுன்னாகத்தில் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பங்குனி 28 ஆம் திகதி தமது சகாவின் கொலைக்கு விமானப்படையினர் பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரிய மரக்கறிச் சந்தையான சுண்ணாகம் சந்தைக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் வந்த விமானப்படையினர் சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு சுன்னாகம் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றனர். சற்று நேரத்தின் பின்னர் அங்கு திரும்பிவந்த அவர்கள் சந்தைப்பகுதியில் குழுமியிருந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். விமானப்படையினர் துப்பாக்கிச் சூட்டில் 9 அப்பாவிகள் கொல்லப்பட மேலும் 50 பேர்வரை காயப்பட்டனர். சந்தையின் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த மணியம் என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அவர்கள் அவ்விடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். யாழ்க்குடாநாடும் அயலில் உள்ள தீவுகளும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கஜபா படைப்பிரிவு மீது யாழ்ப்பாணம் ஆஸ்ப்பத்திரி வீதியில் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதல் புலிகளும் ஏனைய போராளி அமைப்புக்களும் பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் நிலையினை அடைந்திருந்தனர். சுன்னாகத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பதிலடி கொடுக்க புலிகள் முடிவெடுத்தனர். ஆகவே, கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இயங்கும் புகையிரதச் சேவைக்குப் பாதுகாப்பு அளிக்கவென புதிதாக ஆரம்பிக்கப்பட்ட க‌ஜபா படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பிளட்டூன் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. யாழ்தேவி புகையிரதத்திற்குப் பாதுகாப்பளிக்கும் இராணுவத்தினர், புகையிரதம் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற பின்னர், அங்கிருந்து இராணுவ வாகனத் தொடரணியொன்றிலேயே பலாலி நோக்கிச் செல்வது வழமையாக இருந்து வந்தது. யாழ்தேவி யாழ்ப்பாணத்தை இரவு 9:30 மணிக்கு வழமையாக வந்தடையும். அதிலிருந்து இறங்கும் ராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு இராணுவ வாகனத் தொடரணி ஆஸ்ப்பத்திரி வீதி வழியாக யாழ்நகரப் பகுதி நோக்கிச் சென்று பின்னர் பலாலி நோக்கித் திரும்பிப் பயணிப்பதே வழமையானது. சித்திரை 9 ஆம் திகதி இரவு, யாழ்தேவி சற்றுத் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கிய இராணுவத்தினரை ஏற்றிக்கொண்ட மூன்று வாகனங்கள் அடங்கிய தொடரணி, இரவு 9:45 மணிக்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்து கிளம்பி பலாலி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. தொடரணி ஆஸ்ப்பத்திரி வீதியூடாக சென்று கொண்டிருக்கும்போது அடைக்கலமாதா கோயிலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் இராணுவத்தினர் பயணித்த ட்ரக் வண்டி அகப்பட்டு சுமார் 20 மீட்டர்கள் தூக்கி வீசப்பட்டது. அருகிலிருந்த கழிவுநீர் வாய்காலுக்குள் ட்ரக் வண்டி வீழ்ந்திருந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரில் குறைந்தது 10 இராணுவத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். பின்னால் வந்த இராணுவத்தினர் நடப்பதை உணர்ந்துகொள்வதற்கு சில‌ நிமிடங்கள் எடுத்தன. சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல், புலிகளினது முதலாவது கார்க்குண்டுத் தாக்குதல் என்பதோடு, இலங்கையின் சரித்திரத்தில் இடம்பெற்ற முதலாவது அத்தகைய தாக்குதல் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதற்கு முன்னர் பலஸ்த்தீனப் போராளிகளாலும், அய‌ர்லாந்துப் போராளிகளினாலுமே இவ்வகையான கார்க்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இராணுவம் உடனடியாகப் பழிவாங்கும் தாக்குதல்களில் இறங்கியது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியின் அருகில் இருந்த பொதுமக்களின் வீடுகள், கடைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினர் தீமூட்டினர். அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற பொதுமக்கள் பலரைச் சுட்டுக் கொன்றனர். அருகில் இருந்த நாகவிகாரையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினர் கவச வாகனங்களில் அப்பகுதிக்கு வந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகளைப் பாவித்து அடைக்கலமாதா ஆலயத்தின்மீதும், அங்கிருந்த யேசுநாதரின் சொரூபத்தின்மீதும் தாக்குதல் நடத்தினர். யாழ்ப்பாண சிங்கள மகாவித்தியாலய எரிப்பும், நாகவிகாரை அழிப்பும் கத்தோலிக்க ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அதிருப்தியடைந்த யாழ்ப்பாணக் கத்தோலிக்கர்கள் மறுநாள், சித்திரை 10 ஆம் திகதி யாழ்க்குடாநாட்டின் கரையோரப்பகுதியெங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு அடைக்கலமாதா ஆலயப் பகுதிக்கு வந்த மக்கள் கூட்டமொன்று அருகில் இருந்த, இராணுவத்தினர் தங்குமிடமாகப் பாவிக்கும் சிங்கள மகாவித்தியாலயத்திற்குத் தீமூட்டினர். இராணுவத்தினரின் தாக்குதலினால் கோபமடைந்திருந்த இன்னொரு மக்கள் கூட்டம் அருகிலிருந்த நாகவிகாரைக்குச் சென்று அங்கிருந்த கட்டடங்களை அலவாங்குகளாலும், இரும்புக் கம்பிகளாலும் அடித்து நொறுக்கினர். பலர் தமது கைகளாலேயே அவற்றினை உடைத்தனர். இச்சம்பவம் நடைபெற்று இருவாரங்களின் பின்னர் நாகவிகாரையின் பிரதான பிக்குவை யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தேன். தனது விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் அது நிலைகுலைந்து போயிருக்கும் புகைப்படங்களை அவர் என்னிடம் காண்பித்தார். புலிகளே இத்தாக்குதலைச் செய்தார்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.
  19. குழந்தைகளின் கால்களில் அவர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது . அவர்கள் இறந்தால் அடையாளம் காண்பதற்காகவாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.