Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31977
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8907
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/29/23 in all areas

  1. அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது வட்டத்திற்குள் கொண்டுவரும்) இருக்கிறதாக பார்க்கிறேன். அவரது வெற்றியை நிதானமாகக் கொண்டாடலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் நடப்பவற்றைப் பார்க்கையில் வெறுப்பூட்டும் அளவிற்கு போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேரில் வைத்து இழுக்கவில்லை. அது மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது. அதனையும் செய்துவிட்டால் அவரைக் கடவுழுக்கு இணையாக்கிவிடுவார்கள்.
  2. அலர்ஜி என்றால் என்ன? என்று முதலில் பார்த்துவிடுவோம். எமது உடலினுள் செல்லும் ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தொடுகையுறும் பொருளுக்கு எமது உடலால் காட்டப்படும் செயற்பாடுதான் இந்த ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை அதாவது அலெர்ஜி எதற்காகவேண்டுமானாலும் ஒருவருக்கு வரலாம் ஆனால் அது வரும்வரை அந்த நபருக்கு எனக்கு இது ஒவ்வாதபொருள் என்பது தெரியவராது. ஒருவருக்கு பூனையின் முடி, நாயின் முடி, மகரந்தமணிகள், தூசுக்கள், ஹெயார் டை என எதனாலும் இந்த ஒவ்வாமை வரலாம், சிலருக்கு நண்டுக்கறி அல்லது இறால் சாப்பிட்டால் கை,கால் தடித்து உதடுகள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும் இதேபோல்தான் எதற்குவேண்டுமானாலும் ஒவ்வாமைவரலாம். இந்த ஒவ்வாமை வைத்தியசாலையில் எமக்கு ஏற்றப்படும் மருந்துகளாலும் வரலாம். வழக்கமாக நோய்க்கு ஏற்றப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு சிலருக்கு ஒவ்வாமை வரலாம் இவளவு ஏன் சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பனடோலுக்குகூட சிலருக்கு அலர்ஜி ரியாக்ஸன் வரலாம்/ வந்திருக்கின்றது ஏன் எறும்புகடித்தால்கூட இது வரலாம். முந்தைய பதிவுக்கு இங்கே கிளிக் உண்மையில் குளுக்கோஸ்தான் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறதா? அண்டிபயோட்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. நோய்க்கிருமிகளின் வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப இந்த அண்டிப்யோட்டிக் மருந்துகள் வகைப்படுத்தப்படும். ஒருகிருமிக்கூட்டத்தை அழிப்பதற்கு அதைத்தாக்கக்கூடிய அண்டிபயோட்டிக்கை கொடுத்தால் மட்டுமே அழிக்கமுடியும் அதைவிட்டு வேறு ஒன்றை நோயாளிக்குக்கொடுப்பதும் அதை நிலத்தில் ஊற்றுவதும் ஒன்றுதான். ஒவ்வாமையை கண்டறிவது எப்படி? கடி/ சொறி ஏற்படுதல், கைகால்கள் தடிப்படைதல், உடலின் பகுதிகளில் சிவப்பு நிற தழும்புகாள் தோன்றும், மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும், இதயத்துடிப்பு குறைவடையும், வயிற்றுவலி, சத்தி ஏற்படும், அதிக வியர்வை, பய உணர்வு ஏற்படும், உதடு மற்றும் நாக்கு வீக்கமடையும், வயிற்றோட்டம் ஏற்படலாம். மருந்து ஏற்றப்பட்டதும் அல்லது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கையாளும்போது மேலே கூறியவற்றுள் ஏதாவது ஒன்றோ அல்லது ஏனைய அறிகுறிகளோ தென்பட்டால் உங்களுக்கு அந்த மருந்துக்கோ அல்லது பொருள்ளுக்கோ ஒவ்வாமை இருக்கின்றது என்று அர்த்தம். தோல் தடிப்படைதல்- Urticaria கண்மடல்கள் வீக்கமடைதல்- Angioedema மூச்செடுப்பதில் சிரமம் உணவுக்கு ஏற்படும் ஒவ்வாமையால் ஏற்படும் கடிசொறியால் அவளவு பாதிப்பில்லை ஆனால் கண்மடல்கள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாகவைத்தியசாலைக்கு செல்வது அவசியம், உணவு ஒவ்வாமைக்கும், மருந்துகளால் ஏற்ப்படும் ஒவ்வாமையாக இருந்தாலும் சரியான நேரத்திற்குள் மருத்துவசிகிச்சையை பெறாவிடில் நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம். ஒவ்வாமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகின்றது? ஓவ்வாமைக்கு எவ்வாறு மருத்துவம் செய்யவேண்டுமென்றவரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு சென்றதும் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு நோயாளிக்கு உடனடியாக ஒக்சிசன் வழங்கப்படும். தீவிர ஒவ்வாமையில் குறட்டைச்சத்தம் போன்ற ஒலியை மயக்க நிலையில் இருக்கும் நோயாளி ஏற்படுத்திக்கொண்டிருப்பார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய்வழியாக குழாயை பொருத்தி செயற்கைச்சுவாசத்தை ஏற்படுத்துவார்கள் ( Intubation). இதற்கான தேவையில்லாத சந்தர்ப்பத்தில் அதாவது நோயாளியின் தீவிரம் குறைவாக இருந்தால் ஒக்ஸிசஸ் மாஸ் பொருத்தப்படும் அதோடு Asthalin ஆவி பிடிக்கச்செய்வார்கள். Adrenalin எனப்படும் மருந்து கையில் நேரடியாக ஏற்றப்படும் (IM Intra muscular ), கையில்Cannula ஏற்றப்பட்டு Hydrocortisone எனப்படும் மருந்து வழங்கப்படும். Chlorphenamine எனப்படும் பிரிட்டோன் கனுலா ஊடாக வழங்கப்படும். இவற்றை தனியே ஒரு வைத்தியரால் செய்யமுடியாது குறைந்தது 3 தாதியர்களாவது தேவை, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் மிகக்குற்கிய காலத்தில் செய்துமுடிக்கப்படவேண்டும். நோயாளியின் இரத்த அழுத்தம் உடனடியாக குறைவடையலாம். இதற்காக சேலையின் கனூலாஊடாக விரைவாக வழங்குவார்கள், விரைவாக வழங்கலை போலஸ் என்று அழைப்பார்கள். இதன் பின்னர் ECG எடுக்கப்படும், சிலருக்கு ஒவ்வாமையால் நெஞ்சுவலி கூட ஏற்படலாம். வெளி நாடுகளில் Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில் ஊசியைப்போட்டுக்கொள்ளமுடியும். ஒவ்வாமை ஏற்பட்டு அம்புலன்ஸ் வருவதற்குள் ஏற்படும் மரணத்தை இது கூடியவரையில் தடுக்க உதவுகின்றது. வெளி நாடுகளில் ஒவ்வாமை இருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதைப்பயன்படுத்துகின்றார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு ஏற்றப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மேலே கூறிய அனைத்தையும் உடனே செய்வார்கள், செய்யவேண்டும். அப்படியானால் வைத்தியசாலையில் ஏற்றப்படும் மருந்தால் ஏற்படும் அலர்ஜியை முன்பே கண்டறியவழிகள் இருக்கின்றதா? அப்படியானால் ஏன் மரணங்கள் சம்பவிக்கின்றன? அடுத்தபதிவில் பார்ப்போம்... எனது இணையத்தள முகவரி https://www.manithanfacts.com/2023/12/allergy anaphylaxis management.html
  3. செலென்ஸ்கிக்கும் உக்ரைனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அதோடு இஸ்திரேலி சியோனிஸ்ட்டுக்களுக்கும் யூதர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்றும் தேடி பாருங்கள். ரஸ்யா உக்ரைன் விரும்பினாலும் போரினால் கோடிக்கணக்கான பணத்தை லாபம் பார்க்கும் கூட்டம் ஏன் போரை நிறுத்தவேண்டும்? இந்தியாவுக்கும் மொக்கு மோடிக்கும் கொம்பு சீவி இப்போது லாபகமாக இந்தியாவையும் போருக்கு இழுத்து செல்லும் வேலை மிக நன்றாக நடக்கிறது ஹிந்தியாவை பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத வேலை என்றாலும் சுற்றி எதிரிகளை உருவாக்கி விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு ஆயுதங்கள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு காலை எழுந்தால் காலைக்கடன் முடிக்க கூட வசதி இல்லை. இத்தாலிக்கும் குளை அடித்து இப்போ பெரும் ஆயுத வியாபாரம் செய்து நீங்கள் துருக்கியை விட பலமாகிக்கொண்டு இருக்கிறீர்கள் அதுதான் பாதுகாப்பு என்று நம்பவைத்து ஆயுதம் விற்கிறார்கள். தைவானை கைகாட்டி பிலிப்பைன்ஸ் ஜப்பானுக்கு விற்கக்கூடிய இரும்பெல்லாம் விற்கப்படுகிறது உங்கள் வரிப்பணத்திற்கும் செலவுவைக்க பல பல பெயர்களில் நேவி கப்பல் ஓடடம் நடக்கிறது இவற்றையெல்லாம் பின்தொடர்ந்தால் ....... ஒரே ஒரு குழுதான் கடந்த 100 வருடமாக எந்த மனித நேயமுமற்று மக்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது அவர்கள் ஒரே இலக்கு பணம் அதன்மூலம் அதிகாரம். இன்று இஸ்திரேல் செய்துகொண்டு இருக்கும் அக்கிரமத்தை ரஸ்யா நினைத்திருப்பின் கிவையே தரைமடடம் ஆக்கி இருப்பார்கள் கைப்பற்றிய கீவ் அணுமின் நிலையத்தை கூட விட்டுவிட்டு பின்வாங்கினார்கள் உக்ரைனில் இருப்பவர்களும் பாதிக்கு மேல் ரஷ்யர்கள்தான் டிசம்பர் தொடக்கத்தில் செலென்ஸ்கி (25ஆம் புலிகேசி) இங்கு அமேரிக்காவுக்கு வந்தபோது 10 அதி உயர் விமான எதிர்ப்பு மிஸைல் ( பல மில்லியன் பெறுமதியான) கொடுத்து அனுப்பினார்கள் ரசியர்கள் 8 ட்ரான்களை வேண்டும் என்றே அனுப்பி 8 மிசைல்களை வேண்டும் என்றே அடிக்க வைத்து வீணடித்து விட்டார்கள் பல ஆயிரம் மில்லியன்கள் ஒரு வாரத்தில் புகையாகி போனதில் எனது வரிப்பணமும் உண்டு என்பதுதான் எனக்கு உறுத்தல் ஆன விடயம்
  4. ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.
  5. கல்வி பின்புலத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கில்மிஷாவின் திறமை இந்த ஆடம்பர வரவேற்பாலும் மீடியாக்களின் அதீத கவனிப்பாலும் குன்றிவிடக்கூடாது எனும் அக்கறை எமக்கு இருப்பது போல், அவரது பெற்றோர்களுக்கும் இருக்கும் என நம்புகின்றேன்.
  6. அண்மையில் University of Alberta வின் முன்னால் President மற்றும் Vice Chancellor ஆக இருந்த Dr.திருமதி இந்திரா சமரவிக்கிரம அவர்கள் இன்னொரு வெற்றி பெற்ற பெண்ணாகிய Martha Piper என்பவரோடு சேர்ந்து எழுதிய Lessons On Leadership From Two Women Who Went First என்ற நூலை வாசிக்க கிடைத்தது. வாழ்வில் உண்மையான வெற்றியை அடைய முயலும் நபர்கள் பிள்ளைகள் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அது. extra curricular activities என்பது முக்கியம் தான் ஆனால் அது Academically எமக்கு உதவ வேண்டும். கில்மிஷா இந்த பாராடுக்களை புறம் தள்ளி விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாது விடில் விட்டில் பூச்சிகள் போல் இந்த பெயர் புகழ் எல்லாம் மறைந்து விடும்.
  7. தானே அமைத்த சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப பெளத்த மகா சங்கத்தை நாடிய ஜெயவர்த்தன‌ தில்லியில் தான் ஒத்துக்கொண்ட பரிந்துரைகளை கைகழுவி விட ஜெயார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும், ஆனால் ஜெயாரை நிர்ப்பந்தித்து அவற்றை மீள சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்க பார்த்தசாரதி மேற்கொண்ட முயற்சியும் சர்வகட்சி மாநாட்டின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களை மாநாடு ஆரம்பிக்கு முன்னரே ஏற்படுத்தியிருந்தன. இதனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகுந்த வருத்தம் அடைந்திருந்தது. மேலும் எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள இனவாதக் கட்சியான மகஜன‌ எக்சத் பெரமுன ஆகிய‌னவவும் இதுகுறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தன. தை மாதம் 7 ஆம் திகதி கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணைப்பு "சி" குறித்து ஜெயாரிடம் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தது. பல மத்திய குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை ஜெயார் தம்மை ஏமாற்றவே முனைகிறார் என்று நம்பினர். கூட்டத்தின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிறிமா, "எனது கோரிக்கையின் பின்னரே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்த ஜெயார், தானே அதுபற்றி தீர்மானம் எடுத்ததாக கூறினார். தற்போது அனைத்துக் கட்சிகளும் தமது பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கவேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அவரது ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தனது பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. நாம் முன்வைக்கும் பரிந்துரைகளின்படி தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கிவிட்டு பின்னர் எதிர்க்கட்சியின் கோரிக்கையின்படியே நான் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினேன் என்று கூறப்போகிறார். ஆகவே, முதலில் ஜனாதிபதியும் அவரது கட்சியும் தமது பரிந்துரைகளை முன்வைக்கட்டும்" என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவரான அநுர பேசுகையில், "பார்த்தசாரதியுடன் தானே செய்துகொண்ட ஒப்பந்தத்தை பின்னர் செய்யவில்லை என்று ஜெயார் கூறியிருப்பதன் மூலம், அவர் பார்த்தசாரதியை மட்டும் முட்டாளாக்க எத்தனிக்கவில்லை, முழு நாட்டையுமே முட்டாளாக்க முனைந்திருக்கிறார்" என்று கூறினார். வழமை போலவே சுதந்திரக் கட்சியை வீழ்த்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார் ஜெயார். பெளத்த உச்ச பீடமான மகா சங்க‌த்துடன் கூட்டமொன்றினை தை 8 ஆம் திகதி ஜெயார் நடத்தினார். நாட்டிலுள்ள உயர் பெளத்த பிக்குகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அஸ்கிரிய பீடத்தின் பலிபானே சந்தானந்த மகா நாயக்க தேரை, மதிகே பன்னசீக தேரை, தெலெல்ல தம்மானந்த தேரை, வல்பொல ராகுல தேரை, கென்பிடிகெதர ஞானவன்ச தேரை, பெல்லாவில விமலரத்ண தேரை மற்றும் மாதுலுவே சோபித தேரை ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பெளத்த பிக்குகள் என்பதுடன் இவர்கள் அனைவரும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த இனவாதிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கூட்டத்தில் பேசிய தேரைகள் அனைவரும் தாம் இணைப்பு "சி" யினை எதிர்ப்பதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் தமிழர்களுக்கு வழங்க அரசாங்கம் முயலும் பட்சத்தில் தாம் அதனைத் தடுத்து நிறுத்திவிடப்போவதாகவும் எச்சரித்தனர். தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை எனும் அறிவிப்பினை சுதந்திரக் கட்சியும், மகஜன‌ எக்சத் பெரமுன கட்சியும் தை மாதம் 8 ஆம் திகதி அறிவித்தன. தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைப்பு "சி" குறித்த விபரங்களை ஜெயார் வழங்கத் தவறியமையை தமது பங்கேற்காமைக்கான காரணமாக அவை முன்வைத்திருந்தன. யாழ்ப்பாணம் சென்ற‌ அமிர் தலைமையிலான குழுவிற்கு நேர்ந்த அவமானம் சமாதான முயற்சிகளுக்கான ஒரு படிக்கல்லாக கருதப்பட்ட சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப சிங்கள கடும்போக்குவாதிகளை ஜெயார் உசுப்பிவிட்டிருக்க, ஏற்படவிருக்கும் வன்முறைகச் சுழலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். தை மாதம் 8 ஆம் திகதி தமது ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்றனர். சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுக்கக் கூடாது எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அவர்களை யாழ்ப்பாணத்தில் வரவேற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் சென்றபோது மாணவர்கள் அவர்களைநோக்கி கூச்சல் எழுப்பத் தொடங்கினர். அமிர்தலிங்கத்திற்கும் அவரது சகக்களுக்கும் யாழ்ப்பாணத்தில் கிடைத்த வரவேற்புப்பற்றி கொழும்பின் சிங்கள, ஆங்கில‌ ஊடகங்கள் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டன. அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பிற்கு அவர் பொறுத்தமானவர்தான் என்று அவை எள்ளி நகையாடின. ஆனால், யாழ்ப்பாண மக்கள் எக்காரணத்திற்காக முன்னணியின் தலைவர்களை அவ்வாறு வரவேற்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இதுகுறித்த செய்தியொன்றினை வெளியிட்ட தி ஐலண்ட் பத்திரிக்கை தை மாதம் 10 ஆம் திகதி அமிர்தலிங்கம் சர்வக்ட்சி மாநாட்டில் பங்கேற்பது போன்ற கேலிச் சித்திரத்தையும் வரைந்திருந்தது. அக்கேலிச் சித்திரத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ஆயுதம் தரித்த போராளிகள் மாநாட்டு மண்டபத்தில் நுழைவது போன்று வரையப்பட்டிருந்தது. சென்னையில் அமிர்தலிங்கத்திடம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்த போராளிகள், அவரை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டிருந்தன. ஆனால் கொழும்பிலோ, சிங்களப் பத்திரிக்கைகள் போராளிகளை சர்வகட்சிக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி அழைத்துவருவதாக கேலிச் சித்திரம் வரைந்து மகிழ்ந்தன. சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் விரும்பியமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர் மீது தமது அதிருப்தியைக் காண்பித்திருந்தார்கள். ஆனால், சிங்களவர்களின் பத்திரிக்கைகளோ அமிர்தலிங்கம் போராளிகளை கூட்டத்திற்கு அழைத்துவர யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக செய்தியும், கேலிச் சித்திரமும் வெளியிட்டிருந்தன. தமிழர்களின் பிரச்சினை குறித்து எவ்வகையான புரிதலினைச் சிங்களப் பத்திரிக்கைகள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். யாழ்ப்பாணத் தமிழர்கள் முன் நாயகனாகவிருந்து துரோகியாக மாறிய அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நான் அமிர்தலிங்கத்தைச் சந்தித்தேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக மாநாட்டு நிகழ்வை செய்தியாக்க நான் அங்கு சென்றிருந்தேன். யாழ்ப்பாணத்தில் தமக்கு நேர்ந்த அவமானம் குறித்து அவர்கள் வருத்தத்துடன் காணப்பட்டனர். "எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கான நாயகனாக நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், தற்போது அவர்கள் என்னை துரோகி என்று அழைக்கிறார்கள். அவர்கள் போகவிருக்கும் பாதை எனது மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் கொண்டுவரப்போகிறது. அதைத் தடுக்கவே நான் முயல்கிறேன். இந்த முயற்சியில் ஜெயவர்த்தன எனக்கு உதவுவார் என்று நான் நம்பவில்லை. என்னைப் பலவீனப்படுத்தி, போராளிகளை பலமாக்கி, பின்னர் இராணுவ ரீதியில் அவர்களை முற்றாக அழித்துவிடவே அவர் கங்கணம் கட்டியிருக்கிறார்" என்று அமிர்தலிங்கம் என்னிடம் வருத்தத்துடன் கூறினார். ஜெயவர்த்தனவின் திட்டமும் அதுதான். தனது திட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ளவே சர்வகட்சி மாநாட்டினை அவர் பயன்படுத்த முடிவெடுத்தார். இத்திட்டத்திற்காக சுமார் ஒருவருட காலத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. தை மாதம் 10 ஆம் திகதி முதல் மார்கழி 21 வரை சர்வகட்சி மாநாடு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எதனையும் வழங்காது அவரால் இழுத்துச் செல்லப்பட்டது. இக்காலத்தில் தனது இராணுவத்தை அவர் பலப்படுத்தினார். தமிழர் தாயகத்தில் பாரிய அளவில் சிங்கள‌ குடியேற்றங்களை முடுக்கிவிட்டார்.
  8. இந்த யுத்தம் தொடர்பான எனது அடிப்படை புரிதலில் மாற்றமில்லை மருதர். உக்ரேன் இறையாண்மையுள்ள ஒரு நாடு. ரஸ்ஸிய நடத்துவது ஆக்கிரமிப்பு என்பதில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. எனது அக்கறையெல்லாம் இருபக்கமும் நடக்கும் அழிவுதான். அதானால்த்தான் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன். இந்த யுத்தத்தைப் பாவித்து தமது சொந்த நலன்களை அடைந்துகொள்ள விரும்பும் மேற்குலகாகட்டும், அல்லது ரஸ்ஸியாவிற்கு ஆயுதம் விற்கும் வடகொரியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளாகட்டும், இவை எதுவுமே ஆக்கிரமிக்கப்படும் உக்ரேனியர்களுக்காகவோ அல்லது கொல்லப்படும் ரஸ்ஸிய வீரர்களுக்காகவோ அனுதாபப்படவில்லை. பல வியாபாரிகளின் நலன்களுக்காகவும், ஒரு அதிகாரி வெறி பிடித்த சர்வாதிகாரிக்காகவும் அப்பாவி உக்ரேனியர்களும், ரஸ்ஸிய வீரர்களும் மாண்டு வருகிறார்கள்.
  9. தமிழ் சிறி இப்படியான தேவை இல்லாத செய்திகளை இங்கு பரப்பாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. எனக்கு உயர் ரத்த நோய் உருவாக கூடிய நிலைமையை தயவு செய்து உருவாக்க வேண்டாம்.
  10. நத்தாரில் இருந்து புதுவருடம் வரை சைட்டிஷ் பிரியர்களை நினைத்துத்தான் இணைத்தேன்.......ஏதோ நம்மாளான தொண்டு .......... 😂
  11. பார்க்கவும் வடிவாய் இருக்கு......சாப்பிடவும் நல்லாயிருக்கும்.......தண்ணியடிக்கிற வாய்க்கு அந்த மாதிரியிருக்கும்.....ஆனால் இரத்தக்குழாய்கள் அடைக்கவும் நல்ல சாமான்.....இப்பிடியான பண்டி வத்தல் வார்கள் சாப்பிட்டால் நாள் முழுக்க ஓடி ஆடி வேலை செய்து கொண்டே இருக்கணும்.😂 பதிவிற்கு நன்றி சுவியர்...👍🏼
  12. வணக்கம் வாத்தியார்........! அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.. தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா.. பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.. வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா.. பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா......! --- அண்ணன் என்னடா தம்பி என்னடா ---
  13. சில்லி & போர்க் பொரியல் ......அருமையான உணவு ......! 👍
  14. விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் பட மூலாதாரம்,VIJAYAKATNTH FACEBOOK 28 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு, விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை விஜயகாந்த் மறைவையொட்டி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரோடு இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்ற அவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து தனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைத்தள பக்கங்களில் ‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே…’ என்ற வாசகங்களோடு விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை செலுத்தும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. படக்குறிப்பு, மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த் உரை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்த பிறகு தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியுள்ளார். இதில் முன்வந்து நின்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அரசு மரியாதை செய்ய ஏற்பாடு செய்ததற்கும், தீவுத்திடலில் அஞ்சலிக்கு இடம் ஒதுக்கி கொடுத்ததற்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் இது போல் எந்த தலைவருக்கும் கூட்டம் கூடியதில்லை. இரண்டு நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். “இந்த சோகமான நாளில் தலைவரின் கனவை வெற்றிபெற செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்த நாள்தான் தேமுதிகவின் வெற்றி நாள். தேமுதிக அலுவலகத்தில் தலைவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் விளக்கு ஏற்றப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். '54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்' "தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்" என்று தயாரிப்பாளர் சிவா ஒருமுறை கூறியிருக்கிறார். "சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் டி. சிவா. https://www.bbc.com/tamil/articles/ce5j35dgpv1o
  15. எழுதுபவர்களுக்கு சரி அண்ணை. செய்தியை இணைப்பது பற்றி கூறினேன்.
  16. நன்றாய் சொன்னீர்கள். படித்த நல்ல பின்புலம் உள்ள பெற்றோர் இதனை ஊக்குவிக்க மாட்டினம்.
  17. சும்மா சரக்கை அடித்துவிட்டு குப்புற படுக்க முடியாது. அடுத்தடுத்து தேர்தல்கள் வரும். வாக்குகள் கள்ளவாக்குகள் எல்லாம் போட தயாராகணும்.
  18. ஒப்பிட தாங்கள் விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து இறந்த மனிதனை இங்கே கொண்டுவருவதைத் தவிர்த்திருக்கலாம்.
  19. மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம்.
  20. தீர்வு வரும் போலைதான் கிடக்கு. இங்கு எல்லாத்தையும்... விட்டுட்டு, ஊருக்கு குடும்பத்தோடை One way ticket போடப் போறேன். 😂
  21. இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து சர்வகட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைத்த பரிந்துரைகள் ‍ இணைப்பு - சி தில்லியில் கலந்தாலோசிக்கப்பட்ட பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைப்பு "சி" எனும் பெயரில் அனுப்பப்பட்டது. தில்லியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணைப்பு "சி" பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளான இவை, இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையினையும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. சர்வகட்சி மாநாடில் பேசப்படப்போகும் விடயங்கள் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தன. 1. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு பிராந்திய சபையாக ஒருங்கிணைவதற்கு அந்தந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் சம்மதமும், அம்மாவட்டங்களில் நடத்தப்படும் சர்வஜன் வாக்கெடுப்பும் அவசியமாகும். 2.வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏதாவது ஒன்று உறுப்பினர்களின் விலகினால் ஸ்தபிதம் அடையுமிடத்து, அம்மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை இணைத்துக் கொள்ளப்படலாம். 3. உத்தேச பிராந்தியம் ஒவ்வொன்றும் விரும்பினால் தமக்கான பிராந்திய சபை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும். இப்பிராந்தியத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி இப்பிராந்தியத்தின் முதலமைச்சராக நியமிப்பார். இப்பிராந்தியத்தின் அதிகார சபைக்கான அமைச்சர்களை முதலைமைச்சரே நியமிப்பார். 4. நாட்டின் இறையாண்மை, பூகோள ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட, பிராந்திய அதிகார சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஏனைய விடயங்கள் யாவும் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பொறுப்பில் இருக்கும். 5. பிராந்தியங்களின் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை அப்பிராந்தியங்களே உருவாக்க முடியும். பிராந்தியங்களுக்கான சட்டம் ஒழுங்கு, சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், நிலக் கொள்கை ஆகிய விடயங்கள் ஆகியவை பிராந்திய சபைகளினால் உருவாக்கப்படும். 6. மேலும், பிராந்தியங்களுக்கான வரி அறவிடல், சேவைகளுக்கான கட்டணம், பிராந்திய அபிவிருத்திக்கான கடன்களை மக்களுக்கு வழங்குதல், இக்கடன்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து ஒழுங்குசெய்தல் ஆகியவை பிராந்திய சபைகளால் மேற்கொள்ளப்படும். மத்திய அரசினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு பரிந்துரைக்கப்படும். 7. பிராந்தியங்கள் தமக்கான உயர் நீதிமன்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீடு தொடர்பான விடயங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 8. ஒவ்வொரு பிராந்திய சபையும் தமக்கான அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவை அலுவலர்களை அப்பிராந்தியத்தில் இருந்து நியமிக்கும். வேறு பிராந்திய சபைகளில் வதியும் அதிகாரிகள் அலுவலர்களையும் ஒரு பிராந்திய சபை சேவைக்கு அமர்த்திக் கொள்ளலாம். பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காகவும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகவும் பிராந்திய சபைகள் தாம் உருவாக்கும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவியை நாட முடியும். 9. நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையில் அமர்த்தப்படும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இப்பிராந்தியங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 10. திருகோணமலை துறைமுகத்தினை மத்திய அரசினால் அமைக்கப்படும் துறைமுக அதிகார சபை பொறுப்பில் வைத்துக்கொள்ளும். துறைமுகமும் அதுஅமைந்திருக்கும் பிரதேசமும் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இச்சபைக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றி விரிவாக பின்னர் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும். 11. நிலப்பங்கீடு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று அமைக்கப்படுவதோடு, இதன் அடிப்படையிலேயே குடியேற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து ஏனைய குடியேற்றத் திட்டங்கள் அனைத்துக்குமான நிலப் பங்கீடு அந்தந்த பகுதிகளின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவும், ஏற்கனவே இருக்கும் இனப்பரம்பலினை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும். 12. அரசியலமைப்பிற்கு அமைவாக உத்தியோகபூர்வ மொழியான சிங்களமும், தேசிய மொழியான தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்ப்படுத்தப்படும். இதேவகையான சட்டங்கள் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றிற்கும் நடைமுறைப்படுத்தப்படும். 13. சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காகவும், இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான செயலகத்தினையும், சட்ட அலுவலக வசதிகளையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். 14. சர்வகட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரி சபையினாலும், ஏனைய கட்சிகளின் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படும்.
  22. இந்த திரியில். முதலிலிருந்து வாசித்து பாருங்கள் அவரை அப்படி எழுத தூண்டியது நீங்கள் தான் என்பது புரியும் இது என்னுடைய கணிப்பு துணிவு இருந்தால் இல்லை என்று நிறுவுங்கள் பார்க்கலாம், ஒவ்வொரு திரியிலும். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கேட்டு கேட்டு தமிழர்கள் தீர்வுகள் என்பதை போட்டு சிதைக்கப்பட்டுவிட்டது,..இது உங்களுடைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் ஏன் இப்படி கேட்கவேண்டும் .??? நாங்கள் சிறுபான்மையினர் என்பதால் நாங்கள் ஆளப்படவேண்டியவர்களாகவும் உரிமைகள் குறைந்தவர்களாகவும் இருக்க வேண்டுமா??? ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மையானவர்கள் அதிக உரிமைகள் உடையவர்கள் சிறுபான்மையினர் குறைந்த உரிமைகள் உடையவர்கள் இதுவா உங்கள் கொள்கை ?? இன்றைக்கு தமிழர்களின் தீர்வுகள் குறைத்து குறைத்து இல்லாமல் போய்விட்டது தமிழர்கள் தான் இப்படி செய்தார்கள் மற்றும் சிங்கள தலைவர்கள் தீர்வுகளுடன். ...தமிழருக்கு உரிய உயர்ந்த தீர்வுகள் வைத்து கொண்டு யாரிடம் கொடுப்பது என்று அலைவது போல ஒரு விம்பத்தை கானல்நீரை கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் தமிழருக்கு நீங்கள் விரும்பும் குறைந்த பட்ச தீர்வுகள் வழங்க வேண்டும் என்று பகிங்கரமாக சொன்ன உறுதி அளித்த ஒரு சிங்களத்தலைவரை,.ஒரேயொரு சிங்களத்தலைவரை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம். முடியாது ஒருபோதும் முடியாது எவராலும் முடியாது.... இப்படி ஒரு சிங்களத்தலவர் இல்லாத போது தமிழர்கள் எப்படி தீர்வுகள் பெற முடியும்???? தமிழருக்கு எப்படி நேர்மையான தலைவர் இருந்தாலும் கூட தீர்வுகள் பெற முடியாது . . ...நன்றி வணக்கம் 🙏
  23. போதமும் காணாத போதம் – 11 இருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. “அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார். “பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது. “எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார். “அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி. அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன். “இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா. “ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்” “இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.” “எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ” “முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள் காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா. பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம். “எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார். “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா. “எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?” “உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின. கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை. “மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்” “சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்” “மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.” “நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள். கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார். “மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா” “என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ” “ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்” “பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்” “அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்” “அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்” நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார். “பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே” “இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்” “சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.” “அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ” “நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா” “நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார். “இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள் “இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர். “தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு” வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வே* கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான். “காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது. சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார். அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள். சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர். வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன். “மாமா, அவர்களை நீங்கள் சுடேல்லையோ?” “சிறுவா, மாமாவோட பேர் என்ன” “காந்தி” “மாமா, பொய் சொல்லுவேனா” “இல்லை. ஆனால் சுடுவியள் தானே” மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார். “காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார். சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது. கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன். எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு. https://akaramuthalvan.com/?p=1445
  24. ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம் இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந்தார் அந்த வீடியோ வைரலாகியது இதன்பின்னர்தான் உலகிற்கு இப்படி ஒரு நகரம் இருப்பதே தெரியவந்துள்ளது இந்த நகரத்தின் பெயர் விஸ்டர் இந்த நகரம் அலாஸ்காவில் அமைந்திருக்கின்றது அலாஸ்கா இரத்தம் உறையும் அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசம் இந்த நகரத்தில் ஒட்டுமொத்தமாகவே 220 சிட்டிசன்கள்தான் வசிக்கின்றார்கள் அவர்கள் சாப்பிங்க்,தியேட்டர்,ஸ்கூல் ஆபிஸ் என எங்குசெல்வது என்றாலும் லிப்டில் இருக்கும் நம்பர்களை அழுத்தினால்போதுமானது.14 மாடிகளைக்கொண்டிருக்கும் பெஜிச் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தினுள்தான் நகரத்தில் வசிப்பருக்கு பெரும்பாலும் தேவையான அனைத்துமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போலீஸ் ஸ்டேசன் 2 சூப்பர் மார்க்கெட்கள்,இண்டோர் பிளேகிரவுண்ட்,ஆபிஸ்,லவுண்ரி,போஸ்ட் ஆபிஸ் அதோடு கிளினிக் இதைவிட பேஸ்மெண்டில் ஒரு சர்ச்சும் இருக்கின்றது.இதனால் இங்குவசிக்கும் சிட்டிசன்கள் மாதக்கணக்காக வெளியே செல்லாமல் இதனுள்ளேயே இருப்பார்கள்.அதிகமான குளிர்காரணமாக இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு இருக்கும் ஒரே ஒரு வீதியும் பனியால் மூடப்பட்டுவிடும் எனவே இவர்கள் இந்தக்கட்டிடத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை தொடருகின்றார்கள்.கோடைகாலங்களில் மீன் பிடித்தல்தான் இவர்களது தொழிலாக இருக்கின்றது அதிகமானவர்கள் கோடைகாலத்தில் மீன் பிடித்தலையே தொழிலாக செய்கின்றார்கள்.இந்த நகரத்திற்கு அரசு எந்த ஒரு பப்பிளிக் ட்ரான்ஸ்போற்ட்டையும் உருவாக்கவில்லை இதனால் காரிலோ அல்லது கப்பலிலோதான் இந்த நகரத்திற்கு பயணிக்கமுடியும் கோடைகாலத்திலும் மிக அதிக நேரம் மழைபெய்துகொண்டே இருக்கும். நவம்பரில் இருந்து பெப்ரவரி வரை தொடர்ச்சியாக 4 மாதங்கள் சூரியனையே இந்த நகரத்தில் இருப்பவர்கள் பார்க்கமுடியாது.இந்த நகரத்துக்கு நுழைவதற்கு பயன்படுத்தும் ஒரே ஒரு வீதியும் பல குகைவழிப்பாதைகளைக்கொண்டது இரவில் இந்த குகைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிடும் இதனால் குளிர்காலத்தில் இந்த நகரத்தில் குற்றங்கள் மிகமிகக்குறைவாகவே காணப்படும் காரணம் ஏதாவது தவறுசெய்துவிட்டு தப்பிச்செல்லவே முடியாது வெளியே சென்றால் குளிரிலேயே உறைந்து மரணிக்கவேண்டியதுதான். ஏதாவது இடத்திற்குசென்று நீங்கள் தொலைந்துவிடவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.இங்கே வாழும் மக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் மிக நட்பாகவே பழகுகின்றார்கள் மாணவர்கள் டவுட் என்றால் உடனே ஓடிச்சென்று ஆசிரியரின் கதவைத்தட்டுகின்றார்க்ள்.சில மாதங்களில் மட்டும் அனைத்து கடைகளும் இங்கே மூடப்பட்டிருக்கும் அவ்வாறான நேரங்களில் தனிமை அவர்களை வாட்டும் உடனே ஒவ்வொருவரும் வேறு வேறு தளத்துக்கு சென்று அங்கிருப்பவர்களுடன் தங்கள் நாளை மகிழ்ச்சியாக செலவிடுகின்றார்கள். மிகவும் குளிரான நாளில் பனிப்பொழிவு சுமார் 20 அடிகள்வரை உயரும் அதோடு 60 மைல் வேகத்தில் குளிர்காற்றும் இங்கே வீசிக்கொண்டிருக்கும் இதன் காரணமாக பனிக்கரடிகள்கூட வெளியே வருவதில்லை அதோடு பனிக்கரடிகள் இங்கே அதிகம் என்ற காரணத்தினாலும் பிளே கிரவுண் பில்டிங்கின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றது இங்கே விவசாயம் மற்றும் காய்கறிகள் உற்பத்திசெய்வதற்காக மிகப்பெரிய தனி அறை ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள்,கோடைகாலம் தொடங்கப்போகின்றது என்றவுடன் காய்கறிகளை நட ஆரம்பித்துவிடுவார்கள் சூரிய ஒளிக்காக ஸ்பெஸலாக உருவாக்கப்பட்ட மின் விளக்குகளைப்பயன்படுத்துகின்றார்கள் இவற்றின் மூலமே இங்கு விவசாய உற்பத்தி நடைபெறுகின்றது வாழ்வதற்கு இவளவு கடினமான இடத்தில் எதற்காக மக்கள் வசிக்கின்றார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் ஆனால் இவர்கள் தாமாக விரும்பி இங்கே குடியேறவில்லை.1943 இல்தான் இந்த நகரம் உருவாக்கப்பட்டது அமெரிக்க ராணுவத்தின் காம்ப் ஒன்றை நிறுவுவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்று தேவைப்பட்டபோதுதான் இந்த இடம் அதற்காக தெரிவுசெய்யப்பட்டது.எதிரிகளின் கண்களில் அகப்படாத மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பிரதேசம்தான் உண்மையில் தேவையாக இருந்தது ஆனால் இந்த இடம் இயற்கையாகவே அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அமைந்திருந்தது அதோடு மைனஸ் டிகிரி வெப்ப நிலையில் குளிர் இருக்கும்போது இங்கே இருக்கும் கடல் நீர் உறைவதில்லை எனவே இராணுவத்தளபாடங்களை கப்பல் மூலம் நகர்த்துவதற்கு இந்த இடம் மிகப்பொருத்தமாக இருந்தது. அதோடு இந்த நகரத்துக்கான வீதி 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மலையைக்குடைந்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.இராணுவ காம்பை அடுத்து ஒரே உருவில் கட்டப்பட்ட சிறிய சிறிய வீடுகள் அமைக்கப்பட்டன ,இப்போது அங்கு காணப்படும் பக்னர் பில்டிங்க் பொறியியலாளர்களுக்காக கட்டப்பட்டது.தற்போது மக்கள் வசித்துவரும் 14 மாடிகளைக்கொண்ட ஹோஜ் பில்டிங்தான் அப்போது இராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது பின்னர் இந்த பில்டிங்க் பெஜ்ஜி டவர் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.அமெரிக்க பாராளுமன்றத்தைச்சேர்ந்த ஒருவர் விமானவிபத்தில் இங்கே காணாமல்போனார் இதன்பின்னரே இந்தக்கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.இந்தக்கட்டிடத்தை அண்டன் ஆண்டர்சன் என்ற பொறியியலாளர் வடிவமைத்திருக்கின்றார். 1964 மார்ச் 27 இல் அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது 1200 அணுகுண்டுகள் வெடித்தால் என்ன சக்தி வெளிப்படுமோ அந்த அளவுக்கு இந்த நில நடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய சுனாமி அலையில் அந்த நகரமே துடைத்தெறியப்பட்டது தற்போது இருக்கும் 14 மாடிகளைக்கொண்ட கட்டிடம்கூட பாரிய சேதமடைந்தது.இதனால் இராணுவம் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டது ஆனால் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மக்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். 1969 இல் இது தனி நகரம் என்ற அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டது.இந்த சம்பவம் நடந்தபோது நகரத்தில் தங்கியிருந்த பொறியியலாளர்கள் மற்றும் வேலைசெய்தோரின் பிள்ளைகள்தான் இப்போது இந்த நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.பக்னர் பில்டிங்க் இப்போதும் உடைந்த நிலையில்தான் காணப்படுகின்றது.இதை மீண்டும் கட்டுவதற்கு இடிக்கவேண்டி ஏற்படும் இதனால் ஏற்படும் தூசுக்களால் அதிக பாதிப்புக்கள் ஏற்படும் அதோடு அதற்கான பொருட்களைக்கொண்டுவருவதும் மிகக்கடினமான வேலை எனவே அந்த பில்டிங்கை மக்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.பாதிப்படைந்த பெஜ்ஜி டவர்ஸை மட்டும் மக்கள் சரிசெய்து இன்றுவரை பயன்படுத்திவருகின்றார்கள். இங்கே வசிக்கும் சிலர் வேலைசெய்வதற்காக இந்த நகருக்கு 105 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அஞ்சோரா எனப்படும் நகரிற்கு செல்கின்றார்கள் ஆனால் அந்த நகரத்திற்கு செல்வதற்கும் குகைவழிப்ப்பாதைக்கு வருடத்திற்கு 500 டாலர்கள் பணம் செலுத்தவேண்டும்.கோடைகாலத்தில் இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பிவழிகின்றது உலகின் பல்வேறுபாகங்களில் இருந்து இங்கே மக்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள்,கடல்,ஏரிகள்,காடுகள்,பனிக்கரடிகள்,கடல்சிங்கம் என சுற்றுலாப்பயணிகளைகவரும் பலவிடயங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன அதோடு ஆழ்கடல் மீன்பிடியும் இங்கே மிகப்பிரபலம் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வசித்துவந்தமக்கள் வேறு நகரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் இதனால் 200 அப்பார்ட்மெண்ட்கள் இப்போது காலியாக உள்ளன.அதோடு பலர் இந்த அப்பார்ட்மெண்ட்களை வாங்கிக்கொண்டுமிருக்கின்றார்கள். மிக பிஸியாக சுற்றிக்கொண்டும் இந்த உலகில் இருந்து கொஞ்சம் தனிமைவேண்டுமாக இருந்தால் நிச்சயம் இந்த இடம்தான் யாருக்கும் முதலாவது தெரிவாக இருக்கமுடியும் https://www.manithanfacts.com/2023/12/whittier alaska.html
  25. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்த இந்திய வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரபாடா கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 டிசம்பர் 2023, 03:39 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டு டெஸ்ட் போட்டி போன்று, தென் ஆப்பிரிக்காவும் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டில் இந்திய அணியைச் சுருட்டி 3 நாட்களில் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இன்னும் ஆட்டம் முடிய 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்திய அணி சரண்டராகிவிட்டது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக 2வது இன்னிங்ஸில் 34.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி, 108.4 ஓவர்களில் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்து 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2வது இன்னிங்ஸை இன்று தேநீர் இடைவேளைக்குப்பின் ஆடத் தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல், 131 ரன்களில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆண்டுகளுக்குப்பின்… கடந்த 2010ம் ஆண்டு இதே செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் 25-ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோற்கடித்தது. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப்பின அதேபோன்ற இன்னிங்ஸ் வெற்றியை தென் ஆப்பிரிக்கா மீண்டும் ருசித்துள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருது 185 ரன்கள் குவித்த டீன் எல்கருக்கு வழங்கப்பட்டது. இந்திய அணியில் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி(76), சுப்மான் கில்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தனர். கேப்டன் ரோஹித் சர்மா டக்அவுட்டில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவுக்கு தண்ணிகாட்டிய ரபாடா தென் ஆப்பிரிக்காவில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி என்பது வெறும் 12 ரன்கள்தான். 6 பெரிய அணிகளுக்கு இடையே மிகக்குறைவான சராசரி வைத்துள்ள 2வது பேட்டர் ரோஹித் சர்மாதான். அதிலும் ரபாடா பந்துவீச்சு என்றாலே ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது. அவரின் பந்துவீச்சுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் சராசரி வெறும் 6 ரன்கள்தான், 6 இன்னிங்ஸில் ரபாடாவின் பந்துவீச்சில் ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இரு இன்னிங்ஸ்களிலும் ரபாடா பந்துவீச்சில்தான் ரோஹித் சர்மா விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அதிலும் 2வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவிதம், கண்இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. ரபாடா சரியான லென்த்தில் “வாப்லிங் சீம்” என்று சொல்லக்கூடிய வகையில் காற்றிலேயே பந்து திசைமாறக்கூடிய வகையில் வீசினார். ரோஹித் சர்மா டிபென்ஸ் ப்ளே ஆட பிரன்ட்ஃபுட் ஆட முற்பட்டபோது, பந்து அவரை ஏமாற்றி க்ளீன் போல்டாகியது. இதுபோன்ற பந்துவீச்சை நிச்சயமாக ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் பார்த்திரக்கக்கூடும். இந்திய அணிக்கு எதிராக ரபாடா 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் 5-வது வீரராக இணைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்திய பர்கர் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன் இது தவிர இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால்(5), ஸ்ரேயாஸ் அய்யர்(6), ராகுல்(4), அஸ்வின்(0), ஷர்துல் தாக்கூர்(2) ஆகியோர் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் லென்த்துக்கு முன் தாக்குப் பிடிக்கமுடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி கடைசி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 96 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த இந்திய அணி, 131 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆறுதல் இது மட்டும்தான் இந்திய அணிக்கு ஆறுதல் தரக்கூடிய அம்சம் என்னவென்றால் கேஎல். ராகுல் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததும், 2-ஆவது இன்னிங்ஸில் கோலி 76 ரன்கள் சேர்த்து ஃபார்முக்கு வந்திருப்பதுதான். மற்ற வகையில் இந்திய பந்துவீச்சில் பும்ரா தவிர மற்றவர்கள் பந்துவீச்சு படுமோசமாக அமைந்தது. செஞ்சூரியன் மைதானம் என்றாலே பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரிதான். இந்த மைதானத்தின் தன்மையையும், சூழலையும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவரும் பயன்படுத்தவில்லை. சரியான லைன் லென்த்தில் வீசப்பட்ட பந்துகள் அனைத்துமே இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தன, விக்கெட்டையும் இழக்க வைத்தன. ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திவில்லை செஞ்சூரியனில் கடந்த 2 நாட்களுக்குப் பின் நேற்று நன்றாக வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் இருந்த பிளவுகள், கோடுகள் நன்றாக தெரிந்தன. இதைத் தெரிந்து கொண்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்தி பவுன்ஸரை வீசி எகிறச் செய்தனர். இதே முறையை இந்தியப் பந்துவீச்சாளர்களும் பயன்படுத்தி இருந்தால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் சேர்த்திருக்க முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹோம் ஓர்க் செய்யவில்லை தோல்விக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் செய்திருந்தும் வெல்ல முடியவில்லை. இந்த செயல்பாடு நிச்சயமாகப் போதாது. பந்துவீச்சு, பேட்டிங்கில் 2வது இன்னிங்ஸில் மோசமாகச் செயல்பட்டோம். இந்த சூழலைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல், ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ளாமல் வந்துவிட்டோம். 4 வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினர், கடினமாகவே உழைத்தனர், ஆனால், ஹோம்ஒர்க் செய்யாமல் வந்துவிட்டனர். எங்கு தவறு நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டோம். தவறுகளைத் திருத்தி இன்னும் வலிமையாக வருவோம். பிரசித் கிருஷ்ணா அனுபவம் குறைந்தவர்தான். இந்த ஆட்டத்தின் மூலம் தனது பந்துவீச்சு முறையை இனிவரும் நாட்களில் மாற்றிக்கொள்வார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் சிலர் இல்லை, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, இருக்கின்ற பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துதான் வர முடியும். நாங்கள் தேர்ந்தெடுத்து வந்த பந்துவீச்சாளர்கள், இங்குள்ள சூழலுக்கு எதிராக பந்துவீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் குறித்து அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார் இந்தியத் தரப்பில் சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ரிதத்தை இழந்து பந்துவீசினர். இதில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 285 ரன்களை வாரி வழங்கி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுபோன்று ரன்களை கொட்டிக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் எக்னாமி ரேட் 5 ரன்களை வைத்தனர். இதில் விதிவிலக்காக, பும்ரா 26 ஓவர்கள் வீசி 69 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடுகளத்தை கணிக்காமல், அதற்கு ஏற்றார்போல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசாதது, பேட்டர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இன்னும் முழுமையாக 2 நாட்கள் மீதம் இருக்கும்நிலையில் விரைவாகவே தோல்வியை இந்திய அணி ஒப்புக்கொண்டுவிட்டது. இந்திய அணியில் அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா இதுவரை முதல் தரப்போட்டிகளில் 12க்கு மேல் ஆடியதே இல்லை, பந்துவீசியதே இல்லை. செஞ்சூரியன் ‘கிங்’ தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சொந்த மைதானத்தில் கிங் என்பதை நிரூபித்துவிட்டனர். செஞ்சூரியன் மைதானத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி சதவீதம்79.31 சதவீதமாகும். அதாவது29 போட்டிகளில் 23 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி செஞ்சூரியன் மைதானத்தையும், ஆடுகளத்தையும் எவ்வாறு புரிந்து, தெரிந்து வைத்துள்ளது என்பதை அறியலாம். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு செய்தது டீன் எல்கர்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டநாயகன் விருது வென்ற எல்கர் பவுண்டரிகளால் சதம் கண்ட எல்கர் இந்த டெஸ்ட் தொடரோடு எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த வெற்றியும், அவர் சேர்த்த சதமும் மறக்க முடியாத நினைவுகளாக மாறின. தொடக்க வீரராகக் களமிறங்கிய எல்கர் 185 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் டீன் எல்கர் தனது 14-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து 287 பந்துகளில் 185 ரன்கள் சேர்த்தார். எல்கர் பவுண்டரி மூலமே 112 ரன்கள் சேர்த்தார், அதாவது 28 பவுண்டரிகளை எல்கர் அடித்துள்ளார். அதிலும் எல்கர் சேர்த்த பெரும்பாலான பவுண்டர்கள் கவர்டிரைவ் மூலமும், ஆஃப் சைடிலும் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான பார்ட்னர்ஷிப் எல்கருக்கு ஒத்துழைத்து ஜோர்சியும்(28), அறிமுக வீரர் பெடிங்காமும்(56) பேட் செய்ததால் 2வது நாளில் முன்னிலை பெற முடிந்தது. ஜோர்சியுடன் சேர்ந்து எல்கர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், 4-வது விக்கெட்டுக்கு பெடிங்காமுடன் சேர்ந்து 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினார். 3-வது நாளான நேற்று, டீன் எல்கர்(185), மார்கோ யான்சென்(85) ரன்களும் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர். யான்சென்-எல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். எல்கரின் உணர்ச்சி பொங்கிய ஆட்டம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கடினமான நேரத்தில் பலமுறை இதுபோன்று ஆடி சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தியுள்ளார் எல்கர். கொரோனா காலத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எல்கர் 95 ரன்கள் சேர்த்தது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அணியை மீட்டது என பல தருணங்களில் தனது பேட்டிங் திறமையை எல்கர் வெளிப்படுத்தியுள்ளார். எல்கர் அளித்த பேட்டியில் கூறுகையில் “ எனது பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அணிக்கு பங்களிப்பு செய்கிறேன். நான் கடைசியாக விடைபெறும் போது டெஸ்ட் போட்டி அல்லது டெஸ்ட் தொடரை வென்று தர வேண்டும். எதையும் இழக்கவிரும்பவில்லை. இந்தப் போட்டி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இதுவரை செஞ்சூரியனில் சதம் அடித்தது இல்லை. இதுவே என் கிரிக்கெட் வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும். என்னுடைய குடும்பத்தார் என்னுடைய பேட்டிங்கைப் பார்க்க வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேகப்பந்துவீச்சாளர் பர்கர் பர்கரின் அசத்தல் அறிமுகம் தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பர்கர் மொத்தம் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய வேப்பந்துவீச்சாளர்கள் லைன் லென்த் கிடைக்காமல் தடுமாறியபோது, அனாசயமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை பர்கர் அள்ளிச்சென்றார். தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் கண்டறிந்த முக்கிய வீரராக பர்கர் மாறியுள்ளார். வெற்றிக்கு முக்கியக் காரணம் என்ன? தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவை சரியான லைன், லெங்த் என்பதைக் கண்டறிந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியது, இந்திய அணியின் மோசமான பந்துவீச்சும், பேட்டிங் ஆகியவைதான். ஆடுகளத்தின் தன்மையை, ஆடுகளத்தையும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தினர். எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்தால் பேட்டர்கள் திணறுவார்கள், தடுமாறுவார்கள் என்பதை சரியாக கணித்து பந்துவீசினர். https://www.bbc.com/tamil/articles/c9029dwz8j1o
  26. அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்-..இதுதான் இப்ப யாழில்😋
  27. ஸ்ரீதரனுக்கு கிளிநொச்சிதான் வாழக்கை கொடுத்தது. அவரது சொத்துக்கள் வயல்காணிகள் எல்லாம் அங்குதான் இருக்கிறது. அந்த வயல் காணிகள் இரணைமடு குளத்தின் கீழ் அமைந்துள்ளதால்தான் அங்குள்ள விவசாயிகளின் உதவியுடன் யாழுக்கு நீர் கொண்டு செல்வதை எதிர்த்தவர். அதை தடுத்தும் விடடார்கள்.இப்போது மன்னார் மக்களின் நீராதாரத்தை யாழுக்கு கொண்டுபோவது அவருக்கு பிரச்சினை இல்லை. இப்போதும்கூட மன்னார் மக்கள் இந்த திடத்தை எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்த சிவகாரன் கூட மன்னார் மாவட்த்தை சேர்ந்தவர் இல்லை. ஆனால் அங்கு அரசியல் செய்கிறார். எனவே அவருக்கு ஸ்ரீதரனைப்போல ஒரு போராட்டம் தேவைப்படுகின்றது. இந்த திடடம் இப்போது தொடங்கப்பட்ட்து இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டு தொடங்கப்படட ஒன்று. நிதி நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்ட்து. இதெல்லாம் இப்போது வந்த சிவகாரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஸ்ரீதரன், சிவகாரன் எல்லாம் சுயநல அரசியல்வாதிகள். இவர்கள்தான் தமிழர்களை வழிநடத்த போகிறார்கள். தலை எழுத்து.
  28. வேலை வெட்டியற்று...யாழில் நோண்டினால்தன்...வருமானம் என்றிருப்போருக்கு..எழுத்துபிழை சொற்பிழை வராதுதானே...வேலைசெய்து.. நாலு மொனிட்டருக்கு நடுவில் இருக்கும் எனக்கு...எழுத்துப்பிழை கருத்துப்பிழை தவிற்கமுடியாததே.. இப்ப புரிந்ததோ புரியவில்லையோ..எனக்கு பிரச்சினை இல்லை...அதனைவிட உங்களின் சில பதிவுக்கு பதில் எழுத வேண்டியும் உள்ளது...அவசியப் படவில்லை....உங்கள் ஆதரவு திரட்டும் நிகழ்வால் ...யாழிலும் எனக்கு ஆபத்துவரலாம்...இங்கு நீங்கள் இனப்பற்றாளர்களை ஓரம்கட்டவே..இதுதானே கொடுக்கப்பட்ட ராக்கெட்..எதுக்குமே அஞ்சவில்லை...எனது குறிக்கோள் ..
  29. தமிழ் நாட்டு இதர நடிகர்கள் அச்சமடையுமளவிற்கு மனித நேயமிக்கவர் என கூறுகின்றார்கள். ஏனைய நடிகர்களை திட்டுவது போல் விஜய்காந்த் அவர்களை திட்டியதை நான் எங்கும் காணவில்லை.
  30. விஜயகாந் ஒரு நல்ல மனிதர். ஈழத்தமிழர்கள் பால் அதிக கரிசனை கொண்டவர். ஒரு மனிதனின் சாவு எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியவர். அனைத்து மக்களும் இரங்கலைத் தெரிவிக்கிறார்கள்;. தமிழ்சினிமாவுக்கே பொருத்தமில்லாத கநறப்பு நிறத்தில் சினிமாவில் சாதித்துக்காட்டியவர். ஜெயலலிதா கருணாநிதி அரசியலில் உச்ச நிலையில் இருந்தபொழுதே துணிவாக அரசியலுக்கு வந்து குறகிய காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர். தன:னடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு சமமான உணவை கொடுத்துத மனித நேயம் படைத்தவர். ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். உல்லாவற்றுக்கும் மேலாக தமிழக ஊடகவிபச்சாரிகளுக்கு நேராக காறித்'துப்பியவர். தமிழினத்துரோகி கருணாநிதி போல பக்கா அரசியல்வாதியாக இருக்காமல் நல்ல மனித நேயத்தோடு கூடிய மனிதன். கருணாநிதி இறந்த பொழுது ஈழத்தமிழர்கள் மகிழ்சியடைநதார்கள். கப்டனின் இழப்புக்கு எல்லோரும் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நஜவாழ்வில் நடிக்கத்தெரியாத மனிதன்.
  31. இந்தியாவுக்கு ஆயிர கணக்கில் இனி பாட சென்று விபச்சார விடுத்துதிகளில் இருந்து மீட்டு வராதவரை ஓகே. கலைதுறை என்பது பொதுகவே உலகம் பூரா ஓரிருவருக்கு அபராத வெற்றியையும் ஆயிரக் கணக்கவனவர்களுக்கு வாழ்வை சீரழித்த கதையாகவே தொடர்கிறது
  32. உண்மையில் பலதை தெளிவாக எழுதும் நீங்கள் இதில் என்ன அரசியலை கண்டீர்கள். என்ன நகர்வை கண்டீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவே இல்லை. சுரேன் - அல்லது அவரது குழு எமது நியாயத்தை எங்கும் எடுத்துரைக்கவே இல்லை. எமக்கு 48 இல் இருந்து இன்று வரை இழைக்கப்படும் அநீதி பற்றி அதற்கு என்ன தீர்வு என்பது பற்றி ஒரு வரியில்லை. பண்டா, ஜே ஆர், சிறில் மத்யூ, வீரவன்ச, வீரசேகர வரை சிங்கள பேரினவாததிகள் சொன்ன - இலங்கையராக ஒன்று பட்டால் எல்லா பிரச்சனையும் ஓவர் என்ற அதே விடயத்தை புல்லட் பாயிட்ண்ட் போட்டு ஒரு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்கள். திம்புவில் இருந்தே பேரினவாதத்தின் நிலை இதுதானே. மன்னிக்கவேண்டும் இதில் அரசியல் நகர்வை நான் தேடி, தேடி பார்த்தேன்…கடல்லையே இல்லையாம்🤣 இல்லை. இவர் எல்லருமே உதிரிகள். டயஸ்போரா தமிழரை எந்த தனிநபரோ, அமைப்போ பிரதிநிதிபடுத்தும் நிலை இனி வேண்டாம். இந்த டயஸ்போராவில் இருந்து, வாழும் நாடுகளில் அரசியல் செய்யும் தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும், கூட்டாக. ஏமாந்து விட்டோமா? ஏன் எம்மை ஏமாற்றினார்கள்? எம் இலக்கை தடுக்க அல்லவா? அப்போ ஏமாற்றியோருக்கு நாம் கொடுக்கும் பதில் என்ன? முன்னையை விட வீரியமாக இலக்கை நோக்கி செயல்படுவது. 27/11/23 ஆல் நீங்கள் சோர்ந்து போனால் - அவர்கள் வென்றார்கள் என்றாகிவிடும்.
  33. இங்கே தான் எதிரி வெற்றியடைந்து கொண்டிருக்கிறான்.
  34. மதுரையில் அரிசிஆலை நடத்தி வந்த குடும்பத்தில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து விட்டார் விஜயராஜு. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்... ஊரில் இருந்தும் எந்த உதவியும் பெற மனமில்லை. இரண்டொரு படங்கள் நடித்த பின்னும் கூட அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. மீண்டும் கஷ்டம்.... ஒரு வழியாக ரஜினி கமலுக்கு இணையாக எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் கேப்டன். அப்போதெல்லாம் நான்கு கேட்டகிரியாக ஷுட்டிங் ஸ்பாட்டில் உணவுகள் தரம் பிரித்து வழங்கப்படும். ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், கேமரா மேன் போன்றோருக்கு ஒரு வகை, அசிஸ்டன்ட் கேட்டகிரிக்கு தனி, லைட்மேன் போன்றோருக்கு தனி, கடைசியா ட்ரைவர், மற்ற சிப்பந்தி வேலை பார்ப்பவர்களுக்கு தனி... இதுதான் காலங்காலமாக இருந்த வழக்கம். ஆனால் விஜயகாந்த் அவர்கள் படப்பிடிப்பில் மட்டும் அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாடு, விஜயகாந்த் மட்டன் சாப்பிட்டால் கடைசி பணியாள் வரை மட்டன் சாப்பாடு, அவருக்கு மீன் பொறித்தால் கடைசி பணியாள் வரை மீன் கொடுக்க வேண்டும். சாப்பிடுறதுல என்னைய்யா ஆள் பாத்து கொடுக்குறிங்க ன்னு சொல்லி அத்தனை பேருக்கும் ஒரே சாப்பாடு ன்னு கொண்டு வந்தது விஜயகாந்த்... தயாரிப்பாளர் தலைல அந்த செலவை கட்டல.... என் சம்பளத்துல இருந்து அத பண்ணுங்க... மிச்சத்தை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டு போயிடுவார்... கோடம்பாக்கத்துல அவரோட அலுவலகத்துல அணையா விளக்கு மாதிரி அடுப்பு எரிஞ்சுட்டே இருக்கும்... பசின்னு வர்ற அத்தனை பேரும் சாப்டுட்டு போயிட்டு இருப்பாங்க. சிலர் லாம் மெஸ் ன்னு நினைச்சு உள்ள வந்துட்டு சாப்டுட்டு ரூபாய் கொடுக்க போனப்போ இது விஜயகாந்த் சார் ஆஃபீஸ் ங்க ன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்களாம். அந்த அளவுக்கு பிறர் பசியை போக்கிய வள்ளல். காலாகாலமா கடன்ல மட்டும் இருக்குனு கணக்கு காட்டுன நடிகர் சங்க கடனை யெல்லாம் அடைச்சு அத நல்ல நிலைக்கு கொண்டு வந்த சிறந்த நிர்வாகி ‌. எதிர்கட்சி தலைவர் அளவுக்கு வெகு விரைவில் வந்த அரசியல்வாதி... அவருக்கு சினிமால நடிக்க வந்த அளவுக்கு நிஜத்துல நடிக்க வரல. அவரோட இயல்பை எல்லா இடத்துலயும் வெளிப்படுத்தினார். அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சிரிச்சாலும் வெள்ளந்தியான சிரிப்பு... ஒருத்தரோட கஷ்டம்னாலும் அத பாத்து கண்ணீர் விட்டு அழுற மனசு... அப்படிப்பட்ட ஒரு மனுஷன். அரசியல்வாதிகளில் வள்ளல் ன்னு MGR யை சொல்லுவாங்க... நான் அவரை பாத்ததில்ல... ஆனா வாழும் வள்ளலா பாத்தது விஜயகாந்த் அவர்களைத்தான்... பல லட்சக்கணக்கான பேரின் பசியை போக்குன, கண்ணீரைத்துடைத்த விஜயகாந்த் மதுரை மாநாட்டுல சொல்றார். "என் சொந்த காசுலதான் கட்சி துவங்குறேன். காசு வரும் போகும். இது இல்லாமலே போனாலும் பரவால்ல... மனுசன் என்னய்யா அதிகபட்சமா தேட போறான் சாப்பாடுதான... இத்தன லச்சம் பேரு இங்க வந்துருக்கிங்க, உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு வேளை சோறு வாங்கி சாப்டாலும் என் ஆயுள் பத்தாது. அவ்வளவு அன்பை தேடி வச்சுருக்கேன்" ன்னு சொன்னார். ஆழ்ந்த இரங்கல் கேப்டன்... உங்கள் நல்ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்... தினம் ஒரு தகவல் DAILY INFORMATION
  35. வணக்கம் கோஷான். நான் எழுதுயது சுரேன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல. தாயகத்தில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் தாயக தலமையுடன் உரிமையுடன் தொடர்புகளை பேணிய இவர்கள் உலக அரசியல் போக்குகள் குறித்த விடயங்கள், பலம் வாய்ந்த நாடுகளின் நிலைப்பாடுகள் போன்ற விடயங்களில் தாயக தலைமைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி தாயக அரசியல் நிலைப்பாடுகள், தந்திரோங்களை நெறிப்படுத்தி தந்திரோபாய அரசியல் நகர்வுகளை தாயக தலைமை எடுக்க வைக்க வேண்டிய கடப்பாடு இருந்தும் அதைச் செய்யாமல் ஆயுத போரை மட்டுமே நம்பி அதை ஊக்குவித்து மெளனமாக இருந்து இன்றய நிலைக்கு காரணமானதில் இந்த அமைப்புக்கும் பங்கு உள்ளது என்பது எனது கருத்து. ஆனால், இதுவரையான 14 வருடங்களில் தாயகத்தில் மற்றும் புலம் பெயர் நாடுகளில் அரசியல் செய்துவரும், நீங்கள் கூறியது போன்ற மக்கள் ஆதரவுடன் இருக்கும் அமைப்புக்கள்/ கட்சிகள் இந்த பிரச்சனையையை முன்னகர்தத இதை போன்ற முன்மாதிரியை முன்னரே உபயோகித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் சுரேனின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியில் தடுத்து நிறுத்தி இருக்கலாம். அதன் பெயர் பேச்சுவார்ததையோ அரசியல் தீர்வோ அல்ல. அது மிக எளிதாக விரைவாக நடக்கும் என்று நினைக்கும் அளவுக்கு எமது அரசியல் நிலை இப்போது இல்லை. அரசியல் தீர்வை காணும் வலு இன்று இயங்கும் எந்த அமைப்புக்கு இல்லை என்பது வெள்ளிடை மலை. இனவாதிகளை விடுங்கள். இரு பக்கதிலும் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகள், நம்பிக்கையீனங்களை களைந்து அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தையாவது ஆரம்பித்து வைக்க தாயக, புலம் பெயர் அரசியல் அமைப்புகள் இப்போதாவது ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னோடி யாக இந்த தந்திரோபயத்தை நடைமுறை சாத்தியமாக மேம்படுத்தி உபயோகிக்கலாம். சிங்கள மக்கள் அமைப்புகளுடன் நல்லுறவை பேணி சந்திப்புக்களைஆரம்பிக்கலாம் என்பது எனது கருத்து. வெளி நாடுகளில் என்னதான் அரசியல் செய்தாலும் எந்த நாடும் அதை செய்யுமாறே எம்மை வலியுறுத்தும். அவ்வாறான நடவடிக்கைக்கே ஆதரவாக இருக்கும். எமது தமிழ் அரசியலில் நல்ல பிள்ளை பெயரெடுக்க வேண்டுமானால் யோகர் சுவாமி கூறியது போல் “சும்மா இரு” என்பதே உகந்தது. அனால் ஒரு சிறிய மாற்றம், வெற்று வீர வசன அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதுடன் கூடவே தமிழ் அரசியல் முகநூல், இணையத்தள அரசியல் தாதாகளுக்களுடன் நல்லுறவையும் பேணியபடி “சும்மா இரு” என்ற கோட்பாடே நல்ல பிள்ளை பெயரெடுக்க உகந்த கோட்பாடு.
  36. உலகத் தமிழர் பேரவையின் இந்த முயற்சி ஒரு பேச்சுவார்ததையாகவோ இது தான் இறுதியானதாகவோ இருக்க போவதில்லை. பார்ரக்கும் எவருக்கும் தெளிவாக தெரியும் உண்மை இது. இது ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே இருக்கும். ஆகவே அவர்களை அங்குள்ள பலவேறு தமிழ்த் தரப்புகளும் கட்சிகளும் ஒரு நட்புறவான சந்திப்பை நிகழ்த்தி அவர்களின் பிரகடனத்தில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டியிருக்கலாம். அவர்களை எமது விரோதிகள் துரோகிகள் என்ற ரேஞ்சுக்குக்கு வெறுப்புப்பிரச்சாரம் செய்து ஏற்கனவே முந்திய தலைமுறை செய்த தவறை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை. எனது கருத்து தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் அரசியல் செய்வதாக கூறிக் கொள்ளும் எல்லாத் தமிழ் அமைப்புகளும் இவ்வாறாக சிங்கள மக்களிடையே உள்ள பல்வேறு பொது அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள் கட்சிகள் என அடிக்கடி சந்தித்து தொடர்சசியாக எமது பிரச்சனைகள் குறித்த விளக்கங்களையும் எமது தரப்பின் நியாயங்களையும், பேரினவாத அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த பட்டறிவுகள், எமது அச்சங்கள் குறித்து எடுத்து கூறுவதும் அவர்களுடன் தொடர்புகளை பேணிக்கொள்வதும் இரு தரப்பு நல்லுறவை அதிகரித்து ஒருவரை ஒருவர் நம்பிக்கை கோள்ளும் நிலையை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் (அது நாம் அனைவரும் இந்த உலகில் வாழாத காலமாகவும் இருக்கலாம்) ஒரு நியாயமான அரசியல் தீர்வை அப்போது வாழப் போகும் இருதரப்பு மக்களும் உருவாக்க உதவியாக இருக்கும். இது ஒன்றே அடுத்த தலைமுறை மக்களுக்கு இப்போது வாழ்பவர்கள் செய்யக்கூடிய ஆகக் கூடிய உதவியாக இருக்கும். அதை கூட செய்யாமல் எமது தனிப்பட்ட பழைய கோபங்கள் , ஈகோ, சுயநலம், அரசியல் வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வெறுப்பையும் விரோதத்தையும் இலங்கையில் வாழும் இரு மொழி பேசும் மக்களிடமும் விதைப்பதையே செய்வோம் என்றால் அந்த பக்கா அயோக்கியத்தனத்துக்கு பலியாகப் போவது இலங்கையில் வாழப் போகும் குறிப்பாக தமிழ் மக்களே ஆகும்.
  37. இல்லை.உக்ரேன் போரை நடத்தி செல்வது வேறு நாடுகள். உக்ரேன் மட்டும் போரை நடத்துவதானால் அது என்றோ முடிந்திருக்கும். இலங்கையில் சிங்களம் மட்டும் போரை நடத்தவில்லை....அது போல் இதுவும்.... காசி ஆனந்தனின் நறுக்குகளை இன்னுமா காவிக்கொண்டு திரிகின்றீர்கள்? 🤣
  38. சரி நீங்க உண்டியலை வையுங்க. நான் அதில ஓட்டையை போட்டுக்கிறேன்.
  39. இல்லை திண்ணை நல்லம். புதியவர்களை கவரும். ஏதேனும் அவசரமெனில் உடனேயே தெரிவிக்கலாம்.இவ்வாறாக சில நன்மைகள் உண்டு
  40. தகவலுக்கு நன்றி நிழலி. ஆழ்ந்த இரங்கல்கள்.
  41. https://yarl.com/forum3/index.php?app=core&module=system&controller=redirect&do=advertisement&ad=38&key=4c25862ab07bc99c89ead3d4e6fbe9b0e3a273666f67aa0f022f92d8aea48096 முகப்பில் கணேஸ் என்பவருக்கு துயர் பதிவில் போட்டிருக்கிறீர்கள். யார் இவர்? ஆழ்ந்த அனுதாபங்கள்.
  42. தமிழர்களுக்கான இறுதி தீர்வை இந்திய ஆட்சியாளர்களிடம் கொண்டுசென்று அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான அழுத்தங்களைப் கொடுத்த சந்தோஷ் ஜா வாழ்க
  43. சினிமா போலவே மேற்கின் தலுவலே மாயாவி. ராணி காமிக்ஸ், காப்பி ரைட்ஸ் வாங்கி, தமிழில் மொழி பெயர்த்து, அதே படங்களுடன் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய மொழி அணைத்துக்கும் உரிமை பெற்ற நிறுவனம், தமிழில் மட்டும், ராணியிடம் கொடுத்ததா அல்லது, ராணி நேரடியாக பெற்றதா தெரியவில்லை. எனது பெரியப்பா வீட்டில் ஒரு நூலகமே உள்ளது. பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மட்டுமல்ல, ஆனந்த விகடனில் வந்த இரட்டைவால் இரண்டு, வாண்டு மாமா, அம்புலிக்கு அப்பால் போன்ற கதைகள் வாசித்திருக்கிறேன். ஓநாய் கோட்டை, மாயாவி கதை போலவே காப்பிரைட் வாங்கி வெளியிடப்பட்டது, விகடனால். குமுதத்தில், வந்த பட்டாம் பூச்சி கதை வாசித்திருக்கிறேன். காப்பிரைட் வாங்கி மொழி மாற்றம் செயாயப் பட்ட கதை. இணையம் வந்ததும் நின்று போன இன்னொன்று, அம்புலிமாமா! ஆனால், விகடன், குமுதம், இணையத்துக்கு அமைய தமது பிஸ்ணஸ் மாடலை மாத்தி, உலகெங்கும், புத்தகம் போக வசதியில்லா இடம் எங்கும் போய் வருவாயை பெருக்கிக் கொள்கின்றன. ராணி காமிக்ஸ் போன்ற நிறுவனங்களின் முக்கிய பிரச்சணையே, நிறுவனர்களின் பிள்ளைகள், சிறப்பான கல்வி பெற்று மேலை நாடுகள் போய் அங்கேயே தங்கி விடுவதால், நிறுவணத்தை கவனிக்க ஆள் இல்லாமல் நின்றுவிடுகின்றன. குமுதம் மட்டும் விதிவிலக்கு. நிறுவனர் மகன் ஜவகர் பழனியப்பன் அமேரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர். ஆனால், ஒரு ஆசிரியர் | நிருவாக குழுவை அமைத்து குமுதத்தை தொடர்ந்து நடாத்துகிறார். அவரது வாரிசுகள் என்ன செய்வார்களோ தெரியாது. ஆனாலும், ராணி போலல்லாது, குழுதம் வருமானத்தில் முன்னனியில் இருப்பதால், ஜவகர் அதை தொடர்ந்து நடாத்த முடிவு செய்திருக்கலாம். அது போலவே, விகடன் நிறுவனர் வாசன், மகன் பாலசுப்பிரமணியன், அவரது மகன் என்று வெளி நாடு போகாமலே உள்ளூரில் இருப்பதால் கவனித்துக் கொள்கிறார்கள்.
  44. அட ........இப்படி ஒரு நகரம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன் .......! 😁 இது போன்ற பல செய்திகளையும் இணையுங்கள் .......! பகிர்வுக்கு நன்றி வெங்காயம்.......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.