Everything posted by goshan_che
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
- உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
தினமும் 8 மணி என்பது உடல், உள நலனுக்கு தேவையான அளவு நித்திரை என படித்த நியாபகம். இலங்கையர் சரியாக அலராம் வைத்து 8 மணத்தியாலம் நித்திரை கொள்கிறார்கள் போலும். அண்மையில் மகிழ்சியாக மக்கள் வாழும் நாடுகள் பட்டியலிலும் இலங்கை 2வதாக வந்தது. என்ன பிரச்சினை என்றாலும் தூக்கி போட்டு விட்டு படுப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். https://www.deccanherald.com/amp/story/world/in-pics-5-happiest-countries-in-the-world-2024-2929684- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
வெளிநாடுகளிலும் இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். யூகேயில் 1968 க்கு முந்திய வாகனத்தை ஓட்டும் போது சீட் பெல்ட் தேவையில்லை.- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
`இந்திய சாதிய அமைப்பு முறை பற்றிய சரியான புரிந்துணர்வு அற்றவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லை அவமதிப்பான சொல்லாகக் கருதுகிறார்கள்” என்கிறார் `தலித் முரசு’ இதழ் ஆசிரியர் புனித பாண்டியன். 👆🏼 விகடன் கட்டுரையில் இருந்து. இதுதான் என் நிலைப்பாடும். இதே போல் காந்தி தலித் மக்களை ஹரிஜன் என அழைத்த போது, அவர்கள் அதை தலையை தடவும் போக்கு (patronizing) என கூறி, தம்மை தலித் என்று தொடர்ந்தும் அடையாளப்படுத்தினார்கள். அவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள் என்பது வரலாற்று உண்மை. அந்த உண்மையை எந்த வெண் பூச்சு பதத்தாலும் மறைக்க கூடாது. ஒவ்வொரு தடவை இந்த வார்த்தை பாவிக்கப்படும் போதும் இந்த வரலாற்று உண்மை, வரலாற்று அநீதி மீள மீள நினைவுபடுத்தப்பட வேண்டும்.- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இல்லையே - தாழ்த்த பட்ட - என்பது சரிதானே? தாழ் சாதியினர் என்ற மோசமான பதத்தை பிரதியீடு செய்து, அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, மாறாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் பதம் அல்லவா இது? தமிழ் நாட்டில் பல முற்போக்கு சிந்தனையாளர், தலித்திய அரசியலாளர் கூட இதை பயன்படுத்துகிறரே? https://www.vikatan.com/news/tamilnadu/what-is-the-right-word-to-mention-scheduled-castes-in-tamil- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஓம். இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!), மெஹெந்தி செரிமனி, மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦♂️), அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது, பெண்பார்க்கும் படலம், சீமந்தம்… இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣. நல்ல வேளையாக 90s teenager என்பதால் பல வீண் செலவுகளில் இருந்து தப்பித்தோம்🤣.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
இந்த விடயத்தில் நிலாந்தனும் ரஞ்சித்தும் ரொம்பவே உணர்சி வசப்படுகிறார்கள். பொ.த.வே நிறுத்துவதால் “செய்தி சொல்லல்” ( பொன்சேக்காவுக்கு வாக்களித்து சொன்னதை போல) என்பதை தாண்டி என்னத்தை சாதிக்ககலாம் என்ற positive case ஐ ஒருவரும் முன் வைப்பாதாக இல்லை. இதற்குள் பொ.வே ஐ ஆதரிக்கும் விக்கி ஐயாவே, இரெண்டாம் வாக்கை சிங்கள வேட்பாளருக்கு (ரணில் 🤣) போடலாம் என்கிறார். இரெண்டாம் வாக்குகளில் தேர்தல் தீர்மானிக்கப்பட்டு, அதில் தமிழ் வேட்பாளர் ஆதரவில் ரணில் வென்றால் என்ன செய்தியை அது சொல்லும்? அதே போல் @நிழலி இன்னொரு இடத்தில் சொன்னது போல் - பொ.த.வே யை இம்முறை, பொருளாதார காரணங்களுக்காக, புறக்கணித்து, தமிழர் ரணிலுக்கு போடவும் வாய்ப்பு உண்டு. இப்படி நடந்தால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை ஆகி விடும். புலிகள் கூட ஏன் பொ.த.வே என்ற தெரிவுக்கு போகவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
அனுர வந்தால் மேலே சொன்ன பயன் கிடைக்க வாய்புண்டு அல்லவா?- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஒரு கேள்வி - மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்க சஜித்துக்கு போடலாம் என நான் யாழில் எழுத, இல்லை கோட்டா வந்தால் அடக்கு முறை கூடும், அதை வைத்து நாம் தீர்வை அடைவது இலகு என எழுதியவர்களில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன். இதே லொஜிக் அனுரவுக்கும் பொருந்தாதா? அவர் நாட்டை வெனிசுவேலா போலாக்கினால் - குறுகிய காலத்தில் மக்கள் துன்பப்பட்டாலும், எமக்கு தீர்வு வர இது உதவும் அல்லவா? அப்போ தமிழர் திரளாக அனுரவுக்கு போட வேண்டும்?- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
எனது நிலைப்பாடும் இதுவே. உண்மையில் என் போன்றோர் பக்கம் பக்கமாக நீட்டி முழக்குவதை விட - @Kavi arunasalam ஐயா வின் ஒரு ஓவியம், பலருக்கு அதிக உறைப்பை கொடுப்பதை யாழில் பல இடங்களில் கண்டுள்ளேன். கருத்தோவியமும் ஒரு கருத்துத்தான். ஆகவே “கருத்தை எழுதுங்கள்” என்ற ரஞ்சித்தின் கோபம் அடிப்படை அற்றது.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
There are lies, damn lies, then there are statistics என்பார்கள். பொய், கடும் பொய் அதற்கும் மேலான பொய் புள்ளி விபரப்பொய். இங்கே @ரஞ்சித் பொ.த.வே வை ஆதரிக்கும் தன் நிலையை நிறுவ இந்த வகையிலேயே புள்ளிவிபரத்தை பாவிக்கிறார் என படுகிறது. 1. சகல தேர்தல்களிலும் வன்னி, திருமலை, மட்டகளப்பில் இருந்த மிக கணிசமான முஸ்லிம், சிங்கள வாக்காளர் தெரிவை தமிழர் தலையில் கட்டி விடுகிறார். 2. உண்மையில் இந்த தேர்தல்களில் எல்லாம் தனியே தமிழர் வாக்குகளால் மட்டும் நிரம்பிய ஒரே ஒரு தொகுதி என்றால் அது யாழ் மாவட்டம் மட்டுமே. இந்த அடிப்படையில் பார்த்தால் ஜே ஆர், பிரேமதாசவுக்கு போடாமல் விட்டதால் தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது. 3. 1994 தேர்தல் தனியே தீவுபகுதியில் நடந்தது என நினைக்கிறேன் (இதே வருடம்தான் டக்லஸ் 9 எம்பி சீட் எடுத்தார்?). இங்கேயும் யாழ் மாவட்ட மக்கள் பெருவாரியாக தேர்தலை புறக்கணித்தனர், அல்லது பங்கெடுக்க விடாமல் தடுக்கப்பட்டனர். 1999 தேர்தலும் இதே போல்தான். இந்த தேர்தல்களில் பதிவான வாக்காளரில் எத்தனை சதவீதம் வாக்களித்தனர் என்ற தரவை பார்த்தால் - ரஞ்சித் காட்டு புள்ளி விபரம் ஏன் நம்பிக்கை அற்றது என புரியும். ஜே ஆர், பிரேமா தேர்தல்கள் போல இந்த தேர்தல்களும் யாழ் மாவட்ட தமிழர் சிங்கள வேட்பாளருக்கு பெருவாரியாக வாக்கு போடாத தேர்தல்களே. ஆகவே சிங்கள வேட்பாளருக்கு போடாமல் விட்டதால்தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது. 4. ரஞ்சித் போட்ட புள்ளி விபர குண்டுகளிலேயே பெரிய குண்டு இதுதான். திடீரென இங்கே கணக்கில் அம்பாறையை சேர்கிறார் (கிட்டதட்ட முழு சிங்கள/முஸ்லிம் மாவட்டம்). அதாவது பறாவாயில்லை, புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவும், ஏனைய தமிழ் இடங்களில் புலிகள் சொன்னதை கேட்டு மக்கள் பெருவாரியாகவும் புறக்கணித்த தேர்தல் முடிவை - மக்கள் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைத்ததன் பயன் என பக்கேஜ் செய்கிறார் 🤣. 2005 தேர்தல் முடிவால் தமிழருக்கு ஏற்பட்ட விளைவுகள், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கான விலை. அதை என்னதான் பக்கேஜ் செய்தாலும் மாற்ற முடியாது. இதன் படி பார்த்தாலும் தேர்தல் புறக்கணிப்பு/பொது வேட்பாளர் எமக்கு ஆப்பாகவே முடியும் என்றாகும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது. 5. இங்கே சொல்லப்படும் பொன்சேக்காவின் கூற்றை உலகில் யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. இதை சர்வ உலகமும் மகிந்தவை தோற்கடிக்க ஆக கூடியதை தமிழர் செய்தார்கள் என்றே பார்த்தது. அது மட்டும் இல்லை, இங்கேயும் பதிவு செய்யப்பட்டோரில் எத்தனை % பேர் வாக்களித்தனர் என்ற புள்ளி விபரம் - உண்மை நிலையை - அதாவது தமிழர் திரளாக பொன்சேக்காவை ஆதரிக்கவில்லை என்பதை காட்டும். 6. உண்மையில் தமிழர்கள் “தெரிவு செய்த” என்ற அடை மொழிக்கு ஏற்புடைய ஒரே ஜனாதிபதி மைத்திரிதான். அவர் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஒன்றும் கிழிக்கவில்லை என்பது உண்மையே எனிலும், மும்மொழி கொள்கை, குடியேற்ற வேகம், விகாரை கட்டுதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ பிரசன்னம் குறைப்பு, முள்ளிவாய்க்கால், மாவீரர் நினைவேந்தல் என பல வகைகளில் தமிழ் மக்கள், முந்திய மகிந்த, பிந்திய கோட்டா ஆட்சியோடு ஓப்பிடின், ஆசுவாசமாக இருந்த காலம் இது. ஆகவே இங்கே மைத்திரிக்கு வாக்கு போட்டது முற்றிலும் பிழை என கூற முடியாது. அத்தோடு மகிந்த எமக்கு எப்போதும் ஏற்புடையவர் அல்ல என்ற செய்திதையும் மக்கள் சொன்னார்கள். 7. இது மகிந்தவை விட மோசமான அடக்குமுறையாளனான கோட்ட வை வரவிடாமல் தடுத்து, ஒப்பீட்டளவில் அராஜகம் குறைந்த சஜித்தை மக்கள் தேர்ந்த தேர்தல். ஆனால் சிங்கள வாக்காளரின் மமதை, இனவெறி முடிவை வேறாக்கி, இறுதியில் அறகளவில் வந்து நின்றது. இங்கேயும் மக்களின் நோக்க பிழை சொல்ல முடியாது. ஆனால் சிங்கள வாக்குகள் ஒரே அணியில் திரண்டதால் நோக்கம் நிறைவேற வில்லை. முடிவாக, மேலே ரஞ்சித் ஒரு பக்கசார்பாக அணுகிய தரவுகளை வைத்து - இலங்கை தேர்தல்களில் இதுவரை தமிழர்கள் வாக்களித்த விதம் அவர்களுக்கு ஆப்பாக அமைந்தது என கூற முடியாது. பொது தமிழ் வேட்பாளர் பற்றி எனக்கு கடும் எதிர் கருத்து அதிகம் இல்லை. ஆனால் புள்ளி விபரங்களை செலக்டிவாக அணுகி அதை நியாப்படுத்த கூடாது.- பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
என்ன நடந்தது. கொஞ்சம் உண்மையை விளக்குங்கள் ப்ரோ. பழுத்த சீமானியர் நீங்கள் அனுரவின் கூட்டம் போனது வியப்பாக உள்ளது. விடுப்பு பார்க்கவா?- தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
உண்மையில் எனக்கு த.பொ.வே வை நிறுத்துவதால் அதிக பாதகமா, சாதகமா என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. ஆனால் இதை இட்டு நான் அதிகம் அலட்டி கொள்ள போவதில்லை. எனக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீது அதீத நம்பிக்கை உள்ளது. இவர்கள் ஒரு போதும் ஒரு அணியில் வந்து ஒரு பொதுவேட்பாளரை ஆதரிக்க போவதில்லை. இவர்கள் மாறி மாறி பேசி, நிலாந்தன் எழுதி கொண்டிருக்க தேர்தல் வந்து விடும்🤣. ஆகவே இதையிட்டு மண்டையை உடைப்பதை தவிர்கிறேன்.- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
தனியே முஸ்லிம்கள் மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்களிடமும் மாட்டு இறைச்சி உண்ணும் வழக்கம் உண்டு. இப்படியே போனால் நாளைக்கு எல்லாரும் மரக்கறிதான் சாப்பிட வேண்டும் என சொல்வார்கள்.- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
கொல்லான், புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றுதான் வள்ளுவர் கூறுகிறார். இது புலால் (சகல வகை இறைச்சி) உண்ணாதோரை உயிர்கள் மெச்சும் என மட்டுமே சொல்கிறது. அதாவது புலால் மறுத்தலை ஏற்றுகிறது. இது மீனுக்கும், கோழிக்கும், ஆட்டுக்கும் பொருந்தும் (புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்). இதில் இருந்து தனியே மாட்டை உண்ணாமைக்கு கோடு கீற முடியுமா? மாட்டை கொல்ல கூடாது என்பது ஒரு மதம் சார் நம்பிக்கை. அதை ஏனையோர் மீது திணிக்க, வள்ளுவரை இழுத்தாலும், முடியாது. இல்லை வள்ளுவர் வாக்கின் படி ஒழுகுவோம் என்றாலும் ஓகே, மீன், முட்டை, கோழி என சகலதையும் தடைசெய்யும் போது மாட்டையும் தடை செய்யலாம். உணவு என்பது அவரவர் தனி உரிமை. மீதேனை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இது உண்மைதான். ஆனால் இது பால், வெண்ணை, தயிர், சீஸ் க்காக வளர்த்து, பின் கொல்லாமல் இயற்கை மரணம் அடையும் மாடுகளில் இருந்தும் வரும். ஆகவே சகல பால்-விளை பொருட்களையும் தடை செய்ய வேண்டும். உண்மையில் பால் கொடுக்க முடியாத மாடுகளை இறைச்சியாக்குவதன் மூலம், மாடுகள் வெளிவிடும் மீதேனின் அளவு குறைகிறது என்பதே உண்மை. ஆகவே ஒன்றில் பால் உட்பட எந்த தேவைக்கும் மாட்டை வளர்க்க கூடாது, அல்லது மாட்டை எல்லா உணவு தேவைகளுக்காகவும் வளர்க்கலாம்.- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இந்த நெஸ்கபேயில் ஏலவே சீனியை அள்ளி கொட்டி இருப்பார்கள். கோப்பி சுவை - அதை நெஸ்கபே கோப்பி என்று சொன்னால் நெஸ்கபே காரன் செருப்பால் அடிப்பான். ஆனால் இது பொதுவாக பெரேரா அண்ட் சன்சை ஒத்த இடைத்தர கடைகளில்தான். கீழ் மட்ட கடைகளில் கோப்பி இராது ஆனால் டீ கிடைக்கும். ஆனால் அதிலும் டின்பால் போடுவார்கள். நாமாக கேட்டால் பால்மாவில் போடுவார்கள். கொழும்பில் Barista, Java Lounge போன்ற பல கடைகளில் மிக தரமான கோப்பி அருந்தலாம். ஆனால் இந்த cafe culture கொழும்பை தாண்டி இல்லைத்தான்.- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இந்த சீட் பெல்ட் விசயம் மிக மோசமான பிரச்சினை. ஒவ்வொரு முறையும் இங்கே இருந்து ஏற்பாடு செய்யும் போதும் - பெல்ட் இருக்கா, வேலை செய்யுமா என கேட்பேன். ஆம் என்பார்கள். அங்கே போனால் இராது அல்லது வேலை செய்யாது. 2000 க்கு பிந்தி வந்த வாகனங்களை அமர்த்தினால் இந்த பிரச்சனை குறைவு. புத்தள பாதை - அவ்வளவு மோசம் இல்லை. தவிர புத்தளம்-அனுராதபுரம் இடையே ஓரளவு சுத்தமான கழிப்பறையுடன் கூடிய சேர்விஸ் நிலையமும் உண்டு. வேகமாக ஓடுவதற்காக, பொலிஸ்சுக்கு கப்பம் கட்டுவதை தவிர்க்க காட்டு பாதை வழியாக உங்கள் ஓட்டி வந்துவிட்டு, சாட்டு சொல்லியுள்ளார் என நினைக்கிறேன். நான் அறிய கியூபாவும் இலங்கையும்தான் உலகில் வாகனம் வாங்கினால் விலை appreciate (கூடும்) நாடுகள். கொவிட்டுக்கு முன்பே, வெளிநாட்டில் £100 ம் பெறாத 1992 ஆம் ஆண்டு டவுன் ஏஸ் வானை, இலங்கையில் 20 இலட்சம் என்பார்கள். இப்போ காசு பெறுமதியிழந்து விட்டது. வாகன இறக்குமதி தடை. வாகனங்கள் 2019இல் வாங்கிய விலையின் பலமடங்கு போகிறன. ஆனால் இதில் ஒரு நல்ல விடயம். வெளிநாடு போல், வாகனத்தை உடனே தூக்கி எறியாமல் - எந்த பிழையையும் அங்கே ரிப்பேர் செய்ய முடிகிறது. மீள்சுழற்சி எனப்பார்க்கின் இது 👍.- மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா
சே…சீசனை மிஸ் பண்ணீட்டனே☹️.- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை என்ன? பட்டியல் இதோ…, லேப்டாப், பென் டிரைவ், கஞ்சா; சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இங்கே WebDesk11 May 2024 23:23 IST சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் Listen to this article பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், மொபைல் போன், வெப் கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச் செட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 10) சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர். இந்தநிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கைப்பற்ற பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சவுக்கு சங்கர் வீட்டில், குடும்ப அடையாள அட்டை, ஐபாட் டாப், மொபைல் போன், இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டி.வி.ஆர், ஐந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து, 3 லேப்டாப், 10 ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், செல்போன், நான்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சவுக்கு சங்கரின் கார் ஓட்டுனர் வீட்டில் இருந்து, 3 லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், சிறிய கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-seizes-ganja-laptop-hard-disk-from-youtuber-savukku-shankar-home-office-4556569 யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். https://www.maalaimalar.com/amp/news/state/gangster-law-pounced-on-youtuber-savukku-shankar-717930- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
தனி ஒரு மனிதனுக்கு மாட்டு கொத்து இல்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்! இவ்வண், உடான்ஸ் சாமியார் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிஸ்டேக் & மாட்டுகொத்து நுகர்வோர் பேரவை- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு.- டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣 நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை. அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣 - உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.