Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15787
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3043
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20004
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    4036
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/03/25 in all areas

  1. தெரியும்...புது டெக்னிக்...அவசரதேவைக்கு பாகிஸ்கடைக்கு பால் வாங்கப்போனேன் ..அங்கு 2 வீத பால் பக்கட்டுக்கள்... காலாவதி திகதியுடன் கிடந்தன ..கவுண்டரில் நின்ற நானாவிடம் கேட்டேன்...இவை திகதி முடியுது ..வேறு தரமுடியுமா என்று....அவர் சிரித்தபடி சொன்னார் ...இதை கொண்டுபோய் பிறீசரில் போட்டுவிட்டு ஒருமாதம் வரையும் பாவிக்கலாம் என்று....நானும் சிரித்தபடியே ..போனால் போகுதென்று ..4 வீத சிவப்பு பக்கட்டை எடுத்துக் கொண்டு ...வந்துவிட்டேன்.... வீட்டில் அந்த சிவப்புப்பை முடியுமட்டும் வாங்கின பேச்சு ... ரீங்காரம் செய்யுது
  2. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மக்களே அமைதி அமைதி அமைதி.
  3. கடந்த வியாழக்கிழமை படுபட்சி நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் (கனடாவில் வாங்க விரும்புகின்றவர்கள் காலம் செல்வம் அண்ணையிடம் இருந்து வாங்க முடியும்). அவலமும் சுவாரசியமும் நிரம்பிய ஒரு நாவல். இலங்கையில் முதலாவது விமானத்தை செய்ய எத்தனித்த ஒரு தமிழ் இளைஞன் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் எவ்வாறு அணுகப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, வாழும் நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு, இன்னொரு தேசத்தில் அகதியாக தன் கனவை தொலைத்து விட்டு, தன் மகளின் கனவாவது நனவாகட்டும் என்று மிச்சக் காலத்தை வாழ்கின்றான் என்பதைச் சொல்லும் நாவல். இதனை எழுதிய டிலுக்ஸன் மோகன் இவ் நாவலை Autofiction என்றே குறிப்பிட்டு இருக்கின்றார். கற்பனையும் சுய அனுபவமும் இணைந்த ஒரு நாவல் என. ஆனால் இவர் இப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்கலாம். பேட்டிகளிலும், புத்தக வெளியீடுகளிலும் இந்த நாவல் முற்றிலும் தன் சுயசரிதை என அடித்து விட்டமையே இங்கு பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் மற்றும் நெடுமாறன் சொல்வது (இருவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) சரியாகவே எனக்கு தோன்றுகின்றது. அத்துடன் நாவல் முழுதும் காலப்பிழைகள் பல உள்ளன. இறுதி யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படும் கதையில், இறுதி யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் நிகழ்ந்தவையும் கலந்துள்ளன. ந.செ. இதனைக் குறிப்பிட்டும் உள்ளார். இலங்கை அரசு இராவணனின் புஷ்பக விமானத்தை தேடப் போவதாகவும், அது தொடர்பான தகவல்கள், வரலாற்று குறிப்புகள், ஆதாரங்கள் வைத்துள்ளவர்களின் உதவிகள் தேவை எனவும் அறிவித்தது, என் நினைவுகளின் படியும் கூகிள் ஆண்டவரின் தேடல் விடைகளின் படியும் 2009 இன் பின். 2016 இல் நிகழ்ந்த கருத்தரங்கின் பின், 2020 இல் இவ்வாறு அறிவித்தது. ஆனால், டிலுக்ஸன் 2009 இன் முன் நிகழ்ந்த தன் கதையில் இதனை இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல் 1980 இல் முதல் விமானம் Pazmany PL-2 உம் தயாரிக்கப்பட்ட பின் 2009 இன் பின் Lihiniya MK (விமானியற்ற,unmanned aerial vehicle (UAV)), Lihiniya MK II எனும் Medium-range tactical unmanned aerial vehicle (UAV) உம் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞனது கனவு எவ்வாறு இனவாதத்தால் காவு கொள்ளப்பட்டது என்பதையும், அதன் போது நிகழ்ந்த சித்திரவதைகளையும் பேசும் இந்த நாவல், இலக்கிய நேர்மையற்று சொல்லப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. அந்த உண்மையை ந.செ கேள்வி கேட்பது காலத்துக்கு தேவையான ஒன்று. ஒருவர் இரவல் அனுபவங்களின்படி ஒரு நாவலை படைத்து விட்டு, அது தன் சொந்த அனுபவம் என்று சொல்வதை ஏற்க முடியாது.
  4. கடந்த வருடம் காலவதியான அரிசியைத் தான் குடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் கப்பலில் பொருட்கள் அனுப்ப பட இருக்கிறது என்று செயதிகளில் கேட்க முடிகிறது. கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டது என்றால். அவசர நிலையில் எப்படி இலங்கையின் இலச்சினை பைகளில் பொறிக்கப்பட்டது.?
  5. இதே நிலை தான் என் வீட்டில், நண்பர்கள மத்தியில், உறவுகள் மத்தியிலும். இன்று புலிகள் இல்லை. செயல்திறன் அற்ற தமிழ் அரசியல் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனைய சிங்கள கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லை. அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு. அனுர மீதான நம்பிக்கை, அவர் சார்ந்த கட்சி மீது இல்லை என்பதும், தனி மனிதன் மீதான நம்பிக்கை ஆபத்தானது என்பதையும் காலம் அவர்களுக்கு காட்டாமல், அவர்களின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமாகும் வாய்ப்புகள் வாய்க்கட்டும்.
  6. தமிழருக்கு இந்த நாட்டில் பிரச்சனையுண்டு, சிங்கள அரசியல்வாதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அநிஞாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள், அது தீர்க்கப்படவேண்டும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள், சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக, அரச கதிரையில் இருந்து கொண்டு பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறார். பதவியிழந்த பின் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் மத்தியில் காலந்தாழ்த்தியேனும் உணர்ந்தது வரவேற்கத்தக்கது, தைரியமானது. அதை நான் வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்குள்ளது. அதற்காக மற்றவர்களும் ஆதரிக்க வேண்டுமென பரப்புரையோ, வற்புறுத்தலோ பண்ண மாட்டேன். அவரது கை பலம் பெற்றால் நல்லது நிகழ வாய்ப்புண்டு காலந்தாழ்த்தியேனும். அதற்காக அவர் நிறைய சவால்களை சந்திக்க, கடக்க வேண்டியது நிதர்சனம். அவர் தன் சொந்தக்கட்சிக்காரர்களாலேயே விமர்ச்சிக்கவும் பழி சுமத்தவும் படலாம். ஏன் உயிருக்கு கூட உத்தரவாதமில்லை. அப்பாவிபோலிருந்த சஜித் எப்படி குரைக்கிறார் பாருங்கள். மற்றவர்கள் சும்மா விடுவார்களா?
  7. அதில். என்ன. தப்பு. ? இலங்கை. தமிழர்கள். இரண்டு. சிறந்த. தமிழ் தலைவர்களை. பெற்று இருந்தார்கள். அகிம்சைக்கு. தந்தை. செல்வா. ஆயுதப் போராட்டத்துக்கு. தலைவர் பிரபாகரன். எந்த. நன்மையும். தீர்வையும் பெற முடியவில்லை. இனியும். பெற முடியாது. என்னைப் பெறுத்த வரையில். இலங்கை. தமிழருக்கு ஒரு. சிறந்த. சிங்களத்தலைவர். தேவை. வேண்டும். அந்த தலைவர் தமிழருக்கு. பிரச்சனைகளுண்டு. என்றும். அதை நான். தீர்ப்பேன். என்றும். நாடு. முழுவதும். தமிழ். சிங்கள. முஸ்லிம். மக்கள் மத்தியில். சொல்ல வேண்டும். இதற்க்கு அனுர. சிறந்த. நபர். அவர். சொல்லியும். உள்ளார். எனவே ஆதரிக்கலாம். அல்லவா. ?
  8. இதை முதலும் எங்கேயோ எழுதியிருந்தேன். மீண்டும் எழுதுகிறேன். அண்மையில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பெற்ற தாய்மாரை போற்றி பாடல்பாடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி மேடையில் வாசிக்கிறார்கள். கிராமபுறத்தைச் சார்ந்த ஓரிருவரைத் தவிர மற்றையோர் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அழகாக வாசித்தார்கள். இந்த கொடுமையை வேறு பெருமையாக என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை காட்டினார்கள்.
  9. இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.html அம்மனும் அமிர்தமும் காட்சி 1 (அமிர்தவல்லி பாட்டி தரையில் அமர்ந்திருக்கிறார். பாட்டியின் மகள் பார்வதி கையில் வேலையுடன் அவசரத்துடன் அங்கும் இங்கும் ஓடிகிறார். பாட்டியின் பேத்தி லக்க்ஷனா மொபைல் போனை நோண்டியபடி இருக்கிறார். வீட்டு போன் அடிக்கின்றது.) அமிர்தம்: யாராவது அந்த போனை எடுங்கோவன். (லக்க்ஷனாவை நோக்கி) இவள் ஒருத்தி காதுக்குள்ள ஒன்றை போட்டுவிடுவாள். எங்கட காலத்தில காது கேட்காவிட்டால் மிஷின் போடுவினம், இப்ப காது கேட்கக்கூடாது என்று போடினம். பார்வதி: (கொஞ்சம் அதட்டலாக) அது சும்மா சும்மா அடிக்கும், எடுக்கத் தேவையில்ல. அமிர்தம்: யாரோ ஒரு ஆள் எங்கட நம்பரை தேடி எடித்து அடிக்கிறான், எடுக்காமல் விடுகிறது மரியாதை இல்லை. நாலு சனத்தை மதிச்சு பழகவேண்டும். இப்ப சனமும் இல்ல, சாத்திரமும் இல்ல, ஆத்திரம் மட்டும்தான் எல்லாரிட்டயும் இருக்குது. லக்க்ஷனா: (காதிலிருந்து கழட்டியபடி) அம்மாச்சி, ம்ம்ம்…........ இப்பிடித்தான் நீங்கள் ஒருவனை மதிச்சு, அவனும் எறும்புக்கு மருந்து அடிக்க வந்து, இப்ப இந்த தெருவில ஒரு வீட்லயும் எறும்பே இல்ல. எல்லா எறும்பும் எங்கட வீட்லதான் குடியிருக்கிது. பார்வதி: நான் அவனோட எவ்வளவு சண்டை போட்டன்................... அவன் கடைசியா உங்கட வீட்ல யாருக்கோ சர்க்கரை வியாதி இருக்கு, எறும்பு இந்த வீட்டைவிட்டு போகவே போகாது என்று சாபம் போட்டுவிட்டு போனான். அமிர்தம்: வயசு போனா எல்லாருக்கும் அது வரும். சொல்லிக்காட்டத் தேவையில்ல. நாங்கள் என்றாலும் நல்லா ஓடியாடி உழைச்சோம்......... இப்பத்தான் இது எல்லாம் வருது............ இவ்வளவு நாளும் கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்பிடியே இருந்தனாங்கள்தானே. பார்வதி: நான் ஏன் சொல்லிக்காட்டிறன்? வந்தவனுக்கு தேவையில்லாத வீட்டுக் கதைகளை சொல்லி, அவன்தான் வாசலில நின்று எல்லாருக்கும் நியூஸ் வாசிச்சு விட்டுப்போனவன். அமிர்தம்: (மெல்ல எழுந்தபடி) லக்க்ஷனா, அந்தக் கண்ணாடியை எடுத்து தா பிள்ளை. ஏதாவது நியூஸ் பார்ப்பம். உறவுக்கு பகை கதை என்று என் கதை ஆயிட்டுது. (லக்க்ஷனா காதில் விழாததால் அசையாமல் இருக்க, பார்வதி கண்ணாடியை எடுத்துக்கொடுக்கிறார்.) அமிர்தம்: (கண்ணாடியை வாங்க்கிக்கொண்டே) நான் என்ரை பேத்தியைத்தானே கேட்டனான்................ பார்வதி: அவவின்ட கண்ணாடியையே நான் தான் தேடவேண்டும். இந்த வீட்ல மனிசரையும் அவை அவையின்ட சாப்பாட்டுக் கோப்பையையும் தவிர மற்றதெல்லாம் மறைந்து மறைந்து தோன்றும். ஒரு நாளுக்கு நானும் இப்படியே மறைந்து போகிறன்............... அமிர்தம்: (சிரித்தபடியே) அவசரப் படாத மகளே, மனிசர் மறைந்தா திரும்ப தோன்றுவினம் என்று உறுதியா சொல்ல முடியாது............. நீ வேற புண்ணியம் செய்தவள்.............. இல்லாட்டி எனக்கு மகளாக பிறந்திருப்பியே? (பார்வதி காதில் வாங்காமல் செல்கிறார். அமிர்தம் எழும்பி பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.) அமிர்தம்: கடைக்கு போன பெண் கடைசிவரை திரும்பவில்ல................... எப்படி திரும்பும்? வீட்ல அதுக்கு என்ன கொடுமையோ? எங்கயும் கிணத்திலயோ குளத்திலயோ குதிச்சு இருக்குமோ................... சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் நீச்சல் வேற இப்ப தெரியும். நான் தான் ஒன்றையும் பழகாமல் இருந்திட்டன். லக்க்ஷனா: அம்மாச்சி, அடுத்த வரியையும் படியுங்கோ. அமிர்தம்: காரியச்செவிடு என்று சொல்லுறது, கொம்மா இவ்வளவு சத்தம் போட்டும் தவம் கலையாமல் இருந்தாய். ம்ம்ம்…….அடுத்த வரியில என்ன இருக்குது…பக்கத்து தெருவில பையனும் மிஸ்ஸிங் ஆச்சரியக்குறி ஆச்சரியக்குறி. இதென்னடி ரெண்டு நியூஸை கலந்து போட்டிருக்கிறாங்கள். (பார்வதி உள்ளே வருகிறார்.) பார்வதி: பாட்டியும் பேத்தியும் இப்படியான கதை என்றால் சிறப்பாக ஆராய்ச்சி செய்வீங்களே. அது ரெண்டு கதை இல்ல, ஒரு கதைதான். ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியிட்டுதாம். அமிர்தம்: வேலியில இருக்கிற கதியால இழுத்துக்கொண்டு ஓடுகிற மாதிரி சாதாரணமாய் சொல்லுகிறாய். லக்க்ஷனா: அதொன்றும் அப்படியில்ல, அதுகள் விரும்பியிருக்கும், வீட்டுக்காரர் எதிர்த்திருப்பினம், வேற என்ன வழி இருக்குது? அமிர்தம்: என்னடி பிள்ளை, ஆ ஊ என்றா ஓடிறம் மறையுறம் என்று பீதியை கிளப்பிகிறீயள். ஒலிம்பிக் பக்கம் போய் ஓடுறதுதானே, பதக்கமும் கிடைச்ச மாதிரி.................... அதென்னடி பிள்ளை தணலை அள்ளி தண்ணிக்குள்ள கொட்டின மாதிரி ஒரு சத்தம் வருது. லக்க்ஷனா: உங்கட மகள் தான் மூச்சை புசுபுசுவென்று விடுகிறா. பார்வதி: தணலை தள்ளி தலையில கொட்டுங்கோ. பார்த்துப் பார்த்து வளர்த்துவிட, அவை ஓடிவினமாம், இவை பதக்கத்தோட நிற்பினமாம். பிள்ளையளுக்கு நல்ல புத்திமதி சொல்லுறத விட்டிட்டு, அதுகளோட சேர்ந்து கூத்து நடக்குது இங்க. அமிர்தம்: நான் எங்கயடி கூத்தாடிறன், சரியா நடக்ககூட முடியிதில்ல, முட்டி வாதம் வந்திட்டுது போல. பார்வதி: சும்மா கதையை மாத்தாதேங்கோ. டொக்டரிட்டை போனா, நீங்க நல்ல சுகமாக இருக்கிற மாதிரியும், டொக்டருக்குத்தான் ஏதோ வருத்தம் மாதிரியும் கதைக்கிறது. நீங்கள் சொல்லிச்சொல்லியே அந்தாளுக்கு இப்ப ஏதோ வந்துட்டுதாம். அமிர்தம்: அடியே, அந்தாளுக்கு வருத்தம் முதலே இருந்தது. நான் ஆட்களை பார்த்தவுடனேயே அப்படியே சொல்லிவிடுவன். அந்தாளுக்கு மூச்சு வாயாலயும் பேச்சு மூக்காலயும் வந்துகொண்டிருந்தது. பார்வதி: ஓம் ஓம், எல்லாரையும் நெளிச்சு இப்படியே நாக்கால மூக்கை தொடுங்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சனங்கள் எங்களை பழிக்கிறமாதிரி நடந்துவிடும். அமிர்தம்: அம்மா தாயே, நான் இனி ஒன்றும் சொல்ல வரவில்ல. பிறகு என்னாலதான் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லவும் வேண்டாம். சரி, மெதுமெதுவா இந்த கோயிலுக்கு ஒருக்கா போட்டு வாறன். (தொடரும்.......................)
  10. ஐயா! நீங்கள் சொல்வதில் தப்பில்லை, ஆனால் இதை சொல்வதற்கு நீங்கள் கையாளும் சந்தர்ப்பமே எங்களை சிந்திக்க வைக்கிறது. தமிழ் மக்களுக்கெதிராக, தொடர்ந்து அழிவுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டபொழுது அதை திசைமாற்றி அழிவுகளை குறைத்து மறைத்து மனிதநேய அமைப்புகளை வெளியேற்றி கோரத்தாண்டவம் ஆடும்போது நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்? ஏன் விமர்ச்சிக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை? அந்த ஏதிலி மக்களிடமே வாக்கு வாங்கி, அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லி பதவிகளை அனுபவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி அந்த மக்களுக்கெதிராக செயற்பட்டது ஏன்? நீங்கள் நிஞாயம் கேட்டால்; எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லா அரசாங்கத்திலும் ஒரே மாதிரியாக கேள்வி எழுப்பியிருந்தால் நீங்கள் சொல்வதை நம்பியிருப்போம், அது நிஞாயமானது. ஆனால் நீங்கள் அப்படியல்லவே, இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றே கேள்வி கேட்க்கிறீர்கள், குறை கூறுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். சுனாமி நிவாரணத்தை கொள்ளையடித்தனர். மஹிந்த, தான் அரசியலை கைப்பற்றியவுடன் அதற்குள் மறைந்துவிட்டது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அந்த மக்களின் பிரதிநிதிகளினதும் முக்கிய கடமை. அரசாங்கத்தை விட பிரதிநிதிகளின் பணி முக்கியமானது. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? முந்திக்கொண்டு அனுராவையோ அரசாங்கத்தையோ குறை கூறினால்; தங்களை மறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்த நேரத்திலும் குறை கூறுவதும் விமர்சிப்பதும் இவர்களது அரசியல். உதவி செய்யும் இவர்களின் கரங்களை அனுரா கட்டிப்போட்டுவிட்டாராம். அனுரா எதுவுமே செய்ய வில்லையா? அப்படியென்றால் ஒரு விமானி, கடற்படை வீரர்கள் இறந்தது, வெள்ளத்திலடித்துச்செல்லப்பட்டது எப்படி? ஒரு இடத்திலா அழிவு ஏற்பட்டது? நாடு முழுவதும் வெள்ளத்திலும் அழிவுகளிலும் தத்தளிக்கிறது. வடக்கில் இவ்வளவுபேரை கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மக்கள் தொகையை குறைத்து கூறி ஏற்படுத்தப்பட்ட அழிவை, அத்தனை துல்லியமான கணக்கை மறைத்து அழித்த அழிவுகளை மறைத்து சொன்னபோது யாரும் கேள்வி கேட்கவில்லை, விமர்ச்சிக்கவில்லை, அப்போது நிவாரணம் சரியாக சென்றதா? உணவோடு, மருந்தோடு வந்த கப்பலை திருப்பியனுப்பியபோது வராத மனிதநேயம் இப்போது எப்படி வந்தது? எத்தனை பொதுமக்கள், நிறுவனங்கள், விளம்பரம் தேடாமல், விமர்ச்சிக்காமல், குற்றம் கூறாமல், தமது பொறுப்புணர்ந்து செயற்படுகிறார்கள். இவர் படப்பிடிப்பு வைத்து பதவிக்காக, சுற்றி விமர்ச்சிக்கிறார். அதுசரி, இதுவெல்லாம் இவரது சொந்தப்பணத்திலா செய்கிறார்கள்? எதிலும் பதவி, பெயர் வேண்டும். அதற்காகவே கேள்வி கேட்பார், விமர்சிப்பார். அதை அனுரா இவருக்கு வழங்கியிருந்திருந்தால்; இவ்வளவு கேள்வி, விமர்சிப்பு, குறை இருந்திருக்காது. அதனாற்தான் எல்லா ஜனாதிபதிகளும் இவருக்கு பதவி கொடுத்து மக்களின் உரிமைகளுக்கு விலை கொடுத்து இவரை வாங்கி பக்கத்தில் வைத்திருந்திருப்பார்கள் போலுள்ளது. மக்களின் அழிவுகளிக்கிடையில் அரசியல் லாபம் தேடும் சாக்கடைகள். இனிமேலாவது நேரம், இடம், காலம், ஆட்கள் பாராது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கட்டும். இவர் விமர்சிக்கப்போய் தனது சுயரூபத்தை சொல்லிக்காட்டிவிட்டார். இதற்கு பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். உளறுவாயன் தன் வாயால் கெட்டார்.
  11. ஜேர்மன் நண்பரைப் போலவே உங்களுக்கும் விளக்கக் குறைவு போல தெரிகிறது: 1. சிங்களத் தலைவர்களின் இனவாதம், சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் - இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உயிர் பிழைக்க ஒரு ஈழவர் ரஷ்யா ஊடாகப் பயணித்து அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2. சில வருடங்களில் அமெரிக்காவில் அவர் தானே விரும்பி பிரஜையாக வந்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 3. அமெரிக்காவின் பிரஜையாக வந்த பின்னர், ரஷ்யாவைப் பார்த்து "எவ்வளவு அருமையான தலைமை அங்கே இருக்கிறது, எவ்வளவு அருமையான உள்ளூர்க் கொள்கைகள் இருக்கின்றன!" என்று விதந்துரைக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இதைக் காணும் ஒருவர், "அப்ப ஏன் அவர் ரஷ்யாவிலேயே தங்கவில்லை? அல்லது அங்கே போய்ப் பிரஜையாக முயலவில்லை?" எனக் கேட்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது தானே? இந்தக் கேள்வி ஏன் சிலருக்குக் கோபமூட்டுகிறது எனில், அவர்களுடைய "நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைக் கண்டு கொள்ளாதே!" 😎 என்ற போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டி விடுவதால் தான்!
  12. இந்தளவுக்கு ஒரு முட்டாள் இலங்கை யின் எதிர் கட்சித் தலைவராக என்றும் இருந்ததில்லை. எதையாவது உளறிக் கொட்டி அதை மக்கள் நம்பி தன்னை சனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என நினைக்கின்றார். அப்பன் பெயரை கெடுக்க வந்த பிள்ளை.
  13. புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம் - இந்த தற்குறித் தலைவர்களை எதிர்ப்போர் இலங்கையில் வாழாமல் அமெரிக்கா, ஐரோப்பா என்று வந்தது புரிந்து கொள்ளக் கூடியது தானே? புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம், இவர்களையெல்லாம் முன்னுதாரணத் தலைவர்களாகப் புகழும் ஒருவர் ஏன் அந்தந்த உதாரணத் தலைவர்களின் கீழிருக்கும் நாடுகளிலோ அல்லது ராஜபக்சக்களின் இலங்கையிலோ போய் வாழ முனையவில்லை என்பது நியாயமான கேள்வி தானே? இந்த வேறு பாடு புரியாமலா இவ்வளவு நாளும் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?
  14. அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார் நற்றிணை: சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது - நற்றிணை 58 மலைபடுகடாம் “கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” - பரிபாடல் அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” - மலைபடுகடாம். டிஸ்கி இன்று 3/12/2025 திருவண்ணாமலை அருள் மிகு அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது,,
  15. ஐரோப்பா 3 ஆண்டுகளுக்கு உக்கிரேனுக்கான போருக்கு தேவையான நிதியினை ஒதுக்க 2024 - 2027 முடிவெடுத்தது, ஐரோப்பிய ஒன்றியம் போரின் மூலமான தீர்வினையே கொண்டுள்ளது, ஆனால் நிலையான சமாதானம் எட்டப்பட வேண்டும் என கூறுகின்றது, இது நியோ லிபரலிசத்தின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் உக்கிரேனின் நிலைப்பாடாக ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையுடன் இந்த போரினை தொடர விரும்புகிறது. தற்போது கூட சமாதானத்தின் பின்னர் 800000 உக்கிரேன் இராணுவத்தினை ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக பேணப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டினை எடுக்க முனைகிறது, ஒரு நடு நிலையான நாடாக உக்கிரேன் ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்கும் இடையே உக்கிரேன் இருந்தால் அது அதிகமான அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பினை வழங்கும் எனும் அடிப்படையினை ஏற்காத நிலை காணப்படுகிறது. தற்போதய இரஸ்சிய இராணுவ வெற்றி அதனை அரசியல் வெற்றியாக்க முடியாவிட்டால் இரஸ்சியாவிற்கு இந்த போரினால் ஏற்பட கூடிய குறைந்த பட்ச நன்மைகள் கூட இல்லை என நான் கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), அதற்காகவே அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு அரசியல் ரீதியான தீர்வினை முன்னகர்த்த முனைகிறார்கள், மறுவளமாக ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் போர் மூலமான தீர்வு எனும் ஒரே தெரிவே உள்ளது. துரதிஸ்ரவசமாக தற்போது உக்கிரேன் போர் ஒரு இராணுவ ரீதியான தோல்வியினை நோக்கி செல்கிறது, ஆனால் அரசியல் ரீதியான எந்த தீர்வு திட்டமும் ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் இல்லை, அதனால் மோதல் உறை நிலை ஒன்றினை ஏற்படுத்தி அதன் பின்னர் உக்கிரேனினை பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைதி நடவடிக்கையினை விரும்புகிறது. மறுவளமாக இரஸ்சியா ஒரு நிரந்தர அமைதி தீர்வினை அதனது விருப்பிற்கேற்றவாறு ஏற்படுத்த முனைகிறது, இந்த போரினை உக்கிரேன் தொடர்ந்தால் உக்கிரேன் இதனை விட மோசமான இராணுவ அரசியல் சூழ்நிலையில் சிக்க நேரிடும், அதன் பேரம் பேசும் ஆற்றல் மேலும் மேலும் வீழ்ச்சியடையும், போர் முடிவினை உடனடியாக ஏற்படுத்தாவிடால் 2022 கிடைத்த தீர்வு நிலை போன்ற ஒரு தீர்வு தற்போது சாத்தியமற்றது அதே போல தற்போதுள்ள நிலை போல எதிர்காலத்தில் இருக்காது. ரசோதரன் நான் கல்வி சமூகம் என கூறியதனை நீங்கள் உங்களை நோக்கியதாக எடுத்து கொண்டுள்ளதாக புரிகிறது நான் கூறவந்தது தமிழ் மென்போக்கு சிந்தனை குழாத்தினரை (அரசியல் துறசார் நிபுணர்கள்), எமது சமூகத்தில் முறைசார் கல்வி துறைசார் கல்வி நிபுணத்தினர் (வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள்) பொதுவான கல்வி சமூகமாக பார்க்கிறார்கள் ஆனால் வெளிநாடுகளில் துறைசார் நிபுணத்தினர்கள் அனைவரையும் ஒவ்வொரு வேலையிலும் உள்ள துறைசார் நிபுணத்துவர்கள் போலவே அவர்களை பார்க்கிறார்கள், இ மித் ஒப் சிமோல் பிஸ்னஸ் எனும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் டெக்னீசியன் என வகுக்கிறார், வேறுபட்ட perception வேறுபட்ட புரிதலை உருவாக்கிவிடுகிறது.
  16. நீங்கள் தவறாக விளங்கிவீட்டீர்கள், அனுராவிற்கு மக்கள் ஆதரவு கூடுகின்றது, அவ்வளவே. ஏன் வீட்டில் கூட அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றது, அண்மை யாழ் போன போது பலர் அவரைபற்றி நன்றாக கதைத்தார்கள்.
  17. நீங்களோ நானோ புலம் பெயர்ந்த மண்ணில் இருந்துதான் எம் மனதில் உதிப்பவற்றை எழுதுகின்றோம்.அது நேர்மறையாக இருந்தாலும்சரி எதிர்மறையாக இருந்தாலும் சரி. நாம் எந்த மண்ணில் இருக்கின்றோமோ அதே மண்ணில் இருப்பவர்களும் உனக்கு ரஷ்யா பிடிக்கும் என்றால் அங்கே போய் இருந்து கதை என்பது போலவும் அங்கே குடியேறி இருக்கவேண்டியது தானே என்பது போல் எழுதும் போதுதான் நன்றி அரசியலை எதிர்க்க வேண்டி வருகின்றது. இதே நன்றி அரசியலைத்தான் ஒரு சில தமிழர்கள் இலங்கை இனவாத அரசியலுக்கு சார்பாக செய்துகொண்டிருக்கின்றார்கள். அப்படி பார்த்தால் ஜேர்மனி தான் அதிக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடாக இருந்திருக்க வேண்டும் சரி விடுவோம் அதைப்பற்றி அலச வேண்டாம்.😄 போர் வெற்றிக்காக நான் ரஷ்யாவை ஆதரிக்கவில்லை.உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் எனும் பெயரில் நடக்கும் அரசியலையே நான் எதிர்க்கின்றேன்.
  18. ஒரு தடவை இதே யாழ்களத்தில் தமிழ்நாடு முன்னேறவில்லை என்றேன். அதனால் நான் வாங்கிய ஊமைக்குத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல.😂 பணத்தை வைத்து ஒரு நாடு முன்னேறிவிட்டது என்பவர்களால் யார்தான் என்ன செய்ய முடியும்?😎 இந்த உலகில் தாய் மொழி அழிந்து போகும் நாடாக தமிழ்நாட்டை மட்டுமே பார்க்கின்றேன்.தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதையும்,தனியே ஆங்கிலத்தை பேசுவதையும் பெருமையாக நினைப்பதும் இந்த தமிழினம் மட்டுமே. இந்தியாவிலும் சில இனங்கள் உண்டு. அதை விட பந்தி பந்தியாக தமிழ் கட்டுரைகள் ஆராய்ச்சி விமர்சனங்கள் எழுதிக்கொண்டு இடையிடையே ஆங்கில சொற்களை உபயோகப்படுத்துவதும் ஒரு வித தற்பெருமையே இன்றி வேறொன்றுமுமில்லை. ஏனென்றால் தமிழில் உள்ள சொற்பதங்களை போல் வேறெந்த மொழியிலும் இல்லை. பல நிதர்சனமான தமிழ் ஆக்கங்களில் ஆங்கில சொற்களை பயன்படுத்துபவர்களுக்கு ஒருவித தமிழ் வரட்சி இருக்கின்றது என்பது கருத்து.
  19. அண்ணா, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பூர்வீகக் குடிகளை அழித்து, குடியேற்றங்கள் நிகழ்த்தி, இன்று வல்லாதிக்கம் செய்வோர்................... ஐரோப்பியர்களே, அண்ணா. அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களே. ஆங்கிலயர்களும், ஜெர்மனியர்களும், ஸ்கண்டினேவியர்களும், வேறு பல ஐரோப்பியர்களுமே அமெரிக்கர்கள். அன்றைய ஐரோப்பாவின் நீட்சி தான் இன்றைய அமெரிக்கா. முன்னர் ஜெர்மனியும், இங்கிலாந்தும், பிரான்சும், ஸ்பெயினும், இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் செய்த வல்லாதிக்கத்தையும், கொடுமையையும் தான் இன்றைய அமெரிக்கா வேறு வழிகளில் தொடருகின்றது . இவை எல்லாமே பாவப்பட்ட நிலங்கள் தான். கனடா, ஆஸ்திரேலியா கூட அதுவே. நான் முன்னர் வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தது போல, புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கருத்துகளை எழுதும் நாங்கள் எவரும் இதே கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக ஊரிலிருந்தால் எழுதியிருக்க முடியாது. மேற்கு நாடுகளில் குடிபுகுந்திருக்கும் நாங்கள் அனைவருமே பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தான். மேற்கு நாடுகள் கொடுக்கும் வசதிகளும், சுதந்திரமும், பாதுகாப்புமே எங்களுக்கு துணிவைக் கொடுக்கின்றன. இதே காரணங்களே, வசதி - சுதந்திரம் - பாதுகாப்பு, எங்களை இந்த நாடுகளை நோக்கி புலம்பெயர வைத்ததற்கான பிரதான காரணங்கள் கூட. இவை எங்களுக்கும், எங்களின் பின்னால் எங்களின் சந்ததிக்கும் கிடைக்காது என்று கருதப்பட்ட தேசங்களை நாங்கள் குடியேறுவதற்கு உகந்தவை அல்ல என்று தவிர்த்தோம். இந்த மேற்கு நாடுகளில் எங்களினதும், குடும்பத்தினதும், அடுத்த சந்ததிகளினதும் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்து விட்டு, தார்மீக மற்றும் ஆத்மாந்த ஆதரவுகளை எங்களுக்கு பிடித்தமான தேசங்களுக்கும், தலைவர்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். இது மிகச் சாதாரண ஒரு மனித இயல்பு. ஒரு நாட்டில் குடி இருந்து கொண்டு இன்னோரு நாட்டுக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பது ஒரு கேள்வியே அல்ல. இது மிக இயல்பானது. ஈழத்தமிழர்களுக்கு தீர்வு என்று இன்று கல்விச் சமூகம் என்ன சொல்கின்றது என்று வசீ சொல்லியிருந்ததை மட்டுமே மேற்கோளாக எடுத்திருந்தேன். இணைந்த மாகாணசபை போராட்டத்தின், நோக்கத்தின் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம் என்று தான் சொல்லியிருந்தேன். மற்றபடி இந்த விடயத்தில் கருத்து சொல்வதற்கு என்னால் முடியாது. அதற்கு திராணியும், மனப்பலமும் இல்லை. ரஷ்ய - உக்ரேன் போரை ஆதரிக்கவில்லை என்னும் உங்களின் நிலைப்பாடு மிகவும் சிறந்தது. இங்கு அமெரிக்காவிலும் அப்படியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதிபர் ட்ரம்ப் கூட போர்களில் நம்பிக்கை அற்றவர் என்றே தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். ஆனால், உக்ரேன் தோற்று தன் நிலத்தை இழந்து, ரஷ்யா வென்று தான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நான் கருத்துகளை முன்வைக்கின்றேன். இந்தப் போரை ஆதரித்தல்ல.
  20. இப்படி. என்றால். இலங்கையில் எவரும். எந்தவொரு. பாடத்திலும். தோல்வி. அடையமாட்டார்கள் அனைவரும். சித்தி அடைவார்கள் தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியார்கள். மற்றவர்களுக்கு. போதிப்பவர்கள். 50. க்கு 20. எடுத்தால். போதுமா ? இவர்கள் எப்படி. மற்றவர்களுக்கு. போதிக்க முடியும். ஜேர்மனியில். படிபிக்க சம்பந்தப்பட்ட. துறையில். கலநிதி. பட்டம். பெறவேண்டும் தமிழ் நாடு. முன்னேற. இன்னமும். 80%. பயணிக்க வேண்டும் இதுக்கை. நிற்க. வெக்கமாக. இருக்கிறது. போய்விட்டு. கொஞ்ச நேரம் கழிந்து வருகிறேன்.
  21. செய்தியே சித்தியடயவில்லை. பெயில் க்கு தமிழ் இல்லையா? இங்கே லண்டன் இல் தமிழ் திரைப்படத்துக்கு வரும் தமிழ்நாடு இளம் சந்ததியை பார்க்க கவலையும், கோபமும் வருகிறது. அநேகமானவர்களுக்கு, தமிழில் உரையாடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால், ஆங்கிலத்தில் தமிழ் வராமல் உரையாட முடியாத நிலை. நான் நினைக்கிறன், தமிழ்நாடில் அந்த மட்டத்தில் (பொருளாதாரம் உட்பட) இருபவர்கர்களே இங்கே பெரும்பான்மையாக வருகிறார்கள். (மாறாக, இலங்கையில் இருந்த்து எல்லா மட்டங்களில் இருந்த்தும் வந்தனர்.) இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் இளம் சந்ததி, இவர்களை விட தமிழில் உரையாடும். அதே போல ஆங்கிலம் என்றால், தனியே ஆங்கிலம் மட்டுமே.
  22. 🤣................. ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மனைவியும் திரும்பிப்போக வேண்டிய ஒரு சூழல். மனைவி சில மாதங்கள், நாலோ ஐந்து மாதங்கள், கர்ப்பமாக இருந்தார். அவர்கள் உடனே திரும்பிப் போகவில்லை. சில மாதங்களின் பின் அவன் மட்டுமே திரும்பிப் போனான். மனைவி இங்கேயே தனித்து இருந்தார். பின்னர் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவி குழந்தையுடன் இந்தியாவுக்கு திரும்பிப் போனார். இவை மொத்தமுமே அவர்களின் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிகழ்ந்தது. மருத்துவ காரணங்கள் எதுவுமில்லை. 'அமெரிக்கர்கள் பெரிய திருட்டுப் பயல்கள், சார்.................' என்று சொல்லிக் கொண்டே இங்கு நான் இருக்கும் இடத்திலேயே இரண்டு வீடுகளும், ஒரு வியாபாரமும் வாங்கும் இந்தியர்கள் பலர். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உருப்படியற்றவை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த உடனேயே, இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்களுக்கு எப்படி அனுமதியைப் பெற்றுத் கொள்வது என்ற ஆராய்ச்சியிலும், முயற்சிகளிலும் இறங்கிவிடுவார்கள். இவர்களில் ஒருவர் கூட மாஸ்கோ பல்கலைக்கழகம் பற்றி அதன் பின்னர் பேசமாட்டார்கள். இந்தியர்கள் கோவிட் தொற்றின் போது ஸ்புட்னிக் வக்சீனுக்காக வரிசையில் நின்றார்களா, இல்லையே, ஃபைசர் வக்சீன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். இங்கு எவராவது ஸ்புட்னிக் வக்சீன் போட்டார்களா................... இங்கு களத்திலேயே சில மாதங்களின் முன் ரஷ்யா புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்தி வந்தது. களம் ஆராவாரமாகவும் இருந்தது. உலகில் ஆயிரம் புற்றுநோய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் இந்த மருந்து எந்த புற்றுநோய்க்கு என்ற கேள்வி கூட வரவில்லை. ரஷ்யாவை நண்பர்கள் என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் இந்த மருந்தை இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்து விடுவார்களா.............. டி. ராஜேந்தரே இங்கு சன் ஃபிரான்சிஸ்கோ வந்து தான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தார். ஏன், நாங்களும் தான் ரஷ்ய மருந்தை எங்கள் உடலுக்குள் செலுத்த அனுமதிப்போமா................... இந்தியாவினதும், இந்தியர்களினதும் நட்பும், நடைமுறையும் இவ்வாறு முரண்பட்டதே.............. அவர்களின் கனவு மாஸ்கோவிற்கு போவதல்ல................... அவர்களின் கனவு சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு போவதே........... புதிதாக மதம் மாறியவர்கள், அது வேறு ஒரு வகை. எம்ஜிஆர் ரசிகராக இருந்த ஒருவர் திடீரென்று சிவாஜி ரசிகர் ஆனால் என்ன நடக்குமோ அதையே தான் இந்த மதம் மாறியவர்களும் செய்கின்றார்கள். பழையதை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக தூற்ற வேண்டும்; புதியதை எவ்வளவு போற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக போற்ற வேண்டும். இந்த வகையில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து புதுக் கடவுளே பயந்து போய் பதுங்கிவிடுவார்.....................🤣. இது அரசியலில் கட்சி மாறுபவர்களைப் போன்ற ஒன்று.............. இது விசுவாசம் தான்................. அவர்கள் இன்னொன்றை கண்டு கொள்ளும் வரை............................
  23. @ரசோதரன் குடிபெயர்ந்து நாடு தேடியோர் ஒரு நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள பூர்வீக குடிகளை அழித்து அமெரிக்கா எனும் பெயரில் உலகையே வல்லாதிக்கம் செய்யும் நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள். 😂 இது பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்பது போல் இருக்கின்றது.😎 ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்காமைக்கான வெளிப்படையான உண்மையை பேசாமல் வெறுமனே ஒரு தற்போதைய தீர்வு சாத்தியமானது என்கிறீர்கள். அது என்ன குறைந்த /சாத்தியமான தீர்வு? உக்ரேனின் தற்போதைய போக்கு தனக்கு பாதுகாப்பில்லை என ரஷ்யா வெளிப்படையாக சொல்லியது. அதை யாரும் கேட்கவில்லை. அதற்காக கருங்கடல் கரையோரங்களை தன் பாதுகாப்பிற்காக சுவீகரித்துக்கொண்டுள்ளது.சுவீகரிக்கப்பட்ட பகுதி ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ள நிலப்பரப்பு. அதை விட பல தடவைகள் உக்ரேனிய அரசால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலப்பரப்பு. உங்கள் அன்பு அமெரிக்கா 🤣இந்த உலகம் முழுவதும் எத்தனை ஆயிரம் இராணுவ முகாம்களை நிறுவி வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.ஆனால் ரஷ்யா உலகம் முழுவதும் தன் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களை அமைக்கவில்லை.எனவே ரஷ்யா தன் பாதுகாப்பிற்காக தனக்கு வேண்டிய பகுதியை தன் அரணாக்கிக்கொண்டுள்ளது. எனக்கு உக்ரேன் விடயத்தில் மேற்கின் மீதான கருத்து விசுவாசமும் நன்றி விசுவாசமும் என்றுமே வரப்போவதில்லை. காரணம் எல்லாம் சுரண்டல் அரசியல்.அதை விட எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்றால் அது வாழ்க்கை அல்ல.நான் பெரும்பாலான ஜேர்மனியர்கள் பக்கம் நிற்கின்றேன். அவர்கள் உக்ரேன் போரை விரும்பவில்லை.அரசியல்வாதிகள் உக்ரேனுக்காக அதிக நிதி ஒதுக்குவதை விரும்பவில்லை.ஏனைய நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை.எனவே நானும் அவர்கள் பக்கம் நிற்கின்றேன்.ஜேர்மனியில் பல கட்சிகள் உக்ரேன் போரை எதிர்க்கின்றார்கள்.அந்த கட்சிகளில் நானும் ஒருவன். உக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கையை ஆதரிப்பவன் ஏன் ரஷ்யாவில் குடியேறவில்லை என்ற கேள்வி வரும் போது...... ஸ்ரீலங்காவில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறிநார்கள்? அங்கிருந்து போராடியிருக்க வேண்டும் என்றொரு கேள்வி வரும் இல்லையா? எனவே கருத்துக்கள்/சரி பிழைகள் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.சம்பந்தப்பட்ட மண்ணில் நின்றுதான் களமாடவேண்டும் என்ற சிந்தனை ஒருவித பம்மாத்து மட்டுமே.😎
  24. உக்ரேனுக்கும், ஈழத்திற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கின்றது அல்லவா, வசீ. ஒரு நாட்டிலிருந்து பிரிந்து போய் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை உருவாக்க ஈழ மக்கள் போராடினார்கள், அதே வேளையில் சுதந்திரநாடாக இருக்கும் உக்ரேன் அதன் மீது இன்னொரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகின்றது. ஈழ மக்களுக்கு தனிநாட்டை விட குறைந்த ஒரு தீர்வு தான் தற்போதைக்கு சாத்தியமானது என்பது ஈழத்திற்கான போராட்டத்தின் ஒரு மைல் கல் ஆகலாம். ஈழத்துக்கான போராட்டம் அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரலாம். ஆனால் உக்ரேன் தனது நிலப்பரப்பை விட்டுக் கொடுக்கும் ஒரு தீர்விற்கு சம்மதிப்பது ஒரு மைல் கல் அல்லவே........... இதில் அடுத்த கட்டம் என்ன........... முழு இறைமையையும் ஆக்கிரமிப்பாளருக்கு விட்டுக் கொடுப்பதா.............. சாதாரண மனிதர்களிடம் கருத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்னும் ஒரு செயல் அல்லது முயற்சி நடைமுறையில் இல்லையென்றே நினைக்கின்றேன், விளங்க நினைப்பவன். கருத்துகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்ற நிலை இது. 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வகையினரே, நான் உட்பட. கருத்துகள் என்பது நாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு சுய அடையாளம், பெரும்பாலும் கற்பனையான ஒன்றே. பின்னர் அந்த அடையாளத்துடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகின்றது. நாங்கள் வாழும் வாழ்க்கைகளுm, எங்களின் பல கருத்துகளும் மலையும், மடுவும் போல. உலகெங்கும் ஒரு ஒற்றை இலக்குடன் போராடும் போராளிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள்..............🙏. ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர்களிடம் நீங்கள் ரஷ்யாவுக்கு போய் வாழ்வீர்களா, உங்கள் பிள்ளைகளை ரஷ்யாவிற்கு வாழ அனுப்பிவீர்களா என்று கேட்பதில் எந்தப் பொருளும் கிடையாது. அப்படியொரு முட்டாள்தனத்தை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை. 'படித்தவர்கள் எல்லோரும் கழனிப் பானைக்குள் விழுந்தார்கள்..................' என்று என் வீட்டில் அன்று பலரும் சொல்லிச் சிரிப்பார்கள். வீட்டிலோ அல்லது சொந்த பந்தத்திலோ பெரிதாக படித்தவர்கள் என்று, 10 வகுப்பு சித்தி அடைந்தவர்கள் கூட, கிடையாது. அவர்கள் எல்லோருமே சேர்ந்து உருவாக்கிய அடையாளம் தான் இந்தக் கழனிப் பானை. ஒரு மன ஆறுதலுக்கு போல. ஆனால் வீட்டில் நடைமுறை வேறாக இருந்தது.............. நாங்கள் எல்லோரும் எப்படியாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று தங்களால் ஆன எல்லாவற்றையும் அந்த இடர் மிகுந்த காலங்களிலும் மிகவும் செய்தார்கள். எங்களை கழனிப் பானைக்குள் விழுத்த முயன்றார்கள், ஆனாலும் எங்களில் பலரும் பானைக்குள் விழாமல் தப்பிவிட்டார்கள்...................🤣. இது போலவே ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகளும்........................ சொல்லும், செயலும் ஒன்றல்ல.
  25. ரசியா உக்ரைனுடன் போர் புரியவில்லை ..... சீனா இந்தியா தவிர்த்து உலகின் மிக பலம்வாய்ந்த உலக நாடுகள் அனைத்துடனும் ஒரே நேரத்தில் போர் செய்துகொண்டு இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்து தொழில் நுட்பங்களையும் ஆயுதங்களையும் அமேரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி கொண்டு சென்று உக்ரைனில் கொட்டி வைத்துக்கொண்டுதான் இந்த போரை கடந்த 4 ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதைய ரோபாட்டிக் மற்றும் ட்ரான் தொழில் நுடபத்தால் ரசியா பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்தது என்பது உண்மைதான். ஆனாலும் இவற்றைஎல்லாம் கடந்து ரசியா தனக்கு தேவையான பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுபாட்டில்தான் வைத்திருக்கிறது. இப்போது நினைத்தாலும் வெறும் 2 நாட்களில் உக்ரைனை அடித்து தரமடடம் ஆக்க கூடிய ஆயுதம் பலம் ரசியவிடம் உண்டு. சும்மா கூகிளில் டைப் செய்து பார்த்தாலே ரசியாவிடம் என்ன உண்டு என்பது தெரியும். மேல்நாட்டு தணிக்கை செய்திகளை வாசித்து உண்மை என்று நம்புபவர்கள் இரான் 2024 இல் தங்கள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மிஸைல் அடித்த போது அதை ஒரு எச்சரிக்கை தாக்குதலாகவே செய்தது அதில் சில மிசைல்கள் தடுத்து நிறுத்த படத்தை பார்த்து இங்கு யாழ்களத்தில் அனுமான் வெடிகள் வெடிக்கவில்லை என்று மேலைநாட்டு பிரச்சார செய்திகளை நம்பி எழுதினார்கள் ......... இந்த வருடம் இஸ்ரேல் நேரடியாகவே ஈரானை தக்க எததனித்த போது கொடுத்த பதில் அடியுடன் இஸ்ரேலில் தரைமடடமான படங்களை வீடியோக்களை அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் உதவியுடன் (சோசியல் மீடியாவில்) மூடி மறைக்கலாம் என்று எண்ணி .... அமெரிக்க இஸ்ரேல் இருவருமே வாயை மூடிக்கொண்டு இருந்து விடடார்கள் ..... இருப்பினும் பெரியண்ணருக்கு ஏற்படட கவுரவ குறைச்சலால் ஈரானில் உள்ள ஒரு மலையில் போய் இரண்டு குண்டுகளை போட்டுவிட்டு ஈரானின் அணுவாயுத தொழில்நுட்பம் இதோடு முடிந்தது என்று சொல்லி சந்தோச படடார். ( அதில் பகிடி என்னவென்றால் ஈரான் இஸ்ரலில் ஹாஸ்ப்பிட்டல் களை மடடம ஆக்கியது சர்வதேச குற்றம் என்று இஸ்ரேல் ஐநாவில் கூறியது. அப்போ அதை தெளிவாக தெரிந்துகொண்டுதான் காசாவில் தரைமடடம் ஆக்கினீர்களாலா? என்று ஈரான் கேட்ட்துடன் மூடிக்கொண்டு போய் விட்டார்கள்)
  26. வசீ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லும் எவையும் ஒரு இரவு கூட தாக்குப் பிடிப்பதில்லை. இந்த 28 அம்ச திட்டம் அடுத்த நாளே 19 அம்ச திட்டம் ஆகியது. பின்னர் இந்த வார நீண்ட விடுமுறைக்கு முன்னர் இவை பேசித் தீர்க்கப்படும் என்றார். இங்கு கடந்த வியாழனும், வெள்ளியும் விடுமுறை தினங்கள். ஆனால் பேச்சுவார்த்தை எதுவுமே நடக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் இப்பொழுது நான்கு ஐந்து நாட்களாக வேறு விடயங்களில், ரஷ்ய - உக்ரேன் சண்டையில் அல்ல, தனது நேரத்தையும், முயற்சியையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றார். இந்தச் சண்டையில் அமெரிக்காவிற்கு நீண்ட கால நோக்கங்கள் சில இருக்கலாம். மேற்கு ஐரோப்பாவிற்கும் சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் நோக்கங்கள் இவைகளுடன் இணைந்தவை அல்ல. அவர் ஒரு முதிர்ச்சி அடையாத, நான் என்ற முனைப்பு மிக அளவுக்கு அதிகமான, வயது போன மனிதர் மட்டுமே. தான் வரலாற்றில் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றார்............... நிற்கத்தான் போகின்றார், ஆனால் அவர் நினைக்கும் இடத்தில் அல்ல. இந்த அம்ச திட்டங்கள் என்ற பேச்சு வந்த பின், ரஷ்யா வழமை போலவே இன்னும் அதிகமாக உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல்களையும், ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. சிலர் இறந்தும் போனார்கள். உக்ரேனும் ரஷ்யாவின் ஒரு லேசர் விமானத்தை அதன் இருப்பிடத்திலேயே குண்டு வைத்து தகர்த்தது. ரஷ்யாவிடம் இருந்தது இரண்டு லேசர் விமானங்கள் மட்டுமே. அங்கும் சிலர் இறந்தார்கள். இந்தச் சண்டையின் ஆரம்பமே உக்ரேனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்பது தான். உக்ரேனை நேட்டோவில் இணைப்பதை யார் தடுக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ரஷ்யா என்பதே. ரஷ்யாவை மீறி உக்ரேனை நேட்டோவில் இணைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. இந்த இரு பக்கங்களிலும் எவர் உக்ரேனில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்காக போராடுகின்றார்கள்................. ரஷ்யாவா................ ரஷ்யாவில் இருக்கும் சிறுபான்மை மக்களே தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா. செச்னியர்கள் என்ற ஒரு இனமே ரஷ்யாவில் இல்லாமல் ஆகிவிட்டது அல்லவா. ரஷ்யா போன்ற அரசில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும், சீனாவிலும் கூட சிறுபான்மை அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவை வீழ்த்தி ஜப்பான் வென்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் அரசு அமைத்திருந்தால், இந்தியாவிலும் மொழிவாரி மாநிலங்களோ அல்லது தனித்தனி இன அடையாளங்களோ இருந்திருக்காது. பர்மாவில் 10 இலட்சம் தமிழர்கள் தொலைந்து போனது போல. இந்துக்களாகிய தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள், அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற காரணத்தை முன்வைத்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்க முடியாது. அப்படி இந்தியா செய்தால், இந்தியாவுக்கு எதிராகவே உலக அபிப்பிராயம் இருக்கும். அதுவே தான் ரஷ்யாவின் நிலையும் இன்று. என்ன ஆனாலும் எப்போதும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே வரும் கருத்துகளையோ, அல்லது எந்த நிலையிலும் எப்போதும் அமெரிக்க ஆதரவாக வரும் கருத்துகளையோ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது பெரும்பாலும் ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கும் விருப்பு - வெறுப்பு - காழ்ப்பு என்ற உணர்வுகளின் அடிப்படைகளில் வரும் கருத்துகள். ஊடகங்களும், கருத்தாளர்களும் இப்படி பக்கச்சார்பாக இயங்கினாலும், காலப்போக்கில் அவற்றின் தன்மைகளை அறிந்து, பிரித்தறிய வேண்டியது எங்களின் கடமை ஆகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.