Everything posted by goshan_che
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
இது இந்தியாவின் அல்ல - பார் சிறியின் சதி. மைத்திரி அரசு காலம் போல மட்டுபட்ட நினைவு கூறலை அனுமதிக்கும் முடிவு எப்போதோ எட்டப்பட்டு விட்டது. ஆனால் 1. முதலில் அனுர அனுஸ்டிக்க விடுவாரா? விட்டால் அவர் நல்லவர் என்ற கருத்தியலை வலிந்து உருவாக்குவது. 2. இதன் ஒரு அங்கம்தான் இப்படியான பித்தலாட்ட வேலைகள். இவற்றை பரப்புவர்கள் யார் என பார்த்தால் - சுமந்திரன் - பார் சிறி உள் மோதலில், இவர்கள் சுமந்திரனை போட்டு வாங்கிய ஆட்கள் (அப்போதும் தாம் சிறியின் அடிப்பொடிகள் என்பதை வெளிக்காட்டவில்லை). 3. அனுஸ்டிக்க விட்டதும் - அனுர நல்லவர் என்ற பிம்பத்தை உருவாக்குவது. 4. இதை பயன்படுத்தி பார் பெர்மிட், சிறியின் இதர ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்களை அனுர கண்டுகொள்ளாமல் விட முயற்சிப்பது. 5. இதன் ஒரு அங்கம்தான் பார் சிறியின் இன்றைய அறிக்கை.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
ஓம்…. இதைவிட முக்கியமாக சபாநாயகர் தேர்வு, எதிர்கட்சி தலைவர் தேர்வு வரைக்கும் ….எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதே விதி. எனும் போது அருச்சுனா எதையும் தவறாக செய்யவில்லை. அருச்சுனா வென்றதும் வெளியே வந்து யாழில் நாங்கள் மூன்று பேரும்தான்….நான் வென்ற மகிழ்சியில் இல்லை…இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியது ஒரு மிக பெரிய விடயம்…… அருச்சுனா, “நாம் எல்லோரும் இலங்கையர்” என்ற என் பி பி யின் ஈரச்சாக்கு இனவாதத்தை தன் பாணியில் அருச்சுனா மூக்குடைப்பார் என்றே நினைக்கிறேன். மாவீரர் தினத்தை அனுர நடத்த அனுமதித்தார் எனவே அவர் ஹீரோ என காட்ட பார் சிறியும் அவரின் புலம்பெயர் அடிப்பொடிகளும் ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள். ஆனால் இதே அனுரவின் ஆட்கள்தான் தலைவருக்கு நன்றி சொன்னமைக்கு அருச்சுனாவை போட்டு வாங்குகிறார்கள். இதில், கோட்டா வெல்லட்டும் அப்போதான் மக்கள் மேலும் அடிவாங்கி அதன் மூலம் எமக்கு விடுதலை விரைவாகும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நாம் - அருச்சுனாவினால் மக்களுக்கு ஆபத்து என அதிகம் கவலைபட தேவையில்லை எண்டே நினைக்கிறேன்.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
🤣 ஒயாமல் போனால்தான் அது ஓய்ஸ்டர் போலும் 🤣. சிறுவயதில் முல்லைதீவு சிலாவத்துறை கடற்கரைக்கு விளையாட என்னை கூட்டிப்போன அப்பா, அங்கே யாரோ வித்தார்கள் என ஒரு சொப்பிங் பாக் நிறைய மட்டியை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தார். அவவுக்கு அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை🤣. அவருக்கோ முட்டை அவிக்கவே தெரியாது🤣. ஒரு வழியாக அயலவர் உதவியோடு வறுத்து சாப்பிட்டோம். நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ். ரிட்டையர் ஆகி விட்டு ஒரு கிரூஸ் கப்பலில் வேலை செய்தால் நல்லா இருக்கும் என யோசிப்பேன். சின்னதில் ராபின்சன் குருசோ கதை படித்த தாக்கமோ என்னமோ….கப்பல் பயணத்தில் ஒரு நாட்டம். இப்போதைக்கு யூகே-பிரான்ஸ் ferry, பருத்தித்துறை-திருமலை ஐ சி ஆர் சி கப்பல் பயணம் மட்டுமே செய்துள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீண்ட இடைவெளிக்க்கு பிறகு இந்த திரியில் எழுதுகிறேன். கிரிப்டோ உலகுக்கு வெளியே பலர் பிட்காயின் 64,000 இல் இருந்து 98,000 க்கு 46% ஆல் உயர்ந்தது பற்றி சிலாகித்து கொண்டிருக்கிறார்கள். ஆனா ஒரு மாதத்தில் XRP 0.50 இல் இருந்து 1.48 க்கு 170%ஆல் கூடியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் SEC வழக்கில் settlement க்கு போகும், SEC சேர்மன் தூக்கியடிக்கபடுவார் அல்லது விலகுவார் மற்றும் டிரம்பின் கிரிப்டோ சார்பு நிலைப்பாடு அத்துடன் ரிப்பிளின் RLUSD எனப்படும் stable coin அறிமுகம் என்பன இதன் பின்னால் உள்ள fundamental காரணிகளாக கூறப்படுகிறது. @vasee chart என்ன சொல்கிறது?
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
மேலே ரசோதரன் சொல்லுவது போல மஞ்சளில் கழுவி சமைத்தது என இங்கே இலண்டனிலும் தந்தார்கள் - அடியோடு மறுத்துவிட்டேன். எவ்வள்வு நல்ல பார்ட்ஸ் எல்லாம் இருக்கு, exhaust pipe தான் வேணும் என்பது சிலரின் ரசனை போலும்🤣
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
வாலி எழுதியதை பார்த்து விட்டு…. டிரம்ஸ் என்றால் காலால் மிதித்து மிதித்து அடிக்க வேண்டும் என யாரேனும் முடிவெடுத்தால் - பின் விழைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல🤣.
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
@Justin @ரசோதரன் @ragaa என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣. நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣. இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பலர் PSTSD யால் அவதி படுகிறார்கள். Post Sumanthiran Traumatic Stress Disorder🤣
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
https://x.com/MKSL2024/status/1859960137454342194/mediaViewer?currentTweet=1859960137454342194¤tTweetUser=MKSL2024 எமக்காக போராடிய பிரபாகரனை நாம் தெய்வம் என்றே கருதுகிறோம்….. சிங்களத்தில் அருச்சுனா…. சரியோ…. பிழையோ…. யாழ்பாணம் 3 எம்பிக்களை தந்தது / தமிழ் தேசியத்தின் கதை முடிந்தது என்ற பிரச்சாரத்தை ஒரு வீடியோவில் பீஸ் பீஸ் ஆக்கிவிட்டார். may be there is a method behind his madness?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உரு மறைத்தாலும்…திரு மறையாதே ஜி🤣
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
ம்ம்ம்…. இந்த செய்திக்கு என் ரியாக்ஷன்👇🤣 பகிடிதான் நோ ரென்ஷன் பிளீஸ்🙏
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
பல திரிகளில் கொமெமெண்ட் போட்டு கதறடிப்போம்……. அந்த அடியின் தாக்கம்….. சில திரிகளில் நாம் ஏதும் எழுதாமலே அவர்களாகவே திரி திறந்து கதற வைக்கும். —————— சீமான் சந்தித்தது யாரை? ஒரு அரசியல் அநாதையை, துக்கடா பீசை. ஒரு வெற்றிபட நடிகரும், ஒரு தோல்விபட இயக்குனரும் சந்தித்துள்ளனர். இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கத்தேவையில்லை. ——————— சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்து, சந்திப்பில் கூட இருந்தவர் ரவீந்திரன் துரைசாமி. இவர் ஒரு சங்கி. 2024 இல் ரஜனியை மோடிக்கு ஆதரவாக பேசும்படி கேட்டேன் என அவரே கூறுகிறார். ஏ டீமிற்கு முன்பு வரவிருந்த பிளேயரை, பி டீம் கேப்டனுடன் பேச வைத்துள்ளார். இதன் எதிர்கால திட்டம் என்ன என்பதை நான் முன்பே சொல்லி விட்டேன். அமித்ஷா ஏ டீமை, பி டீமுடன் இணைக்கும் முடிவுக்கு வந்து விட்டார் போல இருக்கு. செத்த கிளிகள் இரெண்டு இனி சிங்காரிச்சா என்னா சிங்காரிக்காட்டி என்ன 🤣
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
நினைவு கூறலை அனுர அனுமதிப்பார் என்பது நான் முன்னரே எதிர்வு கூறியதுதான். பார்த்தசாரதி கூட அனுர 27ம் திகதி என்ன செய்கிறார் என பார்ப்போம் என யாழில் எழுதினார். இப்போ அவரின் பொஸ் சிறி இப்படி அறிக்கை விடுகிறார். சிறியிம் அவரது பார்த்தசாரதி போன்ற அடிப்பொடிகளும்…அனுரவுக்கு நூதனமாக ஆதரவு திரட்டும் முறை இது. நல்ல நாடகம் ஆடுகிறார்கள். எல்லாம் அனுர பார் லைசென்ஸ் பற்றி விசாரிக்க கூடாது என்பதால்தான்.
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
இதிலெல்லாம் அறவே நம்பிக்கை இல்லை…. ஆனால் …. அவர்களும் இப்போ இயற்க்கையோடுதான் கலந்து விட்டார்கள்…. எதுவும் செய்தி சொல்கிறார்களோ?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அருச்சுனா எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருந்தது பாராளுமன்ற விதிகளின் படி தப்பே இல்லையாமே 👇 @satan @தமிழ் சிறி
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதை மிக இலகுவாக ஒரு விடயம் மூலம் உணரலாம். நான் நினைக்கிறேன் மனோ கணேசன் இந்தியா வழங்கும் Persons of Indian Origin கார்ட் வைத்துள்ளவர் என. இது கிட்டதட்ட இந்தியாவில் permanent residence வைத்திருப்பதை போன்றது. தலை கீழாக நிண்டு தண்ணி குடித்தாலும் எனக்கு இந்த கார்ட் எடுக்க முடியாது. ஏன் என்றால் என் தாத்தா அல்லது அவர் தந்தை இந்தியாவில் பிறக்கவில்லை. ஆகவே மனோ - இந்திய வம்சாவழி நான் - இந்திய வம்சாவழி இல்லை
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
4. மேலே சுட்டிய விடயங்கள் இலங்கையில் இரு வேறு தமிழர் பகுப்புகள் உள்ளதை காட்டி நிற்கிறன. இந்த பகுப்பு ஒன்றும் தனியே 1815 ஐ ஒட்டிய தொழில் நுட்ப பகுப்பு மட்டும் அல்ல. பண்பாடு, மதம், சாதிய கட்டமைப்பை போலவே இந்த ஒரு பகுப்பினரதும் அரசியலும் மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இலங்கை வம்சாவழியினர் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்கிறனர். வடக்கு கிழக்கை தம் பாரம்பரிய வாழிடமாக கருதுகிறனர். இதன் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கோரி நிற்கிறனர். இந்த எந்த அபிலாசைகளும், பாரம்பரிய வாழிடத்துக்கான உரிமை கோரலும் இந்திய வம்சாவழியினரிடம் இல்லை. ஆகவே இலங்கை அரசியல் என வரும் போது இவ்விருதரப்பையும் ஒரே சட்டியில் வறுக்க முடியாது. இந்திய வம்சாவழிக்குள் கூட மேலக, மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வேறுபட்டாலும், நிலத்துடன் பிணைந்த இலங்கை வம்சாவழியின் தமிழ் தேசிய அரசியல் அங்கே இல்லை. இந்த அடிப்படையில்தான் இலங்கை வம்சாவழியை குறிக்கும் போது பிரக்கெட்டில் வடக்கு-கிழக்கு என எழுதினேன்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இலங்கை வம்சாவழி என்பதை வரைவிலக்க்கணப்படுத்த முன்னம், இந்திய வம்சாவழி தமிழர் யார் என்பதை வரைவிலக்கணம் செய்வது அவசியம் என நினைக்கிறேன். 1. இலங்கைக்கு 1815 (ஒன்றுபட்ட இலங்கை ஆங்கிலேய ஆட்சி) இன் பின், இந்தியாவில் இருந்து வந்து, குடியேறி வாழ்பவர்களின் சந்ததிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் எனலாம். இவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும் - இவர்களின் அடையாளம் இதுவாகவே இருக்கும். இவர்கள் மலையகத்தில் பெருமளவிலும், மேற்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும், இதர தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசிக்கிறனர். இவர்களில் சிறிய தொகையினர் இனவன்முறை, நாடு கடத்தலில் தப்பிக்க என வடக்கு கிழக்கில் வந்து வாழ்ந்து, பதிவு அடிப்படையில் அந்த மாகாண வாக்காளர்/மக்கள் என உருமாறிவிட்டனர். எனிலும் இவர்களை சமூக பார்வையில் அவர்களை சூழ இருக்கும் இலங்கை வம்சாவழி தமிழ் சமூகம் இன்றும் இந்திய வம்சாவழி என்றே கருதுகிறது. இந்த இந்திய வம்சாவழி மக்கள் பண்பாட்டில் தற்போதைய தமிழ் நாட்டு மக்களின் கண்ணாடி பிரதிகளாக இருக்கிறனர். குறிப்பாக இவர்களின் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டை, சாதி பெயர்களை குறிப்பிடலாம். 2. இவர்கள் அல்லாத - 1815 க்கு முன்பிருந்தே மூதாதைகள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை வம்சாவழி. இவர்கள் பண்பாடும், மத அனுஸ்டானங்களும், உணவுகளும், சாதிய முறைகளும் தமிழ் நாட்டு/ இந்திய வம்சாவழி தமிழர்களை விட பெரிதும் வேறுபட்டும், சில இடங்களில் மலையாளிகளோடு ஒத்தும் இருக்கும். இவர்களைத்தான் 1815 க்கு முன் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரும், போத்துகேயரும் தமது பதிவுகளில் மலபாரி வசிப்பாளர் Malabari inhabitants என்றனர். இவர்களின் சந்ததியினரே இலங்கை வம்சாவழி தமிழர். யாழ்பாணம், வன்னி, திருமலை, மட்டு-அம்பாறை என இவர்கள் இருப்பது யாரும் அறிந்ததே. பலர் அறியாத விடயம், முந்தல் போன்ற இடங்களில் இன்றும் உள்ளவர்களும், நீர்கொழும்பு-மன்னார் வரையான கடலோரத்தில் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று கீழ்நாட்டு சிங்களவராக அடையாளம் மாறிய தமிழரும் இலங்கை வம்சாவழியே (1815 க்கு முன்). ஆகவே இவர்களும் ஒற்றை பண்பாட்டில் உள்ளவர் அல்ல. 3. இந்த பகுப்பு வெறும் மூதாதைகள் இலங்கைக்கு வந்த காலத்தின் அடிப்படையிலானது மட்டுமே. ஆங்கிலத்தின் since records began என்பார்கள் - இந்திய வம்சாவழியினர் இலங்கை வந்தது பதிவுகள் ஆரம்பமான பின். இலங்கை வம்சாவழியினர் பதிவுகள் ஆரம்பிக்கும் போதே (when records began) இந்த மண்ணில் வாழ்கிறார்கள் (குளக்கோட்டன், யாழ்பாண அரசு, வன்னிமைகள்). அவர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் (time immemorial/ pre historic times) தொட்டு வாழும் பூர்வகுடிகளா என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வி. ஆனால் திசமாராம தொல்பொருட்கள் - இப்படி இருக்கலாம் என ஊகிக்க வைக்கிறன.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
15ம் இடம் பல பாடங்களை தரும் என்று பாரதியார் சும்மாவா சொன்னார்🤣 (நான் இணை 3ம் இடமாக்கும்🤣)
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
வணக்கம் கொழும்பான். இப்போ வேலைக்கு வெளிகிடுகிறேன். விரிவாக எழுத வேண்டிய விடயம். பின்னர் எழுதுகிறேன்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ப்ரோ, 2015 -2024 இடை பட்ட காலத்தில் கொவிட்டில் மாட்டி, கோமாவில் வெண்டிலேட்டரில் ஏதும் இருந்தீர்களா? 2013 மாகாணசபை தேர்தல் முதல் 2017 வரை இவர்களை ஆதரித்தேன் என்பதும், 2017 இல் இவர்கள் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டது என்பதை யாழில் எழுதி இனி இவர்கள் அரசியலை எதிர்ப்பேன் என எழுதியதும் அல்லாமல் கடந்த 5 வருடமா எதிர்த்தே எழுதி வருகிறேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா? ஏனைய திரிகளில் சுமன் பற்றி நான் எழுதியதை வாசிதீர்களாயின், அவர் தூக்கி எறியப்படவேண்டும் என நான் எழுதியதும், என் அனுர மீதான விமர்சனத்தின் தாற்பரியமும் புரியும். உங்கள் சிந்தனை 2015 இல் அப்படியே stuck ஆகி விடவில்லைதானே?
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முனீருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை 🤣. இதை விட மன்னார் அண்ட் கம்பெனியில் மனேஜராக போட்டிருக்கலாம்🤣. ஆனால் அருண் - வெளிநாட்டு துறை பிரதி அமைச்சர். ஹெவியான துறை. ஒரு தமிழர் - அடுத்து வெளிநாட்டு அமைச்சராக வர கடுமையாக உழைத்து, இலங்கை மீதான சகல சர்வதேச அளுத்தங்களையும் தவிடு பொடியாக்குவார் என எதிர்பார்கிறார்கள் போலும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒரு வழியாக, கிழக்கு மாகாணத் தமிழருக்கு ஒரு பிரதி அமைச்சர், மலையகத்தமிழருக்கு இரு கபினெட் அமைச்சர்கள் + ஒரு பிரதி அமைச்சர், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதி அமைச்சர் + பிரதி சபாநாயகர் கிடைத்துள்ளது. 5 எம்பிகள், 2 தேர்தல் மாவட்டங்களை அள்ளி கொடுத்த வடக்கு மாகாணத்துக்கு - குச் நஹி🤣. அதுவும் 3 எம்பிகளை அள்ளி கொடுத்து, புதிய ஒன்றுபட்ட இலங்கையை வரவேற்ற யாழ்ப்பாண தமிழருக்கு…. சூப்பிய பனங்கொட்டை கூட இல்லையாம்🤣.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
கபினெட் அந்தஸ்து அமைச்சர். இராஜாங்க அமைச்சர். பிரதி அமைச்சர். இதுதான் ஒழுங்கு. இராஜாங்க அமைச்சர் பொதுவாக தன் கீழ் வரும் துறைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார். ஆனால், கபினெட்டில் கூட்டு முடிவு எடுப்பதில் பங்கெடுக்க மாட்டார். பிரதி அமைச்சர் - ஒரு கபினெட் அமைச்சரின் கீழ் வேலை செய்வார், அவருக்கு கபினெட் அமைச்சரின் கீழ் வரும் துறைகளில் ஒன்று ஒதுக்கப்படும், ஆனால் அத்துறையின் முடிவு எடுக்கும் அதிகாரம் கபினெட் அமைச்சர் வசமே இருக்கும். பிகு வாதாவூரன் உங்களுக்கு சொல்லவில்லை. பொதுவாக விளக்கினேன்.