Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3054
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10209
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/05/24 in Posts

  1. உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை..காரணம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது...மிருகங்கள் சில தங்களின் சூழ் நிலைக்கு ஏற்ப தங்கள் இரை தேடலை மாற்றிக் கொள்கின்றன.அந்த வகையில் தான் ஈன்ற கருவை தானே உண்டு பசியாறும் தன்மை எல்லா வகையான விலங்குகளுக்கும் இல்லை.எங்காவது அறப்படிச்சதுகள் ஏதாவது ஏழுதினால் அதை எல்லாம் உண்மை என்று 2024ல் எடுத்துக் கொண்டு வாழ தொடங்கினால் மனித சமுதாயத்தில் முக்கால் வாசிப் பேர் சுய புத்தியற்றவர்களாகத் தான் வாழ வேண்டி இருக்கும்..எங்காவதிருந்து காவிக் கொண்டு வந்து இணைக்கும் போது ஒன்றுக்கு பல முறை அதன் உண்மை தன்மையை அறிந்து பகிருங்கள். அடுத்து அம்மம்மா ,அப்பம்மா காலத்தவர்கள் நிறைய சமய சம்பிரதாயங்கள் என்று பின் பற்றிக் கொண்டு வந்தவர்களாவர்..அந்த வகையில் ஓர் பெண் மகப் பேறு முடிந்ததும் பின் பற்றக் கூடிய விடையங்களை சில வரைமுறைகளை சொல்லிக் கொடுப்பது இயல்பாக இருந்திருக்கலாம்.அதையும் நான் முற்று முழுதாக நம்ப மாட்டேன்..ஆனால் பிறந்த பிள்ளையை அடித்து துன்புறுத்தும் அழவுக்கு எல்லாம் முன்னைய கால பெற்றோர் இருந்ததில்லை.அப்படி பார்க்கப் போனால் உடல் வலுவிளந்து வாழும் எத்தனையோ பேர் இப்போது இந்தப் பூமியில் வாழ்ந்தே இருக்க இயலாது. எது எப்படி இருப்பினும் மேற் கொண்டு வருபவர்களும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதட்டும்..மேலே செய்தியில் இணைக்கபட்ட பெண்ணின் நிலை சில வேகைளில் ஏற்கனவே ஏதாவது மனதளவில் தாக்கமுடையவராக இருந்திருக்கலாம்..முக்கியமாக கணவர் வெளியிடத்தில் தங்கி வேலை செய்பவராக இருக்கும் பட்பத்தில் பெண்ணுக்கு உதவிகளற்ற ஓர் நிலையில் மனது பாதிக்கப்பட்டு இருக்கலாம்..அல்லது பிள்ளை பிறந்த பின் சில , பல காரணிகளால் ஏற்பட கூடிய மன தாக்கமாக கூட இருக்கலாம்..ஆகவே ஏழுந்தமானக ஒரு சமுதாயத்தின் மேல் குறை கண்டு அம்மம்மா மற்றும் அப்பம்மா காலத்தை எல்லாம் தேர் மாதிரி இழுக்க இயலாது.
  2. இல்லையே,. ரணில் யாழ்ப்பாணத்தில். வடக்கு இளைஞர்களுக்கு அபிவிருத்தி தான் தேவையானது என்று எந்தவொரு தீர்வு பற்றியும் பேசவில்லை காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது ....காணி அதிகாரம் தந்துவிட்டு எப்படி எங்கே வடக்கில். ஆயிரம் விகரைகள். கட்ட முடியும்?? பொலிஸ் அதிகாரம் தந்தார்கள் என்றால் 25% சிங்களவர்களை குற்றவாளிகள் என்று கைது செய்து சிறையில் அடைப்பீர்கள் .. ரணில் என்ன பால் குடியா. ?? முன்யோசனைகள். உள்ள மனிதன் சுருக்கமாக சொன்னால் உங்களை போன்றவரில்லை சுமத்திரன். பச்சை பொய்யான். மற்ற முடியாது நீதிமன்றத்தில் பொய் பேசிப் பேசி பழகி விட்டது தமிழ் மக்கள் சுமத்திரனுக்கு ஒரு வாக்கும் போடக்கூடாது அரசியலை. விட்டு துரத்த வேண்டும் அப்போ தமிழர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
  3. இவ்வளவு அமளி துமளி நடக்கு.. உள்ளூர் நாட்டமை..! ஏதாவது அமைதி காக்கும் படைய அனுப்ப வேண்டாமா..?
  4. தற்செயலாக, ரணில் தேர்தலில் வென்றால்.... கிடைக்க இருக்கும் ஒரு அமைச்சர் பதவிக்காக, செம்மறி ஆடு, பெரிய திட்டம் போடுகின்றது. 😃 சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து... காலத்தை வீணடித்த மாதிரி, செம்மறி ஆடும் ஆயத்தப் படுத்துகின்றது. 😂 "சோழியன் குடும்பி சு(ம்)மா ஆடாது." 🤣
  5. இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு இரணுவ முகாமில் இறங்கியுள்ளார். இவரின் சகோதரி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்திற்கு சென்று இனி சகோதரியுடன் தங்குவதே இவரின் தற்போதைய முடிவு என்று சொல்லப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த நாடாவது கொஞ்சமாவது உருப்படுவது போலத் தெரிந்தால், அடுத்த கணமே அந்த நாடு அதல பாதாளத்திற்கு தள்ளப்படும். அதற்கேற்ப அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் முன் யோசனையற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எதேச்சதிகாரமாக எடுத்து, பிராந்திய வல்லரசின் வேலையை இலகுவாக்கிக் கொடுப்பார்கள்.
  6. நான் ரணிலுக்கு வாக்கு போடச் சொல்லி சொல்லவில்லை. சுமந்திரன்தான் ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி சொல்லுகிறார். இப்போ… யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣
  7. ஒரு நாள் பின் வளவுக்குள் போட்டிருந்த பனம் பாத்தியை சுற்றி நின்று கொண்டனர். இது என்ன, இதை தோண்டிப் பார்க்கப் போகின்றோம் என்று அவர்கள் ஒரே ஆரவாரம். அப்ப தான் பனங்கிழங்கே பிடிக்க ஆரம்பித்திருக்கும். இது பனம் பாத்தி, இதற்குள்ள பனங்கொட்டைகளை தாட்டிருக்கின்றோம், அவை முளைத்து கிழங்காக வரும், இன்னும் இரண்டு மாதங்கள் போக வேணும்............ இதையெல்லாம் அவர்களுக்கு இங்கிலீசில் சொல் என்று என் வீட்டார் எனக்குச் சொன்னார்கள். இதை இப்ப இங்கிலீசில் சொல்லச் சொன்னாலே அது ஒரு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று எனக்கு நம்பிகையில்லை.............. 🤣.
  8. எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொதிகளில் ஆணுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இது உடலுறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னேற்பாடே. ஆண்களுக்கு மட்டுமன்றி எல்லாப் பெண்களுக்கும் வழங்கப்படும்.
  9. Postpartum depression is not a character flaw or a weakness. Sometimes it's simply a complication of giving birth. If you have postpartum depression, prompt treatment can help you manage your symptoms and help you bond with your baby. https://www.mayoclinic.org/diseases-conditions/postpartum-depression/symptoms-causes/syc-20376617 What Is Postpartum Depression? Postpartum depression (PPD) is a complex mix of physical, emotional, and behavioral changes that happen in some women after giving birth. According to the DSM-5, a manual used to diagnose mental disorders, PPD is a form of major depression that begins within 4 weeks after delivery. The diagnosis of postpartum depression is based not only on the length of time between delivery and onset but on the severity of the depression. Postpartum depression is linked to chemical, social, and psychological changes that happen when having a baby. The term describes a range of physical and emotional changes that many new mothers experience. PPD can be treated with medication and counseling. The chemical changes involve a rapid drop in hormones after delivery. The actual link between this drop and depression is still not clear. But what is known is that the levels of estrogen and progesterone, the female reproductive hormones, increase tenfold during pregnancy. Then, they drop sharply after delivery. By 3 days after a woman gives birth, the levels of these hormones drop back to what they were before pregnancy. In addition to these chemical changes, the social and psychological changes of having a baby create an increased risk of depression. Most new mothers experience the "baby blues" after delivery. About 1 out of every 10 of these women will develop a more severe and longer-lasting depression after delivery. About 1 in 1,000 women develop a more serious condition called postpartum psychosis. Dads aren’t immune. Research shows that about 1 in 10 new fathers get depression during the year their child is born. https://www.webmd.com/depression/postpartum-depression
  10. எந்த பெண் கூப்பிடுவாள் என ஏங்கி தவிக்கும் ஆண்கள் அதிகமாக வாழும் உலகம் இது ...இதில எவன் துஸ்பிரயோகம் பற்றி பொலிஸில் புகார் கொடுப்பான்😅
  11. அண்மையில் இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவர் தனது கதையை கூறினார் ..அவருக்கு இப்ப வயது 60 க்கு மேல்... இந்திய இராணுவம் இவரை சுற்றிவளைப்பின் பொழுது கைது செய்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டனர் .அணிந்திருந்த அரைகாற்சட்டையுடன் . தமிழ் தெரிந்த ,தமிழ்படங்கள் படங்கள் பார்க்கின்ற மேலதிகாரி போல் இருக்க வேணும் இவரை கண்டவுடன் டேய் இவனை பார்த்தால் கமலஹாசன் போல இருக்கிறது இவனை வீட்டை கொண்டு போய் விடுங்கோடா என கூறி அனுப்பியுள்ளார் இவர் போக பயத்தில் மறுப்பு தெரிவித்து அங்கயே நின்றாராம் .(போக சொல்லி பின்னால் சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில்) பின்பு அதிகாரி தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டாராம்... கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்... இந்தியன்2 படத்தில் வரும் கமல் போலத்தான் அவர் இப்ப இருக்கின்றார்
  12. புலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂
  13. ஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். அதற்கு... சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣
  14. அர்ச்சனா வைத்தியர் தானாகவே தான் அந்த இறந்த பிள்ளையின் குடும்பத்தோடு போண் எடுத்து கதைச்சு எல்லா விபரங்களுக்கும் கேட்டு அறிந்த பின் தான் வருகிறேன் என்று சொல்லி உள்ளதாக அவரது லிங்கிலயே பார்த்திருக்கிறேன்.மக்கள் சும்மா எங்க நியமனம் கிடைக்குதோ அங்கே வாங்களன் என்று சொல்வது வழமை தானே.அது மட்டுமல்ல வேறு யாரும் போய் அந்த குடும்பத்திற்கு உபத்திரவம் குடுக்காதீங்கோ,அப்படி யாரும் வந்தால் அயலவர்கள் யாராவது பார்த்து திருப்பி அனுப்பி விடுங்கோ என்று அர்ச்சனா சொல்லி இருந்தார்..இன்னும் சாவகச்சேரி பிரச்சனையே முற்றுப் பெறாதவரயில் சும்மா இருந்திருக்கலம், இருக்கலாம் ஏன் ஓடு பட்டு திரிந்து தானே பிரச்சனைகளை விலைக்கு வாங்கிறார்.அவரை குறை சொல்வதோ அல்லது குறை கண்டு கொள்வதோ என் நோக்கம் அல்ல..ஆனால் நிறைய பிழை விடுகிறார்.எங்க போனாலும் யூருப் வால் பிடியள் .
  15. மன்னார் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நீதி, நியாயம் கேட்கும் துணிவு ஒருவருக்காவது உள்ளது. இதை பாராட்டத்தானே வேண்டும்?
  16. நீங்கள் எல்லோரும் முட்டாள்தனமாக எந்த நடைமுறை சார் சாத்தியமான அணுகுமுறையும் இன்றி வாய்போன போக்கில் தூற்றுகிறீர்கள். ஆதலால் நீங்கள் எல்லோரும் தமிழ்த் தேசியவாதிகள். நான் தூற்றவில்லை. ஆதலினால் துரோகி, அடிவருடி. யதார்த்தவாதி வெகுசன விரோதி என்று காரணம்இல்லாமலா சொன்னார்கள்? 😏
  17. 🤣.... சாஸ்திரியார் குசால் குமாரும் இதையே தான் சொல்லியிருக்கின்றார்............... யாழ் களத்தில் ஏற்கனவே இந்தச் செய்தி வந்துவிட்டது................. ட்ரம்பும் இங்கே களத்தில் இருக்கின்றாரோ.......😜.
  18. 🤣.......... உலகம் ஈரானை சும்மா உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களே தாங்கள் வைத்திருக்கின்ற பழைய சாமான்களில் பழுதாகப் போய் விட்ட பாகங்களை புதிதாக எங்கே வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்....... இதில சண்டைக்குப் போ, சண்டைக்கு போ என்றால் அவர்கள் எங்கே போவது........
  19. ஒரு கூடை முழுக்க முட்டாள்களை போட்டால் என்ன நடக்கும்? எது நடக்குமோ அதுவே இங்கு நடக்கின்றது.
  20. பொது வேட்பாளருக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறார கள் போல இருக்கு. 😂
  21. திருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம். அதுவல்ல நான் கூற வந்த விடயம். உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை இயற்கை அல்லது செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே.. ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… அதுல, ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂 உங்களுக்கு Life Time settlement Confirm. Meera Ramesh
  22. வெற்றிலை வள்ளி கிழங்கு சிப்ஸ் ..
  23. கடன் குடுத்த நன்றிக்கடனுக்காகவாவது சிரிலங்கா அதிபர் மனிசியை கூப்பிட்டு தன்னோட வைச்சிருக்க வேணும்.
  24. கோத்தபாயாவுக்கு ஏற்பட்ட நிலைமை… இந்த மனிசிக்கும் ஏற்பட்டு விட்டது. 😂 கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தால்… இப்பிடித்தான் நடக்கும் போலை. 🤣
  25. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??? .... ரணிலுக்கு வாக்கு போடுமாறு சொல்லுவோர். செம்மறி ஆடுகள். என்றா ??? 🤣🙏. நான் ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்கு போடக்கூடாது என்று தான் சொல்லுகிறேன். அதற்கு என்னிடத்தில் ஆயிரம் காரணங்கள் உண்டு” ஆனால் ரணிலுக்கு வாக்கு போடுமாறு சொல்லுவோர். கூறும் காரணம் வேறு வழி என்ன??? என்பது மட்டுமே
  26. Published By: VISHNU 05 AUG, 2024 | 05:55 PM நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (4) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துகின்றேன். தற்பொழுது ஈழத் தமிழர் சிவாஜி கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன். ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவருடைய நிலைப்பாடு என்ன? அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாக கேட்டுத் தெரிந்து கொள்கின்ற நிலையில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல. பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன். https://www.virakesari.lk/article/190362
  27. சொத்து, பிரித்த பின்.... 😂 🤣
  28. சிறீசபாரட்ணத்தின் உத்தரவில் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் சுட்டுக் கொன்ற தாஸ் ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் கலந்துகொள்வதற்காக பிரபாகாரன் வெளியே வந்திருந்தார். புரட்டாதி 18 ஆம் திகதியுடன் மூன்று மாத கால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரவிருப்பதனால், அதற்கு முன்னர் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் சந்திப்பொன்றினை நடத்த இந்தியா முயன்று வந்தது. தலைவர் பிரபாகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலக்குமார் பிரபாகரனைப் பார்த்து "உங்களின் பொடியன்கள் தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் கொன்றதாக மக்கள் பேசுகிறார்கள்" என்று கூறினார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அதே மக்கள்தான் சிறியின் பொடியன்களே அவர்களைச் சுட்டதாகவும் கூறுகிறார்களே?" என்று பாலக்குமாரைப் பார்த்துக் கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சிறீசபாரட்ணம் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, "இல்லையில்லை, எனது பொடியன்கள் இதனைச் செய்யவில்லை" என்று மறுதலித்தார். ஆனால், இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்றது சிறீ சபாரட்ணத்தின் டெலோ உறுப்பினர்கள் தான். சிறீசபாரட்ணத்தின் நேரடி அறிவுருத்தலின்படியே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கான உத்தரவு சிறீசபாரட்ணத்தால் பின்வருமாறு வழங்கப்பட்டிருந்தது, "இரண்டு கூட்டணிக்காரர்களுக்கு மண்டையில் போடுங்கள்". டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த தாஸிற்கே சிறீசபாரட்ணத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தாஸ் இரு குழுக்களை இக்கொலைகளைச் செய்ய அனுப்பி வைத்திருந்தார். தர்மலிங்கத்தின் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த புளொட் அமைப்பின் சென்றியில் இருந்த உறுப்பினர்கள் அன்று வீட்டிற்கு வந்த காரினை அடையாளம் கண்டிருந்தனர். புளொட் சார்பாக திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்டவரான தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் தனது தகப்பனாரின் படுகொலையில் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதை முற்றாகத் தவிர்த்திருந்தார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அமைப்புக்களில் ஒன்றே எனது தகப்பனாரைப் படுகொலை செய்தது" என்று மட்டும் கூறினார். ஈழத்தேசிய விடுதலை முன்னணி த‌னது அமைப்பிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அவ்வறிக்கையில் டெலோ அமைப்பும் கைய்யொப்பம் இட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் எதற்காக சிறீசபாரட்ணம் கொல்வதற்கு முடிவெடுத்தார் என்பது இன்றுவரை தெரியாத புதிராகவே இருக்கிறது. சில காரணங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்தன. ஒரு தரப்பின் செய்தியின்படி ஏதோ ஒரு உளவுத்துறையின் ஏவலின்படியே சிறீசபாரட்ணம் இக்கொலைகளைச் செய்தார் என்று கூறப்பட்டது. இன்னொரு தரப்போ, புலிகளும் டெலோ அமைப்பும் கலந்துகொள்ளாத‌ நிலையில், ஈழத்தேசிய விடுதலை முன்னணி ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும், கூட்டணி பேச்சுக்களில் கலந்துகொள்ளச் சம்மதித்தமைக்காகவே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம், புலிகள் மீது தமிழ் மக்களிடையே ஏற்பட்டு வந்த நன்மதிப்பினையும், அவர்களுக்கான ஆதரவினையும் கள‌ங்கப்படுத்தவே இப்படுகொலைகளைப் புரிந்துவிட்டு அவற்றினை புலிகள் மீது சுமத்த சிறீ எத்தனித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்கொலைகளுக்கான காரணங்கள் எவ்வாறானவையாக இருந்தபோதும், இக்கொலைகளை தனது ஆதாயத்திற்காக இலங்கையரசு பாவித்துக்கொண்டது. தில்லி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான ஒற்றைக் காரணமாக ஆளாளசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகளைப் பாவித்த ஜெயார், தமிழர் மீதான யுத்தத்தில் புதிய உத்தியொன்றைனை அறிமுகப்படுத்தினார். புரட்டாதி 2 ஆம் திகதி மாலை பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை காவிச் சென்ற இராணுவ வாகனம் மீது போராளிகள் தாக்குதல் நடத்த எத்தனித்த போது, அண்மையில் வாங்கப்பட்ட புதிய உலங்குவானூர்திகளைக் கொண்டு போராளிகள் மீது இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. மிகவும் தாழ்வாகப் பறந்துவந்த உலங்கு வானூர்திகள் அப்பகுதியெங்கும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டன. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்ட மேலும் பலர் காயமடைந்தனர். பருத்தித்துறையில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டமை அதுவரை நடந்துவந்த போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. போராளிகளுடனான சண்டைகளில் நிலப்பரப்பு மீதான ஆதிக்கத்தைச் சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியிருந்த இராணுவத்தினருக்கு வானில் இருந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கிடைத்தமையானது, போராளிகள் மீது தமது ஆதிக்கம் மீள நிலைநாட்டப்பட்டுவிட்டது என்கிற மனோநிலையினை ஏற்படுத்தியது. 1985 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து அரச படைகள் போராளிகளின் நிலைகள் என்று தாம் கணிப்பிட்ட பகுதிகள் மீது தொடர்ச்சியாக வாந்தாக்குதல்களை நடத்துவதை வாடிக்கையாக்கிக் கொண்டன. ஆனால், நிலப்பரப்பு மீதான போராளிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. புரட்டாதி 2 ஆம் திகதி ஏறாவூர் பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய நன்கு ஆயுதம் தரித்த போராளிகள் ஏழு பொலீஸாரைக் கொன்றதோடு இன்னும் 12 பேரைக் காயப்படுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது போராளிகளால் கிர்ணேட்டுக்கள், ஆர்,பி.ஜி உந்துகணைகள், மோட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாக அரசு கூறியது.
  29. பையா.... விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் தங்கும் ஹோட்டேலில் வைத்துதான், உடலுறவு கொள்ள வேண்டும் இல்லை. இந்த விஷயம் எல்லாம், "கோச்" சுக்கு சொல்லிப் போட்டு செய்யிற காரியமும் இல்லை. 😃 செய்ய வேண்டும் என்று... ஆர்வம் வந்திட்டுது என்றால், "கோச்" சை சுழிச்சுக் கொண்டு போக CCTV கமெரா இல்லாத ஆயிரம் வழிகளும், இடங்களும் உள்ளன.😂 அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த விளையாட்டை அதுக்கிடையில் மறந்து போனீர்களா பையன். 🤣
  30. இச்செய்தியை என் மகளிடம் இன்று காட்டினேன். இது போன்ற சிகிச்சைகள் தான் வேலை பழகும் வைத்தியசாலையில் தினமும் சாதாரணமாக நடப்பதாகவும் தான் அந்த ரோபோக்களுக்கு உதவுபராக பலமுறை இருப்பதாகவும் சொன்னார். சிலவேளைகளில் 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் என்பது சீனாவின் விரும்பிகளுக்கு துள்ள இடம் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு ஏதாவது என்றால் சீனா தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தால் நன்று. வரவேற்க தக்கது.
  31. நீங்கள் தாராளமாக நினைக்கலாம். உங்களுக்குத் தடை போட முடியுமா? 😂 👇 Why do some animal parents eat their young? Zookeepers at the Smithsonian National Zoo in Washington, D.C. recently had to remove a sloth bear cub from its mother after she ate two other cubs she had just given birth too. While it might seem counterintuitive for mothers to eat their offspring, infanticide in the wild is well-documented, said Doug Mock, professor of biology at the University of Oklahoma. Animal parents have limited resources to dedicate to their offspring and if the baby is sick or weak, carnivores have been known to consume babies or abandon them. Cannibalism gives the mother the calories she needs to raise her healthy babies or get pregnant again. https://www.pbs.org/newshour/classroom/daily-videos/2023/08/why-do-some-animal-parents-eat-their-young#:~:text=Animal parents have limited resources,consume babies or abandon them. Why some animals eat their offspring?? Eating your offspring may sound unthinkable, but animals from fish to birds are known to do it. Scientists have been unsure why such a behavior would have evolved, but a new study sheds light on the factors that may drive some parents to eat their young. https://www.nbcnews.com/news/amp/wbna21790572 Predators Eat Babies? Predators eat babies! They found lions tend to pray on far more young animals during the spring and summer months then previously thought which results in the killing of more animals not just due to the size of the animals but the heat causing the meat to spoil and the need for a fresh kill. https://gothunts.com/predators-eat-the-young/#:~:text=They found lions tend to,need for a fresh kill.
  32. மேற்குநாடுகள் சீனாவிடம் பிச்சையெடுக்க வேண்டிய தூரம் தொலைவில் இல்லை.
  33. இது, சஜித் பிரேமதாசாவுக்கு தெரியுமா? 😂 🤣
  34. ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!! ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் கிராமங்களில் 300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. Follow On WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaTYF6cKAwEdCSa8cq2J @Kandiah57 அண்ணை சில நாடுகள் தங்கப் பதக்கம் எடுக்காததற்கு இதுக்கும் ஒரு காரணமாக இருக்குமோ. 😂
  35. இதோ நான் சொன்னதற்கான அடுத்த கட்டம்: மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/
  36. ரணிலுக்கு சுமந்திரன் கொடுத்த ஆதரவைக்கண்டு ..மோடி மாத்தையா அதிர்ச்சி அடைந்திட்டரர்...யாழுக்கையும் வந்தாரெண்டால்...மனுசன் இலங்கைக்கே .நினைச்சுப்பாராது...
  37. ரஜீவ் வடிவமைத்த தில்லி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் கொலைகளைச் சாட்டாகப் பாவித்த ஜெயார் பிரபாகரனின் அறிக்கையினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கை உட்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பத்திரிக்கைகள் அதனை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்தன. யாழ்ப்பாணத் தமிழர்களும், பொலீஸாரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக குற்றஞ்சாட்டி வந்தனர். அவர்களின் மரணச் சடங்குகளில் உரையாற்றிய பலரும் புலிகளை இக்கொலைகளுக்குக் காரணம் என்று மறைமுகமாக விமர்சிக்கத் தவறவில்லை. இக்கொலைகளையடுத்து இலங்கை அரசும், இந்தியாவும் தமது அதிர்ச்சியையும், கவலையினையும் வெளியிட்டன. செய்தியாளர்களுடன் பேசிய ரஜீவ் காந்தி "சில தமிழ்த் தீவிரவாதிகள் ஏனைய தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறார்கள்" என்று ஆத்திரத்துடன் கூறினார். ஆனால், இக்கொலைகளை புலிகளே செய்தார்கள் என்று முடிப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். ஆனால், கொழும்பில் இலங்கையரசு இக்கொலைகளைப் புலிகளே செய்ததாக வெளிப்படையாகவே கூறத் தொடங்கியிருந்தது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி, மலினப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் ஜெயவர்த்தன இறங்கினார். தமிழீழ விடுதலை அமைப்புக்களை, "ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய வந்திருக்கும் பயங்கரவாதிகள்" என்று அவர் அழைத்தார். அதுலத் முதலியோ இன்னொரு படி மேலே சென்று புலிகளை "கொலைக்குழு " என்று வர்ணித்தார். ரஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட தில்லி ஒப்பந்தத்திற்கு பெளத்த துறவிகளும், எதிர்கட்சியினரும் கொடுத்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட ஜெயவர்த்தன முயன்று வருகையில், அதற்கான ஆயத்தங்களை லலித் அதுலத் முதலி செய்யத் தொடங்கியிருந்தார். அந்நாட்களில் பிரதான பெளத்த துறவிகளும், சிங்கள இனவாதக் கட்சிகளும் இணைந்து சிங்கள இனத்தையும் நாட்டையும் காப்பதற்கான தேசிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவும் முக்கிய உறுப்பினராக இணைந்துகொண்டிருந்தார். தில்லி ஒப்பந்தத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று செயலில் இறங்கியிருந்த கொழும்பின் சிங்கள, ஆங்கில‌ப் பத்திரிக்கைகள் சிங்களவர்களின் அச்சமான மாகாண சபைகள் எனும் பேயிற்கு உயிர்கொடுத்து, ரஜீவ் காந்தி மாகாண சபைகளூடாக சமஷ்ட்டி ஆட்சியை இலங்கையில் கொண்டுவரப்போகிறார் என்றும், அதனூடாக நாடு இரண்டாக பிளவுபடப் போகின்றது என்றும் புலம்ப ஆரம்பித்தன. மந்திரிசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்காத போதும், புரட்டாதி 4 ஆம் திகதி கூடிய மந்திரி சபையில் ரஜீவின் தில்லி ஒப்பந்தம் குறித்து ஜெயவர்த்தன பேசினார். உடனடியாகப் பேசிய பிரேமதாச மாகாணசபைகளை அமைக்க விடமாட்டோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய லலித், அரசியல் தீர்வுகுறித்துப் பேசுவதற்கான சூழ்நிலை தற்போது நாட்டில் இல்லை என்று கூறினார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து மந்திரிசபையில் இருந்த ஏனைய இனவாதிகள் தமிழர்களுக்கு தீர்வு எதுவும் வழங்கப்படக் கூடாது என்று தம் பங்கிற்கு ஆர்ப்பரித்து அமர்ந்தனர். அன்று மாலையே இந்திய தூதர் டிக்ஷிட்டை தனது உத்தியோகபூர்வ‌ வாசஸ்த்தலமான வோர்ட் பிளேசிற்கு அழைத்த ஜெயார் யாழ்ப்பாணத்தில் இரு ஜனநாயக அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டமையானது நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்றும் சிங்கள மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் முறையிட்டார். மேலும், தமிழர்களுக்கு அரசியல்த் தீர்வினை வழங்குவதற்கு முன்னர் பயங்கரவாதிகளை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் தனது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆகவே, தனது இளைய சகோதரரும் இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஹெக்டர் ஜெயவர்த்தன தில்லியில் ரஜீவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று தமது அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக டிக்ஷிட்டிடம் தீர்க்கமாக ஜெயார் கூறினார். தில்லி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் யாப்பு மாற்றங்களும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பும், வழங்கப்படவிருக்கும் அதிகாரங்களும் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பிற்கு எதிரானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றையாட்சித் தன்மைக்கும் ஆபத்தானது என்றும், ஆகவே அவற்றினை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்று தமது அரசாங்கம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அன்று இரவு டிக்ஷிட்டுடன் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஜெயாரின் தீர்மானத்தை மீளவும் வலியுறுத்தினார். தான் வடிவமைத்த தில்லித் தீர்மானத்தை ஜெயவர்த்தன உதாசீனம் செய்து நிராகரித்தமை ரஜீவிற்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே, உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு டிக்ஷிட்டடம் அவர் கூறினார். புரட்டாதி 7 முதல் 14 வரையான ஒருவார காலப்பகுதியில் தில்லியில் தங்கியிருந்த டிக்ஷிட், ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடனும் நீண்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். கொழும்பு திரும்பிய டிக்ஷிட்டிடம் ரஜீவ் ஒரு செய்தியை அனுப்பினார். அதாவது, தில்லி ஒப்பந்தத்தினை மேலும் மெருகூட்டி, வரவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் தன்னை ஜெயார் சந்திக்கும்போது ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்று ரஜீவ் கோரியிருந்தார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் ஒன்று ர‌ஜீவினால் வழங்கப்பட்டிருப்பது கண்டு ஜெயார் மகிழ்ச்சியடைந்திருந்தார்.
  38. இசை உலகை திரும்பி பார்க்க வைத்த இசையில் ஒன்று 🎹
  39. கொத்தவரங்காய் கிரேவி........ஒருமுறை செய்து பாருங்கள்......! 😁
  40. அண்ணை அங்குள்ள மக்கள் தான் அழைத்திருக்கிறார்களாம்.
  41. கம்பவாரிதி இப்போது என்ன கூற வருகின்றார்? அரசியல் செய்வது ஒன்றும் தவறான விடயம் இல்லை. இலவச கல்வி பெற்று மருத்துவராகி பின் சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவ தொழிலை தமது வசதிக்கேற்ப பயன்படுத்துவது தவறு. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நோயாளிகளை ஏமாற்றுவது தவறு. மருத்துவர் அர்ச்சனா அரசியலில் ஈடுபடுவதால் குடி மூழ்கி போகாது.
  42. CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால்.... நான் நினைக்கிறேன் கொரியன் காரன் தான் புகுந்து விளையாடியிருக்கிறான். ருசியனும் சப்பை மூக்கரும் கொரியனும் என்று மூவரும் கூட்டுச்சேரக்கியே நினைத்தனான். 😄😄
  43. 'அருஞ்சொல்' இதழ் அம்பேத்கரின் பத்து கடிதங்களை வெளியிட்டிருக்கின்றது. அம்பேத்கரின் கடிதத் தொகுப்புகள் ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதில் இருந்து பத்து கடிதங்களை தெரிந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இரண்டு கடிதங்கள் இங்கு கீழே உள்ளது. அம்பேத்கர் நேருஜிக்கு எழுதியது ஒன்று, மற்றயது நேருஜி எழுதிய பதில் கடிதம். அன்றைய அரசியல்வாதிகளின் ஆற்றலும் திறமையும், இன்று அரசியலில் இருப்போரின் ஆற்றலும் திறமையும் அன்று மலையாகவும், இன்று மடுவாகவும் இருக்கின்றது. அதே நேரத்தில், வசதி வாய்ப்புகளில், அன்று அரசியலில் இருந்தோர் மடுவாகவும், இன்று இருப்போர் மலையாகவும் இருக்கின்றனர். https://www.arunchol.com/book-of-ambedkar-letters ************************* 26, அலிப்பூர் சாலை, தில்லி, தேதி: 14 செப் 1956. அன்புக்குரிய பண்டிட் ஜி, நான் இப்போது எழுதி முடித்த ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலின் உள்ளடக்கப் பகுதியின் அச்சிடப்பட்ட இரண்டு கையேட்டு நகல்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் அச்சகத்தில் உள்ளது. உள்ளடக்கத்தைப் பார்க்கையிலேயே இது எவ்வளவு கடுமையான உழைப்பைக் கோரும் பணி என்று உங்களுக்குப் புரியும். 1956 செப்டெம்பரில் புத்தகம் விற்பனைக்கு வந்துவிடும். ஐந்து வருடங்கள் இந்தப் புத்தகத்திற்காக உழைத்துள்ளேன். புத்தகத்தின் தரத்தை உள்ளடக்கக் கையேடு சொல்லும். அச்சிடுவதற்கு மிகவும் அதிகமாகக் கிட்டத்தட்ட ரூ. 20,000/- வரை செலவாகும். இது என்னுடைய சக்திக்கு மிஞ்சியது. எனவே எல்லாத் தரப்பினரிடமும் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறேன். புத்தரின் 2500 வருட நினைவைக் கொண்டாடும் இந்த வருடத்தில், அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்களுக்கும் எல்லா நூலகங்களுக்கும் வழங்கும் விதமாக இந்திய அரசு ஐந்நூறு பிரதிகளை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பௌத்தத்தின்மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிவேன். எனவேதான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் உண்மையுள்ள, பி.ஆர். அம்பேத்கர். ___________________________________________________________________ எண்:2196-றிவிபி/56, புதுதில்லி, செப்டம்பர் 15, 1956. அன்பான அம்பேத்கர், தங்கள் 14ஆம் தேதிக் கடிதத்திற்கு. நீங்கள் கேட்டுக்கொண்டபடி அதிக அளவு உங்கள் புத்தகத்தின் பிரதிகளை வாங்க இயலுமா என்பது சந்தேகமே. புத்த ஜெயந்தியில் வெளியீடுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தற்போது பூர்த்தியாகிவிட்டது. உண்மையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிட்டது. எங்களால் நிதி அளிக்கப்பட வேண்டிய பௌத்தம் குறித்த சில நூல்கள் இதனால் மறுக்கப்பட்டது. இருந்தும் தங்கள் கடிதத்தைப் புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன். புத்த ஜெயந்தியின்போது வெளிநாட்டினர் பலரும் வருவார்கள். தில்லியிலோ மற்றெங்கோ விற்பனைக்கு வைப்பீர்களென்றால் அதிக அளவில் புத்தகம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். தங்கள் உண்மையுள்ள, ஜவஹர்லால் நேரு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.